Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆசைகளின் அலைதலுடன்

அவாக்கொண்டு காத்திருந்தேன்

 

எத்தனை ஆண்டுகள் ஆனபின்னும்

அத்தனை முகங்களும் கண்முன்னே

கனதியாய் கண்ணாமூச்சியாடியபடி

காலம் எண்ணிக் காத்திருந்தேன் 

 

கனவுகளின் கால்பரப்பலுடன்

மனத்துள் நெருடிய முள்ளகற்றி

என் தேசம் என்னும் எண்ணம் அகன்றிட

ஆர்ப்பரித்த மனம் அடங்கிப் போனது

 

மனித முகங்கள் முதிர்வாய் மாறி

ஊரின் தெருக்கள் சிறிதாய் ஆகி

அயலின் நெருக்கம் அறுந்தே போக

அந்நிய தேசம் ஆனது வீடு

 

வெறிச்சோடிய வீதிகள் நடுவே

விண் தொட்டன வீடுகள் ஆயினும்

மண் அளைந்து மகிழ்ந்து கழிக்க

மானுடப் பிள்ளைகள் எங்கே போயினர்

 

கிட்டிப்புள் விளையாடிய கிழவர்களும்

கொக்கான் வெட்டிய கிழவிகளும்

தாச்சி மறித்துத் தாயம் உருட்டி

தம்பி தங்கையுடன் விளையாடிய

தம் கால நினைவுகளைக்

கூடிக் கதைக்கவும் நேரமின்றிப் போனது 

 

ஆசைகளின் ஒசையடக்கி

அகப்படாத அன்பைத்தேடி

ஆயிரம் மைகளைக் கடந்து ஓடி

மனங்கள் தோறும் மாயம் கண்டு

பிணங்கும் மனிதரின் பேதைமை கண்டு

மீண்டும் அந்நியள் ஆனேன் நான்    

 

 

 

   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் விட்டுவந்த கணத்தில் காலம் உறைந்திருக்கும் என்று எதிர்பார்த்துப் போனால் இப்படித்தான் இருக்கும். எனக்கும் சொந்த இடம் அந்நியமான இடமாகத்தான் தெரிந்தது. அதுதான் திரும்பவும் இன்னுமொருமுறை போக மனமில்லாமல் உள்ளது.  மொத்தத்தில் பிறந்த இடமும் அந்நியமாகிவிட்டது; வாழும் இடமும் அந்நியமாகவே உள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்தவர்களின் மனா உளைச்சலை சரியாக கூறியுள்ளீர்கள் சகோதரி......!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

நாங்கள் விட்டுவந்த கணத்தில் காலம் உறைந்திருக்கும் என்று எதிர்பார்த்துப் போனால் இப்படித்தான் இருக்கும். எனக்கும் சொந்த இடம் அந்நியமான இடமாகத்தான் தெரிந்தது. அதுதான் திரும்பவும் இன்னுமொருமுறை போக மனமில்லாமல் உள்ளது.  மொத்தத்தில் பிறந்த இடமும் அந்நியமாகிவிட்டது; வாழும் இடமும் அந்நியமாகவே உள்ளது. 

உண்மைதான். நாம் நாடோடிகளின் நிலையில் தான் இப்போது. மீண்டும் இங்கு வரவே கூடாது என்னும் நிலையோடுதான் நானும் வந்தேன். ஆனாலும் நினைக்கும் போது எஞ்சியிருக்கும் எச்சங்களின் மீது இன்னும் கொண்டிருக்கும் அழியா ஆசை போக வேண்டும் என்று தான் எண்ண வைக்கிறது.

1 minute ago, suvy said:

புலம்பெயர்ந்தவர்களின் மனா உளைச்சலை சரியாக கூறியுள்ளீர்கள் சகோதரி......!  tw_blush:

போய் வந்த பலரின் நிலை இதுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு உதாரணத்துக்கு....ஒரு எருது ...செக்கு ஒன்றைச் சுத்திச் சுத்தி வருகின்றது என்று வைத்துக்கொள்வோம்!

ஊரெல்லாம் நல்லெண்ணைக்கு நல்ல தேவை இருந்தது! 

எருதுக்கும்...இரவும் ...பகலும் நல்ல வேலையும் இருந்தது!

திடீரென ..அந்த ஊருக்கு ஒரு மில்..வருகின்றது!

அங்கு நல்லெண்ணெய் மலிவான படியால்...எருதுக்கு... வேலை இல்லாது போய்விட...அந்த எருது என்ன செய்யும் என்று நினைக்கிறீர்கள், சுமே?

பழக்க தோஷத்தால்...கொஞ்ச நாளைக்கு...அந்தச் செக்கைச் சுற்றி வரும்! பின்னர்...வேறு ஏதாவது சூழலுக்குத் தன்னைத் தயார் படுத்திக்கொள்ளும்!

அதைப் போலத் தான்....மனிதர்களும்!

5 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஆசைகளின் ஒசையடக்கி

அகப்படாத அன்பைத்தேடி

ஆயிரம் மைகளைக் கடந்து ஓடி

மனங்கள் தோறும் மாயம் கண்டு

பிணங்கும் மனிதரின் பேதைமை கண்டு

மீண்டும் அந்நியள் ஆனேன் நான் 

நீங்கள் அந்நியள் ஆகவில்லை, சுமே!

ஐரோப்பா உங்களைத் தன்னவள் ஆக்கி விட்டது என்பது தான் ..உண்மை!

உங்கள் அனுபவம்...என்னையும் பாதித்து விட்டது என்பது.....வேறு கதை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே இன்னொரு மனதையும் சொல்லியே ஆகவேண்டும்..ரெண்டுங்கெட்டான் நிலைமை..! :unsure:

'புலத்தில் கிட்டும் வசதியும், வாழ்க்கையும் வேண்டும், அதே நேரம் தாய் மண்ணும் வேண்டும்..!' இதுதான் புலபெயர்ந்தவர்களின் பெரும்பாலோரின் மனநிலை..

எத்தனை பேர் புலத்தின் வாழ்க்கையை துறந்துவிட்டு, தாய் மண்ணில் மீள்குடியேற தயாராக இருக்கிறார்கள்..? :rolleyes:

விரல்விட்டு எண்ணிவிடலாம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ராசவன்னியன் said:

இங்கே இன்னொரு மனதையும் சொல்லியே ஆகவேண்டும்..ரெண்டுங்கெட்டான் நிலைமை..! :unsure:

'புலத்தில் கிட்டும் வசதியும், வாழ்க்கையும் வேண்டும், அதே நேரம் தாய் மண்ணும் வேண்டும்..!' இதுதான் புலபெயர்ந்தவர்களின் பெரும்பாலோரின் மனநிலை..

எத்தனை பேர் புலத்தின் வாழ்க்கையை துறந்துவிட்டு, தாய் மண்ணில் மீள்குடியேற தயாராக இருக்கிறார்கள்..? :rolleyes:

விரல்விட்டு எண்ணிவிடலாம்..

ம் விடை சொல்ல முடியாத நிலைதான் இது கன பேருக்கு ................................ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

ம் விடை சொல்ல முடியாத நிலைதான் இது கன பேருக்கு ................................ 

கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்ற நிலை நடைமுறைக்கு ஒத்துவருமா..?

புலம்பி ஒன்னும் ஆகப்போவது இல்லைதானே? :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மொத்தத்தில் பிறந்த இடமும் அந்நியமாகிவிட்டது; வாழும் இடமும் அந்நியமாகவே உள்ளது.  

 உடலில்  உயிர் உள்ளவரை ஓடும் இந்த வாழ்க்கை.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கு இந்த வலி இருக்கத்தான் செய்யும்.

அடுத்த தலைமுறைக்கு இதை சொன்னாலும் விழங்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, புங்கையூரன் said:

ஒரு உதாரணத்துக்கு....ஒரு எருது ...செக்கு ஒன்றைச் சுத்திச் சுத்தி வருகின்றது என்று வைத்துக்கொள்வோம்!

ஊரெல்லாம் நல்லெண்ணைக்கு நல்ல தேவை இருந்தது! 

எருதுக்கும்...இரவும் ...பகலும் நல்ல வேலையும் இருந்தது!

திடீரென ..அந்த ஊருக்கு ஒரு மில்..வருகின்றது!

அங்கு நல்லெண்ணெய் மலிவான படியால்...எருதுக்கு... வேலை இல்லாது போய்விட...அந்த எருது என்ன செய்யும் என்று நினைக்கிறீர்கள், சுமே?

பழக்க தோஷத்தால்...கொஞ்ச நாளைக்கு...அந்தச் செக்கைச் சுற்றி வரும்! பின்னர்...வேறு ஏதாவது சூழலுக்குத் தன்னைத் தயார் படுத்திக்கொள்ளும்!

அதைப் போலத் தான்....மனிதர்களும்!

நீங்கள் அந்நியள் ஆகவில்லை, சுமே!

ஐரோப்பா உங்களைத் தன்னவள் ஆக்கி விட்டது என்பது தான் ..உண்மை!

உங்கள் அனுபவம்...என்னையும் பாதித்து விட்டது என்பது.....வேறு கதை!

அப்படியும் இருக்குமோ ???

16 hours ago, ராசவன்னியன் said:

இங்கே இன்னொரு மனதையும் சொல்லியே ஆகவேண்டும்..ரெண்டுங்கெட்டான் நிலைமை..! :unsure:

'புலத்தில் கிட்டும் வசதியும், வாழ்க்கையும் வேண்டும், அதே நேரம் தாய் மண்ணும் வேண்டும்..!' இதுதான் புலபெயர்ந்தவர்களின் பெரும்பாலோரின் மனநிலை..

எத்தனை பேர் புலத்தின் வாழ்க்கையை துறந்துவிட்டு, தாய் மண்ணில் மீள்குடியேற தயாராக இருக்கிறார்கள்..? :rolleyes:

விரல்விட்டு எண்ணிவிடலாம்..

நீங்கள் கூறுவது ஒரு விதத்தில் சரியாக இருப்பினும் ஊரில் வாழ்ந்த காலத்திலும் அதிக காலம் வசதி வாய்ப்புக்களோடு வாழ்ந்தும் நான் மட்டுமல்ல பலரும் மாறவில்லை. அதனால்த்தான் அவர்களின் போக்கைக் கண்டு வேதனை. இன்னுமந்த நாட்டில் நின்மதியாக வாழும்நிலை வரவில்லை. அறுபது கடந்த சிலர்போய் இருக்கிறார்கள் தான். சிலர் மனைவி பிள்ளைகளை வெளிநாட்டில் விட்டுவிட்டு தாம் மட்டும் அங்கு போயிருக்கின்றனர். ஏதும் நடந்தால் மனைவி பிள்ளைகள் காப்பாற்றுவார்கள் என்னும்  எண்ணம் தான்.

1 hour ago, நிலாமதி said:

மொத்தத்தில் பிறந்த இடமும் அந்நியமாகிவிட்டது; வாழும் இடமும் அந்நியமாகவே உள்ளது.  

 உடலில்  உயிர் உள்ளவரை ஓடும் இந்த வாழ்க்கை.  

கூட்டிக் கழித்துப் பார்த்தால் நாம் நாடோடிகள் தான் இன்னும்.

47 minutes ago, ஈழப்பிரியன் said:

எமக்கு இந்த வலி இருக்கத்தான் செய்யும்.

அடுத்த தலைமுறைக்கு இதை சொன்னாலும் விழங்காது.

எங்கிருக்கும் அடுத்த தலைமுறைக்கு ?????

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் சிதறி ஓடி பூமி பந்தில் வெவ்வேறு திசைகளில் வாழ்கிறோம். சிலர் மாறிவிட்டார்கள் . சிலர் முன்புபோல நட்புடன் பழகுகிறார்கள். எனது ஊர் உயர் பாதுகாப்பு வலயத்தின் அருகில் இருந்த ஊர். பெரும்பாலோர் இடம்பெயர்ந்து விட்டார்கள். சிலர் ஊர் கோவில்திருவிழாவின் போது வெவ்வேறுநாடுகளில் இருந்துவந்து கலந்து ஒன்றுகூடல் செய்கிறார்கள். கனடா ,இலண்டன் சென்றால் தாயகத்திலும் பார்க்க அதிகம் தெரிந்தவர்களைப் பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

,இதில புலம்பிறதுக்கு பெரிதாக இல்லை என்று நினைக்கிறேன்.நான் அறிய சிலர் தாயகத்தை முற்றாக வெறுக்கிறார்கள்.சிலர் சுமே சொன்ன மாதிரி வயதானோர்
தாயகம் திரும்பி இருக்கிறார்கள்.ஆனால் ஒன்று வசதி வாய்பபை கொஞ்சம் இழந்தால் ஆயுளை கொஞ்சம் அதிகரிக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இக் கவிதைக்குப் பதில் எழுத முடியாமல் மனம் கனத்துக் கிடக்கிறது. மதில்மேல் பூனைகளாய் நாம். இருமுறை சென்று வந்தேன். ஏமாற்றம்தான் மிஞ்சியது. ஆனாலும் செக்குமாடுகளாய் மனம் அங்கேயே சுற்றிச் சுற்றி வருவதைத் தடுக்க முடியவில்லை. கவிதைக்கு நன்றிகள் சுமே.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/03/2018 at 10:02 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஆசைகளின் அலைதலுடன்

அவாக்கொண்டு காத்திருந்தேன்

 

 

எத்தனை ஆண்டுகள் ஆனபின்னும்

அத்தனை முகங்களும் கண்முன்னே

கனதியாய் கண்ணாமூச்சியாடியபடி

காலம் எண்ணிக் காத்திருந்தேன் 

 

 

கனவுகளின் கால்பரப்பலுடன்

மனத்துள் நெருடிய முள்ளகற்றி

என் தேசம் என்னும் எண்ணம் அகன்றிட

ஆர்ப்பரித்த மனம் அடங்கிப் போனது

 

 

மனித முகங்கள் முதிர்வாய் மாறி

ஊரின் தெருக்கள் சிறிதாய் ஆகி

அயலின் நெருக்கம் அறுந்தே போக

அந்நிய தேசம் ஆனது வீடு

 

 

வெறிச்சோடிய வீதிகள் நடுவே

விண் தொட்டன வீடுகள் ஆயினும்

மண் அளைந்து மகிழ்ந்து கழிக்க

மானுடப் பிள்ளைகள் எங்கே போயினர்

 

 

கிட்டிப்புள் விளையாடிய கிழவர்களும்

கொக்கான் வெட்டிய கிழவிகளும்

தாச்சி மறித்துத் தாயம் உருட்டி

தம்பி தங்கையுடன் விளையாடிய

தம் கால நினைவுகளைக்

கூடிக் கதைக்கவும் நேரமின்றிப் போனது 

 

 

ஆசைகளின் ஒசையடக்கி

அகப்படாத அன்பைத்தேடி

ஆயிரம் மைகளைக் கடந்து ஓடி

மனங்கள் தோறும் மாயம் கண்டு

பிணங்கும் மனிதரின் பேதைமை கண்டு

மீண்டும் அந்நியள் ஆனேன் நான்    

 

 

வலிகள்  மிகுந்த  வரிகள்

நன்றி  சுமே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/03/2018 at 5:13 AM, ராசவன்னியன் said:

இங்கே இன்னொரு மனதையும் சொல்லியே ஆகவேண்டும்..ரெண்டுங்கெட்டான் நிலைமை..! :unsure:

'புலத்தில் கிட்டும் வசதியும், வாழ்க்கையும் வேண்டும், அதே நேரம் தாய் மண்ணும் வேண்டும்..!' இதுதான் புலபெயர்ந்தவர்களின் பெரும்பாலோரின் மனநிலை..

எத்தனை பேர் புலத்தின் வாழ்க்கையை துறந்துவிட்டு, தாய் மண்ணில் மீள்குடியேற தயாராக இருக்கிறார்கள்..? :rolleyes:

விரல்விட்டு எண்ணிவிடலாம்..

 

On 15/03/2018 at 7:02 PM, ராசவன்னியன் said:

கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்ற நிலை நடைமுறைக்கு ஒத்துவருமா..?

புலம்பி ஒன்னும் ஆகப்போவது இல்லைதானே? :)

உங்களது  முதல் கேள்விக்கும்

இரண்டாவது  முடிவுக்கும் நிறைய இடைவெளியும்  முரணும்  சகோதரா

எந்த  ஒரு   போராட்டமும் 

அதிக  காலமும்  அதிக சுமையையும்

தோல்வியையும் தரும்  போது 

இவை  தவிர்க்கமுடியாதன

அவற்றோடு தான் பயணிக்கணும்

தாயகத்துக்கு போகணும்

ஊருக்கு போகணும்  என்பது மட்டுமே  கனவாகக்கொண்டு

உழைத்தவர்கள் 

தாயகமுமற்று  இங்கும்  காலூன்றாது  வாழ்வது தான் நிஐம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 03/04/2018 at 7:50 AM, கந்தப்பு said:

எல்லோரும் சிதறி ஓடி பூமி பந்தில் வெவ்வேறு திசைகளில் வாழ்கிறோம். சிலர் மாறிவிட்டார்கள் . சிலர் முன்புபோல நட்புடன் பழகுகிறார்கள். எனது ஊர் உயர் பாதுகாப்பு வலயத்தின் அருகில் இருந்த ஊர். பெரும்பாலோர் இடம்பெயர்ந்து விட்டார்கள். சிலர் ஊர் கோவில்திருவிழாவின் போது வெவ்வேறுநாடுகளில் இருந்துவந்து கலந்து ஒன்றுகூடல் செய்கிறார்கள். கனடா ,இலண்டன் சென்றால் தாயகத்திலும் பார்க்க அதிகம் தெரிந்தவர்களைப் பார்க்கலாம்.

நீங்கள் சொல்வதும் கொஞ்சம் நடக்கிறதுதான். ஆனாலும் மனிதர்கள் அங்கு மாறிவிட்டார்கள்.

On 07/04/2018 at 3:01 PM, சுவைப்பிரியன் said:

,இதில புலம்பிறதுக்கு பெரிதாக இல்லை என்று நினைக்கிறேன்.நான் அறிய சிலர் தாயகத்தை முற்றாக வெறுக்கிறார்கள்.சிலர் சுமே சொன்ன மாதிரி வயதானோர்
தாயகம் திரும்பி இருக்கிறார்கள்.ஆனால் ஒன்று வசதி வாய்பபை கொஞ்சம் இழந்தால் ஆயுளை கொஞ்சம் அதிகரிக்கலாம்.

அங்கு போய் இருந்தால் சனங்களின் செயலே எமக்கு விரைவில் நோயை வரவழைத்துவிடும்.

On 07/04/2018 at 4:46 PM, விசுகு said:

வலிகள்  மிகுந்த  வரிகள்

நன்றி  சுமே

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா

On 07/04/2018 at 3:48 PM, Kavallur Kanmani said:

இக் கவிதைக்குப் பதில் எழுத முடியாமல் மனம் கனத்துக் கிடக்கிறது. மதில்மேல் பூனைகளாய் நாம். இருமுறை சென்று வந்தேன். ஏமாற்றம்தான் மிஞ்சியது. ஆனாலும் செக்குமாடுகளாய் மனம் அங்கேயே சுற்றிச் சுற்றி வருவதைத் தடுக்க முடியவில்லை. கவிதைக்கு நன்றிகள் சுமே.

 

அனுபவித்தவர்களுக்கு நன்றாக விளங்கும் அக்கா. அதுவும் பெண்களாலேயே அனைத்தையும் புரிந்துகொள்ள முடிவதனாலேயே அதிக வலி. அங்கள் எதையும் மேம்போக்காகப் பார்பதனால் அவர்களை எதுவும் பெரிதாகப் பாதிப்பதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

அங்கு போய் இருந்தால் சனங்களின் செயலே எமக்கு விரைவில் நோயை வரவழைத்துவிடும்.

 

அது அவரவர் மன நிலமையைப் பொறுத்தது.நான் கடந்த கிழமை தான் அங்கிருந்து வந்தனான்.வருடத்திற்க்கு இரன்டு முறை போய் வருகிறேன்.திரும்பி வரும் போது மனது கசக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, சுவைப்பிரியன் said:

அது அவரவர் மன நிலமையைப் பொறுத்தது.நான் கடந்த கிழமை தான் அங்கிருந்து வந்தனான்.வருடத்திற்க்கு இரன்டு முறை போய் வருகிறேன்.திரும்பி வரும் போது மனது கசக்கிறது.

என் கணவர் கூடத் தான் அங்கு சென்று வசிக்க முடியும் என்றுதான் கூறுகிறார். ஏன் எல்லாத்தையும் நீ பெரிதாக எண்ணுகிறாய். என்னைப்போல் எதையும் சட்டை செய்யாது இருந்தால் பிரச்சனை இல்லை. கவலையும் இல்லை என்கிறார். இது ஆண்கள் எல்லோருக்கும் பொருத்தமானது. ஆனால் பெண்களால் இப்படி இருக்க முடியாது சுவைப்பிரியன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சாத்தான்... அந்த நேரம் இணைய வசதி இருந்திருந்தால், காலத்தால் அழியாத   காதல் ரசம் சொட்டும் பாடல்கள்  .உருவாகி இருக்க மாட்டாது. 
    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.