Jump to content

குருவித்தலை பாகற்காயில் கசப்பு நீக்க சில டிப்ஸ், ஆந்திர ஸ்பெஷல் காவரகாய புலுசு ரெஸிப்பி!


Recommended Posts

குருவித்தலை பாகற்காயில் கசப்பு நீக்க சில டிப்ஸ், ஆந்திர ஸ்பெஷல் காவரகாய புலுசு ரெஸிப்பி!

 

 
kuruvithalai_pakarkai_recipe_1

 

கசப்பு நீக்க டிப்ஸ்...

  • பாகற்காயை நன்றாகக் கழுவி மேற்புறத் தோலை உரசி எடுத்து விட்டு உட்புற விதைகளையும் நீக்கவும், பின்னர் 2 தேக்கரண்டி உப்பு கலந்த நீரில் 15 முதல் 20 நிமிடங்கள் ஊறவைத்துச் சமைக்கலாம். அதன் கசப்புத் தன்மை இப்போது நிச்சயம் குறைந்திருக்கும்.
  • வளையங்களாக நறுக்கப்பட்டு விதை நீக்கப்பட்ட பாகற்காயை குறைந்தது 1 மணி நேரமாவது மோரில் ஊற வைத்துப் பிறகு எடுத்து சமைத்தால் அப்போதும் அதன் கசப்புச் சுவை குறையும்.
  • பாகற்காயுடன் புளி சேர்த்தாலும் அதன் கசப்புச் சுவை குறையும்.
  • சிலர் பாகற்காயுடன் வெல்லம் கலந்து சமைப்பார்கள். சிறு கசப்பும் இனிப்புமான அந்தச் சுவை குழந்தைகளுக்கு பிடித்துப் போகும்.

எப்படிப் பார்த்தாலும் கசப்பு தான் பாகற்காயின் அடையாளம். அந்தக் கசப்பை நீக்கி விட்டு பாகற்காயை உண்பதால் அதன் சத்துக்களும் பலன்களும் குறையக் கூடுமோ என்று சிலருக்கு சந்தேகம் இருக்கலாம். கசப்பை நீக்குவதென்றால் இனிப்பில் முக்கி உண்பதில்லை. மொத்தமும் கசப்பு என்பதை மாற்றி சிறு கசப்புடன், அதன் கசப்பை சகித்துக் கொண்டு உண்பது எந்த விதத்திலும் கெடுதலான பலன்களைத் தரப்போவதில்லை. எனவே பாகற்காயின் கசப்பை இவ்விதமாகக் குறைத்து உண்பதில் தவறில்லை.

குழந்தைகளுக்கும் ஆரம்பம் முதலே இப்படிச் சமைத்து பாகற்காயை உண்ணப் பழகலாம்.

ஆந்திரா ஸ்டைல் காவரகாய புலுசு... (தெலுங்கில் காவரகாய என்றால் பாகற்காய், புலுசு என்றால் புளிக்குழம்பு)

தேவையான பொருட்கள்:

  • குருவித்தலை பாகற்காய் - 10 முதல் 15
  • இஞ்சி பூண்டு விழுது - சிறிதளவு
  • சின்ன வெங்காயம் - 10
  • பச்சை மிளகாய் - 2]
  • நாட்டுத் தக்காளி (பெரியது) - 1
  • புளி - எலுமிச்சை அளவு
  • தேங்காய் (துருவியது) - 1 சின்ன கப்
  • மசால் பொடி - 2 தேக்கரண்டி
  • மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - தேவையான அளவு
  • நெய் - 1 தேக்கரண்டி

செய்முறை:

பாகற்காயை தோல், விதை நீக்கி சுத்தம் செய்து நன்றாகக் கழுவி நீரை வடிகட்டவும். அடுப்பில் வாணலியை ஏற்றி எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து தாளித்து சின்ன வெங்காயம் போட்டு வதக்கி, வெங்காயம் பொன்னிறமானதும் அதில் பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் தேவையான அளவு மசால் பொடி, மஞ்சள் பொடி, உப்பு  சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து நன்றாகப் பிரட்டி வதக்கி ஊற வைத்துக் கரைத்த புளித்தண்ணீரையும் சேர்த்து கொதிக்க விடவும். அடுப்பை சிம்மில் வைத்து இரண்டு கொதி வந்ததும் தேங்காய்த் துருவலையும் சேர்த்து கொதிக்க விட்டு நன்கு கொதித்து வருகையில் ஒரு தேக்கரண்டி நெய் சேர்க்கவும். குழம்பு நன்றாகக் கொதித்து எண்ணெய் மிதக்க சுண்டி மேலே வரும் போது அடுப்பை அணைத்து இறக்கி விடலாம்.

பாகற்காயை இப்படிச் சமைப்பதால் அதன் கசப்புச் சுவை பெருமளவில் குறைந்து விடும்.

குழந்தைகளுக்கு இந்தச் சுவையைப் பழக்கினால் அவர்களுக்கும் பிடித்துப் போகும்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடல் ஆரோக்யத்துக்கு உறுதி தரக் கூடியது இந்தக் காவரகாய புலுசு.

பாகற்காயின் நன்மைகள்: 

  • ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
  • கெட்ட கொலஸ்ட்ராலை நீக்க உதவுகிறது.
  • பளபளப்பான சருமம் மற்றும் கரும்பட்டுப் போன்ற கூந்தல் அழகுக்கு தினமும் உணவில் பாகற்காய் சேர்த்துக் கொள்வது நல்லது.
  • கல்லீரலைச் சுத்தப்படுத்த உதவுகிறது.
  • உடல் எடையைக் குறைப்பதிலும் உதவுகிறது.
  • உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
  • கண்கள் நலம் பெறவும் பாகறகாய் உதவுகிறது.

ஆகவே வாரம் ஒருமுறையாவது இந்த ரெஸிப்பியை செய்து கொடுத்து குடும்பத்தினரை அசத்துங்கள்.

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.