Jump to content

`மைதானத்துக்கு வெளியிலும் டிகாக்கிடம் வம்பிழுக்கும் வார்னர்!’ - வைரல் வீடியோ


Recommended Posts

`மைதானத்துக்கு வெளியிலும் டிகாக்கிடம் வம்பிழுக்கும் வார்னர்!’ - வைரல் வீடியோ

 
 

தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் டெஸ்டின் 4-ம் நாளில் டேவிட் வார்னர் மற்றும் குயிண்டன் டிகாக் இடையிலான வார்த்தைப் போர் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. 

டேவிட் வார்னர் உள்ளிட்ட ஆஸ்திரேலிய வீரர்கள்

 

Photo Credit: AP

டர்பன் கிங்ஸ்மெட் மைதானத்தில் நடந்துவரும் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 351 ரன்களும், தென்னாப்பிரிக்கா அணி 162 ரன்களும் எடுத்தன. இதையடுத்து இரண்டாவது  இன்னிங்ஸைத் தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி, 227 ரன்களில் ஆட்டமிழந்தது. 417 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 4-ம் நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 293 ரன்கள் எடுத்துள்ளன. குயின்டன் டிகாக் 81 ரன்களுடனும், மோர்னே மோர்கல் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். தென்னாப்பிரிக்க அணி வெற்றிக்கு 124 ரன்கள் தேவைப்படும் நிலையில், ஒரு விக்கெட்டை வீழ்த்தினால் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுவிடும். 

இந்த போட்டியின் 4-ம் நாள் ஆட்டத்தின்போது தென்னாப்பிரிக்கா வீரர் டிவிலியர்ஸ் ரன் அவுட் செய்யப்பட்டார். அப்போது தென்னாப்பிரிக்கா வீரர் டிகாக்குடன், ஆஸ்திரேலிய அணியின் துணைக் கேப்டன் டேவிட் வார்னர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 4-ம் நாள் ஆட்டம் முடிந்து இரு அணி வீரர்களும் பெவிலியன் திரும்பும்போது, டிகாக்கை நோக்கி வார்னர் ஆவேசமாகத் திட்டினார். மைதானத்துக்கு வெளியில் நடந்த இந்த நிகழ்வின் சி.சி.டி.வி. காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. அதில், மைதானத்திலிருந்து இரு அணி வீரர்களும் டிரெஸ்ஸிங் ரூமிற்குச் செல்லும் வழியில் பின்னால் வரும்  டிகாக்கை, வார்னர் திட்டுவது போன்றும், ஆஸ்திரேலிய அணியின் சக வீரர்கள் வார்னரை சமாதானப்படுத்துவது போன்றும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 

 

 

https://www.vikatan.com/news/sports/118272-savsaus-warner-teases-de-cock-in-pavilion.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.