Jump to content

VPN தொழில்நுட்பம்


Recommended Posts

VPN தொழில்நுட்பம்
 
 

- தங்கராஜா தவரூபன்

image_8b4d2322ad.jpg

கண்டியில் கடந்த வாரம் எழுந்த இன ரீதியிலான பிரச்சினைகளின் பின்னணியில், ஒரு கட்டத்தில் கண்டியில் 3G, 4G இணைய சேவையில் மட்டுப்படுத்தலை செய்தது மட்டுமல்லாது நாடுமுழுவதிலும் சமூக வலைத்தளங்களான பேஸ்புக், வைபர், வட்ஸ்அப் ஆகிய வலைப்பின்னல்களை அரசாங்கம் தடை செய்தது.

இத்தடையானது சட்ட ரீதியில் தண்டனைக்குரிய குற்றமாக அமையுமாறு இல்லாமல் வெறுமனே அச்சேவைகளை தற்காலிகமாக முடக்குவதற்கான உத்தரவாகவே அமைந்திருந்தது. தண்டனைக்குரிய குற்றமாக அறிவிப்பதாயின் அதை நீதிக் கட்டமைப்பின் ஊடாகவே செய்திருக்க வேண்டும். இத்தடையை இலங்கை பாதுகாப்பு அமைச்சின் வேண்டுகோளுக்கு அமைவாக இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவால் (TRCSL) சகல இணைய, தொடர்பாடல் சேவைகள் வழங்குநர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.

இதன் காரணமாக இலங்கையின் இணைய சேவை வழங்குநர்களின் வலைப்பின்னல்களின் ஊடாக இணைய சேவை பெற்ற எவரது கணினியில் இருந்தோ அல்லது செல்லிடத் தொலைபேசி மற்றும் திறன்பேசி சாதனங்களில் இருந்தோ பேஸ்புக், வைபர் வட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தள சேவைகளை நேரடியாக அணுகுவது முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இப்பத்தி எழுதப்படும் சனிக்கிழமை இரவு நள்ளிரவு வரை இந்தத்தடை நீக்கப்பட்டிருக்கவில்லை. இன்னொரு சமூக வலைத்தளமான டுவிட்டருக்கு இத்தடை கொண்டுவரப்பட்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

டுவிட்டரானது கடைநிலை பாமரனை எளிதில் சென்றடைவதில்லை என்பதால் அரசாங்கம் அதில் கவனம் செலுத்தவில்லை எனப்படுகிறது. மேற்படி தடைகாரணமாக வன்முறையைத் துாண்டும் செய்ற்பாடுகள் ஓரளவுக்கு குறைந்தன என்றாலும் அது அதனுடைய இலக்கை முழுமையாக எட்ட முடிந்திருக்கவில்லை. சம்பவங்களுக்கு காரணமானவர்களை கைது செய்யாமல் அவர்கள் மீது நடவடிக்கைகளை எடுக்க திராணியற்று சமூகவலைத்தளங்களை முடக்குவது கருத்துச் சுதந்திரத்தை தடுப்பதாகவும் தகவல் அறிவதை தடுப்பதாகவும் அரசாங்கத்தின் இயலாமையை காட்டுவதாகவும் இருப்பதாக குரல்கள் எழுந்தன.

தடைகளைத் தகர்த்தெறியும் தொழில்நுட்பங்கள் உலகில் இன்று எங்கும் காணப்படுகின்றன. இந்நிலையில் இத்தடைகளை பயனாளர்களில் பெரும்பாலானவர்கள் தகர்த்தெறிவதற்கு உள்ளூரில் தகவல் தொழில்நுட்பங்களில் சிறந்து விளங்கிய மாணவர்களும் வல்லுநர்களும் காரணமாயிருந்தனர்.

தடை அறிவிக்கப்பட்ட உடனேயே அதை பேஸ்புக்கில் பதிவாக்கிய சம்பவங்கள் ஊடாக இதை காணக்கூடியதாக இருந்தது. எனினும் உடடியாக பார்த்த வேளை சாதரணமாக ஊடரங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் மக்கள் நடமாட்டம் காணபட்டது போலவே இந்த சமூகவலைத்தளங்களிலும் பயனாளர்களின் பிரசன்னம் மிக மிக குறைவாக இருந்தது. பின்னர் தடைகளை உடைத்து குறிப்பிட்ட சமூகவலைத்தளங்களை அணுகும் விதங்கள் பற்றிய தகவல்கள் ஒருவரிடமிருந்து ஒருவர் களத்தில் கடத்தப்பட்டு கிட்டத்தட்ட சகல பயனாளர்களும் குறிப்பாக முழு திறன்பேசிப்பயனாளர்களும் குறித்த சமூகவலைத்தளங்களை அணுகக் கூடிய நிலைக்கு வந்தனர். இதில் சுவராஷ்யம் என்னவென்றால் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்களின் உத்தியோகபூர்வ பக்கங்களே பதிவுகளை பதிவு செய்து கொண்டிருந்தன.

இருப்பினும் இத்தடைகளை உடைத்துக்கொண்டு பார்வையிடும் செயலில் சுமார் 80 சதவீதமானோர் வெற்றி கண்டனர். ஏனையவர்கள் நமக்கேன் வம்பு என்றும் ஏதேனும் பாதுகாப்பு பிரச்சனைகள் இருக்கக்கூடும் என்ற பயத்திலும் அவசரகால சட்டம் 10 நாட்களுக்கு அமுல்படுத்தப்பட்டுள்ளநிலையில் சட்டச் சிக்கல்கள் எதற்காவது முகங்கொடுக்க நேரிடுமோ என்ற பயத்தாலும் சரியான தொழில்நுட்ப உதவிகள் அவர்களை அடையாத காரணத்தாலும் பேசாதிருந்து விட்டனர். அவர்களுக்கு தகவல் மூலங்களாக இணையத்தளங்கள் மட்டுமே இருந்து வருகின்றன.

சரி தடைகளை தகர்த்தெறிந்தனர் என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம் எவ்வாறு தகர்த்தெறிந்தனர்? இனி முழுக்க முழுக்க தொழில்நுட்பம் சாரந்த விளக்கம் தொடர்கின்றது. பொதுவாக இணைய இணைப்பை எமது கணினிக்கு அல்லது கையடக்க சாதனத்துக்கு பெற்றதும் நாம் அதனூடாக இணையத்தளங்களையும் இணைய வழி சேவைகளையும் அணுகுவதற்கு இணைய உலாவி, செயலிகளை பயன்படுத்துவது வழமை. அவற்றினை நாம் பயன்படுத்தும்போது நமது வேண்டுகோள்கள் யாவும் முதலில் சென்றடைவது நாட்டின் இணைய சேவை வழங்குனர்களையே.

நமது நாட்டில் முக்கியமான இணைய சேவை வழங்குநர்களாக ஶ்ரீலங்கா டெலிகொம், மொபிடெல், டயலொக், எயார்டெல் ஆகியன இருக்கின்றன. இன்னும் பிறவும் இயங்குகின்றன.இவற்றில் பெரும்பாலானவற்றின் வலைப்பின்னல்கள் பகுதியளிவிலேனும் ஶ்ரீலங்கா டெலிகொமூடாவே கையாளப்படுகின்றன.

இணைய சேவை வழங்குநர்களை சென்றடையும் ஒவ்வொரு வேண்டுகோளும் பின்னர் உரிய உலகளாவிய DNS வழங்கிகள் ஊடாக உரிய இடத்தை சென்றடைந்து பின்னர் அங்கிருந்து வரும் தகவல்கள் நமது சாதனங்களை வந்தடைகின்றன. இவ்வாறு தகவல் பரிமாற்றம் செய்யப்படும் வேளைகளில் தரவுகள் சங்கேத வழி குறிமுறை மாற்றங்களுக்கு (Encryption) உட்படுத்தப்பட்டு தரவுப் பொதிகளாக்கப்பட்டுத்தான் கையாளப்படுகின்றன,   அனுப்பப்படுகின்றன அல்லது பெறப்படுகின்றன. இது சாதாரணமாக அனைவருக்கும் தெரிந்த விடயம்.

ஆயினும் இந்த வேண்டுகைகள் குறித்த இணையத் தொடுப்புகள் மற்றும் அணுக்கங்கள் யாவும் இணைய சேவை வழங்குநர்களின் தரவுத் தளத்தில் காணப்படும். அது பின்னர் எக்கணத்திலும் அவர்களால் அணுகப்படக் கூடியவை. அவை குறித்த காலப் பகுதில் தாமாக அழியும் வகையில் கட்டமைத்திருப்பார்கள். இத்தகவல்களை கொண்டே இணையவழி குற்றங்கள் கண்டறியப்படுவது வழமை. ஆகக்குறைந்தது எந்த இணையத்தளத்தை எப்பக்கத்தை நாம் அணுகுகின்றோம் என்பது இணைய சேவை வழங்குநர்களுக்கு தெரிந்த விடயம். ஆனால் பல மில்லியன் கணக்கான தரவுகளில் தனித்தனியாக அவதானிக்கப்படமாட்டாது. தேவை ஏற்படும்போது அதிகாரமளிக்கப்பட்ட உரிய தரப்பினரால் அது அணுகப்படும்.

இந்நிலையில், குறித்த சில சமூகவலைத்தளங்களையும் அவ்வாறான செயலிகளையும் இலங்கையில் பாவனையாளர்களிடமிருந்து முடக்குவது என்பது இணைய சேவை வழங்குநர்களுக்கு சவாலான விடயமில்லை. அவர்கள் அவற்றுக்கான பாதைகளையும் இத்தளங்களை அணுகுவதற்கான முகவரிகளையும் ஒருசில மணித்தியாலங்களில் தடுத்து விட்டிருந்தனர்.

இங்குதான் VPN (Virtual Private Network) எனப்படும் மெய்நிகர் தனிநபர் வலைப்பின்னல் சேவைகள் களத்துக்குள் நுழைகின்றன. இணையத்தின் வாயிலாக குறிப்பிட்ட இரண்டு தரப்பு மட்டும் தமக்குள் தகவல்களை பகிர்ந்து கொள்வதுதான் இந்த வி.பி.என் தொழில்நுட்பமாகும் இதன் மூலம் தகவல் அனுப்புபவரும் பெறுபவரும் அவர்களுடைய சாதனங்கள் மட்டுமே புரியும் வண்ணம் தகவல்களை பரிமாற்ற சிறப்பு வழங்கிகள் மூலம் இத்தகவல்கள் சங்கேத வழி குறிமுறைகளில் மாற்றப்பட்டு கடத்தப்படுகின்றன.

அதன்போது இடையில் உள்ள இணைய சேவை வழங்குநர் எந்த சேவையை பெறுவதற்கான வேண்டுகோள் உண்மையாக எந்த இடத்துக்கு போகவேண்டியது தன்னை நோக்கி வருகின்றது என்பதை அறியமாட்டார் அவர் குறித்த வேண்டுகோள் வி.பி.என் சேவை வழங்கிக்கு போகின்றது என்பதை மாத்திரம் அறிவார் அவ்வளவுதான். இடையில் நிற்கும் வி.பி.என் சேவை வழங்குநருக்கோ அது எங்கே போகின்றது என்று தெரிந்திருக்கும்.

சாதாரண நிலையில், அனுப்புவர் -இணைய சேவை வழங்குநர் - பெறுபவர் என்ற முக்கிய மூன்று தரப்புக்கள் மாத்திரம் சம்பந்தப்பட்டிருந்த விடயத்தில் (இடையில் பல DNS வழங்கிகள் சம்பந்தப்படும்) வி.பி.என் தொழில்நுட்பத்தை நாம் கோர்த்து விட்டதும் அனுப்புவர் --- இணைய சேவை வழங்குநர் – வி.பி.என் வழங்குநர்- பெறுபவர் என நான்கு தரப்பாக மாறிவிடும்.

நாம் இணைய உலவியில் இணைக்கும் வி.பி.என் கட்டமைப்பினூடாகவும் கணினியில் அல்லது பிற திறன்பேசி கையடக்க சாதனங்களில் நிறுவப்பட்டிருக்கும் வி.பி.என் செயலிகள் ஊடாகவும் எமது குறித்த இணையத்தளப் பக்கத்துக்கான அல்லது சேவைக்காக வேண்டுகையானது குறிமுறை மாற்றத்துக்கு உள்ளாக்கப்பட்டு இணைய சேவை வழங்குநரூடாக குறித்த வி.பி.என் சேவை வழங்குநரை அதன் வழங்கியை அடைந்து அங்கிருந்து பயணித்து குறிமுறை மாற்றத்தின் பின் உரிய தளத்தை அடைந்து அங்கிருந்து அதே வி.பி.என் சேவை வழங்குநர் வழங்கிகளினூடாக நமது நாட்டு இணைய சேவை வழங்குநர்களை அடைந்து அங்கிருந்து எமது சாதனைத்தை வந்தடையும்.

இதன்போது, உதாரணமாக பேஸ்புக்கை அணுகும்போது எமது நாட்டு இணைய சேவை வழங்குநரை நீங்கி சென்றபின் எந்த நாட்டில் இருந்து வி.பி.என் சேவை வழங்கி தனது வேண்டுகையை பேஸ்புக்கின் வழங்கிக்கு அனுப்புகின்றதோ அந்த நாட்டின் அமைவிடமே பேஸ்புக்குக்கு வேண்டுதல் வந்த நாடாகவும் காட்டும்.

image_f9108a2135.jpg

சுருக்கமாக விளக்குவதாயின் நீங்கள் ஒரு இரகசிய கடிதத்தை உரிய முகவரியிட்ட கடித உறையில் இட்டு மூடிய பின் இன்னும் ஒரு முகவரின் முகவரிக்கு முகவரியிடப்பட்ட ஒரு பெட்டியினுள் போட்டு அனுப்புகிறீர்கள். அது எங்கள் நாட்டு தபால் நிலையத்துக்கு சென்றால், பெட்டியில் உள்ள முகவரிக்கு அனுப்பப்படும் பெட்டியில் உள்ள முகவரிக்கு சென்றதும் அதை அவர்கள் (வி.பி.என்) உரிய முகவரியில் சேர்ப்பித்து அங்கிருந்து வரும் பதிலை நம் நாட்டு தபால்கந்தோரினூடாக எங்களிடம் சேர்ப்பிப்பர். இச்செயற்பாட்டில் எங்கள் நாட்டு தபால் நிலையத்துக்கு உங்கள் தகவல் அடங்கிய உண்மையான கடிதம் உண்மையில் எவரிடம் போய் சேருகின்றது என்றோ எவரி்டம் இருந்து உண்மையான பதில் வருகின்றது என்றோ அறிய முடியாது. அவர் பெட்டியை மட்டும் பார்த்துக் கொண்டிருப்பார். இங்கே பெட்டியில் போட்டு மூடும் வேலையை உங்கள் கணினியிலுள்ள VPN கட்டமைப்பு பார்த்துக் கொள்ளும்.

இதன்போது நீங்கள் அனுப்பும் தகவல்கள் VPN வழங்குநரால் களவாடப்படுமா என்ற கேள்வி எங்களி்டம் எழாமல் இருக்கமுடியாது. இவை சங்கேத முறையில் அனுப்பப்படும்போது களவாடப்பட முடியாது. ஏனையவை அவர்களால் (அவர்கள் விரும்பினால்) பார்வையிட முடியும். ஆனால், பொதுவாக தரவுகள் சங்கேத மொழியில் குறிமுறைமாற்றத்துக்குட்படுத்தப்பட்டே பரிமாற்றப்படுகின்றன என்பதால் அச்சம் கொள்ளதேவையில்லை.

ஆனால், முக்கியமான தரவுகள் குறிப்பாக வங்கிப் பணப்பரிமாற்றம் மின்னஞ்சல் தரவு பரிமாற்றங்களுக்கு HTTPS பாதுகாப்பு வழி கொண்ட இணைய முகவரிகளை பயன்படுத்தும்போது சங்கேதமொழியில் குறிமுறைமாற்றம் முழுமையாக உறுதிசெய்யப்படுகின்றது. சமூகவலைத்தளங்கள் அனைத்தும் இந்த ஏற்பாடுகளை கொண்டவையாகவேவுள்ளன. வி.பி.என் தொழில்நுட்பத்தினூடான தகவல் பரிமாற்றத்தால் பொதுவாக இணையத் திருடர்களிடமிருந்து தரவுகள் பாதுகாக்கப்படுகின்றன என்பதும் ஒரு நன்மையாகும்.

நமக்கு புதியதாக இருந்தாலும் வங்கிகள், பெருநிறுவனங்கள், அரசாங்கங்கள் தமது தகவல் பரிமாற்றத்துக்கு பிரத்தியேக வி.பி.என் வழங்கிகளையும் சேவைகளையும் பயன்படுத்திவருகின்றன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

எது எப்படியிருப்பினும் நாம் நிறுவும் மென்பொருள்களாயிருக்கட்டும் திறன்பேசி செயலிகளாயிருக்கட்டும் ஏன் இணைய உலாவிகளாயிருக்கட்டும் அனைத்தும் எமது கணினியில் அல்லது சாதனத்தில் உள்ள பிரத்தியேக தரவுகளை அணுகக் கூடியனவாகவேயுள்ளன.அவை அனைத்தும் நிறுவப்படும் வேளையிலேயே இதற்கான அனுமதியை எம்மிடம் பெற்றுக்கொண்டுதான் செயற்பட தொடங்குகின்றன. அதற்காக வி.பி.என் மட்டும் தான் திருடக்கூடும் என்று கூறுவதில் அர்த்தம் இருக்கப்போவதில்லை. இருந்தபோதிலும் பாவனையற்ற நேரத்தில் வி.பி.என் செயலியை நிறுத்திவைப்பது நல்லது. ஏன் பாவனையற்ற நேரத்தில் சாதனங்களில் இணையத்தை நிறுத்தி வைப்பது கூட சிறந்தது.

தற்போது பிரபலமான இலவச VPN சேவைகளாக Turbo VPN , VPN master, Psiphon Pro VPN, Super VPN ,Express VPN என பட்டியல் நீள்கிறது. VPN கட்டமைப்பு கொண்ட இணைய உலாவிகளாக Opera , TOR  போன்றவை காணப்படுகின்றன. அதேவேளை நமது பாவனையில் பெருமளவில் உள்ள இணைய உலாவிகளான்Chrome ,Firefox ஆகியவற்றுக்கான VPN Extentions கள் கூட கிடைக்கின்றன. அவற்றை நிறுவிக்கொள்வது மிக மிக இலகுவானது. பெரும்பாலானவற்றுக்கு எந்த Setting உம் செய்யப்பட தேவையில்லை நிறுவியவுடன் தடைகள் நீங்கிவிடும் அவ்வளவுதான்.

இலவச வி.பி.என் சேவைகளால் விளம்பர இடையூறுகள் மற்றும் வசதிக் குறைபாடுகள், இணையத் தாமதம் ஆகியன ஏற்பட வாய்ப்புண்டு.  பணம்செலுத்தி பெறும் வி.பி.என் சேவைகளில் இவை தவிர்க்கப்படலாம்.

தற்போது இணைய சேவை வழங்குநர்கள் இந்த வி.பி.என் சேவைகளுக்கான நமது வேண்டுகோள்களை கூடத் தடை செய்யத்தொடங்கியுள்ளன. ஆனால், அவர்களால் எல்லாவற்றையும் தடைசெய்வது முடியாத காரியம். காரணம் ஒன்றை தடைசெய்தால் இன்னொரு வி.பி.என் வழங்குநரை பயனர்கள் நாடுவர். வி.பி.என் சேவை வழங்குநர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர். எனவே இவற்றை தொடர்ந்து கண்காணிப்பதும் கட்டுப்படுத்துவதும் கடினமானபணியாகும். எது எப்படி தடுக்கப்பட்டாலும் எங்காது ஒரு மூலையில் புதிய வழியை தொழில்நுட்பம் திறந்து கொண்டிருக்கும்.

இந்த சமூகவலைத்தளத் தடைகளும் வி.பி.என்களும் இலங்கைக்கு இப்போது தான் பிரபலம். ஆனால், சீனா, ஈரான், வடகொரியா போன்ற நாடுகளில் சமூகவலைத்தளங்கள் சட்டரீதியில் தடைசெய்யப்பட்டுள்ளன. அங்கே இந்த வி.பி.என்கள் பிரபலமானவை. அங்கே ஒரு பிரச்சனை நாம் குறுக்குவழியில் தடைசெய்யப்பட்டவற்றை நாடினால் தண்டனைக்குரிய குற்றமாகும்.

இங்கு இன்னும் அவ்வாறான தடை வரவில்லை. வர சாத்தியமும் இல்லை. ஆனால் ச, றுவர்கள் சம்பந்தப்பட்ட ஆபாச இணையத்தளங்கள் சில சட்ட ரீதியில் தடைசெய்யப்பட்டுள்ளன. அவை தற்போது இந்த வி.பி.என் தொழில்நுட்பங்கள் ஊடாக பார்வையிடக்கூடியதாக இருக்கும். அவற்றை இந்த வி.பி.என் ஊடாக பார்ப்பது கண்டறிப்பட்டால் தண்டனைக்குரிய குற்றமாகும்.

http://www.tamilmirror.lk/science-tech/VPN-தொழில்நுட்பம்/57-212578

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது கணனியில்  Hotspot Shield VPN என்ற மென்பொருளை சந்தா தொகை செலுத்தி பயன்படுத்துகிறேன். இம்மாதிரி பல VPNகள் இருந்தாலும் உங்கள் இணைய வழங்கி நிறுவனங்களால்(ISP) இந்த VPN ports-ஐ முற்றிலுமாக தடை செய்ய இயலும். ஆனால் இது திருடன் போலீஸ் விளையாட்டு மாதிரிதான்.. தொழிற்நுட்பங்கள் வளர வளர தடைகளை மீறி செல்ல குறுக்கு வழிகளும் பிறக்கின்றன.

VPN போக்குவரத்துகளை இடைமறித்து செய்திகளை களவாட முடியாதவாறு தடுக்க பலவகை சங்கேத யுக்திகளை இப்பொழுது பயன்படுத்துகிறார்கள்.

64bit, 128bit, 256bit என்கிரிப்ஷன்களும் ஒருவகை. எங்கள் அலுவலகத்திலிருந்து பிரான்ஸ், ஜெர்மனி நாட்டு நிறுவனங்களுக்கு தகவல்கள் பரிமாற, வீடியோ கான்பரன்ஸ் நடத்த இந்த VPN  இணைப்புகளை பயன்படுத்துகிறோம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.