Jump to content

கள்ளுக் கொட்டில் பக்கம் போகாதே


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கள்ளுக் கொட்டில் பக்கம் போகாதே

 

இது ஒரு கறுப்பு வெள்ளைக் கதை. பல வருடங்களுக்கு முந்தியது. நான், பாடசாலை முடிந்து வந்து மாலையில் கிளித்தட்டோ, கிரிக்கெற்றோ விளையாடிய காலம்.

‘டவடிவில் அமைந்த ஒரு காணிதான் எங்கள் விளையாட்டுத் திடல். காணியின் ஒரு பக்கம் மரங்கள் எதுவுமின்றி வெளியாக இருக்கும். மற்றைய பக்கத்தில்  பனைமரங்கள் நிறைய இருக்கும். அது பீற்றர் குடும்பத்துக்கு சொந்தமானது.

கிரிக்கெற் விளையாடும் போது பந்து பீற்றர் குடும்பத்துக் காணிக்குள் போய் விழுந்து விட்டால் பந்தை யார் போய் எடுப்பது என்பதில் எங்களுக்குள் சண்டையே வரும். பீற்றர் வீட்டில் கழிப்பிட வசதி கிடையாது. அந்த பனைக்கூடல்தான் அவர்கள் `குடும்பத்துக்கான திறந்தவெளிச்சுழல் கக்கூஸ்’. (கொஞ்சம் அதிகமாக இருந்து விட்டால் இருக்கும்  இடத்தில் இருந்து சுழன்று சற்று அரக்கி தள்ளிப்போய் இருப்பதால் அதற்குசுழல் கக்கூஸ்என்ற செல்லப் பெயர்) பீற்றர் குடும்பத்தின் சுழல் கக்கூஸோடு ஒட்டி இருந்ததுதான் அன்ரன் வீடு. இந்தப் பத்தியின் நாயகன் அவன்தான்.

அன்ரன் என்னைவிட இரண்டு வயது கூடியவன். ‘ஊருக்கு வீரன் உள்ளத்தில் கோழைஎன்பது அவனுக்குப் பொருத்தமானது. தேவாலயத்துக்குப் பக்கத்தில் சேமக்காலை இருப்பதால் அந்தப் பக்கம் பாராமலேயே தேவாலயத்துக்குள் ஓடிவிடுவான். சேமக்காலையில் உள்ள பேய்கள் தன்னை பிடித்துவிடும் என்ற பயத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில்  என்ன காரணம் சொல்லி தேவாலயத்துக்குப் போகாமல் இருக்கலாம் என்று யோசிப்பவன். அவனது தந்தை பெனடிக் மெகா குடிகாரன். வேலை முடிந்து வரும்போதோ அல்லது அந்தப் பக்கமாகப் போகும் போதோ கள்ளுக் கொட்டில் ஓரம் அவர் ஒதுங்காமல் இருந்தது கிடையாது. எப்போதும் அவர் பானை வயிறுடையோன்தான்.

கள்ளுத் தவறணைகள் வருவதற்கு சற்று முன்னரான காலம். ஆங்காங்கே கள்ளுக் கொட்டில்கள் இருந்தன. கள்ளுக் கொட்டில்களுக்குப் போனால், தங்கள் தரம் குறைந்து விடுமென்று கள்ளை வீட்டுக்கு வரவழைத்து மேட்டுக்குடிகள் குடிப்பார்கள். சாதாரண மெகா குடிகளுக்கு கொட்டில்தான் சுவர்க்கபுரி. கிடுகுகளால் வேயப்பட்ட அந்த சொரக்கபுரியில் நாலு பக்கமும் இருந்து குடிக்க வசதிகள் இருக்கும். நாலு பக்கத்தில் எந்தப் பக்கத்தில் இருந்தாலும் யார் யார் வருகிறார்கள் போகிறார்கள் என்பதை அவதானிப்பதற்கு கிடுகுகளில் சின்ன சின்ன யன்னல்கள் இருக்கும். மணலை குவித்து அதில் மெலிதான பள்ளம் ஏற்படுத்தி  அதற்கு மேலே பிளா நிறைந்த கள்ளை வைத்து இன்ரெநெற் இல்லாமலே ஊர்ப்புதினங்களை நாள் முழுதும் மெண்டு கொண்டிருக்கலாம். போதாததற்கு, பொன்னையா அண்ணனின் மெதுவடை, பருத்தித்துறை வடை, மரவள்ளிக்கிழங்குப் பொரியல், பொரித்த றால், வதக்கிய கும்பிளா மீன் எல்லாம் நாங்கள் உனக்குத் துணைக்கு நிற்கிறோம்  நீ எவ்வளவு  கள்ளையும் உள்ளே தள்ளு என்று  உற்சாகம் தரும்.

 

சொல்லுறதைக் கேள் கிட்டவா

“அன்ரன், கிட்ட போகாதையடா மனுசன் கொண்டு போடும்

“பப்பா இனி  செய்யமாட்டன்” 

“வாடா கிட்ட

“அன்ரன் ஓடுடா. எங்கையாவது போய் துலை. ஓடு

அன்று மாலை விளையாடிக்கொண்டிருந்த பொழுது அன்ரன் வீடு அமர்களமாக இருந்தது.

எங்கள் வீட்டில் என்ன குழறுபடிகள் இருந்தாலும் அடுத்தவன் வீட்டில் நடக்கும் பிரச்சனை என்றால்  மழை மேகம் கண்ட மயில்கள்தானே நாங்கள். விளையாட்டை விட்டு விட்டு பூராயம் பாரக்கப் போனோம். நாங்கள் போன போது எல்லாம் முடிந்து விட்டது. அன்ரன் தெருவில் ஓடிக்கொண்டிருந்தான். அவனை துரத்திப் பிடிக்க முடியாதளவுக்கு வயதும், வயிற்றில் இருந்த கள்ளும் பெனடிக்கைத் தடுத்து விட்டன.

“எங்கை போகப் போறாய்? வீட்டுக்கு வருவாய்தானே அப்ப பாக்கிறன்பெனடிக் சத்தமா  சொன்னபடி வீட்டுக்குள்ளே போனார்.

நடந்தது என்னவென்று அறிய முடியாமல் எங்களுக்கு அன்றைய விளையாட்டுபோர்தான்.

ஆனாலும் அன்று இரவு ஊரெல்லாம்  ஒரே பரபரப்பாக இருந்தது. அன்ரனை ஊரே சேரந்து தேடியது

என்ன இருந்தாலும் பெனடிக் இப்பிடி அடிச்சிருக்கக் கூடாதுசில பெண்கள் இப்படிச் சொல்லியே அன்ரனின் தாயின் சோகத்தைக் கூட்டிசரி சரி அழாதை. சூசையப்பர் கைவிட மாட்டார்என்று சமாதானமும் செய்தார்கள். அன்றைய இரவு அன்ரனின் கள்ளுக் கொட்டில் கதையோடு கழிந்தது.

 

 டுத்தநாள் காலையில் குருவானவர் அன்ரனின் கையை பிடித்து கூட்டிக்கொண்டு அவனது வீட்டுக்கு வந்தார். குருவானவர் பெனடிக்கோடு கதைத்து அவரை சமாதானம் செய்து விட்டுப் போனார்

நட்பு ரீதியாக நலன் விசாரிக்கலாம் என்ற சாட்டில் என்னதான் பிரச்சனை என்பதை அறிய நானும் இன்னும் இரண்டு நண்பர்களும் அன்ரன் வீட்டுக்குப் போனோம்.

நாங்கள் அன்ரன் வீட்டுக்குப் போனபோது, “பகலிலேயே சேமக்காலை பக்கம் போகாத என்ரை பெடியன் ராத்திரி முழுக்க அப்பனுக்குப்  பயந்து அத்துக்குள்ளையே படுத்திருந்திருக்கிறான். சொல்லிக் குடுத்து பிள்ளை வளக்கத் தெரியாது. எதுக்கெடுத்தாலும் அடியும் உதையும்தான்அன்ரனின் தாய் அழுது புலம்பிக் கொண்டிருந்தாள்.

நாங்கள் தொடர்ந்து பல தடவைகள் கேட்டதால் அன்ரன் நடந்த விடயத்தைச் சொன்னான்.

கள்ளுக் கொட்டிலில்  குடித்து விட்டு வரும் போது வீட்டில் வைத்து குடிப்பதற்கென்று ஒரு போத்தல் கள்ளு வாங்கி வருவது பெனடிக்கின் வழக்கம். அன்ரன் களவாக அதில் கொஞ்சமாக ருசி பார்க்கத் தொடங்கினான். வீட்டில் மா இடிபதற்கு அன்ரனின் தாய் வெள்ளைப் பச்சரிசி ஊறப் போட்டால் அவனுக்கு சந்தோசம். அரிசி ஊறிய தண்ணீரை எடுத்து வைத்துக் கொளவான். பெனடிக் கொண்டு வரும் கள்ளில் பாதிக்கு மேல் குடித்து விட்டு எடுத்து வைத்திருந்த அரிசித் தண்ணியை கள்ளோடு கலந்து வைத்துவிடுவான். இந்த களவுக்குடி அன்ரனுக்கு பெரிய மகிழ்ச்சியை கொடுக்கவில்லை. என்றாவது ஒருநாள் கள்ளுக்கொட்டிலுக்குப் போய் ஆறுதலாக இருந்து அனுபவித்து பிளாவில் கள்ளு குடிக்க வேண்டுமென ஆசை அவனுள் வளரத்தொடங்கியது

அதைத்தான் முதல் நாள் அன்ரன் செய்திருக்கிறான். கள்ளுக் கொட்டிலுக்குப் போய் பிளாவில் கள்ளு வாங்கி, மண் குவித்து அதில் குழியிட்டு, பிளாவை வைத்து ஆற அமர இரசித்து இரசித்து கள்ளு குடிக்கும்வரை எந்தவித பிரச்சினையும் அன்ரனுக்கு இருக்கவில்லை. பிளாவை உதறி கம்பில் மாட்டும் போதுதான் பிரச்சினையின் அரிச்சுவடி தொடங்கியது.

“காசு எவ்வளவு?” அன்ரன் கேட்ட போது பதில் கள்ளுக் கொட்டிலுக்குப் பின்னால் இருந்து வந்தது.

‘அன்ரன், அதொண்டும் நீ குடுக்க வேண்டாம். நான் குடுக்கிறன்

வயித்துக்குள் போன கள்ளு இன்னும் போதையை ஏற்றவில்லை. அதுக்குள் உடலில் இருந்த சக்தி எல்லாம் தரையில் இறங்கியது போன்று அன்ரன் உணர்ந்தான்.

“கோவிந்தன், அவனிட்ட வேண்டாதை. அவன்ரை காசையும் நான் தாரன்சொல்லிக் கொண்டே கொட்டிலின் பின்னால் இருந்து வந்த பெனடிக்கின் முகத்தைப் பார்க்காமல் அன்ரன் தலை குனிந்து நின்றான்.

“மீன் வேண்டினனான். நான் வரக் கொஞ்ச நேரம் பிடிக்கும். மீன் பழுதாப் போடும். நீ கொண்டுபோய் கொம்மாட்டை குடுபெனடிக் தந்த மீன் பையை அன்ரன் வாங்கிக்கொண்டு புறப்படப் போகும் பொழுது பெனடிக் சொன்னான், “சைக்கிளிலேயே வந்தனீ? பாத்து கவனமாக ஓட்டு

சைக்கிள் ஓட்டும் போது காற்று முகத்தில் பட உள்ளிழுத்த கள்ளு மெதுவாக தன் வேலையைத் தொடங்க, இதுதான் போதையா என்ற உணர்வோடு, கள்ளடித்ததற்கு அவனது தந்தை தந்த அங்கீகாரமும் சேரந்து கொள்ள வேறொரு உலகத்தில் அன்ரன் இருந்தான்.

வீட்டுப் படலையைத் திறந்து கொண்டு பெனடிக் வந்து முதல் உதை விட்ட போதுதான் அன்ரனுக்கு தந்தை தனக்குத் தந்த அங்கீகாரத்தின் மதிப்பு புரிந்தது

 

ன்ரனை பார்க்க பரிதாபமாக இருந்தது.

ராத்திரி முழுக்க சேமக்காலைக்குள்ளையே இருந்திருக்கிறாய். பயமா இருக்கேல்லையே?”

“அப்பன் கையிலை நேற்று மாட்டி இருந்தால் இண்டைக்கு சேமக்காலைக்குள்ளை புதைச்சிருப்பாங்கள். குருவானவர் கூட்டிக்கொண்டு வந்ததாலை உங்களோடை கதைச்சுக்கொண்டிருக்கிறன்

 

இவ்வளவு நேரமும் கறுப்பு வெள்ளையில் கதை சொன்னேன். கொஞ்சம் கலருக்கு மாத்திப்பார்க்கிறேன்.

 

இப்பொழுது அன்ரன் தனது மனைவியோடு மன்னாரில் இருப்பதாகவும்,அவனது ஒரே மகனான ஜூற் வீரமரணம் அடைந்து விட்டதாகவும் அறிந்தேன். மற்றும்படி அன்ரன் இப்பொழுது கள்ளு குடிக்கிறானா, அவனுக்கும் தகப்பனை போல பானை வயிறா போன்ற விபரங்கள் எனக்கு கிடைக்கவில்லை.

கவி அருணாசலம்

22.02.2018

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அநேகமாய் எல்லா அப்பாக்களும் தங்கள் தப்பு செய்துகொண்டே பிள்ளைகள் ஒழுங்காய் இருக்க வேண்டும் என்னும் கனவுலகில் சஞ்சரிக்கின்றனர்....! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Kavi arunasalam said:

கிரிக்கெற் விளையாடும் போது பந்து பீற்றர் குடும்பத்துக் காணிக்குள் போய் விழுந்து விட்டால் பந்தை யார் போய் எடுப்பது என்பதில் எங்களுக்குள் சண்டையே வரும். பீற்றர் வீட்டில் கழிப்பிட வசதி கிடையாது. அந்த பனைக்கூடல்தான் அவர்கள் `குடும்பத்துக்கான திறந்தவெளிச்சுழல் கக்கூஸ்’. (கொஞ்சம் அதிகமாக இருந்து விட்டால் இருக்கும்  இடத்தில் இருந்து சுழன்று சற்று அரக்கி தள்ளிப்போய் இருப்பதால் அதற்குசுழல் கக்கூஸ்என்ற செல்லப் பெயர்) பீற்றர் குடும்பத்தின் சுழல் கக்கூஸோடு ஒட்டி இருந்ததுதான் அன்ரன் வீடு. இந்தப் பத்தியின் நாயகன் அவன்தான்.

எமது பாடசாலையிலும் இப்படியான பிரச்சனை இருந்தது.பந்து போனால் எடுக்கவேவிடமாட்டார்கள்.

 

15 hours ago, Kavi arunasalam said:

மீன் பழுதாப் போடும். நீ கொண்டுபோய் கொம்மாட்டை குடுபெனடிக் தந்த மீன் பையை அன்ரன் வாங்கிக்கொண்டு புறப்படப் போகும் பொழுது பெனடிக் சொன்னான்,

கிராமப்புறங்களில் தகப்பனார் குடித்துவிட்டு மகனுக்கும் மகன் குடித்துவிட்டு தகப்பனுக்கும் வாங்கிக் கொடுக்கும் பழக்கம் பலரிடமும் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 பிஞ்சில பழுத்தால் அப்பா விடுவாரா என்ன? அந்தந்த வயதில செய்யவேண்டியதைச் செய்தால் பிரச்சினை  வராதுதானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவியின் கதை ....அழகு!

நாங்கள் கிறிக்கெற் விளயாடுற காலம்..பந்து போனால் நாங்கள் போய் எடுக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. தானாகவே திரும்பி வரும். சரி பாதியாக!

ஈழப்பிரியன் நான் சொல்லுறது.. யோசப்பு மாஸ்ரரின்ர.. மரக்காலை வகுப்புக்குப் பக்கதில...!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பீற்றர் வீட்டில் கழிப்பிட வசதி கிடையாதுஅந்த பனைக்கூடல்தான் அவர்கள் `குடும்பத்துக்கான திறந்தவெளிச் ‘சுழல் கக்கூஸ்’. (கொஞ்சம் அதிகமாக இருந்து விட்டால் இருக்கும்  இடத்தில் இருந்து சுழன்று சற்று அரக்கி தள்ளிப்போய் இருப்பதால் அதற்கு ‘சுழல் கக்கூஸ்’ என்றசெல்லப் பெயர்பீற்றர் குடும்பத்தின் சுழல் கக்கூஸோடு ஒட்டி இருந்ததுதான் அன்ரன் வீடுஇந்தப் பத்தியின் நாயகன் அவன்தான்.

சுழல் கக்கூஸ் என்பதன் அர்த்தம் அதுவல்லவே...

பனை மரத்துக்கு பின்னால் குந்துவார்கள்.. யாரேனும் வந்தால், அவர்கள் வரும் திசைக்கு அமைய, எழுப்பாமலே... முதலில் ஒரு காலையும் (வலது அல்லது இடது) பின்னர் இடுப்பை நகர்த்திக் கொண்டே  அடுத்த காலையும் தூக்கி வைத்து புதிய இடத்தில், மரத்தினை சுற்றிய வாறே, வருபவருக்கு,  மறைவாக செட்டில் ஆவதே சுழல் கக்கூஸ்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பு வெள்ளை என்றாலும் கதை நன்றாக அன்றைய அடிமட்ட மக்களின் வாழ்க்கை முறையை படம் பிடித்து காட்டுவதாக அமைந்துள்ளது . .

Link to comment
Share on other sites

  • 1 month later...
On 2/23/2018 at 11:30 PM, ஈழப்பிரியன் said:

கிராமப்புறங்களில் தகப்பனார் குடித்துவிட்டு மகனுக்கும் மகன் குடித்துவிட்டு தகப்பனுக்கும் வாங்கிக் கொடுக்கும் பழக்கம் பலரிடமும் உண்டு.

ஏன் இப்ப வெளினாடுகளில்   சில இடங்களில் நடக்கிறதுதானே

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ் அரசின் தலைமையை ஏற்கத் தயாராகவே உள்ளேன் – சுமந்திரன் தெரிவிப்பு March 19, 2024   இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைமைப் பதவியை பெறுவதற்கு தான் இன்னமும் தயாராகவே இருக்கிறேன் என்று அந்தக் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைமை மற்றும் நிர்வாகம் பதவியேற்பு விவகாரம் நீதிமன்றில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில், தலைமை பதவி மற்றும் கட்சியின் நிர்வாகத்துக்கு மீளவும் தேர்தலை நடத்தத் தயராகவுள்ளதாக தமிழ் அரசு கட்சியினர் நீதிமன்றத்துக்கு தெரிவித்திருந்தனர். இந்த வழக்கு மீண்டும் ஏப்ரல் 5ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. இந்த நிலையில், கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு சுமந்திரன் அளித்த நேர்காணலின் முக்கிய அம்சங்கள் வருமாறு, “தமிழ் அரசு கட்சியின் தலைவர் பதவிக்கு தெரிவானால் இணைந்து செயல்படுவோம் என்றே அறிவித்தோம். மற்றைய பதவிகளுக்கும் இருவரும் இணைந்து – இணக்கமாக யாரை நியமிப்பது என்பதைத் தீர்மானித்தோம். அதற்கு ஏற்பவே தீர்மானங்களை பொதுச் சபைக்கு அறிவித்தோம். அங்கு குழப்பங்கள் ஏறபட்டன. அவர்கள் கேட்டதன் பெயரில் வாக்கெடுப்புக்கு விட்டோம். அதுவும் நிறைவேற்றப்பட்டது. மறுநாளே கட்சியின் தேசிய மாநாடு நடந்து முடிந்திருக்க வேண்டும். புதிய நிர்வாகம் முடிவான பிறகும் சிலர் குழப்பத்தை ஏற்படுத்தினர். தேசிய மாநாட்டை பிற்போட வேண்டாம் என்று தலைவா் மாவை சேனாதிராசாவுக்கும் புதிய தலைவருக்கும்சொன்னேன். மாநாட்டில் புதிய தலைவர் பதவியை பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறினேன். பிறகு கடிதம் மூலம் பகிரங்கமாகவும் கூறியிருந்தேன். ஆனால், அதன் பின்னரும் 3 வாரங்கள் மாநாடு நடக்கவில்லை. பின்னர் தொடுக்கப்பட்ட வழக்கில் ஜனவரி 21, 27ஆம் திகதிகளில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் எவற்றையும் நடைமுறைப்படுத்தக்கூடாது என்று திருகோணமலை நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தது. இதன் பின்னர் புதிய தலைமை – புதிய நிர்வாகத்தை தெரிவு செய்வதாக கட்சியினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். கட்சி சார்பான அனைத்து வழக்குகளையும் இதுவரை நானே கையாண்டிருக்கிறேன். இது விடயத்தில் என்னிடத்தில் ஆலோசனை கேட்கப்படவில்லை. நானும் எதிராளியாக இருப்பதாலோ என்னவோ என்னிடம் ஆலோசனை கேட்கப்படவில்லை. தலைமைப் பதவிக்கான தேர்தலில் எனது பெயரை பிரேரிக்கிறபோது நான் இணக்கம் தெரிவித்தே அதில் போட்டியிட்டேன். இனிமேல் தலைவராக இருக்க மாட்டேன் என்று நான் சொல்லப்போவது இல்லை” என்று கூறியிருந்தார்.   https://www.ilakku.org/தமிழ்-அரசின்-தலைமையை-ஏற்/  
    • யாழ். பல்கலையில் இன்று போராட்டம்!   பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி யாழ். பல்கலையில் இன்று போராட்டம்! (புதியவன்) ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடளாவிய ரீதியில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் பல்கலைக்கழக ஊழியர்களால் இன்று பணிப்புறக்கணிப்பும் கவனவீர்ப்புப் போராட்டமும் மேற்கொள்ளப்படவுள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் இந்தப் போராட்டம் இன்று இடம்பெறவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வை உறுதிப்படுத்துமாறும், சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்குமாறு கோரியும் பல்கலைக்கழகங்களின் ஊழியர் சங்கத்தால் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டமையைத் தொடர்ந்தே இன்றையதினம் இலங்கையில் உள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் இந்தப் போராட்டம் ஏற்பாடாகியுள்ளது. இந்தப் போராட்டம் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்குக் கடிதம் மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. (ஏ) https://newuthayan.com/article/யாழ்._பல்கலையில்_இன்று_போராட்டம்!
    • உண்மைதான் காதலுடன் நிப்பாட்டி இருக்கலாம்.......கல்யாணம் வரை போயிருக்கக் கூடாது..........!  😂 நன்றி ஏராளன் .......!
    • அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்! 19 MAR, 2024 | 10:01 AM வெப்பமான காலப் பகுதியானது வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கும் ஆபத்தான நோய்களை ஏற்படுத்தும் எனக் கால்நடை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். பகல் வேளையில் விலங்குகளை மூடிய வாகனங்களில் ஏற்றிச் செல்வதைத் தவிர்க்குமாறும் இந்த நாட்களில் நாய் போன்ற விலங்குகளுடன் விளையாடுவதைத் தவிர்க்குமாறும் கால்நடை வைத்தியர் அருண சந்திரசிறி தெரிவித்தார்.  விலங்குகளின் உடல் சூடாக இருப்பதனால் தினமும் செல்லப்பிராணிகளை குளியாட்டுதல், கூந்தல் உள்ள விலங்குகளுக்கு இரண்டு அல்லது மூன்று முறை குளியாட்டுதல், குடிப்பதற்குத் தேவையான அளவு சுத்தமான தண்ணீர் கொடுத்தல், பகல் வேளையில் ஐஸ் கட்டிகள் கொடுத்தல் போன்றவற்றை  செய்யலாம். வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் மயங்கி கீழே விழுந்தால், கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் செல்வதற்கு முன் குளிர்ந்த நீரில் உடலைக் கழுவுவதால் உயிரைக் காப்பாற்ற முடியும் என வைத்தியர் அருண சந்திரசிறி சுட்டிக்காட்டினார்.  செல்லப்பிராணிகள் மாத்திரமின்றி வீட்டில் வளர்க்கப்படுகின்ற  விலங்குகள் அனைத்தும் அதிக வெப்பநிலையால் பாதிக்கப்படுகின்றன,  அதிக வெப்பநிலையால்  மென்மையான  தோல் கொண்ட விலங்குகளுக்குக் காயங்கள் கூட ஏற்படலாம்  என்றும்  அவற்றை எப்போதும் நிழலான இடங்களில் கட்டி வைக்கலாம் என்றும் கால்நடை வைத்தியர்கள்  சுட்டிக்காட்டுகின்றனர். https://www.virakesari.lk/article/179087
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.