Jump to content

`கூல்’ கேப்டன் தோனி கோபப்பட்ட`ஆங்ரி பேர்ட்' தருணங்கள்!


Recommended Posts

`கூல்’ கேப்டன் தோனி கோபப்பட்ட`ஆங்ரி பேர்ட்' தருணங்கள்!

 
 

ஆக்ரோஷ ஆக்‌ஷன்கள் எல்லாம் தன் அகராதியிலேயே இல்லை என்பதுதான் தோனியின் கேரக்டர். கடந்த 15 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில், மகேந்திர சிங் தோனியின் அணுகுமுறை என்பது புத்திக்கூர்மைகொண்ட ஒரு புல்லட் புரூஃப் ஜாக்கெட் போன்று தக்க பாதுகாப்பானதாக இருக்கும். ஆம், எதிரணிகளின் ஸ்லெட்ஜிங் பிரெஷர் பூச்சாண்டி எல்லாவற்றையும் பில்டப் இல்லாமல் ஹேண்டில் பண்ணுவதுதான் தோனியின் சிறப்பம்சம்! அதேசமயம், அவ்வப்போது சிங்கத்தைச் சீண்டிப்பார்க்கும் சில வீரர்களை தண்டிக்கவும் தவறியதில்லை. `தோனியின் `கோபம்'ங்கிறது வேலூர் வெயில்ல குளிர்க்காய்ச்சல் வருவது மாதிரி ஒவ்வொருத்தரையும் வித்தியாசமா டீல் செய்யும்.'

2016-ம் ஆண்டில் ஆறாவது T20 உலகக்கோப்பைத் தொடரின் அரையிறுதிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவு அணியிடம் இந்தியா தோற்று வெளியேறியது. அப்போது நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தோனியிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. முப்பதுகளில் இருக்கும் ஒரு கிரிக்கெட் வீரரிடம் அனைவரும் சாதாரணமாகக் கேட்கும் கேள்விதான், ``ஓய்வுபெற இதுதான் சரியான சமயமோ?”

 

தோனி

தோனி உடனடியாக அந்த வெளிநாட்டு நிருபரை அழைத்து அருகே உட்கார வைத்துக்கொண்டார். விக்கெட்டுகளுக்கு இடையே தான் ஓடும் வேகத்தைக் குறிப்பிட்டு, ``என் உடல் தகுதி போதுமானதாக இல்லை என்று நீங்கள் கருதுகிறீர்களா?” என்று கேட்டார். மேலும், அந்த நிருபரிடம், ``நான் 2019-ம் ஆண்டு உலகக்கோப்பை வரை களத்தில் நிற்பேன் என நினைக்கிறீர்களா?” என்று அடுத்த கேள்வியை வீசினார். ஒரு பத்திரிகையாளரை, தன் அருகே உட்காரவைக்கப்பட்டு பிரபலமான இந்திய கேப்டன் ஒருவர் எதிர் கேள்வி கேட்டது பத்திரிகையாளருக்குப் பெரும் சங்கடமாக இருந்திருக்கும். இப்படி புத்திசாலித்தனமாக ஜில்லுனு கோபத்தை வெளிக்காட்டும் திறமை தோனிக்கு மட்டுமே உண்டு.

பாகிஸ்தானுக்கு எதிரான தனது முதல் தொடரிலேயே பின்னிப்பெடலெடுத்தார் தோனி. அப்போது  அஃப்ரிடி தோனியிடம் வம்பிழுக்க, தனது ஆக்ரோஷங்களை ஒரே ஓவரில் சிக்ஸரும் பெளண்டரியுமாகச் சுடச்சுட பதிலடி கொடுப்பார்.

இதேபோல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் தொடரில் மைக்கேல் ஹஸ்ஸி தோனியால் ஸ்டம்ப்பிங் செய்யப்பட்டார். கிரீஸின் மேலே கால் இருந்ததால் முதலில் அவுட் தந்து, பிறகு ஹஸ்ஸியை மீண்டும் பேட்டிங் செய்ய அழைத்தனர். இதனால் கோபமடைந்த தோனி, கள நடுவர் பில்லி பெளடனிடம் சிறிது நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ரன் எடுக்க ஓடும்போது மிட்செல் ஜான்சன் இடையூறு செய்ததால் கீழே விழுந்து எழுந்த தோனி, உடனே முறைத்து தன் கோபத்தைக் காட்டியவாறே அந்த ஆட்டத்தில் சதம் விளாசினார். உண்மையைச் சொல்லவேண்டுமானால், அந்த இடையூறால் வந்த கோபத்தால்தான் திடீரென அதிரடிக்கு மாறுவார்.

கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது 20 ஓவர் போட்டியில் பும்ரா ஈஸியான ரன் அவுட்டை மிஸ் செய்ய, சிறிது கோபப்பட்டார் தோனி.

2011-ம் ஆண்டு உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் இரண்டாவது ரன்னுக்கு யுவராஜ்சிங் மெதுவாக ஓடியதற்கு சற்று கோபத்துடன் ரியாக்ட் செய்தார். அதன் பிறகு அதிரடி பாணியில் வெற்றிக்கோப்பையை உச்சி முகரச் செய்வார். தற்போதும் இதேபோல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்திலும் மனிஷ் பாண்டேவை ``ஏய், இங்க பாரு, அங்க என்ன பார்வை? கவனம் இங்க இருக்கட்டும்” என்று எதிர்முனையிலிருந்து இந்தியில் கத்தினார் தோனி. ஆனால், இந்தக் கோபத்தில் சகவீரரைத் திட்டினார் என்பதைவிட தட்டி எழுப்பினார் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

 

2016-ம் ஆண்டில் மிர்பூரில் நடந்த பங்களாதேஷுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் பந்து வீசிய முஸ்தாபிஜூர் ரஹ்மான் ரன் எடுக்க ஓடும்போது அடிக்கடி இந்திய பேட்ஸ்மேன்களுக்கு இடையூறு செய்துகொண்டே இருந்தார். தோனிக்கும் இதேபோல் செய்ததால் தனது தோள்பட்டையால் அவரை இடித்து நிலைகுலையச் செய்து மறைமுகமாக தனது கோபத்தைக் காட்டினார்.

https://www.vikatan.com/news/sports/117535-situations-when-mahendra-singh-dhoni-lost-his-cool-on-and-off-the-field.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.