Jump to content

'90 சதவிகித பெண்கள் தங்கள் உடலை வெறுக்கின்றனர்'- ஏன்?


Recommended Posts

'90 சதவிகித பெண்கள் தங்கள் உடலை வெறுக்கின்றனர்'- ஏன்?

 

'90 சதவிகித பெண்கள் தங்கள் உடலை வெறுக்கின்றனர்', உடல் மீதான பெண்களின் சுயவெறுப்புக்கு அவர்களுடைய தாயின் பொறுப்பும் முக்கியமானது.

பெண்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

"13 வயதாக இருந்தபோது என்னை பார்ப்பவர்கள் வயதுக்கு மீறிய வளர்ச்சி என்று சொல்வார்கள். அப்போது 5.6 அடி உயரம் இருந்த என்னைப் பற்றி அம்மா மிகவும் கவலைப்படுவார். அதைப் பார்த்து என் உடல் மீது எனக்கு வெறுப்பு வரும். என் வயதில் உள்ள மற்றவர்களுக்கு இருந்ததைவிட அதிக கட்டுப்பாடுகளுக்கு காரணமான எனது தோற்றத்தை வெறுத்தேன்" என்கிறார் ஃபரீதா.

தற்போது 42 வயதாகும் ஃபரீதாவுக்கு, 30 ஆண்டுகளுக்கு பிறகும் அந்த நினைவுகள் பசுமையாக இருக்கிறது. "நான்கு குழந்தைகளுக்கு தாயான என் அம்மா, தனது மார்பக உள்ளாடையை அணிந்துக் கொள்ள என்னை வற்புறுத்துவார். 13 வயது சிறுமியான எனக்கு அது ஏற்படுத்திய கோபத்தையும் வலியையும் இன்னும் என்னால் மறக்கமுடியவில்லை. இதுபோன்ற பல்வேறு விடயங்கள் எனக்கு மிகவும் மன அழுத்தத்தை ஏற்படுத்தின. என் உடல் மீதான சுயவெறுப்பை அதிகப்படுத்தின."

தீபா நாராயணனின் இந்தியப் பெண்களின் மெளனத்தை உடைப்போம் என்ற பொருள்படும் ''CHUP: Breaking the Silence About India's Women' என்ற புத்தகத்தில் ஃபரீதாவின் கதை சொல்லப்பட்டுள்ளது

அண்மையில் வெளியான இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஃபரீதாவின் தன் உடல் மீதான சுயவெறுப்புக்கு அவருடைய தாய்க்கும் மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது என்பதை உணர்த்த மேலே குறிப்பிடப்பட்ட சில வரிகளே போதுமானது.

பெண்கள்படத்தின் காப்புரிமைDEEPA NARAYAN

சுமார் 600 பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகளிடம் பேசிய தீபா, இந்தியாவில் 90% பெண்கள் தங்கள் உடலை நேசிப்பதில்லை, வெறுக்கிறார்கள் என்ற முடிவுக்கு வந்தார்.

ராணியின் கதை

ராணி என்கிற பெண்ணும் தீபாவிடம் தனது அனுபவத்தை பகிர்ந்துக் கொள்கிறார். "அப்போது எனக்கு சுமார் 13 வயது இருக்கும். என் பிறந்த நாளை கொண்டாட வீட்டிற்கு வருமாறு தோழிகளிடம் சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்தேன். அன்று என்ன உடை அணிந்திருந்தேன் என்பதுகூட நன்றாக நினைவிருக்கிறது. வீட்டின் மாடிப்படி ஏறும்போது ஒருவர் கீழே இறங்குவதைப் பார்த்தேன். அவருக்கு வழிவிடுவதற்காக நான் ஒதுங்கி நின்றேன். ஆனால் வேகமாக வந்த அவர் என் மீது மோதினார். என் தலை சுவரில் மோதியதில் எனக்கு மயக்கம் வந்துவிட்டது. அதற்குப் பிறகு நடந்த எதுவும் நினைவில் இல்லை."

சுப்: பிரேக்கிங் த சைலன்ஸ் ஆஃப் இண்டியா`ஸ் உமன் புத்தகத்தை எழுதிய தீபா நாரயணன்படத்தின் காப்புரிமைDEEPA NARAYAN Image captionசுப்: பிரேக்கிங் த சைலன்ஸ் ஆஃப் இண்டியா`ஸ் உமன் புத்தகத்தை எழுதிய தீபா நாரயணன்

"நான் கண் விழித்தபோது என்னை சுற்றி நின்ற குடும்பத்தாரின் கவலை என்ன தெரியுமா? "நான் இப்போதும் கன்னியா? அந்த மனிதன் என்னிடம் தவறாக நடந்துக் கொண்டானா? ஆம் என்றால் அடுத்து என்ன செய்ய வேண்டும்? இல்லை இது ஒரு இயல்பான விபத்தா? யாருக்கும் என்னை பற்றியோ, என் உடல், மன வேதனை பற்றிய கவலை இல்லை."

இந்த சம்பவம் தொடர்பான தனது கருத்தை தீபா சொல்கிறார், "இதுபோன்ற சூழ்நிலைகளே பெண்கள் தங்கள் உடலை வெறுக்க காரணமாகிறது."

98 சதவிகித பெண்கள் தங்கள் வாழ்க்கையில் எதாவது ஒரு கட்டத்தில் பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. அதில் 95 சதவிகித பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்வது குடும்ப உறுப்பினர்களே என்பது தான் அதிர்ச்சியான செய்தி.

பெண்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இதேபோல் மற்றொரு உண்மை சம்பவத்தை தீபா பகிர்ந்துக் கொள்கிறார், "பெங்களூருவில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் 18 முதல் 35 வயதுக்கு உட்பட்ட பெண்கள் கலந்துக் கொண்டார்கள். பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானவர்கள் எழுந்து நிற்கவும் என்று கேட்டுக்கொண்ட போது அங்கிருந்த அனைவருமே எழுந்து நின்றார்கள். ஒருவர்கூட அமர்ந்திருக்கவில்லை."

தீபா கூறுகிறார், "புனிதமாக கருதப்படும் வழிபாட்டு தலங்கள், கல்வி நிலையங்கள், வீடு, கடை, பொது இடம்… இப்படி எல்லா இடங்களிலும் பெண்கள் பாலியல் ரீதியான கொடுமைகளை எதிர்கொள்கின்றனர். அதுபற்றி பேச நான் அணுகியபோது அதை அவர்கள் பகிர்ந்துக் கொண்டார்கள்."

பிறருக்கு விருப்பத்தை ஏற்படுத்தும் பெண்களின் உடல் அவர்களால் ஏன் வெறுக்கப்படுகிறது?

பால்ய பருவத்தில் இருந்தே பெண்களுக்கு இதற்கான மனோபாவம் வளர்த்தெடுக்கப்படுகிறது என்கிறார் தீபா. சமூகத்தின் வார்ப்புகள் தானே நாம்?

பெண்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

உடலை வெறுக்கும் பெண்கள்

"பொண்ணா லட்சணமா அடக்க ஒடுக்கமாக உட்கார வேண்டும்"

"இவ்வளவு இறுக்கமா உடை போடனுமா என்ன?"

எந்தவித காரணமும் இல்லாமலேயே வீட்டில் பெரியவர்கள், ஆண்கள், அம்மா, அப்பா, சகோதரர்கள் என அனைவரும் பெண்களின் உடல் தொடர்பாக அவர்களுக்கு கூறும் அறிவுரை தவறானது என்று சொல்ல முடியாது. ஆனால் அது பிஞ்சு மனதில் ஏற்படுத்தும் தாக்கம் என்னவாக இருக்கும்? தன்னுடைய வயதையொத்த சகோதரனுக்கோ வேறு ஒரு சிறுவனுக்கோ இந்தவித கட்டுப்பாடுகள் இல்லாத போது, தன்னுடைய உடலின் காரணமாக கட்டுப்படுத்தப்படும்போது பெண் குழந்தைகள் தங்களின் உடலை தாங்களே வெறுக்கத் தொடங்கிவிடுகின்றனர்."

தீபாவின் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் கதாபாத்திரங்கள் அனைத்தும் இதே போன்ற கட்டுப்பாடுகளை வாழ்க்கை முழுவதும் எதிர்கொண்டுள்ளனர். பெண்களுக்கான கட்டுப்பாட்டை அவர்களின் வயது கட்டுப்படுத்துவதில்லை. 7 வயது குழந்தையாக இருந்தாலும், 70 வயது மூதாட்டியாக இருந்தாலும் இந்திய பெண்களுக்கான கட்டுக்கள் மட்டும் தளராமலும், குலையாமலும் இருக்கின்றன.

பெண்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

தமன்னாவின் விருப்பம்

தீபாவின் புத்தகத்தின் ஒரு காதாபாத்திரம் தமன்னா.

தமன்னா நவீனகால யுவதி. தனக்கு பிடித்த நவநாகரீக உடைகளை அணிவதில் விருப்பம் கொண்டவர். ஆனால், இளைஞர்களின் சீண்டலுக்கு பயந்து, உடலை முழுவதும் மறைக்கும் ஆடைகளை அணிந்துக்கொண்டு நடன வகுப்புக்கு செல்ல முடிவெடுத்தார் தமன்னா.

தமன்னாவின் முடிவு தவறு என்று சொல்லும் ஷீலா, ஒரு துப்புரவுத் தொழிலாளி.

தனக்கு விருப்பமின்றி பிறருக்காக முழு ஆடை அணியும் தமன்னாவின் முடிவுக்கு ஷீலா எதிர்ப்பு தெரிவித்த காரணம் என்ன தெரியுமா?

ஷீலா சொல்கிறார், "ஆட்டோவில் கணவருடன் சென்றுக் கொண்டிருந்தேன். ஆட்டோவை நிறுத்தி போலிஸ்காரர்கள் சோதனை செய்தார்கள். ஆண் காவலர்கள் என் மார்பையும், இடுப்பையும் தடவி சோதனை செய்தார்கள். எனக்கு கோபம் வந்தாலும், என் கணவரை கைது செய்துவிடக்கூடாது என்று எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தேன்."

பெண்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஷீலா உரத்த குரலில் இறுதியாக என்ன சொன்னார் தெரியுமா? "அப்போது நான் புடவை அணிந்திருந்தேன். புடவை அணிவது மரியாதைக்குரியது, யாரும் தவறான கண்ணோட்டத்தில் பார்க்க மாட்டார்கள் என்று நினைக்கிறோம். ஆனால் நமது உடையைப் பற்றி அவர்களுக்கு கவலையில்லை. ஒரு பெண்ணின் உடல் மட்டுமே அவர்களின் இலக்கு."

அந்த ஏழு விஷயங்கள்

பெண்களை கட்டுப்படுத்தும் முக்கியமான ஏழு விஷயங்களை தீபா பட்டியலிடுகிறார்.

  • பெண்களின் உடல், அவர்களின் மெளனம்
  • பிறரை திருப்திபடுத்தவேண்டும் என்ற பெண்ணின் விருப்பம்
  • பெண்ணின் பாலினம்
  • தனிமை
  • ஆசைகள்
  • கடமை தொடர்பான பொறுப்புணர்வு
  • பிறரை சார்ந்து இருப்பது

இந்தியாவில் ஒரு பெண் எப்படி பார்க்கப்படுகிறார்?

ஒருவரின் மகள், ஒருவரின் தாய், ஆணின் மனைவி, குடும்பத்தின் குலவிளக்கு, ஒருவரின் சகோதரி அல்லது மைத்துனி. இந்தியப் பெண்களின் உணர்வுகள், உறவுகள் என்ற முகமூடிகளால் பின்னிறுத்தப்படுகிறது. இந்தியப் பெண் தன் வாழ்க்கையை தனக்காக எப்போதுமே வாழ்வதில்லை.

(அமெரிக்காவில் வசிக்கும் தீபா நாராயண், வறுமை, பாலின பாகுபாடு போன்ற முக்கிய விஷயங்களில் 15 க்கும் அதிகமான புத்தகங்களை எழுதியுள்ளார். தீபா, ஐ.நா மற்றும் உலக வங்கியுடன் நீண்ட காலமாக இணைந்து பணியாற்றி வருபவர்.)

http://www.bbc.com/tamil/global-43440326

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டி முடிவு திகதி 34வது ஆரம்பப் போட்டி நிறைவு பெறும் வெள்ளி 19 ஏப்ரல் 2024 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி.   இன்னும் 25 மணித்தியாலங்களே உள்ளன. இதுவரை ஆறு பேர்தான் போட்டியில் கலந்துகொண்டுள்ளனர். இன்னும் குறைந்தது நான்கு பேராவது விரைவில் கலந்துகொண்டால்தான் யாழ்களப் போட்டி நடக்கும்! 😉
    • Yarl IT hub தொடர்பாக நானும் ஒரு பதிவை சில மாதங்களுக்கு முன் பகிர்ந்து இருந்தேன் என மிகுந்த அவையடக்கத்துடன் தெரிவித்து கொள்கின்றேன் 😀    
    • "சில கிருஸ்துக்கு முன்னைய காலத்து நகைச்சுவைகள்"  உலகின் மிகப் பழமையான பதிவு செய்யப்பட்ட நகைச்சுவையானது கிமு 1900 க்கு முந்தையதும் மற்றும் கழிப்பறை சம்பந்தமான நகைச்சுவையானதும் ஆகும் .   அப்போது தெற்கு ஈராக்கில் வாழ்ந்த சுமேரியர்களின் கூற்று இது:  "பழங்காலத்திலிருந்தே நிகழாத ஒன்று; ஒரு இளம் பெண் தன் கணவனின் மடியில் வாய்வு [பேச்சு வழக்கில் குசு] விடுவதில்லை" "Something which has never occurred since time immemorial; a young woman did not fart in her husband's lap." வால்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தால் [University of Wolverhampton] வெளியிடப்பட்ட உலகின் மிகப் பழமையான முதல் 10 கேலி [ஜோக்] பட்டியலில் இது தலைமை வகிக்கிறது. [Thursday July 31, 2008]  இந்த நகைச்சுவை உங்களுக்கு வேடிக்கையாக இருந்ததா? எனக்கு அப்படி இருக்கவில்லை.  ஒவ்வொரு சமூகத்திற்கும் நகைச்சுவைக்கான அணுகுமுறை உள்ளது. இந்த அணுகுமுறை அந்த சமூகத்தின் கலாச்சார மற்றும் பாரம்பரிய விழுமியங்களில் உள்வாங்கப் பட்டுள்ளது. ஒரு குழு மக்கள் வேடிக்கையாகக் கருதும் விடயம், உலகின் வேறு சில பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும், வேறுபட்ட பின்னணியைக் கொண்டவர்களுக்கும் புண்படுத்தக் கூடியதாக இருக்கலாம்.  என்றாலும் இதையே பதியப்பட்ட முதல் பண்டைய நகைச்சுவையாக கருதப்பட்டுள்ளது.  ......................................................... ஒரு பகிடி அதேநேரம் ஒரு புதிர், பண்டைய கிரீஸ், கிமு 429. கிரேக்க நாடக ஆசிரியரான சோஃபோக்கிள்ஸின் "ஓடிபஸ் டைரனஸ்" இல், ["Oedipus Tyrannus," by Greek playwright Sophocles,] ஒரு பாத்திரம் பின்வரும் வரியைக் கொடுக்கிறது, இது ஓரளவு நகைச்சுவையாகவும்  ஆனால் மூளைக்கு வேலையாகவும் உள்ளது. கேள்வி:  எந்த மிருகம் காலையில் நான்கு கால்களிலும், மதியம் இரண்டு கால்களிலும், மாலையில் மூன்று கால்களிலும் நடக்கும்? What animal walks on four feet in the morning, two at noon and three at evening? பதில்: மனிதன்.  குழந்தையாக நான்கு கால்களிலும், மனிதனாக  இரண்டு கால்களிலும் முதுமையில் ஊன்றுகோள்களுடன் மூன்று கால்களிலும்." ............................................................ பண்டைய கிரீஸ், கிமு 800 ,  பெயரில் ஒரு சிலேடை. ஹோமரின் "தி ஒடிஸி" - 2,800 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. அதில்,   "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸிடம் தனது உண்மையான பெயர் 'யாருமில்லை' ['Nobody']  என்று கூறுகிறார்." "Odysseus tells the Cyclops that his real name is 'Nobody.'" பின் ஒரு நேரம்,  "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸைத் தாக்கும்படி தனது ஆட்களுக்கு அறிவுறுத்தும் போது, சைக்ளோப்ஸ் [பயத்தில் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, உதவி தேடி] கத்துகிறார்: 'உதவி, உதவி நோபோடி என்னைத் தாக்குகிறார் !' [ ஆனால் அது ஒருவரும் என்னைத் தாக்கவில்லை என கருத்துப் படுவதால்]   'Help, Nobody is attacking me!' உதவிக்கு யாரும் போகவில்லை. ....................................................... கிமு 1100 இல் பெயர் தெரியாத ஒருவரின், ஒரு வயதான திருமணமான ஜோடியைப் பற்றிய நகைச்சுவை ஒரு கண் பார்வையற்ற ஒரு பெண்ணுக்கு திருமணமாகி 20 வருடங்கள் ஆகிறது. அவன் வேறொரு பெண்ணைக் கண்டதும் / காதலித்ததும் அவளிடம்,  "நீ ஒரு கண்ணில் பார்வையற்றவள் என்று கூறப்படுவதால் நான் உன்னை விவாகரத்து செய்கிறேன்"  'I shall divorce you because you are said to be blind in one eye.' என்று கூறினான்.  அவள் அவனுக்குப் பதிலளித்தாள்:  "திருமணமாகி 20 வருடங்கள் கழித்து நீங்கள் அதைக் இன்றுதானா கண்டுபிடித்தீர்கள்?" 'Have you just discovered that after 20 years of marriage?'" தொகுத்தது [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • இப்போ பெரும்பாலான கடைகளில் தாச்சியில் கொத்த்தை - கொத்தாமல் கிண்டுகிறார்கள் அண்ணை. நான் ஒரு கொத்து அடிப்படைவாதி. தகரத்தில் கொத்தும் கடை தேடியே பல மணிகளை வீணடித்தேன்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.