Jump to content

தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க சாத்தியப்படும் வழிகளை ஆராய கூட்டமைப்பு தயார்!- சுமந்திரன்


Recommended Posts

தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க சாத்தியப்படும் வழிகளை ஆராய கூட்டமைப்பு தயார்!- சுமந்திரன்

 

LATE-CITY-DM-1-195.jpg

 

தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க எந்த வழியில் சாத்தியப்படுமோ அந்த வழிகளை நாடுவதற்கு கூட்டமைப்பு எப்போதும் தயாராகவுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் வெளியாகும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பத்திரிகையான புதிய சுதந்திரனில் எழுதியுள்ள பத்தியிலேயே அவர் இந்தக்கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.

 அந்தப் பத்தி முழுமையாக இங்கு தரப்படுகின்றது.
 
“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37வது கூட்டத்தொடர் ஜெனிவாவில் கடந்த மாதம் 26ம் திகதி ஆரம்பமாகி தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இம்முறை அமர்வுகளில் இலங்கை தொடர்பாக மனித உரிமைகள் பேரவையின் விசேட கவனம் குவிந்துள்ளது. 
 
இந்த நிலையில் ஜெனீவாவிலே வருடத்துக்கு மூன்று தடவை அமர்வுகளை நடத்தும் ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கை சம்பந்தமாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்  அவற்றின் தன்மையும் மற்றும் பின்னணி குறித்தும் அதிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வகிபாகம் குறித்தும் ஆராய்வோம். 
 
ஜெனிவா தீர்மானங்களைப் பொறுத்தவரையில் ஆரம்பம் தமிழ் மக்களுக்கு கசப்பானதாகவே அமைந்தது. 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவுபெற்ற கையோடு ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இலங்கை அரசாங்கத்தை பாராட்டுவதாகவும் அதற்கு சாதகமானதாகவுமே காணப்பட்டது. மிலேச்சத்தனமாக கட்டவிழ்த்தப்பட்ட போரிலே தோல்வியுற்று பெரும் இழப்புக்களுக்கு மத்தியில் நின்ற தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதாகவே 2009 தீர்மானம் அமைந்திருந்தது.
 
பயங்கரவாத்திற்கும் பிரிவினைவாதத்திற்கும் எதிரான யுத்தத்தை இலங்கை வெற்றிகொண்டுள்ளதாகவும் போருக்குப் பின்னரான நிவாரணம் மற்றும் புனர்வாழ்வு  நிகழ்ச்சித் திட்டங்களுக்கு இலங்கை அரசாங்கமானது அனைத்துலக சமூகத்தின் உதவியை நாடி நிற்பதாகவும் சுட்டிக்காட்டியே 2009ல் தீர்மானம் ஐநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. 
 
அமெரிக்கா பிரித்தானியா  ஐரோப்பிய ஒன்றியம் பிரான்ஸ் போன்ற சக்திவாய்ந்த நாடுகள் இலங்கைக்கு ஆதரவான 2009 தீர்மானத்தை எதிர்த்த போதும் ஒட்டுமொத்தமாக 29 நாடுகள் ஆதரவாகவும் 12 நாடுகள் எதிராகவும் 6 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளாத நிலையிலும் இலங்கைக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேறியது. 
 
இத்தகைய கடினமான சூழ்நிலையில் தான் ஜெனிவாவை தமிழர்கள் பக்கமாக திருப்புகின்ற நடவடிக்கையில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு அக்கறைமிக்க தரப்பினருடன் இணைந்துகொண்டு செயற்திட்டங்களை முன்நகர்த்தியது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக இந்த விடயத்தில் இராஜதந்திர சமூகத்தினை வலியுறுத்தியது. 
 
IMG_7156-189x288.jpg
2011ம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தின் கடைசி வாரத்தில் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அழைப்பை ஏற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் பிரதி இராஜாங்க செயலாளர் வென்டி ஷெர்மன் வரைக்கும் பல முக்கிய சந்திப்புக்களை மேற்கொண்டனர். இதுதான் தமிழர்களுக்கு நம்பிக்கையளிக்கும் ஜெனீவா தீர்மானங்களுக்கான 1வது படியாகும். மகிந்த ராஜபக்ச அரசாங்கம் 2009 இல் போரை முடிவுக்கு கொண்டுவரும் தருணத்தில் அனைத்துலக சமூகத்துக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமையே இந்த நடவடிக்கைக்கான காரணமாக அமைந்தது. இச்சந்திப்புகளுக்குப் பின்னர் அமெரிக்க அரசாங்கம் இவ்விடயத்தை ஆராய்ந்து ஐ.நா மனித உரிமைப் பேரவையிலேயே இலங்கை சம்பந்தமான ஒரு பிரகடனத் தீர்மானம் கொண்டுவரவிருப்பதாக 2012 பெப்ரவரி மாதம் கொழும்புக்கு விஜயம் செய்த பிரதி இராஜாங்க செயலாளர் மரியா ஓட்டேரா மூலமாகவும் உதவி இராஜாங்க செயலாளர் ரொபேர்ட் பிளேக் மூலமாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அறிவித்தனர்
 
2012 மார்ச் மாதத்தில் அமெரிக்க அரசாங்கத்தின் முயற்சியாலும் பிரித்தானியா, கனடா, மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் அழுத்தத்தினாலும் இலங்கை சம்பந்தமான பிரகடனத் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அதில் இலங்கை அரசாங்கத்தினுடைய கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் படியாகவே பிரதானமாக வலியுறுத்தப்பட்டது. அதன் பின் அதே விடயத்தை கூடுதலாக வலியுறுத்தி இரண்டாவது தீர்மானம் ஒன்று 2013 மார்ச் மாதத்தில் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானங்களில் சொல்லப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு இலங்கை அரசாங்கத்திடமே விடப்பட்டிருந்தது.
மேற்படி காலகட்டத்தில் இலங்கைக்கு கூடுதலான அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்றிற்கு கட்டளையிட வேண்டும் என்றும் தொடர்ச்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பும் மற்றவர்களும் கேட்டுக்கொண்டதற்கிணங்க 2014 மார்ச் மாதத்தில் ஐ.நா மனித உரிமைப் பேரவை உயர்ஸ்தானிகர் முன்னெடுக்கின்ற சர்வதேச விசாரணையொன்றும் நிறைவேற்றப்பட்டது. 
 
அத்தருணத்தில் அத்தீர்மானம் பிரயோஜனம் அற்றதென்றும் அதில் சர்வதேச விசாரணை இல்லை என்றும் சில தமிழ்த் தரப்புக்களே பிரச்சாரங்களை முன்னெடுத்து அத்தீர்மானப் பிரதிகளை ஜெனீவாவில் எரித்து அதைத் தடுக்க முற்பட்டதை எவரும் மறந்திருக்க மாட்டார்கள். அப்படியாக பிரயோஜனமற்ற தீர்மானம் என்று சொன்னவர்களே அவ்வருட இறுதியில் இலங்கை அரசாங்கம் அத்தீர்மானத்தின் படி செயற்படவில்லை என்று குற்றம் சாட்டினார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு நடைபெற்ற சர்வதேச விசாரணையில் ஆக்கபூர்வமான பங்களிப்பை செலுத்தி பல சாட்சியங்களை உரிய முறையிலே அளித்திருந்தார்கள்.
2015 ஜனவரி மாதத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் மேற்சொன்ன சர்வதேச விசாரணை அறிக்கையின்  திகதி வெளியீடு தாமதிக்கப்பட்டு அவ்வாண்டு செப்டெம்பர் 16ம் திகதி ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 30வது அமர்வுகளில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து 2015 ஒக்டோபர் 1ம் திகதி இலங்கையில் நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறலையும் ஊக்குவிற்கின்ற HRC 30/1 என்ற தீர்மானம் இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையோடு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானம் மூலம் இலங்கை பொறுப்பெடுத்துக்கொண்ட பல விடயங்கள் பிரதான உறுப்பு நாடுகளோடு பேச்சுவார்த்தை மூலம் இணங்கப்பட்ட போது அப்பேச்சுவார்த்தைகளிலும் தமிழ் மக்கள் சார்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆக்கபூர்வமான பங்களிப்பை செலுத்தியிருந்தது.
மேற்சொன்ன தீர்மானத்தில் இலங்கை தான் செய்வதாக பொறுப்பேற்ற விடயங்களை நிரல்படுத்தினால் 36 வாக்குறுதிகளை இலங்கை வழங்கியிருக்கிறது என்று சுயாதீன ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. போரின் இறுதிக்கட்டத்தில் இழைக்கப்பட்ட சர்வதேச குற்றங்கள் சம்பந்தமாக வெளிநாட்டு நீதிபதிகள்,  வழக்கறிஞர்கள், விசாரணையாளர்கள், வழக்குத்தொடுனர்கள ;பங்கேற்கும் கலப்பு நீதிமன்றப் பொறிமுறையொன்றும் இவ்வாக்குறுதிகளில் அடங்கும்.
 
அதைவிட, உண்மை, நீதி, நல்லிணக்கம் மற்றும் மீள்நிகழாமைக்கான ஆணைக்குழு; காணாமல் போனோர் அலுவலகம்; பாதிப்புக்கான ஈடுசெய்யும் அலுவலகம்; பயங்கரவாதத் தடுப்புச்சட்டத்தை நீக்கி சர்வதேச நியமங்களுடன் ஒத்துப்போகும் புதிய சட்டமொன்றை இயற்றுதல்; காணாமலாக்கப்படுவதை குற்றமாக்குதல்; பாலியல் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றங்கள், துன்புறுத்தல்கள் சம்பந்தமான அறிக்கைகளை விசாரித்தல்; பாதிப்புற்றோர் மற்றும் சாட்சிகளுக்கான பாதுகாப்புச் சட்டம், பொதுமக்களின் விவகாரங்களிலிருந்து இராணுவத் தலையீட்டை நீக்குதல்; இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவித்தல்; வாழ்வாதாரங்களைக் கட்டியெழுப்புதல்; இராணுவமயமாக்களை இல்லாதொழித்தல் மற்றும் புதிய அரசியலமைப்பு மூலமாக இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வொன்றை ஏற்படுதல் போன்ற வேறு பல முக்கிய விடயங்களும் அடங்கும்.
 
2015 மார்ச் மாதத்தில் இவற்றை இலங்கை அரசு நிறைவேற்றுவதில் துரித முன்னேற்றம் இல்லாத காரணத்தினால் மேற்சொன்ன வாக்குறுதிகள் அனைவற்றையும் முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்றும் இரண்டு வருட காலத்துக்கு அதற்கான சர்வதேச மேற்பார்வையை நீடித்தும்  HRC 30/1 என்ற தீர்மானம் மீண்டும் இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்டது.
 
இந்த மார்ச் மாதத்துடன் (2018) இல் இவ்விரண்டு வருட கால சார்வதேச மேற்பார்வையின் முதலாவது வருடம் பூர்த்தியாகின்றது. ஜெனீவாவில் பொறுப்புக்கூறவேண்டிய  கட்டுப்பாட்டின் காரணமாக ஓரிரு விடயங்களை செய்ய இலங்கை அரசாங்கம் தலைப்பட்டிருந்தாலும் அவற்றில் ஒன்றையுமே சரிவர செய்யவில்லை என்பதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடாகும். இம்முறை வெளிவந்துள்ள ஐ.நா மனித உரிமைகள் அறிக்கையும் இதையே சுட்டிக்காட்டி சர்வதேச குற்றங்கள் சம்பந்தமாக உறுப்பு நாடுகள் உலகளாவிய நியாயாதிக்கத்தையும் உபயோகிக்க வேண்டும் என்றும் கோரியிருக்கின்றார். அதையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றிருக்கின்றது. மிகுதி ஒரு வருட காலத்துக்குள் இலங்கை பொறுப்பெடுத்துக்கொண்ட அனைத்து விடயங்களையும் நிறைவேற்ற வேண்டும் என்பதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு ஆகும்.
 
தாமாக முன்வந்து இணை அனுசரணை வழங்கிய ஐநா தீர்மானத்தில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுகின்ற விடயத்தில் இலங்கை அரசாங்கம் மிகவும் தாமதமாக செயற்படுவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆழ்ந்த கரிசனைகள் உண்டு. பல இடங்களில் ஏன் அரசாங்கத்தின் உயர் தலைவர்களிடம் நேரடியாகவும் நாடாளுமன்றில் அனைவர் முன்நிலையிலும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு கடுமையான விமர்சனங்களையும் அதிருப்தியையும் இது தொடர்பாக வெளிப்படுத்தியுள்ளது. 
 
மனித உரிமைகள் பேரவையில் 2009ம் ஆண்டில் இருந்த இலங்கைக்கு ஆதரவான நிலையில் இருந்து பார்க்கின்றபோது அதற்கு பின்னர் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களே உண்மையில் பெரும் சாதனைகள் என்றால் மிகையல்ல! இந்த தீர்மானங்கள் தாம் இலங்கை மீது தொடர்ச்சியாக சர்வதேச மேற்பார்வைக்கு வழிகோலின. இலங்கையில் இதுவரையில் காணப்பட்ட முன்னேற்றங்கள் சர்வதேச மேற்பார்வை அழுத்தத்தினாலேயே சாத்தியமானது. எதற்கெடுத்தாலும் குறைகூறுகின்றவர்கள் இலங்கையில் ஒன்றுமே நடக்கவில்லை என குற்றச்சாட்டுக்களை முன்வைத்தாலும் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களால் இலங்கையில் என்ன நடைபெற்றது என்பதை தமிழ் மக்கள் நன்கறிவர். 
 
இலங்கையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை அடுத்து ஏற்பட்டிருக்கும் கொந்தளிப்பான அரசியல் களநிலையை பார்க்கின்ற போதும் இனவாதத்தின் பாரதூரத்தன்மையைப் பார்க்கின்றபோதும் ஐக்கிய நர்டுகள் தீர்மானத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் உள்ள சவால்கள் என்ன என்பதை சாதாரண மக்களாலும் விளங்கிக்கொள்ளமுடியும். 
இருந்தபோதும் தேர்தல் பின்னடைவைக் காரணம் காட்டித்தப்பிக்க இடமளிக்காது ஐநா தீர்மானத்தில் உறுதியளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற கடுமையான அழுத்தத்தை ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச சமூகம் வழங்கப்படவேண்டும் என இம்முறை ஜெனிவா அமர்வுகள் ஆரம்பமாக முன்னரே ஜெனிவாவிற்கு சென்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வலியுறுத்தியிருந்ததை நினைவில் நிறுத்த விரும்புகின்றேன். இந்த தீர்மானத்திலுள்ள 36 முக்கிய விடயங்களும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்பதே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நிலைப்பாடு என்பதை மீண்டும் மீண்டும் கூறியிருக்கின்றோம். 
 
இலங்கை அரசாங்கம் ஐநா தீர்மானத்தை நிறைவேற்றத்தவறிவிட்டதால் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் அன்றேல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையைப் பாரப்படுத்தவேண்டும் என தமிழர் தரப்பில் சில கட்சிகள் அமைப்புக்களால் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க எந்த வழியில் சாத்தியப்படுமோ அந்த வழிகளை நாடுவதற்கு கூட்டமைப்பு எப்போதும் தயாராகவுள்ளது. ஆனால் யதார்த்தத்தில் இருந்து தமிழ் மக்களை திசைதிருப்பிவிடாது உண்மையோடு பயணிக்கவே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு எப்போதும் செயற்படுகின்றது. பல்லாயிரம் மக்கள் கொன்றொழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் சிரியா பிரச்சனைக்கு முடிவைக்காண்பதற்கு, நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கு முன்வராத ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை ஆயுதப் போர் முடிவிற்கு கொண்டுவரப்பட்ட இலங்கை மீது கவனம் செலுத்துமா என்பதை சிந்தித்துப்பார்க்க வேண்டும். 
 
அதனால் தான் ஐநா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தை முழுமையாக நிறைவேற்ற அழுத்தம் கொடுக்கவேண்டும் என கூட்டமைப்பு வலியுறுத்தியிருந்தது. 
 
இலங்கையில் ஐநா தீர்மானத்தை நிறைவேற்ற உலக நியாயாதிக்கத்தை பயன்படுத்தும் வழிமுறைகள் பற்றி ஆராயவேண்டும் என்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வரவேற்றிருந்தது. இலங்கையில் எந்தவகையிலேனும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்ககொடுத்து நீதியின் அடித்தளத்தில் சுபீட்சப் பாதையை நோக்கி நகர்வதற்கு எந்தெந்த வழிமுறைகள் யதார்த்தத்தில் சாத்தியமாகுமோ அவை அனைத்தையும் பயன்படுத்த தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தொடர்ந்தும் அழுத்திக் குரல்கொடுக்கும்.” 
 
என அந்தப்பத்தியில் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

http://athavannews.com/?p=637733-தமிழர்களுக்கு-நீதியைப்-பெற்றுக்கொடுக்க-சாத்தியப்படும்-வழிகளை-ஆராய-கூட்டமைப்பு-தயார்!--சுமந்திரன்

Link to comment
Share on other sites

அப்ப இவ்வளவு நாளும் டமில் அரசு தமிழ்மக்களுக்கு என்ன செய்து கொண்டு இருந்தது என்பதை அறிய ஆவல் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி மீண்டும் முதலில் இருந்து பத்திரிகை தொடங்கி, மேடைகளில் தொண்டை கிழிய கத்தி தீர்வை பெற்றுத்தாங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனுக்கு தீர்வு ...
இந்தா வருது , அந்தா வருது என்டாங்கள் 
இப்ப வருது, இப்போவே வருது என்டாங்கள் 
பொங்கலுக்கு வருது, சித்திரைக்கு வருது என்டாங்கள் 
மகிந்த தாறார், மைத்திரி தாறார் என்டாங்கள் 
16 இல தீர்வு, 18 இல தீர்வு என்டாங்கள் 
புலியை வித்து (அ)சிங்கம் சேர்ந்த கைகள் 
பழியை போட்டு பணம் படைத்த மனங்கள் ..
 
அம்மாவான சொல்லுறன் 
உண்மையா சொல்லுறன் 
எனக்கு 100 தாண்டினாலும்
என்ட பிள்ளைக்கு 50 தாண்டினாலும்  
ஒரு ******* வராது 
*********** பயலுகளா...

 மனக் குமுறலில் எழுதியது ... அநாகரீகமாயின் அகற்றிவிடவும் .... சசிவர்ணம் 

Link to comment
Share on other sites

On 3/15/2018 at 12:03 PM, Sasi_varnam said:

தமிழனுக்கு தீர்வு ...
இந்தா வருது , அந்தா வருது என்டாங்கள் 
இப்ப வருது, இப்போவே வருது என்டாங்கள் 
பொங்கலுக்கு வருது, சித்திரைக்கு வருது என்டாங்கள் 

யாரை இவ்வளவு தூரம் நம்பி இருந்து ஏமாந்து போனீர்கள்?

பலருக்கு போர் பிரச்சினையாக இருந்தது, அது தீர வேண்டும் என்று விரும்பினார்கள். போர் தீர்ந்து விட்டது.

வேறு சிலருக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வருவதில் உள்ள சிக்கல் தீர வேண்டும் என்ற தேவை இருந்தது. அந்த தீர்வும் வந்து விட்டது.

மற்றும் சிலருக்கு இலங்கையின் எந்த பகுதிக்கும் பொய் வருவதில் உள்ள சிரமங்கள் தீர வேண்டி இருந்தது. அந்த தீர்வும் வந்து இருக்கிறது.

மற்றும் சிலருக்கு வெளிநாட்டில் இருந்து ஊருக்கு பொய் உறவுகளை பார்த்து வர உள்ள தடைகள் தீர வேண்டி இருந்ததது. அந்த தீர்வும் வந்து இருக்கிறது.

பொருளாதார அபிவிருத்தி இலங்கை முழுவதும் உள்ள தமிழ் மற்றும் சிங்களம் பேசும் மக்களின் பெரும் தேவையாக இருக்கிறது. அதற்கான தீர்வு எந்த வழியிலும் வருவதாக தெரியவில்லை. ஆனால் சின்ன சின்ன முன்னேற்றங்கள் நடக்கின்றன. மாகாண சபை காற்று மின்னுற்பத்தி ஆலைகளை பெரும் பிரச்சாரம் இல்லாமல் நிறுவி வருகிறது. யாழில் இருந்து புகையிரதத்தில் போகும் போது நாவற்குழியில் இவற்றை காணலாம். உள்ளூரில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்ததும் பலர் பிரச்சாரம் இல்லாமல் பாதிக்க பட்ட மக்களுக்கு பொருளாதார வளர்ச்சி திட்டங்களில் உதவுகிறார்கள். இவை சிலருக்கு வாழ்வுக்கும் சாவுக்குமான போராட்டத்தில் தீர்வுகளாக இருக்கின்றன. 

மற்றும் பலருக்கு சுயநிர்ணய உரிமை தீர்வாக தேவையாக இருக்கிறது. அவர்கள் அரசியலில் தீர்வு தேடுகிறார்கள். ஆயுதம் உதவவில்லை.

இன்னும் பலருக்கு தமிழ் மக்களின் பகுதிகளில் இருந்து சிங்களம் பேசும் இராணுவம் மற்றும் போலிஸ் வெளியேற வேண்டும் என்ற தீர்வு தேவையாக இருக்கிறது. 

நீங்கள் தேடும் தீர்வு என்ன?

Link to comment
Share on other sites

On 3/14/2018 at 11:29 AM, நவீனன் said:

தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க சாத்தியப்படும் வழிகளை ஆராய கூட்டமைப்பு தயார்!- சுமந்திரன்

ஏதோ போதையில் உளறுவது போல இருக்கிறது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க சாத்தியப்படும் வழிகளை ஆராய கூட்டமைப்பு தயார்!- சுமந்திரன்

ஏன் இவர் இப்ப அவசரப்படுகிறார் ?

பொறுத்ததோடு  இன்னொமொரு 5 10 வருஷம் பொறுத்து 
ஆராய்ந்தால் ஏதும் வேறு வழிகளும் இருக்கலாம் இல்லையா ?

சாத்தியமான வழிகளை ஆராய்வதில் சுமந்திரன் அவர்கள் 
அதிகம் அவசரம் காட்டுகிறார் என்றுதான் எனக்கு படுகிறது 

இப்ப என்ன அவசரம்? 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.