Jump to content

தாயக மண்ணில் புலிகளை அடிமைகளாக்கியது யார்? – கதிர்


Recommended Posts

தாயக மண்ணில் புலிகளை அடிமைகளாக்கியது யார்? – கதிர்

http://www.kaakam.com/?p=1071

image_1520989777-26a98056dd-600x381.jpg

முள்ளிவாய்க்காலில் சிங்கள மற்றும் பன்னாட்டு அரசுகள் தமிழினத்தின் மீதான இன அழிப்பை நடாத்தி முடித்த கையோடு புலம்பெயர் அமைப்புகள் தங்களுக்குள் முட்டி மோதி கட்டமைப்புகளை சிதைத்தது மட்டுமல்லாது சிறிலங்கா மற்றும் இந்திய அரசுகளின் கைக்கூலிகளாகவும் மாறியிருக்கின்றனர் என்பதை பல தரப்பட்ட நிகழ்வுகளோடு தொடர்புபடுத்தி புரிந்து கொள்ளலாம்.

விடுதலைப்போராட்டங்கள் எழுச்சிகரமாக ஆரம்பிக்கப்பட்டாலும் கருவியேந்திய மறப்போராட்டங்கள் பேசாநிலைக்கு வரும் போது அதன் பின்னரான காலப்பகுதியையும் மறப்போராட்டத்தில் பங்கெடுத்த போராளிகளின் எதிர்கால நலன் குறித்த நிலைப்பாடுகளும் மிக நேர்த்தியாக கையாளப்பட வேண்டிய ஒன்று. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமை நேரடியாக களத்தில் நின்று போராடிக் கொண்டிருந்தமையால் கருவியேந்திய மறப்போராட்டங்கள் பேசாநிலைக்கு வந்ததன் பின்னரான போராளிகளின் நலன் குறித்த பொறுப்பை புலம்பெயர் அமைப்புகளிடமே வழங்கியிருந்தனர். இப்படிப்பட்ட நிலையில் எவ்வாறு போராளிகள் புறக்கணிக்கப்பட்டு இராணுவ பண்ணைகளில் அடிமைகளாக வேலை செய்யும் அளவிற்கு தள்ளப்பட்டனர்?

விடுதலைப்புலிகளின் அமைப்பானது தொலை நோக்குச் சிந்தனையில், போராளிகள் மற்றும் மக்கள் நலன் உட்கட்டுமான பணிக்காக பெருமளவிலான பொருண்மியச் சேர்க்கையில் ஈடுபட்டிருந்தனர். போர் உச்சக்கட்டமான இடம்பெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் கூட தமிழீழ உட்கட்டுமான பணிக்கும் மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகத்திற்குமான பொருண்மிய கட்டுமானத்தை மிக நேர்த்தியாகவே கையாண்டு கொண்டிருந்தனர். இப்படிப்பட்ட நிலையில் கருவியேந்திய மறப்போராட்டங்கள் பேசாநிலைக்கு வந்ததன் பின்னரான காலப்பகுதியில் மாவீ ரர் போராளி குடும்ப நலன் காப்பகங்கள் சிதைவுற்றுப் போனதற்கு, புலம்பெயர் அமைப்புகள் தன்னிச்சையாக கட்சிசார் அரசியலில் ஊறிக் கிடப்பதும் இந்திய கைக்கூலிகளாக மாறிப் போனதும்தான் காரணம்.

image_1520989715-06f09a4d49-490x315.jpg

“கருவியேந்திய மறப்போராட்டங்கள் பேசாநிலைக்கு வந்ததன் பின்னர் தலைமையின் கட்டளைக்கு இணங்க குடும்பங்களோடு இணைந்து இராணுவத்திடம் சரணடைந்த போராளிகளை எதிர்காலத்தில் இராணுவப் பண்ணைகளிலும் இராணுவ தொழிற் பேட்டைகளிலும் அடிமைகளாக வைத்திருத்தல்” என்ற சிங்கள அரசின் நோக்கமானது இன்று உருவாகியது அல்ல. 2010 காலப் பகுதிகளிலேயே சரணடைந்த போராளிகளை சம்பளமின்றி வேலைவாங்கியது சிங்கள அரசு. அதன் தொடர்ச்சியாக அமெரிக்க அதிகாரி ரொபேட் பிளேக் 2011 காலப்பகுதியில் வடக்கிலிருக்கும் இராணுவப் பண்ணைகளை பார்வையிட்டது அனைவருக்கும் தெரியும்.

கருவியேந்திய மறப்போராட்டங்கள் பேசாநிலைக்கு வந்ததன் பின்னர், புலம்பெயர் அமைப்புகளின் பொறுப்பற்ற செயலாலும் தன்னிச்சையான அதிகாரப் போட்டியாலும்தான் போராளிகளின் எதிர்காலமும் போராளி மாவீரர் குடும்பங்களின் எதிரகாலமும் தாயகத்தில் கேள்விக்குறியாகியது என்பதுதான் உண்மை. சிறிலங்காவின் தேர்தல் காலத்தில் தாங்கள் விரும்பும் தமிழ் கட்சிகளின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக கோடிக் கணக்கில் அரசியல் கட்சிகளுக்கு செலவு செய்யும் புலம்பெயர் அமைப்புகள் அந்தப் பணத்தில் தமிழீழத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேளாண் பண்ணைகளை உருவாக்கி போராளிகளுக்கு வேலை வாய்ப்பை வழங்கியிருந்தால் அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்தே அந்த பண்ணைகளை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியிருப்பார்கள் போராளிகள்.

வேளாண் உற்பத்தி மற்றும் கால்நடை வளர்ப்புத் துறையில் இன்று வடகிழக்கில் பெருமளவு பகுதியை இராணுவப் பண்ணைகளே செய்கின்றன. அங்கு அடிமைகளாக வேலை செய்பவர்களில் பெரும்பாலானோர் பொருண்மிய அடிப்படையில் பெரிதும் பின்தங்கி இருக்கும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட போராளிகளும் மாவீரர் குடும்ப உறுப்பினர்களுமே. நிலைமை இப்படியிருக்க பொருண்மிய அடிப்படையில் மிகவும் செழிப்பாக இருக்கக் கூடிய அரசியல்வாதிகளை குறிப்பாக கஜேந்திரகுமார் அணி விக்கினேசுவரன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரை ஆண்டுதோறும் வெளிநாடுகளுக்கு அழைத்து விழா எடுப்பதற்கு பெருமளவில் பண த்தை விரயமாக்குகின்றன புலம்பெயர் அமைப்புகள்.  

தமிழ்த் தேசிய கூட்டமைப்புத் தான் ஒன்றும் செய்யுதில்லை ஆனால் புலம்பெயர் அமைப்புகளால் பெரிதும் விரும்பப்படும் கஜேந்திரகுமார் விக்கினேசுவரன் அணி மூலமாவது முதலீடுகளை செய்து வடகிழக்கில் பண்ணைகளை உருவாக்குங்கள் என்று கேட்டால் “அவங்களுக்கு தொழில் ஒன்றை தொடங்கி ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கி நிர்வகிக்க கூடிய ஆளுமை இல்லை” என்கிறார்கள்.

image_1520989777-26a98056dd-490x315.jpg

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காய் தமது இளமைக்கால வாழ்வைத் தொலைத்து இன விடுதலைக்காய் களமாடி உடல் உறுப்புகளை இழந்த போராளிகள் இன்று இராணுவ பண்ணைகளில் அடிமைத்தனமான வேலை செய்து தமது எதிர்காலத்தை கொண்டு செல்ல வேண்டிய கட்டாயச் சூழலை உருவாக்கிய புலம்பெயர் அமைப்புகள் போராளிகளின் நலனில் அக்கறை கொள்ளாது தாம் விரும்பும் அரசியல் கட்சிகளின் அரசியல் அதிகாரத்திற்காக பண விரையம் செய்கின்றமையானது தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு இழைத்த மாபெரும் இரண்டகமாகும். தனித்தனியாக போராளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் செய்வதாக சொல்கிறார்கள். அவை வரவேற்கப்பட வேண்டியதே ஆனால் அதுவே உறுதியான தீர்வாக அமையாது. தமிழீழத்தின் அத்தனை மாவட்டங்களிலும் போராளிகளை மையமாக வைத்து உற்பத்தித் துறையில் முதலீடுகள் செய்யப்படல் வேண்டும். அதன் பிற்பாடு அதை அடுத்த தளத்திற்கு முன்னேற்றும் பணியை போராளிகள் செய்வார்கள். அதற்குரிய பண்பும் ஆளுமையும் போராளிகளிடம் உள்ளது.

தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் அத்தனை கட்டமைப்புகளையும் துடைத்தழிப்பு செய்வதில் மிக ஆழமாக வேலை செய்யும் இந்திய உளவுத் துறையோடு இன்று புலம்பெயர் அமைப்புகள் தொடர்பில் உள்ளனர். சிலர் தாங்கள் இந்தியாவோடு வேலை செய்கிறோம் என்று வெளிப்படையாகவே சொல்கிறார்கள். சரணடைந்த புலிகளை சமூகத்தில் இருந்து ஒதுக்கி, அவர்களை உளவியல் ரீதியில் நலிவடையச் செய்து, தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மீதும் இந்த தமிழ்ச் சமூகத்தின் மீதும் வெறுப்பை உண்டாக்குவதன் மூலம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மீதும் விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதும் அவநம்பிக்கையை உருவாக்கும் சிங்கள இந்திய தேசங்களின் நோக்கத்தை, பொருண்மிய அடிப்படையில் வலுவாக இருக்கும் புலம்பெயர் அமைப்புகள் கச்சிதமாக செய்வதாகவே தெரிகிறது. குறிப்பிட்ட ஒரு சாராரின் தனிப்பட்ட அதிகார நோக்கத்திற்காக ஒட்டு மொத்த தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் எதிர்காலத்தை சிதைக்கும் இரண்டகச் செயலை காலம் பதிவு செய்துகொண்டுதான் இருக்கிறது.

புலம்பெயர் நாடுகளில் தமிழீழ தேசியக் கொடியை ஏற்றி நடாத்தப்படும் நிகழ்வுகளில், தமிழீழம் என்றால் என்ன அதன் விடுதலை ஏன் தேவை? அதற்கு நாம் எவ்வாறு பங்களிக்க வேண்டும்? என்பது குறித்து ஒரு இருபது நிமிடங்கள் கூட கூட்டங்கள் நடைபெறுவதில்லை மாறாக கொத்துரொட்டி விற்பனை செய்தல், தமிழீழ சின்னங்களை விற்பனை செய்தல் என வியாபாரா அமைப்புகளாக மாறி நிற்கிறது புலம்பெயர் கட்டமைப்புகள்.

ஒரு உண்மைச் சம்பவம் ஒன்றை இங்கு சொல்லியே ஆகவேண்டும்!

கடந்த ஆண்டு ஐரோப்பா நாடொன்றில் நடைபெற்ற நிகழ்வொன்றில், ஒரு அமைப்பின் அந்த நாட்டு பொறுப்பாளரை சந்தித்து மிக முதன்மையான ஆவணமொன்றை கொடுத்து அதை மக்களிடம் கொண்டு செல்வதற்காக நண்பர் ஒருவர் சென்றிருந்தார். பொறுப்பாளரை சந்தித்து குறிப்பிட்ட ஆவணத்தை நண்பர் கொடுக்க அந்தப் பொறுப்பாளரோ அதை சுருட்டி அடுப்படியில் வைத்துவிட்டு கொத்துப் போடுவதில் மும்மரமா இருந்ததாக நண்பர் வருத்தப்பட்டார். அதைவிட பகடி என்வென்றால், வெளிநாடுகளில் விளையாட்டுப் போட்டிகளில் பயன்படுத்தப்படும்  வோக்கி டோக்கிகளை (Walkie Talkie) பயன்படுத்தி நிகழ்வு நடைபெறும் இடங்களில் எங்கெங்கு கொத்து ரொட்டியை கொண்டு செல்ல வேண்டும் என்ற கட்டளைகளை வழங்குகிறாராம். ஆனால் அதை ஏதோ களமுனையில் நின்று சண்டைக்கு கட்டளையிடுவது போன்று ஒரு தோரணையில் செய்வதைப் பார்த்தால் எங்கள் புலம்பெயர் அமைப்புகளின் வங்குரோத்து விளங்குகிறது என்று கடிந்து கொண்டார் நண்பர். புலம்பெயர் மக்கள் ஒன்று கூடி நிற்கும் இடத்தில் தமிழீழ விடுதலைக்கான அரசியல் கருத்துருவாக்கத்தை உருவாக்குவதையும் விட கொத்துரொட்டி விற்பனைக்குத் தான் அதிகம் முதன்மை கொடுப்பதாகவும் அதை ஏதோ விடுதலைப் புலிகளே செய்வது போல் காட்டுவது அருவருப்பான விடயம் என்று கடிந்து கொண்டார் அந்த நண்பர்.

ஒரு விடுதலைப் போராட்டத்தின் கருவியேந்திய மறவழிப்போராட்டம் பேசாநிலைக்கு வந்ததன் பின்னர் முழுப் பொறுப்பையும் புலம்பெயர் அமைப்புகளை நம்பி ஒப்படைத்துவிட்டு வீரச்சாவடைந்த, சரணடைந்த, விழுப்புண்ணடைந்த, சிறை சென்ற போராளிகளுக்கும் அவர்களின் குடும்பங்களிற்கும் இந்த புலம்பெயர் அமைப்புகள் என்ன சொல்லப் போகின்றன?  

கதிர்

17-03-2018

http://www.kaakam.com/?p=1071

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.