Jump to content

தென்னிலங்கையின் குழப்ப நிலையும் கூட்டு அரசாங்கத்தின் எதிர்காலமும் - யதீந்திரா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தென்னிலங்கையின் குழப்ப நிலையும் கூட்டு அரசாங்கத்தின் எதிர்காலமும்

 

யதீந்திரா 

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தல் அரசியல் அதிகாரத்தில் இருந்த அனைத்துத் தரப்பினருக்குமான நெருக்கடியாக மாறியிருக்கிறது. இப்படியொரு நெருக்கடி இலங்கையின் அரசியல் அவதானிகள் எவராலும் கணிக்கப்படாத ஒன்று. இலங்கையின் தேர்தலை உன்னிப்பாக அவதானித்து வந்த அமெரிக்க இந்திய தரப்பினரிடம் கூட இவ்வாறானதொரு கணிப்பு இருந்திருக்குமென்பது சந்தேகமே. புலனாய்வு அறிக்கைகளை மேற்கோள் காட்டி வெளியான ஊடகச் செய்திகளிலும் மகிந்த இரண்டாம் நிலையில் வரக் கூடுமென்றே கணிப்பிடப்படிருந்தது. ஆனால் இறுதியில் அனைவரது கணிப்புக்களும் பொய்பிக்கப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் மகிந்த தனது கட்சியிலிருந்து வெளியேறி புதிய கட்சியொன்றிலேயே போட்டியிட்டிருந்தார். ஆரம்பத்தில் இப்படியொரு கணிப்பும் சிலரிடம் இருந்தது. என்னதான் மகிந்த கவர்ச்சிமிக்கவராக இருந்த போதிலும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேறி, தனித்து இயங்குவாராக இருந்தால் அவர் பெரியளவில் வெற்றி பெற முடியாது. அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் ஐக்கிய தேசியக் கட்சியே முன்னணி வகிக்கும். எனினும் இந்தக் கணிப்பும் பொய்த்துவிட்டது. சாதாரண சிங்கள மக்கள் மத்தியில் மகிந்தவின் கவர்ச்சி முன்ரைப் போன்று அப்படியேதான் இருக்கிறது.

உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் தென்னிலங்கையின் அரசியலில் எவ்வாறான மாற்றங்களை ஏற்படுத்தக் கூடுமென்று அனைவர் மத்தியிலும் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. தற்போது அந்த எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் சற்று பதட்டத்துடன் நோக்கப்படுகிறது. கிடைக்கும் தகவல்களின்படி ஐக்கிய தேசிய கட்சி – சிறிலங்கா சுதந்திரக் கட்சி கூட்டரசாங்கத்தின் எதிர்காலம் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் ஆளும் தரப்பாக இருக்கின்ற இரண்டு கட்சிகளையும் ஓரங்கட்டி மகிந்த வெற்றி பெற்றிருப்பதுதான். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான அணி மிக மோசமான தோல்வியை சந்தித்திருக்கிறது.

உண்மையில் சிங்கள மக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையை ஏற்கவில்லை. அந்த அடிப்படையில் பார்த்தால் ஆட்சிமாற்றத்தின் போது எவ்வாறு பொது எதிரணி வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவை பெரும்பான்மையான சிங்கள மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கவில்லையோ, அதேபோன்றதொரு நிலைமைதான் தற்போதும் தொடர்கிறது. அவர் ஜனாதிபதியாக பொறுப்பேற்று இரண்டரை ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னரும் கூட, அவரால் சிங்கள மக்கள் மத்தியில் ஒரு தனிப்பெருந் தலைவராக வர முடியவில்லை. அவரது தலைமையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி தொடர்ந்தும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. மகிந்தவை உள்வாங்கினால் மட்டுமே சிறிலங்கா சுதந்திரக் கட்சியால் எழுச்சிகொள்ள முடியும் என்னும் நிலைமையே தொடர்கிறது. இதுவரை ஒரு அவதானமாக மட்டுமே இருந்த நிலைமை தற்போது மகிந்தவின் வெற்றியால் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

இப்போது மைத்திரியும் ரணிலும் என்ன செய்யப் போகின்றனர் என்னும் கேள்வி அரசியல் அரங்கில் மட்டுமல்ல, சாதாரண மக்கள் மத்தியிலும் காணப்படுகிறது. கிடைக்கும் தகவல்களின்படி ரணில் தலைமையிலான குழுவினரும் மைத்திரி தலைமையிலான குழுவினரும் புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்கலாமா என்று முயற்சித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறானதொரு நிலைமை உருவாகினால் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டமைப்பு இணையாது என்று அதன் தலைவர் சம்பந்தர் தெரிவித்திருக்கின்றார். ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டமைப்பு இணைவதோ அல்லது கூட்டமைப்புடன் ஐக்கிய தேசியக் கட்சி இணைவதோ இரண்டுமே பரஸ்பரம் இருவருக்கும் புதைகுழி வெட்டுவதாக அமைந்துவிடும். இவ்வாறானதொரு சூழலில் ஐக்கிய தேசியக் கட்சி ஒரு சிறுபான்மை அரசாங்கத்தை அமைக்க வேண்டுமாயின் சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து சிலரை உடைத்து எடுத்து அவர்களோடு ஏனைய தரப்பினரையும் இணைத்து பயணிக்க வேண்டும். இதேவேளை மைத்திரி தலைமையில் ஒரு புதிய அரசாங்கத்தை அமைக்க வேண்டுமாயின் மகிந்த தரப்புடன் ஒரு உடன்பாட்டுக்கு வருவதுடன் மேலதிகமாக ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து சிலரையும் இணைத்துக் கொண்டு பயணிக்க வேண்டும்.

ஆனால் சிலரது கணிப்பின்படி தற்போது இருக்கின்ற கூட்டு அரசாங்கத்தை ஏதோவொரு வகையில் 2020 வரையில் பேணிப் பாதுகாக்கும் முயற்சியில் அமெரிக்காவும் இந்தியாவும் ஈடுபடுமென்றும் பார்க்கப்படுகிறது. இந்த கண்ணோட்டத்தையும் இலகுவாக நிராகரிக்க முடியாது. எனினும் கட்சி அரசியலில் இருப்பவர்கள் அனைவரும் அடுத்து வரவுள்ள தேர்தலை இலக்கு வைத்தே செயற்படுவர். தேர்தல் அரசியல் தங்களுக்கு பாதகமாக வருமென்று கணித்தால் முதலில் தங்களின் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதிலேயே கவனம் கொண்டிருப்பர். அந்த வகையில் பார்த்தால் மகிந்த அலையுடன் ஐக்கியமாகவே சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள பலரும் விரும்புவர். மகிந்தவுடன் இணைய முடியாத ஒரு சிலரைத் தவிர, ஏனைய அனைவரது சிந்தனையும் அடுத்த தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்டே நகரும்.

ஒருவேளை வெளிச் சக்திகளால் இந்த அரசாங்கம் ஏதோவொரு வகையில் கொண்டு இழுக்கப்பட்டாலும் கூட, இதனால் எந்தவொரு ஆக்கபூர்வமான விடயங்களையும் செய்ய முடியாமல் போகும். இதன் விளைவை உடனடியாக எதிர்கொள்ளும் அமைப்பாக கூட்டமைப்பே இருக்கும். கூட்டமைப்பு என்னும் பெயரில் இயங்கிவரும் இலங்கை தமிழரசு கட்சி இந்த கூட்டரசாங்கத்தை நம்பி அதனுடன் இழுபட்டுச் சென்றது. இதன் விளைவாக ஏற்கனவே கூட்டமைப்பின் வாக்கு வங்கி சரியத் தொடங்கிவிட்டது. இது தனியாக ஆராயப்பட வேண்டியது என்பதால் அதனை அடுத்த பத்தியில் பார்ப்போம்.

மகிந்தவின் வெற்றி ஒரு தெளிவான செய்தியை சொல்லியிருக்கிறது. ஆட்சிமாற்றத்தின் பின்னர் மகிந்த தொடர்பில் மேற்கொண்ட எதிர்ப்பிரச்சாரங்கள் எதுவும் சாதாரண சிங்கள மக்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. சாதாரண மக்கள் இப்போதும் போர் வெற்றியின் ஊடாக மட்டுமே மகிந்தவை பார்க்கின்றனர். மேலும் இந்த அரசாங்கம் இருப்பதை விடவும் அது இல்லாமல் போவதே சிறந்தது என்றும் அவர்கள் சிந்தித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்தளவு ஆதரவை மகிந்த பெற்றிருக்க முடியாது. இதில் இன்னொரு ஆபத்தும் உண்டு. 2015 ஜனவரியில் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட போது, தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களின் வாக்குகளே மகிந்தவின் தோல்விக்கு பயன்படுத்தப்பட்டன. இது சிங்கள தேசியவாத சக்திகளின் மனங்களில் ஒரு கேள்வியையும் எழுப்பியிருக்கலாம். வெல்ல முடியாதவர்கள் என்று கருதிய விடுதலைப் புலிகள் இயக்கத்தை தோற்கடித்த மகிந்த ராஜபக்ச, மீண்டும் தமிழர்களின் வாக்குகளைக் கொண்டே தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்.

இது அவர்களவில் சகிக்க முடியாத ஒன்றாகவும் இருந்திருக்கலாம். அதேவேளை புதிய அரசாங்கம் தங்களை பிரமாண்டமாக காட்சிப்படுத்திய போதிலும் கூட, மக்களுக்கு பெரியளவில் நன்மைகளை செய்யவில்லை என்னும் கருத்தும் சிங்கள மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கலாம். இதனுடன் சேர்த்து ஐக்கிய தேசியக் கட்சியின் பாரிய ஊழல் தொடர்பான கருத்துக்களும் மக்கள் மத்தியில் பரவியிருந்தன. மகிந்தவின் மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்திய அரசாங்கத்தின் மீதும் அதே ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட போது அது சாதாரண சிங்கள மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியிருக்கலாம். இப்படி பல காரணங்களும் சேர்ந்து மகிந்தவை மீண்டும் நிமிர்த்தியிருக்கிறது. மகிந்தவின் வெற்றி இன்னொரு செய்தியையும் பறைசாற்றியிருக்கிறது. கட்சி, சின்னம் அனைத்தையும் மீறி மக்கள் எழுச்சிகொள்ளும் ஒன்றுடன்தான் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வர். அதுதான் தற்போது தாமரை மொட்டின் கீழ் மகிந்தவின் மீளெழுச்சியாக மாறியிருக்கிறது.

 

மொத்தத்தில் உள்ளூராட்சித் தேர்தலில் மகிந்த பெற்றிருக்கும் வெற்றி மீண்டும் இலங்கைத் தீவை அதிகம் வெளியக சக்திகளின் செல்வாக்கு வளையத்திற்குள் கொண்டு செல்லப் போகிறது. கூட்டாட்சி முற்றிலும் குழம்பிவிட்டது. இத்தனை குழப்பங்களின் மத்தியிலும் மைத்திரி-ரணில் ஆட்சி தொடருமானால் அது சில வெளியக சக்திகளின் நிகழ்சிநிரலின் அடிப்படையில் மட்டுமே சாத்தியப்படும்.

 

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=10&contentid=03365a42-713b-4748-809b-024486bb02a8

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.