Jump to content

மையமா ? மய்யமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மய்யம் என்றால் என்ன? மையம் என்றால் எங்களுக்கு என்ன? தமிழல்லாத சொற்களுக்காக ஏன் இந்த சொற்போர்?.. நடுவம் என்பது தான் தமிழ் .. எழுத்துச் சீர்திருத்தம் என்ற போர்வையில் பெரியார் செய்த வேலையே ஐ உருபுச் சொற்களை அய் ஆக்கும் முறைமை. ஆனாலும் முதலில் தமிழ்ச் சொல்லில் கலந்திருக்கும் சமசுக்கிருதத்தை அறிந்து கொள்வது நல்லது என நினைக்கிறேன்.  தமிழர் தாயகப் பகுதிகளில் வன்னியிலும் யாழ்ப்பாணத்திலுமே இந்து மதத்தின் தாக்கத்தினால் மொழிக்கலப்பு மிக அதிகமாகவிருக்கிறது. தொன்மையான வழிபாட்டு முறைகளைப் பேணும் தென் தமிழீழத்தில் மொழிக்கலப்பு ஒப்பீட்டளவில் குறைவாகவே நிகழ்ந்திருக்கிறது.  தமிழகத்தில் ஆங்கிலம் கலந்த வழக்கு இருப்பதால் ஆங்கிலம் கலக்காத யாழ்ப்பாணத் தமிழ், அதற்கென ஒரு உயர்வைப் பெற்றுக்கொண்டது.ஆனால் அதனுள்ளே புரையோடிப்போயிருக்கும் சமசுக்கிருதத்தை கண்டுகொள்ளத் தவறிவிட்டோம். இந்துமதத்தின் காவலர்களாகத் தம்மைக் காட்டிக்கொள்ளும் யாழ்ப்பாணிகள் தமது மொழியில் கலந்துள்ள சமசுக்கிருதத்தைக் களையெடுக்க முன்வரவேண்டும். தொலைக்கப்பட்ட எமது தேசிய வெளியின் மீட்டெடுப்பின் துவக்கமாக அந்தக் களையெடுப்பு அமைய வேண்டும். பண்பாடும் மரபும் மதத்தினால் கட்டியமைக்கப்படல் கூடாது. அது தேசியக் கொள்கையினைச் சிதைக்கக்கூடியது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மையம் ---- நடுசென்ரர். (சென்ரரா , நடுவா என்று கேட்கப்படாது).

மய்யம் ---- பிணம். (ஆஸ்பத்திரிகளில் இந்தச்சொல்லை பாவிப்பினம்). அமரர் ஊர்தி காரர்களும் மய்யத்தை வானில் ஏத்து என்றுதான் விளிப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மையம் ---- நடுசென்ரர். (சென்ரரா , நடுவா என்று கேட்கப்படாது).

மய்யம் ---- பிணம். (ஆஸ்பத்திரிகளில் இந்தச்சொல்லை பாவிப்பினம்). அமரர் ஊர்தி காரர்களும் மய்யத்தை வானில் ஏத்து என்றுதான் விளிப்பார்கள்.///

 

பிறமொழிக்கலப்புகள் களையப்பட வேண்டியவை.. மையத்தின் வேர்ச்சொல் என்ன?.. நடுச்செ ன்ரர் என்பதை குவியம் எனலாமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 வானிலை  அறிக்கை  .. புயல்  வீசுவதற்கான  அறிகுறிகள்  . மேற்கு க்கரையோரங்களில்  கருமேகங்கள் மையங்கொண்டுள்ளது

 

 நிலை கொண்டுள்ளது ..நிலையம் என  கருதி  கொள்ளலாமா ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/02/2018 at 5:09 PM, suvy said:

மையம் ---- நடுசென்ரர். (சென்ரரா , நடுவா என்று கேட்கப்படாது).

மய்யம் ---- பிணம். (ஆஸ்பத்திரிகளில் இந்தச்சொல்லை பாவிப்பினம்). அமரர் ஊர்தி காரர்களும் மய்யத்தை வானில் ஏத்து என்றுதான் விளிப்பார்கள்.

மையத்து - மய்யத்து: பிரேதம்

முஸ்லிம்கள் பொதுவாகப் பாவிப்பார்கள்.

மய்யம் சரி என்றால் அய்யம், அய்யா எல்லாம் சரிதானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, கிருபன் said:

மையத்து - மய்யத்து: பிரேதம்

முஸ்லிம்கள் பொதுவாகப் பாவிப்பார்கள்.

மய்யம் சரி என்றால் அய்யம், அய்யா எல்லாம் சரிதானே?

நீங்கள் கூறுவது போல பயன்பாட்டு வழக்கில் வேறுபட்ட பொருள்களில் இருந்தாலும்.... இலக்கண விதிப்படி ( தொல்காப்பியம் : ஐகாரக் குறுக்கம்)  மையம் மய்யம் இரண்டுமே ஒரே பொருளைத் தான் தரும். ஆனால் மையம் என்பது தமிழ் சொல் அல்ல என்கிற போது அங்கே தொல்காப்பிய விதி எவ்வாறு வரும்? முதலில் தமிற்சொற்கள் எவை ? தமிழல்லாத சொற்கள் எவையெனப் பிரித்தறியும் திறன் தமிழர்களுக்கு வரவேண்டும். மையம் என்பது தமிழ் எனின் அதன் வேர்ச்சொல்எது? மையம் என்பதற்கு நடுவம் என்பதே தமிழ். 

அகரத் திம்பர் யகரப் புள்ளியும்

ஐயெ னெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும். ( தொல்காப்பியம் ,எழுத்ததிகாரம் , 56) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நவீனன் said:

மையம், மய்யம் : எது சரி? - மதன் கார்க்கி விளக்கம்

தமிழ்நாட்டில் தமிழ்ப்பேராசியர்களுக்கு பற்றாக்குறையா? சரிபிழை விசாரிக்க போயும் போயும் இவரா கிடைத்தார்? :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, செல்வி said:

நீங்கள் கூறுவது போல பயன்பாட்டு வழக்கில் வேறுபட்ட பொருள்களில் இருந்தாலும்.... இலக்கண விதிப்படி ( தொல்காப்பியம் : ஐகாரக் குறுக்கம்)  ழையம் மய்யம் இரண்டுமே ஒரே பொருளைத் தான் தரும். ஆனால் மையம் என்பது தமிழ் சொல் அல்ல என்கிற போது அங்கே தொல்காப்பிய விதி எவ்வாறு வரும்? முதலில் தமிற்சொற்கள் எவை ? தமிழல்லாத சொற்கள் எவையெனப் பிரித்தறியும் திறன் தமிழர்களுக்கு வரவேண்டும். மையம் என்பது தமிழ் எனின் அதன் வேர்ச்சொல்எது? மையம் என்பதற்கு நடுவம் என்பதே தமிழ். 

அகரத் திம்பர் யகரப் புள்ளியும்

ஐயெ னெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும். ( தொல்காப்பியம் ,எழுத்ததிகாரம் , 56) 

மொழி செழுமையாக இருக்கவேண்டுமென்றால் இரவல் வாங்கத்தானே வேண்டும். 

தனித்தமிழ் இயக்கம் எல்லாம் தமிழை வளர்ப்பதை விட தனிமைப்படுத்துவதில்தான் போய்முடியும்.

மையம், நடுவம் என்பன ஒரு நிறுவன centre ஐக் குறிப்பிடலாம். ஆனால் வட்டத்தின் மையத்தை நடுவம் என்று குறிப்பிடலாமா?

வெதும்பி சாப்பிட்டு குழம்பி குடித்த கதை பலருக்கு விளங்காது. எனவே தமிழ் வெறியர்களாக இருக்காமல் தமிழை நேசிக்கக் கற்றுக்கொள்வோம்.

Link to comment
Share on other sites

40 minutes ago, கிருபன் said:

மொழி செழுமையாக இருக்கவேண்டுமென்றால் இரவல் வாங்கத்தானே வேண்டும். 

தனித்தமிழ் இயக்கம் எல்லாம் தமிழை வளர்ப்பதை விட தனிமைப்படுத்துவதில்தான் போய்முடியும்.

மையம், நடுவம் என்பன ஒரு நிறுவன centre ஐக் குறிப்பிடலாம். ஆனால் வட்டத்தின் மையத்தை நடுவம் என்று குறிப்பிடலாமா?

வெதும்பி சாப்பிட்டு குழம்பி குடித்த கதை பலருக்கு விளங்காது. எனவே தமிழ் வெறியர்களாக இருக்காமல் தமிழை நேசிக்கக் கற்றுக்கொள்வோம்.

 

ஒரு பிரதேசத்தின் நடுவப்பகுதி (புள்ளி) மையம் எனலாம்.  மாநில அரசு மைய அரசு என்ற வழக்கு உண்டு. ஒரு கதையின் மையக் கருத்து. கடலில் குறிப்பிட்ட இடத்தில் புயல் மையம் கொள்ளுதல். 

மையல் - காதல் வயப்பட்ட நிலை. பிரதான உணர்வு காதல் மயக்கத்தில் இருப்பது சார்ந்தது. 

மய்யம் இறந்தவர் உடலைக் குறிக்கும். மயானம் உடலை எரிக்கும் அல்லது புதைக்கும் இடத்தைக் குறிக்கும். 

மைதானம் என்பது சுடுகாட்டைக் குறிப்பதாக இருக்கலாம் காலப்போக்கில் மருவி விழையாட்டு அரங்கை குறிப்பதாக அமைந்திருக்கலாம். 

------------------

ஒரு மொழி வளர வேண்டுமாயின் சொற்களின் பெருக்கம் அவசியம். ஆங்கிலம் பல மொழிகளில் இருந்தும் சொற்களை எடுத்துக்கொண்டது. அதுபோல் தமிழ்மொழியில் சொற்களை நீக்குவதற்குப் பதிலாக சொற்களை தமிழாக்குதல் தான் ஆரோக்கியமானது. 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.