Jump to content

இன்று மகா சிவராத்திரி


Recommended Posts

இன்று மகா சிவராத்திரி
 

image_35637daf90.jpgஉலக வாழ் இந்துக்களால் இன்று மகா சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

 


பல மகிமைகளைக் கொண்ட மகா சிவராத்திரி விரதமானது ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதி இரவில் அனுஷ்டிக்கப்படுகின்றது.

 

இன்றைய தினத்தில் இலங்கையில் அமைந்துள்ள சிவாலயங்கள் மற்றும் ஏனைய ஆலயங்களிலும் விசேட பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளப்படுவது சிறப்பம்சமாகும்.

 இதேவேளை , ஐம்பொறிகளின் வழியே மனதை அலையவிடாது அதனை ஐக்கியப்படுத்தி, இறைசிந்தனையுடன் இந்துக்களால் அனுஸ்டிக்கப்படும் விரதங்களுள் மகா சிவராத்திரி விரதம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தினத்தில் உலகெங்கும் சமாதானம் ஏற்பட வேண்டும் என பிரார்திப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்

இதேவேளை, இன, மத பேதமின்றி ஒவ்வொருவரினதும் கலாசார, மத விழுமியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது சிவராத்திரி வாழ்த்துச் செய்தியில்  குறிப்பிட்டுள்ளார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/இன்று-மகா-சிவராத்திரி/175-211475

ஈறேழு லோகங்களையும் பெறத்தக்க பெருமை தரும் சிவராத்திரி நான்குகால பூஜைகள்! #MahaSivarathiri

 
 

விரதங்களிலெல்லாம் மேலான விரதம் சிவராத்திரி. இந்த விரதமிருந்து தேவாதிதேவர்களும், முனிவர்களும், மனிதர்களும் ஏன் விலங்கினங்கள் கூட மிகப்பெரிய வரங்களைப் பெற்றார்கள் என்று புராணங்கள் கூறுகின்றன. அன்னை பார்வதி சாபம் நீங்கியது, இந்திரன் பதவி பெற்றது, கணபதி கணங்களின் முதல்வரானது, ஸ்ரீராமபிரான் தோஷம் நீங்கியது, முசுகுந்த சக்கரவர்த்தி குரங்கு வடிவிலிருந்து மீண்டு மிகப்பெரிய அரசரானது என எல்லாமே இந்த சிவராத்திரி விரதத்தினால்தான் நடைபெற்றது. சிவராத்திரி அன்று கண்விழித்து நான்கு கால பூஜை செய்வோர் எவருக்கும் இனி பிறப்பே இல்லை என்பதும் சகல பாவங்களையும் ஒழித்து முக்தி பெறுவார்கள் என்பதும் புராணங்கள் சொல்லும் நம்பிக்கை. ஈ, எறும்பு தொடங்கி திருமால் வரை இந்த சிவராத்திரியின் மகிமையை உணர்ந்தே பல்வேறு ஆலயங்களில் சிவபூஜையினை இந்த நாளில் மேற்கொண்டார்கள். அப்படி ஒரு சிறப்பான மகா சிவராத்திரி நாளில் அறியாமல்தான் செய்த பூஜையின் பலனால் வேடன் ஒருவன் பெருமைபெற்ற விதம் சுவாரஸ்யமானது. 

மகா சிவராத்திரி

 

அயோத்தியை தசரத சக்கரவர்த்தி ஆட்சி செய்துகொண்டிருந்த காலமது. அயோத்தியின் எல்லையிலிருந்த அடர்ந்த வனத்தில் வாழ்ந்து கொண்டிருந்தான் வியாதன் என்ற வேடன். ஒருநாள் பகல்வேளையில் தொடங்கிய அவனது வேட்டை இருட்டிய பிறகும்கூட முடிவடையவில்லை. ஒரு சின்னஞ்சிறு முயல் கூட அன்று அவனுக்குக் கிடைக்கவில்லை. பசித்திருக்கும் தனது குடும்பத்தை எண்ண எண்ண அவனுக்கு ஆத்திரம் மிகுதியானது. கண்சிமிட்டும் நேரத்துக்குள் ஒரு சிறுத்தையைக்கூட தைத்து விடும் அவனது வில்லாற்றலுக்கு அந்த நாள் சவால் விடுவதைப்போல இருந்தது. சூரியன் மயங்கி மேற்கு திசையில் விழுந்துவிட்டான். வியாதனின் கண்கள் பிரகாசமாகி விலங்குகளை நோக்கிச் சென்றன. எதிரே இருந்தால் விலங்குகள் ஓடிவிடும் என்று எண்ணி தாகம் தீர்க்க ஒரு குடுவையில் நீரை எடுத்துக்கொண்டு ஒரு வில்வ மரத்தின் மீது ஏறி அமர்ந்துகொண்டான். சற்று நேரத்துக்குப் பிறகு சலசலக்கும் ஒலிக்கிடையே ஒரு மானைக் கண்டுவிட்டான் வியாதன். ஆர்வம் பெருகி அதை நோக்கி அம்பை குறிவைக்கும் நேரத்தில் அந்த மான் அவனிடம் கெஞ்சிப்பேசத் தொடங்கியது. 'அய்யா குட்டி ஈன்ற என் மனைவிக்கு உணவு எடுத்துச்செல்ல வந்துள்ளேன், தயவு செய்து என் இருப்பிடம் சென்று இந்தத் தழைகளைக் கொடுத்துவிட்டு வரும்வரை என்னைக் கொல்லாதீர்கள்' என்று மன்றாடியது.  

சிவராத்திரி

மானின் கெஞ்சலுக்கு மனமிரங்கிய வேடன்,  மானை சீக்கிரம் வரச்சொல்லி விட்டுவிட்டான். அப்போது அவன் அசைவால் நீர் கீழே சிந்தி மரத்தின் இலைகளும் சில உதிர்ந்தன. அவை மரத்தின் கீழே இருந்த சிவலிங்கத்திருமேனியின் மீது பட்டு தானாக அபிஷேகம் நடந்தது. சிறிது நேரம் கழித்து மீண்டும் சலசலக்கும் ஓசை கேட்க,  அப்போது ஒரு பெண் மானைக் கண்டான் வேடன். அதுவும் தன் இணையான ஆண் மானை தேடி வந்ததாகவும், கருவுற்றிருக்கும் தனது மூத்தாளை கண்டுவிட்டு உடனே வந்துவிடுவதாகவும் கெஞ்சியது. வேடனும் அதையும் சீக்கிரம் வந்துவிடுமாறுச் சொல்லிவிடுவித்தான். அப்போதும் நீர் சிந்தி வில்வ இலைகள் உதிர்ந்து சிவலிங்கத்துக்கு அபிஷேகம் நடந்தது. அடுத்து வயதான ஓர் ஆண் மான் எதிர்ப்பட, அதுவும் குட்டியை ஈன்றிருக்கும் தங்களது மகளைப் பார்த்துவிட்டு வந்துவிடுவதாகச் சொல்லிச் சென்றது. மூன்றாவது முறையாக அபிஷேகமும் நடந்தது. இறுதியாக இரு மான்குட்டிகள் எதிர்ப்பட, அவையும் தங்களது பெற்றோர்களைப் பார்த்து சொல்லிவிட்டு வருவதாகச் சென்றன. தாய், தந்தை, தாத்தா, பாட்டி என எல்லா மான்களிடமும் குட்டிகள் தாங்கள் செய்த சத்தியத்தைக் கூறி, வேடனை நோக்கி வந்தன. அவற்றோடு எல்லா மான்களும் சொன்ன சொல்லைக் காப்பாற்ற வந்தன. 

மகா சிவராத்திரி நாளின் நான்கு கால பூஜைகளைப்பற்றி அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்..

மான் கூட்டத்தினைக் கண்ட வேடன் குறிவைக்க தயாராக,  நான்காம் ஜாம வேளை நெருங்கியது. சொன்ன சொல்லை மீறாத அந்த மான்களின் செயலால் மனம் நெகிழ்ந்த வேடன் அவற்றை வணங்கி, தருமத்தை மீறாத உங்கள் செயல் என்னை மகிழ்விக்கிறது. என் குடும்பமே பட்டினியால் கிடந்தாலும் சரி, உங்களைக் கொல்லமாட்டேன் என்று வாழ்த்தினான். அப்போது உண்டான அசைவால் நீர் சிந்தி ஈசனை குளிப்பாட்டியது. வில்வ இலைகள் விழுந்து ஈசனை அர்ச்சித்தன. வேடன் இரவெல்லாம் கண்விழித்து மானுக்குக் காத்திருந்த நாள் மகாசிவராத்திரி திருநாள். நான்கு ஜாமத்திலும் தற்செயலாக நடந்த அந்த பூஜையால் ஈசன் மகிழ்ந்து உடனே அங்கு தோன்றினார். ஒளிப்பிழம்பாக விடையேறிய பெருமானாய்த் தோன்றிய ஈசனை மான்களும், வேடனும் வணங்கித் துதித்தார்கள். 'சொன்ன சொல்லை மீறாத மான்களே உங்களைப் பெருமைப்படுத்தும் விதமாக இனி மான் ஏந்தியே காட்சி தருவேன் என்று ஈசன் வாக்களித்தார். மேலும் வேடனை நோக்கி 'வேட்டையாடுவது உன்னுடைய தொழில் என்றாலும், மான்களுக்காக மனமிரங்கி அவற்றைக்காத்த வியாதனே, நீ அறியாமல் செய்தாலும், மகாசிவராத்திரியன்று நீ செய்த நான்கு கால பூஜைகளையும் மனமுவந்து ஏற்றுக்கொண்டோம். மகாசிவராத்திரி அன்று செய்யப்படும் பூஜை ஈரேழு லோகங்களையும் பெறத்தக்க பெருமைகளை அளிக்கவல்லது. எனவே நீ செய்த பூஜைக்கு ஈடாக வேண்டுவனக்கேள்' என்றார் ஈசன். 

சிவராத்திரி

தங்களையே நேரிடையாகக் கண்ட பிறகுதான் வேண்டுவது ஒன்றுமில்லை எனக்கூறி இனிக் கொல்லாவிரதம் ஏற்று நடப்பேன் என்றும் உறுதிகூறினான். அவனது பணிவுக்கு மகிழ்ந்த ஈசன், "சிவராத்திரி விரதம் மேற்கொண்ட ஒருவருக்கு வரமளிக்காமல் இருப்பது எனக்கு வழக்கமில்லை" என்று கூறி "இனி நீ வியாதனில்லை, குகன் என்று அழைக்கப்படுவாய். ஸ்ரீமன் நாராயணனின் அவதாரமான ஸ்ரீராமர் இந்தக் காட்டுக்கு வரும்போது அவரை நீ சந்திப்பாய், அதுமட்டுமல்ல, அவருக்கே தம்பியாகும் பாக்கியத்தையும் நீ பெறுவாய்' என்று வாழ்த்தி மறைந்தார். சிவராத்திரி விரத மகிமையால் ஒரு சாமானிய மனிதன் குகன் என்று மாறி ஸ்ரீராமர் வாயால் சகோதரன் என்றும் அழைக்கப்பட்டார். அறியாமல் செய்த சிவராத்திரி பூஜையே தெய்வ நிலையைத் தருமென்றால் இந்த நாளின் மகத்துவத்தை என்னவென்று சொல்வது?

https://www.vikatan.com/news/spirituality/116191-the-glory-of-mahashivaratri.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.