Jump to content

வணக்கம் எனதருமைத் தமிழுறவுகளே! உங்களுக்கு என்னை அறிமுகம் செய்து கொள்கின்றேன்.


Recommended Posts

வணக்கம் எனதருமைத் தமிழுறவுகளே! உங்களுக்கு என்னை அறிமுகம் செய்து கொள்கின்றேன்.

உலகெல்லாம் பரந்து வாழும் தமிழர்கள் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்ற உணர்வில் உறவுகளைத் தேடும் தமிழன் நான். தமிழீழம், தமிழ்நாடு என்ற இரு தமிழ்த் தேசங்களும் அடிமைத் தளை உடைத்து இழந்த இறைமை மீட்டு ஒப்புரவுத் தேச அரசுகள் அமைத்திட என்னாலான அத்தனையையும் செய்வேஎன் என்று உறுதியெடுத்து வாழ்பவன். ஏழை, எளிய, நலிவுற்ற, விளிம்பு நிலையிலுள்ள எனது தமிழுறவுகளின் வாழ்வு மலர ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஏங்கித் தெரியும் வியத்தகு திறமைகள் ஏதுமற்ற்ற ஆனால் நெஞ்சுரமிக்க தமிழன். தமிழீழத்தின் எல்லாப் பகுதிகளிலும் சுற்றித் திரிந்தமையால் பெற்ற அனுபவத்தின் அடிaப்படையில் என்னினத்தினுள் உள்ள கடைந்தெடுத்த கேவலங்களான பிரதேசவாதம் (முதன்மையாக யாழ்மையவாதம்), சாதியம் போன்றவற்றை அடியொட்ட அழிக்க வேண்டும் என்று பெருவாஞ்சை கொண்டவன்.
அறிவுமையச் சமூகமாக என்னினம் திகழ என்னாலான பணிகளை மேற்கொள்ள வழி வகை செய்யக் கூடிய வாய்ப்புகளைப் பயன்படுத்த விரும்பும் விருப்பின் பாற்பட்டு யாழ் இணையத்தில் உங்களுடன் இணைகின்றேன். விரைவில் அரசியற் பதிவுகளுடன் உங்களுடன் உரையாடுவதற்குள்ளேன். ஏலவே பல ஆண்டுகளுக்கு முன்னர் உங்களுடன் இணைந்திருந்தவன் தான் நான். நெடிய இடைவெளியின் பின்னர் தம்பியனாக உங்களிடமே மீண்டும் வந்துள்ளேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தம்பியன் 

யாழ் இணையத்தில் உள்ள ஓட்டையை பயன்படுத்தி அரிச்சுவடியில் தவளாமலேயே மற்றைய திரிகளில் புகுந்து விளையாடியுள்ளீர்கள்.பலே கில்லாடி.

மிகுந்த அனுபவசாலி போல இருக்கிறீர்கள்.ஏதாவது இணையம் புதிதாக ஆரம்பிக்கிறீர்களோ என்றும் எண்ணத் தோன்றுகின்றது.

Link to comment
Share on other sites

முன்னர் பலருடன் முட்டி மோதிய அனுபவங்களுண்டு. மண் மணம் மாறாமல் இருக்கும் பல அறிவார்ந்த தொடர்புகளை யாழிணையம் மூலம் பெற்றுப் பயனடைந்தவர்களில் ஒருவன். எனது பெயரை அழைக்கையில் உறவு (தம்பி) தானாக வந்துவிடுகின்றது. தம்பி என்ற சொல்லுக்கேற்ப துடிதாட்டமும் முரட்டுக்குணமும் கூடவே இருக்கும்......இணைந்திருங்கள் ஈழத்தைப் பிரியேன் என்று இருக்கும் ஈழப்பிரியன் அவர்களே.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für well come gif

வணக்கம் தம்பியன். உங்களிடம்... நல்ல எழுத்தாற்றல் உள்ளது என்பதை... நீங்கள்  எழுதிய சில பதிவுகளிலேயே தெரிகின்றது.
வாருங்கள்.... உங்களை அன்புடன் வரவேற்கின்றோம். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ வாங்கோ..!

துடியாட்டமும், முரட்டுத்தனமும் கூடவே இருக்கும் தங்களை வரவேற்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பியா வாடாப்பா நலமா?

தேவையான விடயத்தோடு மீள் நுழைவு என்று தெரிகிறது. வரவேற்கிறேன். யாழ்மையவாதம் , சாதியம் என்பன நமக்குள் பெரும் சாபங்களாக மாறிவிட்டன. தற்சமயம் நம்மை நம் பிள்ளைகள் காறி உமிழ ஆரம்பிக்கும் காலகட்டத்தில் பயணிக்கிறோம். இந்த மையவாதமும் சாதியமும் இருக்கும் வரை தமிழினம் மீள ஒரு பலமிக்க இனமாக திகழ வாய்ப்பில்லை. வாய்க்கு வாய் விடுதலைப்புலிகளின் பெருமைகளை தம்பட்டம் அடிக்கும் எந்த தமிழரும் அவர்களின் கோட்பாடுகளை கடைப்பிடிக்க விடாதவாறு இந்த யாழ்மையவாதமும் சாதிய சிந்தனையும் அவர்கள் மனதில் வைரமாக இருக்கின்றன. முயற்சிப்போம் கருத்து வெளியில் இணைந்து பயணிப்போம்.

Link to comment
Share on other sites

9 hours ago, கறுப்பி said:

வணக்கம் வாங்கோ வாங்கோ..!

துடியாட்டமும், முரட்டுத்தனமும் கூடவே இருக்கும் தங்களை வரவேற்கிறோம்.

என்னை விட முரடனோ...

நான் சும்மா கொசுவே அடிக்க கையை தூக்கினால்,

சிங்கம் பின்னங் கால்கள் பொடனியில அடிக்க ஓடும்...

யானை எறும்பு புத்துக் குள்ள போய் உக்காந்துட்டு எறும்பு மாதிரி எறும்போடு எறும்பாக வரிசையில போகும்...

இத மாதிரி தம்பியானால செய்ய வைக்க முடியுமா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ .....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் !வாங்கோ !! வாழ்த்துக்கள் !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்க்கம் வருக செல்லம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கோ தம்பியா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.