Jump to content

மூன்று சகோதரிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

2015 இல் அண்ணனின் மகனுக்கு திருமணம் என்று சிட்னி அவுஸ்திரேலியா போயிருந்தேன்.அண்ணியின் குடும்பம் கொஞ்சம் பெரியது.லண்டன் பிரான்ஸ் ஜேர'மனி என்று தூர இடங்களில் இருந்தும் வந்திருந்தார்கள்.நான்காம் சடங்கு முடியும் வரை ஒரே மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டார் நண்பர்கள் என்று வந்து போய்க் கொண்டிருந்தனர்.நாளாக ஆக வருவோர் போவோரும் குறைந்து விட்டது.வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களும் தத்தமது நாடுகளுக்கு திரும்ப வேண்டும்.அதற்கிடையில் எல்லோரும் சேர்ந்து ஒவ்வொரு இடமாக கூட்டிக் கொண்டு போய் காட்டினார்கள்.

                                                                                 நாளைக்கு எல்லோரும் திறி சிஸ்ரேசைப் பார்க்க போகிறோம்.10 மணிக்கு இங்கிருந்து  வெளிக்கிட வேண்டும் எல்லோரும் வேளைக்கு எழும்பி வெளிக்கிடுங்கோ என்று மகன் சொன்னான்.அடுத்த பக்கத்தில் சுட்டு சாப்பிடக் கூடிய இறைச்சி சோளன் பாண் பழங்கள் என்று நிறைய சாமான் பட்டிலிட்டு கொண்டிருந்தார்கள்.என்னடா திறி சிஸ்ரேஸ் என்று இப்ப இதையும் கொண்டு போய் என்ன செய்கிறதென்று கேட்க பரவாயில்லi சித்தப்பா திறி சிஸ்ரேசைப் பார்த்துவிட்டு 2 மைல் ஓடினால் நல்ல பார்க் ஒன்று வரும் அங்கு போய் இதுகளை சுட்டு சாப்பிடுவோம் என்றான்.

                                                                               ஏற்கனவே போட்ட திட்டத்தின்படி எல்லோரும் வெளிக்கிட்டுக் கொண்டிருந்தனர்.நானும் திறி சிஸ்ரேசைப் பார்க்க போகிறோம் என்று வழமைக்கு மாறாக கொஞ்சம் நல்ல உடுப்பும் போட்டு அட திறி சிஸ்ரேசில ஒரு சிஸ்டர் தன்னும் என்னைப் பாரக்காதா என்று கொஞ்சம் பூசி மொழுகி கறுப்பு கண்ணாடியும் போட்டு கொண்டு வெளிக்கிட்டேன்.அப்பவும் மனைவி என்னப்பா இண்டைக்கு வழமையை விட தூக்கலாக இருக்கு என்றவுடன் திறி சிஸ்ரேசை எல்லோ பார்க்க போகிறோம் என்றவுடன் சரி சரி வாலிபத்தில் ஆடினது இப்ப காலைக்காலை போட்டு அடிக்கிறீங்கள் என்று ஒரு நமட்டு சிரிப்பு வேறை.  

                                                                             அன்று எல்லோரும் வேளைக்கே எழும்பி சொன்ன நேரத்தை விட கொஞ்ச நேரம் முன்பாகவே தாயாராக நின்றோம்.எப்படி இருந்தாலும் அதைக் காணவில்லை இதைக் காணவில்லை என்று ஒரு மாதிரி 5 கார்களில் எல்லோரும் புறப்பட்டோம்.இரண்டு மணி நேர ஓட்டம் என்றார்கள்.போகிற வழியில் நினைத்ததைத் தருகிற சிறிய வேதக் கோவில் இருக்கிறது அதையும் போய் கும்பிட்டு எல்லோர் வேண்டுதல்களையும் சொல்லிப் போட்டு வரும் என்றார்கள்.ஓசியில் கேட்பது கிடைக்குமென்றால் யார்தான் விடுவார்கள்.அங்கே போனால்அமைதியான ஒரு இடம் சிறிய கோவில்.யார் யார் என்னென்ன வேண்டினார்களோ தெரியாது.எனக்கு ஒரே திறி சிஸ்ரேசின் ஞாபகம் தான்.


                                                                              ஒரு மணி நேர ஓட்டத்தின் பின் இடத்துக்கு வந்துவிட்டோம் கொஞ்ச தூரம் நடக்க வேண்டும் என்றார்கள்.கிட்ட போக போக ஒரே மலைப் பிரதேசமாக இருந்தது.இன்னும் கிட்ட போக ஊரிலே மாட்டு இலையான் என்று சொல்வார்களே அந்த இலையான் எல்லோர் முகத்தையும் சுற்றி சுற்றி ஒரு வித இரைச்சலுடன் வந்து கொண்டிருந்தது.நல்ல அழகான இயற்கையாக இருந்தாலும் மாட்டு இலையான் ரொம்ப மோசமாக இருந்தது.வாயைத் திறந்து கதைக்க முடியவில்லை.என்னடா திறி சிஸ்ரேசைப் பாரக்க வந்து கதைக்கவும் ஏலாமல் இருக்கு திறி சிஸ்ரேசை கொண்டு போய்  காட்டுங்கோடா என்றால் சித்தப்பா எங்கை தெரியுது பாருங்கோ என்றான்.நானும் சுற்றி சுற்றி பார்க்கிறேன் எங்களோடு வந்திருந்தவர்களும் சுற்றி சுற்றி பார்க்கிறார்கள்.பின்பு தான் சொன்னான் மூன்று ஆள் மாதிரி மலை தெரியுது அது தான் திறி சிஸ்ரேஸ்.நான் மாத்திர மல்ல அங்கே புதிதாக வந்த எவருமே இதை எதிர் பார்க்கவில்லை.

                                                                            மலையைப் பார்க்க வித்தியாசமாக இருந்தாலும் ஏதேதோ எல்லாம் கற்பனை பண்ணிக் கொண்டு போய் ஏமாந்துவிட்டது போல ஒரு உள்ளுணர்வு.என்னைப் போலவே பலரும் எண்ணிக் கொண்டு வந்ததை பின்னர் பார்க்கில் போயிருந்து கதைக்கும் போது அட இதாடா திறி சிஸ்ரேஸ் நாங்களும் ஏதோ என்று எண்ணிவிட்டோம் என்னும் போது எனது மனமும் ஆகா நம்மளை மாதிரியே எல்லோரும் எண்ணி வந்ததை நினைக்க கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.நாங்கள் பார்த்து ரசித்த மூன்று சகோதரிகளை நீங்களும் ரசிக்க வேண்டாமோ?

 

IMG_1473.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அந்த நடுவில் இருக்கிறவ மட்டும்தான் கொஞ்சம் குண்டா இருக்கின்றா, மற்ற இருவரும் ஸ்லிம்மாகத்தானே இருக்கினம்......! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, suvy said:

ஏன் அந்த நடுவில் இருக்கிறவ மட்டும்தான் கொஞ்சம் குண்டா இருக்கின்றா, மற்ற இருவரும் ஸ்லிம்மாகத்தானே இருக்கினம்......! tw_blush:

அக்கா தங்கச்சி என்றால் ஒரே சைசில் இருக்கவா வேண்டும்?அவுசுக்காரர் வந்தா தான் அதற்கான காரணங்கள் தெரியவரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டூ சிஸ்டர்ஸ்

 

மூன்று சகோதரிகளைப் பார்க்க அவ்வளவு தூரம் அலைச்சலோடு போகாமல், எம் மதுரை தமிழ் மண்ணில் முகிலோடு விளையாடி கம்பீரமாய் வீற்றிருக்கும் இந்த இரண்டு சகோதரிகளை (டூ சிஸ்டர்ஸ்) பார்க்க உங்களுக்கு கொடுப்பினை இல்லை! 

so sad indeed..! :unsure:

 

Pillar_Rocks_in_Kodaikanal.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 த்ரீ  சிஸ்டேர்ஸ் க்கு    இன்னும் இரண்டு சிஸ்டேர்ஸ் இருக்கினம் போல .... பகிர்வுக்கு நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்பிரியன்...எங்கட தங்கச்சிமார் கொஞ்சம்....வடிவு குறைவு தான்!

காக்கைக்கும் தன குஞ்சு பொன் குஞ்சல்லவா? 

கீரிமலையோடு....திருப்திப் பட்டவர்கள் நாங்கள்! இது போதும்!

கொஞ்சம் எட்டி நடந்திருந்தீர்கள் என்றால்....ஜெனலோன் கேவ்ஸ் என்று நிலங் கீழ் குகைகள் இருக்கின்றன! அழகான மலைகளின் கீழ் .....கிலோ மீற்றர்கள் நீளமான சுண்ணாம்புக் குகைகள்!

அந்த அழகைப் பருகுவதற்கு ...ஆயிரம் கண்கள் வேண்டும்!

jenolan_caves2016.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image result for seven virgin mountains sri lanka

என்னய்யா.... மூணும், இரண்டும்... சிஸ்டேர்ஸ்.... கிழவிகளோ ?

இலங்கை மஸ்கெலியா... ஏழு கன்னி மலைகள்.... பாருங்கய்யா... பாருங்க...

70 துகளில், ஹஜ் பயணம் போய் ஊர் திரும்பிக் கொண்டிருந்த, இந்தோனேசியாவின் கருடா விமானம் மோதி அனைத்து பயணிகளும் மரணித்தால், இந்த கன்னிகள்... புகழ் பெற்று.... இன்னும் கன்னிகளாகவே உள்ளன.

so sad...tw_cry:Image result for seven virgin mountains sri lanka

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ராசவன்னியன் said:

மூன்று சகோதரிகளைப் பார்க்க அவ்வளவு தூரம் அலைச்சலோடு போகாமல், எம் மதுரை தமிழ் மண்ணில் முகிலோடு விளையாடி கம்பீரமாய் வீற்றிருக்கும் இந்த இரண்டு சகோதரிகளை (டூ சிஸ்டர்ஸ்) பார்க்க உங்களுக்கு கொடுப்பினை இல்லை! 

சரி இந்தியாவுக்கு போகும் போது போய் பார்த்தா சரி.

7 hours ago, நிலாமதி said:

 த்ரீ  சிஸ்டேர்ஸ் க்கு    இன்னும் இரண்டு சிஸ்டேர்ஸ் இருக்கினம் போல .... பகிர்வுக்கு நன்றி 

புதிது புதிதாக இன்னும் வந்து கொண்டிருக்கினம்.ஆனால் பிறதேசைத்தான் காணவில்லை.

4 hours ago, புங்கையூரன் said:

கொஞ்சம் எட்டி நடந்திருந்தீர்கள் என்றால்....ஜெனலோன் கேவ்ஸ் என்று நிலங் கீழ் குகைகள் இருக்கின்றன! அழகான மலைகளின் கீழ் .....கிலோ மீற்றர்கள் நீளமான சுண்ணாம்புக் குகைகள்!

பெடியளும் தண்ணி பார்ட்டீயும் எங்கேயும் போகவிட்டா தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

இலங்கை மஸ்கெலியா... ஏழு கன்னி மலைகள்.... பாருங்கய்யா... பாருங்க...

இப்படி எத்தனை எத்தனை எமக்கு தெரியாமல் இருக்கலாம்.தகவலுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

..இலங்கை மஸ்கெலியா... ஏழு கன்னி மலைகள்.... பாருங்கய்யா... பாருங்க...

இன்னங்கப்பா 'கன்னி'யின்னு பக்கத்துல போனா 'கெழவி'யா இருக்கு..? :):grin:

 

Seven-Virgins-Hills-in-Maskeliya-1448873

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்பிரியன் அண்ணா பார்த்த மூன்று சகோதரிகளில் இடப்பக்கம் இருப்பவர் ஸ்லிம்மாகவும் உயரமாகவும் இருப்பதால் மனசுக்கு பிடித்துப்போயிற்று. அவுஸ் போகும்போது அவர் கன்னியாக இருந்தால் கட்டாயம் ஒரு விசிற் அடிக்கத்தான் இருக்கு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் Utah மாநிலத்தின் கிழக்குப் பகுதி Moab என்ற நகரை அண்மித்த பகுதிகளில் ஏகப்பட்ட 'செவ்விந்திய சிஸ்டர்ஸ்' இருக்கிறார்களே ஈழப்பிரியன், அவர்களை கவர்ந்தாகிவிட்டதா..? :unsure:

Fisher_Towers_at_sunset.jpg  Moab-Arches-national-park-in-moab.jpeg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

ஈழப்பிரியன் அண்ணா பார்த்த மூன்று சகோதரிகளில் இடப்பக்கம் இருப்பவர் ஸ்லிம்மாகவும் உயரமாகவும் இருப்பதால் மனசுக்கு பிடித்துப்போயிற்று. அவுஸ் போகும்போது அவர் கன்னியாக இருந்தால் கட்டாயம் ஒரு விசிற் அடிக்கத்தான் இருக்கு?

அந்த சகோதரிகள் கூட இருந்த சகோதரிகள் காலப் போக்கில் அழிந்து இப்போ மூவர் மட்டுமே மிஞ்சி இருப்பதாக சொன்னார்கள்.நீங்கள் போகும் போது அதிலும் எத்தனை பேர் காணாமல் போகிறார்களோ தெரியாது.

10 hours ago, ராசவன்னியன் said:

அமெரிக்காவின் Utah மாநிலத்தின் கிழக்குப் பகுதி Moab என்ற நகரை அண்மித்த பகுதிகளில் ஏகப்பட்ட 'செவ்விந்திய சிஸ்டர்ஸ்' இருக்கிறார்களே ஈழப்பிரியன், அவர்களை கவர்ந்தாகிவிட்டதா..? :unsure:

அமெரிக்காவின் நடு மாநிலங்கள் அதிகம் படிக்காத வெள்ளையர்களைக் கொண்ட மாநிலம்.இப்போதும்இனதுவேசம் கொண்டவர்கள்.இதனால் நம்மவர்கள் மிகவும் குறைவு.ஏதாவதொரு சாட்டை வைத்து போக எமக்கும் சந்தர்ப்பம் குறைவு.(இல்லை).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

அந்த சகோதரிகள் கூட இருந்த சகோதரிகள் காலப் போக்கில் அழிந்து இப்போ மூவர் மட்டுமே மிஞ்சி இருப்பதாக சொன்னார்கள்.நீங்கள் போகும் போது அதிலும் எத்தனை பேர் காணாமல் போகிறார்களோ தெரியாது.

அமெரிக்காவின் நடு மாநிலங்கள் அதிகம் படிக்காத வெள்ளையர்களைக் கொண்ட மாநிலம்.இப்போதும்இனதுவேசம் கொண்டவர்கள்.இதனால் நம்மவர்கள் மிகவும் குறைவு.ஏதாவதொரு சாட்டை வைத்து போக எமக்கும் சந்தர்ப்பம் குறைவு.(இல்லை).

ஈழப்பிரியன், மெல்பனிலும் பன்னிரண்டு அப்போஸ்தலர்கள் கடலுக்குள் நின்று தவம் செய்கிறார்கள்!

இவர்களின் சிலர் தண்ணீருக்குள் போய் விட்டார்களாம்! இன்னும் சிலர் மண்ணுக்குள் இருக்கிறார்களாம்! கடல் நீர் கரையை அரிக்க....அரிக்க...இவர்கள் காலப் போக்கில் வெளியே வருவார்களாம்!

முன்பு இரண்டு அப்போச்தலர்களைத் தொடுத்து...ஒரு லண்டன் ப்ரிட்ஜும் இருந்தது!

இப்போது அது உடைந்து விழுந்து விட்டது!

உங்கள் திரி மூலம்...நிறைய விசயங்கள் அறியக் கூடியதாக இருக்கின்றது!

depositphotos_9377370-stock-photo-12-apo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புங்கையூரன் said:

உங்கள் திரி மூலம்...நிறைய விசயங்கள் அறியக் கூடியதாக இருக்கின்றது!

உண்மை தான் புங்கை மூன்று சகோதரிகளை எழுதப் போக உலகெங்கும் உள்ள சகோதரிகளை இணைத்து பார்க்க வைத்துள்ளது.மிகவும் ஆச்சரியமாகவும் இருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 04/03/2018 at 3:57 AM, ராசவன்னியன் said:

இன்னங்கப்பா 'கன்னி'யின்னு பக்கத்துல போனா 'கெழவி'யா இருக்கு..? :):grin:

 

Seven-Virgins-Hills-in-Maskeliya-1448873

கிழவங்களுக்கும் கன்னிகள் தான் கேட்குது :11_blush:

ஈழப்பிரியன் சுவாரசியமாக எழுதியிருக்கிறீர்கள். இன்னும் கொஞ்சம் மிச்ச பார்த்த இடங்களைப் பற்றியும் எழுதியிருக்கலாம்.

On 03/03/2018 at 7:01 PM, ராசவன்னியன் said:

டூ சிஸ்டர்ஸ்

 

மூன்று சகோதரிகளைப் பார்க்க அவ்வளவு தூரம் அலைச்சலோடு போகாமல், எம் மதுரை தமிழ் மண்ணில் முகிலோடு விளையாடி கம்பீரமாய் வீற்றிருக்கும் இந்த இரண்டு சகோதரிகளை (டூ சிஸ்டர்ஸ்) பார்க்க உங்களுக்கு கொடுப்பினை இல்லை! 

so sad indeed..! :unsure:

 

Pillar_Rocks_in_Kodaikanal.jpg

இம்மலைகளில் போய் பார்க்கமுடியுமா???? அல்லது இது சட்லைட்டில்  எடுத்ததா அண்ணா???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கிழவங்களுக்கும் கன்னிகள் தான் கேட்குது :11_blush:

யம்மா.. நீங்க வேறை, அவர் கன்னி என்று எழுதியதை சரியன்று என சொல்ல வந்தேன்..!

 

1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இம்மலைகளில் போய் பார்க்கமுடியுமா???? அல்லது இது சட்லைட்டில்  எடுத்ததா அண்ண???

இந்த மலை தொகுதிகள், கொடைக்கானலில் உள்ளது..  "பில்லர் ராக்ஸ்" என்று பெயர். கொடைக்கானலில் அவசியம் காணவேண்டிய பகுதி.

எத்தனை தமிழ் சினிமாக்களில் இந்த இடம் வந்துள்ளது என தங்களுக்கு தெரியாதா? :unsure:

கொடைக்கானல் மலை நகரம், மதுரைக்கும், திண்டுக்கல்லுக்கும் நடுவே உள்ளது.

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ராசவன்னியன் said:

யம்மா.. நீங்க வேறை, அவர் கன்னி என்று எழுதியதை சரியன்று என சொல்ல வந்தேன்..!

 

இந்த மலை தொகுதிகள், கொடைக்கானலில் உள்ளது..  "பில்லர் ராக்ஸ்" என்று பெயர். கொடைக்கானலில் அவசியம் காணவேண்டிய பகுதி.

எத்தனை தமிழ் சினிமாக்களில் இந்த இடம் வந்துள்ளது என தங்களுக்கு தெரியாதா? :unsure:

கொடைக்கானல் மலை நகரம், மதுரைக்கும், திண்டுக்கல்லுக்கும் நடுவே உள்ளது.

 

 

 

 

பாட்டுக் கட்டங்களில் மலையை சும்மா பார்ப்பதோடு சரி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பாட்டுக் கட்டங்களில் மலையை சும்மா பார்ப்பதோடு சரி

ஓ...!  பெண்கள் ஆர்வமுடன் பார்ப்பது எவையெவை என ஆண்களுக்கு புரியாததா என்ன? :grin::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Capture.png

மேலே படத்தில் காட்டப்பட்ட குறுகிய பாதை வரை நடந்து செல்லலாம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"திரி ஸ்டார்" இடத்தில் இருந்து சிலநிமிடப்பயணங்களில் Scenic World  என்ற இடத்தினை அடையலாம்.

அங்கு உலகில் மிகவும் சரிவான பாதையில் (52 பாகை)  செல்லும் புகையிரச் சுற்றுலா செல்லலாம்.

download.jpg

download_1.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, கந்தப்பு said:

மேலே படத்தில் காட்டப்பட்ட குறுகிய பாதை வரை நடந்து செல்லலாம்.

வணக்கம் கந்தப்பு.இங்கு நிம்மதியாக கொஞ்ச நேரம்நின்று ரசிக்க முடியாமல் போய்விட்டது.முதலாவது மாட்டிலையான் இரண்டாவது வந்தவர்கள் அங்கிருந்து 2-3 மைல் தொலைவிலிருந்த பார்க்குக்கு போய் அனுபவிக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்தார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஈழப்பிரியன் சுவாரசியமாக எழுதியிருக்கிறீர்கள். இன்னும் கொஞ்சம் மிச்ச பார்த்த இடங்களைப் பற்றியும் எழுதியிருக்கலாம்.

மற்றய இடங்கள் எல்லாம் ஏற்கனவே புத்தகங்களிலோ தொலைக்காட்சியிலோ பார்த்திருப்பீர்கள்.அத்துடன் இந்தப் பயணம் மூன்று சகோதரிகளைப் பார்ப்போம் என்று போகும் போது இப்படி ஒரு கல்லைக் காட்டுவார்கள் என்று நினைக்கவில்லை.வெளியில் இருந்து போன எல்லோருமே அட இதுவா என்று விழுந்து விழுந்து சிரித்தோம்.அதனாலேயே இதைப் பற்றி எழுதினேன்.

Link to comment
Share on other sites

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

உங்களது three sisters பயண அனுபவத்தை இன்று வாசித்தேன்.. அந்த மூன்று சகோதரிகளை பார்த்து சந்தோஷமே.. அவர்களது வாழ்க்கையை பற்றியும் கதை உள்ளது.. அவர்கள் இப்பவும் அப்படியேதான் இருக்கிறார்கள்.. கடந்த வியாழன்தான் அவர்களை பார்த்துவிட்டு வந்தேன்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.