Jump to content

''இந்தச் சமூகம் எனக்குக் கொடுத்த பரிசுதான் இது'' - திருநங்கை ஷானவி


Recommended Posts

''இந்தச் சமூகம் எனக்குக் கொடுத்த பரிசுதான் இது'' - திருநங்கை ஷானவி

 
 

தொழில்நுட்பத்திலும் பொருளாதாரத்திலும் நாடு எவ்வளவுதான் வளர்ந்தாலும், திருநங்கைகள் தினம்தினம் போராடித்தான் அவர்களுடைய உரிமையைப் பெறுகிற நிலை இந்த நொடி வரை நிலவுகிறது. எங்களிடம் திறமை இருந்தும் இந்தச் சமூகம் ஏன் புறக்கணிக்கிறது? எங்களது உரிமைகளைக் கொடுப்பதற்கே ஏன் இவ்வளவு தயங்குகிறது என்கிற அவர்களின் வேதனையான கேள்விகளுக்கு, அரசும் சமூகமும் காதுகளைப் பொத்திக்கொண்டு இருக்கிறது. அந்தப் புறக்கணிப்பின் உச்சம்தான், 'தயவுசெய்து என்னைக் கருணைக் கொலை செய்துவிடுங்கள்' என்கிற ஒரு திருநங்கையின் முறையீடு. இந்த முறையீட்டால் கருணைக் கொலை செய்யப்பட்டிருப்பது, நமது மனிதத்தன்மைதான்.

 

திருநங்கை ஷானவி

 

திருநங்கையான ஷானவி, குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ள மனு கடிதம்தான் அது. நாடு முழுவதும் அந்தக் கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷானவியைத் தொடர்புகொண்டு பேசினோம். 

''என் சொந்த ஊர் திருச்செந்தூர். பல்வேறு சிரமங்களைக் கடந்து பொறியியல் பட்டப்படிப்பை முடிச்சேன். என் குடும்பத்திலேயே நான்தான் முதல் பட்டதாரி. படிப்பு முடிஞ்சதும் ஒரு தனியார் நிறுவனத்தில் என்னைப் பெண்ணாக ஏற்றுக்கொண்டு என்னுடைய திறமைக்கு ஏற்ற வேலையை வழங்கினார்கள். ஒரு வருடத்திற்கு, வாடிக்கையாளருக்கு உதவும் அதிகாரியாகப் பணியாற்றினேன். ஒரு வருஷத்துக்கு அப்புறம், முறையாக பாலியல் அறுவைசிகிச்சை செய்துகொண்டேன். இதனால், இந்தச் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டேன். பல திருநங்கைகளின் பெற்றோர்கள்போலவே, என் இந்த முடிவை ஏற்காமல் திட்டினார்கள். அதனால் அவர்களை விட்டுப் பிரியும் நிலை ஏற்பட்டது. என் வாழ்க்கையை எனக்காக வாழணும்னு ஆசைப்பட்டேன். 

திருநங்கை ஷானவி

பொருளாதார ரீதியா உயர்ந்த இடத்துக்கு வரும் எண்ணத்தில் ஏர் இந்தியாவில் வேலைக்குப் பதிவுசெய்தேன். அப்போது, விண்ணப்பத்தில் ஆண், பெண் என்கிற இரண்டு பாலினம் மட்டுமே இருந்தது. மூன்றாம் பாலினத்தைத் தேர்வு பண்றதுக்கான வழிமுறை இல்லை. வேற வழியில்லாமல், பெண் என்பதைத் தேர்வுசெய்தேன். நேர்காணலுக்கு அழைப்பு வந்துச்சு. அதில் நல்லா ஃபர்பார்ம் பண்ணினேன். ஆனாலும், எனக்கு எந்தப் பதிலும் வரலை. இப்படி மூன்று முறை சிறப்பாகத் தேர்வு எழுதியும் நிராகரிக்கப்பட்டேன். விசாரிச்சதில், என்னுடைய பாலினம்தான் நிராகரிப்புக்குக் காரணம்னு தெரிஞ்சது'' என்கிற ஷானவி குரல் விம்முகிறது. 

சில நிமிடங்களுக்குப் பிறகு தொடர்கிறார், ''நானும் முடிஞ்ச அளவுக்கு இது விஷயமா போராடிப் பார்த்தேன். திறமை இருந்தும் ஏன் வேலை கொடுக்க மறுக்கறீங்கனு துறை சம்பந்தமான ஆட்களைச் சந்திச்சு கேட்க முயற்சி பண்ணினேன். ஆனால், யாரையும் நேரில் பார்க்கவே முடியலை. முறையான பதிலும் கொடுக்கலை. அப்புறம்தான், பிரதமர் மோடிக்குக் கடிதம் அனுப்பினேன். உச்ச நீதிமன்றத்திலும் வழக்குப் பதிவுசெய்தேன். அதை விசாரித்த நீதிபதி, ஏர் இந்தியாவிடம் பதில் விளக்கம் கேட்டுத் தீர்ப்பு வழங்கினார். ஆனால், அந்த வழக்குக்கான சரியான பதிலையும் என்னால் பெறமுடியலை. 

திருநங்கை ஷானவி

இப்படி என் உரிமைக்காகத் தினம் தினம் போராடியே சேமித்து வைத்திருந்த பணம் எல்லாம் தீர்ந்துபோச்சு. எனக்கும் மற்றவர்கள்போல சக மனுஷியாக இந்தச் சமூகத்தில் வாழணும்னு ஆசை. பெரிய வசதி வேண்டாம். என் சராசரி தேவையையே உழைச்சு செய்துக்க நினைக்கிறேன். அதுக்கு இந்தச் சமூகம் கொடுத்த பரிசுதான் இது. அடிப்படைத் தேவையையே பூர்த்தி செய்துக்க வழியில்லாத இந்தச் சமூகத்தில் ஏன் வாழணும். அதனால்தான் என்னைக் கருணைக் கொலை பண்ணச் சொல்லி குடியரசுத் தலைவருக்குக் கடிதம் அனுப்பினேன். இது தப்பா? போராடறதுக்கு உடம்பில் தெம்பு இருந்தாலும், இந்தச் சமூகம் என்னை வாழவிடாமல் துரத்தி துரத்தி மனசைக் கொல்லுது. நான் என்ன செய்யட்டும் சொல்லுங்க?'' எனக் கலங்கியவாறு கேட்கிறார் ஷானவி. 

 

திருநங்கை ஷானவியின் கேள்விக்கு அரசும் சமூகமும் என்ன பதில் சொல்லப்போகிறது?

https://www.vikatan.com/news/tamilnadu/116498-transgender-shanavi-mercy-killing-petition-to-indian-government.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.