Jump to content

செத்துப்போன கருவாடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

செத்துப்போன கருவாடு

 பயிர்ச்செய்கைக்கு அதிகளவு இரசாயன உரங்களைப் பாதிப்பதால், நுகர்வோருக்கு புற்று நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்திருக்கிறது

பிரேஸில் நாட்டில், குருவிகள் சோயாச் செடிகளை அழிப்பதில் இருந்து பாதுகாப்பதற்காக செடிகளின்மேல் தெளிக்கப்படும் இராசயன மருந்து மிகவும் ஆபத்தானது. இந்த மருந்தின் தாக்கம் சோயாவில் இருந்து தயாரிக்கும் ´Tofu’ விலும் கண்டறியப் பட்டிருக்கிறது என்பது சமீபத்திய ஆய்வு அறிக்கை. அப்படியாயின் புடலங்காய், பயித்தங்காய், முருங்கைக்காய், பாவற்காய் என்று பிளேன் ஏறி எங்களிடம் வந்து சேரும் மரக்கறிகளுக்கு என்ன  உரங்களைப் போட்டிருப்பார்கள்? அதைப் பற்றியெல்லாம் எங்களுக்கு ஏது கவலை.

 வியாழக்கிழமை தமிழ்க்கடைக்குப் போனால் fresh ஆக மரக்கறிகள் வாங்கலாம் என்பது அனேகமாகன புலம்பெயர் தமிழர்களின் மூளைக்குள் பதியப்பட்டு விட்டது. தமிழ்க்கடை என்றால் ஊரின் நினைவு வரவேண்டாமோஊரில் கிராமங்கள் தோறும் உள்ள பெட்டிக்கடைகளில், கோபால் பற்பொடி, தேயிலை, பொரித்த கடலைப் பருப்பு, எள்ளு உருண்டை போன்ற பல பொருட்கள் பக்கெற் பக்கெற்றாகத் தொங்குமே ஏறக்குறைய அதே பாணியில்தான் இங்கே ஐரோப்பாவில் பல தமிழ்க் கடைகள் தங்களை வடிவமைத்து இருக்கின்றன.

 கடைக்கு உள்ளே போனால், முதலாளி யாருடனோ தொலை பேசியில் உரையாடிக் கொண்டிருப்பார். அல்லது கைத்தொலைபேசியை நோண்டிக் கொண்டிருப்பார். இதில் அவரது தொலைபேசி உரையாடல் இருக்கே அது எப்போதுமே full volume தான்

 கடைக்குள் பெட்டி பெட்டியாக இருக்கும் மரக்கறிகளை ஓரளவு அவதானித்து எடுத்து விடலாம். பச்சை மிளாகாயில்தான் கொஞ்சமாகத் தடுமாற்றம் வரும். முதற்கிழமை மிஞ்சிய, காம்புப் பக்கம் சாடையாக கறுத்து நசிந்து அழுது கொண்டிருக்கும் பச்சை மிளகாய்களும் புதியவைகளோடு சாமர்த்தியமாக கலந்து இருக்கும். ஒவ்வொன்றாக எடுத்துப் பார்க்க நேரம் எங்கே இருக்கிறது? அள்ளிப் போட்டு வங்கிக் கொண்டுபோய் வீட்டிலும் வாங்கிக் கட்டிக் கொள்ளத்தான் இருக்கு.

உள்ளே இருப்பதை கண்டு கொள்ளக் கூடாது என்பதற்காகத்தான் தேங்காயின் ஓடு இவ்வளவு கடினமாக இருக்கிறதோ என்று நான் சில சமயங்களில் நினைப்பதுண்டு.

 “தேங்காய் எப்பிடி நல்லதோ?” என்று ஒரு தடவை கடை முதலாளியிடம் நான் கேட்ட போது, “அது, அவனவனுக்குப் பெண்சாதி வாய்ச்ச மாதிரிஎன்று அவர் ஒரு அற்புதமான பதிலைத்  தந்து என்னைக் கவலைப்பட வைத்து விட்டார்.

 எங்கள் நாட்டுக் கடலில் பிடிபடும் மீன்கள் செத்தாலும் வீரியம் மிக்கவை. அவைகளை ஒருநாளும் பக்கெற்றுக்குள் அடைத்து வைக்க முடியாது. கடைக்குள் உள்ள குளிர்சாதனப் பெட்டிக்குள் அவை துள்ளிக் குதித்து பக்கெற்றை விட்டு வெளியே வந்து ஐஸ் படிந்து விறைப்பாகவே இருப்பதை பார்த்தாலே தெரியும்.

 சரி விடயத்துக்கு வருகிறேன்.

 எனது நகரில் இருக்கும் தமிழ்க்கடைக்கு போன கிழமை போயிருந்தேன். எனக்கான மரக்கறிகளை எடுத்துக் கொண்டு முதலாளியிடம் காசு கொடுக்கப் போகும் போதுதான் நினைவுக்கு வந்தது, முதல்நாள் வாங்கிய வெங்காயம். மலிவாக இருக்கிறதென்று Super market இல் இரண்டரைக் கிலோ வெங்காயம் 89 சென்ற்ஸுக்கு  வாங்கியிருந்தேன். “எதுக்கு இவ்வளவு? “ என்று வீட்டில் ஒரு பார்வை பார்த்த போது, “சீனிச்சம்பல் செய்யலாம்என்ற சமாளிப்போடு தப்பிவிட்டேன். சீனிச்சம்பலுக்கு மாசிக்கருவாடு போட்டால் அதன் ருசியே தனி. அந்த நினைவுதான் இப்பொழுது எனக்கு வந்தது.

 “தம்பி மாசிக்கருவாடு இருக்கே?”

 “மாசிக்கருவாடோ? முடிஞ்சுது எண்டு நினைக்கிறன்சொல்லிக் கொண்டே நிமிர்ந்து என் முகத்தைப் பார்த்த முதலாளிக்கு என்னவோ மனதில் சட்டென்று தோன்றி இருக்க வேண்டும். “பொறுங்கோ கீழே இருக்குதோ எண்டு பாத்திட்டு வாறன்

 போனவர் ஒரு கொர்லிக்ஸ் போத்தலுக்குள் இருந்த மாசிக்கருவாட்டு துகள்களுடன் வந்தார். “உங்களுக்கு அதிர்ஷ்டம் இருக்கண்ணை.ஒரு போத்தல் இருக்கு

 எனக்கான அதிர்ஷ்டம்  போத்தலுக்குள் இருந்த மாசிக் கருவாட்டுத் துகள்களுக்குள் அடங்கிபோனதில் சற்று கவலை இருந்தாலும் சிரித்துச் சமாளித்தேன்.

 முதலாளி மேசையில் வைத்த எனதுஅதிர்ஷ்டமாசிக் கருவாட்டு போத்தலை எதேச்சையாக நான் பார்த்த போதுதான் அது சொன்னது, use before 08.11.2016 என்று.

 “தம்பி கருவாடு செத்து ஒரு வருசத்துக்கு மேலாச்சுது போலை

 “செத்தால்தான் அண்ணை கருவாடு. உயிரோடு இருந்தால் அது மீன்முதலாளி அல்லவா. பேச்சு அந்த மாதிரி.

 “டேற் முடிஞ்சுது. 2016 எண்டு போட்டிருக்கு

 “ஊரிலை கருவாட்டுக்கு expiry date இருக்கே? இஞ்சை எல்லாத்துக்கும் ஒரு  date  போடுவாங்கள். சாமான் பழுதில்லை நம்பிக்கையா கொண்டு போங்கோ. இதுன்ரை விலை ஆறு யூரோ. உங்களுக்கு நான் நாலு யூரோ போடுறன்

 மலிவு வெங்காயத்துக்கே வீட்டில் ஒரு பார்வை கிடைச்சிருக்கு. மாசிக்கருவாட்டுக்காக இன்னொரு பார்வையை  எதுக்கு வில்லங்கத்துக்கு வாங்குவான்?

 “வேண்டாம் தம்பி

 முதலாளிக்கு சற்று கோபம் வந்திருக்க வேண்டும். அவரது பார்வை மாறியிருந்தது.

 “நீங்கள்  expiry date முடிஞ்சதை கடையிலை வைச்சிருக்கிறதாலை பிரச்சினைகள் வரலாம். கவனம்என்றேன்.

 “பிராங்போர்ட்டிலை வேண்டின இடத்திலை இதைக் கொண்டுபோய் திருப்பிக் குடுத்தால் புது லேபிள் ஒட்டி புது expiry date அடிச்சுத் தருவாங்கள். அப்ப சிலநேரம் விலை ஏழு யூரோவா இருக்கும்சொல்லிக் கொண்டே மாசிக் கருவாட்டுப் போத்தலை பத்திரமாக தன் மைசைக்குக் கீழே வைத்தார்.

 தமிழ்க்கடையை விட்டு வெளியே வரும் போதுஇந்த வெங்காயத்தை என்ன செய்யலாம்?” என்று யோசித்துக் கொண்டே வந்தேன்.

 கவி அருணாசலம் 

01.01.2018

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kavi arunasalam said:

 “தேங்காய் எப்பிடி நல்லதோ?” என்று ஒரு தடவை கடை முதலாளியிடம் நான் கேட்ட போது, “அது, அவனவனுக்குப் பெண்சாதி வாய்ச்ச மாதிரிஎன்று அவர் ஒரு அற்புதமான பதிலைத்  தந்து என்னைக் கவலைப்பட வைத்து விட்டார்

இன்னுமொரு அருமையான அனுபவப் பகிர்வு..!

இப்பவெல்லாம்....தேங்காயை உடைச்சுத் தான் வாங்கிறது! 

அண்ணை...தேங்காய் முடி போனால் கெதியாய்ப் பழுதாகிப் போடும் எண்டு கடைக்காரர் கதை விட்டுப் பார்த்தவர் தான்..!

அண்ணை....இல்லையெண்டால்...நான் கடையை மாத்த வேண்டி வரும் எண்டு சொன்ன பிறகு...முதலாளி அடக்கி வாசிக்கிறார்!

தொடர்ந்தும் எழுதுங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Kavi arunasalam said:

செத்துப்போன கருவாடு

 .... தமிழ்க்கடை என்றால் ஊரின் நினைவு வரவேண்டாமோஊரில் கிராமங்கள் தோறும் உள்ள பெட்டிக்கடைகளில், கோபால் பற்பொடி, தேயிலை, பொரித்த கடலைப் பருப்பு, எள்ளு உருண்டை போன்ற பல பொருட்கள் பக்கெற் பக்கெற்றாகத் தொங்குமே ஏறக்குறைய அதே பாணியில்தான் இங்கே ஐரோப்பாவில் பல தமிழ்க் கடைகள் தங்களை வடிவமைத்து இருக்கின்றன.

 கடைக்கு உள்ளே போனால், முதலாளி யாருடனோ தொலை பேசியில் உரையாடிக் கொண்டிருப்பார். அல்லது கைத்தொலைபேசியை நோண்டிக் கொண்டிருப்பார். இதில் அவரது தொலைபேசி உரையாடல் இருக்கே அது எப்போதுமே full volume தான்.

கிராமங்களில் மளிகைக் கடைகள் எப்படியிருக்குமென பழைய ஞாபகத்தை தூண்டியது இப்பதிவு..:)

 

1 hour ago, Kavi arunasalam said:

...

 “நீங்கள்  expiry date முடிஞ்சதை கடையிலை வைச்சிருக்கிறதாலை பிரச்சினைகள் வரலாம். கவனம்என்றேன்.

 “பிராங்போர்ட்டிலை வேண்டின இடத்திலை இதைக் கொண்டுபோய் திருப்பிக் குடுத்தால் புது லேபிள் ஒட்டி புது expiry date அடிச்சுத் தருவாங்கள். அப்ப சிலநேரம் விலை ஏழு யூரோவா இருக்கும்சொல்லிக் கொண்டே மாசிக் கருவாட்டுப் போத்தலை பத்திரமாக தன் மைசைக்குக் கீழே வைத்தார்.

 கவி அருணாசலம்.

 

ஏமாற்றத்தோடு கடையைவிட்டு வெளியே வந்த கவிக்கு, ஒரு மாசிக்கருவாடு போத்தல் உடனடியாக 'புது லேபில்' ஒட்டி டெலிவரி செய்ய கடைக்காரர் ஏற்பாடு செய்துள்ளார்.

image.jpg

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்கத்தை வாங்கி கொண்டு கொடுத்தாலும் குறை சொல்லும் ஆட்கள் பெண்கள் கருவாடோடு தலை தப்பியது என்று நினைத்துக்கொள்ளுங்கள் இல்லாட்டா உங்கள் மீது டெஸ்ட்டிங் நடந்திருக்கும் 

அனுபவபகிர்வு போல் இருக்கிறது வாழ்த்துக்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kavi arunasalam said:

உள்ளே இருப்பதை கண்டு கொள்ளக் கூடாது என்பதற்காகத்தான் தேங்காயின் ஓடு இவ்வளவு கடினமாக இருக்கிறதோ என்று நான் சில சமயங்களில் நினைப்பதுண்டு

தேங்காய் தோப்பில் பிறந்து வளர்ந்த நாங்களே கூடாத தேங்காயை வாங்கிக் கொண்டு வந்து வீட்டில் உடைக்க அது மணக்க

என்ன தோப்பு மாப்பிள்ளை இந்த தேங்காயை வாங்கி கொண்டு வந்திருக்கிறியள்!என்று மனைவி கேட்கும் போது ரொம்ப அசடு வழியும்.

5 hours ago, Kavi arunasalam said:

தமிழ்க்கடையை விட்டு வெளியே வரும் போதுஇந்த வெங்காயத்தை என்ன செய்யலாம்?” என்று யோசித்துக் கொண்டே வந்தேன்.

வெண்காயத்திற்கு காலாவதி இல்லாத வரை சந்தோசமே.

அனேகமான தமிழ்கடைகளில் புதிய புதிய லேபல்கள் தயாராக வைத்திருப்பார்களோ?

இங்கே ஒரு அடிக்கு மேல் பனி கொட்ட போகுது என்றால் எல்லாகடை அலுமாரிகளும் வெறுமையாக கிடக்கும்.அந்த நேரம் சனம் காலாவதி திகதி எல்லாம் பார்த்துக் கொண்டிராது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல கடைகளில தாங்களே லேபிளை மாத்திறாங்கள் எண்டு கேள்வி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kavi arunasalam said:

 தமிழ்க்கடையை விட்டு வெளியே வரும் போதுஇந்த வெங்காயத்தை என்ன செய்யலாம்?” என்று யோசித்துக் கொண்டே வந்தேன்.

மாசிக்கருவாடு போடாமலும் சீனிச்சம்பல் செய்யலாம் எண்டதை இந்த இடத்தில்லை சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பல கடைகளில தாங்களே லேபிளை மாத்திறாங்கள் எண்டு கேள்வி.

கேள்விப்பட்டனீங்களோ இல்லாட்டி சொந்த அனுபவமோ? ஏனெண்டால் நீங்களும் கொத்தாரும்  கொஞ்சநாள் கடை கல்லாப்பெட்டியெண்டு புடுங்குப்பட்டு திரிஞ்சனீங்கள் எல்லே...:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அநுபவப்பகிர்வு மிக நன்றாக சொல்லியுள்ளீர்கள்.  காலவதியான திகதிகளுடன் பல பொருட்கள் தமிழ் கடைகளில் இருப்பதை அவதானித்து வாங்க இப்பொழுது பழகி விட்டோம். மூடியில் சீல் பண்ணி இருக்காத எந்தப் பொருளையும் வாங்குவது நல்லதல்ல. மீன் செத்தால்தானே கருவாடு. பதிர்வுக்கு நன்றி.
மனைவி அமைவதெல்லம் இறைவன் கொடுத்த வரம்
நல்ல தேங்காய் அமைவதெல்லாம் வாங்குபவர் பெற்ற வரம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 “ஊரிலை கருவாட்டுக்கு expiry date இருக்கேஇஞ்சை எல்லாத்துக்கும் ஒரு  date  போடுவாங்கள்சாமான் பழுதில்லை நம்பிக்கையா கொண்டுபோங்கோஇதுன்ரை விலை ஆறு யூரோஉங்களுக்கு நான் நாலு யூரோ போடுறன்

 expiry   date   அண்மித்த  பொருட்க்கள் தான் மலிவு  விலையில் வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Kavi arunasalam said:

பிரேஸில் நாட்டில், குருவிகள் சோயாச் செடிகளை அழிப்பதில் இருந்து பாதுகாப்பதற்காக செடிகளின்மேல் தெளிக்கப்படும் இராசயன மருந்து மிகவும் ஆபத்தானது. இந்த மருந்தின் தாக்கம் சோயாவில் இருந்து தயாரிக்கும் ´Tofu’ விலும் கண்டறியப் பட்டிருக்கிறது என்பது சமீபத்திய ஆய்வு அறிக்கை. அப்படியாயின் புடலங்காய், பயித்தங்காய், முருங்கைக்காய், பாவற்காய் என்று பிளேன் ஏறி எங்களிடம் வந்து சேரும் மரக்கறிகளுக்கு என்ன  உரங்களைப் போட்டிருப்பார்கள்? அதைப் பற்றியெல்லாம் எங்களுக்கு ஏது கவலை.

எங்கள் சாப்பாடுகளே மருந்தாகி இருந்த காலம் உண்டு , இங்கு உணவே நஞ்சாகும் காலம் நாக்கு தினமும் சுவையாக சாப்பிடனும் என்று அலைய வஞ்சகமில்லாமல் கொட்டி கொள்கிறம் .விளைவு ஊரில் இருந்து வரும்போது கின் என்ற உடம்பு உள்ளே கறையான் அரித்த வீடாகி விட்டுது . 

இங்கு வரும் அநேக காய்கறிகளின் தாயகம் இந்தியா தான் அங்கு அவர்களுக்கே விளைபொருள் காணாது . காரணம் அவ்வளவு மக்கள் பெருக்கம் . இரண்டாம் உலகப்போரில் நஞ்சு ஆக தயாரிக்கப்பட்ட Endosulfan எனும் நஞ்சு இந்தியாவில் மிக   குறைந்த விலை கிருமி நாசினியாக உபயோகிக்கிரார்கள். இதை பலவருடம்களுக்கு முன்பே வளர்ந்த நாடுகள் விவசாயத்தில் உபயோகிப்பதை தடை செய்து விட்டன . ஆனால் துரதிஸ்டவசமாக தமிழகத்தில் இதன் தயாரிப்பை திமுக அரசியல் வாதியின் செல்வாக்கில் அவருக்கு அந்த நிறுவன பங்குகள் 70 வீதத்துக்கு மேல் உள்ளது .தமிழகத்தில் அதன் உபயோகம் கட்டுபாடு இல்லாமல் ஊக்குவிக்கபடுகிறது . விளைவு இங்கு ஐரோப்பிய யூனியனில் இருந்து பலமுறை எச்சரிக்கை கொடுக்கபட்டு Endosulfan எண்டோ சல்பன் அதிகளவில் செறிவாக காணபட்ட கறிவேப்பிலை தடை செய்யபட்டது . விளைவு பல ஏக்கர்களில் கறிவேப்பிலை விவசாயம் முடங்கியது அதன்பின் Endosulfan உபயோகிக்காமல் ஓர்கானிக் கறிவேப்பிலை என்று   அனுப்பினார்கள் இங்கும் அனுமதித்தார்கள் திடிர் என சோதனை செய்த போது Endosulfan உபயோகித்த கறிவேப்பிலை காணப்பட இங்குள்ள Port Health Authorities எந்த சமரசத்துக்கும் இடமில்லாமல் கறிவேப்பிலை விற்பதே தண்டனைக்குரிய குற்றமாக்கி விட்டார்கள்.

ஊரில் கொல்லையில் நிற்க்கும் antibiotics அதாங்க நோய் எதிர்ப்பு மருந்து நஞ்சாகிய  கதை இன்னும் வெண்டி,    பாவற்காய் , மாம்பழம் நிறைய கதைகள்   இருக்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, பெருமாள் said:

எங்கள் சாப்பாடுகளே மருந்தாகி இருந்த காலம் உண்டு , இங்கு உணவே நஞ்சாகும் காலம் நாக்கு தினமும் சுவையாக சாப்பிடனும் என்று அலைய வஞ்சகமில்லாமல் கொட்டி கொள்கிறம் .விளைவு ஊரில் இருந்து வரும்போது கின் என்ற உடம்பு உள்ளே கறையான் அரித்த வீடாகி விட்டுது . 

இங்கு வரும் அநேக காய்கறிகளின் தாயகம் இந்தியா தான் அங்கு அவர்களுக்கே விளைபொருள் காணாது . காரணம் அவ்வளவு மக்கள் பெருக்கம் . இரண்டாம் உலகப்போரில் நஞ்சு ஆக தயாரிக்கப்பட்ட Endosulfan எனும் நஞ்சு இந்தியாவில் மிக   குறைந்த விலை கிருமி நாசினியாக உபயோகிக்கிரார்கள். இதை பலவருடம்களுக்கு முன்பே வளர்ந்த நாடுகள் விவசாயத்தில் உபயோகிப்பதை தடை செய்து விட்டன . ஆனால் துரதிஸ்டவசமாக தமிழகத்தில் இதன் தயாரிப்பை திமுக அரசியல் வாதியின் செல்வாக்கில் அவருக்கு அந்த நிறுவன பங்குகள் 70 வீதத்துக்கு மேல் உள்ளது .தமிழகத்தில் அதன் உபயோகம் கட்டுபாடு இல்லாமல் ஊக்குவிக்கபடுகிறது . விளைவு இங்கு ஐரோப்பிய யூனியனில் இருந்து பலமுறை எச்சரிக்கை கொடுக்கபட்டு Endosulfan எண்டோ சல்பன் அதிகளவில் செறிவாக காணபட்ட கறிவேப்பிலை தடை செய்யபட்டது . விளைவு பல ஏக்கர்களில் கறிவேப்பிலை விவசாயம் முடங்கியது அதன்பின் Endosulfan உபயோகிக்காமல் ஓர்கானிக் கறிவேப்பிலை என்று   அனுப்பினார்கள் இங்கும் அனுமதித்தார்கள் திடிர் என சோதனை செய்த போது Endosulfan உபயோகித்த கறிவேப்பிலை காணப்பட இங்குள்ள Port Health Authorities எந்த சமரசத்துக்கும் இடமில்லாமல் கறிவேப்பிலை விற்பதே தண்டனைக்குரிய குற்றமாக்கி விட்டார்கள்.

ஊரில் கொல்லையில் நிற்க்கும் antibiotics அதாங்க நோய் எதிர்ப்பு மருந்து நஞ்சாகிய  கதை இன்னும் வெண்டி,    பாவற்காய் , மாம்பழம் நிறைய கதைகள்   இருக்கு .

உந்தப்பிரச்சனை அவுஸ்திரெலியாவில் இல்லை. சிட்னியில் பல தமிழ் வீடுகளில் கறுவெப்பமரம், கீரை ,மாமரம் எல்லாம் இருக்கிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சிட்னியில் சில கடைகளில்( உ+ம் ஆர்த்தி ஸ்பைஸ் பென்டில்கில்) மன்னாரில் உள்ள "சிவனருள் இல்லம்"  அறக்கட்டளையில் இருந்து தயாரிக்கப்படும் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. விலையும் மலிவு. வாங்கிறதினால் அங்கு ஊரில் உள்ளவர்களுக்கு உதவி செய்தோம் என்ற திருப்தியுமில்லோ கிடைக்குது.

Link to comment
Share on other sites

தமிழ்க்கடையை விட்டு வெளியே வரும் போது "இந்த வெங்காயத்தை என்ன செய்யலாம்?" என்று யோசித்துக் கொண்டே வந்தேன்.

animated-laughing-image-0175.gif

"இந்த வெங்காயத்தை (கடைக்காரனை) என்ன செய்யலாம்?"

 

ஐயா, கட்டுரை அருமை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ராசவன்னியன் said:

ஏமாற்றத்தோடு கடையைவிட்டு வெளியே வந்த கவிக்கு, ஒரு மாசிக்கருவாடு போத்தல் உடனடியாக 'புது லேபில்' ஒட்டி டெலிவரி செய்ய கடைக்காரர் ஏற்பாடு செய்துள்ளார்.

கொஞ்சம் அவசரப்பட்டு ஓடர் பண்ணிட்டீங்கள் ராசவன்னியன், கடையிலை வாங்கினால் நாலு யூரோதானே. புது லேபிள் ஓட்டினால் காசு கூடக் கேப்பாங்களே.

அதுசரி பழைய ரெலிபோனையே பிடிச்சு தொங்கிட்டு இருக்கிறீங்களே, எப்போ புதுசு வாங்கப் போறீங்கள்?

 
18 hours ago, ஈழப்பிரியன் said:

தேங்காய் தோப்பில் பிறந்து வளர்ந்த நாங்களே கூடாத தேங்காயை வாங்கிக் கொண்டு வந்து வீட்டில் உடைக்க அது மணக்க

என்ன தோப்பு மாப்பிள்ளை இந்த தேங்காயை வாங்கி கொண்டு வந்திருக்கிறியள்!என்று மனைவி கேட்கும் போது ரொம்ப அசடு வழியும்.

ஈழப்பிரியன், தேங்காய்த் தோப்பு ஆள், தேங்காய் வாங்கி ஏமாந்து வீட்டிலை வாங்கிக் கட்டி முகத்தில் எண்ணை வழியிறதைப் பார்த்தால் மனசு கொஞ்சம் ஆறுதலாக இருக்கும்

 
12 hours ago, குமாரசாமி said:

மாசிக்கருவாடு போடாமலும் சீனிச்சம்பல் செய்யலாம் எண்டதை இந்த இடத்தில்லை சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.

 

கடமைஉணர்வோடு தகவல் தந்ததற்கு, நன்றி குமாரசாமி.

 “இந்த வெங்காயத்தை என்ன செய்யலாம்?” என்று என்னை நானே நொந்து கொண்டேன் என்றொரு கருத்தும் கொள்ளலாம் அல்லது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு, இதற்கும் கட்டுரைக்கும் தொடர்பில்லை, ஆனாலும் கேட்காமல் இருக்க முடியவில்லை. “அன்னையைத் தமிழ்வாயால் 'மம்மி' என்றழைத்தாய்.. வெள்ளைக்காரன்தான் உனக்கு அப்பனா?”

என்று   போட்டிருக்கிறீர்கள். ‘ அன்னை’ என்பது தமிழ்வார்த்தைதானா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Kavi arunasalam said:

கந்தப்பு, இதற்கும் கட்டுரைக்கும் தொடர்பில்லை, ஆனாலும் கேட்காமல் இருக்க முடியவில்லை. “அன்னையைத் தமிழ்வாயால் 'மம்மி' என்றழைத்தாய்.. வெள்ளைக்காரன்தான் உனக்கு அப்பனா?”

என்று   போட்டிருக்கிறீர்கள். ‘ அன்னை’ என்பது தமிழ்வார்த்தைதானா?

"அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்." -கொன்றை வேந்தன்  - ஔவையார்   
"தமிழா! நீ பேசுவது தமிழா? , அன்னையைத் தமிழ்வாயால் 'மம்மி’ என்றழைத்தாய்…அழகுக் குழந்தையை ‘பேபி’ என்றழைத்தாய்… - காசி ஆனந்தன்
அன்னை, பெயர்ச்சொல். (பெற்ற) தாய்;அம்மா · (எ. கா.) அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம். மரியாதைக்குரிய வேறு பெண்களையும் இச் சொல்லால் குறிப்பதுண்டு.-அன்னை பூபதி   

 நான் தமிழ் படித்த பண்டிதனும் அல்ல.  யாராவது பண்டிதர்கள் தான் இதற்குப்பதில் சொல்லவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavi arunasalam said:

கொஞ்சம் அவசரப்பட்டு ஓடர் பண்ணிட்டீங்கள் ராசவன்னியன், கடையிலை வாங்கினால் நாலு யூரோதானே. புது லேபிள் ஓட்டினால் காசு கூடக் கேப்பாங்களே.

அதுசரி பழைய ரெலிபோனையே பிடிச்சு தொங்கிட்டு இருக்கிறீங்களே, எப்போ புதுசு வாங்கப் போறீங்கள்?

"ஓல்ட் ஈஸ் கோல்ட்" கேள்விப்பட்டதில்லையா..சார்..? :) Planning to buy 8 soon.

தங்களின் அனுபவ பதிவுகளும், நகைச்சுவையுடனான எழுத்தாற்றல் மிக நன்றாக உள்ளது..!

கனசடுதியில் வந்து போகும் தங்களின் 'யாழ் பிரசன்னம்' பற்றிய தொகுப்பு, யூடூபில் வெளியாகியுள்ளதே...! கவனித்தீர்களா...? :grin:

 

 

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப கடைகளில் மிஞ்சும் மரக்கறிகளை வெட்டி பலதும் கலந்து பக்கட்டுகளில் போட்டு ஒரு ஈரோவுக்கு கொடுக்கிறார்கள். தை மாதம் மூன்று ஈரோவுக்கு வித்த காலண்டர் இப்ப இலவசமாய் கிடைக்குது. வியாபாரத்தில் இதெல்லாம் சகஜம். எமக்கும் வேறு தெரிவுகள் இல்லையே.அடுத்த தலைமுறையை நினைத்தால் மிகவும் கவலையாய் இருக்கு...!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எத்தினை லேபல்களை மாத்தி மாத்தி ஒட்டினாலும் எங்கள் உடம்பு தாங்கும்! இரும்பைத் தின்று கஷாயம் குடிப்பவர்கள் அல்லவா நாங்கள்! இத்துப்போன கருவாட்டிலும் அழுகிப்போன வெங்காயத்திலும் செய்த சீனிச் சம்பல் சிம்பிளாக செரிக்கும்?

Link to comment
Share on other sites

நல்லதொரு அனுபவ கட்டுரை

தமிழ் கடைகளில் வாங்கி வாங்கி சாப்பிட்டு உடம்பு அதுக்கு ஏற்றமாதிரி இயைபாக்கம் ஆகிட்டுது. உண்மை நிலவரம் தெரிந்தாலும் இனி உணவுப் பழக்கத்தை மாத்தவும் முடியாது. சனி ஞாயிறுகளில் வல்லாரையும், முருங்கக் காயும், ஊர் கொடுவாவும் சாப்பிடாமல் எப்படி இருக்க முடியும்?

இங்கு கடந்த வாரம் நடந்த ஒரு விடயத்தை சொல்லாலம் என நினைக்கின்றேன்.

இங்கு இரா  சுப்பர் மார்கெட், ஸ்பைஸ் லேண்ட் (Spiceland)  என்ற இரண்டு கொஞ்சம் பெரிய தமிழ் கடைகள் இருக்கு. இவை இரண்டும் புதிய கிளைகளை திறக்க திறக்க சின்ன தமிழ் கடைகள் எல்லாம் பூட்டிக் கொண்டு போக வேண்டி வந்தது. சனம் எக்கச்சக்கமாக வரும் இவற்றுக்கு.  மார்க்கம் நகரில் இவற்றுக்கு அருகில் No Frills என்ற ஒரு பெரிய Grocery கடை இருக்கு (கனடா முழுதும் உள்ளனர் ). இந்த மார்க்கம் கடையினை நடத்த தமிழர் ஒருவர் அண்மையில்  வாங்கினார். தமிழ் கடைகளுக்கு பழக்கப்பட்ட எம் சனம் இங்கு அவ்வளவாக போகவில்லை.  போன வாரம் என்ன செய்தார் என்றால் 'ஊர் விளை மீன்' வாங்கி Sale போட்டார். மற்ற தமிழ் கடைகளில் ஒரு இறாத்தல் 7 dollars இற்கு விற்கப்படும் போது இங்கு 5 dollars இற்கு விற்றார் (அதிக பட்சம் 5 Lb தான் வாங்க முடியும்)..ரேடியோவிலும் விளம்பரம் கொடுத்தார்.   சனம் அள்ளுப்பட்டு போய் வாங்கினார்கள். புருஷன் 5 இறாத்தல் மனுசி 5 இறாத்தல் என்று வாங்கி  குவித்தனர். அத்துடன் மிளகாய் தூள், பப்படம், தமிழர்களின் மரக்கறிகள், தேங்காய் என்று நிறைய தமிழர்களை இலக்கு வைத்து விற்றனர். அங்கு வாங்கி முடிஞ்சு இரா சூப்பர் மார்க்கட் பக்கம் எட்டிப் பார்க்க மீன் பக்கம் ஒரு சனமும் இல்லை.

இன்றும் Sale போடுகின்றார்கள் என்று கேள்வி. நிழலியை 6 மணிக்கு அங்கு காணலாம் இன்று

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரு தடவை மட்டன் கொத்து சுட சுட வாங்கி வந்து நல்லா மென்று மென்று, அரைத்து அரைத்து, சுவைத்து சுவைத்து சாப்பிட்டேன், அடடா என்ன ருசி என்ன ருசி.. இடையிலே ஒரு துண்டு நல்ல மென்மையாக கடிபட்டிச்சு , குடலும் சேர்த்து அடிச்சிருக்கிறானுகள்போல என்று நினைத்து மகிழ்ச்சி டபுள் மடங்காகி விடாமல் சப்பினேன்,

ஒரு முடிவுக்கு வருகுதில்லையே எண்டு  வெளியில எடுத்து பார்த்தேன் நான் ரசித்து நீண்டநேரம் வாய்க்குள் இடம் வலமாக  நகர்த்தி நகர்த்தி சுவைத்தது ஒரு Finger cot, குடல் குழம்போடு சேர்ந்ததால் குடல் கலரிலயே இருந்துது,

ஆட்டுகுடல் என்று நினைத்து ருசித்த என்ர குடலே ஒரு நிமிஷம் ஆடிபோச்சு, ஒரு மணிநேரம் வாந்தியாகி ஆரோக்கியமே நாறி போச்சு, 

அதேபோல ரின் மீன் ஒரு தடவை வாங்கி வந்தேன்,சம்பல் போடலாம் என்று , ரின்னில் Expiration date- இருக்கல்ல, வீட்டில் வந்து ரின்னை திறந்தபோது உள்ளே தண்ணி விளாம்பள கலரில் இருந்தது மீன் துண்டுகள் அனைத்துமே கறள் பிடிச்ச கலரில் இருந்துது, கடைசியில் வெறும் பாணை , ஊர்ல நாய் பழஞ்சீலையை இழுத்தமாதிரி இழு இழு எண்டு இழுத்து சாப்பிட்டு விட்டு வேலைக்கு போனது எழுத்தில் சொல்லிமுடிக்க முடியாத  துயரம்.. 

கவி அருணாச்சலம் அவர்களின் பதிவு சுய ஆக்கம் மட்டுமல்ல, ஒவ்வொருவரும் அனுபவித்த சொந்த சோகம்,

உங்களின் எழுத்தோடு சேர்ந்த எச்சரிக்கையுணர்வை தூண்டும் ஆக்கத்துக்கு நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

நல்லதொரு அனுபவ கட்டுரை

தமிழ் கடைகளில் வாங்கி வாங்கி சாப்பிட்டு உடம்பு அதுக்கு ஏற்றமாதிரி இயைபாக்கம் ஆகிட்டுது. உண்மை நிலவரம் தெரிந்தாலும் இனி உணவுப் பழக்கத்தை மாத்தவும் முடியாது. சனி ஞாயிறுகளில் வல்லாரையும், முருங்கக் காயும், ஊர் கொடுவாவும் சாப்பிடாமல் எப்படி இருக்க முடியும்?

இங்கு கடந்த வாரம் நடந்த ஒரு விடயத்தை சொல்லாலம் என நினைக்கின்றேன்.

இங்கு இரா  சுப்பர் மார்கெட், ஸ்பைஸ் லேண்ட் (Spiceland)  என்ற இரண்டு கொஞ்சம் பெரிய தமிழ் கடைகள் இருக்கு. இவை இரண்டும் புதிய கிளைகளை திறக்க திறக்க சின்ன தமிழ் கடைகள் எல்லாம் பூட்டிக் கொண்டு போக வேண்டி வந்தது. சனம் எக்கச்சக்கமாக வரும் இவற்றுக்கு.  மார்க்கம் நகரில் இவற்றுக்கு அருகில் No Frills என்ற ஒரு பெரிய Grocery கடை இருக்கு (கனடா முழுதும் உள்ளனர் ). இந்த மார்க்கம் கடையினை நடத்த தமிழர் ஒருவர் அண்மையில்  வாங்கினார். தமிழ் கடைகளுக்கு பழக்கப்பட்ட எம் சனம் இங்கு அவ்வளவாக போகவில்லை.  போன வாரம் என்ன செய்தார் என்றால் 'ஊர் விளை மீன்' வாங்கி Sale போட்டார். மற்ற தமிழ் கடைகளில் ஒரு இறாத்தல் 7 dollars இற்கு விற்கப்படும் போது இங்கு 5 dollars இற்கு விற்றார் (அதிக பட்சம் 5 Lb தான் வாங்க முடியும்)..ரேடியோவிலும் விளம்பரம் கொடுத்தார்.   சனம் அள்ளுப்பட்டு போய் வாங்கினார்கள். புருஷன் 5 இறாத்தல் மனுசி 5 இறாத்தல் என்று வாங்கி  குவித்தனர். அத்துடன் மிளகாய் தூள், பப்படம், தமிழர்களின் மரக்கறிகள், தேங்காய் என்று நிறைய தமிழர்களை இலக்கு வைத்து விற்றனர். அங்கு வாங்கி முடிஞ்சு இரா சூப்பர் மார்க்கட் பக்கம் எட்டிப் பார்க்க மீன் பக்கம் ஒரு சனமும் இல்லை.

இன்றும் Sale போடுகின்றார்கள் என்று கேள்வி. நிழலியை 6 மணிக்கு அங்கு காணலாம் இன்று

என் மனதை.....எப்போதும் கொதி நிலைக்குக் கொண்டு சென்று விடுவதில்....இந்தத் தமிழ்க் கடைகளின் பங்கு அளப்பரியது!

விடலைப்பருவத்தில் ஒரு உறவினரின் கடையில் நின்றபோது...ஒரு நள்ளிரவு நேரத்தில்...ஒரு சிங்கள் நோனா.,..தனது அழுகின்ற குழந்தையைத் தோளில் சுமந்த படி...கடைக்கு வந்தார்! அவரைப் பார்த்ததுமே..மிகவும் வறுமையான நிலையில் வாழ்பவர் போலத் தெரிந்தது! அவர் முலைகளில் பாலே இல்லைப்போல தோன்றியது! குழந்தையைச் சமாதானப் படுத்துவதற்காக ஒரு றப்பர் சூப்பி ஒன்றை வாங்கத் தான் வந்திருந்தார்! அவரிடம்...ஐம்பது சதம் மட்டும் தான் இருந்தது! சூப்பியின் வழமையான விலையும் அப்போது அது தான்! குழந்தை அழுவதைக் கண்ட கடைச் சிப்பந்தி...சூப்பியின் விலை...இரண்டு ரூபாய் என்று சொல்ல...நோனாவிடம் காசில்லை! ஆனால் அந்த நேரம் வேறு கடைகளும் திறந்திருக்கவில்லை!அதைப் பார்த்துக் கொண்டிருந்த...அந்தோனியார் கோவிலுக்கு முன்னால்...பூ வித்துக் கொண்டிருந்த ஒரு முதியவர்...இரண்டு ரூபாய்களைக் கொடுத்து...அந்த சூப்பிய வாங்கிக் குழந்தையிடம் கொடுக்க....அந்தக் குழந்தையின் முகத்தில் தோன்றிய சிரிப்பையும்....அந்த நோனாவின் முகத்தில் தோன்றிய நன்றியுணர்வையும் எழுத்தில் வடிக்க இயலாது!

அப்போது நான் கடைக்காரரிடம் கேட்டேன்! ஏன்...நீங்கள் ஐம்பது சதத்துக்கே கொடுத்திருக்கலாமே என்று..!

அதற்கு அவர் சொன்ன பதில்   என்னால் இன்று வரை மறக்க முடியாதது! 

தம்பி...நீங்கள் நிண்ட படியால தான்...இரண்டு ரூபாய் சொன்னனான்! இல்லாவிட்டால் எப்படியும் ஒரு அஞ்சு ரூபா கறந்திருப்பன்!

அடுத்த நாள்....பொன்னம்பலவாணேசர் கோவிலில்....திருநீறும்...சந்தனமும்...போட்ட படி....பக்தியில் உருகிய நிலையில் அவரைக் கண்ட போது....தலையாட்டக் கூட எனக்கு மனம் வரவில்லை@

விள மீனை...ஐந்து டொலருக்கு விற்கும் அவருக்கு...நிச்சயம் இருபத்தைந்து வீதமாவது லாபம் இருக்கும் என்று வைத்துக் கொண்டாலும்...மீனின் விலை

நாலு டொலர் தான் வரும்! அதையே ஏழு டொலருக்கு...விற்றால்..மூன்று டொலர் லாபம் வரும்! அதாவது..எழுபத்தைந்து வீத லாபத்தில் விற்கிறார்கள்!இவர்களில் பலர் காசு மட்டும் தான் வாங்குவார்கள்! அதாவது விற்பனை வரியோ...வருமான வரியோ இவர்கள் கட்டுவது கிடையாது! அநேகமாக அகதி நிலையில் உள்ள..வாய் திறக்கவியலாதவர்களைத் தான் வேலைக்கும் வைத்திருப்பார்கள்! ஏறத்தாள லண்டனில்..பட்டேல்களின் வியாபார முறை தான் இவர்களதும்! இவர்களது வர்த்தக நிலையங்களின் இலாப நட்டக் கணக்குகள் செய்வதில்...கொஞ்சக் காலம் ஈடு பட்ட படியால்....இந்தப் பெரிய மனிதர்களின் கணக்குகள்..அத்து படி!
இதை விடவும் அநியாயம் என்னவென்றால்...இவர்கள் தான் எமது சமுதாயத்தைப் பிரதி பலிக்கும் முக்கியத்தர்களும் ஆவர்!  பனியிலும்...பாலை வனங்களிலும், நல்ளிரவுகளிலும் வேலை செய்து...வேலைக்கேற்ற கூலி கிடைக்காத தமிழர்கள் நாம்! இப்படி உழைக்கும் பணம்...இப்படியானவர்களிடம் தான்...இறுதியில் சங்கமிக்கிறது! எனது மகளுக்கு..இளமையில் பரத நாட்டியம் படிப்பித்த படியால்...அண்மையில் ஒரு அரங்கேற்றத்துக்குப் போக ஆசைப்பட்டாள்! நானும், மனுசியும் வேறு அலுவல் இருந்த படியால்...அவளே போய் ஒரு 'சல்வார் கமீஸ்' வாங்கி வந்தாள்! அதன் விலை.....இருநூற்று ஐம்பது டொலர்கள்! இந்தியாவில் அதன்   விலை...ஐம்பது டொலர்களுக்குள் தான் இருக்கும் என நினைக்கிறேன்!
எங்கள் பார்வையின் பொருளைப் புரிந்து கொண்ட அவள்....நானும் உங்களைப் போல...முன்னூற்றி ஐம்பது டொலரில்...இருந்து...இருநூற்றி ஐம்பது டொலர் வரை...பார்கயின் பண்ணித் தான் வாங்கினேன் என்றாள்!

கடைக்காரர் நிச்சயம்...கொடுப்புக்குள்...சிரித்திருப்பார்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, கந்தப்பு said:

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்." -கொன்றை வேந்தன்  - ஔவையார்   
"தமிழா! நீ பேசுவது தமிழா? , அன்னையைத் தமிழ்வாயால் 'மம்மி’ என்றழைத்தாய்

கந்தப்பு, நானும் உங்களைப் போல்தான் பண்டிதன் இல்லை.

ஆனாலும்அன்னைஎன்ற சொல் இஸ்லாமியர்கள் தமிழ்நாட்டுக்கு கொடுத்த சொல் என்பது மட்டும் தெரிகிறது.

காசி ஆனந்தன் பெரிய கவிஞர். அடியேன் சிறியேன் யாருடனும் மோத நான் விரும்பவில்லை.

 

1968இல் டீச்சம்மா என்றொரு திரைப்படம் வந்தது. அந்தப் படத்தில் கண்ணதாசன் பாடலை எழுத ரி.ஆர்.பாப்பா இசை அமைக்க பி.சுசீலா பாடியிருப்பார். நல்லதொரு பாடல். மனது சிரமப்படும் நேரமெல்லாம் இந்தப்பாடலைக் கேட்டு நான் கவலைகளை மறந்திருக்கிறேன்.

அம்மா என்பது தமிழ் வார்த்தை 

அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை 

அம்மா இல்லாத குழந்தைகட்கும் 

ஆண்டவன் வழங்கும் அருள் வார்த்தை 

 

கவலையில் வருவதும் அம்மா அம்மா 

கருணையில் வருவதும் அம்மா அம்மா 

தவறு செய்தாலும் மன்னிப்புக்காக 

தருமத்தை அழைப்பதும் அம்மா அம்மா 

 

பூமியின் பெயரும் அம்மா அம்மா 

புண்ணிய நதியும் அம்மா அம்மா 

தாய் மொழி என்றும் தாயகம் என்றும் 

தாரணி அழைப்பதும் அம்மா அம்மா 

 

அம்மா இருந்தால் பால் தருவாள் 

அவளது அன்பை யார் தருவார் 

அனாதை என்னும் கொடுமையை தீர்க்க 

ஆண்டவன் வடிவில் அவள் வருவாள் 

 

 

 

 

19 hours ago, suvy said:

அடுத்த தலைமுறையை நினைத்தால் மிகவும் கவலையாய் இருக்கு...!  tw_blush:

Suvy, கவலை எதற்கு? அடுத்த தலைமுறை தமிழ்க் கடைப்பக்கம் போகாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, புங்கையூரன் said:

இதை விடவும் அநியாயம் என்னவென்றால்...இவர்கள் தான் எமது சமுதாயத்தைப் பிரதி பலிக்கும் முக்கியத்தர்களும் ஆவர்!

புங்கையூரான், நல்லதொரு பதிவு.??

1952இல் பராசக்தி படம் வெளிவந்தது. அதில் கலைஞர் கருணாநிதி ஒரு பாடல் எழுதியிருந்தார் அதில் உள்ள வரிகள் எனக்குப பிடிக்கும்

ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே - காசு

காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே

உள்ளே பகை வையடா தாண்டவக்கோனே

உதட்டில் உறவாடடா தாண்டவக்கோனே

முட்டாப் பயலையெல்லாம் தாண்டவக்கோனே - காசு

முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே

பிணத்தைக்கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே 

பணப்பெட்டிமேலே கண் வையடா தாண்டவக்கோனே..”

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.