Jump to content

அவுஸ்திரேலிய அணி இன்னும் உலகக்கோப்பைக்கு தயாராகவில்லை


Recommended Posts

அவுஸ்திரேலிய அணி இன்னும் உலகக்கோப்பைக்கு தயாராகவில்லை

Darren-Leeman.jpg?resize=800%2C452

இங்கிலாந்தில் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் உலகக்கோப்பைக்கு அவுஸ்திரேலிய அணி இன்னும் தயாராகவில்லை என அவுஸ்திரேலிய பயிற்சியாளர் டாரென்   லீமான் (Australian coach Darren Leeman)  தெரிவித்துள்ளார். டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவுஸ்திரேலியா, அண்மைக்காலமாக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பின்தங்கி வருகின்றது. கடைசியாக விளையாடிய 15 ஆட்டங்களில் இரண்டில் மட்டுமே அவுஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டுமென்றால் ஆக்ரோஷமான அணுகுமுறை தேவை என டாரென்  லீமான்  தெரிவித்துள்ளார். உண்மையிலேயே தாங்கள் டெஸ்ட் போட்டி மீதுதான் கவனம் செலுத்தினோம் எனவும் இதனால் ; ஒருநாள் போட்டிக்கான அணியை தயார் செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/2018/66575/

Link to comment
Share on other sites

உலகக்கோப்பைக்கு ஆஸ்திரேலிய அணியில் அதிரடி மாற்றங்கள்; சமரசமற்ற ஆக்ரோஷம்: டேரன் லீ மேன் திட்டம்

 

 
lehman

ஆஸி. கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் டேரன் லீ மேன்.   -  படம். | ஏ.எஃப்.பி.

ஒருநாள் போட்டிகளில் கடந்த 12 மாதங்களாக மோசமாக ஆடி வரும் ஆஸ்திரேலிய அணி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன் புத்துணர்வுடன் கூடிய இளம் ரத்தங்களை அணிக்குள் கொண்டு வருவது மற்றும் ஆக்ரோஷமான அணுகுமுறையுடன் கூடிய தயாரிப்பில் ஈடுபடும் என்று ஆஸி. பயிற்சியாளர் டேரன் லீ மேன் தெரிவித்தார்.

அதாவது உலகக்கோப்பை கிரிக்கெட்டுக்கு ஆஸ்திரேலிய அணியில் அதிரடி மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்று தெரிகிறது. தற்போது முத்தரப்பு டி20 தொடரில் ஆடும் இளம் ஆஸ்திரேலிய வீரர்கள் டேரன் லீ மேன் கவனத்தை ஈர்த்துள்ளனர், இதனையடுத்து 2019 இங்கிலாந்து உலகக்கோப்பைக்கு இளம் ரத்தங்கள், ஆக்ரோஷமான அதிரடி அணுகுமுறை ஆகியவற்றை உடைய ஒரு அணி வேண்டும் என்று டேரன் லீ மேன் தெரிவித்துள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடரில் இளம் வீரர்கள் பலர் தங்கள் ஆக்ரோஷமான அணுகுமுறையை வெளிப்படுத்தி வருவதையடுத்து ஆஸ்திரேலிய உலகக்கோப்பை அணியிலும், அணுகுமுறையிலும் புத்துணர்விலும் ஆக்ரோஷம் காட்டக்கூடிய சில மாற்றங்கள் ஏற்படும் என்று டேரன் லீ மேன் தெரிவித்துள்ளார்.

2019 உலகக்கோப்பைக்கு முன் இன்னும் ஆஸ்திரேலியாவுக்கு 20-25 போட்டிகளே உள்ளன. எனவே இப்போதே 2019 உலகக்கோப்பைக்கான அணி குறித்த விவாதங்கள் நடைபெற்று வருவதாகக் கூறுகிறார் டேரன் லீ மேன்.

இது குறித்து டேரன் லீ மேன் கூறியதாவது:

முடிவுகள் என்பது எங்களுக்கு திட்டங்களை செயல்படுத்துவது என்பதில்தான் உள்ளது. டெஸ்டில் என்ன நடக்கிறது என்பதையும், டெஸ்ட் அல்லாத வடிவத்துக்குத் திரும்பும் போதும் சிலரை நீக்கி, ஆக்ரோஷமான மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்தியதால் ஒருநாள் போட்டிகளில் நிலையான ஒரு அணி அமையாமல் போனது.

எனவே அடுத்த 6 மாதங்களுக்கு நிலையான ஒரு அணி ஆடுவதைப் பார்க்க விரும்புகிறேன். இதில் எப்படி ஆடுகிறோம், ஆட்டத்தின் முடிவுகள் எவ்விதம் அமைகின்றன ஆகியவற்றைப் பார்க்க விரும்புகிறேன்.

அணியின் அணுகுமுறை மாறும், இங்கிலாந்து பிட்ச்கள் மட்டையாளர்களுக்கு சாதகமாக உள்ளன, அதே வேளையில் ஸ்விங் பந்து வீச்சுக்கும் முக்கியத்துவம் இருக்கும். ஒரு நிச்சயமான அணுகுமுறை தேவைதான் ஆனால் சூழ்நிலைகளைப் பொறுத்து மாறிக் கொள்ளவும் வேண்டும்.

ஒவ்வொரு ஆஷஸ் தொடர் முடியும் போதும் ஒருநாள் தொடரின் போது வீரர்கள் களைப்படைந்து விடுகின்றனர், நாங்கள் எப்போதும் ஒரு 30-40 ரன்களைக் கூடுதலாக எடுப்பது, எதிரணியினரின் தொடக்க விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்துவது என்பதைச் செய்து வந்திருக்கிறோம், ஆனால் ஆஷஸ் தொடருக்குப் பிறகு சமீப காலங்களில் இந்த ஒருநாள் தொடர்களில் இது நடப்பதில்லை, இதனால் தோல்விகளைச் சந்திக்க வேண்டியுள்ளது.

டி20-யில் மேம்பாடடைந்த ஆட்டம் சில புதிய எண்ணங்களைத் தோற்றுவிக்கிறது. புதிய வீரர்கள் உள்ளே வரும்போது பயிற்சியாளராக எனக்கும் என் குழுவுக்கும் உற்சாகமாக உள்ளது.

தென் ஆப்பிரிக்கா தொடர் முடிந்தவுடன் நாங்கள் அமர்ந்து சில முடிவுகளை எடுக்கவிருக்கிறோம். உலகக்கோப்பை விரைவில் வந்து விடும். அதற்கு முன் 22 ஒருநாள் போட்டிகள்தான் உள்ளன. இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் அதிக ரன்கள் குவிக்கும் ஒரு தொடராகவே அமைய வாய்ப்புள்ளது. எனவே இதற்குத் தக்கவாறு அணியை உருவாக்கித் தயார்படுத்த வேண்டும்.

இவ்வாறு கூறியுள்ளார் டேரன் லீ மேன்.

டி ஆர்க்கி, கிறிஸ் லின் உட்பட ஆஸ்திரேலிய உலகக்கோப்பை அணியில் சில அதிரடி மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

http://tamil.thehindu.com/sports/article22730027.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.