Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

 இம்முறை  கனடாவின் பனிக்காலம்    மிகவும் உக்கிரமான குளிராக இருந்தது ...எத்தனை ஆடைகளுக்கு மேல் ஆடைகளாக துணி  மூடடையாக  உடுத்தினாலும் எலும்பை ஊடுருவும் குளிராக இருந்தது ...அது ஒரு மார்கழி மாதத்தின் இறுதி வாரம் ..வனிதாவின்   கனடா  வாழ்வின் ஏழாவது 
வருடம் ..தாயகத்தில்  மூன்று அண்ணா மாருக்கு செல்லத்தங்கையாக வாழ்ந்தவள் .  வான் மீகனுக்கு  வாழ்க்கைப்பட்டு ஆறு வயதில்  ஒரு மகளையும் .. தற்போது  ஆறுமாதக் குழந்தையாய் ஒரு ஆண்மகவையும் பெற்று இருந்தாள் .  

நாட்டுக்கு வந்த தொடக்கத்தில்  வெண் பனியை  அள்ளி அழைந்து    விளையாடியவள்.   தற்போது வெளியில் செல்லவே அஞ்சும் குளிராக மாறிவிட்டிருந்தது . வான்மீகனுக்கு இரண்டு பெண் சகோதரிகள் அவர்களது கலியாணம்    வயதான பெற்றோரின் தேவைகள் அது இது என்று  அவர்களை கரை சேர்த்து விட்டு  ..அவன் திருமணம் முடிக்கும் போது  முப்பத்தைந்து வயதாகி விட்ட்து ..வனிதாவும் வந்து  தான் கற்ற கல்வியின்  பயனால் வங்கியில்  ஆரம்ப நிலை பணியில் சேர்த்துக்கொள்ள படடாள் .  முதலில் மகள்    பிறந்ததும்  ..அவர்கள்   இருந்த  தொடர் மாடிக்கு குடியிருப்பில் ஒரே பூச்சி த்  தொல்லை  இந்த குழந்தையை வைத்து கொண்டு இங்கிருக்க வேண்டாம்  என  நண்பர்கள் சொன்னதால்   ஒரு  சிறு வீடடை கடன்  பட்டும்  கைமாற்றகவும்  நண்பர்களின் உதவியினாலும்  வாங்கி  கொண்டனர் . மகள்   பிறந்து ஒருவருட மகப்பேற்று விடுமுறை முடித்தும் வேலைக்கு செல்ல முயன்றவளை  வான்மீகன் தடுத்தான் .  இருந்தும்  உறவுக்கார பெரியம்மா  குழந்தையை  பராமரிக்க முன்  வந்ததினால் ..அவளும் வேலைக்கு சென்று  நண்பர்களின் கடன் கட்டி முடித்தனர் . இருந்தும் குழந்தைகளின் செலவு   வீட்டு  அடமானக் கடன்  மாதாந்த  கடடணங்கள்  தாய் தந்தைக்கு  நல்ல  நாள்  பெருநாட்களில் அனுப்பும் சிறு தொகை     என  வனிதாவின் சம்பளம் கை கொடுத்தது .  மீண்டும்  ஒரு வாரிசு வேண்டும் என்  எண்ணவே மகனும் பிறந்து ஆறுமாதங்களாயின. 

அதிகாலை  ஆறுமணியிருக்கும் .. ஒரு வெளிநாட்டு தொல்லை பேசி அழைப்பு .. உறவினரின்  அவசர அழைப்பாக இருக்கும் என   எண்ணி .. எடுத்தவளுக்கு   ஏன்  அழைப்பை   எடுத்தோம் என்றாகி விட்ட்து ...  அப்போ து தான் இரவிரவாய் சளித்தொல்லையால்  உறக்க  மின்றி அழுத  பிள்ளை  உறங்க ஆரம்பித்திருந்தான்.  வான்மீகனும்  இரண்டு வேலை செய்கிறான்  குழந்தைகளின் செலவுக்காக .  அவனும் இரவு வேலையால்  வந்து  அப்போது தான்  உறங்கச் சென்று இருந்தான் .   இந்த நேரத்தில்   இப்படியும் சில மனிதர்கள் .

ஊரில் பக்கத்து  வீட்டு   செல்வம் அக்கா .... கொஞ்சம் கஷ்டரமாய் இருக்கு   உதவி  செல்வீர்களா என் கேட்ட்பதற்காக எடுத்து இருந்தாள்  . ...ஏற்கனவே   ...ஒருதடவை கேட்ட்  போது    வான்மீகனிடம் சொல்லிவிட்டு அனுப்பி இருந் தாள் .  மீண்டும்  .... கணவன் வேறு  பெண்ணுடன்  ஓடி  ..விடடான் .. ஒரு நேரக்கஞ்சி தான் குடிக்கிறோம் ...கூலி வேலைக்கு  தான்  போகிறேன் .. இரண்டு   பிள்ளைகளுக்கும்    பள்ளிக்கூட செலவு ..  மாறி போடா யூனிபோம்  இல்லை 
 ஆன சப்பாத்து இல்ல ..lஎன்று அழுது  மன்றாடினாள்.  கணவனுக்கு தெரியாமலே  கொஞ்சம் பணம் அனுப்பி இருந்தாள் ....

இப்பொது மூத்தவள் ஓடிபோய்வி டடாள்  இருந்ததெல்லாம்  விற்று ... அவள் போன இடத்தில் கண் கலங்க கூடாதென்று  அவளை    பொடியன்   வீட்டாரிடம்  அனுப்பி     விடடேன் ..  இப்பொது  ...முன்பு போல  வேலை செய்ய முடியவில்லை ..ஒரே நெஞ்சு நோ ... என் காலம் முடிவதற்குள்   சின்னவளையும்  
க ட்டிக்கொடுக்க வேண்டும்.  என்று  தன சோகத்தை  சொல்லி அழுதாள்.   பிள்ளையை  ஏதும் வேலைக்கு அனுப்பலாம்தானே? என்று  சொன்னதற்கு மறு முனையில் பேச்சு இல்லை...  தனக்கு தெரிந்த  வேறு உறவினர்   ஊரவர்கள் பெயரை சொல்லி அவர்களின் நம்பர் தாருங்கோ என்றும் கேடடாள் ...  ..நன்றாக்  வாங்கி   ...அனுபவ பட்டு   இருக்கிறா போல. இர ந்து வாழ்தல் பல வகை இதுவும் ஒரு வகையோ ..


... செல்வம் அக்கா போனை வையுங்கோ  இவரிடம்  கேட்டு பார்க்கிறேன் நானும் மகன்  பிறந்து இருப்பதால் வேலைக்கு போவதில்லை எங்கள் பாடும் கஷ்டம் அக்கா என்று போனை வைத்து    விடடாள் .

 ஊர வர்களிடம் வாங்கி  வாழ்க்கையை கொண்டு செல்ல இருக்கும் இவர்களின்  திறமையை எங்கோ போய்  சொல்வது ...  நாட்டுப்  பிரச்சினைகளுக்கு பின் எத்தனயோ தொழிற் சார் நிறுவங்கள் வந்துவிட்ட்ன .. உழைத்து  வாழ  இவர்களுக்கு ஏன்  தெரிவதில்லை. வெளிநாட்டிலும்   கடுங்  குளிர் ..கொடிய வெயில்  கால  நிலை தொல்லைகளுக்கு மத்தியில்  இயந்திரத்தனமாக தானே வாழ்கிறார்கள் , உழைக்கிறார்கள் . ஏனொ  இந்த ஜனங்களுக்கு உழைத்து வாழ்வை கொண்டு செல்ல மனம்  வருவதில்லை .. எதுவரை இவர்களை  தூக்கி விட முடியும்.  .இப்போது பிரச்சினைகள்  தணிந்துவிட்ட்னவே ...ஒரு  வழி   அடைத்தால்  மறு   வழி    திறக்க இவர்கள் பாடு படுவதே இல்லை . வாழ் நாள் முழுக்க பிறர் கையை நம்பி  இருக்கலாமா   ஏன்   இவர்களைப் போன்ற்வர்களுக்கு  புரிவதில்லை .  முயற்சியும்  தன்னம்பிக்கையும் இருந்தால் ..முடியும் வரை வாழலாம் .

  கடவுளே ...இந்த ஊரில் இருப்பவர்களுக்கு   வெளிநாட்டில் காசு மரத்தில் காய்கிறது என்ற எண்ணம் போலும்.  வெளி நாட்டில் வேலை     ..இயந்திரங்களோடு இயந்திரமாய்  எட்டு பத்துமணி நேரம் கால் கடுக்க நின்று  ..உழைத்து ..பின் வீட்டுக்கு வந்து .. சமைத்து  குழந்தைகளை குளிக்க வார்த்து  ..உணவூட்டி  படுக்க விட்டு அப்பாடா என்று . காட்டிலில் சாய மணி   பதினொரு ,பன்னிரண்டுமணியாகி விடும்.    அப்போது தான்  உறங்கச்  சென்றது  போல் இருக்கும்  அதிகாலை ஐந்து  மணி என்று அலாரம் கிணுகிணு க்கும்.   கணவனை வேலைக்கு அனுப்பி  குழந்தையை   பாடசாலையில் விட்டு   கைக்    குழந்தையை  தூங்க வைத்து  வீடடை ....ஒழுங்கு படுத்தி . முடிந்ததை  .சமைத்து    .. அப்பாடா  என்று  உட்க்கார    மற்ற குழந்தையை   எடுக்கும்  நேரம் வந்து விடும்.   நாட்கள் வாரங்களாகி  ,வாரங்கள்   மாதங்கள்   ஆகி  காலம் தான் வெகு வேகமாக ஓடுகிறது.  ..

.விடுமுறை காலத்தில் இங்குள்ளவர்கள்  ஊருக்கு சென்று படங்காட்டுவது ...கடன் பட்டு சென்று செலவழிப்பது ...எல்லாம் மாயை என்று எங்கே அவர்களுக்கு விளங்க போகிறது ...   காசு ..காசு ... வெளி நாட்டுக் காசு..

க ஷ்ர ரப்படடவர்களுக்கு ..உதவி ஒருமுறை செய்யாலாம் .இரு முறை செய்யலாம் .  வாழ்நாள்மு ழுக்க கொடுத்துக் கொண்டே  இருக்கமுடியுமா ?அதை விட அவரக்ளுக்கு ஒரு வேலை வாய்ப்பை   வருமானம் ஈட்டும் முறைமையை ஏற்படுத்தி கொடுப்பது தான் ...புத்திசாலித்தனம்.  ஒரு   மூத்தோர்  வாக்கு மொழி இருக்கிறது ...பசி உள்ளவனுக்கு மீனைக் கொடுக்காதே  மீனை பிடிக்க கற்றுக் கொடு ... என்று ...காசை  கொடுத்துக் காடடாமல் ...  வாழ வழியைக் காட்டுவோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டு காசில் வாழலாம் , வெளிநாட்டுக்கு வந்துவிட்டால்  சொர்க்கம் என்று நினைப்பவர்களூக்கும் சேர்த்து 2009 போட்டது ஆப்பு...

பளபளப்பான எமது கார்களும், வீடுகளும், உடைகளும்,காலணிகளும்..பிரஜாவுரிமையும்...

செத்துப்போன போராளிகளும் மக்களும் எமக்கு தந்த மூலதனம்... இனிமேயாவது சொந்தமா வாழ சொல்லுறீங்க...

புரியுது நிலாமதி அக்கா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  1. நாம் எப்படித்தான் எடுத்துச் சொன்னாலும் புலத்தில் இருப்பவர்களுக்கு புலம் பெயர்ந்தவர்களின் வழ்வு மாயமான்தான். என்றாலும் அங்கிருப்பவர்களுக்கு உதவ வேண்டுமென்பதே எம் அனைவரின் ஆழ்மனதிலும் வேடூன்றி இருக்கும் தாகம். அதை சிலர் தவறாக உபயோகிப்பதை காணக்கூடியதாய் இருந்தாலும் மீண்டும் மீண்டும் உதவ விரும்பும் மனதை என்ன செய்வது.  இப்போது பலரும் வழ்வாதாரத்துக்கு தேவையான நடைமுறைகளைச் செய்து கொடுப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். இங்கிருந்து போய் வருபவர்கள் அங்கு ஏதோ சொர்க்கத்திலிருந்து இறங்கி வருபவர்கள் போல் படம் காட்டினால் அவர்கள்தான் என்ன செய்வார்கள். முதலில் திருந்த வேண்டியவர்கள் நாங்களே.  நல்லதொரு ஆக்கம் நிலாமதி.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரின் நிலை இப்போதிக்கு மாறாது அக்கா. எப்ப நாம் திருந்துகிறோமோ  அப்பா கொஞ்சம் மாறலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நிலாமதி said:

.பசி உள்ளவனுக்கு மீனைக் கொடுக்காதே  மீனை பிடிக்க கற்றுக் கொடு ...

இந்த முதுமொழியை சீன கம்யூனிஸ்ட் தலைவர் மாவோ சேதுங் சொல்லியிருந்தார்.

இந்தப் பிரச்சனை பலருக்கும் உண்டு.சொல்லி விழங்க வைக்க முடியாது.பத்து தரம் கொடுத்து ஒரு தடவை இல்லை என்றால் பத்து தடவை கொடுத்ததும் வீண்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வளவன் கண்மணி அக்கா சுமேரியர் ஈழப்பிரியன் ஆகியோருக்கும்   விருப்பு வாக்கு இடடவர்களுக்கும் நன்றி . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

“பசி உள்ளவனுக்கு மீனைக் கொடுக்காதே  மீனை பிடிக்க கற்றுக் கொடு ... என்று ...காசை  கொடுத்துக் காடடாமல் ...  வாழ வழியைக் காட்டுவோம்”  சத்தான வரிகள் நிலாமதி.??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டுக் காசில் வாழவேண்டிய நிலையில் இன்னும் பலர் தாயகத்தில் உள்ளனர். ஒரு பகுதியினர் தமது ஆடம்பர வாழ்வுக்கு வெளிநாட்டுக் காசை வேண்டி நிற்கின்றனர். இரண்டையும் வேறுபடுத்திப் பார்க்கவேண்டும்.

அன்றாட வாழ்வுக்கே அல்லாடும் நிலையில் இருந்தாலும் தங்கள் உறவினர்கள், தெரிந்தவர்களுக்கு உதவும் தாராள மனப்பான்மை கொண்டவர்களாக பலர் இப்போதும் வெளிநாடுகளில் உள்ளனர். ஆனால் இந்த வெளிநாட்டில் இருந்து காசு அனுப்பும் நிலை அடுத்த தலைமுறையோடு காணாமல் போய்விடும் என்றுதான் நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

தற்போது வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்புவது முன்பைக் காட்டிலும் பாதிக்கும் மேலாக குறைந்து விட்டது.  மேலே கூறியது போல்  அடுத்த தலைமுறையோடு காணாமல் போய்விடும். வெளிநாட்டுப் பணம் சமநிலையற்ற சூழுலை உருவாக்கியுள்ளது. பலருக்கு வெளிநாட்டுப் பணம் கடன் கட்டவும் அன்றாட சீவியத்துக்குமே தேவைப்படுகின்றது. சிலருக்கு தொழில் முதலீடாகவும்நிலம் வாகனங்கள் வாங்கவும் தேவைப்படுகின்றது. வெளிநாட்டுப் பணம் இறுதியில் சில முதலாளிகளை உருவாக்கிவிட்டே  நின்றுகொள்ளும். நேரடியாகவே வெளிநாட்டில் உள்ளவர்கள் ஏராளமான காணிகளை வாங்கியுள்ளார்கள். தற்போது ஐம்பது நூறு ஏக்கரில் பண்ணைகளை உருவாக்கும் முயற்சியில் உள்ளார்கள். பனையால் வீழ்ந்தவனை மாடேறி மிதித்ததுபேல் போரால் பாதிக்கப்பட்ட பல வறுமைப்பட்ட மக்களை வெளிநாட்டுப் பணம் என்னும் வறுமைக்குள்ளாகவே தள்ளியும் உள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னவோ நிலைமை தலைகீலாகுது போல் உள்ளது.அங்கிருந்து வரும் செய்திகள் சொல்லுகின்றன .

இந்தியாவில் முகாம்களை தவிர்த்து வெளியில் இருந்தவர்கள் பலர் தாயகம் திரும்பி உள்ளார்கள் .

வெளியில் இப்படியான குளிர் நோய் களை தவிர்க்க இங்குள்ள வீட்டை வாடகைக்கு விட்டு விட்டு இந்த வாடகை பணத்தில் அங்கு போய் செட்டிலாகுதுகள் .

Image may contain: sky, cloud, tree and outdoor

https://www.facebook.com/HariEngineersLK/?hc_ref=ART40bwDUXKKbfU4IbUBDwl95_0cBcYOL22mUZmR2gGl8t3e_fKI8eiU5v4BoUQsZUs&pnref=story

இப்படி திரும்பி வருபவர்களுக்கு வீடு கட்ட என்று யாழில் இவர்களை போல் பலர் கிளம்பி உள்ளார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது நன்பன் ஒருவர் தனக்கு ஏதாவது மேலதிக வருமானம் வந்தால் அதை ஊரில் உள்ளவர்களுக்கு அனுப்புவது வழமை.ஒரு முறை என்னிடம் தந்து கொடுக்கச் சொன்னார்.அவர்களுக்கு விட்டுத்திட்டம் கொடுத்திருந்தார்கள்.அவர் மற்றும் சிலரிடமும் உதவிகள் பெறுவதற்க்கு முயல்கிறார்.இவளவுக்கும் அக்கம் பக்கத்தில் வேலைக்கு ஆட்க்கள் பிடிப்பது கடினம்.

4 hours ago, சண்டமாருதன் said:

தற்போது வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்புவது முன்பைக் காட்டிலும் பாதிக்கும் மேலாக குறைந்து விட்டது.  மேலே கூறியது போல்  அடுத்த தலைமுறையோடு காணாமல் போய்விடும். வெளிநாட்டுப் பணம் சமநிலையற்ற சூழுலை உருவாக்கியுள்ளது. பலருக்கு வெளிநாட்டுப் பணம் கடன் கட்டவும் அன்றாட சீவியத்துக்குமே தேவைப்படுகின்றது. சிலருக்கு தொழில் முதலீடாகவும்நிலம் வாகனங்கள் வாங்கவும் தேவைப்படுகின்றது. வெளிநாட்டுப் பணம் இறுதியில் சில முதலாளிகளை உருவாக்கிவிட்டே  நின்றுகொள்ளும். நேரடியாகவே வெளிநாட்டில் உள்ளவர்கள் ஏராளமான காணிகளை வாங்கியுள்ளார்கள். தற்போது ஐம்பது நூறு ஏக்கரில் பண்ணைகளை உருவாக்கும் முயற்சியில் உள்ளார்கள். பனையால் வீழ்ந்தவனை மாடேறி மிதித்ததுபேல் போரால் பாதிக்கப்பட்ட பல வறுமைப்பட்ட மக்களை வெளிநாட்டுப் பணம் என்னும் வறுமைக்குள்ளாகவே தள்ளியும் உள்ளது. 

நல்ல விடையம் தானே

Link to comment
Share on other sites

4 hours ago, சுவைப்பிரியன் said:

எனது நன்பன் ஒருவர் தனக்கு ஏதாவது மேலதிக வருமானம் வந்தால் அதை ஊரில் உள்ளவர்களுக்கு அனுப்புவது வழமை.ஒரு முறை என்னிடம் தந்து கொடுக்கச் சொன்னார்.அவர்களுக்கு விட்டுத்திட்டம் கொடுத்திருந்தார்கள்.அவர் மற்றும் சிலரிடமும் உதவிகள் பெறுவதற்க்கு முயல்கிறார்.இவளவுக்கும் அக்கம் பக்கத்தில் வேலைக்கு ஆட்க்கள் பிடிப்பது கடினம்.

நல்ல விடையம் தானே

 

[இவளவுக்கும் அக்கம் பக்கத்தில் வேலைக்கு ஆட்க்கள் பிடிப்பது கடினம்]

நீங்கள், புல்லுப்படுங்கிற, தறைசாறுற வேலையத்தானே சொல்லுறியள், இருந்தா சொல்லுங்கோ நாங்கள் எங்கடை குடும்பமாய்ப்போய் செய்கின்றோம். *****: ****** **********

Link to comment
Share on other sites

6 hours ago, சுவைப்பிரியன் said:

எனது நன்பன் ஒருவர் தனக்கு ஏதாவது மேலதிக வருமானம் வந்தால் அதை ஊரில் உள்ளவர்களுக்கு அனுப்புவது வழமை.ஒரு முறை என்னிடம் தந்து கொடுக்கச் சொன்னார்.அவர்களுக்கு விட்டுத்திட்டம் கொடுத்திருந்தார்கள்.அவர் மற்றும் சிலரிடமும் உதவிகள் பெறுவதற்க்கு முயல்கிறார்.இவளவுக்கும் அக்கம் பக்கத்தில் வேலைக்கு ஆட்க்கள் பிடிப்பது கடினம்.

நல்ல விடையம் தானே

நல்ல விடயம் என்று எலலாவற்றையும் சொல்வதற்கில்லை. வெளிநாட்டுப்பணம் தாயக மக்களின் பொருளாதரத்தை மேம்படுத்தவும் போரால் நலிந்தவர்களை மேம்படுததவும் அவர்களை இயல்பான பொருளாதார சூழலுக்கு திருப்பவும் உதவும் வகையில் இருக்கும் வரையே நல்லது. வெளிநாட்டுப்பணம் புதிய முதலாளிகளை உருவாக்கும் போது அதில் எந்த நன்மையும் கிடையாது. பணமுள்ளவர்கள் மற்றும் அரச சார்பு பணியாளர்கள் பேரினவாதத்தை அனுசரித்து அண்டிப்பிழைப்பதுபோல் முதலாளிகளும் பேரினவாதிகளை அண்டிப்பிழைக்கும் நிலை சாதராணமானது. வறுமைப்பட்ட மக்கள் இரட்டிப்பு அழுத்தத்திற்கு உள்ளாவார்கள். தற்போதும் இந்த நிலை பரவலாக உள்ளது. அனுப்பப் படும் வெளிநாட்டுப் பணத்தை வறுமைப்பட்டமக்களுக்கு வட்டிக்கு  கொடுப்பதும் வாழ்நாள் முழுக்க வட்டி கட்ட உழைப்பதும்.. வயல்க்காணிகளை ஈடுவைப்பதும் அதை மீளமுடியாமல் விவசாயம் செய்ய வேண்டியவர்கள் கூலிவேலை செய்வதும் என ஏராளமான சிக்கல்கள் இருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல இயல்பான கதை சகோதரி....! 

என்ன மீன் பிடிக்க கற்றுக் குடுப்பது ஒன்றும் பெரிய வேலையில்லை, பிறகு தூண்டிலும் புழுவும் வாங்கிக் குடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். எப்படி வசதி....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம் அக்கா சொல்வது சரிதான்  சிலர் ஆடம்பர வாழ்க்கைக்கு பயன்ப்டுத்துகிறார்கள் சிலர் அதை பயன்படுத்துகிறார்கள் நிலமை  சீராக வேண்டும் எங்கே எப்போது என்ன நடக்குமென்று தெரியாத சூழ் சிலை தற்போதும் நிகழ்கிறது  உங்களின் சொந்தங்கள் மூலமாக சிறிய சிறிய தொழில் தொடங்கலை ஆரம்பிக்கலாம் ஆனால் பெரிய தொழிலை செய்யவே கன பேர் நினைக்கிறார்கள் 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டில் ஒரு இளம் குடும்பம் எதிர்நோக்கும் பிரச்சனைகளை கதை பேசியிருக்கிறது. இந்தக் கதை பேசாத விடயங்களும் உண்டு. பல குடும்பங்களில் கணவன் மனைவி முகம்பார்த்து பேசுவது கூட குறைவாக இருக்கிறது. எங்கள் சமூகம் அகதிகளாக வந்து படிப்படியாக உழைப்பால் முன்னுக்கு வந்து கொண்டிருப்பவர்கள். ஒரு தலைமுறையின் வாழ்வே மகிழ்ச்சியான தருணங்கள் என்பனவற்றை இழந்து பொருளாதாரப்பலவீனங்களால் வாழ்க்கையை வரமாக அல்ல சாபமாக நினைக்கும் பலரை வெளிநாடுகளில் காணமுடிகிறது. வெளிநாட்டுக்கு வந்தவர்கள் தமக்காக மட்டுமல்ல அவர்களுக்கு இரு குடும்பச் சுமைகள் வெளிநாட்டில் ஒன்று தாயகத்தில் மற்றையதுபோன்று விட்டெறிந்து விடமுடியாத சுமைகள். போருக்கு முகங்கொடுத்தவர்கள் என்ற அங்குள்ளவர்கள் மீதான இரக்கத்தை அங்குள்ளவர்கள் பலரும் தமது ஆடம்பரத்திற்கு பயன்படுத்த முனைவது கண்கூடு. உழைக்க விரும்பாத ஒரு சமூக வளர்ச்சி வெளிநாட்டில் வாழும் நம்மவர்களை சுரண்டி பருத்திருக்கிறது. அங்கு வேலைக்கு ஆட்களைப்பிடிப்பது குதிரைக்கொம்பு என்ற அளவில்... பலரும் சும்மாவே வெட்டியாக இருக்கிறார்கள் ஏதாவது வேலை செய்ய முயற்சிப்பதே இல்லை ஆனால் வசதியாக நம்மைவிட செல்வச் செழிப்போடு இருக்கிறார்கள். நாம்தான் வெளிநாடுகளில் வருடத்திற்கு குறைந்தது இரண்டு தடவையாவது காலநிலை மாற்றத்தால் நோய்வாய்ப்பட்டு ஓரிரு வாரங்கள் படுக்கையில கிடப்பதும் பின்னர் எழுந்தால் ப்ரேக்கில்லாத சைக்கிளில் உழக்குவதும் போல வாழ்வு இதற்குள் ஊருக்குப் போனால் கையேந்தி வந்து நிற்பவர்களுக்கு தான தருமம். இவற்றை மீறித்தான் அங்கு நிற்கும் சிலநாட்களாவது வாழ்க்கையை அனுபவிப்போம் என்ற பேரவா... வாழாமல் வாழ்வதாய் நம்மை நாமே ஏமாற்றி இப்போதும் வாழ்கிறோம். காதலோடு முகம்பார்த்து பேச நேரமற்றவர்களாக.... நம்மையும் கொஞ்சம் மாற்றிக் கொள்ளவேண்டும் இனியாவது எமக்காக வாழ்வோம் என்று முடிவெடுத்தால் இப்படியான இரக்கும் சோம்போறிகள் குறைவார்கள். நல்ல கருப்பொருளை  கதையின் மூலம் பேசுபொருள் ஆக்கியிருக்கிறீர்கள் நிலாமதியக்கா பாராட்டுக்களும் வாழ்த்துகளும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

நம்மையும் கொஞ்சம் மாற்றிக் கொள்ளவேண்டும் இனியாவது எமக்காக வாழ்வோம்

?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/02/2018 at 9:18 AM, பெருமாள் said:

எனக்கென்னவோ நிலைமை தலைகீலாகுது போல் உள்ளது.அங்கிருந்து வரும் செய்திகள் சொல்லுகின்றன .

இந்தியாவில் முகாம்களை தவிர்த்து வெளியில் இருந்தவர்கள் பலர் தாயகம் திரும்பி உள்ளார்கள் .

வெளியில் இப்படியான குளிர் நோய் களை தவிர்க்க இங்குள்ள வீட்டை வாடகைக்கு விட்டு விட்டு இந்த வாடகை பணத்தில் அங்கு போய் செட்டிலாகுதுகள் .

Image may contain: sky, cloud, tree and outdoor

https://www.facebook.com/HariEngineersLK/?hc_ref=ART40bwDUXKKbfU4IbUBDwl95_0cBcYOL22mUZmR2gGl8t3e_fKI8eiU5v4BoUQsZUs&pnref=story

இப்படி திரும்பி வருபவர்களுக்கு வீடு கட்ட என்று யாழில் இவர்களை போல் பலர் கிளம்பி உள்ளார்கள் .

இதில் என்ன தவறு உள்ளது? தமிழர்களால் தமிழர்களை கொண்டு நடத்தப்படும் நிறுவனம்.

என்னுடன் கூடப்படித்தவர்கள் கட்டடத் தொழிலில் உள்ளனர், புலம்பெயர் நாடுகளில் உள்ள Dr, Eng, Accountants என்று பலர் அங்கு வீடுகளை கட்டிக் கொண்டிருக்கிறார்கள். Bank to Bank பணத்தை அனுப்புகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, MEERA said:

இதில் என்ன தவறு உள்ளது? தமிழர்களால்

மன்னிக்கவும் "பலர் கிளம்பி உள்ளார்கள் ." எனும் சொற்பதம் உங்களை கோபப்படுத்தி உள்ளதுபோல் இருக்கு .

அவர்கள் செய்வது நல்ல விடயமே புலம்பெயர் பணம் வடகிழக்கில் புழங்குவது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில் இருக்கும் பழைய மாணவர் சங்கமொன்றுக்கு,  ஊரில இருக்கும் பாடசாலையினர் உதவி கேட்டு மின்னஞ்சல் அனுப்பி இருந்தார்கள். அதிபர் ஒருவரின் பிரியாவிடை விழாவுக்கும் , சரஸ்வதி பூசை விழாவுக்கு காசு கேட்டு அனுப்பி இருந்தார்கள்.  போர்க்காலத்தில் மிகவும் வசதியற்ற காலத்தில் அங்கு சரஸ்வதி பூசையோ , பிரியாவிடை நிகழ்வுகள் நடக்கவில்லையா? . எல்லாம் இப்பொழுது அங்கு ஆடம்பரமாகி விட்டது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.