Jump to content

ஸ்டாலின் ரகசியமும் வைகோ பிரகடனமும்!


Recommended Posts

மிஸ்டர் கழுகு: ஸ்டாலின் ரகசியமும் வைகோ பிரகடனமும்!

 
 

 

p4b_1518775060.jpg“அ.தி.மு.க தலைமைக்கழகத்தில் இருக்கிறேன். போட்டோகிராபரை அனுப்பி வைக்கவும்’’ என்று செய்தி அனுப்பினார் கழுகார். அடுத்த அரை மணி நேரத்தில் நம்முன் ஆஜரானார் கழுகார்.

‘‘அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் என்ன விசேஷம்?” என்றோம்.

“ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ம் தேதி, அவரது உருவச்சிலை அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் திறக்கப்பட உள்ளது. திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை பகுதியில் தயாரிக்கப்பட்ட இந்தச் சிலை, இரண்டு மாதங்களுக்கு முன்பே சென்னை வந்துவிட்டது. தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலை அளவுக்கே ஜெயலலிதாவின் சிலையும் வைக்கப்பட உள்ளது. சிலையில் கண் பகுதி சரியாக அமையவில்லையென்று, தயாரித்த இடத்துக்குச் சிலையை மீண்டும் எடுத்துச் சென்றனர். ஓரிரு தினங்களில் சரிசெய்யப்பட்டு, மீண்டும் சென்னை வர உள்ளது. சிலையை முதல்வர் பழனிசாமி திறந்து வைக்கவுள்ளார்.”

‘‘சசிகலா சிறைக்குச் செல்வதற்கு முன்பே ஜெயலலிதாவுக்குச் சிலை வைப்பதற்கான வேலை நடந்ததே?”

‘‘ஆமாம். சிலைகூட தயார் செய்யப்பட்டது. தலைமை அலுவலகத்தில் வைக்கும் சிலையைப் போலவே, மாவட்டம்தோறும் சிலை வைப்பதற்கும் முடிவானது. சசிகலா சிறைக்குச் சென்றதால், அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. சசிகலா தரப்பு உருவாக்கிய சிலையை நிராகரித்த எடப்பாடி தரப்பு, புதிதாக சிலைக்கு ஆர்டர் கொடுத்தது.”

p4c_1518775082.jpg

‘‘முதல்வர் எடப்பாடி பழனிசாமியை எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் சந்தித்துள்ளாரே?”

‘‘பஸ் கட்டண உயர்வு, போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்னை ஆகியவற்றை ஆய்வுசெய்து, 27 பரிந்துரைகளைத் தி.மு.க தயார் செய்திருந்தது. அதை முதல்வரிடம் அளிக்க ஸ்டாலின் தரப்பில் நேரம் கேட்கப்பட்டது. உடனே நேரம் ஒதுக்கப்பட்டது. முதல்வர் அறைக்குள் ஸ்டாலின் நுழைந்ததும், முதல்வர் எழுந்து நின்று வரவேற்றார். அப்போது துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் இருந்தனர். தான் கொண்டுவந்த ஃபைலை முதல்வரிடம் கொடுத்து, ‘இந்தப் பரிந்துரைகளை நீங்கள் அமல் செய்தாலே, பஸ் கட்டணத்தை உயர்த்தத் தேவை இருக்காது’ என்று ஸ்டாலின் சொன்னார். அந்த ஃபைலைத் திறந்துகூட பார்க்காமல், ‘பரிசீலனை செய்கிறேன்’ என்று எடப்பாடி சொன்னார். அருகில் இருந்த விஜயபாஸ்கரிடம், ‘நீங்களாவது படித்து இந்த விவகாரத்தில் நல்ல முடிவு எடுங்கள்’ என ஸ்டாலின் சொன்னார். அனைவருக்கும் தேனீர் பரிமாறப்பட்டது. 15 நிமிடங்களில் சந்திப்பு முடிந்தது. கண்புரை அறுவை சிகிச்சை செய்துள்ளதால் முதல்வர் அந்த அறிக்கையைப் படிக்கவில்லையாம்.” 

“மதுரையில் வைகோ பேசியிருப்பதைக் கவனித்தீரா?”

“ஆமாம். பஸ் கட்டண உயர்வைக் கண்டித்து தி.மு.க கூட்டணிக் கட்சிகள் சார்பில் மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடந்தன. மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் வைகோ பேசிய பேச்சு, தி.மு.க-வினரை உற்சாகமடைய வைத்தது. ‘14 ஆண்டுகள் கழித்து தி.மு.க கொடி பறக்கும் மேடையில் மதுரையில் பேசுகிறேன். திராவிட இயக்கத்தை வீழ்த்துவோம் என்று சிலர் கிளம்பியிருக்கிறார்கள். கழகங்கள் இல்லாத தமிழகம் என்கிறார்கள். இந்த நிலையில், தி.மு.க-வை ஆதரிப்பது மட்டுமே சரியானது என்ற முடிவோடு வந்திருக்கிறேன். தளபதி ஸ்டாலினை முதலமைச்சர் ஆக்குவோம். இதைத் தவிர எங்களுக்கு வேறு நோக்கம் இல்லை’ என்றார் வைகோ.”

“அப்படியா?”

“ஸ்டாலினும் வைகோவும் பழைய பகையை மறந்து ஒன்றுசேர்ந்துள்ளார்கள். யாராவது உள்ளே புகுந்து அவர்களுக்குள் குழப்பம் ஏற்படுத்தி விடக்கூடாது. அதனால்தான், வெளிப்படையாகவே இதனைச் சொல்லிவிட வைகோ முடிவெடுத்தாராம். ‘இரண்டு தலைவர்களும் தனிப்பட்ட முறையில் இதுபற்றிப் பேசிவிட்டார்கள். ஆனாலும், மீடியாவால் கிளப்பப்படும் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வைகோ நினைத்திருக்கலாம்’ என்கிறார்கள் தி.மு.க-வில். ‘வைகோவை முழுமையாக ஸ்டாலின் ஏற்றுக்கொண்டதால்தான், மதுரை மாநகரில் அவர் பேசுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். மிகப் பிரமாண்டமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தி.மு.க-வினர் தயக்கமின்றி வேலை பார்த்தார்கள்’ என்றும் அவர்கள் சொல்கிறார்கள்!”

p4a_1518775105.jpg

‘‘ஸ்டாலின் பேச்சில் இது வெளிப்பட்டதா?”

‘‘திருவள்ளூரில் பேசிய ஸ்டாலின் இந்த மேட்டரைத் தொடாமல், அ.தி.மு.க ஆட்சியைக் காய்ச்சியெடுத்தார். ‘இந்த ஆட்சியைக் கலைக்க ஒரு நிமிடம் போதும்’ என்று சொன்னதுதான் ஹைலைட்!”

‘‘எந்த அர்த்தத்தில் அப்படிச் சொன்னார்?”

‘‘அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஒருவர் ஸ்டாலினிடம் பேசியது குறித்து சில மாதங்களுக்கு முன்பு சொன்னேன். அவர்களைத் தி.மு.க தரப்பு கொஞ்சம் அழுத்தியிருந்தால், அப்போது ஆட்சி அமைக்கப் போதுமான அளவு எம்.எல்.ஏ-க்கள் தி.மு.க பக்கம் தாவியிருப்பார்கள். அந்தப் பேச்சுவார்த்தையில் சில பசையான விஷயங்கள் பேசப்பட்டன. அதனால், தி.மு.க தரப்பு அதனை அப்படியே ஆறப்போட்டது. மூன்று மாதங்களுக்கு முன்பு நடந்த அந்த விஷயத்தைத் திருவள்ளூர் கூட்டத்தில் ஸ்டாலின் மறைமுகமாகச் சொல்லியிருக்கிறார். ‘நீங்கள் ஏன் இந்த ஆட்சியைக் கவிழ்க்கவில்லை என்று கேட்கிறார்களே, கவிழ்க்கலாம். ஆனால், அப்படிப்பட்டவர்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைத்தால், மக்களுக்கான திட்டங்களைத் தீட்ட முடியுமா?’ என்று பட்டவர்த்தனமாகப் போட்டு உடைத்தார் ஸ்டாலின்!”

“இவையெல்லாம் எடப்பாடிக்குத் தெரியாதா?”

‘‘தெரியும். அதனால்தான், எம்.எல்.ஏ-க்கள் ஒவ்வொருவரையும் அவர் தனித்தனியாக வளைத்து வைத்துள்ளார். தினகரன் பக்கம் போன 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் தொடர்பான தீர்ப்புத் தனக்கு எதிராக வந்தாலும், அதைச் சமாளிக்கும் முடிவோடு இருக்கிறார் முதல்வர். அந்த 18 பேரில் 13 பேரை வளைக்கும் காரியங்களில் அமைச்சர்கள் இறங்கியுள்ளார்கள். ‘தங்க தமிழ்ச்செல்வனுக்கும் அமைச்சர் பதவி தர நினைத்திருந்தோம். அவர்தான் அந்தப் பக்கமாகத் தங்கிவிட்டார்’ என்று அமைச்சர் வேலுமணி சொல்லியிருப்பதும், தூண்டில் வார்த்தைகள்தான். இதைத் தெரிந்துகொண்ட தினகரனும், தன் தரப்பில் உள்ள எம்.எல்.ஏ-க்களைத் தக்கவைக்கும் காரியங்களைப் பார்த்து வருகிறார். ‘நான் முதலமைச்சர் ஆக மாட்டேன். உங்களில் ஒருவரைத்தான் முதலமைச்சர் ஆக்குவேன்’ என்று அந்த எம்.எல்.ஏ-க்களிடம் சொல்லி வருகிறாராம். இந்த ஆட்டம் எதுவரை நீடிக்குமோ தெரியவில்லை’’ என்ற கழுகார் பறந்தார்.

படங்கள்: வீ.நாகமணி, கே.ஜெரோம். வி.ஸ்ரீனிவாசுலு


p4_1518774963.jpg

ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த போலீஸ் அதிகாரி ஒருவர், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில், தகுதியே இல்லாத எட்டுப் பேருக்கு உதவிப் பேராசிரியர் வேலை வாங்கிக்கொடுத்துப் பல லட்சங்களை வசூலித்துவிட்டார். அந்தப் பல்கலைக்கழகத்தில், பேராசிரியர் நியமனங்களில் முறைகேடு நடந்திருப்பதாகப் புகார் கிளம்பியிருக்கும் நிலையில், இவரைச் சுற்றி வளையம் அமைத்துள்ளார்கள். விரைவில் சிக்குவார் என்கிறார்கள்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி சில தினங்களுக்கு முன், புதிய இனோவா காரைப் பயன்படுத்த ஆரம்பித்தார். ‘சி.எம்’ பதிவுடன் இந்த கார் பவனி வந்தது. ஆனால், இதைப் பயன்படுத்த ஆரம்பித்ததிலிருந்து கண் ஆபரேஷன், மத்திய அரசுடன் வெளிப்படையான உரசல் என நெகடிவாக நிறைய விவகாரங்கள் நடந்தன. இதனால், மீண்டும் பழைய காரையே பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார் பழனிசாமி.

அ.தி.மு.க-வின் தகவல் தொழில்நுட்ப அணியில் கோஷ்டி மோதல் உச்சகட்டத்தை எட்டிவிட்டது. ‘‘அணியின் செயலாளராக இருக்கும் ராமச்சந்திரன், ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்தவர் என்பதால், அந்த அணியினருக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறார்’’ என்கிறார்கள். சமீபத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு எடப்பாடி கோஷ்டியைச் சேர்ந்த நிர்வாகிகளுக்குக்கூட அழைப்பு கொடுக்கவில்லை. எடப்பாடியிடம் இது புகாராகப் போயிருக்கிறது.

பிப்ரவரி 15-ம் தேதி நடந்த தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில், ‘தமிழக சட்டசபையில் ஜெயலலிதாவின் படத்தைத் திறந்ததுபோல, நாடாளுமன்றத்திலும் ஜெயலலிதாவின் படம் திறக்க வேண்டும்’ என்று ஆலோசனை நடைபெற்றுள்ளது. ‘‘முதலில் அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, பிரதமருக்கு அனுப்பி வைக்கலாம். பிறகு, அமைச்சர்கள் குழு பிரதமரைச் சந்தித்து இந்தக் கோரிக்கையை முன்வைக்கலாம்’’ என்று முடிவாகியுள்ளது.

கவர்னர் பன்ரிவால் புரோஹித், வாரத்தில் ஒரு நாள் டின்னருக்கு ஏற்பாடு செய்கிறார். அந்த விருந்தில், தமிழகத்தின் முக்கிய மீடியா அதிபர்களைச் சந்தித்து வருகிறார். வரும் பத்திரிகை அதிபர்களிடம், ‘‘நான் ஆளுநராக இருந்தாலும், இந்த அரசை நான்தான் ஆட்சி செய்வேன். நீங்கள் எனக்கு ஒத்துழைப்பு கொடுங்கள்’’ என்று வெளிப்படையாகவே சொல்கிறார். இதைக் கேட்டு பத்திரிகை அதிபர்கள் அதிர்ந்துபோகிறார்கள். 

https://www.vikatan.com

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.