Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சான்றிதழ்.

அது ஒரு முன்னிரவு கூடிய மாலை நேரம். மலைநாட்டுக்கே உரிய குளிரும், குளிர்காற்றுடன் சாரலும் அடித்து கொண்டிருக்கு. பாதையும் படுத்திருக்கும் பாம்புபோல் வளைந்து நெளிந்து மேலே மேலே போகிறது.அதில் அந்த ஹையஸ் வண்டி கொண்டைஊசி வளைவுகளில் நிதானமாக ஊர்ந்து ஏறிக்கொண்டிருக்கு.அதன் ஹெட்லைட் இரண்டும் புலியின் கண்கள்போல் மினுங்கி கொண்டிருக்கு. இராகவன் மூன்றாவது கியரில் வண்டியை மிகவும் மெதுவாக செலுத்திக் கொண்டிருக்கிறான். வண்டியின் ஸ்டீரியோவில் சன்னமான குரலில் h.r  ஜோதிபால.......,

"ஆதர மல் பவண்னே 

ஆயன மே கமண்ணே 

ஹொய்தோ யன்னே 

கவுதோ என்னே 

துலீகா ....துலீகா ...... பாடிக்கொண்டு வருகிறார்.

அந்த இனிமையான சிங்களப் பாடல் செவியூடாக மனசில் வியாபிக்கிறது. அவனின் பல்லிடுக்கில் r .v .g .பீடி எரிய மூக்கினால் புகை வெளியேறுகின்றது. வண்டி சமதளத்தில் வருகின்றது. சற்று தூரத்தில் ஒரு பஸ் தரிப்பிடம். அதில் வீதியை பார்த்தபடி ஒராள் நிக்கிறார். அருகே வருகையில் அது ஒரு பெண் எனத் தெரிகின்றது. அவள் முகத்தில் வேதனையுடன் காலை உதறிக் கொண்டிருந்தாள். வண்டியை பார்த்ததும் தனது தாவணியை உருவி அசைத்து நிறுத்துமாறு சைகை செய்கின்றாள். வண்டி நிக்காமல் அவளைக் கடந்து செல்கின்றது. ஒரு நிமிஷம் யோசித்தவன்,தனக்குள் இந்த நேரத்துக்கு இனி இங்கு பஸ் வராது. கூட்டிக்கொண்டு போய் கடைகளுக்கு கிட்ட விடுவம் என நினைத்து றிவ்வார்ஸில் அவளருகே வருகின்றான். அவள் வலியுடன் பதட்டமாய் நிப்பதைப்  பார்த்து, வண்டியை சிறிது திருப்பி அந்த இடத்துக்கு வெளிச்சம் படுமாறு நிறுத்தி காண்ட் பிரேக் போட்டுவிட்டு இறங்கி அவளருகே வருகின்றான்.

இராகவன்: மொக்கத நோனா கோகேத யன்னே ....,( என்ன பெண்ணே எங்கு போகிறாய்).

பெண் : மாத்தையா, ஓயாட்ட  மட்ட உதவி கறன்ன புழுவந்த. யம் பழிபோதாக் கயி.....( ஐயா எனக்கு கொஞ்சம் உதவ முடியுமா, எதோ பூச்சி கடிக்குது ).

அவளது முகத்தையும் உடையையும் பார்த்தவன், நீங்கள் தமிழா. இங்கு யாரையாவது தேடி வந்திருக்கிறீர்களா. எங்கு காட்டுங்கள்.

ஓம் நான் தமிழ்தான். இங்கு கடிக்குது என்று காலை காட்டுகின்றாள். எடுக்க வருகுதில்லை.

பொறுங்க நான் பார்க்கிறன், என்று சொல்லி பார்த்தால் அவளது கணுக்காலுக்கு மேல் ஆடுதசையில் மலை அட்டை ஒன்று கடித்து இரத்தம் உறிஞ்சிக்கொண்டிருக்கு. இது மலை அட்டை  அசைய வேண்டாம் என்று சொல்லி வில்லுக் கத்தியை எடுத்து  அவளது சுடிதாரை வெட்டி விட்டு பார்க்க அது இரத்தம் குடித்து குண்டாகிக்  கொண்டிருக்கு. இராகவன் சற்றும் தாமதிக்காமல் பீடியின் நெருப்பை கிள்ளி எறிந்துவிட்டு அந்த பீடியை சப்பி அந்த ஜந்துவின் மேல் பொளிச் பொளிச் என்று துப்புகிறான்.அவளிடம் பேச்சு குடுத்துக் கொண்டே மீண்டும் மீண்டும் எச்சிலை உமிழ அது கடிப்பதை விட்டு தலையை உயர்த்துகிறது. அவனும் சுணங்காமல் கத்தியால் அதை வழித்து எடுத்து அப்பால் போட்டுவிட்டு அவளையும் ஏற்றிக்கொண்டு கடைகள் இருக்கும் இடத்துக்கு வருகின்றான். சில கடைகள் மட்டுமே அங்கிருக்கு.அங்கே அவளை இறக்கிவிட்டு செல்கிறான். அவனது கடையும் பேக்கரியும் அந்த வீதியின் கோடியில் இருக்கு.அங்கு வானை நிறுத்திவிட்டு உள்ளே போனவன் உறங்கி விடுகின்றான்.

சோதனை தொடரும்....!

 

 

Link to comment
Share on other sites

  • Replies 66
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சான்றிதழ் .....!

அதிகாலை 3.00 மணியளவில் அவனது நண்பன் விமலதாஸ மோட்டார் சைக்கிளில்  அங்கு வருகின்றான். இருவரும் பாண் மற்றும் பனிஸ்  தயாரிக்கும் வேலையில் மும்மரமாய் இருக்கின்றார்கள். காலை 6:00 மணி.பொழுது கொஞ்சம் புலர்ந்து வருகுது.மலையகம் துயில் எழுகின்றது.விமலும் வேலைகளை முடித்துவிட்டு பாய்லரை தயார்பண்ணி இருவருக்கும் தேனீர்  போட்டு கொண்டுவந்து இருவரும் அருந்துகின்றனர்.அப்போது இராகவன் இரவு நடந்ததை சொல்லுகிறான். பின்பு விமல் தனது சைக்கிளில் கிளம்பிப் போகின்றான்.உடனே திரும்பி வந்து மச்சான் "ஏ கெல்ல இன்னவா. பாபய சம்பூர்ண அயிதயகி ". அந்த பொண்ணு அங்க இருக்கு.பாவம் நல்ல குளிர் தெரியுமா.

இராகவனும்  "ஒவ் மட்ட அமதக்க வுனா". ஓம் நான் மறந்திட்டன். "அபி யண்ணம்" போய் பார்ப்பம் வா. இருவரும் போன பொழுது அவள் குளிரில் நடுங்கிக் கொண்டு பெட்டியை அனைத்துக் கொண்டு இருக்கிறாள். விமல் பெட்டியை துக்க,  இருவருமாக அவளை அழைத்து வந்து கடையில் போறணைக்கு அருகில் அமர வைக்கின்றார்கள். விமல் தூக்கிவந்த பெட்டியை பக்கத்தில் வைத்துவிட்டு போகிறான். இராகவன் சுடச்  சுட தேநீர் போட்டு வந்து அவளிடம் தர அதை இரு கைகளாலும் பொத்திப் பிடித்து வாங்குகிறாள். அந்தசூடு கை வழியே உடலில் பரவி நடுக்கம் குறைகிறது. போறணையின் கதகதப்பும் அவளது ஆயாசத்தைப் போக்குகின்றது. அவன் போய் இரண்டு டிஸ்பிரினும், சித்தாலேப்பை புட்டியையும் கொண்டுவந்து அவளிடம் தந்து, களிம்பை அட்டை கடித்த இடத்தில் பூசச்சொல்கிறான். கடைக்கு ஆட்கள் வர பாண், தேநீர் வியாபாரம் சூடு பிடிக்கிறது. இடையில் ஒரு வேலையாள் வந்து பெட்டிகளில் இருந்த பொருட்களையெல்லாம் வானில் ஏற்றிக் கொண்டு செல்கின்றார். அவை ஆஸ்பத்திரி,பாடசாலைகள்,முதியோர் இல்லம்,சிறைச்சாலைக்கு எல்லாம் போகின்றது.

அந்தப் பெண் அங்கேயே நிலத்தில் நன்றாக உறங்கிக் கொண்டிருக்கிறாள். நினைவுகள் பின்னோக்கி.....!

    தெய்வநாயகியின் குடும்பம் இலங்கையின் குறிப்பிடத்தக்க கோடீஸ்வரர்களில் ஒன்று. அவர்களின் வியாபாரம் இரத்தின கற்கள் மொத்தமாகவும் சில்லறையாகவும் கொள்வனவு மற்றும் ஏற்றுமதி. உலகளாவிய ரீதியில் ஐந்து நட்ச்சத்திர ஹோட்டல்கள், விமான நிலையங்கள் போன்றவற்றில் அவர்களின் ஷோரூம்கள் இருக்கும். தெய்வநாயகியின் ஒரே மகன் சித்தார்த். அப்பா சில வருடங்களின் முன்பு காணாமல் போன விமானத்தில் போய் காணாமல் போய்விட்டார். ஹேமா அங்கு வேலைக்கு வந்த பெண். பட்டதாரி. மிகக்  குறுகிய காலத்திலேயே அந்த வியாபாரத்தின் நெளிவு சுளிவுகள்  நுணுக்கங்கள் எல்லாம் அத்துப்படி. ஒரு கல்லை பார்த்ததுமே அதன் காரட், பெறுமதி உள்ளுரில் மற்றும் வெளிநாட்டில் அதன் பெறுமதி எல்லாம் கணக்கு போட்டு விடுவாள்.  சித்தார்த் அவளை விரும்பி பின் பெற்றோர்களின் சம்மதத்துடன் அவளைத் மணமுடித்திருந்தான். அவர்களது திருமணத்துக்கு நாட்டின் பிரதான அமைச்சர்கள், பிரபலங்கள் எல்லோரும் வந்திருந்து வாழ்த்தினார்கள். தெய்வநாயகியும் மருமகளுக்கு  பெறுமதியான நீலவைரம் ஒன்றை பட்டுத்துணியில் வைத்து பரிசாகத் தந்திருந்தாள்.

அவர்களுக்கு இருந்த ஒரே குறை மணமாகி ஐந்து வருடங்களாகியும் பேர் சொல்ல பிள்ளை இல்லை. மாமியார் வாரிசுக்காக ஏங்குகிறாள். சித்தார்த் நல்லவன்தான் ஆனால் முன்கோபக்காரன்.ஒழுக்கங்களும் சரியில்லை. ஒருமுறை அவனது அலுமாரியை துப்பரவாக்கும் பொழுது அவனது அத்தனை பாடசாலை சான்றிதழ்களும் அங்கு குப்பையாக கிடந்தன.அவற்றை ஒழுங்காக அடுக்கும்போது பார்க்கிறாள், எல்லாப் பாடங்களிலும் சிறப்பான பெறுபேறுகள் பெற்றிருக்கின்றான். ஆனால் ஒழுக்கம் என்ற இடத்தில் மட்டும் அத்தனை சான்றிதழ்களிலும் குறைவு, திருந்தவேண்டும் என்றே குறிப்பிடப் பட்டிருந்தன.அது தெரிந்ததுதானே என்று தனக்குள் சொல்லிக் கொண்டே அடுக்கி வைக்கிறாள்.

அவன் போகும் பார்ட்டிகளுக்கு எல்லாம் கட்டாயம் அவளும் போயாக வேண்டும். மது அருந்த வைத்து நடனம் எல்லாம் ஆடவேண்டும். முதலில் வெறுப்பாக இருந்தாலும் பின் அதுவே பழக்கமாகி விட்டது. இரண்டு வருடங்களுக்கு முன் இருவரும் வைத்தியரிடம் சென்று ஆலோசனை பெற்றபோதும் இருவரிடமும் ஒரு குறையும் இல்லை. மேலும் இரு வருடங்களாகி விட்டன. இந்த திரண்ட சொத்துக்களுக்கு ஒரு வாரிசு இல்லாமல் போய்விடுமோ என்று தெய்வநாயகிக்கு கவலையாகி விட்டது. அதுக்காக அவளை விவாகரத்து செய்துவிட்டு அவனுக்கு வேறு மணம் புரியம் முயற்சிகளில் ஈடுபடுகின்றார்கள்.அதுவும் அவளுக்கு முன்னாலேயே ஏற்பாடுகள் நடக்கும்போது ஹேமா வெறுமையை உணருகின்றாள். அவள் யோசித்து பார்க்கிறாள், தங்களது தாம்பத்திய உறவுகள் ஒருபோதும் சீராக நடந்ததில்லை. மேகங்கள் திரண்டுவந்து திவலை நீர் கூட பூமிக்கு தராமல் களைந்து போவதுபோல்தான் அந்த உறவுகள் இருந்திருக்கின்றன.எதையும் நிதானமாய் உணர்வதற்கு அவனது முன்கோபம் விடாது.அவள்மீது பழியை போட்டுவிட்டு தன்பாட்டுக்கு போய்விடுவான்.தாயும் தன் பிள்ளையை விட்டுக்கொடுக்க மாட்டாள்.அதனால் மருமகள் மீது கோபப்படுவதும் வாடிக்கையாகி விட்டது. 

சோதனை தொடரும்.....!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, suvy said:

சோதனை தொடரும்.....!

 

சுவியர் வழமை போல தொடர் எழுத ஆரம்பித்துள்ளீர்கள்.இம் முறை நான் சிங்களத்திலும் குறைந்தவனல்ல என்று மார்தட்டி நிற்கிறது தெரிகிறது.  

மிகுதிக்கும் ஆவலாக இருக்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  1. விறுவிறுப்பான தொடர் கதை ஆரம்பித்துள்ளார் சுவி. என்ன  சிங்களத்திலும் புலமை மிக்கவரா நீங்கள்?  தொடருங்கள் காத்திருக்கிறோம்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட நீங்கள் முதலே கதையை ஆரம்பிச்சாச்சா????நான் தான் கவனிக்கவில்லை. ஆவலுடன் மிகுதிக்காக காத்ருக்கிறோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சான்றிதழ்......!

அவர்களாகவே ஹேமாவுக்கும் ஒரு வக்கீலை நியமித்து சில கோடிரூபாய் பணமும்,வெள்ளவத்தையில் ஒரு வசதியான அப்பார்ட்மென்டும் தந்து, அவள் விரும்பினால் அந்த வேலையில் அவள் தொடரலாம் என்றும் சொல்லி சுமூகமாய் விவாகரத்தை முடித்து விட்டார்கள். இந்த இடைப்பட்ட  காலத்தில் ஹேமாவும் மனதளவில் தயாராகி இருந்தாள். கோர்ட்டில் விவாகரத்து முடிந்ததும் தான் அந்த வேலையில் தொடரப்போவதில்லை என்பதை பதிவுத்தபால் மூலம் தெரிவித்து இருந்தாள். ஒரு ஏஜென்ஸியைப் பிடித்து அந்த அப்பார்ட்மெண்டை வாடகைக்கு விட்டு பணம் தனது வங்கிக்கணக்கில் வரும்படி செய்திருந்தாள்.மேலும் வங்கியில் ஓர் லாக்கர் திறந்து அதில் தனது முக்கியமான பாத்திரங்கள்,விசாகார்ட், காசோலை, போன்,சிம், எல்லாவற்றையும் வைத்து பூட்டிவிட்டு வங்கியை விட்டு வெளியில் வந்து சில துணிமணிகளுடன் பெட்டியை எடுக்கும்போது அதில் அந்த நீலவைரம் இருக்குது.பரவாயில்லை இருக்கட்டும் என்று விட்டு பொட்டியை எடுத்துக்கொண்டு ஒரு பொது டெலிபோனில் இருந்து தன்கூட வேலைசெய்தவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு, தனது ஆருயிர் சிநேகிதி வந்தனாவிடம் "வந்தனா நான் கொழும்பை விட்டு வெகு தூரம் போகின்றேன். எங்கே போகின்றேன் என்று எனக்கு தெரியவில்லை,எங்காவது நான் நிலைப்பட்டபின் தொடர்பு கொள்கிறேன்."என்று கண்கலங்க விடைபெற்றுக்கொண்டு  குறைந்தது 10 வருடங்களாவது என்னுடைய எந்த அடையாளமுமின்றி கண்காணாத இடத்தில் வாழவேண்டும் என சங்கல்பம் எடுத்துக்கொண்டு முன்னாள் வந்த பஸ்ஸில் ஏறிக்கொண்டாள்.

நெடும் பயணத்துக்கு பின் பஸ்ஸைவிட்டு இறங்கி கால்போன போக்கில் நடந்து இருட்டில் அந்த தரிப்பிடத்தில் அட்டைக்கு ரத்தம் குடுத்து இப்பொழுது எங்கோ ஒரு மூலையில் பேக்கரியில் கொட்டிக் கிடைக்கும் கோதுமை மா மீது கோலம் போட்டபடி படுத்திருக்கிறாள். அருகே மாக்குழைக்கும் பெரிய நீள்சதுர மேசை, அதன்மேல் நீண்ட தடி இரு முனையிலும் கயிறு கட்டி தொங்க விட்டிருக்கு, அருகே ஒரு குமிழ் பல்பும் மேசையில் இருந்து ஒரு மீட்டர் உசரத்தில் தொங்குது. பல வருடங்களுக்கு பிறகு எந்தவித மனஅழுத்தங்களும் இல்லாமல் ஒரு நிம்மதியான ஆழ்ந்த உறக்கமாய் அது இருக்கு.

        அப்பப்ப வேலைக்கு நடுவே அங்கு வந்து பார்த்த இராகவன் அவளது நித்திரையை குழப்ப மனமின்றி தானாக எழும்பட்டும் என்று விட்டிருந்தான். கடையிலும் கூட்டமில்லை. இனி பின்னேரம்தான் ஆட்கள் வருவினம். மதியம் 2:00 மணிக்குமேல் அவள் எழும்புகிறாள்.காலில் வலி இல்லை. பின்பக்கம் போகிறாள். அங்கு ஒரு கிணறு, கக்கூசும், மூட்டைகள், விறகு,கரி போன்றவை வைக்க ஒரு கொட்டிலும் சற்று தள்ளி  தாமரை குளம் ஒன்றும் நிறைய பூக்களுடன் இருக்கு.கைகால் முகம் கழுவி பழைய உடுப்பை மாற்றி ஒரு மினிஸ்கர்ட்டை  உடுத்திக்கொண்டு அவள் வர மேசைமேல் சுடச்சுட கிரிபத்தும் கருவாட்டு குழம்பும் தயாராய் இருக்கு. வானொலியில் "சுந்தர லோவட்ட மல் வெகனா" நல்ல சிங்கள பாடல் ஒன்று போய்க் கொண்டிருக்கு.

அவன் சாப்பிட சொன்னதும் அந்த அகோர பசியிலும் நாசூக்காக  கிள்ளி கிள்ளி சாப்பிடுகிறாள். விக்கல் எடுக்க தண்ணி கிளாஸை அவளருகே அரக்கி வைக்கிறான். உன் பெயரென்ன என்று கேட்க அவள் ஹேமா என்கிறாள். எங்கிருந்து வருகிறாய், இனி எங்கு போகிறாய்  சொன்னால் முடிந்த உதவி செய்கிறன் என்று சொல்ல, ஹேமாவும் தான் கொழும்பில் ஒரு வீட்டில் வேலை செய்ததாகவும் அந்த முதலாளி தன்னை மோசமாக நடத்தியதால் தான் அங்கிருந்து கிளம்பி விட்டதாகவும், இப்போது எங்காவது ஏதாவது ஒரு வேலை தேடவேண்டும். கௌரவமாய் வாழவேண்டும் என்கிறாள். இது ஒரு சின்னஞ் சிறிய கிராமம் ஹேமா. இங்கு நீ வேலை எடுப்பது சிரமம்.விரும்பினால் இன்றிரவு நீ இங்கு தங்கிவிட்டு நாளை காலை முதல் பஸ் பிடித்து கண்டிக்கு போனால் அங்கு உனக்கு வேலை கிடைக்கலாம்.அவளும் சரி என்று சொல்லிவிட்டு சாப்பிட்ட இலையை  தொட்டிக்குள் போட பின்னால் போகிறாள். அங்கு ஒரு யானை நிற்பதைக் கண்டு அச்சத்துடன் பின்வாங்க, அது ஒன்றும் செய்யாது பயப்பிடாதை, பக்கத்து தஹநாயக்காவின் யானை குளத்திலே குளிக்க வந்திருக்கு என்கிறான் பின்னால் வந்த இராகவன். அப்போது தஹநாயக்காவும் பிள்ளைகளும் வந்து அதை குளத்துக்கு கூட்டிப்போகின்றார்கள். இவர்கள் வசதியானவர்கள் போல யானை எல்லாம் இருக்கு என்று அவள் சொல்ல, அப்படி இல்லை அதுதான் இவர்களுக்கு சாப்பாடு போடுது. விகாரை விழாக்கள், வீட்டு விசேஷங்களுக்கு கூட்டிப்போய் கூட்டி வருவார்கள். 

சோதனை தொடரும்.....!

 

Link to comment
Share on other sites

அனேகமான யாழ் உறவுகளுக்கு பரிச்சயப்படாத சிங்கள ஊர் ஒன்றின் சூழலை பின்புலமாக கொண்டு கதையை கொண்டு செல்கின்றீர்கள். ஒவ்வொரு இடத்தின் சூழலை வருணிப்பது கதைக்குள்ளும் அது இடம்பேரும் களத்துக்குள்ளும் கொண்டு செல்கின்றது.

அது சரி அதென்ன "சோதனை தொடரும்" ? ஹேமாவுக்கா, இராகவனுக்கா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதே மூச்சோட எழுதி முடிச்சுப் போடவேணும் சொல்லீட்டன் அண்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சான்றிதழ்......!

பின்பு இராகவனும் வானில் பாண் பெட்டிகள் எல்லாவற்றையும் டிலிவரி செய்வதற்காக ஏற்றிவிட்டு தயாராய் வருகின்றான். சாதாரணமாக அவன் வெளியே போகும்போது கடையை பூட்டிவிட்டு செல்வான். நிக்கும்போது கடையும் திறந்திருக்கும். அவன் தன்னை இங்கு விட்டு போக தயங்குகின்றான் என நினைத்த ஹேமா, அவனிடம் வந்து நீங்கள் கடையை பூட்டி விட்டு செல்லுங்கள். நீங்கள் வரும்வரை நான் வெளியே வாங்கில் இருக்கிறேன் என்று சொல்ல, இஞ்சால கொஞ்சம் வாருங்கள் என்று அவன் வெளியே அழைக்க, பொறுங்கள் என் பெட்டி  உள்ள இருக்கு என்று "சோடிச்செருப்பு வாங்கிக்கொண்டு ஓடின பெட்டைமாதிரி"பாய்ந்தடித்து போய் எடுத்து வருகிறாள். அவனும் சிரித்துக்கொண்டு அருகில் சுவரில் சாத்தியிருந்த பலகைகளை ஒவ்வொன்றாய் எடுத்து லாகவமாக பொருத்திக் கொண்டு வருகிறான்.நடுப் பலகையையும் பொருத்திவிட்டு அதில் இருந்த இரும்புச்சட்டத்தை கொழுவி பெரிய ஆமைப்பூட்டை போட்டுப் பூட்டுகிறான். அந்தப்பலகைகள் ஒவ்வொன்றிலும் வரிசையாக இலக்கங்கள் இடப்பட்டு இருக்கின்றன.அந்தக் கதவும் பூட்டும்கூட அவளுக்கு புதுமையாக இருக்கின்றது. இப்பொழுது அந்தமாதிரி அமைப்பை காண்பது அரிது. சற்று தள்ளி நிண்டு பார்த்தால் அவற்றில் சிங்களத்தில் "ஹேமமாலினி கபே"  என்று பலகைக்கொரு எழுத்தாக கரிக்கட்டியால் எழுதி இருக்கின்றது. பெயர் அழகாய் இருக்கு என்கிறாள்.

ஓம் இங்கு பக்கத்தில் ஒரு தாத்தா இருக்கிறார். அப்பப்ப கடையை பார்த்து கொள்வார்.அவர் நடிகை ஹேமமாலினியின் தீவிர ரசிகர்.அவவின் படத்தை பார்த்தாலே பாலபிஷேகம் செய்யுமளவு வெறியர் என்றுகூட சொல்லலாம்.அவர்தான் இதை எழுதியவர்.இதற்காக அவர்கூட சண்டையும் போட்டிருக்கேன்.ஆனால் இப்ப இந்தப் பெயரே இங்கு பிரபல்யமாகி விட்டது. அப்படியே அவளை கடையின் ஓரமாய் அழைத்துச்சென்று பின் கொட்டிலுக்கு அருகால் செடிகளை விலக்கி வளவுக்குள் வந்து இனி நீ இங்கு இருந்துகொள் நான் போயிட்டு வருகின்றேன் என்கிறான். முன்னுக்குத்தான் பூட்டு எல்லாம். பின்னால கடை முழுதும் போய்வரலாம்.அவளுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. சிரிக்கிறாள், கணநாளைக்கப்புறம் மனம் விட்டு சிரிக்கிறாள். என்னத்தை கண்டு நீ இப்ப சிரிக்கிறாய்......, இல்லை நீங்கள் அதி உச்ச பாதுகாப்புடன் கடை வைத்திருக்கிறீர்கள். அப்படியல்ல இதுவரை இங்கு திருடர் யாரும் வந்ததில்லை என்று சொல்லிக்கொண்டே போகிறான்.

ஹேமா அங்கிருந்த தாமரை குளத்துக்கு வந்து கல்லில் அமர்கிறாள். குளம் நிறைய பூக்களாலும், மொட்டுக்கள், இலைகளாலும் நிரம்பிக் கிடக்கு. இவள் வந்ததும் கரையில் காற்று வாங்கிக் கொண்டிருந்த தவளைகள்,தேரைகள் எல்லாம் குளத்தில் குதித்தோடுகின்றன.தண்ணீர் சலனப்படுகின்றது. சுற்றுசூழல் மிகவும் ரம்மியமாக இருக்கின்றது. இப்ப குளம் தெளிந்து கீழே அசையும் மீன்கள்,குஞ்சுகள் எல்லாம் நன்றாக தெரிகின்றன. தாமரை இலையில் இருந்த தவளையொன்று ஒரு முழ நிலத்துக்கு நாக்கை நீட்டி ஒரு பூச்சியை சடடென்று பிடித்து விழுங்கி விடுகின்றது. அழகும் ஆபத்தும் தூரமாய் இல்லை, அருகருகேதான்.....! எழுந்து கடைக்குள் வந்தவள் ஏதாகிலும் வேலை செய்வம் என நினைத்து, தனக்கு தெரிந்தளவு கூட்டி மேசைகளைத் துடைத்து பாத்திரங்களை அலம்பி வைக்கிறாள். வான் வந்து வாசலில் நிக்கும் சத்தம் கேட்க இராகவனும் கடையை திறந்துகொண்டு வருகிறான். அவனிடம் ஒரு பதட்டம் தெரிகின்றது. 

என்ன பரபரப்பாக இருக்கிறியள், ஏதும் பிரச்சினையா.... ஓம் என் நண்பன் விமல் மோட்டசயிக்கிளுடன் சிறு விபத்தில் மாட்டிக் கொண்டான். காலில் பலமான அடி. அதனால் சில நாட்களுக்கு அவனால் வேலை செய்ய முடியாது. போன் எடுத்து யார்யாரோடோ கதைக்கிறான்.....!

சோதனை தொடரும்......!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சான்றிதழ்.......!

   காலையில் எல்லா இடத்துக்கும் பாண் சப்ளை செய்ய வேணும். யாரும் லைன்னில  வருகிறார்களில்லை அதுதான் யோசிக்கிறன்....!

ஹேமா: உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால் நீங்கள் சொல்லும் வேலைகளை நான் செய்கிறேன். ஆனால் எனக்கு இந்த வேலை ஒன்றும் சுத்தமாய் தெரியாது.

இராகவனும் அப்பத்தான் கடையை பார்க்கிறான்.எல்லா இடமும் மிகமிக சுத்தமாய் இருக்கு......, நீயாகவே இங்கு நல்ல வேலைகள் செய்திருக்கிறாய்.நன்றி.முடிந்தால் நீ எனக்கு கொஞ்சம் உதவி செய்.அது எனக்கு பெரிய ஆறுதலாய் இருக்கும். இருவருமாக சேர்ந்து அடுத்த குடிசையில் இருந்து மா மூட்டைகள் விறகுகள் எல்லாம் கொண்டுவந்து போறணைக்கு அருகில் அடுக்குகின்றனர். பின் அந்த நீளமான மேசையில் மாவை கொட்டி அதன் நடுவே பெரிய பாத்தி கட்டி அதில் முட்டைகள், உப்பு,சீனி எல்லாம் அளவளவாக சேர்த்த தண்ணீர் விடுகின்றான். ஹேமாவும் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டு தண்ணீர் ஓடாமல் மாவால் அணை கட்டிக்கொண்டு நிக்கிறாள். அவன் இருகால்களிலும் பொலித்தீன் பைகளை கட்டிக்கொண்டு வந்து மேசைமேல் ஏறி மேலே தொங்கும் கம்பை  பிடித்துக்கொண்டு உழக்கி உழக்கி மாவை குழைக்கிறான். ஹேமாவும் அதிர்ச்சியுடன் இப்படித்தான் பாண் செய்வார்களா என நினைத்துக்கொண்டு மாவை நடுநடுவே தள்ளி விடுகிறாள்.அவள் முகநெளிப்பில் இருந்து அவளின் மனவோட்டத்தை புரிந்து கொண்டவன், இப்பவெல்லாம் மாக்குழைக்க எலக்ட்ரிக் மிசின்கள் வந்து விட்டன. நானும் ஒன்று ஓடர் பண்ணியிருக்கிறேன். அது வந்தால் நேரமும் மிச்சமாகும் வேலையும் சுலபமாகும். அவனது வேகத்துக்கு அவளால் மாவை தள்ள முடியவில்லை. முகத்தில் இருந்து மேல் முழுதும் ஓடும் வியர்வையை தோளில் கிடக்கும் துண்டால் துடைத்து கொள்கிறான். ஹேமா,உன்னால் மேலிருந்து உழக்க முடியுமா எனக்கேட்க அவளும் சரி என்கிறாள்.

அவளை மேசைமீது இருத்தி கால்களில் புதிய பைகளை கட்டி விடவும் அவள் எழுந்து மாவின் மேல் நடந்து நடந்து மிதிக்கிறாள். அவள் கால்களில் மாவும்,நீர்க்கலவையும் தெறிக்க எதேட்சையாய் கையால் துடைத்து துடைத்து வேகமாய் மேலே தடியை பிடித்தபடி உழக்கி நடக்கிறாள். தொங்கும் மின்விளக்கின் வெளிச்சத்தில் கால்கள் பூராவும் பிக்காஸோவின் ஓவியங்களை பிச்சு பிச்சு ஒட்டியதுபோல் விரவிக் கிடக்கு. திடீரென அவளுக்கு தோன்றுகிறது, அடடா இந்த நேரம் பார்த்து நான் இந்த மினிஸ்கேர்ட்டை  போட்டுக்கொண்டு தைய தக்க என்று குதிக்கிறேனே ஓரக்கண்ணால் கீழே அவனைப் பார்க்கிறாள்.அவனோ எதைப்பற்றியும்  அலட்டிக்காமல் வேலையை கெதியாய் முடிப்பதிலேயே கருத்தாய் இருக்கின்றான்.குழைத்த மாவை அதனதன் அச்சுகளில் இருவருமாய் போட்டு பொங்க விடுகிறார்கள்.

  இனி விடியப்பறம் 2:00 மணிக்கு எழுந்து போறணையை மூட்டி சுடவைத்து எடுத்தால் போதும். பின்பு கைகால் கழுவி கதைத்துக்கொண்டே சாப்பிடுகிறார்கள்.நீங்கள் கனகாலமாய் இந்த கடையை வைத்திருக்கிறீர்களா.

ஓம்....ஆறு... ஏழு வருடங்கள் இருக்கும்.

அதற்கு முன் என்ன செய்தீர்கள். என்று கேட்க 

சிறையில் இருந்தேன்.

சிறையிலா, அப்படி என்ன குற்றம் செய்தீர்கள்.

ஒரு குற்றமும் செய்யாததால்தான் சிறையில் இருந்தேன்.யாழ்ப்பாணத்தில் ஒரு கிராமம் எனது ஊர். அப்ப எனக்கு பதினெட்டு வயது. அங்கே இரண்டு கோஷ்டிகள் ஆயுதங்களுடன் சண்டை போட்டு கொண்டிருந்தார்கள்.நான் அம்மா தடுக்கவும் கேளாமல் விடுப்பு பார்க்க போய் இருந்தேன்.அந்த சண்டையில் பலருக்கு வெட்டுக்காயங்களும் இருவர் இறந்தும் போனார்கள்.போலீஸ் வந்தது.எல்லோரும் ஓட நான் திகைத்து நின்ற ஒரு நொடியில் அவர்களிடம் அகப்பட்டுக் கொண்டேன்.எனது ஆடைகளில் தெறித்த இரத்தக்கறை வேறு இருந்தது.வழக்கு நடந்து தீர்ப்பு வந்தது. எனக்கு 8 வருடங்கள். ஜெயிலில் நிறைய படித்தேன்.எல்லா வேலைகளும் கற்றுக்கொண்டேன்.அம்மாவும் சில தடவை வந்து பார்த்தா. வசதியும் இல்லை.வயசும் போட்டுது.நான் ஜெயிலில் இருக்கும்போதே அவ இறந்திட்டா. போலீஸ் காவலுடன் போய் கொள்ளி போட்டுவிட்டு வந்தேன்.சிறிது மௌனம்....... .கண்கள் கலங்கி துளி கண்ணீர் கீழே இலையில் விழுகிறது. நான் உங்களை கஷ்ட படுத்தி விட்டேனா, மன்னிச்சுக்கொள். இல்லை இப்ப சொல்லும்போதுதான் மனசின் பாரம் குறையுது. அதற்காக உனக்கு நன்றி.  

பின்பு வெலிக்கடைக்கு அனுப்பினார்கள். அது ஒரு நரக வேதனை.மற்ற கைதிகள் சொல்லும் எல்லா வேலையும் செய்யவேண்டும்.கூடப் படுக்க வேண்டும்.மறுத்தால் குழுவாக சேர்ந்து அடிப்பார்கள்.அந்நேரத்தில் நல்ல ஜெயிலர் வந்தார்.அவர் வந்த சில நாளிலேயே நான் ஒரு குற்றமும் செய்யாமல் தண்டனை அனுபவிக்கிறேன் என்பதை புரிந்து கொண்டார்.பின் எனக்கு நிறைய சுதந்திரம் குடுத்தார்.நூலகங்களுக்கு போவேன். மூன்று பாஷைகளும் நன்றாக கற்றுக்கொண்டேன்.அங்கு பலதரப்பட்ட நல்ல மனிதர்கள், படித்தவர்கள் எல்லோரும் வருவினம்.அவர்களிடம் நிறைய கற்றுக்கொண்டேன். அந்த ஜெயிலரின் முயற்சியால் எனது நன்னடத்தைக்காக இரு வருடங்கள் குறைத்து ஒரு குடியரசு தினத்தில் விடுதலையாகி வந்தேன். ஊரில் யாரும் இல்லை.அதனால் போக விரும்பவில்லை.வெளியே வரும்போது நிறைய பணமும் புனர்வாழ்வுக்கான உதவிகளையும் அந்த ஜெயிலர் செய்து தந்தார்.அதில்தான் இந்த இடத்தை வாங்கி பேக்கரி போடவும் உதவி செய்தார்கள். எனக்கும் இந்த அமைதியான இடம் மிகவும் பிடித்து இருந்தது. ஆரம்பத்தில் சில ஓடர்கள் எல்லாம் அவரே எடுத்து தந்தவர்.நானும் தரமான பாண்,பணிஸ், பிஸ்கட் எல்லாம் செய்து தருவதால் பின்பு ஓடர்கள் தேடி வரத்தொடங்கின.விமலையும் இங்குதான் பழக்கம். என்று கதைத்தபடியே ஆங்காங்கே படுத்து கொள்கிறார்கள்.

சோதனை தொடரும்....!

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு வேகமாக எழுதுகிறீர்கள். சந்தோசம்  அண்ணா.

7 hours ago, suvy said:

சான்றிதழ்......!

பின்பு இராகவனும் வானில் பாண் பெட்டிகள் எல்லாவற்றையும் டிலிவரி செய்வதற்காக ஏற்றிவிட்டு தயாராய் வருகின்றான். சாதாரணமாக அவன் வெளியே போகும்போது கடையை பூட்டிவிட்டு செல்வான். நிக்கும்போது கடையும் திறந்திருக்கும். அவன் தன்னை இங்கு விட்டு போக தயங்குகின்றான் என நினைத்த ஹேமா, அவனிடம் வந்து நீங்கள் கடையை பூட்டி விட்டு செல்லுங்கள். நீங்கள் வரும்வரை நான் வெளியே வாங்கில் இருக்கிறேன் என்று சொல்ல, இஞ்சால கொஞ்சம் வாருங்கள் என்று அவன் வெளியே அழைக்க, பொறுங்கள் என் பெட்டி  உள்ள இருக்கு என்று "சோடிச்செருப்பு வாங்கிக்கொண்டு ஓடின பெட்டைமாதிரி"பாய்ந்தடித்து போய் எடுத்து வருகிறாள்.

 

ஆகா சிரித்து முடியவில்லை.tw_blush:tw_blush:

Link to comment
Share on other sites

கதை சூப்பராக போகுது. கிளுகிளுப்புக்கு கிட்ட சில வரிகள் போனாலும் பின் அதை விட்டு விலகி ஓடுது

3 hours ago, suvy said:

 ஜெயிலரின் முயற்சியால் எனது நன்னடத்தைக்காக இரு வருடங்கள் குறைத்து ஒரு குடியரசு தினத்தில் விடுதலையாகி வந்தேன்

 

இலங்கையின் குடியரசு தினம் மே 22. நான் அறிய  இந்த தினத்தை அங்கு எவரும் கடைப்பிடிப்பது இல்லை. விடுமுறை நாளும் இல்லை. சுந்தந்திர தினத்தை தான் கடைப்பிடித்து கைதிகளையும் விடுதலை செய்வர்

8 hours ago, suvy said:

 ஹேமமாலினியின் தீவிர ரசிகர்.அவவின் படத்தை பார்த்தாலே பாலபிஷேகம் செய்யுமளவு வெறியர்

 

3 hours ago, suvy said:

ஹேமா,உன்னால் மேலிருந்து உழக்க முடியுமா எனக்கேட்க அவளும் சரி என்கிறாள்.

என் மனசு மட்டும் ஏன் இந்த வரிகளை வாசிக்கும் போது க்ளுக் என்று கள்ளமாக சிரிக்குது tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கத்துக்குட்டியை ஊக்குவிக்கும் அத்தனை அன்புள்ளங்களுக்கும் நன்றி....! பின்பு தனியாக எல்லோரையும் சந்திக்கிறேன்.....!  tw_blush:

அடடா இப்ப சுதந்திரத்தினத்துக்கு மாத்திட்டாங்களா நிழலி.....!  tw_blush:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடடா இந்த நேரம் பார்த்து நான் இந்த மினிஸ்கேர்ட்டை  போட்டுக்கொண்டு தைய தக்க என்று குதிக்கிறேனே ஓரக்கண்ணால் கீழே அவனைப் பார்க்கிறாள்

 

மினிஸ்  ஸ்கேர்ட் போட்ட் பெண்ணை மேசையின் மேல் ஏற்றியதற்கு ...வன்மையாக கண்டிக்கிறேன் tw_blush:

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவி அண்ணா எழுதும் வேகத்திற்கு வாசிக்க நேரம் கிடைக்கவில்லை. இதுவரை வந்த சோதனைகளை ஒரே மூச்சில் தாண்டிவிட்டேன். 

ஹேமா ஹேமமாலினி கபேயில் பாணுக்கு மாக்குழைத்ததை ஒற்றை வரியில் தாண்டியதற்கு வன்மையான கண்டனங்கள்?

Link to comment
Share on other sites

 எனக்கு வந்த சோதனை, கதையில் ஒரு வரி கூடத் தவற விடாமல் வாசிக்க வேண்டி வந்தது. சோதனையைத் தொடருங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கன காலத்துக்குப் பிறகு....ஒரு மணித்தியாலத்துக்கு உள்ளே....நாற்பது...புள்ளடி போடுற சோதினைக்குப் போறது போல கிடக்குது..!

வாசிச்ச பிறகு தான்....கருத்தெழுத யோசிச்சிருக்கிறன்!

கதை நல்லாகப் போகின்றது!

நன்றி....சுவியர்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்தில் என்னவொரு வேகம் .எங்களுக்கு இந்த வேகத்தில் வாசிக்கத்தான் நேரம் போதாமல் உள்ளது. கதை நன்றாகத்தான் போகிறது. தொடர்ந்து எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/02/2018 at 1:22 AM, suvy said:

மேகங்கள் திரண்டுவந்து திவலை நீர் கூட பூமிக்கு தராமல் களைந்து போவதுபோல்தான் அந்த உறவுகள் இருந்திருக்கின்றன

சுவியர்...எவ்வளவு நாசூக்காக ....ஒரு பெரிய விசயத்தைச் சொல்லி இருக்கிறீர்கள்!

தொடருங்கள்.....!

Link to comment
Share on other sites

என்ன சொல்ல இருக்கு... கதை அந்த மாதிரி போகுது..தொடருங்கள்.

இதுக்குள் ஒருத்தர் ஹேமாவுக்கு அடைக்கலம் கொடுக்க ஓடி திரிகிறார்..:grin:

அவருக்கு விளங்கும் நான் யாரை சொல்கிறேன் என்று

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சான்றிதழ்.....!

மறுநாள் பொருட்கள் எல்லாவற்றையும் வானில் ஏற்றி அனுப்பிவிட்டு இராகவன் வர விமலும் ஒரு ஆட்டோவில் வந்து இறங்கி தடியூன்றிக் கொண்டு வந்து வாங்கில் அமருகின்றான். வானொலியில் நல்ல பாடல்கள் போகின்றது. அவனிடம் இராகவனும் விமல், ஈயே எயா மட்ட கொடாக் உதவு காலா. (நேற்று ஹேமாதான் தனக்கு எல்லா வேலைகளிலும் மிகவும் உதவியாக இருந்தாள்).ஏய ரக்கியாவக் அவசயி (அவளுக்கு எங்காவது ஒரு வேலை எடுத்து குடுக்க முடியுமா), சிங்களத்தில் சொல்கிறான். விமலும் ஒவ் ராகவ் மம அகென்னே.(ஓம் நான் விசாரித்து பார்க்கிறேன்). ஹேமாவும் சமையலை முடித்துவிட்டு சிறு புன்னகையுடன் மூவருக்கும் தேநீரோடு வருகிறாள்.

ஆயுபோவன் சகோதரய... ஹேமா.(வணக்கம் தம்பி) 

ஆயுபோவன் அக்கே .....விமல்.

கக்குலயே தெடி துவலயக்.(காலில் பலமான காயமோ).

ஒவ் தின ஹிப்பியாக் ஹொந்தாய்.( ஓம் சில நாளில் சரியாயிடும்).

அப்படியே கதைத்து கொண்டிருக்கினம். இராகவன் சில பாண் துண்டுகளை உளுத்திக்கொண்டு பின் பக்கம் வருகிறான். அவற்றை முற்றத்தில் வீச பறவைகளும் பூனை நாய் எல்லாம் சாப்பிடுகின்றன. நாய்தான் தானும் தின்னாமல் பறவைகளை விரட்டி விரட்டி குலைக்குது. நாய்தானே. இராகவன் இவற்றை ரசித்தபடி அருகில் நின்ற ட்ரக்ட்டரில்  இருந்து பீடி வலித்துக் கொண்டிருக்கிறான். இரு மூக்காலும் புகை போய்க்கொண்டிருக்கு.அதை பார்த்த ஹேமா அந்த டிராக்ட்டர் சைலன்சர் போல இவருக்கும்  மூக்கு மேல்நோக்கி இருந்தால் நன்றாய் இருக்கும் இல்லையா விமல்.விமலுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை நோவை மறந்து சிரிக்கிறான்.இராகவன் திரும்பி பார்த்து விட்டு பிஸ்சு தெக்க(விசருகள் இரண்டும்) தன் வேலையை செய்கிறான்.

ஹேமா இராகவனை பார்த்து இனி நான் இங்கிருந்த கிளம்பலாமா எனக் கேட்க்கிறாள். நானும் அதைத்தான் யோசித்து கொண்டு இருக்கிறன்.இப்ப இவன் இருக்கும் நிலையில் எனக்கும் ஆள் தேவையாய் இருக்கு.உனக்கு விருப்பமென்றால் நீ ஒரு மாதம் இங்கு தங்கலாம்.விரும்பியபோது நீ செல்லலாம்.விமல் ஒப மொணவத கியன்னே (நீ என்ன சொல்லுறாய் விமல்).அவன் எதுவானாலும் விமலிடம் கேட்டே செய்வான். ஒவ் எயா ஹொந்த அதகசகி.ஏகேன் அசன்னா (ஓம் அது நல்லது,அவளிடம் கேட்டுப்பார்). ஹேமாவும் எனக்கும் போவதற்கு முன் கொஞ்சம் நிதானிக்க அவகாசம் வேண்டும்.ஆனால் நான் இங்கு எங்கு தங்குவது.

இராகவன்: நீ அதைப்பற்றி யோசிக்க வேண்டாம். இப்பவே எல்லாவற்றையும் சரியாக பேசிக்கொள்ளுவோம், பிறகு பிரச்சினை படக்கூடாது என்ன.

ஹேமா: ஓம் 

இராகவன்:உனக்கு ஓரளவு தெரிஞ்சிருக்கும்,இது அவ்வளவு பெரிய கடை இல்லை.விமல்கூட இங்கு பகுதிநேர வேலை செய்துவிட்டு பின்பு வேறு வேலைக்கு போய் விடுவான்.பெரிய சம்பளம் எல்லாம் எதிர்பார்க்க முடியாது.

ஹேமா குறுக்கிட்டு ஓம் எனக்கு விளங்குது.

இராகவன்: நான் உனக்கு ஐயாயிரம் ரூபாய் சம்பளம் தாருகிறன். அத்துடன் உனக்கு சாப்பாடு தங்குவதற்கு ரூம் கட்டில் எல்லாம் ப்ரி. அதுவே இரண்டாயிரம் வரும்.உனது விருப்பத்தையும் சொல்லு. (என்ன விமல் மம  கிவ்வே ஹரித மச்சான், நான் சொல்லுறது சரியா).

விமல்:ஒவ் மேயா ஹொந்தாய்.(ஓம் இது நல்லது).

ஹேமா:ஓம் எனக்கு நீங்கள் தரும் சம்பளம் ஐயாயிரத்துக்கு சம்மதம். சாப்பாடு, தங்குவதற்கு இரண்டாயிரம் என்று சொன்னீங்கள் அந்தக்காசை இந்தப்பணத்தில் கழித்துக்கொண்டு மிகுதியை தந்தால் போதும்.

இராகவன்: இஞ்ச பார் ஹேமா சாப்பாடும் ரூமும் உனக்கு நான் இலவசமாய் தருகிறான்.5000 ரூபாய் காசாக உன் கையில் தாறன். புரியுதா.

ஹேமா: புரியுது, எனக்கு சாப்பாடும் ரூமும் இலவசமாய்தர நீங்கள் என்ன என்ர அப்பாவா அல்லது புருஷனா...., அதொன்றும் தேவையில்லை எனக்கு. மனுஷர் எண்டால் உழைத்து சாப்பிடவேணும்.இலவசம் அவசியமில்லை.இல்லாட்டில் சொல்லுங்கோ இப்பவே நான் கண்டிக்கு போறன்.

இராகவன்: சரி...சரி ஓடாத நில்லு.( விமலுக்கு விளங்கப் படுத்துகிறான்). இந்நேரம் வானொலியில் h .r .ஜோதிபால துள்ளலுடன் பாடுகின்றார்.

எப்பாவுனத் ஹெட ஒன வே   ( இன்று வேண்டாம் என்கிறது நாளை தேவைப்படும்).

தாவத் ஓயாட்ட தரா கீதே      (கோபம் கூடாது)

ஆடப்பரவி நோவென்னவெ    (ஆடம்பரம் கூடவே கூடாது) 

அன்டான ருக்மி சிட்டின்னவே  ( அழ வேண்டி வந்துடும்)

உட பென்னவே வெட்டனவே  (மேடு பள்ளம் கொண்டதுதான் வாழ்க்கை)

கிதா மதா மே க்கியன்ன மங்....! (நல்லா யோசித்து சொல்லு)

நான் உனக்கு அப்படியே தாறன். விமலும் சரியான பிசு ஹெல்லா என்கிறான்.(விசர் பெட்டை)

இராகவனும் இவளுக்கு கணக்கு வழக்கு ஒன்றும் தெரியாது போல, ஐஞ்சாறு மாதமெண்டாலும் ஜெயிலுக்கு போயிருந்தால் நாலு எழுத்து, கணக்கு என்று படித்திருக்கலாம்.என்று சொல்கிறான்.

(ஹேமாவுக்கு இவர்களின் சம்பாஷணையை கேட்ட்தும் அவளின் M .A  எக்கொனமிக் டிப்பிலோம் சான்றிதழ் கண்முன்னே தூள் தூளாய் காற்றில் பறக்கிறது.

அங்கு கிடந்த பானை எடுத்து இருவருக்கும் எறிகிறாள். ( பாட்டு தொடர்கிறது).

ஒவ்வவ்வ ஹொந்த நே  ( உதெல்லாம் கூடாது)

அங்கட்ட குண நே   (உடலுக்கு கேடு)

கேனுங்கே நுவன ஹெடி.....!  (பெண் புத்தி பின் புத்தி ).

ஒரு நிமிடம் ஒருவரை ஒருவர் முழிசிப் பார்க்கிறார்கள். பின் மூவரும் சேர்ந்து சிரிக்கிறார்கள்.

சோதனை தொடரும்.....!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சான்றிதழ்.....!

சிலநாட்களின் பின் ஒரு மதியம் போல் இராகவன் அவளிடம் அந்த கிழிந்த சுடிதாரை வாங்கி அதன் மற்ற காலையும் அதே அளவுக்கு வெட்டி அதன்மேல் பூ லேஸ் வைத்து தைத்துவிட்டு இனிமேல் மா குழைக்கும் போது இதை அணிந்துகொள் என்று கொடுக்கிறான். அட....!இவன் ஒரு அமசடக்கு கள்ளன்,அன்று ஒன்றும் தெரியாத பூனை போல இருந்து விட்டு.....ராஸ்கல்.....! முகம் சிவக்கிறது வெட்கத்தில். இப்போது அங்கு வேலைகள் எல்லாம் புரிந்துள்ளதால் அவனை எதிர்பார்க்காமலே அவள் பல வேலைகளையும் செய்கிறாள். தெரியாத வேலைகளை தயார் நிலையிலும் வைத்து விடுவாள். மதியத்துக்கு மேல், வானில் போன இராகவன் வரும்போது ஒரு கட்டில் மெத்தை துணிகள் எல்லாம் கொண்டுவந்து இறக்குகிறான். பின்பு கதையுடன் பின்னால் இருந்த விறாந்தையில் சாமான்களை ஒதுக்கி விட்டு அந்த கட்டில் , மெத்தை போட்டு துணிகளாலேயே திரைகள் போட்டு மறைப்பு ஏற்படுத்தி விட்டு அவளை கூப்பிட்டு ஹேமா உனக்கான அறை தயாராகி விட்டது. இனி நீ வசதியாய் தங்கலாம். அவள் அதை பார்க்கிறாள். எல்லாம் சிறைச்சாலை சாமான்கள், ஒரு கைதியின் அறைபோல் இருக்கு. திருடுபவர்கள்தான் ஜெயிலுக்கு போவார்கள்.நீங்கள் ஜெயிலையே திருடி கொண்டு வந்தாச்சுது போல....! ஏன்  இது உனக்கு பிடிக்கவில்லையா. கட்டிலை தவிர மெத்தை உட்பட எல்லாம் புதுத்துணிகள் தெரியுமா. உனக்கு பிடிக்கவில்லையா. அப்படியல்ல இதுவும் நல்லாத்தான் இருக்கு. அவளுக்கு அந்த அறையைவிட அவனின் அக்கறை பிடித்திருக்கு. சும்மாவா....இவற்றை வாங்க ஒரு பொல் அராக்கும் 4ஏசஸ் பைக்கட்டும் குடுத்தேன்.பெருமையாய் சொல்லியபடியே அவளிடம் ஒரு சின்ன டிரான்சிஸிடர் ரேடியோவும்(பேமெண்டில் வாங்கியது, சீன  தயாரிப்பு, ஐ போன் சைஸ்) கொடுக்கிறான் இதில் நீ தமிழ் பாட்டு கேட்கலாம். நன்றி இராகவன், இது எனக்கு உபயோகமாய் இருக்கும்.

ஒரு மாதத்துக்கு மேலாகி விட்டது.விமலும் தேறி வருகின்றான்.அருகில் இருக்கும் சுமணாவின் மருத்துவ விடுதியில் தினமும் பத்து போட்டு என்னை பூசி நாட்டு வைத்தியம் செய்து வருகின்றான். பெரும்பாலும் கடை வியாபாரத்தை அவளே கவனித்து கொள்கிறாள்.கடையிலும் தின்பண்டங்கள் அதிகமாய் இருக்கின்றன.மாலுபனீஸ், புழுபனிஸ், பிசுக்கோத்துகள்ரஸ்க்குகள்,பழக்குலைகள், இளனிவகைகள் என்று.விமலும் வேலைகள் செய்ய தொடங்கிட் டான். 

அன்று ஹேமா சிறிதும் எதிர்பார்க்காத சம்பவம் ஒன்று நடந்தது. சாமான்கள் எடுப்பதற்காக அவள் அந்த சாமான்கள் இருக்கும் குடிசைக்கு போகிறாள். அங்கு இராகவனும் விமலும் ஒருவரை ஒருவர் அணைத்தபடி, முகத்தின் வியர்வை முதுகில் விழுந்து தெறிக்கிறது. .......நெஞ்சு படபடக்க நிண்டு நிதானித்தவள் திரும்பி வந்து கல்லாவில் அமருகின்றாள். சிறிது நேரத்தில் குளித்து வெளிக்கிட்டு வந்த விமல் வீதியை பார்த்தபடி அவளிடம் அக்கே, நீங்கள் அங்கு வந்ததை நான் பார்த்தேன். ஆனால் பயப்பிட வேண்டாம் கொஞ்ச காலமாய் நாங்கள் இருவரும் இப்படித்தான் அன்பாய் இருக்கிறோம்.என்று சிங்களத்தில் சொல்லிவிட்டு வெளியில் போகிறான். விமல் இங்க வா... அவன் அங்கிருந்தே என்ன என்று பார்க்க இராகவனும் என்ன பார்த்தானா  என்று கேட்கிறாள். தெரியாது என்று சொல்லிவிட்டு சைக்கிளை எடுத்து கொண்டு போகிறான். அவள் யோசிக்கிறாள் இராகவனுக்கு தெரியாது என்று சொல்கிறானா அல்லது அது தனக்கு தெரியாது என்று சொல்கிறானா, அவளுக்கு ஒரே குழப்பமாய் இருக்கு.

சிறிது நேரத்தின் பின் யோசித்து பார்க்கும்போது அதுவும் பெரிய தப்பாக தோன்றவில்லை. ஏற்கனவே அவள் சித்தார்த்துடன் இரவுப் பார்ட்டிகளுக்கு சென்ற போதெல்லாம் அந்த கிளப்புகளில் மங்கிய ஒளியில் மதுவின் போதையில் வெறியூட்டும் இசையில் சில ஜோடிகள் ஆண் ஆணோடும் ,பெண் பெண்ணோடும் பிணைத்து ஓரினமாக ஆடுவதை பார்த்திருக்கிறாள். அன்று இராகவனும் சொன்னானே சிறையில் அந்த மாதிரி....! என்றாலும் சகஜநிலைக்கு வர சிறிது நேரமாகியது. ம்....அருவி அங்கால பாய்வதால்தான் இருவருக்கும் இஞ்சால  இன்ரஸ்ட் இல்லாமல் இருக்கிறார்கள். அதுவும் நல்லதுதான்.நான் பாதுகாப்பாய் இருக்கலாம்.

சோதனை தொடரும்.....!

Link to comment
Share on other sites

அருவி எப்ப ஹேமா பக்கம் பாயும் என்று பார்த்து இருந்தன் உது சரிவராது. இனி நான் தான் ஹேமாவுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டும் என நினைக்கின்றன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதெப்படி, இவ்வளவு தொடராக , சலிப்பூட்டாதவாறு,  கதையோட்டமும் இடையிடையே அழகான வர்ணனையும் கலந்து எழுதி தள்ள முடிகிறது?

கதை.. வெவ்வேறு பாசைகள் பேசும் இரு இனங்களின் சேர்க்கை என்று நினைத்தேன்,

இறுதியில் ஓரு இன சேர்க்கையை தொட்டு நிற்குது...

  இந்த கடைசி பகுதியுடன் தொடருங்கோ,தொடருங்கோ என்று ஒற்றைக்காலில் நின்ற மாதர் அணி உறுப்பினர்கள் ,மெளனமாகி நின்று வாசிப்பார்கள் என்று நினைக்கிறேன்,

ஏனெனில் நம்மவர்களுக்கு கொஞ்சம் தூரத்தில் இருக்கும் கதைக்களம், பலர் தொட தயங்கும் கதைகளம்,ஆனால் யதார்த்தம் ...அதனால்!

யாழ்க்களத்தின் தேர்ந்த எழுத்தாளர் என்று அல்ல, யாழ்மண்ணின் கைதேர்ந்த எழுத்தாளர் நீங்கள் என்றும் தயங்காமல் கூறலாம்..தொடருங்கள்.!

50 minutes ago, நிழலி said:

அருவி எப்ப ஹேமா பக்கம் பாயும் என்று பார்த்து இருந்தன் உது சரிவராது. இனி நான் தான் ஹேமாவுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டும் என நினைக்கின்றன். 

அருவி ஹேமா பக்கம் பாயபோகுதெண்டு எல்லோரும் நினைச்சிருக்க அது ஹோமோ பக்கம் பாய்ஞ்சிட்டுதுபோல..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, valavan said:

அதெப்படி, இவ்வளவு தொடராக , சலிப்பூட்டாதவாறு,  கதையோட்டமும் இடையிடையே அழகான வர்ணனையும் கலந்து எழுதி தள்ள முடிகிறது?

கதை.. வெவ்வேறு பாசைகள் பேசும் இரு இனங்களின் சேர்க்கை என்று நினைத்தேன்,

இறுதியில் ஓரு இன சேர்க்கையை தொட்டு நிற்குது...

  இந்த கடைசி பகுதியுடன் தொடருங்கோ,தொடருங்கோ என்று ஒற்றைக்காலில் நின்ற மாதர் அணி உறுப்பினர்கள் ,மெளனமாகி நின்று வாசிப்பார்கள் என்று நினைக்கிறேன்,

ஏனெனில் நம்மவர்களுக்கு கொஞ்சம் தூரத்தில் இருக்கும் கதைக்களம், பலர் தொட தயங்கும் கதைகளம்,ஆனால் யதார்த்தம் ...அதனால்!

யாழ்க்களத்தின் தேர்ந்த எழுத்தாளர் என்று அல்ல, யாழ்மண்ணின் கைதேர்ந்த எழுத்தாளர் நீங்கள் என்றும் தயங்காமல் கூறலாம்..தொடருங்கள்.!

அருவி ஹேமா பக்கம் பாயபோகுதெண்டு எல்லோரும் நினைச்சிருக்க அது ஹோமோ பக்கம் பாய்ஞ்சிட்டுதுபோல..

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி வளவன். நான் இந்த கதையில் பெண்கள் எல்லோரும் வாசித்து சுதந்திரமாய் தங்கள் கருத்தை எழுத வேண்டும் என்பதற்காகத்தான் கவர்ச்சியான இடங்களில் எல்லாம் கவுச்சி மணம் இல்லாமல் கவனமுடன் எழுதுகிறேன். இன்று சாதாரணமான கதைகளில் காணப்படும் விரசங்கள் கூட இதில் வராமல் இருக்க முயல்கிறேன்.மீண்டும் சொல்கிறேன், நான் ஒரு எழுத்தாளன் அல்ல, அதனால் ஆங்காங்கே தவறுகள் இருந்தால் பொறுத்து கொள்ள வேண்டும்.முதற்கண் யாழ் இணையத்தை. சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.நேரமிருந்தால் துருசாமியை வாசிக்கவும்.அதுவே இறுதியில் சிறிது அடக்கி வாசித்ததுதான்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.