Jump to content

வாங்கோ ஒடியல் கூழ் குடிக்கலாம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கிண்ணத்தில் விட்டு ஒரு துண்டு தேங்காய் சொட்டும் எடுத்து கடித்து கடித்து குடித்துக் கொண்டிருங்கோ.செய்முறையை ஆறுதலாக எழுதுகிறேன்.இது மச்சக் கூழு; சைவக்காரர் கையை வைத்திடாங்தோங்கோ.

IMG-0900.jpg

IMG-0901.jpg

தேவையான பொருட்கள்.
ஒடியல் மாவு
மீன்
நண்டு(சிறியது)
இறால்
மரவள்ளிகிழங்கு
பயிற்றங்காய்
பலாக்கொட்டை
சோழன்
பச்சைமிளகாய்
பழப்புளி
உப்பு
செத்தல்மிளகாய்

செய்முறை
பெரிய சட்டி அல்லது குண்டானில் முக்கால்வாசி தண்ணீர் நிரப்பி மரக்கறி மீன் வகைகளைப் போட்டு கொதித்த பின் செத்தல்மிளகாய் அடித்து(உறைப்பு கூடுதலாக இருந்தால் நல்லது)போட்டு நன்றாக கொதித்து அவிந்த பின் பழப்புளியை கரைத்து விடவும்.கடைசியில் ஒடியல் மாவைக் கரைத்து விடவும்.இறக்க முதலே உப்பு புளி உறைப்பு உங்களுக்கு ஏற்ற மாதிரி இருக்கிறதா என்று சரி பார்த்துக் கொள்ளவும்.

கூழ் பலரும் பல இடங்களில் பல மாதிரி செய்வார்கள்.இது நாங்கள் செய்த முறை மட்டுமே.கூழ் தனியே இருந்து குடிக்கமுடியாது.ஐந்து பத்து பேர் இருந்தால்த் தான் கலகலப்பாக இருக்கும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூழைக் காய்ச்சி வைச்சுப் போட்டு, பனங்கள்ளு வாங்கியண்டோடியாறன் போனாளை காணமப்பா....

அங்கையே அடிச்சிற்று வழக்கம் போல மப்பில விழுந்து கிடக்கிறாரோ தெரியேல்ல... 

சுவியர் வேற, அந்தரப்படுறார்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Nathamuni said:

கூழைக் காய்ச்சி வைச்சுப் போட்டு, பனங்கள்ளு வாங்கியண்டோடியாறன் போனாளை காணமப்பா....

அங்கையே அடிச்சிற்று வழக்கம் போல மப்பில விழுந்து கிடக்கிறாரோ தெரியேல்ல... 

சுவியர் வேற, அந்தரப்படுறார்...

அவர் சைவக்காரர் கை வைக்க வேண்டாம் என்று சொல்லிபோட்டார்......!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, suvy said:

Résultat de recherche d'images pour "angry moving gif"

ஏனிந்த கடுப்பு?

5 hours ago, Nathamuni said:

கூழைக் காய்ச்சி வைச்சுப் போட்டு, பனங்கள்ளு வாங்கியண்டோடியாறன் போனாளை காணமப்பா....

அங்கையே அடிச்சிற்று வழக்கம் போல மப்பில விழுந்து கிடக்கிறாரோ தெரியேல்ல... 

சுவியர் வேற, அந்தரப்படுறார்...

வந்துட்டேன்யா வந்துட்டேன்.

Link to comment
Share on other sites

நிறத்தையும், இறுக்கத்தையும் பார்த்தா, கூழுக்கு தேவையில்லாத சாமான்கள் சேர்த்தமாதிரி தெரியுது, சத்தென்றுநினைத்து; பூசணி/உ.கிழங்கு, Chili beans, etc.

எழுதினாத்தானே ஒருமுடிவுக்கு வரலாம், கொன்னந்து வைச்சுட்டு பிலாவிலை பொறுக்கப்போட்டியளாக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%  %E0%AE%95%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D.jpg

ஒடியல் கூழ் அருந்துவதில் சில நுனுப்பங்கள் இருக்கின்றன, ஒரு சாதாரண பாத்திரத்தில் ஒடியல் கூழை விட்டு குடித்தால் அதன் சரியான சுவை தெரியாது, அதானால் பனை ஓலையில் 'பிளா' தயாரித்து அதில் கூழ் குடிக்கும்போது அதிக சுவயைத் தரும். அடுத்ததாக உறவினர் நண்பர்களோடு சேர்ந்து, அதாவது பலருடன் சேர்ந்து கூழ் குடிக்கும் போது அதன் உணர்வுகள் புரியும்.

கூழ் குடித்து அரை மணி நேரத்துக்கு முன் நீர் அருந்தல் ஆகாது. கூழ் குடிக்கும் போது பேச கூடாது, காரணம் கூழில் உள்ள மீன் முற்கள் தொண்டை பகுதியில் போறுக்க கூடும், சிறு குழந்தைகள் கூழ் குடிக்கும் போது அதிக கவனம் எடுக்கவும், காரணம்: கூழின் கார தன்மை, மற்றும் கூழில் இருக்கும் மீன் முள்ளுகள். கூழ் எப்பொழுதும் அதிக சூடாகவே குடிக்க வேண்டும்.

ஒடியல் கூழ்

 

நான் இந்த ஒடியல் கூழை கண்ணால் கண்டதும் கிடையாது.

எங்கள் பகுதிகளில் கேழ்வரகு கூழ், அதில் பழைய சோற்றைக் சிறிது கலந்து, உரித்த வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை ஒரு கடி கடித்துக்கொண்டே சாப்பிட்டால் அமிர்தமாய் இருக்கும். பெரும்பாலும் விவசாயம் செய்யும்ப்பொது வயல்வெளிகளின் நடுவே மதிய உணவாக இதை அருந்துவர்.

என்னுடைய தந்தையாருடன் வயலில் பயிர்செய்கையின்போது பலமுறை கேழ்வரகு கூழை அருந்தியுள்ளேன்.

201704051258176298_how-to-make-ragi-kooz  201707290148_kuww.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, ராசவன்னியன் said:

%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%  %E0%AE%95%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D.jpg

ஒடியல் கூழ் அருந்துவதில் சில நுனுப்பங்கள் இருக்கின்றன, ஒரு சாதாரண பாத்திரத்தில் ஒடியல் கூழை விட்டு குடித்தால் அதன் சரியான சுவை தெரியாது, அதானால் பனை ஓலையில் 'பிளா' தயாரித்து அதில் கூழ் குடிக்கும்போது அதிக சுவயைத் தரும். அடுத்ததாக உறவினர் நண்பர்களோடு சேர்ந்து, அதாவது பலருடன் சேர்ந்து கூழ் குடிக்கும் போது அதன் உணர்வுகள் புரியும்.

கூழ் குடித்து அரை மணி நேரத்துக்கு முன் நீர் அருந்தல் ஆகாது. கூழ் குடிக்கும் போது பேச கூடாது, காரணம் கூழில் உள்ள மீன் முற்கள் தொண்டை பகுதியில் போறுக்க கூடும், சிறு குழந்தைகள் கூழ் குடிக்கும் போது அதிக கவனம் எடுக்கவும், காரணம்: கூழின் கார தன்மை, மற்றும் கூழில் இருக்கும் மீன் முள்ளுகள். கூழ் எப்பொழுதும் அதிக சூடாகவே குடிக்க வேண்டும்.

ஒடியல் கூழ்

 

நான் இந்த ஒடியல் கூழை கண்ணால் கண்டதும் கிடையாது.

எங்கள் பகுதிகளில் கேழ்வரகு கூழ், அதில் பழைய சோற்றைக் சிறிது கலந்து, உரித்த வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை ஒரு கடி கடித்துக்கொண்டே சாப்பிட்டால் அமிர்தமாய் இருக்கும். பெரும்பாலும் விவசாயம் செய்யும்ப்பொது வயல்வெளிகளின் நடுவே மதிய உணவாக இதை அருந்துவர்.

என்னுடைய தந்தையாருடன் வயலில் பயிர்செய்கையின்போது பலமுறை கேழ்வரகு கூழை அருந்தியுள்ளேன்.

201704051258176298_how-to-make-ragi-kooz  201707290148_kuww.jpg

சில உணவு வகைகளின் மூலவரலாறுகளை நாம் எண்ணிப் பார்ப்பதில்லை. இலங்கையின் பலவும்  யாழ்ப்பாணத்தின் சிலவும், ஐரோப்பியர்களினால்  மறுசீரமைக்கப் பட்ட உணவுகள் ஆகும்.

தமிழகமும், தென் இந்தியாவும், பிரிட்டிஷ் காரர் வந்த 18ம் நூறாண்டு வரை சுதந்திரமானது. இலங்கையோ 16ம் நூறாண்டின் ஆரம்பம் முதல், பிரிட்டிஷ்காரர் வரும்வரை ஏறக்குறைய 250 வருடங்கள், போர்த்துக் கியருக்கு, பின்னர் டச்சுக்காரர்களுக்கும்  அடிமையானது. அவர்கள் 130 வகையான காய் கறிகளை அறிமுகம் செய்து, பல சமையல் முறைகளையும் அறிமுகம் செய்துள்ளனர்.

உருளைக்கிழங்கு, தக்காளி, பறங்கிக் காய் என்ற பூசணிக்காய், பீட்ரூட், கோவா, முள்ளங்கி என்று மிக நீண்ட லிஸ்ட் அவர்களது அறிமுகம்.

அந்த வகையில் இந்த, யாழ்ப்பாண கூழ், போர்த்துக்கேய அறிமுக ஒன்றாக இருக்க வேண்டும். ஏனெனில் அவர்களால்  அறிமுகமான மிளகாய், பீன்ஸ், மரவள்ளி இதனுள் சேர்க்கப் படுகின்றது. seafood stew என அழைக்கப் படும் இந்த கூழ்.... யாழ்ப்பாணத்தில் பிரசித்தமானது. ஆனாலும், நாம் இது தமிழரின் பாரம்பரியம் என (தவறாக) எண்ணுகிறோம்.

தமிழரின் பாரம்பரியம், கஞ்சி, ஆடிக்கூழ், கேழ்வரகு கூழ், கம்மங்க்கூழ்  போன்றவை.

முக்கியமாக, கறி போன்றே, கஞ்சி என்ற தமிழ் சொல், போர்த்துக்கேயரால் அறிமுகப் படுத்தப் பட்டதாக conjee என்ற பெயரில் ஆங்கில சொல்லாக ஆங்கில அகராதியில் உள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Knowthyself said:

நிறத்தையும், இறுக்கத்தையும் பார்த்தா, கூழுக்கு தேவையில்லாத சாமான்கள் சேர்த்தமாதிரி தெரியுது, சத்தென்றுநினைத்து; பூசணி/உ.கிழங்கு, Chili beans, etc.

எழுதினாத்தானே ஒருமுடிவுக்கு வரலாம், கொன்னந்து வைச்சுட்டு பிலாவிலை பொறுக்கப்போட்டியளாக்கும்.

உண்மை தான்.சாமானைக் கூடப் போட்டுட்டு சட்டி சின்னன் என்று சட்டை முறைத்து பார்த்து; கொண்டிருந்தது தான்.கொஞ்சம் இறுக்கம்.மற்றபடி சுவையாக இருந்தது.எல்லோரும் விரும்பி குடித்தார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

.....தமிழரின் பாரம்பரியம், கஞ்சி, ஆடிக்கூழ், கேழ்வரகு கூழ், கம்மங்க்கூழ்  போன்றவை.

கம்மங்கூழ் சில சமயம் அருந்தியுள்ளேன்.. ஆனால் கம்பு தானியத்தில் அதிகம் செய்யப்படுவது கம்பு உருண்டை..

சத்தான சுவையான உணவும்கூட.

பெரும்பாலும் கிராமங்களில் 'கார்த்திகை பண்டிகை'யன்று முதல் நாள் கம்பு உருண்டை, மற்றும் அரிசி உருண்டை செய்து முருகனுக்கு படைத்து உண்பதுண்டு.

201611301201318702_how-to-make-rye-urund  rice-flour-balls.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ராசவன்னியன் said:

ஒடியல் கூழ் அருந்துவதில் சில நுனுப்பங்கள் இருக்கின்றன, ஒரு சாதாரண பாத்திரத்தில் ஒடியல் கூழை விட்டு குடித்தால் அதன் சரியான சுவை தெரியாது, அதானால் பனை ஓலையில் 'பிளா' தயாரித்து அதில் கூழ் குடிக்கும்போது அதிக சுவயைத் தரும். அடுத்ததாக உறவினர் நண்பர்களோடு சேர்ந்து, அதாவது பலருடன் சேர்ந்து கூழ் குடிக்கும் போது அதன் உணர்வுகள் புரியும்.

கூழ் குடித்து அரை மணி நேரத்துக்கு முன் நீர் அருந்தல் ஆகாது. கூழ் குடிக்கும் போது பேச கூடாது, காரணம் கூழில் உள்ள மீன் முற்கள் தொண்டை பகுதியில் போறுக்க கூடும், சிறு குழந்தைகள் கூழ் குடிக்கும் போது அதிக கவனம் எடுக்கவும், காரணம்: கூழின் கார தன்மை, மற்றும் கூழில் இருக்கும் மீன் முள்ளுகள். கூழ் எப்பொழுதும் அதிக சூடாகவே குடிக்க வேண்டும்.

வன்னியர் நீங்கள் சொல்வது போல ஊரில் பிழா மற்றும் பலா இலையில்த் தான் கூழ் குடிப்பது.இங்கே அத்தனை வசதிகளும் இல்லையே.

பொதுவாகவே சேர்ந்து சாப்பிட்டால் ஒரு தனி சுகம்.அதிலும் கூழ் என்றால் கட்டாயம் ஆட்கள் கூட இருந்தே தீர வேண்டும்.

பிள்ளைகள் மற்றும் சின்னவர்கள் பொதுவிலேயே மீன் முள்ளைக் கண்டால் பிரச்சனை பண்ணுவார்கள்.அதனால் முதலே மீனை அவித்து முள்ளெல்லாம் அகற்றி சதையை மட்டும் எடுத்து தான் கூழுக்கு போட்டது.

ஏன்?உங்களுக்கு ஏதாவது முள்ளு குற்றியதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

அந்த வகையில் இந்த, யாழ்ப்பாண கூழ், போர்த்துக்கேய அறிமுக ஒன்றாக இருக்க வேண்டும். ஏனெனில் அவர்களால்  அறிமுகமான மிளகாய், பீன்ஸ், மரவள்ளி இதனுள் சேர்க்கப் படுகின்றது. seafood stew என அழைக்கப் படும் இந்த கூழ்.... யாழ்ப்பாணத்தில் பிரசித்தமானது. ஆனாலும், நாம் இது தமிழரின் பாரம்பரியம் என (தவறாக) எண்ணுகிறோம்.

தமிழரின் பாரம்பரியம், கஞ்சி, ஆடிக்கூழ், கேழ்வரகு கூழ், கம்மங்க்கூழ்  போன்றவை.

முக்கியமாக, கறி போன்றே, கஞ்சி என்ற தமிழ் சொல், போர்த்துக்கேயரால் அறிமுகப் படுத்தப் பட்டதாக conjee என்ற பெயரில் ஆங்கில சொல்லாக ஆங்கில அகராதியில் உள்ளது. 

நாதம் இதுவரை கூழ் எமது உணவு என்று தான் எண்ணியிருந்தேன்.புதிய தகவல்கள் பல தந்துள்ளீர்கள்.தகவலுக்கு நன்றி.

ஆடிக்கூழ் குடித்திருக்கிறேன்.கஞ்சியில் பல வகை.எனது தகப்னார் ஒரு கஞ்சி பிரியன்.அடிக்கடி இலைக் கஞ்சி தயார் செய்வார்.இப்ப கூட வீட்டில் பால்கஞ்சி செய்வார்கள்.பிள்ளைகளுக்கும் மிகவும் விருப்பம்.தடிமன் குணம் என்றால் புழிக்கஞ்சி உப்புக்கஞ்சி காச்சுவார்கள்.

15 minutes ago, ராசவன்னியன் said:

பெரும்பாலும் கிராமங்களில் 'கார்த்திகை பண்டிகை'யன்று முதல் நாள் கம்பு உருண்டை, மற்றும் அரிசி உருண்டை செய்து முருகனுக்கு படைத்து உண்பதுண்டு.

வன்னியர் அரிசி உருண்டை எமது வீட்டில் செய்வார்கள்.கம்பு உருண்டை கேள்விப்பட்டதே இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஈழப்பிரியன் said:

ஏன்?உங்களுக்கு ஏதாவது முள்ளு குற்றியதா?

அவர் தான் கண்ணாலே கண்டதில்லை என்கிறாரே..

4 minutes ago, ஈழப்பிரியன் said:

நாதம் இதுவரை கூழ் எமது உணவு என்று தான் எண்ணியிருந்தேன்.புதிய தகவல்கள் பல தந்துள்ளீர்கள்.தகவலுக்கு நன்றி.

ஆடிக்கூழ் குடித்திருக்கிறேன்.கஞ்சியில் பல வகை.எனது தகப்னார் ஒரு கஞ்சி பிரியன்.அடிக்கடி இலைக் கஞ்சி தயார் செய்வார்.இப்ப கூட வீட்டில் பால்கஞ்சி செய்வார்கள்.பிள்ளைகளுக்கும் மிகவும் விருப்பம்.தடிமன் குணம் என்றால் புழிக்கஞ்சி உப்புக்கஞ்சி காச்சுவார்கள்.

சித்திரை கஞ்சி குடித்திருக்கிறீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

வன்னியர் நீங்கள் சொல்வது போல ஊரில் பிழா மற்றும் பலா இலையில்த் தான் கூழ் குடிப்பது.இங்கே அத்தனை வசதிகளும் இல்லையே.

பொதுவாகவே சேர்ந்து சாப்பிட்டால் ஒரு தனி சுகம்.அதிலும் கூழ் என்றால் கட்டாயம் ஆட்கள் கூட இருந்தே தீர வேண்டும்.

பிள்ளைகள் மற்றும் சின்னவர்கள் பொதுவிலேயே மீன் முள்ளைக் கண்டால் பிரச்சனை பண்ணுவார்கள்.அதனால் முதலே மீனை அவித்து முள்ளெல்லாம் அகற்றி சதையை மட்டும் எடுத்து தான் கூழுக்கு போட்டது.

ஏன்? உங்களுக்கு ஏதாவது முள்ளு குற்றியதா?

ஈழப்பிரியன், நீங்கள் யாரையும் ஒடியல்கூழ் விருந்திற்கு அழைக்காமல் நீங்கள் மட்டும் கமுக்கமாக குடித்துவிட்டால், எங்களுக்கு எப்படி அதன் சுவையோ, அதிலுள்ள முட்களோ தெரியும்..? :)

நான் இதுவரை ஒடியல்கூழை கண்டதே கிடையாது..! :unsure:

எனக்கு நீங்கள் தயாரித்த  ஒடியல்கூழை தவறாது பார்சல் செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.:grin:

Er.ராசவன்னியன்,
நம்பர்:6, விவேகானந்தர் தெரு,
துபாய் குறுக்கு சந்து,
துபாய் மெயின் ரோடு,
(துபாய் பஸ் ஸ்டாண்டு அருகில்)
துபாய்.

 

வீட்டிற்கான வழி காட்டி அறிவிப்பு பலகை உங்கள் பார்வைக்கு...!

11rvsig.jpg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

3 minutes ago, ராசவன்னியன் said:

Er.ராசவன்னியன்,
நம்பர்:6, விவேகானந்தர் தெரு,
துபாய் குறுக்கு சந்து,
துபாய் மெயின் ரோடு,
(துபாய் பஸ் ஸ்டாண்டு அருகில்)
துபாய்.

 

வீட்டிற்கான வழி காட்டி அறிவிப்பு பலகை உங்கள் பார்வைக்கு...!

11rvsig.jpg

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ராசவன்னியன் said:

ஈழப்பிரியன், நீங்கள் யாரையும் ஒடியல்கூழ் விருந்திற்கு அழைக்காமல் நீங்கள் மட்டும் கமுக்கமாக குடித்துவிட்டால், எங்களுக்கு எப்படி அதன் சுவையோ, அதிலுள்ள முட்களோ தெரியும்..? :)

நான் தனியே குடிக்கவில்லை.அதனால்த் தான் படத்தை மட்டும் போட்டு விபரம் எழுத சுணங்கிவிட்டது.  

ஊரில் கூழ் என்றால் கள்ளுமுட்டியும் பக்கத்தில் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

நான் தனியே குடிக்கவில்லை.அதனால்த் தான் படத்தை மட்டும் போட்டு விபரம் எழுத சுணங்கிவிட்டது.  

ஊரில் கூழ் என்றால் கள்ளுமுட்டியும் பக்கத்தில் இருக்கும்.

வருத்தப்படாதீர்கள், ஈழப்பிரியன் ஐயா..! sgentil.gif

ஆனால் ஒடியல்கூழை mange9.gifதவறாமல் துபாய் முகவரிக்கு அனுப்பிவிடவும்..சொல்லிப்புட்டேன்..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Nathamuni said:

 

 

நாதம் அருமையான காணெளி.ரொம்பவும் சிரிப்பாக இருந்தது.

அப்படியே காப்பி பண்ணியிருப்பார் என்று எதிர் பார்க்கவில்லை.இந்தக் காணொலியை மட்டும் இணைத்திருக்காவிட்டால் உண்மையாக இருக்குமோ என்று குழம்பியிருப்பேன்.

2 minutes ago, ராசவன்னியன் said:

வருத்தப்படாதீர்கள், ஈழப்பிரியன் ஐயா..! sgentil.gif

ஆனால் ஒடியல்கூழை mange9.gifதவறாமல் துபாய் முகவரிக்கு அனுப்பிவிடவும்..சொல்லிப்புட்டேன்..! :)

சரி சரி கிடைத்ததும் தகவல் தரவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

நாதம் அருமையான காணெளி.ரொம்பவும் சிரிப்பாக இருந்தது.

அப்படியே காப்பி பண்ணியிருப்பார் என்று எதிர் பார்க்கவில்லை.இந்தக் காணொலியை மட்டும் இணைத்திருக்காவிட்டால் உண்மையாக இருக்குமோ என்று குழம்பியிருப்பேன்.

என்ன சார், இவ்ளோ அப்பாவியாக இருக்கிறீர்கள்..? இந்த 'துபாய் காமெடி' பட்டி தொட்டியெல்லாம் மிகப்பிரபலம் ஆச்சே..! :)

ஆனால் ஓவ்வொரு முறையும் பர் துபாய் பேருந்து நிலையத்தை நான் கடக்கும்போது, இப்பொழுதும் இந்த 'துபாய் காமெடி' நினைவில் வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Nathamuni said:

சித்திரை கஞ்சி குடித்திருக்கிறீர்களா?

சித்திரைக் கஞ்சி கோவில்களில் குடித்திருக்கிறேன்.அன்று தானே போர்த் தேங்காய் அடிப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரிக்கு சம்மந்தம் இல்லையென்றாலும் 'துபாய் பஸ் ஸ்டாண்டு' சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அதன் படத்தை இணைத்துள்ளேன்..! :)

துபாயின் பல பகுதிகளிலும் சிறுசிறு பஸ் ஸ்டாண்டுகள் உண்டு..

ஆனால் நகரின் முக்கிய வணிகப் பகுதிகளுக்கு மத்தியில் அமைந்துள்ள பர் துபாய்(Bur Dubai) பஸ் ஸ்டாண்டு(அல் குபைபா) தான் மிகவும் பிரபலமாகவும், அமீரகத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கும் (குறிப்பாக சார்ஜா, அபுதாபி) செல்ல அதிக பேருந்துகளும் வந்து போகும் இடமாக உள்ளது.

இங்கிருந்து துபாய் இந்து கோவில்கள், மினா பஜார், தெய்ரா துபாய்க்கு(Deira Dubai) செல்ல கால்வாயை கடக்க அப்ரா ஆகியவை நடை தூரம்தான்..!

 

a9a5b48114a1d07378fda97bbb339af5.jpgBeauty+of+Bur+Dubai+Bus+stand+3+DSC06345

8972196966_2d2edc9705.jpg46957430.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பஸ் நிறுத்தங்கள் குளிரூட்டப்பட்டவையாக இருக்கும் என கேள்விப்பட்டிருந்தேன். அப்படி தெரியவில்லையே.

மிகுந்த வெப்ப காலங்களில் எபபடி சமாளிக்க முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

பஸ் நிறுத்தங்கள் குளிரூட்டப்பட்டவையாக இருக்கும் என கேள்விப்பட்டிருந்தேன். அப்படி தெரியவில்லையே.

மிகுந்த வெப்ப காலங்களில் எபபடி சமாளிக்க முடியும்.

பஸ் நிறுத்துமிடங்கள் (Bus Stops) மட்டுமே குளிரூட்டப்பட்டவை.

பஸ் தரிப்பிடங்கள் (Bus Stand) அல்ல.

அவ்வளவு பரந்த தரிப்பிடத்தை முழுவதும் குளிரூட்டப்பட 'டப்பு' நிறைய வேண்டுமே..? :unsure:

இக்கட டப்பு லேது, நைனா..! :grin:

 

Dubai+-+Airconditioned+bus+stop+shelter.  DubaiAC_main_0713.jpg

ac-bus-stop.jpg  P1020918.JPG

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரி பதியப்பட்ட இரண்டே நாளில் 414 பார்வைகளை தொட்டிருக்கு.. :)

ஒடியல் கூழுக்கு அவ்வளவு 'கிராக்கி'யா..? :unsure:

திருவாளர் ஈழப்பிரியன், இதற்காகவே மறுபடியும் ஒடியல் கூழ் காய்ச்சனும்!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.