Jump to content

பார்க்காதே பார்க்காதே


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்காதே பார்க்காதே

புலம் பெயர்ந்து ஜேர்மனிக்கு வந்த பொழுது, “நாட்டுக்கே திரும்பி போய்விடலாமா?” என்ற நினைப்புதான் ஓங்கி நின்றது. குளிர் ஒரு காரணமாக இருந்தது என்றாலும்,குளிரில் வரும் நடுக்கத்தை விட டொச் மொழியை கேட்கும் போது ஏற்பட்ட உதறல் அதிகமாக இருந்தது.

ஜேர்மனியர்கள் கதைக்கும் வார்த்தைகளுடன்ஸ்ஸ்ஸ்என்று காற்று வரும் பொழுதெல்லாம் என்னுள் இருந்து தன்னம்பிக்கைக் காற்று தானாக வெளியேறிக் கொண்டிருக்கும்.

“என்ன பாஷை இது. தமிழுக்கு வசப்பட்ட நாக்கு டொச்சுக்கு பிரளமாட்டுதாம்என்னுடன் ஊரில் இருந்து யேர்மனிவரை கூட வந்த ரத்தினம் இப்படி என்னுடன் அடிக்கடி சலித்துக் கொண்டிருப்பான்.

ரத்தினம் என்னைவிட இரண்டு வயது இளமையானவன். அவனது தமையன் சந்திரன் என்னுடன் ஒன்றாகப் படித்தவன். நான் ஜேர்மனிக்கு வெளிக்கிடப் போகிறேன் என்று கேள்விப்பட்டு,  “தம்பியையும் உன்னோடு ஜேர்மனிக்கு கூட்டிக் கொண்டு போ மச்சான்என்று ரத்தினத்தையும் என்னுடன் சேர்த்து விட்டான்.

எங்களது பயணம் எயார் பிரான்ஸில் தொடங்கியது. பரிஸ் இல் இடைத்தங்கல். அங்கிருந்து கிழக்கு ஜேர்மனி சென்று பின்னர் ரெயின் எடுத்து மேற்கு ஜேர்மனி புகுந்து அரசியல் தஞ்சம் கேட்பதாகத் திட்டம். பயணத்தின் போது விமானத்தில் இன்னும் இரண்டு பேர் எங்களுடன் ஒட்டிக் கொண்டார்கள்

பரிஸில் இறங்கி கிழக்கு ஜேர்மனிக்கு பறப்பதற்கு விமானத்தில் ஏறுவதற்காகச்  சென்று கொண்டிருக்கும் போது, எங்கள் நான்கு பேரையும் பிரான்ஸ் காவல்துறையினர் பிடித்துக் கொண்டார்கள். முதலில் எங்களிடம் இருந்த கடவுச்சீட்டுக்களை அவர்கள் எடுத்துக் கொண்டார்கள். பிறகு நீண்ட தூரம் எங்களை அழைத்துச் சென்றார்கள்.

“எங்கையண்ணை கூட்டிக் கொண்டு போறாங்கள்?” ஒட்டிக் கொண்டவர்களில் ஒருவன் என்னிடம் கேட்டான். திருப்பி நாட்டுக்கு அனுப்பி விடுவார்களோ என்ற பயம் அவனிடம் தெரிந்தது. அந்தப் பயம் அவனுக்கு மட்டுமல்ல எனக்கும் கூட இருந்தது. நான் வாய் திறப்பதற்கும் முன்னர் ரத்தினம் முந்திக்கொண்டு கொண்டு அவனுக்கு பதில் கொடுத்தான்.

“பார்த்தியா, முன்னுக்கும் பின்னுக்கும் பொலீஸ்காரர்கள் வர, சனங்கள் எல்லாம் பார்த்துக் கொண்டிருக்க பிரான்ஸ் எயர்போட்டிலை அழைச்சுக் கொண்டு போறாங்களே, இதுதான் இராஜ மரியாதை. இப்பிடியே திருப்பி சிறிலங்காவுக்கு  அனுப்பினாங்கள் எண்டால், லலித் அத்துலக்முதலியே நேரிலை  வந்து இதைவிட அமோகமான ஒரு பெரிய வரவேற்பு அங்கை தருவார்

என்ன நடக்கிறது என்று தெரியாமல் பயந்து கொண்டு நடந்து கொண்டிருக்கும் போது ரத்தினத்தின் அந்தப் பேச்சு சூழ்நிலையின் அழுத்தத்தை கொஞ்சம் குறைத்தது.

இறுதியாக ஒரு அறைக்குள் கொண்டு போய் விட்டார்கள். என்ன கேட்டாலும் அவர்கள் எங்களுக்காக வாயைத் திறக்கவேயில்லை. அதிலும் மறந்தும் ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை கூட அவர்களிடம் இருந்து வரவேயில்லை. தங்களுக்குள் பிரெஞ்சில் கதைத்துக் கொண்டிருந்தார்கள்

எங்களை அழைத்து வந்தவர்கள் காவலுக்கு நிற்க மேலும் இரு போலீஸ்காரர்கள் உள்ளே வந்தார்கள். வந்தவர்கள் எங்களுடன் பயணித்த ஒருவனை அழைத்துச் சென்றார்கள். பதினைந்து நிமிடங்கள் போயிருக்கும். கூட்டிக் கொண்டு போனவனை கொண்டு வந்து விட்டு விட்டு மற்றவனை அழைத்துப் போனார்கள். முதலில் போய் வந்தவன் எதையோ இழந்துவிட்டவன் போல முகத்தில் கவலையோடு காணப்பட்டான்.

ரத்தினம் அவனருகில் போய் தனது பார்வையால் விசாரித்தான்

“உடுப்பெல்லாம் கழட்டிப் பார்த்தாங்கள்மிகுந்த கவலை அந்த இளைஞன் முகத்தில் தெரிந்தது.

“எதைப் பார்த்தாங்கள்?” ரத்தினம் அந்த இளைஞனை விசாரிப்பதைப் பார்த்த ஒரு பொலீஸ்காரன், இளைஞனிடமிருந்து  ரத்தினத்தை  பிரித்து வைத்தான்.

திரும்பி வந்த மற்றைய இளைஞனும் ஏறக்குறைய முதலாவது இளைஞனைப் போலவே முகத்தை வைத்திருந்தான். இப்பொழுது  எனது முறை. இருவர் இருந்த அறையில் நின்றேன். உடுப்புகள், சப்பாத்துக்களை எல்லாம் கழட்டச் சொல்லி சைகையால் காட்டினார்கள்.

அவர்கள்  முதலில் உடுப்பு, சப்பாத்துக்களை தடவி, தட்டி எல்லாம் பார்த்தார்கள். அடுத்ததாக எனது உடம்புக்கு வந்தார்கள். தலை தொட்டு உள்ளங்கால்வரை எல்லாம் ஆராய்ந்தார்கள்பிறகு குனி என்றார்கள். குனிந்தேன். அவர்களுடையடோர்ச் லைற்றின் வெளிச்சம் என்னுடைய விம்பத்தை அறைச் சுவரில் காட்டியது. மீண்டும் சைகயால் உடுப்பை போடு என்றார்கள்

எண்பதுகளில் நன்றாக பொதியிட்டு, பாகிஸ்தானில் இருந்து மலவாசலுக்குள் வைத்து ஐரோப்பிய நாடுகளுக்குப் போதைப் பொருட் கடத்தல் நடந்து கொண்டிருந்ததுதான் எங்களை விமான நிலையத்தில் தடுத்து வைத்ததும் தொடர்ந்து நடந்து கொண்டிருந்த சோதணையும்.

இப்பொழுது ரத்தினத்தின் முறை. எதற்காக அழைத்துப் போகிறார்கள் என்பதில் அவனுக்குத் தெளிவு இருந்தது. சிரித்தபடியே அவர்களுடன் போனான். ஐந்து நிமிடங்கள் கூட ஆகி இருக்காது. போனவன் அதே சிரிப்புடன் திரும்பி வந்தான்.

“எங்களுக்கெல்லாம் பதினைந்து நிமிசங்கள் எடுத்தது. அதெப்படி உன்னை உடனேயே விட்டிட்டாங்கள்?”

“இப்பிடி ஒரு சூத்தை பிரெஞ்சுக்காரன் ஒருநாளும் கண்டிருக்க மாட்டான். வாழ்க்கையிலை இனி ஒருத்தனின்ரை சூத்தையும் பார்க்கவே மாட்டான்

இப்பொழுது ரத்தினம் நான் இருக்கும் இடத்தில் இருந்து அறுபது கிலோ மீற்றர் தூரத்தில்தான் வசிக்கிறான். எனக்கும் அவனுக்குமான தொடர்புகள் குறைந்து குறைந்து இன்று இல்லாமலேயே போய்விட்டது. ஆனால் அவனது நினைவுகள் மட்டும்  என்னுடன் இன்றும் இருக்கின்றது.

 

கவி அருணாசலம்

10.03.2018

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavi arunasalam said:

தலை தொட்டு உள்ளங்கால்வரை எல்லாம் ஆராய்ந்தார்கள்பிறகு குனி என்றார்கள். குனிந்தேன். அவர்களுடையடோர்ச் லைற்றின் வெளிச்சம் என்னுடைய விம்பத்தை அறைச் சுவரில் காட்டியது.

டென்மார்க் போடரிலை எனக்கும் என்ரை கூட்டுவளுக்கும் எட்டத்தை  எட்டத்தை குனியவிட்டு உதே பிரச்சனை நடந்தது.....அதிலை ஒரு சிங்கனை கலியாணம் கட்டிட்டியோ எண்டு கேட்டுட்டு ஓரு பொலிசு சத்தமாய் சிரிச்சான்...காரணம் இண்டுவரைக்கும் எனக்கு விளங்கேல்லை.....சம்பந்தப்பட்ட சிங்கம் இப்ப கனடாவிலை குடும்பம் குழந்தை குட்டியெண்டு சந்தோசமாய் இருக்கிறார் எண்டு கேள்விப்பட்டன்.

1 hour ago, Kavi arunasalam said:

“இப்பிடி ஒரு சூத்தை பிரெஞ்சுக்காரன் ஒருநாளும் கண்டிருக்க மாட்டான். வாழ்க்கையிலை இனி ஒருத்தனின்ரை சூத்தையும் பார்க்கவே மாட்டான்

இப்ப இரவு நேரம் எண்டபடியாலை சத்தமில்லாமல் சிரிச்சு சிரிச்சு நெஞ்செல்லாம் நோகப்புடிச்சிட்டுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kavi arunasalam said:

எங்களது பயணம் எயார் பிரான்ஸில் தொடங்கியது. பரிஸ் இல் இடைத்தங்கல்.

அந்தக் காலங்களில் ஏரோபிளட் தான் மிகவும் மலிவானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது நல்ல பயணக் கட்டுரை......!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ஈழப்பிரியன் said:

அந்தக் காலங்களில் ஏரோபிளட் தான் மிகவும் மலிவானது.

உண்மை. எனது பயணத்துக்கு அப்பொழுது 16,000 ரூபாக்கள் முடிந்தது. ஏரோபிளட்டில் வந்தவர்கள் 10,000க்கு குறைவாகவே கொடுத்திருந்தார்கள்

9 hours ago, suvy said:

இது நல்ல பயணக் கட்டுரை......!  tw_blush:

இது தொடர்ந்து எழுத வைக்கும் ஒரு ஊக்க மருந்து. நன்றி Suvy

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

இப்ப இரவு நேரம் எண்டபடியாலை சத்தமில்லாமல் சிரிச்சு சிரிச்சு நெஞ்செல்லாம் நோகப்புடிச்சிட்டுது.

இதற்கு நான் பொறுப்பு ஏற்க முடியாது குமாரசாமி. நான்தான் “பார்க்காதே பார்க்காதே” என்று ஒரு தடவைக்கு இரண்டு தடவை குறிப்பிட்டிருந்தேனே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரத்தினம் துணிஞ்ச கட்டையாக இருக்கவேண்டும். பிரெஞ்சுப் பொலிஸ் டோர்ச் அடிக்கேக்கை எதையும் பறிய விட்டாரோ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

ரத்தினம் துணிஞ்ச கட்டையாக இருக்கவேண்டும். பிரெஞ்சுப் பொலிஸ் டோர்ச் அடிக்கேக்கை எதையும் பறிய விட்டாரோ??

நல்ல மிளகாய்த் தூளும்....நிறைய உள்ளியும்...போட்ட கறியாய்...பயணம் வெளிக்கிட முந்தி...ஒரு வெட்டு வெட்டியிருப்பார் போல !

வெள்ளைக்காரனுக்கு...அந்தக் காலத்தில...உள்ளி...அவ்வளவு பிடிக்கிறது இல்லைத் தானே!

இப்ப...என்ன மாதிரியோ...தெரியாது!

அவுசில்....அரைவாசி வெள்ளையல் சாப்பிடுகிறது.....ஆசியன் கடைகளில தான்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, கிருபன் said:

 

ரத்தினம் துணிஞ்ச கட்டையாக இருக்கவேண்டும். பிரெஞ்சுப் பொலிஸ் டோர்ச் அடிக்கேக்கை எதையும் பறிய விட்டாரோ

 

அப்படியும் ஏதாவது நடந்திருக்கலாம் கிருபன்

ஆனால் ரத்தினம் அதைப் பற்றி எனக்கு ஒண்டும் சொல்லவேயில்லல.?

 
20 hours ago, புங்கையூரன் said:

நல்ல மிளகாய்த் தூளும்....நிறைய உள்ளியும்...போட்ட கறியாய்...பயணம் வெளிக்கிட முந்தி...ஒரு வெட்டு வெட்டியிருப்பார் போல !

புங்கையூரான்,

கொழும்பில் இருந்து வெளிக்கிடும் போது, மருதானை புஹாரி ஹோட்டலில் இரண்டு பேரும் பிரியாணி சாப்பிட்டோம்.பிரியாணியில் இருந்த (அவித்த) முட்டை எனக்குப் பிடிக்கவில்லை. “உங்களுக்கு வேண்டமெண்டால் தாங்கோ. நான் சாப்பிடுகிறேன்”  என்று ரத்தினம் எனது கோப்பையில் இருந்த முட்டையையும் எடுத்துச் சாப்பிட்டான். மற்றும்படி நீங்கள் குறிப்பிட்டதுபோல், “பயணம் வெளிக்கிட முந்தி...ஒரு வெட்டு வெட்டியிருப்பார்என்பது நடக்கவில்லை.??

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kavi arunasalam said:

அப்படியும் ஏதாவது நடந்திருக்கலாம் கிருபன்

ஆனால் ரத்தினம் அதைப் பற்றி எனக்கு ஒண்டும் சொல்லவேயில்லல.?

 

புங்கையூரான்,

கொழும்பில் இருந்து வெளிக்கிடும் போது, மருதானை புஹாரி ஹோட்டலில் இரண்டு பேரும் பிரியாணி சாப்பிட்டோம்.பிரியாணியில் இருந்த (அவித்த) முட்டை எனக்குப் பிடிக்கவில்லை. “உங்களுக்கு வேண்டமெண்டால் தாங்கோ. நான் சாப்பிடுகிறேன்”  என்று ரத்தினம் எனது கோப்பையில் இருந்த முட்டையையும் எடுத்துச் சாப்பிட்டான். மற்றும்படி நீங்கள் குறிப்பிட்டதுபோல், “பயணம் வெளிக்கிட முந்தி...ஒரு வெட்டு வெட்டியிருப்பார்என்பது நடக்கவில்லை.??

நோர்மலாய் ஒரு முட்டையின்ரை விக்கனமே பெரிசு....அதிலை இரண்டு முட்டையெண்டால் சொல்லி வேலையில்லை......ரத்தினம் அண்ணைக்கு லைற் அடிச்ச பொலிசு எப்பிடியும் கொஞ்ச நேரம் தள்ளாடி தடுமாறியிருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/13/2018 at 9:41 PM, Kavi arunasalam said:

...கொழும்பில் இருந்து வெளிக்கிடும் போது, மருதானை புஹாரி ஹோட்டலில் இரண்டு பேரும் பிரியாணி சாப்பிட்டோம்.பிரியாணியில் இருந்த (அவித்த) முட்டை எனக்குப் பிடிக்கவில்லை. “உங்களுக்கு வேண்டமெண்டால் தாங்கோ. நான் சாப்பிடுகிறேன்”  என்று ரத்தினம் எனது கோப்பையில் இருந்த முட்டையையும் எடுத்துச் சாப்பிட்டான்...

காற்று வாங்கலாமென கொழும்பு வீதிகளில் நடந்தபோது இந்த "புஹாரி ஹோட்டல்" கண்ணில் பட்டது..

ஒருவேளை 'மின்னல்' ஐயா, இங்கே முட்டை சாப்பிட்டிருக்கலாமென தோன்றியது..!   vil-heureux.gif

சுட்டுப் போட்டேன்..!! :innocent:

 

sta.jpg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/03/2018 at 5:56 AM, Kavi arunasalam said:

இதற்கு நான் பொறுப்பு ஏற்க முடியாது குமாரசாமி. நான்தான் “பார்க்காதே பார்க்காதே” என்று ஒரு தடவைக்கு இரண்டு தடவை குறிப்பிட்டிருந்தேனே.

வாசிக்காதே வாசிக்காதே என்று போட்டிருந்தால் நாங்கள் வாசிக்காமல் விட்டிருப்போம் ....பார்க்காதே என்று போட்டபடியால் எதோ விசயம் இருக்கும் என்று பார்த்திட்டோம்....tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படிக்காதே படிக்காதே என்று போடாதபடியால் நாங்களும் படித்தோம். எம் துயரங்களிலும் நகைச்சுவை காண்பது எல்லேரலும் முடியாது.நல்லதொரு அனுபவப் பதிவு.

Link to comment
Share on other sites

உங்கள் அனுபவத்தை பகிர்ந்துகொண்டதுக்கு நன்றி. மிக சுவார்சியமாக இருக்கின்றது. அச்சம் மிகுந்த பயணம் இருந்தாலும் அதனுள்ளே ஒரு இலகுதன்மை.

தொடர்ந்து எழுதுங்கள். மேலும் நீங்கள் ரத்தினத்துடன் உறவை ஏற்படுத்துவது பிரயோசனமாக இருக்கலாம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/03/2018 at 10:27 AM, putthan said:

வாசிக்காதே வாசிக்காதே என்று போட்டிருந்தால் நாங்கள் வாசிக்காமல் விட்டிருப்போம் .

பார்க்காமலே வாசிக்க முடியுமா புத்தன்??

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்! 19 MAR, 2024 | 10:01 AM வெப்பமான காலப் பகுதியானது வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கும் ஆபத்தான நோய்களை ஏற்படுத்தும் எனக் கால்நடை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். பகல் வேளையில் விலங்குகளை மூடிய வாகனங்களில் ஏற்றிச் செல்வதைத் தவிர்க்குமாறும் இந்த நாட்களில் நாய் போன்ற விலங்குகளுடன் விளையாடுவதைத் தவிர்க்குமாறும் கால்நடை வைத்தியர் அருண சந்திரசிறி தெரிவித்தார்.  விலங்குகளின் உடல் சூடாக இருப்பதனால் தினமும் செல்லப்பிராணிகளை குளியாட்டுதல், கூந்தல் உள்ள விலங்குகளுக்கு இரண்டு அல்லது மூன்று முறை குளியாட்டுதல், குடிப்பதற்குத் தேவையான அளவு சுத்தமான தண்ணீர் கொடுத்தல், பகல் வேளையில் ஐஸ் கட்டிகள் கொடுத்தல் போன்றவற்றை  செய்யலாம். வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் மயங்கி கீழே விழுந்தால், கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் செல்வதற்கு முன் குளிர்ந்த நீரில் உடலைக் கழுவுவதால் உயிரைக் காப்பாற்ற முடியும் என வைத்தியர் அருண சந்திரசிறி சுட்டிக்காட்டினார்.  செல்லப்பிராணிகள் மாத்திரமின்றி வீட்டில் வளர்க்கப்படுகின்ற  விலங்குகள் அனைத்தும் அதிக வெப்பநிலையால் பாதிக்கப்படுகின்றன,  அதிக வெப்பநிலையால்  மென்மையான  தோல் கொண்ட விலங்குகளுக்குக் காயங்கள் கூட ஏற்படலாம்  என்றும்  அவற்றை எப்போதும் நிழலான இடங்களில் கட்டி வைக்கலாம் என்றும் கால்நடை வைத்தியர்கள்  சுட்டிக்காட்டுகின்றனர். https://www.virakesari.lk/article/179087
    • பட மூலாதாரம்,HAMED NAWEED/LEMAR AFTAAB படக்குறிப்பு, ரபியா பால்ஜி 19 மார்ச் 2024, 02:44 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் "மிக முக்கியமான விஷயம், இது ஒரு காதல் கதை." இப்படிக் கூறியவர் பிபிசி உலக சேவையில் பணிபுரியும் அப்துல்லா ஷதன், அவர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர். ஒரு காலத்தில் திரைப்பட நடிகராக இருந்தவர். 50 ஆண்டுகளுக்கு முன்பு அதே காதல் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். அத்திரைப்படம் இளவரசி ரபியா பால்ஜியின் வாழ்க்கை வரலாறு. அவர் இப்போதும் நேசிக்கப்பட்டு போற்றப்படுகிறார். அவர், சமூகத் தடைகளை மீறி ஒருவரைக் காதலித்தார். அதற்காக அவரது சகோதரனே அவரைக் கொன்றார். “அவள் அன்பின் சின்னம். காதலுக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்தவள். அதுதான் இன்றும் அனைவரையும் ஈர்க்கிறது,” என்று அப்படத்தில் இளவரசி ரபியாவின் காதலனாக நடித்த ஷதன் கூறுகிறார். ஆனால், ரபியாவின் காதல் இரண்டு வழிகளில் புரிந்துகொள்ளப்படுகிறது. ஒரு வகையில் அவரது காதல் தெய்வீகமானதாகவும், ரபியா ஒரு முஸ்லிம் துறவியாகவும் கருதப்படுகிறார். மற்றொருபுறம் அவர் ஒரு பெண்ணியவாதியாக அவரது காதல் கலகமாக, உடல்சார்ந்ததாகக் கருதப்படுகிறது. இப்படிச் சொல்பவர் ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைகழகத்தில் மானுடவியலில் முனைவர் பட்ட ஆராய்ச்சி செய்யும் ஷமீம் ஹுமாயுன்.   தலைமுறைகள் கடந்தும் சொல்லப்படும் கதை ஆனால், ரபியா, இஸ்லாம் கலாசாரத்தின் பொற்காலத்தைச் சேர்ந்த சிறந்த கவிஞர்களில் ஒருவர், மேலும் ஆப்கானிஸ்தானின் கற்பனையில் மிகவும் மதிக்கப்படும் நபர்களில் ஒருவர் என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற முனாசா எப்திகர் கூறுகிறார். பண்டைய ஆப்கானிஸ்தானின் பால்க் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டவர் ரபியா. இது இன்று வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ளது. அங்கு 9-ஆம் நூற்றாண்டில் கணிதம் மற்றும் வானியல் செழித்து வளர்ந்தது. அங்கு 10-ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்ற தத்துவஞானி மற்றும் விஞ்ஞானி அவிசென்னா பிறந்தார். ரபியா கி.பி. 940-இல் பிறந்தார் என்று நம்பப்படுகிறது. இருப்பினும் அவரது ஆரம்பகால வாழ்க்கையை பற்றிய விவரங்கள் குறைவு என்பதால் சரியான தேதி நமக்குத் தெரியவில்லை. ஆனால், இக்கதை தலைமுறைகள் கடந்தும் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு கதைசொல்லியும் இக்கதையில் தங்கள் சொந்த விளக்கத்தின்படி அவர்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுவதை முன்னிலைப்படுத்தி வெவ்வேறு அம்சங்களை வலியுறுத்துகின்றனர். எனவே இக்கதைக்குப் பல பதிப்புகள் உள்ளன. எப்டிகார் என்பவர் எழுதிய கதைதான் இன்று பரவலாகச் சொல்லப்படுகிறது. பட மூலாதாரம்,MUNAZZA EBTIKAR படக்குறிப்பு, ரபியா கி.பி. 940-இல் பிறந்தார் என்று நம்பப்படுகிறது. இருப்பினும் அவரது ஆரம்பகால வாழ்க்கையை பற்றிய விவரங்கள் குறைவு அழகும் அறிவும் ஒன்றுகூடிய இளம்பெண் அக்கதை இப்படித் துவங்குகிறது. "... ஆயிரம் மசூதிகளுடைய, பால்க் அமீரின் மகளாக ரபியா பிறந்தார். பன்னீரில் குளித்து, பட்டால் அலங்கரிக்கப்பட்டு, தங்க ரதத்தில் அமர்த்தப்பட்டார். அவள் பிறந்த நாளை பால்க் மக்கள் கொண்டாடினர்...” "ரபியா அரண்மனையில் வளர்ந்தார், அங்கு அவருக்கு கலை, இலக்கியம், வேட்டை, வில்வித்தை ஆகியவை கற்பிக்கப்பட்டன..." அக்காலத்தில் அப்பகுதியில் பெண்களின் கல்வி கற்பது அசாதாரணமானது அல்ல, என்று லண்டன் பல்கலைக்கழகத்தின் கிழக்கத்திய மற்றும் ஆப்பிரிக்க ஆய்வுகள் பள்ளியின் ஆய்வாளர் நர்கஸ் ஃபர்சாத் பிபிசியிடம் கூறினார். "இஸ்லாத்துக்கு முந்தைய மரபுகள் மற்றும் கலாச்சாரங்கள் இஸ்லாமிய காலகட்டத்திலும் தொடர்ந்தன. எனவே செல்வந்தர்கள் மற்றும் பிரபுக்களின் மகன்களைப் போலவே அவர்களது மகள்களுக்கும் கல்வியறிவு வழங்கப்பட்டது," என்கிறார் நர்கஸ் ஃபர்சாத். மேலும் அவர், "ரபியா ஒரு மகிழ்ச்சியான மற்றும் பணக்கார தந்தையின் செல்ல மகள்" என்று கூறுகிறார். "சமானிட் தேசத்தின் அரசவைக் கவிஞரான ருடாக்கி, ரபியாவின் பேச்சுத்திறன், மொழித்திறன் மற்றும் கவியாற்றல் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டார் என்பதும் நமக்குத் தெரியவருகிறது," என்று அவர் மேலும் கூறுகிறார். சிலகாலம் எல்லாம் மகிழ்ச்சியாகவே இருந்தது. "அவளது அழகும், வார்த்தைகளும் வசீகரமாக இருந்தன . அவளது பேச்சுத்திறன் பலரையும் ஈர்த்தது.” "ரபியா தனது கவிதைகளை மக்கள்முன் வாசித்தபோது, அவரது சமகால கவிஞர்களும் எழுத்தாளர்களும் வியப்பில் ஆழ்ந்தனர். அவர் தனது பெற்றோரின் இதயங்களை மட்டுமல்ல, பால்க் மக்களின் இதயங்களையும் வென்றார்." இருப்பினும், அவரது சகோதரர் ஹரிஸ் அவர்மீது கொடிய பொறாமை கொண்டிருந்தார். அவர்களது தந்தை மரணப்படுக்கையில் இருந்தபோது, அவருக்குப் பிறகு ரபியாவை நன்றாக கவனித்துக் கொள்ளுமாறு ஹரிஸைக் கேட்டுக்கொண்டார். ஆனால் ஹரிஸ்தான் ரபியாவின் கொடூரமான முடிவுக்குக் காரணமாக இருந்தார்.   பட மூலாதாரம்,FARHAT CHIRA படக்குறிப்பு, அவர் தனது கடைசி கவிதை வரிகளை அரச குளியலறையின் சுவர்களில் தனது சொந்த இரத்தத்தால் எழுதினார் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள் ரத்தத்தால் எழுதிய கடைசி வரிகள் எப்டிகாரின் கதை தொடர்கிறது. "ஒரு நாள், ரபியா தனது பால்கனியில் ஒரு தோட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தபோது, ஒரு அழகான மனிதர் ஹரிஸுக்கு மது பரிமாறுவதைக் கண்டாள்…” "ஹரிஸின் துருக்கிய அடிமையும் புதையல் காவலருமான அவரது பெயர் பக்தாஷ். அவர் ரபியாவின் இதயத்தைக் கவர்ந்தார். அந்த தருணமே ரபியாவின் துயரமான விதி தொடங்கியது..." பக்தாஷுக்கு ரபியா தனது விசுவாசமான பணிப்பெண் ரானா மூலம் காதல் கடிதங்களை அனுப்பத் துவங்கினார். "அருகிலிருந்தும் விலகியிருப்பவனே, நீ எங்கே இருக்கிறாய்? வந்து என் கண்ணுக்கும் என் இதயத்துக்கும் மகிழ்ச்சியைக் கொடு, இல்லையேல் வாளை எடுத்து என் வாழ்க்கையை முடித்துவிடு…" பக்தாஷும் ரபியாவுக்கு அதேபோல அன்பான மற்றும் கவிதை மிகுந்த பதில் கடிதங்களை எழுதினார். காந்தஹாரின் ஆட்சியாளர் பால்க் பகுதியைத் தாக்க முற்பட்டபோது, ஹரிஸ், தனது ஆலோசகர்களுடன் கலந்தாலோசித்த பிறகு, பக்தாஷின் உதவியின்றி தனது எதிரியைத் தோற்கடிக்க முடியாது என்பதை அறிந்தார். பக்தாஷ் தன் எதிரியைக் கொன்றால், அவன் விரும்பியதை அவனுக்குப் பரிசாகத் தருவதாக ஹரிஸ் சொன்னான். பக்தாஷ் வெற்றி பெற்றார், ஆனால் முயற்சித்து அதில் பலத்த காயமடைந்தார். "அவர் கிட்டத்தட்ட உயிரை இழந்துவிட்ட தறுவாயில், முகத்தை மூடிய ஒரு போர்வீரர் பக்தாஷைக் காப்பாற்றவும், போரில் வெற்றி பெற அவருக்கு உதவவும் போர்க்களத்திற்கு பாய்ந்து வந்தார். இந்த வீரர் வேறு யாருமல்ல, ரபியா தான்..." ரபியாவும் பக்தாஷும் காதலிக்கிறார்கள் என்பதை அறிந்த ஹரிஸ், பக்தாஷை கிணற்றில் வீசவும், ரபியாவை ‘ஹமாம்’ என்று அழைக்கப்படும் அரண்மனையின் குளியலறையில் பூட்டவும் உத்தரவிட்டார். சில பதிப்புகள், ஹரிஸ் ராபியாவின் கழுத்து நரம்புகளை வெட்ட உத்தரவிட்டதாகவும், மற்றவை, அவளது மணிக்கட்டில் உள்ள நரம்புகளை அவளே வெட்டிக் கொண்டதாகவும் கூறுகின்றன. ஆனால் அவர் தனது கடைசி கவிதை வரிகளை அரச குளியலறையின் சுவர்களில் தனது சொந்த இரத்தத்தால் எழுதினார் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். "உன் காதலின் கைதி நான்; தப்பிப்பது சாத்தியமல்ல "அன்பு என்பது எல்லைகளற்றக் கடல், புத்தியிருப்பவன் அதில் நீந்த விரும்ப மாட்டான்... "உனக்கு கடைசி வரை அன்பு வேண்டுமென்றால் ஏற்றுக்கொள்ளப்படாததை ஏற்றுக்கொள், கஷ்டங்களை மகிழ்ச்சியுடன் எதிர்கொ, விஷம் அருந்து, ஆனால் அதை தேன் என்று சொல்..." சில நாட்களுக்குப் பிறகு, ரானாவின் உதவியுடன், பக்தாஷ் கிணற்றில் இருந்து தப்பித்து, ஹரிஸின் தலையை வெட்டிக்கொன்று, குளியலறைக்குச் சென்றார். "தரையில் கிடந்த ரபியாவின் அழகான, உயிரற்ற உடலையும், சுவர்களில் ரத்தத்தால் எழுதப்பட்ட அவளது கடைசி காதல் கவிதைகளையும் மட்டுமே" அவன் கண்டான். அவன் தனது காதலியுடன் தன்னுயிரையும் விட்டுவிட்டான்.   பட மூலாதாரம்,SHAMIM HOMAYUN படக்குறிப்பு, பால்க் பகுதியிலுள்ள ரபியா ஆலயம் சமூகச் சீர்கேட்டின் இடமாகக் கருதப்பட்டதால் மூடப்பட்டது. ஒரே பெண், இரண்டு முகங்கள் "ரபியா இறந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும், மற்ற கவிஞர்கள் அவரது நற்பண்புகளையும் அழகையும் குறித்துப் பேசினர்," என்று ஃபர்சாத் கூறுகிறார். அவர்களில் ஒருவர் முதல் சூஃபிக் கவிஞரான அபு சயீத் அபு அல்-கைர் (1049 இறந்தவர்). இவர் அந்தக் காதல் கதையின் நாயகி ஏன் ஒரு புனிதராகக் கருதப்படுகிறார் என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறார். வெளிப்படையாகப் பார்த்தால் அவரது கவிதைகள் தெய்வீகத்தைப் பற்றிப் பேசுவதிலிருந்து வெகு தொலைவில் இருந்தன. ஆனால், ரபியா உணர்ந்த அன்பின் தன்மையைப் பற்றி அல்-கைர் வியந்து பேசுகிறார். "அது மிகவும் தீவிரமானது, அது தெய்வீகமான இடத்திலிருந்து மட்டுமே வந்திருக்க முடியும்," என்று அல்-கைர் கூறியதை ஹுமாயுன் கூறுகிறார். அல்-கைர் எழுதிய பிரதி இப்போது நமக்குக் கிடைக்கவில்லை என்றாலும், 13-ஆம் நூற்றாண்டின் பாரசீகக் கவிஞர் ஃபரித் அல்-தின் அத்தாரால் மீண்டும் எழுதப்பட்டதிலிருந்து நாம் அறியலாம், என்கிறார். ரபியா ஒரு உண்மையான சூஃபி என்பதை நிரூபிப்பதே இந்த இரண்டு கவிஞர்களின் குறிக்கோள் என்று அவர் கூறுகிறார். அந்த விளக்கத்தின்படி, பக்தாஷ் மீதான அவளது காதல் வெறும் காமத்தால் தூண்டப்படவில்லை. மாறாக அவளுடைய காதல் தெய்வீக அன்பை வெளிப்படுத்தும் வழிமுறையாகும். இருப்பினும், வேறு ஒரு புரிதலின்படி ரபியா பெண்களின் தைரியத்திற்கான குறியீடாக இருக்கிறார். இந்தப் புரிதலின்படி ரபியா பழமைவாத எதிர்ப்பின் அடையாளமாகக் கருதப்படுகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு காபூலில் நடந்த ‘குறிப்பிடத்தக்க ஆப்கான் பெண்களைப்’ பற்றிய ஓவியக் கண்காட்சியில்), ஆப்கானிஸ்தான் ஓவியரும் புகைப்படக் கலைஞருமான ராதா அக்பர், "ரபியா ஆணாதிக்கத்திற்கு எதிரான எதிர்ப்பின் சின்னம். காதலுக்காகவும் சுதந்திரத்திற்காகவும் ஆப்கானியப் பெண்கள் எதிர்கொண்ட ஒடுக்குமுறையின் நினைவூட்டல்," என்று ராபியாவை விவரித்தார். பல வருடங்களுக்கு முன்பு, ஆப்கானிஸ்தானின் முதல் திரைப்படமான ‘ரபியா பால்ஜி’ வெளியானபோது, பிரபல பத்திரிகையான ‘ஜ்வாண்டுன்’ இதழில் அதுபற்றி ஒரு கட்டுரை வெளியானது. அதன் முதல் வரி: "ரபியாவின் கதை கழுத்து நெரிக்கப்பட்ட நம் சமூகத்தின் பெண்களின் வாயிலிருந்து வெளிவந்த கதறல்."   பட மூலாதாரம்,WORLD DIGITAL LIBRARY, LIBRARY OF CONGRESS படக்குறிப்பு, ரபியா குறித்த திரைப்படத்தில் பெண்கள் காபூலில் 1970-களில் பிரபலமாக இருந்த நாகரீகமான பாணியில் ஆடம்பரமான, இறுக்கமான ஆடைகளுடனும் முடி அலங்காரத்துடனும் தோன்றினர் தாலிபான்களிடமிருந்து காப்பாற்றப்பட்ட திரைப்படம் ரபியா பால்ஜி படத்தில்தான் அப்துல்லா ஷதன் பக்தாஷ் வேடத்தில் நடித்தார். அதில் அவர் ரபியாவை காதலித்தார். குறிப்பாகச் சொல்வதெனில் அப்பாத்திரத்தில் நடித்த நடிகை சிமாவுடன். அவரையே அவர் திருமணமும் செய்து கொண்டார். இது அப்போது ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியது. "ரபியா பால்ஜி மிகவும் பிரபலமான படமாகும்," என்று ஷதன் பிபிசி முண்டோவிடம் கூறினார். “சுமார் 40 பெண்கள் இதில் வேலை செய்தனர். இப்போது தாலிபான்களின் ஆட்சியில் அப்படி ஒரு படத்தை எடுக்கவே முடியாது," என்றார். அது மட்டுமல்ல. அப்படத்தில் ரபியா காதல்வயப்பட்ட, சுதந்திரமான, வலிமையான பெண். அவரும் மற்ற பெண்களும் காபூலில் 1970-களில் பிரபலமாக இருந்த நாகரீகமான பாணியில் ஆடம்பரமான, இறுக்கமான ஆடைகளுடனும் முடி அலங்காரத்துடனும் தோன்றினர். தாலிபான்கள் 1996-ஆம் ஆண்டு கடுமையான தணிக்கையை திணித்தபோது காபூலில் உள்ள தேசிய திரைப்படக் காப்பகத்தில் பணிபுரிந்தவர்கள், 6,000 விலைமதிப்பற்ற ஆப்கானிய திரைப்படங்களைப் பாதுகாத்தனர். அவர்கள் அவசரமாக ஒரு பொய்ச்சுவரைக் காட்டி அதற்குப் பின்னால் மறைத்து வைத்து, தாலிபான்களின் தணிக்கை பிடியில் இருந்து காப்பாற்றிய திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும். பால்க் பகுதியிலுள்ள ரபியா ஆலயம் சமூகச் சீர்கேடின் இடமாகக் கருதப்பட்டதால் மூடப்பட்டது. ஆனால், பள்ளிகள் முதல் மருத்துவமனைகள் வரை, பல பெண் நிறுவனங்கள், ‘ரபியா’ என்று பெயரிடப்பட்டன. https://www.bbc.com/tamil/articles/cekervmdr94o
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • ஆதரவற்றோர் இல்லத்தை சிறுமிகள் கடத்தும் இடமாக பாவித்துள்ளார்கள்.
    • நாற்பதாயிரம் ரூபா என நினைக்கிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.