Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சான்றிதழ்.....!

 சில நாட்கள் செல்கின்றன.வெளியில் இராகவன் கிழிந்து கிடக்கும் வானின் சீற்றுகளுக்கு துணியில் கச்சிதமாய் உறைகள் தைத்து போட்டு கொண்டு இருக்கிறான். ஹேமாவும் அருகே சந்தியில் இருக்கும் புத்தரின் பாதத்தில் தாமரை பூக்கள் வைத்து வணங்கி விட்டு வருகிறாள்.தினமும் காலையில் அதுவே பழக்கமாகி விட்டது. வெளியில் இராகவனை பார்த்ததும் சற்று முறுவலித்து கொண்டு வருகிறாள். அவளும் இப்ப நடை உடை பாவனைகளில் நடுத்தர வர்க்கத்து சிங்கள பெண்கள்போல் நிறைய மாறிவிட்டாள். காலில் ரப்பர் பாட்டா செருப்பு, பெண்ணம் பெரிய  பூக்கள் போட்ட சீத்தை துணியில் நாலுமுழம் வேட்டி மாதிரி ஒரு லுங்கி இடுப்பு மடிப்புடன் தொப்புள் அருகே இழுத்து செருகியிருக்கு. மேலே நீள்வட்ட கழுத்து முன்னால் கீழிறங்கி அரைவாசி மார்புடன் இறுக்கமான சட்டை. பொம்மலான சுருக்கு வைத்த சிறிய கையுடைய சட்டை, கழுத்தில் மெல்லிய சங்கிலி, கைகளில் கண்ணாடி வளையல்கள், விரலில் கல்லு வைத்த எஸ் வடிவ மோதிரம்,காதில் சிகப்பு நிற எட்டுக்கல் தோடு, தலைமுடியை துணி ரிப்பன் பிடித்திருக்க அதில் செருகிய முழு செம்பருத்தி பூ,நெற்றியில் சிறிய வீபூதி கீற்றும் கீழே சின்ன ஸ்டிக்கர் பொட்டும்மாய் அம்சமாய் இருக்கிறாள். அவனை கடந்து அவள்போக அசையும் அழகை அவன் கல்மிஷமின்றி ரசிக்கிறான். அவள் கடைக்குள் நுழையவும் உள்ளிருந்து விமல் வந்து  அக்கே, டீ  எக்கக்  தெண்ட (ஒரு டீ  தாங்கோ) என்றவாறே வாங்கில் வந்து அமருகின்றான்.

ஹேமாவும் பழைய டீ  தூளை கொட்டிவிட்டு புது தூள் போட்டுக்கொண்டே விமல் ஒபே மித்ர சினாசெனவாத. கெமதாமா ஊரா வாகே  உர்ர்ர்.( உன் நண்பனுக்கு சிரிக்கவே தெரியாதா, எப்போதும் பன்றி மாதிரி உர்  என்று ).  

விமல்: ஓஹு  கவுத.... (யாருக்கு இவனுக்கா) எம காதகன் போற போக்கிலே சொல்லுவான், ஆனால் அவன் சிரிக்க மாட்டான்.(சிங்களத்தில் சொல்லுகிறான்).  அங்கு ஒரு சிகப்பு லம்பறட்டா ஸ்கூட்டர் வந்து நிக்க அதில் இருந்து டாக்டர் சுமணா இறங்கி வருகிறாள். அவளது கிளினிக்கில்தான் விமல் பத்து போடுறவன். பின்னால் கங்காணி அப்புஹாமியும் கக்கத்தில் பெரிய கருப்பு குடையுடனும் கையில் ஒரு பையுடனும் வந்து இராகவனிடம் ஹேய்  இராகவ் மாத்தையா... ஒவ் கங்காணி மாத்தையா மே எண்ட , ஆயுபோவன்.( வணக்கம் வாங்கோ). (அவர் கொஞ்சம் தமிழ் கதைப்பார்).  

கங்காணி: ஆயுபோவன், உனக்கு நம்ம டைலர் எங்க போனான் என்று தெரியுமா.... அவன் கடை மிச்ச நாளா பூட்டி கிடக்கு.

இராகவன்: உங்களுக்கு தெரியாதா....

கங்காணி: தெரியாது....

இராகவ்: டைலர் ஹரிணியை கூட்டிக்கொண்டு எங்கோ போயிட்டார்.

கங்காணி: யாரு... நம்ம ஹரிணியையா ......

இராகவ்: ஒவ், உங்கட ஹரிணியைத்தான்......

கங்காணி: மகே தெய்யோ..... நான் என்ட பிரிந்த மொனிக்கேக்கு (மனைவி) ஒரு கவுன் தைக்க குடுக்க வந்தது. பக்கத்தில் தையல் மெஷினையும் தைத்த துணிகளையும் பார்த்த அப்புஹாமி  இராகவ் நீ பொண்ணுங்களுக்கு கவுன் தைப்பியா.

இராகவ்: யாருக்கு நம்ம மொனிக்காவுக்கா.... ஓம் நான் தைச்சு தாறன்.

கங்காணி: இந்தா புது துணியும்,பழைய கவுனும் இருக்கு.பார்த்து தைத்து வை, நான் நாளைக்கு வரும். போகிறார்.

ஹேமாவும் விமலும் சுமணாவும் இவர்களின் சம்பாஷணையை கேட்டு சிரித்து கொண்டிருக்கிறார்கள்.

விமல்: மச்சான் நீ கவுன் எல்லாம் தைப்பியா....!

இராகவன்: இந்த வானுக்கு சீற் கவர் தைப்பதுதான் சிரமம். மொனிக்கா நோனாவுக்கு கவுன் சுலபமாய் தைச்சிடலாம். 

விமல்: என்ன சொல்கிறாய் ......

இராகவன் அளவு சட்டையை எடுத்து காட்டி "மே  பலன்ன" (இஞ்சை பார்)தோளில் இருந்து தொடை வரை ஒரே சைஸ் தமாய். உருட்டி தைத்துவிட்டு கழுத்தையும் கையையும் வெட்டி விட்டால் போதும் என்கிறான். இவர்கள் சிரிக்க அவன் எழுந்து போய் காதில் இருந்த பீடியை வாயில் வைத்து தொங்கும் கயிற்றில் இருந்த நெருப்பில் பத்த வைக்கிறான். வெடித்து சிரித்து கொண்டிருந்த ஹேமா திடீரென இராகவ் எனக்கு தலையை சுத்தி மயக்கமாய் வருது என்று சொல்லியவாறு கீழே சரிகிறாள். சுகுணாவும் இராகவனும் ஓடிப்போய் அவளை நிலத்தில் சரியாக படுக்க வைத்து முகத்தில் தண்ணீர் தெளிக்க விமல் ஒரு பேப்பரை எடுத்துவந்து விசிறுகின்றான். ஹேமாவின் இடது கையை பரிசோதித்து கொண்டிருந்த சுமணாவும் சற்று நேரத்தில், பயப்படத் தேவையில்லை. நல்ல செய்திதான்.இவள் கர்ப்பமாய் இருக்கிறாள் என்று சொல்கிறாள்.ஹேமா எழுந்து உட்கார கவனமாய் உடம்பை பார்த்துக்கொள் என்று சொல்லிவிட்டு போகிறாள்.

சோதனை தொடரும்.......!

 

Link to comment
Share on other sites

  • Replies 66
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

  கடுகதிப்ப யனம் தொடரட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிட்சயமா இந்த ராகவனும் விமலும் காரணம் அல்ல அந்த மயக்கத்துக்குtw_blush:  

tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சான்றிதழ்  வெளிநாடுவந்தாலும்  மறவாத சிங்களபுலமையோடு  வீறுநடை போடுகிறது 

Link to comment
Share on other sites

யாரைய்யா....யாரு அது?

நான் கேக்கும் போது இப்பவே உண்மையைச் சொன்னால் நல்லது.... பிறகு நானாக தெரிந்து கொண்டால் பெரிய பிரச்சனையாக போகும்..சொல்லிட்டன்

நான் இரவு படுத்து காலைல எழும்புவதற்குள் யாரைய்யா ஹேமாவை பிள்ளைத்தாச்சி ஆக்கினது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, நிழலி said:

யாரைய்யா....யாரு அது?

நான் கேக்கும் போது இப்பவே உண்மையைச் சொன்னால் நல்லது.... பிறகு நானாக தெரிந்து கொண்டால் பெரிய பிரச்சனையாக போகும்..சொல்லிட்டன்

நான் இரவு படுத்து காலைல எழும்புவதற்குள் யாரைய்யா ஹேமாவை பிள்ளைத்தாச்சி ஆக்கினது?

எனக்கு அந்த டவுட்டு இருந்திச்சு செல்லம் நீர் பாயாத நிலம் நனையாத மரம் போல் வெளியே வந்தவள்  கனிந்த பழமாகி கருவாகி நிற்கிறாளாம் இவருடன் சேர்ந்து  நமக்கு இலக்கிய புலமை வருது வர்துtw_blush: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் சுவி. நாங்கள் பயந்து ஓடமாட்டம். கனடா மாதர் கோழைகளல்ல. கதை நன்றாகப் போகிறது. உண்மையிலேயே சுவி எழுத்தாற்றலில் சிறந்தவர்தான். தொடர்ந்து எழுதுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சான்றிதழ்......!

அன்று இரவு ஹேமா கவைலையுடன் தூங்காமல் யோசித்து கொண்டு பின் வராந்தாவில் இருக்கிறாள். வழமைபோல் டிரான்சிஸ்ட்டரில் பாட்டு கேட்கும் மனநிலையிலும் இல்லை. வேலைகளை முடித்த இராகவன் அவளுக்கும் ஒரு தேநீருடன் வந்து அருகில் அமர்கிறான்.

இராகவ்: என்ன ஹேமா கணக்க யோசிக்கிறிங்கள் போல.....

ஹேமா:இல்லை இராகவன், நான் இப்ப இருக்கும் நிலையில் இந்தக் குழந்தை தேவைதானா என்றுதான் யோசிக்கிறான்.......

இராகவ்: அதுக்கு......

ஹேமா: கருவை கலைச்சிடலாம் என்று..... (அவன் குறுக்கிட்டு)

இராகவ்: வேண்டாம் ஹேமா, அப்படி நீ நினைக்காதே.....

ஹேமா:இல்லை இராகவன், இப்பவென்றால் சுலபமாயிடும்.சுமணாவிடம் உதவி கேட்கலாம். நாள் போனால் அது கஷ்டம். மேலும் தந்தை பெயர் தெரியாத குழந்தை.... அவமானமாயிடும்.

இராகவன்: அதுக்காக ஜனித்த ஒரு உயிரை அழிக்க துணிய வேண்டாம்.

ஹேமா: நீ ஏன் இவ்வளவு பிடிவாதமாய் இருக்கிறாய் இராகவ்....

இராகவன்: உனக்கு விளங்காது ஹேமா,அது மிகக் கொடுமையானது. ஒருநாள் சுமணாவுடன் கதைத்து கொண்டிருக்கும் பொழுது தற்செயலாய் கருக்கலைப்பு பற்றி பேசினோம். அவளின் தாயார் சட்டத்துக்கு புறம்பாக இம்மாதிரி வேலைகள் செய்வது உண்டு. அப்பொழுது அந்த பெண்கள் படும் வேதனையே பிரசவத்தை விட வலி மிகுந்தது. பின் வயிற்றில் இருந்து வெளியில் விழும் அந்த சதைப்பிண்டம் ஒரு சிசுக் கொலையை நினைவு படுத்திக்  கொண்டிருக்கும் என்றாள். மேலும் அவர்களில் பலர் பிள்ளைகள் உண்டாகாமல் இருக்கிறதும் உண்டாம். உனக்கு அது வேண்டாம். நீ விரும்பினால் இங்கேயே இருந்து இந்தப் பிள்ளையைப் பெற்று என்னிடம் தா.நான் வளர்த்துக் கொள்கிறேன். அப்பாவாக என்னைக் காட்டு.அதற்காக நான் உன்னிடம் எந்த உரிமையும் எடுத்து கொள்ள மாட்டேன். என்னை நீ நம்பலாம்.

அவள் பக்கத்தில் இருந்த கப்பில் தலையை முட்டி அழுகிறாள். அவனும் அவள் அழுது ஓயட்டும் என்று விடுகிறான். தானாக மனசு சமாதானமாகி கட்டியிருந்த சேலையால் முகத்தை துடைத்து கொண்டு சொல்லுகிறாள்.... அதுக்கில்லை இராகவ்  இந்தக் குழந்தை ஒரு குடும்பத்துக்கு மிகவும் அவசியமான குழந்தை.எனது மாமியார் மிகவும் எதிர்பார்த்தார்கள். சில மாதங்களுக்கு முன்பே இது தெரிந்திருந்தால் எனக்கு விவாகரத்தே நடந்திருக்காது.என்று சொல்லிக் கொண்டு போனவள் பல்லைக் கடித்துக் கொண்டு பேச்சை நிறுத்துகிறாள். சில நிமிட மௌனத்தின் பின் இராகவன்.... ஹேமா நீ ஏதோ சில விடயங்களை என்னிடம் கூறத் தயங்குகிறாய் என நினைக்கின்றேன்.நான் அதைக் கேட்டு உன்னை ஒருநாளும் சங்கடப் படுத்தப் போவதில்லை. எதுவாயினும் பிள்ளையை பெற்றெடுக்கிற வழியைப் பார்.பிறந்தபின் அது தன் விதிப்படி வாழ்ந்திட்டுப் போகட்டும்.

ஹேமா: மெதுவாக, நன்றி இராகவன்.நானும் எதோ அவசரத்தில் அசட்டுத்தனமாக யோசித்து விட்டேன்.தனது வயிற்றை வாஞ்சையுடன் தடவிக் கொண்டு இனி ஒருபோதும் இப்படி நினைக்க மாட்டேன். அதுக்காக மிகவும் மனம் வருந்துகிறேன்.இருவரும் என்னை மன்னித்து கொள்ளுங்கோ. தேநீரை குடிக்க எடுக்கிறாள். இராகவன் அவளை தடுத்து இது ஆறி விட்டது ஹேமா, நீ போய் முகம் கழுவி விட்டு வா , நான் இஞ்சி போட்டு சுடச்சுட தேநீர் போட்டுக் கொண்டு வாறன்.

சோதனை தொடரும்....!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது வரை....வாசித்த வரையில்....கதையின் நாயகி ஹேமா அல்ல!

நம்ம ராகவனே தான்....!

நான் தலைப்பிட்டிருந்தால்.....கைதி ஒருவன்....கர்ப்பக்கிரகத்தில்..அமர்கிறான்! என்று வந்திருக்குமோ....என்னவோ!

துருச்சாமியைத் சின்னனாக்கி விட்டு நகரத்து செல்கிறது கதை...!

தொடருங்கள்...சுவியர்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சான்றிதழ்.....!

அவளின் வானொலியில்....!

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் 

வாசல்தோறும் வேதனை இருக்கும் 

வந்த துன்பம் எதுவென்றாலும் 

வாடி நின்றால் ஓடுவதில்லை......! p .b . ஸ்ரீநிவாஸின் குரலில் வரிகள் உயிர் கொண்டு உலவுகின்றன.

எதையும் தாங்கும் இதயம் இருந்தால் 

இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்.  பாடல் மனசுக்கு ஒத்தடம் தருகிறது.

அவள் தனது அறைக்கு செல்ல,  அவன் அருகில் இருந்த தனது கயிற்று கட்டிலில் படுத்து கொள்கிறான்.அது கிர்ர்க் சத்தத்துடன் உள்வாங்கி கொள்கிறது. தினமும் படுக்கும்போது நினைப்பதுண்டு இந்தக் கயிற்றை இழுத்து இறுக்க வேண்டும் என்று பின் மறந்து போய் விடுகின்றது......!

காலையில் மிகவும் தெளிவுடன் எழுந்து அலுவல்களைக் கவனிக்கிறாள். எதிலும் ஒரு முடிவை எட்டும் வரைதான் கடினம்.இதுதான் முடிவு எனத் தெளிந்து விட்டால் பூதாகரமான பிரச்சினைகளும் பூப்போல மாறிவிடும். அவள் மீண்டும் பழையபடி கலகலப்பாகி விட்டாள். விமல் ஒரு சகோதர வாஞ்சையுடன் அவளை கடினமான வேலைகள் செய்ய விடாது பார்த்து கொண்டான் என்றால் இராகவன் அதுக்கும் மேல. அவளைவிட அவர்கள்தான் அந்தப் பிள்ளையின் வரவை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். அப்பப்ப சுமணாவும் வந்து ஹேமாவைப் பார்த்து ஆலோசனைகள் சொல்கிறாள். இருவரும் ஓரளவு சம வயதுடையவர்களாகி இருப்பதால் நல்ல தோழிகள் ஆகி விட்டனர்.

அன்று பகல் வேலைகளை முடித்து விட்டு இராகவன் தாமரை குளத்துக்கு வந்து உடுப்புகளை தோய்த்து அலம்பி கரையில் வைத்து விட்டு குளத்துக்குள் பாய்ந்து முங்கி நீந்தி குளித்துக் கொண்டிருந்தான்.அப்போது ஹேமாவும் அங்கு வந்து தனது சீலையை குறுக்குக் கட்டிக் கொண்டு தனது ஆடைகளையும் சோப்பு போட்டு அலம்பிக் கொண்டிருக்கிறாள். குளத்திலும் நிறைய தண்ணீர். தாமரை பூக்களும் மொட்டுக்களும் நிறைந்திருக்கின்றன.

ஹேமா: தண்ணிக்கு மேலேயே  இவ்வளவு பூக்கள் என்றால் தண்ணிக்குள்ளும் நிறைய பூக்கள் இருக்கும் போல என்கிறாள்.

இராகவன்: சட்டென்று ஓயா பிசுத.... (விசரா) குளம் வத்தி இருக்கும் பொழுது இல்லை,பூ ,தண்டுகள் எல்லாம் கீழே சுருண்டிருக்கும். அப்பவும் நீர் மட்டத்தில்தான் இருக்கும். குளம் நிறைந்திருக்கும் பொழுதும் அவை அந்த மட்டத்துக்கு எழுந்து நிக்கும்.

ஹேமா: அப்போ நீருக்கடியில் பூ இருக்காது என்கிறாயா.

இராகவன்: அப்படியல்ல..... இருக்க சந்தர்ப்பம் இல்லையென்று சொன்னேன். இவ்வளவு நாளும் நான் இதைக் கவனிக்கவில்லை. இரு போய் பார்த்துட்டு வந்து சொல்லுறன் என்று நீருக்குள் சுழியோடிப் போகின்றான்.

ஹேமாவும் ஆடைகளை அலம்பிப் பிழிந்து கரையில் வைத்துவிட்டு குளத்தில் இறங்குகின்றாள்.தண்ணீர் "சில்"....குளிர் உடல் பூராவும் பரவுகின்றது. தயங்கி தயங்கி இறங்க ஆடை தாமரை இலைபோல் நீர் மட்டத்துக்கு உப்பி பரவுகின்றது.சிரமப்பட்டு இரு கைகளாலும் கீழே அமுக்குகின்றாள். இராகவனும் ஆங்காங்கே சில பூக்கள் கொடிகளில் பின்னி நீருக்குள் இருப்பதை பார்த்து விட்டு பூவை பார்த்து விட்டேன் என்று சொல்வதற்கு அவளருகே மேல் எழுந்தவன் அவளது போராட்டத்தை பார்த்து ஒன்றும் சொல்லாமல் கரையேறி துவைத்த ஆடைகளை எடுத்துக்கொண்டு செல்கிறான்......ஹேய்  இராகவ் பூக்களை பார்த்தாயா என்று அவள் கேட்க  அவன் ஓற்றை சொல்லில் "ம் " நீ அதிகம் ஆழத்துக்கு போகாதே, சுழி இருக்கும் என்று சொல்லிவிட்டு போகிறான். என்ன இவன் எதோ நினைப்புடன் போகிறான் என்று எண்ணிக்கொண்டு கரையோடு நின்று முங்கிக் குளிக்கிறாள். ஒருவேளை பார்த்திருப்பானோ...."ம்".....!

ஹேமா சில சந்தனக் குச்சிகளும், பூக்களும் கொண்டுவந்து வீதியில் இருக்கும் புத்தர் பிரானுக்கு வைத்து விட்டு நிமிர்கையில் அங்கு அவன் கண்களை மூடி தியானித்துக் கொண்டு இருக்கிறான்.கும்பிட்டு முடிந்ததும் இருவரும் கதைத்து கொண்டு கடைக்கு வருகின்றனர். ஏன்  இராகவ் பகவானுக்கு ஒரு பூ கூடவா நீ கொண்டுவந்து வைக்கக் கூடாது. அதுதான் நீ நிறைய பூக்கள் கொண்டுவந்து வைத்து விட்டாயே. சும்மா சமாளிக்காதே ஆலயங்களுக்கு போகும் போதும், குழந்தைகள் உள்ள வீடுகளுக்கு போகும் போதும் பூக்களோ, இனிப்புக்களோ கொண்டு போக வேண்டும் அதுதான் முறை.குளத்தில் அவ்வளவு பூ பூத்திருக்கு இருந்தாலும் உனக்கு கஞ்சத்தனம். நான் வெள்ளவத்தை கோயிலுக்கோ அல்லது கொட்டகேன சிவன் கோயிலுக்கு போகும் போது கூட  நிறைய பூக்கள் வாங்கிக் கொண்டு போவன்.

அது கிடக்கட்டும், நீ பிறகு சுமணாவை பார்க்க போகவில்லையா. எனக்கு அவள் கிளினிக் எங்க என்று தெரியாது. அதோ அந்த மலையில் இருக்கிறது. ஏறிப்போனால் நடந்தே போயிடலாம்.காரில் கொஞ்சம் சுற்று.இப்ப கடை யாவாரத்தை பார்த்திட்டு மாலையில் உன்னை நான் வானில் அழைத்து போகிறேன்.அப்படியே அருகில் ஒரு பழமை வாய்ந்த சிவன் கோவிலும் இருக்கு போயிட்டு வரலாம்....!

சோதனை தொடரும்.....!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தாள் என்ன இருக்கிற நிக்கிற நடக்கிற நேரம் எல்லாம் கதை எழுதிறாரா. ???? ஒரு மாறுபட்ட கோணத்தில் கதை நகர்கிறது. காத்திருக்கிறோம் அண்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சான்றிதழ்.....!

அன்று மாலை இருவரும் வானில் சுமணாவின் கிளினிக்குக்கு சென்றார்கள்.சுமார் 50 வருடங்களுக்கு முன் அந்த ஆஸ்பத்திரி நல்ல செழிப்பாக இருந்திருக்க வேண்டும்.அதை அந்த கட்டிடத்தின் கட்டுமானங்களும், சுற்றியுள்ள பென்னம்பெரிய இறப்பர் மரங்களும், கோப்பி,கறுவா  செடிகள் தோட்டங்களுமே சொல்கின்றன.இன்று அந்த கட்டிடத்தில் அரைவாசி இடம் பாவனையற்று பாவிக்க முடியாத நிலையில் இருந்தது.சில அறைகளில் மட்டும் பிள்ளைபெற வந்தவர்களும் தூர இடங்களில் இருந்து வந்தவர்களும் தங்கியிருந்தார்கள்.நாட்டு வைத்தியம் செய்யும் சுமணாவின் தாயாரும் அவருக்கு உதவியாய் இரண்டு பேரும் ஏதோதோ பச்சிலைகள், மூலிகைகள் அரைத்துக் கொண்டும், மருந்துகள் காய்ச்சிக்கொண்டும் இருக்கின்றனர். சுமணா மட்டும் m .b .b .s படித்து வைத்தியராய் இருக்கிறாள்.அத்துடன் அவளுக்கு நாட்டு வைத்தியமும் அத்துப்படி.

சிறிது நேரத்தில் சுமணா ஸ்கூட்டரில் அங்கு வருகிறாள்.இவர்களை தாயாருக்கு அறிமுகப்படுத்தி விட்டு ஹேமாவை உள்ளே அழைத்து போகிறாள்.சில பரிசோதனைகள் செய்து விட்டு எல்லாம் நார்மலாய் இருக்கு என்று சொல்லி இருவரும் வெளியே வருகின்றனர். அப்போது அங்கு ஒரு ஜீப் நிலத்தை தேய்த்தபடி வேகமாய் வந்து நிற்கிறது.அதில் ஓட்டுநர் உள்ளே இருக்க பக்கத்தில் இருந்தவர் இறங்கி வருகிறார்.பணியனும் சாரமும் அணிந்திருக்கிறார்.ஒரு மணிபர்ஸ் வைத்த அகலமான பெல்ட்டும் அதில் சங்கிலியில் தொங்கியபடி திறப்புகள்,கத்தி என்று இருக்கின்றன.காலில் தடிமனான தோல் செருப்பு, அவர் நேரே சுமணாவிடம் போய் தர்க்கம் செய்து ,தாயாரையும் கண்டபடி ஏசிப்போட்டு கோபத்துடன் இவர்களையும் முறைத்துக்கொண்டு அங்கிருந்து செல்கிறார்.சற்று நேரத்தில் சுமணாவும் அழுத முகத்தை துடைத்து கொண்டு இவர்களை வழியனுப்ப வருகிறாள்.

இராகவன்: என்ன சுமணா ஏதாவது பிரச்சனையா, இவன் ஒரு ரவுடியாச்சே  என்று கேட்க.... சுமணாவும் ஓம் இராகவன்,முன்பு அப்பா இந்த கிளினிக்குக்கு வேண்டி இவனிடம் பணம் கடன் பட்டிருந்தார். இன்னும் குடுக்கவில்லை.இடையில் அப்பாவும் காலமாகி விட்டார்.அது இப்ப ஐந்து லட்சம் வரை வளர்ந்து நிக்குது. நான் இதை பூட்டிபோட்டு கொழும்பில் போய் வேலை செய்யலாம்.ஆனால் இங்குள்ள சனங்களுக்காக பார்க்கிறன்.மேலும் இது தலைமுறை தலைமுறையாய் நடந்துவாற ஆஸ்பத்திரி.நாங்கள் காலாகாலமாய் செய்துவரும் சித்த வைத்தியமும் இல்லாமல் போயிடும். அவருக்கு இந்த இடத்து மேல ஒரு கண். எப்படியாவது வாங்கி போட வேணும் என்று துடிக்கிறார். ஹேமாவும் அவளுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு இருவரும் கோவிலுக்கு செல்கின்றனர்.

அது ஒரு சோழர் காலத்து கோவில்.கோபுரம் இல்லை.வெளியில் இருந்து பார்த்தால் அங்கு ஒரு கோயில் இருப்பதே தெரியாது. சிறிது தூரத்தில் சல சல வென்று ஒரு சின்ன அருவி விழுந்து சிற்றாறாக ஓடிக்கொண்டிருக்கு.உள்ளே விசாலமான பெரிய மண்டபம். கருவறையில் சுயம்பு லிங்கம். தரையில் இருந்து ஒரு முழ உயரமே இருக்கும். அதன்மேல் எப்போதும் நீர் சொட்டு சொட்டாய் விழுந்து கொண்டிருக்கு. மேலிருந்து சங்கிலியில் தொங்கிய தூண்டாமணி விளக்கில் தீபம் எரிந்து கொண்டிருக்கு.கருங்கல் தூண்கள் ஒவ்வொன்றிலும் அழகிய பதுமைகள், சிற்பங்கள். நீளமான பிரகாரத்தில் சமயக்குரவர் நால்வருடன் அறுபத்து மூன்று நாயன்மார்களும் அழகாய் வேட்டி உடுத்தி விபூதி சந்தனத்துடன் வீற்றிருந்து அருள் பாலிக்கின்றனர். மிக அமைதியான இடம்.ஹேமா கூடையில் எடுத்து வந்த பூக்களை குருக்களிடம் குடுத்து அர்ச்சனை செய்து விட்டு நாயன்மார்களுக்கும் புஷ்பம் வைத்துக் கொண்டு வருகிறாள். இராகவன் அந்த வயதான குருக்களுடன் கதைத்து கொண்டு நிக்கிறான். ஒரு கட்டத்தில் மலர்கள் காணாமல் கையை பிசைந்து கொண்டு இராகவனை பார்க்க அவன் இன்னும் அவருடன் பேசிக் கொண்டிருக்கிறான்.

நல்ல தரிசனம்தான்.ஆனால் இவன் வேணுமென்றுதான் தன்னை இந்த கோயிலுக்கு கூட்டி வந்திருக்கிறான்..... என்ன ஹேமா ஏதாவது பிரச்சினையா. ஓம் பூக்கள் பற்றாது அதுதான் என்று இழுக்க,  சரி சரி கவலைப்படாதே என்று சொல்லி அவள் வைத்த மலர்களை எடுத்து இதழ் இதழாக பிரித்து எல்லா நாயன்மாருக்கும் வைத்துவிட்டு மிகுதியை அவள் கைகளில் தருகிறான். அட...இந்த ஐடியா எனக்கு வரவில்லையே என்று தன் தலையில் தானே குட்டிக் கொள்கிறாள்......! 

சோதனை தொடரும்.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சுவி  தூவானமாய் தொடங்கின மழை கொட்டோ கொட்டெண்டு கொட்டுது. இந்த மழைக்கு குடை பிடிச்செல்லாம் சரிவராது. முழுசா நனைய வேண்டியதுதான். எழுதுங்கோ இன்னும் எதிர்பார்க்கிறோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kavallur Kanmani said:

என்ன சுவி  தூவானமாய் தொடங்கின மழை கொட்டோ கொட்டெண்டு கொட்டுது. இந்த மழைக்கு குடை பிடிச்செல்லாம் சரிவராது. முழுசா நனைய வேண்டியதுதான். எழுதுங்கோ இன்னும் எதிர்பார்க்கிறோம்

அதுதான் குறுநாவல் என்று எழுதியுள்ளேன். எப்படியும் இந்த வாரத்துல முடியும். உங்கள் அனைவரினதும் ஆதரவுக்கு நன்றி சகோதரி....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சான்றிதழ்.........! ( 12 ).

சில நாட்களின் பின் ஒருநாள் காலை வேலைகளை முடித்து விட்டு விமல் இராகவனிடம் வருகின்றான். (அவன் இவர்களுடன் பழகி இப்ப கொஞ்சம் தமிழ் கதைக்கிறான்).மச்சான் நான் ஒரு மாதம் வேலைக்கு வாரது இல்ல.  ஏன் விமல் என்ன விஷயம். நான் நண்பர்களுடன் யாப்பணய போகுது.  ஏதாவது விசேஷமா..... இல்லடா மச்சான்,அந்த விபத்துக்கு பின் வேலை வீடு என்று மனசு சரியில்ல. நண்பன் சரத், குணவர்தன, காதர் எல்லாரும் கூப்பிடுறாங்கள். அதுதான்.... ஓம் ஓம் நீ சொல்லுறதும் சரிதான்.இரு வாறன் என்று உள்ளே போன இராகவன் வந்து அவனிடம் நிறைய பணம் எடுத்து வந்து குடுத்து விட்டு, தேவையென்றால் போன்செய் அனுப்பி வைக்கிறன்.... இதுவே அதிகம்டா, என்னிடமும் இருக்கு.....  சுகமாய் போய்வா. விமலும் ஹேமாவிடம் சென்று அவளிடமும் சொல்லிவிட்டு செல்கிறான். 

வானொலியில் "லஷ்சனை பலன்ன ஓயாகே மல்கின" சன்னமான ஒலியில் போய்கொண்டிருக்கு. ஹேமா கல்லாவில் இருக்கிறாள். இராகவன் வானில் வெளியே போகிறான்.

ஒரு ஜீப் வந்து கடை முன் நிக்கிறது.அதில் இருந்து நாலுபேர் வந்து முன் வாங்கில் அமர்கின்றனர்.ஒருவர் வந்து நாலு டீ  க்கு ஓடர் பண்ணி விட்டு நாலு மாலு பணிஸ் வாங்கிக் கொண்டு போய் அமருகின்றார். அவர்களுள் மெதுவாய் கதைத்தவர்கள் வர வர சத்தமாய் காத்திக் கொண்டு கதைக்கின்றனர்.அப்போதுதான் அவர்களை நன்றாகப் பார்க்கிறாள். இருவர் அன்று சுமணாவின் கிளினிக்கில் வந்து சண்டை போட்டவர்கள்.இப்பவும் அங்கு சென்று சண்டை போட்டு விட்டுத்தான் வருகிறார்கள் போல .... இந்த மாதம் காசு தரவில்லை என்றால் ஆட்களையும் துரத்திவிட்டு கிளினிக்கையும் அடித்து நொறுக்குவதாக சிங்களத்தில் பேசிக் கொள்கிறார்கள்.எதிர் பாராவிதமாய் சுமணாவும் ஸ்கூட்டரில் அங்கு வருகிறாள். அவள் மிகவும் பணிவாக மன்றாடிக் கதைக்க அதை கேட்கும் நிலையில் அவர்கள் இல்லை.சுமணா அழுவாரைப்போல் அங்கிருக்க அவர்கள் கடைக்கு  பணத்தை கொடுத்துவிட்டு செல்கின்றனர்.

ஹேமா சுமணாவின் அருகில் சென்று அமர்ந்து கைகளைப் பற்றி வருடிக் கொண்டே ஆறுதல் கூறுகின்றாள்.அப்போது சுமணா மடை திறந்த வெள்ளம்போல் குழறி அழுது கொண்டு ஹேமாவின் தோளில் சாய்கிறாள்.அவளும் இவளின் தலையை வருடி முதுகை தடவி ஆறுதல் படுத்த அவள் ஆசுவாசமடைந்து சிறிது நேரம் விக்கி விக்கி அழுது இயல்பு நிலைக்கு வருகின்றாள்.

ஹேமா: நீ கவலைப்படாதே சுமணா. நான் என்னால் முடிந்தளவு உனக்கு உதவி செய்கிறேன்.

சுமணா: உன் நல்ல மனசு எனக்கு புரிகின்றது ஹேமா.ஆனால் இது சிறு தொகையல்லவே.இவ்வளவு பணத்துக்கு நான் எங்கு போவது.( இந்த கதை நடக்கும் காலம் ஒரு அரச உத்தியோகத்தரின் சம்பளம் இரண்டாயிரத்துக்குள்தான் இருக்கும்).காணியில் ஒரு பக்கமாய் விக்கலாம் என்றாலும் உடனே சாத்தியமில்லை.அவர் முழுவதையும் தனக்கு அப்படியே தரட்டாம். மிகுதி கொஞ்சக் காசு தான் தருகிறாராம். அவர் அரசியல் செல்வாக்கு மிகுந்தவர் அதுதான் பயமாய் இருக்கு.

ஹேமா: சரி சரி கணக்க யோசிக்காதே. குழம்பிய மனதுடன் ஒரு முடிவும் சரியாய் எடுக்க முடியாது. நான் திக்காய் ஒரு டீ  போட்டு கொண்டு வாறன் நீ அமைதியாய் இரு என்று சொல்லி எழுந்து சென்று பால் தேத்தண்ணி போட்டு எடுத்து வந்து அவளருகே வைத்து விட்டு உள்ளே போகிறாள்.சுமணாவும் அதில் அரைவாசி குடித்து விட்டு தலை குப்புற கவிழ்ந்து படுத்திருக்கிறாள். ஹேமா வந்து....!

சுமணா...ஏய் சுமணா எழுந்திரு, எழுந்தவள் என்ன என்று ஹேமாவை பார்க்க, ஹேமாவின் கையில் ஒரு தடிப்பான கவரில் கடிதம் ஒன்று இருக்கு. சுமணா கவனமாக கேள். இந்த கவரில் இருக்கும் விலாசத்துக்கு நேரே போ.கொழும்பு ஹோல்பேசுக்கருகில் பெரிய ஹோட்டலுடன்  ஷோரூம் இருக்கு. அங்கு போய் வந்தனா என்று கேட்டு அவளிடம் இந்தக் கடிதத்தைக் குடு.மேலும் நான் இதை தந்ததை மறந்துவிடு.நான் இங்கிருப்பதை யாரிடமும் சொல்ல வேண்டாம்.உள்ளே போய் முகத்தை கழுவிவிட்டு செல் என்கிறாள்.சுமணா ஒரு நிமிடம் திகைத்து ஹேமா இது என்ன என்று கேட்கும் போது அவள் அங்கில்லை.......!

சோதனை தொடரும்.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சான்றிதழ்.....! ( 13 ).

  அந்த சிறிய சொகுசு விமானம் அதிகாலை 4: 00 மணியளவில் பலாலி விமான நிலையத்தை வந்தடைந்தது.அதில் இருந்து இறங்கியவர்களுடன் விமலும் அவனது நண்பர்கள் மூவரும் இறங்கினார்கள்.அவர்கள் எல்லோரும் பெரிய பிரமுகர், அதிகாரிகளின் பிள்ளைகள். விமல் மட்டும்தான் வசதி குறைந்தவன்.இருந்த போதிலும் அவர்களின் பால்யகாலத்தில் இருந்து வளர்ந்து வரும் நட்பில் எவ்வித ஏற்றத்தாழ்வுமில்லை. அதனால் அவர்கள் எங்கு சென்றாலும் விமலையும் கூடவே அழைத்து செல்வார்கள். யாழ்ப்பாணத்துக்கு அவர்களை அழைத்து செல்ல ஹோட்டலில் இருந்து ஒரு சொகுசு வான் வந்து இருந்தது. அதன் முகப்பிலும் பக்கவாட்டிலும் "சினேகா இன்" என்னும் பெயர் மூன்று நட்ஷத்திரங்களுடன் பொன் எழுத்துக்களில் பிரகாசித்தது. அதன் சாரதி அவர்களிடம் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டு அவர்களை யாழ்ப்பாணம் டவுனுக்கு சிறிது தூரத்தில் கடற்கரைக்கு அருகாக இருக்கும் ஹோட்டலுக்கு அழைத்து வந்தார். நால்வரும் தங்கள் அறைகளில் தங்கி சிறிது ஓய்வெடுத்து விட்டு குளித்து ஸ்மார்ட்டாக உடுத்திக் கொண்டு கீழே டைனிங் ஹாலுக்கு வந்தார்கள். அலங்கார விளக்குகளும், ஓரிரு ஓவியங்களும் அந்த இடத்தின் ஆடம்பரத்தை பறைசாற்றின. நல்ல நறுமணமும் மென்மையான இசையும் அங்கு நிரம்பியிருந்தன.மேசையில் ப்ரெட், ஜாம், பட்டர்ரோடு பிளாஸ்கில் கோப்பி,தேநீர்மற்றும் பழங்கள் என இருக்கின்றன.அவர்கள் கதைத்து கொண்டு தங்களின் காலை சாப்பாட்டை சாப்பிடுகிறார்கள். 

அப்போது அதிகமான ஒப்பனைகளுடன் கவர்ச்சியான ஆடைகள் அணிந்து மூன்று இளம் பெண்கள் வந்து அவர்களுடன் கலந்து கொள்கிறார்கள். அந்த பெண்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். உள்ளே மானேஜர் சசிதரன் இன்ரர்போனில் மேடம் ஒரு சின்ன பிரச்சினை....

குரல்: என்ன சசி சொல்லுங்கோ....

சசி:மேடம், இங்கு விருந்தினர்கள் வந்து விட்டார்கள். எமது பெண்கள் நால்வரில் மூவர்தான் வந்திருக்கினம்.ஒருவருக்கு உடல் நலமில்லை. அதுதான்.....

குரல்: வேறு இடங்களில் முயற்சி பண்ணி பார்த்தாயா....

சசி: யெஸ் மேடம், கிடைக்கவில்லை.....

குரல்: சரி, பிரச்சினையில்லை... நீ அந்த மூவரையும் அவரவர்களுடைய பார்ட்னர்களுடன் கார்களில் அனுப்பி வை.ஒருவரிடம் இன்னும் பத்து நிமிடத்தில் அவரின் பார்ட்னர் வருவார் என்று சொல்லு.  சரி மேடம்.

மேனேஜரும் அப்படியே மூவரை கார்களில் அனுப்பிவிட்டு நின்ற விமலிடம் பத்து நிமிடத்தில் உங்கள் பார்ட்னர் வந்திடுவார் என்று சொல்ல அவனும்  வெளியே வந்து  பாக்கட்டில் இருந்த சிகரெட் பக்கட்டை எடுத்து மனேஜரிடமும் நீட்டி தானும் ஒன்றை எடுக்க , பின்னாலிருந்து எனக்கும் ஒரு சிகரெட் கிடைக்குமா....இருவரும் திரும்பிப் பார்த்து மலைத்து நிக்கின்றனர்.

மிஸ்ட்டர் விமல்....ஐயாம் ஸ்னேகா, இன்று உங்களின் பார்ட்னர் நான்தான் என்று உதட்டை நெளித்து  ஒரு கண்ணை சுருக்கி புன்முறுவலுடன் கூறினாள். விமல் வியப்புடனும் சிறிது தடுமாற்றத்துடனும் பார்க்க மானேஜர் சசிதரனுக்கு நம்பவே கஸ்டமாய் இருக்கு.அவர் வேலைக்கு சேர்ந்த இவ்வளவு நாட்களில் அவளை இப்படி பார்த்ததே கிடையாது. இந்த "சினேகா இன்" னின் முதலாளி அவள்.ஒருநாளும் இருபோன்ற ஆடையில் அவளை பார்த்ததேயில்லை. வெளிர் மஞ்சள் நிற ப்ளவுஸ்  கீழே அதே நிற தொடை வரையிலான டைட்ஸ் ஸ்கேர்ட், இரண்டையும் மெல்லிய லேஸ் நெட் துணி இணைத்திருக்கு. அதே நெட் துணி தொப்பிளின் கீழிருந்து சுற்றிவந்து இடது பக்க இடையில் முடிகிறது. அவள் நடக்கும்போது இடதுபக்க காலும் ,மடிப்பில்லாத  சின்ன இடையில் தொப்புளுடன் சிறிது மேடிட்ட வயிறும் அழகாய் அசைகின்றன. அதற்கேற்ற நிக்கல் ஆபரணங்கள் கொஞ்சமாய்  போட்டிருக்கிறாள்.முதுகு முழுவதுமாய் தெரிய பின்னழகு பவுர்ணமியாய் பரிமளிக்கிறது. முடி கடற்காற்றில் அலைய..... விமல் நான் உங்களிடம் சிகரெட் கேட்டேன் நீங்கள் இன்னும் தரவில்லை. .... ஓ...சாரி ப்ளீஸ் என்று தன் கையில் இருந்த சிகரட்டை அவளிடம் தந்து விட்டு தானும் ஒன்றை எடுத்து கொண்டான்.ஒரே லைட்டரின் தீயில் மூவரும் பற்ற வைத்து கொண்டனர்.

நீங்கள் மிகவும் அழகாய் இருக்கிறீர்கள் அதுவும் இந்த ஆடையில் அவ்சம் என்று விமல் சொல்ல, சசி நாசுக்காக அவ்விடத்தை விட்டு அப்பால் செல்கிறார். இருவரும் அவளின் சிகப்பு நிற வோல்க்ஸ்வேகன்  காரில் ஏற, அந்த காரும் சீறிக் கொண்டு கடற்கரை சாலையில் பறக்கிறது.....!

சோதனை தொடரும்.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, suvy said:

சோதனை தொடரும்.....!

இன்னும் எத்தனை பாகம் சார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

29 minutes ago, ஈழப்பிரியன் said:

இன்னும் எத்தனை பாகம் சார்?

இந்த வாரத்தில் முடியும் சார் .....! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சான்றிதழ்.........! ( 14 ).

     சுமணாவுக்கு அந்த ஷோரூமை கண்டு பிடிப்பதில் சிரமமேற்படவில்லை.அதன் ஆடம்பரத்தை பார்த்து ஒரு நிமிடம் திகைத்துதான் போனாள் . ஒரு அழகான பெண் வந்து யெஸ் ....உங்களுக்கு என்ன வேண்டும் என வினவ இங்கு நான் வந்தனாவை பார்க்க வந்தேன் என்று சொல்கிறாள். ஓம் நான்தான் வந்தனா, நீங்கள் யார் என்று சொல்லுங்கள். சுமணா ஒன்றும் பேசாமல் அந்தக் கவரை கொடுக்கிறாள். வந்தனாவும் அதனுள் இருந்த கடிதத்தை எடுத்து படித்து கொண்டே உங்களுக்கு ஹேமாவை தெரியுமா, எங்கிருக்கிறாள் ,நலமாக இருக்கிறாளா எனக் கேட்க.... மன்னிக்கவும் அதைக் கூற எனக்கு அனுமதி இல்லை, அவர் என் கிளையண்ட்...நான் டாக்டர் சுமணா. மாற்றினிற்ரி ஹோம் வைத்திருக்கிறேன்.என்று சுமணா சொல்கிறாள். கடிதத்தில்...., 

அன்பு தோழி வந்தனாவுக்கு.....!

நான் நலம். அதுபோல் நீயும் நலமாய் இருக்க இறைவன் அருள் புரியட்டும்.அங்கு யாவரும் நலமா....! மேலும் இந்த கவரில் இருக்கும் நீல வைரத்துக்கு, அதன் பெறுமதியை இந்தப் பெண் சுமணாவிடம் கொடுத்து விடவும்.தற்சமயம் ஐந்து லட்சம் பணமாகவும், மிகுதியை அவளிடம் செக்காக கூட நீ கொடுக்கலாம்......!

என்றும் உன் அன்புத் தோழி 

ஹேமா....!

அதில் இருந்த நீல வைரத்தை எடுத்து பார்த்தாள், அது நீல நிற வெல்வெட் துணியில் அழகாய் ஜொலித்துக் கொண்டிருந்தது. அதை எடுத்து எடை போட்டு பரிசீலித்தவள் அது மிகவும் பெறுமதி மிக்க "ப்ளூ டைமண்ட் " சுமாராகவே இருபத்தைந்து லட்ஷத்துக்கு மேல் போகும். உள்ளே சென்று யாரிடமோ போனில் கதைத்து விட்டு வந்து சுமணாவை உள்ளே அழைத்து அவளது அடையாள அட்டை எல்லாம் சரிபார்த்து விட்டு  ஒரு சிறிய பையில் ஐந்து லட்ஷம் ரூபாயும் மிகுதிக்கு காசோலையும் வைத்து சுமணாவிடம் தருகிறாள்.பின் அவளுக்கு குளிர்பானமும் குடுத்து கவனமாய் போகும்படி சொல்லி அனுப்புகிறாள். சுமணாவும் வெளியே வந்து வங்கியில் காசோலையை செலுத்திவிட்டு நேராக ஹேமாவிடம் வந்து நடந்ததை கூறுகிறாள். ஹேமா உனக்கு மிகவும் நன்றி. மிகுதிப்  பணத்தை செக் மாறியதும் எடுத்து உன்னிடம் தருகிறேன் என்று சொல்ல ஹேமா மறுத்து, இந்த வைரம் திருமணமான அன்று மாமி எனக்கு பரிசளித்தது.குடும்ப சொத்தாக வைத்திருந்தேன். அது எப்படியும் மாமியின் கைக்கு போய்விடும். நீ மிகுதி பணத்தில் உனது கிளினிக்கை புதுப்பித்து இந்த மலைக்கிராம மக்களுக்கு சேவை செய் என்கிறாள்.மேற்கொண்டு என்னிடம் எதுவும் கேட்காதே.எல்லாவற்றையும் மறந்துவிடு.யாருக்கும் சொல்ல வேண்டாம்.....! 

இரு மாதங்களாகி விட்டன. விமல் இன்னும் வேலைக்கு வரவில்லை.போனிலும் சரிவர கதைக்க வில்லை.நழுவுகிறான்.ஹேமாவேறு நிறைமாத கர்பிணியாய் இருக்கிறாள். அன்று அதிகாலையில் அவளுக்கு பிரசவ வலி எடுக்க உடனே சுமணாவுக்கு போனில் தகவல் சொல்லிவிட்டு ஹேமாவை வானில் கிளினிக்குக்கு கொண்டுபோய் விடுகிறான்.அங்கு தயாராய் இருந்த சுமணாவும் உடனே அவளை ஸ்டெர்சரில் அறைக்கு கூட்டிப் போக அங்கு அவளுக்கு சுகப்பிரசவமாகின்றது.அழகிய ஆண்குழந்தை.தாயும் பிள்ளையும் நலம் என்று சுமணா சொல்ல இராகவனுக்கு பெரும் நிம்மதி. உள்ளே போனவன் ஹேமாவின் தலையை மெல்ல வருடிக் கொடுக்கிறான்.குழந்தையை வாங்கி நெற்றியில் முத்தமிட்டு, பின்பு அவனும் சுமணாவும் அவள் சாய்ந்திருக்க வசதியாக கட்டிலை சரி செய்துவிட்டு பிள்ளையை அவளிடம் குடுக்க அது பால் குடிக்க சுமணா உதவி செய்கிறாள்.ஹேமாவிடம் தாய்மையின் பொலிவையும் பிள்ளை பொச்சடித்து பால் குடிப்பதையும் பார்த்தவன் ஒரு நெகிழ்வான உணர்வுடன் வெளியே வருகிறான். ஒரு பீடியை பற்ற வைத்து கொண்டு சுமணாவிடம் அவளை கவனமாய் பார்த்துக்கொள்.வேலைகள் இருக்கு போயிட்டு கெதியாய் வருகிறேன் என்று கூறி விட்டு போகிறான்.

சுமணா நான் எப்போது போகலாம்.இராகவ் பாவம் தனியாக கஷ்டப்படுவான்.விமலும் இன்னும் வரவில்லை.....அடிப்பாவி...! இப்பதான் பிள்ளை பெற்றிருக்கிறாய்.ஒரு ஆறு நாளைக்கு அப்புறம் நீ போகலாம். இப்ப இது உன்னுடைய கிளினிக் ஹேமா.அன்று மட்டும் நீ உதவி செய்யவில்லை என்றால் எல்லாமே மாறி இருக்கும். அப்போதுதான் ஹேமா கவனிக்கிறாள்.அறைகள் எல்லாம் பெயின்ற் அடித்து சுத்தமாயும் அழகாகவும் இருக்கு. நீ அவரது கடனை செலுத்தி விட்டாயா.... ஓம் ஹேமா.எனது வக்கீலுடன் சென்று எல்லாம் செட்டில் பண்ணி பாத்திரங்களையும் வாங்கி வந்து விட்டேன்.அவருக்கு ஏமாற்றம்தான். தான் நடந்து கொண்டதற்கு வருத்தமும் தெரிவித்தார்.......!

சோதனை தொடரும்........!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சான்றிதழ்......! ( 15 ).

ஐந்தாம் நாளே ஹேமாவும் பிள்ளையும் கடைக்கு வந்து விட்டனர்.சுமணாவின் தாயார் அவளிடம் வெந்நீரில் குளிப்பதில் இருந்து ,வயிற்றை துணியால் இறுக்கி கட்டுவது,பிள்ளையை எண்ணை  பூசி மெல்லிய வெய்யிலில் தடுக்கில் விடுவது வரை எல்லாம் ஐந்து நாட்களாக சொல்லி விட்டிருந்தார்.இராகவனும் விசேஷமாய் புதுப் படுக்கை தொட்டில் எல்லாம் வாங்கிப் போட்டிருந்தான்.சுமணாவும் அவளுக்கு பகலில் உதவி செய்ய சில நாட்களுக்கு ஒரு பெண்ணை அனுப்பியிருந்தாள். அன்று காலை ஒரு விண்ணப்பத்துடன் வந்த சுமணா ஹேமாவை கேட்டு நிரப்புகிறாள்.பிள்ளைக்கு என்ன பெயர் என்று கேட்க அவளும் கல்லாவில் இருந்த இராகவனிடம் நீயே ஒரு நல்ல பெயராய் சொல்லு என்கிறாள்.அவன் உடனே ரஜினி என்று சொல்ல அவள் யோசித்து விட்டு வேண்டாம் பெண்களுக்கும் அந்த பெயர் இருக்கு, அடிக்கிறமாதிரி கம்பீரமான பெயராய் சொல்லு, அப்ப ரகுவரன் என்றுதான் வைக்க வேண்டும். அதை மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்த்தவள் "அட இதுவும் நல்லா இருக்கே" இரகுவரன்...இராகவன்/ இராகவன்... இரகுவரன். அதையே வைக்கலாம், இரகுவரன் என்று சொன்னாள். இராகவனும் இந்த பொம்பிளைகளுக்கு ஹீரோவை விட வில்லனைதான் பிடிக்கும்போல என்று அலுத்துக் கொண்டான்.இருவரும் சிரித்து கொண்டனர்....!

யாழ்ப்பாணத்தில் விமலும் நண்பர்களும் நன்றாக உல்லாசம் அனுபவித்தார்கள்.ஒருநாள் எல்லோருமாய் நயினாதீவு சென்று வந்தார்கள். பத்து நாட்கள் போனதே தெரியவில்லை.விமலுக்கு லீவு இருப்பதால் அவன் ஆறுதலாய் வரட்டும் என்று மூவரும் கிளம்புகிறார்கள்.அவர்களை சினேகாதான் வானில் பலாலிக்கு அழைத்து செல்கிறாள்.பின்பு இருவரும் கீரிமலைக்கு சென்று கடலில் நீந்திக் குளிக்கிறார்கள்.கவனம் விமல் அலைகள் அடித்து கொண்டு போய் விடும். ஹோல்பேசுடன் பார்க்கும்பொழுது இங்கு அலைகள் குறைவுதான் ஸ்னேகா.கீழே கற்கள்தான் மிகவும் கூராய் இருக்கு. வெய்யிலில் அவனது உடல் தக தகவென்று மின்னுவதை அவள் ரசிக்கிறாள்.அவள் பச்சை ஜீன்சும் வெள்ளை பெனியனுடனும் குளித்ததால் கரையேறி வரும்பொழுது ஈரம் சொட்ட  சொட்ட சிலையொன்று அலுங்கி குலுங்கி அசைவது போல் இருந்தது. அவன் ரசித்த மாதிரி தெரியவில்லை.பின்பு அவனும் வெளியே வந்து ஏய் ஸ்னேகா இங்கு "ரொடி" கிடைக்குமா.கிடைக்கும். வா போய் பார்ப்போம்.பக்கத்து கிராமத்துக்கு போகின்றார்கள்.அங்கு ஒரு வீட்டில் காலையில் இறக்கிய கள்தான் கிடைத்தது. இருவரும் அதை வாங்கி குடித்து விட்டு, கடையில் வந்து பேருக்கு சாப்பிட்டு விட்டு ஹோட்டலுக்கு வருகின்றனர். இருவருக்கும் போதை ஏறி இருந்தது. அவனால் நடக்க முடியவில்லை.புசித்த தொடங்கி விட்டான். அவனை ஒருவாறு அவனது அறைக்கு கொண்டுபோய் போர்த்து விட்டவள் கூடவே அவனுடன் போர்வைக்குள் முடங்கி கொண்டாள். சிறிது நேரத்தில் விமல் ஈனஸ்வரமாய் மட்ட அவஷ்ய நேகே (எனக்கு வேண்டாம்).என்ற சத்தம் குறைந்து முனகளாக வெளிவர அங்கு ஒரு சுவாரஸ்யமான பாலியல் வல்லுறவு அரங்கேறுகிறது.

    தனது ஷோரூமுக்குள் வந்த தெய்வநாயகி நேராக தனது அறைக்குள் வந்து வந்தனாவை அழைத்து, நீ ஒரு டைமண்ட் வாங்கியதாய் சித்தார்த் சொன்னான்.எங்கே கொண்டுவா பார்ப்போம். அவள் கொண்டுவந்து கொடுத்ததும் இது அந்த வைரமாய் இருக்குமோ என்று நினைத்து ஹேமா இங்கு வந்திருந்தாளா என்று கேட்டாள். இல்லை மேடம்.ஒரு பெண்ணிடம் குடுத்தனுப்பினாள். அவளிடம்தான் போதிய பணமிருக்கே இதை விக்கும் அளவு என்ன தேவையாய் இருக்கும்.வந்தனா யார் கொண்டுவந்தது,எங்கு இருக்கிறார்கள் என்று தெரியுமா.....தெரியாது மேடம்.ஆனால் அந்தப்பெண் ஒரு டொக்டர். மார்டனிட்டி ஹோமை புதுப்பிக்க வேண்டும் என்று சொன்ன ஞாபகம். தெய்வநாயகியின் மனதுக்குள் ஒரு கேள்வி குடைந்தது. மார்டினிட்டி ஹோமுக்கும் இவளுக்கும் என்ன சம்பந்தம்.போய் ஒரு வருடமாகுது.ஒருவேளை அப்படி இருக்குமோ...! சித்தார்த்துக்கு கலியாணம் செய்து வைத்த இரண்டாவது பெண்ணும் ஆறு மாதத்திலேயே அவனை இம்பொடன்ற் ஆண்மையற்றவன் என்று வைது விட்டு போய்விட்டாள்.அது அவனை நிலைகுலைய வைத்து விட்டது.இப்போது அவனும் முன்ன மாதிரியில்லை.யாவாரத்தை பொறுப்பாய் கவனித்து கொள்கிறான். இதை மிகவும் கவனமாய்த்தான் விசாரிக்க வேண்டும் என்று நினைத்து கொண்டு சரி நீ போ நான் பின்பு அழைக்கிறேன் என்றாள்.

சோதனை தொடரும்.....!

Link to comment
Share on other sites

கதையை அவசரமாக முடிக்க வேண்டும் என்று கெதிப்படுத்துவது போல இருக்கு. முதல் அத்தியாயங்களில் இருந்த நிதானமான வருணிப்புகள் ஒன்றையும் கடைசி இரண்டு அத்தியாயங்களில் காணவில்லை

மற்றது, கதை நடக்கும் காலத்தில் ரகுவரன் நடிக்க தொடங்கி இருக்க மாட்டார் என நினைக்கின்றேன்  (கதையின் காலம்  83 ஜூலை கலவரத்துக்கு முற்பட்ட காலம் என நம்புகின்றேன்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, நிழலி said:

கதையை அவசரமாக முடிக்க வேண்டும் என்று கெதிப்படுத்துவது போல இருக்கு. முதல் அத்தியாயங்களில் இருந்த நிதானமான வருணிப்புகள் ஒன்றையும் கடைசி இரண்டு அத்தியாயங்களில் காணவில்லை

மற்றது, கதை நடக்கும் காலத்தில் ரகுவரன் நடிக்க தொடங்கி இருக்க மாட்டார் என நினைக்கின்றேன்  (கதையின் காலம்  83 ஜூலை கலவரத்துக்கு முற்பட்ட காலம் என நம்புகின்றேன்)

உண்மைதான் நிழலி.ரகுவரனும்  ரஜனியும் பாட்ஷாவுக்கு (1994) பின்தான் .... இது ஒரு ப்ளோஅப்பில் எழுதியது.அதை கவனிக்கவில்லை. மேலும் இந்த கதையில் நான் அதிகம் வர்ணிப்புகள் செய்யவில்லை.பெண்களும் சுதந்திரமாக எழுதட்டும் என்று. நன்றாக கவனிக்கிறீங்கள் நன்றி நிழலி. இனி கவனத்தில் எடுத்து எழுதுகிறேன். கதையின் காலம் 80 க்கு முன். மேலும் இதில் நான் ஒன்றை சொல்ல வேண்டும் சினேகாவின் பாத்திரத்தை மட்டும் ஒரு தொடர்போல கொண்டு வந்திருக்கிறேன்.முதல் எழுதிய "வாந்தி"யில் அவள் தெருவோர விபச்சாரி. பின் தந்தையுமானவன் கதையில் நாகரீகமானவளாயும் call girl  டைப். இதில் அவள் ஒரு மில்லியனர். எல்லாம் ஒரு ஆர்வக்கோளாறுதான்....! tw_blush:

ரகுவரன் "ஒரு ஓடை நதியாகிறது" ஸ்ரீ தரின் படம் (1982) பேசப்படுபவராக வந்து விட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சான்றிதழ்.....! ( 16 ).

  இராகவனும் வேலை நேரம் போக மிச்ச நேரமெல்லாம் குழந்தையுடனேதான் பொழுதை கழிக்கிறான்.கடைக்கு இப்போ சனம் நிறைய வருவதால், கடைக்கு முன்னாலும் பெரிதாக்கி நாலு மேசைகள் போட்டிருந்தான்.ஒரு வேலையாளையும் வேலைக்கு வைத்திருந்தான்.இரவுகளில் பிள்ளையை மடியில் வைத்து கொண்டு டிரான்சிஸ்ட்டரில் ஹேமா போடும் தமிழ் பாடல்களை கேட்கிறான். ஹேமாவும் இப்பவெல்லாம் தனது இடத்திலிருக்கும் திரையை மூடுவதில்லை.எந்நேரத்திலும் குழந்தை எழும்பி அழும்.அவள் அசதியாய் தூங்கி இருப்பாள். இராகவன் எழுந்து சென்று தொட்டிலில் இருந்து பிள்ளையை எடுத்து அவளை எழுப்பி குடுத்து விட்டு வருவான்.அவள் அணிந்திருக்கும் சிங்கள பெண்களின் ஆடை அந்த நாலுமுழ துண்டும் அகலம் குறைந்த சட்டையும் ஹேமாவுக்கு வேலை செய்வதற்கு மட்டுமன்றி பிள்ளைக்கு பால் கொடுக்கவும் வசதியாய் இருக்கு. பல சமயங்களில் பால் குடுத்த படியே அவள் தூங்கி விடுவாள்.விளையாடிக் கொண்டிருக்கும் பிள்ளையை அவன் சென்று தூக்கி வந்து தன்னுடன் வைத்து கொள்வான்.

இப்பொழுதெல்லாம் மாலை வேளைகளில் சிலமணி நேரமாவது விமலுடன் பொழுதைக் கழிப்பதை ஸ்னேகா வழமையாக்கிக் கொண்டாள். அப்பப்ப இரவிலும் அவனுக்கு கம்பெனி குடுக்கிறாள்.அவர்கள் ஒரு வர்த்தகர் /வாடிக்கையாளர் என்னும் உறவையும் தாண்டி அந்நியோன்னியமாய் நிறைய பேசிக் கொள்கிறார்கள்.இராகவனிடம் இருந்து வரும் போன் கோலை மட்டும் விமல் தவிர்க்கிறான்.ஒருநாள் இதை கவனித்து ஸ்னேகா கேட்ட போது எல்லாவற்றையும் சொல்லி விட்டான்.இராகவனுடன் வாழும் வாழ்க்கை முறை எதையும் மறைக்க வில்லை.அவள் சொன்னாள், அவருக்கு நீ கதைக்காததுதான் ஏமாற்றமாய் இருக்கும்.போன் வந்தால் எடுத்து பேசு. இல்லை ஸ்னேகா.அவன் மிகவும் நல்லவன். நான் நேரில் சென்று சொல்வதுபோல் வராது அதுதான் என்று சொல்ல, அவளுக்கும் அது சரியென்றே படுகிறது.

சினேகாவும் தன்னைப்பற்றி எல்லாம் கூறிக் கொண்டே வந்தாள். இங்கு இரண்டு ஹோட்டல் இருப்பதையும், கொழும்பிலும் ஒரு மசாஜ் செண்டருக்கு இடம் வாங்கி வைத்திருப்பதையும், அங்கு எல்லாம் தயாராய் இருந்தும் சில சட்ட பிரச்சினையால் அது தாமதமாகுவதாகவும், மேலும் இங்கிருக்கும் வெளிநாட்டு பெண்கள் கூட அங்கு வேலை செய்வதற்காக அழைத்து வரப்பட்டவர்கள். இவர்கள் முறைப்படி மசாஜ் செய்யவும் கற்று கொண்டவர்கள் என்று கூறுகின்றாள். அந்த இடத்தை சரியாக கேட்ட விமல், நீங்கள் அதைப்பற்றி யோசிக்க வேண்டாம்.எனக்கு தெரிந்தவர்கள் இருக்கிறார்கள்.அவர்கள் மூலமாக பிரச்சனைகளை சரிபண்ணி லைசென்ஸ் எடுத்து தருகிறேன் என்கிறான். சரி விமல் அதைப்பற்றி பிறகு பேசுவோம். இப்பொழுது நான் உன்னிடம் ஒன்று கேட்கலாமா. ம்.... என்ன சொல்லு. என்னை உனக்கு பிடித்திருக்கா. சிறிது யோசித்தவனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. எனக்கு பெண் சுகம் என்னவென்று புரிய வைத்தவள் நீதான். உன்னை எனக்கு மிகவும் பிடித்திருக்கு. ஆனால் எனது நண்பனை கலந்தாலோசிக்காமல் இப்ப ஒன்றும் சொல்ல முடியாது. அதனால் நீ குறை நினைக்க வேண்டாம்.மேலும் நான் வசதியானவன் இல்லை. நீயோ பெரிய பணக்காரி, இது சரிவருமா என்று நீதான் யோசிக்க வேண்டும். என்ன பணம் விமல், சில வருடங்களுக்கு முன் நானும் மிக மிக ஏழைதான்.ஏதோ  உன்னை பார்த்ததும் பழகியதும் கேட்கத் தோன்றியது. நீ உன் நண்பனுடன் கதைத்து விட்டு எனக்கு சொல்லு.இல்லையென்றாலும் பரவாயில்லை.டேக்  இட்  ஈஸி என்கிறாள். 

சோதனை தொடரும் ......!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சான்றிதழ்......! (17 ).

தெரு முனையில் இருந்த புத்தருக்கு பூவும் சந்தன குச்சியும் வைத்து விட்டு கடைக்கு வருகிறாள் ஹேமா.வாசலில் நின்ற மோட்டார் சைக்கிளை பார்த்து விட்டு அட  விமல் வந்துடுதான் போல என்று உள்ளே போகிறாள். அங்கு இராகவன் பெரிதாய் சத்தம் போட்டுக் கொண்டு விமலை அடிக்கிறான்.விமல் சிறிதும் அவனை எதிர்த்து அடிக்காமல், இராகவ் பொட்டக் எண்ட மச்சான் மம கியனவா. (கொஞ்சம் பொறு மச்சான் நான் சொல்லுறன்) என்று சொல்ல அதை கேட்கும் நிலையில் இராகவன் இல்லை. உனக்கு விருப்பமில்லை என்றால் இது வேண்டாம் என்கிறான்.மூர்க்கமாய் அவனை அடிக்கிறான்.ஹேமா ஓடிவந்து தடுக்க அவள்மீதும் தவறி அடி விழுகிறது. உள்ளே ஓடியவள் அழுது கொண்டிருக்கும் குழந்தையை தூக்கிக் கொண்டு குறுக்கே வருகிறாள்.இராகவன் தென்னை மட்டையை ஓங்கிக் கொண்டு நிக்கிறான். ஹேமா விலகிப் போ அங்கால, இப்படி ஒரு ஆக்ரோஷத்தை அவள் இதுநாள் வரை அவனிடம் பார்த்ததில்லை. அவள் குழந்தையுடன் விமலுக்கு அருகில் கவசமாய் நிக்கிறாள். குழந்தை குழறுகிறது. சிறிது நேரம் பிள்ளையையும் அ வளையும் வெறித்து பார்த்தவன்  மட்டையை  அப்பால் எறிந்து விட்டு குலுங்கி குலுங்கி அழுது கொண்டு குளத்தருகில் போய் இருக்கிறான்.அவனை சமாதானப்படுத்த போன விமலை ஹேமா தடுத்து கடைக்குள் கூட்டிக் கொண்டு போகிறாள். அங்கு அவன் தான் போனதில் இருந்து நடந்தது எல்லாவற்றையும் ஹேமாவிடம் சிங்களத்தில் சொல்லுகிறான். சரி நீ போய்விட்டு பின்னேரம் வா.நான் முடிந்தவரை அவனை சமாதானப் படுத்துறன் என்று சொல்ல விமலும் முகத்தை துடைத்து கொண்டு சைக்கிளை எடுத்து கொண்டு போகிறான்.

ஹேமா இராகவனை தேடிப்போக அவன் ஒரு பீடியை புகைத்துக்கொண்டு இருக்கிறான்.கோபம் சற்று தணிந்து இருக்கு. பிள்ளையுடன் அவனருகில் சென்று அமர்ந்தவள், அவன் கையை எடுத்து தனது கைக்குள் பொத்தி வைத்து கொண்டு சிறிது நேரம் மெளனமாய் இருக்கிறார்கள்.அவள் மடியில் இருந்த குழந்தை அவன் இடுப்பில் தன பிஞ்சு கால்களால் உதைய, கையில் இருந்த பீடியை எறிந்து விட்டு பிள்ளையை எடுத்து தனது மடியில் வைத்து கொள்கிறான். அது அவன் மார்பு முடிக்குள் விரல் விட்டு அளையுது.

ஹேமா மெதுவாய் பேச்சை ஆரம்பிக்கிறாள். இப்ப எதுக்காக இவ்வளவு கோபம். 

இராகவ்: அவன் என்னை ஏமாத்திப் போட்டான். அதுதான். அவன் என்ன கேட்டிருந்தாலும் குடுத்திருப்பன். ஆனால்.....

ஹேமா: ஆனால் என்ன இப்ப.... யாரும் யாரையும் ஏமாத்தவில்லை. விமல் மீது அவ்வளவு அன்பிருந்த படியால்தான் இவ்வளவு கோபம் உனக்கு வந்திருக்கு. அதை அவன் உணர்ந்த அளவுக்கு நீ உணரவில்லை. கோபம் கண்ணை மறைத்திருக்கு.

இராகவ்: இல்லை ஹேமா.நான் என் உலகமே அவன்தான் என்றிருந்தேன்.

ஹேமா: அவனும் உன்னை அப்படித்தானே நினைத்திருந்தான்.

இராகவ்: இல்லையே ....அவன் எவளோ ஒரு .......அவளிடம் சொல்ல முடியாமல் நிறுத்துகிறான்.

ஹேமா: நாங்கள் நினைப்பதெல்லாம் அப்படியே நடந்து விடுகிறதா என்ன இராகவ்.எவ்வளவோ தத்துவங்கள் படித்த உனக்கு இது புரியாமலா இருக்கும்.

இராகவ்: நீ இவ்வளவு கதைக்கிறாயே...! இதோ உன் பிள்ளை இருக்கிறது. இந்த பத்து மாதமாய் பிள்ளையை பெற்றெடுத்து வளர்க்க எவ்வளவு கஷ்டப் படுகிறாய்.அதை நான் அருகில் இருந்து பார்க்கிறேன். அப்படியான பிள்ளையை இன்னொருத்தருக்கு தூக்கிக் குடுத்து விடுவியா.சும்மா சொல்லுறது சுலபம். (உடனே அவளுக்கு கண்கள் கலங்கி விட்டன. மறுபுறம் திரும்பி அதை மறைத்து கொள்கிறாள்). என்ன பேச்சு மூச்சை  காணவில்லை.

ஹேமா: நீ நம்பினாலும் நம்பாவிட்டாலும் அதுதான் உண்மை. என்ன சொல்கிறாய் ஹேமா....! உனக்கு ஞாபகம் இருக்கா அன்று நான் பிள்ளை வேண்டாம் என்றுதான் முடிவு செய்திருந்தேன்.அப்பொழுது நீதான் அதைத் தடுத்தாய்.அதற்காக உனக்கு நன்றி. உனக்கு தெரியுமா, இவன் ஒரு பெரிய கோடிஸ்வரன். தெய்வநாயகி குடும்பத்தின் ஒரே வாரிசு.சில மாதங்களுக்கு முன்பே இவன் உண்டாகி இருப்பது தெரிந்திருந்தால் எனக்கு விவாகரத்தே நடந்திருக்காது.திருமணமான ஐந்து வருடங்களாக இல்லாத பிள்ளை, ஏதோ  ஒரு சந்தர்ப்பத்தில் ஜனித்ததும் பெற்றோர் நாங்கள் பிரிந்து விட்டோம். சரி பிள்ளை வேண்டாம் என்று நினைத்த போதும், அதையும் தாண்டி மாளிகையில் பிறக்காமல் மலையில் பிறந்து எங்கள் மடியில்  தவழுது. ஏதோ  ஒரு காரணத்துடன் தான் எல்லாம் நடக்குது.நாங்கள் வெறும் பார்வையாளர் மட்டுமே. புரிந்து கொள்வது கடினம்தான் ஆனால் அதுதான் யதார்த்தம். என்று தன் வாழ்வில் நடந்ததையெல்லாம் அவனிடம் சொல்லி, சித்தார்த் மறுமணம் செய்து கொண்டதாகவும்.ஆயினும் அவருக்கு இனியொரு குழந்தை கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை. அதனால்தான் அந்த வம்சத்தின் வேரை அழிக்க நான் விரும்பவில்லை.

இராகவ்: சரி, இனி அவர்களுக்கு பிள்ளை பிறந்து விட்டால்.....!

ஹேமா:அப்படி ஒன்று நடந்தால் பிரச்சினை இல்லை.இவன் என் பிள்ளையாக இல்லை உன் பிள்ளையாக உன் நிழலில் வளருவான்.

 இராகவ்: எவ்வளவு ரணத்தை மனதில் வைத்து கொண்டு வாழ்ந்து வருகிறாய் ஹேமா.உன்னை நினைக்க பெருமையாய் இருக்கு.

ஹேமா: பலபிள்ளைகள் இருப்பவர்களுக்கு அவற்றின் அருமைகள் தெரிவதில்லை.ஒரு பிள்ளை இல்லை என்பவர்களை கேட்டு பார்த்தால் தெரியும் அதன் அருமை. அதுவும் சொத்து பத்து இருந்து விட்டாலோ சொல்லவே வேண்டாம். நீ விமலிடம் சண்டை போட வேண்டாம். அவன் மிக நல்லவன்.கல்யாணம் செய்து போட்டு வரவில்லை.உன்னிடம் கதைத்து விட்டு வருகிறேன் என்றுதான் சொல்லி இருக்கிறான். விதி எங்கெங்கோ, யார் யாருக்கோ ஒரு முடிச்சை போட்டுக்கொண்டுதான் இருக்கு.அந்த பெண்ணை மணம் புரிவதால் அவன் வாழ்க்கை வளம் பெறும் என்றால் அதை எதுக்காக தடுக்க வேண்டும்.

இராகவ்: அதாவது இந்தப் பிள்ளையை நீ .... இல்லை நாங்கள் வளர்ப்பதுபோல் என்று சொல்கிறாய்.

ஹேமா: ம்....அப்படியும் சொல்லலாம். பொதுவாய் எதன்மீதும் அதிக ஆசை வைத்தால் துன்பத்தையே தரும். ஆசையே துன்பத்துக்கு காரணம்.

இராகவ்: தெரு மூக்கு புத்தர் சொன்னாரா.....அவள் சிரித்து கொண்டே எழுந்து போக அவனும் சாந்தமாக பிள்ளையுடன் பின்னால் போகிறான்....!

சோதனை தொடரும்....!

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெயிட்டிங்  உங்க செட்டிபிகேட்டுக்கு tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், அலெசியா பிராங்கோ மற்றும் டேவிட் ராப்சன் பதவி, ஃபீச்சர்ஸ் செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் புதன் கோள், அதன் "பொருத்தமில்லாத" மையப்பகுதியில் தொடங்கி அதன் மேற்பரப்பின் குழப்பமான ரசாயன கலவை வரை, ஆச்சரியங்கள் நிறைந்தது. இந்தக் கோளின் தோற்றம் குறித்த பின்னணியிலும் ஆச்சரியத்திற்குக் குறைவு இல்லை. ஆனால், சைப்ரஸில் காணப்படும் பாறைகளில் அதற்கான சில பதில்கள் கிடைக்கக்கூடும். அறிவார்வம் பல ஆய்வாளர்களைப் பலி வாங்கியுள்ளது. அந்த வரிசையில் தாம் அடுத்தாக இருக்கக்கூடும் என்று நிக்கோலா மாரி அஞ்சினார். சைப்ரஸின் தொலைதூர மலைகளைச் சுற்றி வாகனம் ஓட்டும்போது மாரி வழிகாட்டலுக்கு தனது செல்போனை நம்பியிருந்தார். ஆனால் பகல்பொழுது சாய்ந்தபோது அவரது போனின் பேட்டரியும் குறைந்தது. தனது தங்குமிடத்திற்குத் திரும்பிச் செல்ல வழி தெரியாமல் அவர் தவித்தார். ”நான் 50 கி.மீ.க்கும் அதிகமாக (31 மைல்கள்) பயணித்தேன். அதன்போது நான் ஒரு வாகனத்தைக்கூட பார்க்கவில்லை," என்று அவர் கூறுகிறார். அவர் தனது வயிறு, இயந்திரம் மற்றும் தொலைபேசி பேட்டரிகளை நிரப்பக்கூடிய உணவு விடுதிக்குச் செல்லும் வழி தனக்கு நினைவில் இருப்பதாக நினைத்தார். ஆனால் அவர் அங்கு சென்றபோது அது வெறிச்சோடியிருப்பதைக் கண்டார். ஒரு திருப்பம் இறுதியில் அவரை மற்றொரு ஸ்தாபனத்திற்கு அழைத்துச் சென்றது, ஆனால் அந்த தனிமையான மலைச் சாலைகளில் தனது உயிருக்குப் பயந்ததாக அவர் ஒப்புக்கொள்கிறார். "நான் சில மோசமான கணிப்புகளைச் செய்தேன்," என்று அவர் கூறுகிறார். அதிர்ஷ்டவசமாக அவரது பயணம் வீண் போகவில்லை. மாரி இத்தாலியில் உள்ள பாவியா பல்கலைக்கழகத்தில் கோள் புவியியலாளராக உள்ளார். அவர் சூரிய குடும்பத்தில் நமது அண்டை கோள்களின் உருவாக்கம் மற்றும் பரிணாம வளர்ச்சியை ஆய்வு செய்கிறார். அவர் தனது முனைவர் பட்டத்திற்காக செவ்வாய் கோளின் எரிமலை குழம்பு ஓட்டங்களை ஆய்வு செய்தார். இந்த நேரத்தில் அவர் சைப்ரஸ் வழியாக புதன் மீது தனது பார்வையைச் செலுத்துகிறார். புதனில் காணப்படும் பாறைகளுடன் வினோதமான ஒற்றுமையைக் கொண்டிருப்பதாக நம்பப்படும் "போனினைட்" என்று பெயரிடப்பட்ட ஒரு குறிப்பிட்ட வகை பாறையைக் கண்டுபிடிப்பதே அவரின் நோக்கமாக இருந்தது. அவர் நினைப்பது சரியாக இருந்தால் அந்தக் கோளின் தனித்துவமான தோற்றம் தொடர்பான ஒரு துப்பு கிடைக்கலாம்.   சூரியனில் இருந்து முதல் பாறை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் புதன் கோளில் அனைத்துமே உச்ச அளவில் உள்ளது. சந்திரனைவிட சற்றே அதிக கன அளவு கொண்ட புதன், சூரிய குடும்பத்தின் மிகச் சிறிய கோள். அது சூரியனுக்கு மிக அருகில் உள்ளது. அதில் வெப்பத்தைத் தக்கவைக்க வளிமண்டலம் இல்லை. அதாவது மேற்பரப்பில் வெப்பநிலை பகலில் 400 டிகிரி செல்ஷியஸ் முதல் இரவில் -170 டிகிரி செல்ஷியஸ் (750F முதல் -275F) வரை மாறுபடும். இது சூரிய குடும்பத்தில் மிகச் சிறிய சுற்றுப்பாதையைக் கொண்டுள்ளது; அதன் ஒவ்வோர் ஆண்டும் 88 புவி நாட்கள் மட்டுமே உள்ளன. ”இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த மொத்த கோளின் உட்கருவைத் தவிர வேறில்லை” என்கிறார் நிக்கோலா மாரி. புதன் இருக்கும் இடமானது விஞ்ஞானிகளின் ஆய்வை மிகவும் கடினமாக்கியுள்ளது. இதற்கு வெப்பமும் ஒரு காரணம். சூரியனுக்கு மிக அருகில் சுற்றும் இந்தக் கோளை நெருங்கும் விண்கலங்கள் வெப்பத்தைத் தாங்கும் திறன் கொண்டவையாக இருக்க வேண்டும். இரண்டாவது ஈர்ப்பு விசை. சூரியனை நெருங்க நெருங்க அதன் இழுவை சக்தி வலுவடையும். இது விண்கலத்தை விரைவுபடுத்தும். மிக வேகமாகப் பயணிப்பதைத் தவிர்க்க விண்கலம் ஒரு சிக்கலான பாதையில் செல்ல வேண்டும். இது மற்ற கிரகங்களைச் சுற்றி நிறைய மாற்றுப் பாதைகளை உள்ளடக்கியதாக இருக்கும். இது அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும். ஆனால் விண்கலம் தன் வேகத்தைக் குறைத்து, கட்டுப்பாட்டை மீண்டும் பெற அதிக எரிபொருள் தேவைப்படுகிறது.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,இந்த பண்டைய ‘சால்ட் லேக்’ போன்ற சைப்ரஸின் சில பகுதிகளில் காணப்படும் தரிசு நிலப்பரப்புகள், புதன் கோளின் தோற்றம் பற்றிய தடயங்களைக் கொண்டிருக்கலாம். "சுற்றுப்பாதை கண்ணோட்டத்தில் பார்த்தால் வியாழனைவிட புதன் கோளை அடைவது கடினம்,” என்று கூறுகிறார் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் ’பெபிகொலம்போ’ என்று அழைக்கப்படும் புதன் கோளுக்கான பயணத் திட்டத்தின் விண்கல இயக்க மேலாளர் இக்னாசியோ கிளெரிகோ. மாரி சைப்ரஸில் செய்துகொண்டிருக்கும் பணி இந்தத் திட்டத்தில் பங்கு வகிக்கிறது. இந்த சிரமங்கள் காரணமாக நமது மற்ற அண்டை கோள்களைவிட புதன் குறைவாகவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இரண்டு முந்தைய பயணங்கள் - மரைனர் 10 மற்றும் மெசஞ்சர் - அதன் மேற்பரப்பை வரைபடமாக்கும் அளவுக்கு நெருக்கமாகப் பறந்தன. புதன் பள்ளங்களால் நிரம்பியுள்ளதையும், அதன் கட்டமைப்பு பற்றிய சில முக்கிய ஆச்சரியங்களையும் அது வெளிப்படுத்தியது. புதன் கோளின் மையப்பகுதி ஆச்சரியங்கள் நிறைந்தது. மற்ற பாறை அடிப்படையிலான கிரகங்கள் - வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் அனைத்தும் ஒப்பீட்டளவில் சிறிய மையப்பகுதியைக் கொண்டுள்ளன. அவை தீக்குழம்பால் செய்யப்பட்ட தடிமனான மேலோடு மற்றும் கடினமான மேற்பரப்பால் சூழப்பட்டுள்ளன. இருப்பினும் புதனின் மேலோடு வியக்கத்தக்க வகையில் மெல்லியதாகத் தோன்றுகிறது. அதே நேரம் அதன் மையமானது எதிர்பாராதவிதமாக மேற்பரப்பைவிட மிகப் பெரியதாக உள்ளது. "இது பொருத்தமில்லாதது," என்று மாரி கூறுகிறார். மேலும் புதன் ஒரு காந்தப்புலத்தால் சூழப்பட்டிருப்பதை இந்தப் பயணங்கள் வெளிப்படுத்தின. அதன் அடர்த்தியுடன் இணைந்து, இது ஒரு இரும்பு மையத்தைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. மேலும் பூமியைப் போலவே அதன் மையப் பகுதியும் ஓரளவு உருகிய தீக்குழம்புகள் அடங்கியதாகக் இருக்கக்கூடும். புதனின் மேற்பரப்பில் உள்ள ரசாயனங்களின் விகிதம் மிகவும் அசாதாரணமானது. தொலைவில் இருந்து கிரகத்தின் வேதியியல் கலவையைப் பகுப்பாய்வு செய்ய "ஸ்பெக்ட்ரோமெட்ரி" என்ற நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் விஞ்ஞானிகள், புதன் கோள் தனது அண்டை கோள்களைக் காட்டிலும் தோரியத்தின் அதிக செறிவுகளைக் கொண்டிருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். ஆரம்பக்கால சூரிய குடும்பத்தின் தீவிர வெப்பத்தில் தோரியம் ஆவியாகியிருக்க வேண்டும். அதற்குப் பதிலாக அதன் தோரியம் அளவு மூன்று கோள்கள் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்திற்கு ஒத்ததாக உள்ளது. சூரியனில் இருந்து அதன் தூரம் காரணமாக செவ்வாய் கிரகத்தில் குளிர்ந்த வெப்பநிலையில் தோரியம் உருவாகியிருக்கும்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,"ஆலிவின்ஸ்" என்று அழைக்கப்படும் பல பச்சை படிகங்களைக் கொண்ட போனினைட்டின் மாதிரி இத்தகைய முரண்பாடுகள், சூரியனில் இருந்து வெகு தொலைவில் செவ்வாய் கோளுக்கு அருகில் புதன் உருவாகியிருக்கக்கூடும் என்று சில கோள் விஞ்ஞானிகள் ஊகிக்க வழிவகுத்தது. அதன் பெரிய மையப்பகுதிக்கு ஏற்ற, பூமியின் அளவை ஒத்த நிலைத்தன்மையுடன் அது முதலில் உருவாகியிருக்க வேண்டும். அதன் வரலாற்றின் ஒரு கட்டத்தில், புதன் மற்றொரு கோளின் மேற்பரப்புடன் மோதியதாகவும், இந்த மோதல் சூரியனை நோக்கி அதை சுழலச் செய்ததாகவும் அனுமானிக்கப்படுகிறது. அத்தகைய மோதல் அதன் மேலோடு மற்றும் அதன் மேற்பரப்பின் பெரும்பகுதியைத் தகர்த்து அதைப் பறக்கச் செய்திருக்கும். அந்த நேரத்தில் ஒரு பெரிய திரவ மையம் உருவாகியிருக்கும். "இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த கிரகத்தின் உட்கருவைத் தவிர வேறொன்றுமில்லை," என்று மாரி கூறுகிறார். வேற்றுகிரக பாறைகள் இந்தக் கோட்பாட்டை சோதிப்பதற்கான சிறந்த வழி, புதனின் மேற்பரப்பில் இருந்து பாறைகளின் மாதிரிகளைப் பகுப்பாய்வு செய்வது அல்லது அதன் மேற்பரப்பில் துளையிடுவது. ஆனால் எந்த ஆய்வும் மேற்பரப்பில் தரையிறங்க முடியவில்லை. இதனால் விஞ்ஞானிகள் மற்ற தகவல்களைத் தேடுகிறார்கள். சில தடயங்கள் ஆபிரைட்டுகள் எனப்படும் விண்கற்களில் இருந்து வரலாம், அவை முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பிரான்ஸ் கம்யூன் ஆப்ரெஸின் பெயரால் அறியப்படுகிறது. இந்தப் பாறைகளின் ரசாயன கலவை புதன் கோளைப் போலவே உள்ளது. புதனை அதன் தற்போதைய நிலைக்குக் கொண்டுவந்த, கோள்களுக்கு இடையே நிகழ்ந்த மோதலின் விளைவாகச் சிதறிய பாறைத் துண்டுகளாக அவை இருக்கக்கூடும் என்றுகூட சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இது ஒரு நம்பக்கூடிய கருதுகோள்தான். ஆனால் மாரிக்கு இதில் சந்தேகம் உள்ளது. புதன் உருவான அதே சூரிய நெபுலா பகுதியில் உருவான சிறுகோள்களில் இருந்து ஆபிரைட்டுகள் வந்ததாக இதுவரை கிடைத்த சான்றுகள் தெரிவிக்கின்றன. ஆனால் அவை ஒருபோதும் கிரகத்தின் பகுதியாக இல்லை. "புவி வேதியியல் ஒப்புமைகள்" என்பதில் இருந்து ஒரு மாற்று ஆதாரம் வரலாம். அதாவது பூமியில் உருவாகும் பாறைகள் மற்ற கிரகங்களில் காணப்படும் அமைப்புகளை ஒத்திருக்கும். பூமிக்கு அருகில் புவியியல் செயல்முறைகள் பற்றிய சிறந்த அறிவை நாம் பெற்றுள்ளோம். மேலும் இந்தப் புரிதலைப் பயன்படுத்தி இதை ஒத்த தோற்றத்துடன் இருக்கும் பிற கோள்களின் உருவாக்கம் பற்றிய கோட்பாடுகளை நாம் உருவாக்கலாம்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,டெதிஸ் பெருங்கடலின் அடிப்பகுதியில் வெடித்த பழங்கால எரிமலையின் தடயங்களை சைப்ரஸில் உள்ள ஒரு வெளிப்பகுதி காட்டுகிறது. சைப்ரஸுக்கான மாரி செய்துவரும் பணியின் நோக்கம் இதுதான். அவர் தேடும் குறிப்பிட்ட கட்டமைப்பை அது கொண்டிருக்கலாம் என்று கிடைக்கப் பெறும் புவியியல் தரவுகள் கூறுகின்றன. இந்த ஆளரவமற்ற மலைகள் வழியாகத் தனது தேடலைத் தொடங்கும்போது அவர் தன்னை ஒரு "நவீன இந்தியானா ஜோன்ஸ்" போல் உணர்ந்ததாகக் குறிப்பிடுகிறார். சைப்ரஸ் என்பது 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டெதிஸ் பெருங்கடலுக்கு அடியில் உருவான பூமியின் மேலோடு. மோதிய கண்டத்தட்டுகள் (tectonic plates) இறுதியில் அதை மேற்பரப்பை நோக்கித் தள்ளியது. இன்று நாம் அறியும் தீவாக அது மாறியது. தாதுக்கள் நிறைந்த பச்சைப் பாறைகளுடன் அந்த நிலப்பரப்பு வேறு ஒரு உலகத்தின் உணர்வைக் கொண்டுள்ளது என்கிறார் மாரி. "சைப்ரஸ் மலைகளின் சில பகுதிகளில் நடக்கும்போது நீங்கள் இன்னும் ஒரு பண்டைய கடல் படுகையில் நடப்பது போல் உணர்கிறீர்கள்," என்று அவர் கூறுகிறார். இறுதியில் அவர் தான் தேடும் போனினைட்ஸ் எனப்படும் எரிமலைக் குழம்புகளின் குறிப்பிட்ட துண்டுகளைக் கண்டுபிடித்தார். மாரி வீடு திரும்பினார். நாசா மற்றும் இத்தாலியில் உள்ள கோள் அறிவியல் அருங்காட்சியகத்தில் சக ஊழியர்களுடன் பணிபுரிந்து, பாறைகளின் கலவையைப் பகுப்பாய்வு செய்து, புதனிலிருந்து எடுக்கப்பட்ட அளவீடுகளுடன் ஒப்பிட்டார். முடிவுகள் வந்தபோது அவர் ஆச்சரியப்பட்டார். "அவை ஒன்று போல் இருக்கவில்லை. ஒன்றாகவே இருந்தன." மெக்னீசியம், அலுமினியம், இரும்பு போன்ற தனிமங்களின் கலவையானது, ராட்சத மையத்துடன் இருக்கும் ஒரு மர்மமான கோளில் காணப்படுவது போலவே இருந்தது. ஒரே வித்தியாசம் என்னவென்றால், சைப்ரஸின் பாறைகள் ஆக்ஸிஜனேற்றப்பட்டன. இது பூமியின் ஆக்ஸிஜன் நிறைந்த வளிமண்டலத்தில் தவிர்க்க முடியாதது. இது புதன் கோளின் முதல் உண்மையான நிலப்பரப்பு அனலாக் என்று மாரி கூறுகிறார். கிரகத்தைப் பற்றிய நமது புரிதலுக்கு மதிப்புமிக்க கூடுதல் தரவை இது வழங்குகிறது. இந்த பாறைகள் பற்றிய கூடுதல் ஆய்வு, புதனின் கடந்த கால புவியியல் செயல்பாடு பற்றிய சில தடயங்களைக் கண்டறிய உதவும். எல்லாவற்றுக்கும் மேலாக சைப்ரஸ் போனினைட்டுகள் பூமியின் மேலோட்டத்தில் ஓர் ஆழமற்ற புள்ளியில் இருந்து வெடித்த எரிமலைக் குழம்பில் இருந்து உருவானவை என்பதை நாம் அறிவோம். புதன் கோளில் உள்ள பாறைகளுடனான அவற்றின் முழுமையான ஒற்றுமை, அங்குள்ள மேலோட்டம் வழக்கத்திற்கு மாறாக மேற்பரப்புக்கு அருகில் உள்ளது என்பதைக் காட்டுகிறது. இது கிரகத்தின் அசல் மைய மேலோடு வெடித்ததால் ஏற்பட்ட தோற்றத்துடன் ஒத்துப் போகிறது.   எதிர்கால பயணங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES மாரியின் கண்டுபிடிப்புகள் மிகப் பெரிய புதிரின் ஒரு பகுதி. மேலும் பல நுண்ணறிவுகள் பெபிகொலம்போ பணியிலிருந்து வரக்கூடும். இது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் மற்றும் ஜப்பானுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஆகும். இது அக்டோபர் 2018இல் தொடங்கப்பட்டது. இதற்கு கணிதவியலாளரும் பொறியியலாளருமான கியூசெப்பே (பெபி) கொலம்போவின் பெயர் சூட்டப்பட்டது. மரைன் 10 விண்கலத்தின் சிக்கலான பாதையைத் திட்டமிட அவர் உதவினார். விண்கலத்தின் சுற்றி வளைந்து செல்லும் பாதையின் ஒரு பகுதியாக புதனுக்கு அருகில் இருந்து மூன்று முறை செல்லும் பாதைகளை பெபி கொலம்போ உருவாக்கியுள்ளார். விண்கலத்தின் வேகத்தைக் குறைப்பதே இதன் நோக்கம். விண்கலம் 2025இல் கிரகத்திற்கு அதன் இறுதி அணுகலைச் செய்யும். அங்கு அது இரண்டு சுற்றுக் கலங்களாக பிரியும். ஒன்று காந்தப்புலத்தை அளவிடும். மற்றொன்று மேற்பரப்பு மற்றும் உட்புற அமைப்பை ஆய்வு செய்யும். புவி வேதியியல் ஒப்புமைகள் குறித்த மாரியின் ஆராய்ச்சி இங்கே பொருத்தமானதாக இருக்கலாம். ஏனெனில் அவை இந்த அளவீடுகளில் சிலவற்றுக்கான வரையறைகளாகப் பயன்படுத்தப்படலாம் என்று அவர் கூறுகிறார். "புதன் போன்ற ஒப்புமைகளின் ஆய்வக அளவீடுகள் எங்கள் அகச்சிவப்பு (வெப்ப அகச்சிவப்பு) ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மற்றும் சில வகையான எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மூலம் பெறப்பட்ட அளவீடுகளின் முடிவுகளைச் சிறப்பாக விளக்க உதவுகிறது," என்று பெபிகொலம்போவின் திட்ட விஞ்ஞானி ஜோஹன்னஸ் பென்காஃப் விளக்குகிறார். அதன் பிறகான ஆண்டில் இந்தக் கலங்கள் புதனின் கனிம கலவை, அதன் நிலப்பரப்பு மற்றும் அதன் உட்புற அமைப்பு ஆகியவற்றின் துல்லியமான அளவீடுகளைச் செய்யும். முந்தைய பயணங்களின் தரவுகளுடன் இந்தத் தரவை ஒப்பிடுவதன் மூலம், கிரகம் இன்னும் புவியியல் ரீதியாக "உயிருடன்" உள்ளதா என்பதை விஞ்ஞானிகள் தீர்மானிக்க முடியும். புதனின் உள்ளே இருந்து பொருள் ஆவியாவதால் உருவானதாகத் தோன்றும் ’வெற்று இடைவெளிகள்’ மேற்பரப்பில் உள்ளன. ஆனால் இந்தச் செயல்முறை இன்னும் நடக்கிறதா என்பது தெளிவாக இல்லை. இந்த அளவீடுகள் இறுதியாக புதனின் மர்மமான தோற்றத்தின் வேர்வரை செல்ல அனுமதிக்கலாம். மேலும் அதை நீட்டிப்பதன் மூலம் பிரபஞ்சத்தில் நமது இடம் பற்றியும் அதிகம் சொல்ல முடியும். "புதன் ஏன் மிகவும் அடர்த்தியாக உள்ளது, அதன் மையப்பகுதி ஏன் மிகவும் பெரிதாக உள்ளது என்ற கேள்விகள் நமது சூரிய மண்டலத்தின் உருவாக்கம் மற்றும் வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் முக்கியமானது" என்று பென்காஃப் கூறினார். ”விண்கலத்தில் மிகவும் பரந்த அளவிலான உபகரணங்கள் மற்றும் கருவிகள் உள்ளன. அவை உண்மையில் நமது அறிவியல் அறிவை மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்." சூரியனுக்கு அருகில் இருக்கும் முதல் கிரகத்தை நாம் பார்க்கும் விதம் ஏற்கெனவே நிறைய மாறிவிட்டது. "பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, புதன் ஒரு ஆர்வத்தைத் தூண்டாத கிரகமாகக் கருதப்பட்டது," என்கிறார் பென்காஃப். "ஆனால் நான் இன்னும் பல ஆச்சரியங்களை எதிர்பார்க்கிறேன்,"என்று அவர் குறிப்பிட்டார். மாரிக்கு புதன் கோள் ஆரம்பம் மட்டுமே. "வட அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவான லான்சரோட்டில் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ளது போன்ற எரிமலைக்குழம்பு கிடைத்தது. மேலும் வெள்ளி கோளின் தடயங்களைக் கண்டறிய, சிசிலி, ஹவாய், இந்தோனீசியா மற்றும் ரஷ்யாவில் உள்ள கம்சட்காவை ஆய்வு செய்து வருகிறோம்," என்றார் அவர். பெபி கொலம்போவின் முழு அறிவியல் செயல்பாடுகள் 2026இல் தொடங்க இருக்கும் நிலையில் பூமியில் உள்ள இந்தப் பாறைகள் சூரியக் குடும்பத்தில் உள்ள நமது மற்ற அண்டை கோள்களைப் பற்றி எவ்வளவு சொல்ல முடியும் என்பதை விரைவில் நாம் தெரிந்துகொள்ள முடியும். https://www.bbc.com/tamil/articles/c89z8v501p9o
    • அப்படியெல்லாம் லேசில விடமுடியாது பையா ....... எப்படியும் உங்களுக்கு சந்தர்ப்பம் தராத பெரியப்பாவுக்கு கொஞ்சம் மேல நின்றால்தான் மனம் ஆறும்.......!  😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.