Jump to content

கனடா தமிழர்களும் டாக்டர் ஷாலினியும்


Recommended Posts

This entire trip to Toronto was full of learning, observations and understanding. It will take me years to talk or write about all of this in detail. Some salient points were:
1) My flight neighbour was Czech- Her Hindu assigned name was Shalini and she was full of praise for Hindu religion. She was a vegetarian and wondered what I thought about eating meat- especially cows. If all life is equal, isn’t the cow equal to a fruit? I was too sleepy for a detailed discussion anyway. Some other time Czech Shalini. Advaita on hold!
2) On reaching Toronto, from every Tamil I met, I learnt a piece of new information. We in Tamilnadu know of only one narrative. But the Srilankan Tamils have several narratives. Most people felt it was an useless war that yielded no outcome. Many mothers felt the pent up rage- they had fled their country to protect their sons from being forced into warmongering, and daughters from being raped or murdered. They had no idea why they were put to so much suffering- the elders ache for their ancestral land, the youngsters with no idea about any of their pain felt it was way too much drama. 
As a culture we have been erecting hero stones and singing praises of suicidal warriors- but the youth just understand it in one line : It is glorious to commit suicide. That’s not what we want them to think!
War is Testosterone running amok. Peace is Oxytocin flowing like a life giving river. 
More on the psychodynamics of warring later
3) The Tamil women! Are so smart, dynamic and just so downright natural leaders. Only, they don’t seem to know their own self worth. They know of Bharathiyar- and his paper tiger Puthumai Penn. They don’t know of Periyar and his brand of Authentic Female Emancipation.
4) The men are well turned out. All flags of success flying high. But some are disillusioned, over worked, traumatised and torn apart with conflicting feelings, thoughts and options. Yet high functioning. Remarkably resilient. And the promise for the future. Some treat their women with heart warming chivalry. Some need help to get there.
5) The kids are trained in Bharathanatyam, Classical music and all of them imitate Kollywood to a T. They don’t realise it is not even their own culture, that Kollywood is itself a cheap copy of Bollywood! But apart from the cultural confusions, the kids are super smart and poised to take on the whole wide world. 
6) As a whole the Tamils are thriving, struggling and improving their fitness for survival. All they need is to choose smart memes and keep the long line of surviving genes going on forever.
7) We also are given to think that Fidel Castro is a great revolutionary. The people who have been to Cuba tell me this: Fidel was a fake hero too. His country is so poor that mothers pimp for their preadolescent girls - so bad is their poverty. And the Castros do nothing about it. And routinely Cubans spit on Fidel when he comes on TV
8) In Tamilnadu Ezha Tamilargal is an important election issue- But hey, let’s not take sides yet. Let’s first read up on this. There are so many perspectives to this. Let’s become knowledgeable before we even come to conclusions. 
9) The Labourers who emigrate to the Middle East are severely tortured, sexually and physically abused, and land up in India battered and broken. All for a paltry few thousands INR. The early morning flights are full of pathos, especially the women returning with burn wounds! 
10) And just as I land in Chennai-Kamal Hassan has started a new party. And Rajnikanth will soon do the same. 
Phew!! So much work for us Psychiatrists!

 

Doctor shalini fb page 

Link to comment
Share on other sites

கனடா வாழ் என் இனிய தமிழ் மக்களே!

உங்கள் நாட்டுக்கு அழைத்து வரும் விருந்தாளிகளுக்கு  இடியப்பம் பரிமாறும் போது  கொஞ்சம் கோணேஸ்வரிகளின் கதையையும், சொதியில் இடியப்பம் மிதக்கும் போது மணலாறுகள் வெலி ஓயாக்கள் ஆன வரலாற்றையும் நன்றாக உறைக்கும் 
செத்தல் மிளகாய்ச் சம்பலும் போட்டுச் சொல்லிக் கொடுங்கள் 

#எனிஹெல்ப்ஷாலினிஅபத்தங்கள்

 

Kana piraba in face book

தலைவர் வீட்டுக்கு  கூட்டிட்டு போங்க...

புதிய வெளிச்ச பேராசிரியர் , விவசாய குழுவினர் ஒரே ஒரு இடத்துக்கு மட்டும் அழைத்து போங்கள் என்று கேட்டார்கள் . அது தான் தலைவரின் வீடு

நான் அவர் படித்த பாடசாலையிலிருந்து அவரது வீட்டுக்கு நடத்தி கூட்டி சென்றேன் . இந்நிகழ்வும் புல்லரிக்கும் நினைவுகள் தான் . அங்குசென்றதும் அவர்கள் அந்த மண்ணை அள்ளி முத்தமிட்டார்கள் .அவர்களை அங்கிருந்து எனது வீட்டுக்கு நடத்தி சென்றேன் .

ஒன்றரை கிலோமீற்றர் தூர நீல அகலமுள்ள எனது கிராமத்தில் , வீட்டுக்கு வீடு பங்கர்களும் , வல்வை படுகொலை எனற பெயரில் இந்திய ராணுவ அழிப்பும் , இலங்கை படையில் நேவி , கடும் விமான , பலாலி செல் தாக்குதல்களையும், எனது வகுப்பு கூட பிறந்த மாணவர்கள் 26 நண்பர்கள் மாவீரர் ஆனதையும் காட்டி கூறினேன் . இதைவிட  என் வீட்டில் வைத்திருந்த ஆவணங்களையும் காட்டினேன் ,ஆர்வத்தில் ஒரு விவசாயி கிட்டன்னா கடைசியாக அப்பாவுக்கு எழுதிய கடிதத்தை செல் போனில் பிரதி எடுத்துக்கொண்டார் .

டொரோண்டோவில் 2015 ஆம் ஆண்டு 5 நாட்கள் இகுருவி விருது விழாவுக்கு விஜயம் வந்த பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ பாலக்ரிஷ்ணன் அவர்களுடன்  , அந்த ஐந்து நாட்களும் எனது " கூட்டு பொருப்பு " பற்றியும் , 50, 0000 மேற்ப்பட விதவைகள் பற்றியும் , முன்னாள் போராளிகள் பற்றியும் மட்டுமே கதைதேன் . அதுவே அவரை என்னோடு என்  தாயாக ஈழ மண்ணுக்கு இரு முறை வர அழைத்தது .

எங்கள் வீட்டு விருந்தாளிகளுக்கு என்னால் என் தேசத்தை மட்டுமே காட்டமுடியும்.

என்னை காயப்படுத்தினார்கள் , நொந்தார்கள் . திருப்பி பார்க்கும் போது அதே இடத்தில காயப்படுத்தி அல்லது யாராலோ காயப்படுத்தப்படுகின்றார்கள்

சாக முதல் தப்பிவந்த பாவத்தை கரைக்க விரும்புகின்றேன்  .கூட்டு பொறுப்பு/பாவம்  வாருங்கள் ,...... என்/எங்கள் மகன் வேலில்  நம்பிக்கையில்லை .....தாய் நாட்டுக்கு எதாவது செய்வானென்று

ஷாலினி அடுத்தமுறை என் வீட்டுக்கும் விருந்தினராக வந்து போங்கள் !  I teach u 

http://ekuruvi.com/ecological-farming/

 

Navajeevan aanantharaj fb 

Link to comment
Share on other sites

"கனடா போனமாம் கருத்தரங்கில் பேசினமாம் இடியப்பம் சாப்பிட்டமாம் திரும்பி வந்தமாம் என்று இருங்க ஷாலினி மேம் ,கனடாவில் நீங்க சந்தித்தவர்களை வைத்து ஈழத்தமிழர்களையோ ஈழப்போராட்டத்தையோ எடைபோடாதீங்க"#எனிஹெல்ப்ஷாலினிஅபத்தங்கள்

Link to comment
Share on other sites

ஷாலினி என்ற மனநலமருத்துவர், ரொறன்ரோவுக்குச் சென்று, சிலரைச் சந்தித்துவிட்டு எழுதியிருந்த பதிவைப்  (அபத்தம்) வாசித்தேன். சிலரோடு உரையாடியதை வைத்துக்கொண்டு ஒரு இனத்தின் குணநலன்களைப் பொதுமைப்படுத்துவதும், ஈழத்து இனப்பிரச்சனையின் ஆழத்தை அறியாது உளறிக்கொட்டியிருப்பதும் சகிக்கவில்லை! 

இதில், "ராஜிவ்காந்தியால்தான்  நாங்கள் இன்று உயிரோடு இருக்கிறோம்' என்று வேறு சிலர் சொன்னார்களாம்.  போகிற போக்கில் பிடல் காஸ்ட்ரோவின் செவிட்டைப் பொத்தியும் ஒரு அறை!

ஏற்கெனவே, தொலைக்காட்சிகளில் அடிக்கடி முகங்காட்டுமளவு நல்ல பிரபலமானவர். இப்படி 'ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்றவகையிலான அதிரடிப் பதிவுகளை எழுதி விளம்பரம் தேடவேண்டியதில்லை. எங்கள் வாழ்வும் நாங்கள் பட்ட வாதைகளும் வீழ்ச்சியும் உங்களால் புரிந்துகொள்ளப்பட முடியாதவை. சில நாள் பயணத்தில், சிலரோடான சந்திப்பில் எல்லாம் அறிந்ததான அதிமேதாவித்தன சாரக்குறிப்பு அருவருப்பூட்டுகிறது.

இப்படியான 'உளவியலாளர்'களிடம் சிகிச்சை பெறச் செல்லும் நோயாளிகளை எண்ணினால் பரிதாபமாக இருக்கிறது.

 

 

தமிழ்ந்தி-முகநூல் 

டாக்டர் ஷாலினியை கனடா அழைப்பாளர்களில் எங்களின் முன்னைய அர்ஜுன் அண்ணாவும் ஒருவராம்.

Link to comment
Share on other sites

நாய்கள் என்றால் கண்ட சுவரில் மூத்திரம் பெய்யும் என்றுதான் யாழை விட்டு விலகினேன் ஆனால் நாய்கள் பெய்துகொண்டே இருக்கின்றன .

Link to comment
Share on other sites

திரும்ப வந்த்தில் மகிழ்ச்சி:D

நாய்கள் சுவரை கண்டால் காலை உயர்துவது இயற்கை மிஸ்டர் அர்ஜுன் மனிதர்களாகிய நீங்கள் அதை உணர்ந்து நாய்களின் குணத்திற்கு மதிப்பு கொடுக்கவேண்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, arjun said:

நாய்கள் என்றால் கண்ட சுவரில் மூத்திரம் பெய்யும் என்றுதான் யாழை விட்டு விலகினேன் ஆனால் நாய்கள் பெய்துகொண்டே இருக்கின்றன .

அர்ஜுன்....உங்களை மீண்டும் கண்டதில்....மிகவும் மகிழ்ச்சி..!

என்னிட்டையும் ஒரு நாய் இருக்கு...!

எப்ப பார்த்தாலும்...நான் வைச்சிருக்கிற...ஊர் நந்தியாவட்டை..இருக்கிற...இடத்திலை போய்த்தான் 'உச்சா' இருக்கும்!

நானும்...மூண்டு ..இடத்திலை ...நந்தியாவட்டையை...மாத்தி...மாத்தி ...வைச்சுப் பார்த்தன்..!

நாயும்...நந்தியாவட்டை..போற...இடமெல்லாம்... தானும்..இடத்தை..மாத்துது!

இப்ப .கடைசியாய்...நானும்...நாயும்...ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டுள்ளோம்!

நந்தியா வட்டை...ஒரு பெரிய...சீமெந்துத் தொட்டிக்குள்ளை ..இருக்கு!

இப்ப நானும்...சந்தோசம்.....நாயும் சந்தோசம்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆள் எஸ்கேப் புதிதாய் வந்த நாய்கள் 3Dயில் மூத்துரம்  பெய்கின்றன  ஆள் பயந்திட்டார் போல் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏண்டாப்பா...கனடாவுக்கு இந்த டாக்டர்களை கூட்டி வாறியள்... இங்கு எல்லோருக்கும் சுகமில்லையோ...கூட்டித்தான் வாறியள்...கூட்டத்தோடை விடுங்கோவன்...விமானனநிலையம் போய் ஒரு அசடுவழிந்த சிரிப்போடை ஒரு போட்டோ..பிறகு பத்திரிகையாளர் சந்திப்பாம்...அதிலை ஒரு அசடுவழிவு....பின்னர் னிகழ்வில் ஒரு பெரும் அசடு வழிவு....கூட்டம் முடிந்தபிறகு காரைக்குடியில் ஒரு அசடு வழிவு...இதுக்கு தமிழ்க்கடையில் வாங்கிய ஜிகினா சாரியும் ...அதேகலர் சேர்ட்டும்.....ஆனால் சிரிப்புமட்டும் மாறாது......அப்படி பார்த்த தமிழ்நாட்டு  டாக்குத்தர்மார்  உங்களை இழப்பமாக நினைப்பதில்  என்ன தவறூ.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பத்தில் இதனை விட மோசமாக எழுதி இருந்தார். பின் அவரை அழைத்து விருந்து கொடுத்து மகிழ்ந்த ஒரு சிலரின் வேண்டுகோளுக்கு இணங்க எடிட் பண்ணினார். எடிட் பண்ண முதல் எடுத்த ஸ்கிரீன் ஷொட் இன் ஒரு படம். இறுதி எழுத்துகள் சரியாக வரவில்லையாயினும் தலைவரை பயங்கரவாதி என விளித்து எழுதியது தெரிகின்றது

1.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, கலைஞன் said:

வைத்தியர் ஷாலினி அவர்களின் பேஸ்புக் நேரடி இணைப்பை வழங்கமுடியுமா? நன்றி~!

முகநூல் கணக்கை தற்காலிகமாக முடக்கி விட்டார் போல தெரிகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, அபராஜிதன் said:

https://www.facebook.com/psrf.india

பதிவு மறைக்கப்பட்டுவிட்டது

 

இந்த account க்கு போய் Report பட்டனை அழுத்தி இது ஒரு Fake account  என்று முகநூல் அட்மின்களுக்கு முறையிட்ட பின் தான் மனம் அமைதியுறுகின்றது
 
மாற்றுக் கருத்துகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். ஆனால் ஈழத்தமிழர்களின் அழைப்பில் (அழைத்த கூட்டம் கோபிநாத் போன்ற காப்பரேட் அடிமைகளை ஹீரோவாக கொண்டாடி பிரபாகரனை துரோகி எனும் கூட்டம்) வங்துவிட்டு அவர்களின் விடுதலை உணர்வை கொச்சைப்படுத்தும் ஒருவரை நடுநிலை என்ற போக்கில் அனுமதிக்க கூடாது.
 
நாம் தோற்றுப் போயிருக்கலாம். ஆனால் ஒரு காலத்தில் எம்மால் எழ முடியும் எனும் நம்பிக்கை இருக்குது
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Dr.சாலினியை கனடாவிற்குத் தனது நிகழ்விற்கு அழைத்தவர் நினைவுகள் கணா, அவரை பல இடங்களுக்கும் அழைத்துச் சென்றவர் ஜிவனீட்டா நாதன், நான் சாலினியை down town நாடகம் ஒன்று பார்க்கப் போயிருந்த போது ஜிவனீட்டா அவரை அழைத்து வந்திருந்த போது கண்டேன், அவரோடு கதைக்கும் சந்தர்ப்பம் அப்போது எனக்குக் கிடைக்கவில்லை, அடுத்த நாள் நினைவுகள் நிகழ்வில் Dr. சாலினியின் உரையின் பின்னால் அவரோடு இருக்கக் கிடைத்தது, நான் எனது திரைப்படம், பற்றியும் நான் அடுத்து எடுக்க இருக்கும் திரைப்படத்திற்கான ஸ்ரிப்டைப் பற்றியும் அவரோடு உரையாடினேன், அத்தோடு தமிழ்நாட்டு இன்றைய அரசியல் நிலை பற்றியும் நகைச்சுவையாக உரையாடினோம். உப்புச் சப்பற்ற புலிப் பிரச்சனை பற்றி தமிழ்நாட்டிலிருந்து இங்கு வந்திருக்கும் ஒருவருடன் உரையாடும் அளவிற்கு நான் ஒன்றும் தாழ்ந்து போகவில்லை, மாறாக இந்தியர்களை இங்கே எல்லா நிகழ்விற்கும் அழைக்கின்றார்கள் நான் அதற்கு எதிரானவள் அதுபற்றி நான் எழுதியும் இருக்கின்றேன் என்று அவருக்கு நேரடியாகச் சொன்னேன். அந்த அளவு துணிவு எனக்கிருக்கின்றது எனக்கு. அடுத்தநாள் நிகழ்வு முடிந்து எனது நண்பி அவரை மதிய உணவிற்க அழைத்துச் சென்றார், அப்போது அங்கிருந்த வேறு சிலரையும் அவர் அழைத்ததால் நானும் போனேன். அவ்வளவுதான் எனக்கும் Dr.சாலினிக்குமான தொடர்பு, நீங்கள் என்ன ஆதாரத்தை வைத்து இப்படி ஒரு பதிவைப் போட்டீர்கள், நீங்கள் இவ்வளவுதானா? இல்லாவிட்டால் எங்கோ விலைபோய் ஆதாயம் தேடுகின்றீர்களா?
அடுத்துக் கோணேஸ்வரிக் கவிதை, ஒரு கதை காலம் செல்லச் செல்ல எப்படியெல்லாம் தமக்கேற்றபடி மனிதர்களால் மாற்றப்படுகின்றது என்று ரசித்துச் சிரிக்க முடிகின்றது. 
பிற்குறிப்பு – நான் Dr. சாலினியின் பதிவைப் படிக்கவில்லை. ஆனால் முகப்புத்தகத்தைப் பார்த்த போது அவர் நிச்சயம் நேர்மையாக எதையோ எழுதியிருக்கின்றார் என்பது மட்டும் புரிகின்றது.

 

Karupy Sumathy in fb..

 

இது எந்த வகை?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் முதல் தலைமுறைகள் மட்டுமே  ஈழத்தில் நடந்தது என்ன ...? என்பதை உண்மையாக கூறும் தகுதியுடையவர்கள் ..
பிறந்தது முதல் பீசாவும் ,பேர்கரும் மாக்டோனல்ட்சில் தின்று வளர்ந்த இரண்டாம் ,மூன்றாம் தலைமுறை ஈழ விடுதலை போராட்டம் பற்றி தங்கள் அனுபவங்களை சொல்லப்போனால் இதுதான் நடக்கும் 

Link to comment
Share on other sites

இந்த கருத்து பரிமாற்றம் குறித்து துண்டுதுண்டாக படித்த செய்திகளை புரிந்தவரையில் பொல்லு கொடுத்து அடிவாங்கின மாதிரி உள்ளது. சிங்களப் பேரினவதக் ஒடுக்குமுறையும் கொடுமைகளும் முப்பது வருட ஆயுதப் போரும் அதன் அவலங்கள் உயிரிழப்புகள் குறித்தும் எல்லாத் தரப்பு ஈழத்தமிழர்களிடமும் ஒரே மாதிரியான புரிந்துணர்வோ பொதுக்கருத்தோ அது சார்ந்த அறிவோ இல்லை. தமிழர்களின் அவல நிலைக்கு பிரதானமான காரணமும் இதுவேயாகும். இந்த அடிப்படைக்குள் ஒரு தரப்பு மக்களிடம் உளவள மருத்துவரின் ஒரு சிறு சந்திப்பும் அதை அடிப்படையாக வைத்து முன்வைக்க முயலும் அரசியல் சார்ந்த கருத்துக்களும் எந்தவிதத்திலும் கவனத்துக்குரியவையோ முக்கியத்துவம் வாய்ந்ததோ இல்லை. . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, சண்டமாருதன் said:

...சிங்களப் பேரினவதக் ஒடுக்குமுறையும் கொடுமைகளும் முப்பது வருட ஆயுதப் போரும் அதன் அவலங்கள் உயிரிழப்புகள் குறித்தும் எல்லாத் தரப்பு ஈழத்தமிழர்களிடமும் ஒரே மாதிரியான புரிந்துணர்வோ பொதுக்கருத்தோ அது சார்ந்த அறிவோ இல்லை...

இவ்வளவு துயரங்கள், அவலநிலைக்குப் பின்னரும் பொதுக்கருத்தோ, புரிந்துணர்வோ வரவில்லையெனில் எப்பொழுது இனி மீட்சி..?  console.gif

தமிழ்நாடுதான் இலவசத்திற்கு ஏங்குது என்றால், குடுமிப்பிடி சண்டை, காலை வாருதலில் ஈழமும் மறைந்துவிடும் போலிருக்கே..?

Link to comment
Share on other sites

8 minutes ago, ராசவன்னியன் said:

இவ்வளவு துயரங்கள், அவலநிலைக்குப் பின்னரும் பொதுக்கருத்தோ, புரிந்துணர்வோ வரவில்லையெனில் எப்பொழுது இனி மீட்சி..?  console.gif

தமிழ்நாடுதான் இலவசத்திற்கு ஏங்குது என்றால், குடுமிப்பிடி சண்டை, காலை வாருதலில் ஈழமும் மறைந்துவிடும் போலிருக்கே..?

எப்பொழுதும் மீட்சியில்லை. 

ஈழம் என்ற ஒரு இலக்கிற்காக போராட முற்பட்ட பல இயக்கங்கள் என்றும் இணைந்து ஒரு பலமான சக்தியாய் உருவானதில்லை

அதே ஈழத்துக்கான ஆதரவாக தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் ஒரு அணியாக திரண்டதில்லை

இன்று உள்ள ஈழ ஆதரவுக் குரல்களும் ஒரு சக்தியானதில்லை. (காணொளியில் 9: 8 நிமிடத்தில் இருந்து பார்க்கவும்)

சாதியச் சமூகத்தில் பொதுக் கருத்து அல்லது ஒருமித்த சக்தி என்ற மனோநிலைக்கு இடமே இல்லை. எந்த நெருக்கடியிலும் அறிவு இந்த ஐககியப்பாட்டிற்கு முரணான மனோ நிலையை வென்ற சரித்திரம் இல்லை. குறுக்கு வழியில் சிங்களவனிடம் இருந்து விடுதலை கிடைத்தால் உண்டு இல்லையேல் அதோ கதிதான். கசப்பாயினும் யதார்த்தம் இதுதான். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, சண்டமாருதன் said:

எப்பொழுதும் மீட்சியில்லை. 

ஈழம் என்ற ஒரு இலக்கிற்காக போராட முற்பட்ட பல இயக்கங்கள் என்றும் இணைந்து ஒரு பலமான சக்தியாய் உருவானதில்லை

...

சாதியச் சமூகத்தில் பொதுக் கருத்து அல்லது ஒருமித்த சக்தி என்ற மனோநிலைக்கு இடமே இல்லை. எந்த நெருக்கடியிலும் அறிவு இந்த ஐககியப்பாட்டிற்கு முரணான மனோ நிலையை வென்ற சரித்திரம் இல்லை. குறுக்கு வழியில் சிங்களவனிடம் இருந்து விடுதலை கிடைத்தால் உண்டு இல்லையேல் அதோ கதிதான். கசப்பாயினும் யதார்த்தம் இதுதான்.

தற்பொழுது இத்தோற்றம், யதார்த்தமாக இருக்கலாம்.. ஆனால் காலம் ஒரே சுழலில் இருப்பதில்லை,  அரசியல், சமூக மாற்றங்கள் தேவைக்கேற்ப மாறவேண்டிய கட்டாயம் நிகழும்.

நிச்சயம் 'தமிழினம் சுதந்திரக் காற்றை சுவாசிக்கும்' என்ற நம்பிக்கை இன்னமும் இருக்கிறது.

Link to comment
Share on other sites

20 hours ago, பிழம்பு said:

முகநூல் கணக்கை தற்காலிகமாக முடக்கி விட்டார் போல தெரிகின்றது.

அபராஜன் வழங்கிய இணைப்பு மூலம் அவரது பதிவுகள் சிலவற்றை நேற்று பார்த்தேன். இன்று அந்த இணைப்பு வேலை செய்யவில்லை. வைத்தியர் ஷாலினியை விஜய் தொலைக்காட்சியில் பார்த்து இருக்கின்றேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாருஙகோ, அர்ஜுண்ணனா வாருங்க..

தண்ணிய போட்டமா, வேலிக்கிலால எட்டிப் பார்த்துட்டு ஓடிப்போய் பாய விரிச்சுப் படுத்தமா எண்டு கடும் விரதமிருந்த மனிசன், சாரத்த மடிச்சு கட்டிக்கொண்டு ரோட்டுள பாய, வைச்ச புண்ணியவான் யாரப்பா.

உங்க திரியிற தமிழ் மண்டப்பிழை வைத்தியர்மாரை பிடிச்சுக் கொண்டு போய் நல்ல மண்டப்பிழை வைத்தியர்களிடம் காட்டவேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Nathamuni said:

வாருஙகோ, அர்ஜுண்ணனா வாருங்க..

தண்ணிய போட்டமா, வேலிக்கிலால எட்டிப் பார்த்துட்டு ஓடிப்போய் பாய விரிச்சுப் படுத்தமா எண்டு கடும் விரதமிருந்த மனிசன், சாரத்த மடிச்சு கட்டிக்கொண்டு ரோட்டுள பாய, வைச்ச புண்ணியவான் யாரப்பா.

உங்க திரியிற தமிழ் மண்டப்பிழை வைத்தியர்மாரை பிடிச்சுக் கொண்டு போய் நல்ல மண்டப்பிழை வைத்தியர்களிடம் காட்டவேணும்.

வில்லங்கமான..... ஆட்கள், விலகி இருப்பதே, நல்லது. நாதமுனி.  :)

Link to comment
Share on other sites

2 hours ago, தமிழ் சிறி said:

 

நேற்று பதிவை மறைத்திருந்தார் இன்று பார்த்தால் அவரின் பக்கத்தையே காணல 
அவர் டிஅக்ரிவேற் பண்ணிட்டாரா 
அல்லது அதிகமானோர் ரிப்போர்ட் பண்ணியதால் முடக்கப்பட்டதா தெரியவில்லை 

அந்த பதிவில் அதிகளவான புலம்பெயர்ந்தோர் தமது எதிர்ப்பை காட்டி இருந்தனர்.
எம்மிடையே மிமிகிரியேட்டர் அதிகளவில்இ ல்லாத குறையை நேற்று உணர்ந்தேன் இருந்திருந்தால் இன்னும்பரவலடைய செய்து நெருக்கடி கொடுத்திருக்கலாம,

குறைந்த பட்சம் மன்னிப்பு கேட்கும் நிலைக்கு கொண்டுவந்திருக்கலாம் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.