Jump to content

ஒரு நிமிடக் கதைகள்


Recommended Posts

ஒரு நிமிடக் கதைகள்

 

white_spacer.jpg

ஒரு நிமிடக் கதைகள் white_spacer.jpg
title_horline.jpg
white_spacer.jpg
 
p126a.jpg சூப்பர் ரெசிப்பி!

மனைவி பிறந்த வீட்டுக்குப் போயிருந்தாள். அவள் இல்லாமல் சோத்துக்குத் திண்டாடுவேன் என்பது அவள் எண்ணம். எனக் கென்ன, சமைக்கத் தெரியாதா?

அன்றைக்கு ரவா அடை செய்தேன்.உங்களுக்கும் அந்த ரெசிப்பியை சொல்லித் தருகிறேன். துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, பாசிப் பருப்பு, உளுத்தம் பருப்பு எல்லாவற்றையும் தலா அரை கப் எடுத்துக் கரகரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள். அதனுடன் மிளகு, சீரகத்தைப் பொடித்துச் சேருங்கள். ரவை ஒரு கப், சற்று புளித்த தயிர், பெருங்காயம், கறிவேப்பிலை, கொஞ்சம் உப்பு சேர்த்துக் கரைத்து, சிறு சிறு அடைகளாகத் தட்டி, எண்ணெய் விட்டு வேக வைத்து எடுங்கள். ரவா அடை தயார்!

கொஞ்சம் பொறுங்கள். சாப்பிட்டு விடாதீர்கள். உங்கள் வீட்டில் நாய் இருந்தால், அதற்குப் போடுங்கள். தின்றுவிட்டு நன்றியுடன் வாலாட்டும். அல்லது, ராப்பிச்சைக்காரனுக்குப் போடுங்கள். பின்பு அருகில் உள்ள சரவண பவனுக்குப் போய் ஒரு வெட்டு வெட்டுங்கள். நான் அப்படித்தான் செய்தேன்.

மனைவிக்குச் சவால் விட்டுச் சமைக்கலாம். அதற்காக, தேக ஆரோக்கியத்தில் விளையாடலாமா?

- ஆர்.உஷாநந்தினி

 

 

 

p44c.jpg தலைமுழுக்கு!

குமரேசனுக்கு அந்த நாயைக் கண்டாலே எரிச்சலாக இருந்தது. அது அவன் மனைவி வளர்க்கும் நாய்.

ஒரு நாள் அதைக் காரில் ஏற்றிக்கொண்டு போய், இரண்டு கி.மீட்டர் தள்ளியிருந்த ஒருபூங்கா வில் விட்டுவிட்டு வந்தான் குமரேசன். ஆச்சர்யம்! அவனுக்கு முன்னால் வீட்டில் இருந்தது அந்த நாய்!

கடுப்பான குமரேசன், அடுத்த நாள் அந்த நாயைப் பத்து கி.மீட்டர் தள்ளியிருந்த ஒரு மைதானத்தில் விட்டுவிட்டு, வேறு வேறு சாலைகள் வழியாக வீடு திரும்பினான். மறுபடி யும் ஆச்சர்யம்... வீட்டில் நாய்!

மூன்றாம் நாள்... காரில் நாயுடன் ஒரு முடிவோடு புறப்பட்டவன், காரை எங்கெங்கோ செலுத்தினான். வழியில் குறுக்கிட்ட ஆற்றைக் கடந்தான். ஒரு பாலத்தின் மேல் ஏறி இறங்கினான். இடப் பக்கம் திரும்பினான். வலப் பக்கம் வளைந்தான். இப்படியாக ரொம்ப தூரம் போய் ஒரு தெருவில் அந்த நாயைப் பிடித்துத் தள்ளிவிட்டு, வேகமாக காரைக் கிளப்பிக்கொண்டு புறப்பட்டான். வழியில் ஓரிடத்தில் காரை நிறுத்தி, மனைவிக்கு போன் செய்து, ‘‘உன் நாய், வீட்டில் இருக்கிறதா?’’ என்று கேட்டான்.

‘‘இருக்கிறதே! ஏன் கேட்கிறீர்கள்?’’ என்றாள் அவள்.

‘‘அந்த சனியன்கிட்டே போனைக் கொடு! வீட்டுக்கு வழி தெரியலே எனக்கு!’’

- சர்வஜித்

 

 

 

 

 
p44b.jpg பாவம்ப்பா அவங்க..!

எல்.கே.ஜி. படிக்கும் தன் மூன்று வயது மகன் ரிஷியை, ஆபீஸ் போகிற வழியில் கான்வென்ட்டில் விட்டுவிட்டுப் போவதற்காகத் தயாரானான் ராஜேஷ். ஹெல்மெட்டை எடுத்துக்கொண்டான். மகனை அழைத்துக் கொண்டு வெளியில் வந்தான்.

தன் பைக்கில், பின்புறம் இருந்த பிரத்யேக ஹூக்கில் ஹெல்மெட்டை மாட்டினான். மகனைத் தூக்கி முன்புறம் அமர்த்திக்கொண் டான். வண்டியைக் கிளப்பினான்.

போகிற வழியிலெல்லாம் ரிஷி பார்த்துக்கொண்டே வந்தான்... டூ வீலர் ஓட்டிக்கொண்டு போன அத்தனை பேரும்தலையில் ஹெல்மெட் அணிந்திருந்தார்கள்.

அவர்களைச் சுட்டிக்காட்டி அப்பாவிடம் சொன்னான் ரிஷி... ‘‘பாவம்ப்பா அவங்க..!’’

‘‘ஏண்டா அப்படிச் சொல்றே?’’

‘‘அவங்களுக்கெல்லாம் ஹெல்மெட் மாட்டுறதுக்கு வண்டியில இடம் இல்லே! அதனால பாவம், தலையிலேயே சொருகிக்கிட்டுப் போறாங்க!’’

ராஜேஷ் பாவம், தன் குழந்தைக்குஎன்ன பதில் சொல்வான்? அறிந்ததைச்சொல்வானா, தன் அறியாமையைச் சொல்வானா?

- ராஜ்திலக்

 

 

 

 

 

p44a.jpg லேட்டாக ஒரு விஷயம்!

எங்கிருந்தோ பிரபல தொலைக்காட்சித் தொடர் ஒன்றின் டைட்டில் சாங் ஒலிப்பது துல்லியமாகக் கேட்டது. நான் எப்போதாவது தான் அந்த சீரியலைப் பார்ப்பேன். அது என்றில்லை... எந்த சீரியலைப் பார்த்தாலும், அதில் யாராவது ஒருத்தி அழுதுகொண்டு இருப்பாள்; அல்லது, விரல் சொடுக்கியாருக் காவது சவால் விட்டுக்கொண்டு இருப்பாள். எப்படித்தான் பெண்கள் இப்படியான சீரியல் களை ஆர்வமாகப் பார்க்கிறார்களோ?

என் மனைவியும் ஒரு சீரியல் விடாமல் விழுந்து விழுந்து பார்க்கிறவள்தான். “இரண்டு நாளா புள்ளி புள்ளியா வருது’’ என்றாள். ஆபீஸ் போகிற வழியில், கேபிள் காரனிடம் சொல்லிவிட்டுப் போக வேண்டும்.

அடடா! பெட்ரோல் போடவே இல்லையே! நேத்து வரும்போதே ரிசர்வில்தானே ஓட்டி வந்தேன்? அருகில், பில்லர் பங்க் வரைக்கு மாவது வண்டி ஓடுமா?

இப்படி அடுக்கடுக்காகத் தோன்றிக் கொண்டு இருந்த எண்ணங்களுக்குமத்தி யில், ஒரு விஷயம் லேட்டாக உதித்தது...

‘ஆஹா! நான் இப்போது தியானத்தில் அல்லவா இருக்கிறேன்!’

- அருண்.கோ.

 

 

 

 

p44.jpg வா..!

‘‘வா’’ என்றான் அவன்.

‘‘ஊஹூம்!’’ என்றாள் அவள்.

‘‘வா’’ என்றான் மறுபடியும்.

‘‘ப்ச்ச்...’’ என்றாள் அவள் சலிப்பாக.

‘‘வா’’ என்றான் மீண்டும்.

‘‘இல்ல...’’ என்றாள்.

‘‘வா’’ என்றான் திரும்பவும்.

‘‘தப்பு..!’’ என்று முறைத்தாள்.

அதன் பிறகும், ‘‘வா’’ என்று இழுத்தான்.

‘‘போடா’’ என்று அவன் தலையில் ஒரு குட்டுவைத்தாள்.

‘‘வ பக்கத்துல ‘£’ போட்டிருந்தாதான் ‘வா...’னு இழுக்கணும். இது ‘வ’. எங்கே, சரியா சொல்லு பார்ப்போம், வ!’’ என்று பொறுமையாக அந்தச் சிறுவனுக்குத் தமிழ்ப் பாடத்தைத் தொடர்ந்து நடத்தினாள் அந்த மிஸ்!

- கே.ஆனந்தன்

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.