Jump to content

அவசரமாக இந்தியா பறந்துள்ள மஹிந்த


Recommended Posts

அவசரமாக இந்தியா பறந்துள்ள மஹிந்த
 

image_6a4084cd1c.jpgமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (27)  அதிகாலை கட்டுநாயக்க விமானம் நிலையத்திலிருந்து இந்தியாவின் பெங்களூர் நோக்கி பயணமாகியுள்ளார்.

மஹிந்தவுடன், லொஹான் ரத்வத்த, செயலாளர் உதித லொக்கு பண்டார உள்ளிட்ட 6 பேர் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, இன்று இரவு 10.30 மணியளவில் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் நாடு திரும்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/அவசரமாக-இந்தியா-பறந்துள்ள-மஹிந்த/175-212081

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நவீனன் said:
அவசரமாக இந்தியா பறந்துள்ள மஹிந்த
 

image_6a4084cd1c.jpgமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (27)  அதிகாலை கட்டுநாயக்க விமானம் நிலையத்திலிருந்து இந்தியாவின் பெங்களூர் நோக்கி பயணமாகியுள்ளார்.

மஹிந்தவுடன், லொஹான் ரத்வத்த, செயலாளர் உதித லொக்கு பண்டார உள்ளிட்ட 6 பேர் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, இன்று இரவு 10.30 மணியளவில் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் நாடு திரும்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/அவசரமாக-இந்தியா-பறந்துள்ள-மஹிந்த/175-212081

சாத்திரிமாரை சந்திக்க போய்யிருப்பார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருப்பதி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி.

Link to comment
Share on other sites

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு திருப்பதியில் வரவேற்பு (காணொளி இணைப்பு )

 

 

திருப்பதி மலையில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கெஸ்ட் ஹவுசில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தேவஸ்தான அதிகாரிகள் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தனர்.

mahinda.jpg

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில், பெங்களூரில் இருந்து சிறப்பு விமானத்தில் ரேனிகுண்டா விமான நிலையம் சென்றடைந்தார்.

விஜயவாடாவில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்திக்க இருந்த நிகழ்ச்சி இரத்து செய்யப்பட்டதால் ரேனிகுண்டா விமான நிலையத்தில் இருந்து காரில் திருப்பதி மலைக்கு சென்றார்.

இந்நிலையில், திருப்பதி மலையில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கெஸ்ட் ஹவுசில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தேவஸ்தான அதிகாரிகள் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk/article/31077

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, putthan said:

சாத்திரிமாரை சந்திக்க போய்யிருப்பார்

ஜனாதிபதி தேர்தலுடன் சாத்திரத்தை கைவிட்டுட்டார்.

Link to comment
Share on other sites

இந்தியா சென்ற மஹிந்த ஆந்திர முதல்வருடன் பேச்சு

 

(இராஜதுரை ஹஷான்)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திடீர் விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ளார்.

mahinda-rajapaksa-chandrababu-naidu.jpg

ஆந்திராவில் திருப்பதி தரிசனத்தில் ஈடுப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் இன்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் சபாநாயகரை சந்தித்து கரந்துரையாடியுள்ளார்.

உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாரிய வெற்றியீட்டியதன பின்னர் திருப்பதிக்கு சென்று மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் வழிபாடுகளில் ஈடுப்பட்டுள்ளனர்.

 

 

இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் இலங்கை இந்திய உறவுகள் உள்ளிட்ட பல்துறைசார் விடயங்கள் தொடர்பில் நட்புரீதியாக ஆந்திர முதல்வருடன் மஹிந்த ராஜபக்ஷ கலந்துரையாடியுள்ளதாக  அவரது செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரொஹான் ரத்வத்த தெரிவித்தார்.

மேலும் சபாநாயகருடனும் கலந்துரையாடியதாகவும் அவர்குறிப்பிட்டார். இந்திய விஜயத்தை நிறைவு செய்து கொண்டு நாளை நாடு திரும்பவுள்ளதாகவும் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.குறித்த விஜயத்தின் பின்னர் பல சாதகமான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான 173 வானூர்தியில் இன்று அதிகாலை 4.30மணியளவில் இந்தியாவின் பெங்களுர் நகரை நோக்கி ஆறு பேர் உள்ளடங்கிய குழுவினருடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திடீர் விஜயத்தினை மேற்கொண்டிருந்தார்.

http://www.virakesari.lk/article/31080

Link to comment
Share on other sites

20 தமிழர்களைச் சுட்டுக்கொன்ற ஆந்திரத் தெலுங்கு முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு மகிந்த ராஜபக்சதான் சிறந்த நண்பனாக இருக்க முடியும். சிங்களம் தெரிந்த ஒருவரால் தெலுங்கு மொழியை இலகுவாக வாசிக்க இயலும். ஒலிப்பின் வடிவங்களிலும் பெருமளவு ஒற்றுமைகள் இருக்கும்.

சேனநாயக்க, பண்டாரநாயக்க, விக்கிரமநாயக்க...........பெயர்களிலும் அதே தான். ஆந்திராவிலுள்ள பல ஊர்களின் பெயர்களும் சிங்களத்தோடு ஒத்து இருக்கும்.

தமிழர்களுக்கும் வடுகர்களுக்குமிருக்கும் வரலாற்றுப் பகைமை குறித்து நிறையைத் தகவல்கள் திரட்டி ஒப்பீடு செய்து பார்த்தால் பல வியத்தகு விடயங்கள் தெரிய வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நவீனன் said:

உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாரிய வெற்றியீட்டியதன பின்னர் திருப்பதிக்கு சென்று மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் வழிபாடுகளில் ஈடுப்பட்டுள்ளனர்.

 

திருப்பதியில் இருப்பத்து புத்தர் சிலை என‌   திருமாவளவன் சொன்னதை நம்பிட்டார் போல‌ 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.