Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கந்தப்பு said:

உங்கள் அனுபவப்பகிர்வினை வாசித்தேன். எவ்வளவு காலமாக உங்கள் பெற்றோர்களைத் தேடுகிறீர்கள். சிலவேளை அவர்கள் உங்களைத்தேடி தமிழகம் சென்றிருக்கலாம்.

கந்தப்பு இது எனது  கற்பனைக்குள் ஆனால் இப்படி நிறைய பேர் இருக்கிறார்கள் தொடர்பற்று நான் அகதியாக எங்கும் செல்லவில்லை இதுவரை அனுபவித்து இருக்கிறேன் 90 ம் ஆண்டளவில் இனக்கலவரம் கிழக்கில் அம்பாறையில் நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன் ஒரு பிடி சோற்றுக்கு ஏங்கிய காலம் என்று சொல்லலாம் அன்றைய உண்வுகள் அம்மா சொல்லுவார் மரவள்ளி கிழங்கு மாங்காய் சம்பலும்  மாத்திரம் தானாம்  

8 hours ago, ராசவன்னியன் said:
வருந்துகிறேன்.தமிழகத்தில் ஈழத்தமிழர்களின் நிலை இந்த கி.மு. கி.பி கோடுபோட்டு பிரிப்பது மாதிரிதான்.அதாவது 1991 முன் 1991 பின்..தமிழகத்தில் 1991 முன் ஈழத்தமிழர்களுக்கான வரவேற்பு எப்படியிருந்தது என்பதை அனைவரும் அறிவர்..அவ்வப்போது நடைபெற்ற போராளிகளின் போட்டிக் கொலைகள், குற்றங்கள் ஆகியன கெடுபிடிகள் இறுக முதல் காரணம். மிக அதிகமான கெடுபிடிகள், நெருக்குதல் இறுகியது 1991க்கு பிறகுதான். ஆனால் மற்ற நாட்டு அகதிகளை நடத்துவதற்கும், ஈழத்தமிழர்களை நடத்துவதற்கும் பாரிய பாரபட்சம் இருப்பது உண்மை. அது மத்திய அரசுக்கு பொதுவாக தமிழ்/தமிழர்கள் மீது இன்றும் நிலவும் காழ்ப்புணர்ச்சிதான்.

தமிழகம் ஒரு மூன்றாந்தர பொருளாதார நாட்டின் ஒரு பகுதி. ஆகவே வேகமாக பெருகிவரும் மக்கள் தொகைக்கு தேவையான அடிப்படை பொருளாததார வசதிகளோ, வேலை வாய்ப்புகளோ இங்கே இல்லை. தனிமனித வருமானமும் குறைவு. இருக்கும் வளங்களை கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகள் போக மீதமுள்ளவையே பொதுமக்களுக்கு கிடைக்கிறது. ஆகவே இங்கு வரும் ஈழத்தமிழர்கள், ஈழத்தில் கிடைத்த/அனுபவித்த வாழ்க்கை தரத்தை தமிழகத்தில் எதிர்பார்க்க இயலாது. (உதாரணமாக, ஈழத்தமிழர்கள் தமிழக தமிழர்களை பார்த்து கூறும் வார்த்தை  "முதலில் உங்கள் ஊரில் கக்கூஸ் கட்டிக்கொள்ளுங்கள்.. இங்கே ஈழத்தில் நாங்கள் மிக வசதியாக வாழ்ந்தோம்" என ஏளனமாக சொல்வது ! :mellow:)

அதே மாதிரி புலம்பெயர் நாடுகளுக்கு அகதிகளாக சென்று தங்கிவிட்ட ஈழத்தமிழர்களும், முன்னேறிய நாடுகளில் தாங்கள் அனுபவித்துவரும் வசதிகள், சலுகைகைகளை தமிழ்நாட்டில் எதிர்பார்க்கமுடியாது. தமிழகத்தில் வாழும் தமிழர்கள் இங்கே இருப்பதை பகிர்ந்து வாழ்கிறார்கள்.

இதுவே யதார்த்தம்.

யதார்த்தமான கருத்து உன்மையும் கூட அண்ண

ஆனால் மற்ற நாட்டு அகதிகளை நடத்துவதற்கும், ஈழத்தமிழர்களை நடத்துவதற்கும் பாரிய பாரபட்சம் இருப்பது உண்மை. அது மத்திய அரசுக்கு பொதுவாக தமிழ்/தமிழர்கள் மீது இன்றும் நிலவும் காழ்ப்புணர்ச்சிதான்.

அதே மாதிரி புலம்பெயர் நாடுகளுக்கு அகதிகளாக சென்று தங்கிவிட்ட ஈழத்தமிழர்களும், முன்னேறிய நாடுகளில் தாங்கள் அனுபவித்துவரும் வசதிகள், சலுகைகைகளை தமிழ்நாட்டில் எதிர்பார்க்கமுடியாது. தமிழகத்தில் வாழும் தமிழர்கள் இங்கே இருப்பதை பகிர்ந்து வாழ்கிறார்கள்.:104_point_left:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்துக்கு அகதியாக படகில் போய் பட்டது போதும் என்று தமிழரசன் திரும்பினாலும் கலிய பெருமாள் போன்ற மனங்கனிந்தவர்கள் வாழும் இடம்தான் தமிழகம்.

89ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட வல்வைப் படுகொலைக்கு அடுத்து வந்த நாட்களில் எங்கையாவது உயிரோடு இருந்தால் போதும் என்று படகில் வேதாரணியம் அனுப்ப என்னையும் அண்ணனையும் தயார்படுத்தினர். ஆனால் கொழும்புக்கு விமானத்தில் போக வாய்ப்பு கிடைத்ததால் தமிழகம் போகவில்லை. போயிருந்தால் தமிழரசனின் அனுபவம் வந்திருக்கும்.

ஆனாலும்  மத்திய இலண்டனில் உள்ள உணவகம் ஒன்றில் கோப்பை கழுவிய அனுபவம் இருக்கின்றது. கிளவுஸ் போட்டுக் கழுவு என்று சொன்னபோதும் ஊரில் செருப்புப் போடாமல் உருகும் தார் ரோட்டில் நடந்த துணிவால் கிளவுஸ் இல்லாமல் கழுவி கையிடுக்குகள் அரிச்ச அனுபவமும் இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

தமிழகத்துக்கு அகதியாக படகில் போய் பட்டது போதும் என்று தமிழரசன் திரும்பினாலும் கலிய பெருமாள் போன்ற மனங்கனிந்தவர்கள் வாழும் இடம்தான் தமிழகம்.

89ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட வல்வைப் படுகொலைக்கு அடுத்து வந்த நாட்களில் எங்கையாவது உயிரோடு இருந்தால் போதும் என்று படகில் வேதாரணியம் அனுப்ப என்னையும் அண்ணனையும் தயார்படுத்தினர். ஆனால் கொழும்புக்கு விமானத்தில் போக வாய்ப்பு கிடைத்ததால் தமிழகம் போகவில்லை. போயிருந்தால் தமிழரசனின் அனுபவம் வந்திருக்கும்.

ஆனாலும்  மத்திய இலண்டனில் உள்ள உணவகம் ஒன்றில் கோப்பை கழுவிய அனுபவம் இருக்கின்றது. கிளவுஸ் போட்டுக் கழுவு என்று சொன்னபோதும் ஊரில் செருப்புப் போடாமல் உருகும் தார் ரோட்டில் நடந்த துணிவால் கிளவுஸ் இல்லாமல் கழுவி கையிடுக்குகள் அரிச்ச அனுபவமும் இருக்கு.

இந்தியா செல்ல விசா எடுத்து, விமானத்தில் சென்று, பிறகு உள்ளூர் காவல்நிலையத்தில் அகதியாகச்  சென்றவர்களுக்கு பிரச்சனையிருக்கவில்லை. அவர்களின் பிள்ளைகள் உள்ளூர் பாடசாலைகளில் படிப்பதற்கு அனுமதி கிடைத்தது. விமானத்தில் சென்றவர்களின் பிள்ளைகள் பெரும்பாலோர் ஆங்கில மொழியில் தனியார் பாடசாலையிலே கல்வி கற்றார்கள்.  91ல் ஆட்சியைக் கைப்பற்றிய ஜெயலலிதாவினால்  92 - 96 காலப்பகுதியில் பல்கலைக்கழகத்தில் (அரச, தனியார்) ஈழத்தமிழர்களின்  கல்வி மறுக்கப்பட்டது.  96ல் ஆட்சியைக் கைப்பற்றிய கலைஞர், மீண்டும் ஈழத்தமிழர்கள் தமிழகப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்க அனுமதி வழங்கினார். அத்துடன்  + 2 பரீட்சையில் கணிதப்பிரிவில் முதல் 20 இடங்களைப் பெற்ற ஈழத்து மாணவர்களுக்கு பொறியியல் துறையில் கல்வி கற்க இலவசக் கல்வியை வழங்கினார். அதிக புள்ளிகள் பெற்று , மருத்துவக் கல்வி கற்க விண்ணப்பித்த முதல் 10 பேருக்கு இலவசக்கல்வியை வழங்கினார். இதில் முக்கியமான விடயம், 30 தமிழக மாணவர்களுக்கான இலவசக்கல்வி ஈழத்தமிழர்களுக்கு வழங்கப்பட்டது.  M.G. ராமச்சந்திரன் அவர்களின் ஆட்சியிலும், ஜானகி அம்மா ஆட்சியிலும் இவ்வாறு இலவசக்கல்விகள் ஈழத்தமிழர்களுக்கு கிடைத்தது. 2001ல் ஆட்சியைக்கைப்பற்றிய ஜெயலலிதா, கலைஞர் அனுமதித்த இலவசக்கல்வியை மீண்டும் தொடர்ந்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, கிருபன் said:

தமிழகத்துக்கு அகதியாக படகில் போய் பட்டது போதும் என்று தமிழரசன் திரும்பினாலும் கலிய பெருமாள் போன்ற மனங்கனிந்தவர்கள் வாழும் இடம்தான் தமிழகம்.

89ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட வல்வைப் படுகொலைக்கு அடுத்து வந்த நாட்களில் எங்கையாவது உயிரோடு இருந்தால் போதும் என்று படகில் வேதாரணியம் அனுப்ப என்னையும் அண்ணனையும் தயார்படுத்தினர். ஆனால் கொழும்புக்கு விமானத்தில் போக வாய்ப்பு கிடைத்ததால் தமிழகம் போகவில்லை. போயிருந்தால் தமிழரசனின் அனுபவம் வந்திருக்கும்.

ஆனாலும்  மத்திய இலண்டனில் உள்ள உணவகம் ஒன்றில் கோப்பை கழுவிய அனுபவம் இருக்கின்றது. கிளவுஸ் போட்டுக் கழுவு என்று சொன்னபோதும் ஊரில் செருப்புப் போடாமல் உருகும் தார் ரோட்டில் நடந்த துணிவால் கிளவுஸ் இல்லாமல் கழுவி கையிடுக்குகள் அரிச்ச அனுபவமும் இருக்கு.

நன்றி உங்கள் கருத்துக்கு கிருபன்  தமிழகம்  இதுவரை பல லட்சம் தமிழர்களுக்கு இடம் கொடுத்து வாழ வைத்துக்கொண்டிருக்கிறது  இருந்தாலும் அகதிகள் மீது காட்டும் கெடுபிடிகளை தளர்த்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பதும் எனது  விருப்பமும் கூட

உண்வு தட்டில் எண்னெய் தன்மையை நீக்க ஒரு வித சம்பூக்கள் ( சோப்) பாவிப்பார்கள் அது கைகளில் எந்த நேரமும் படுவதால் கழுவும் போது கை  இடுக்குகள்  கரைய ஆரம்பிக்கும் எரிச்சலுடன்  கிளவுஸ் போட்டாலும் வேலை சுத்தமா இராது ஒரு கூச்சம் போலவும் இருக்கும் 

17 hours ago, கந்தப்பு said:

இந்தியா செல்ல விசா எடுத்து, விமானத்தில் சென்று, பிறகு உள்ளூர் காவல்நிலையத்தில் அகதியாகச்  சென்றவர்களுக்கு பிரச்சனையிருக்கவில்லை. அவர்களின் பிள்ளைகள் உள்ளூர் பாடசாலைகளில் படிப்பதற்கு அனுமதி கிடைத்தது. விமானத்தில் சென்றவர்களின் பிள்ளைகள் பெரும்பாலோர் ஆங்கில மொழியில் தனியார் பாடசாலையிலே கல்வி கற்றார்கள்.  91ல் ஆட்சியைக் கைப்பற்றிய ஜெயலலிதாவினால்  92 - 96 காலப்பகுதியில் பல்கலைக்கழகத்தில் (அரச, தனியார்) ஈழத்தமிழர்களின்  கல்வி மறுக்கப்பட்டது.  96ல் ஆட்சியைக் கைப்பற்றிய கலைஞர், மீண்டும் ஈழத்தமிழர்கள் தமிழகப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்க அனுமதி வழங்கினார். அத்துடன்  + 2 பரீட்சையில் கணிதப்பிரிவில் முதல் 20 இடங்களைப் பெற்ற ஈழத்து மாணவர்களுக்கு பொறியியல் துறையில் கல்வி கற்க இலவசக் கல்வியை வழங்கினார். அதிக புள்ளிகள் பெற்று , மருத்துவக் கல்வி கற்க விண்ணப்பித்த முதல் 10 பேருக்கு இலவசக்கல்வியை வழங்கினார். இதில் முக்கியமான விடயம், 30 தமிழக மாணவர்களுக்கான இலவசக்கல்வி ஈழத்தமிழர்களுக்கு வழங்கப்பட்டது.  M.G. ராமச்சந்திரன் அவர்களின் ஆட்சியிலும், ஜானகி அம்மா ஆட்சியிலும் இவ்வாறு இலவசக்கல்விகள் ஈழத்தமிழர்களுக்கு கிடைத்தது. 2001ல் ஆட்சியைக்கைப்பற்றிய ஜெயலலிதா, கலைஞர் அனுமதித்த இலவசக்கல்வியை மீண்டும் தொடர்ந்தார்.

பலர் பல்கலைக்கழகங்களில் படிப்பதற்கு சில இடங்கள் ஒதுக்கப்பட்டு இலவச கணணிகளும் வழங்கப்பட்டது நானும் பார்த்திருக்கிறேன் கந்தப்பு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனுபவம் இத்தனை இருக்கா உங்களுக்கு. மிக அருமை தம்பி. பலர் இன்னுமே முகாமில் இருக்கிறார்களே அவர்களை நினைத்தால் தான் பாவங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/15/2018 at 4:50 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அனுபவம் இத்தனை இருக்கா உங்களுக்கு. மிக அருமை தம்பி. பலர் இன்னுமே முகாமில் இருக்கிறார்களே அவர்களை நினைத்தால் தான் பாவங்கள். 

ம் கொஞ்ச அனுபவம் வெளிநாடு தந்தது. இன்னும் அகதிகளாக பல ஆயிரம் பேர்கள் இருக்கிறார்கள் என்ன செய்வது அங்கு தமிழ் நாட்டில் இருக்கும் மக்கள் கூட இந்திய நாட்டின் அகதிகள் போல் தான் வாழ்கிறார்கள் புயலில் இறந்து போன காணமல் போன தமிழனையே மீட்கமுடியாத இந்தீய ஜனநாய்யக நாடு இறந்தது தமிழன் என்றால் கண்டு கொள்ளாத நாடு இதுவே மும்பை ஹோட்ட்லல் என்றால் தமிழ்நாடு அலறியிருக்கும் காரணம் தமிழனுக்கு இரக்க குணம் அதிகம் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.