Jump to content

‘யதி’ - துறவறம் எனும் ஜீவநதியின் சத்தியத்தடம் தேடிச் செல்லும் பயணம்!


Recommended Posts

47. தடம்

 

 

மிருதுளாவின் தந்தை, பழைய ஹிந்தி நடிகர் ஒருவரைப் போல இருந்தார். நான் நெடுநேரம் யோசித்தும், அப்போது எனக்கு அந்த நடிகரின் பெயர் நினைவுக்கு வரவேயில்லை. ஆனால் அம்முகத்தை நானறிவேன். பலமுறை நேரிலேயே பார்த்திருக்கிறேன். எனக்கு சினிமா அறிவு அதிகம் கிடையாது. நான் வீட்டை விட்டுப் போவதற்கு முன்னால் மொத்தமே இருபது திரைப்படங்களைப் பார்த்திருந்தால் அதிகம். கேளம்பாக்கம் ராஜலட்சுமி திரையரங்கத்தில் என்ன படம் வருகிறதோ அதுதான். அதிலும் எதைப் பார்க்கலாம் என்று அப்பா முடிவு செய்கிறாரோ அது மட்டும்தான். எங்கள் வீட்டில் டிவி இருந்ததில்லை. அப்படி ஒரு பொருள் தேவை என்று யாரும் கருதியதில்லை. ஊரில் அநேகமாக தினமும் ஏதாவது ஒரு படப்பிடிப்பு நடக்கும். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி மொழிப் படங்கள். பம்பாயில் இருந்தெல்லாம் திருவிடந்தைக்கு வந்து படப்பிடிப்பு நடத்தும் அளவுக்கு எங்கள் ஊர் அன்றைக்குப் பிரபலமான கிராமமாக இருந்தது. அந்தக் குளமும் சவுக்குத் தோப்பும் அதை ஒட்டிய அலைகள் குறைந்த கடற்பரப்புமே காரணம்.

அந்த மனிதரைப் பார்த்ததுமே எனக்கு ஏன் அந்த ஹிந்தி நடிகரின் நினைவு வந்தது என்று தெரியவில்லை. அந்த நடிகரை நான் திருவிடந்தையில் பார்த்திருக்கிறேன். ஒரு முறையல்ல; நாலைந்து முறை வேறு வேறு படங்களுக்காக வந்திருக்கிறார். ஜிப்பாவின் இடது புற பாக்கெட்டில் எப்போதும் உள்ளங்கை அளவு அகலமுள்ள சிகரெட் பெட்டி வைத்திருப்பார். ஐந்து நிமிடங்களுக்கொரு முறை அதை எடுத்துக் கையில் வைத்துக்கொள்வார். அருகே சென்றால் நூதனமானதொரு வாசனை திரவியத்தின் நெடியும் சிகரெட் நெடியும் சேர்ந்து அடிக்கும்.

மிருதுளாவின் அப்பாவுக்கு சிகரெட் பழக்கம் இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால் அவரும் ஒரு வாசனை திரவியம் பூசியிருந்தார். அந்த ஹிந்தி நடிகரைப் போல அவரும் ஜிப்பாதான் அணிந்திருந்தார். பல்லாண்டுக் காலமாகச் சேர்த்த பணத்தின் செழுமை அவரது முகத்திலேயே தெரிந்தது. அவருக்கு ஏராளமான கவலைகள், மன உளைச்சல்கள் என்று சொல்லித்தான் அந்தப் பெண் என்னைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றாள். ஆனால் சந்தித்த கணம் முதல் அந்த மனிதர் என்னிடம் சிரித்துச் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார். பள்ளிப் படிப்பை அவர் முடிக்கவில்லை. குடும்பச் சூழ்நிலை காரணமாகப் பதினாறு வயதிலேயே அவர் ஒரு வேலை தேடிக்கொள்ளும்படியாகிவிட்டது என்று சொன்னார். ஒரு அச்சகத்தில் எடுபிடிப் பையனாக அவரது வாழ்க்கை ஆரம்பித்திருக்கிறது. அது போஸ்டர்கள், கலியாணப் பத்திரிகைகள், மரண அறிவிப்புக் கடிதங்கள் அச்சடிக்கும் அச்சுக்கூடம்.

ஏதோ ஒரு தேர்தல் காலத்தில் அங்கே அச்சுக்கு வந்த கட்சி போஸ்டரில் இருந்த சில பிழைகளை அவர் நீக்கி, அச்சுக் கோத்திருக்கிறார். தவிரவும் பிரசார வாசகங்களில் சில திருத்தங்கள் செய்திருக்கிறார். இதெல்லாம் ஒரு அச்சுக்கூடத்தில் வேலை பார்க்கும் சிறுவன் செய்யக்கூடிய காரியங்களல்ல. இருந்தாலும் அன்றைக்கு அவர் அதைச் செய்ததால்தான் கட்சி ஆட்களின் கண்ணில் பட்டிருக்கிறார்.

‘அந்தத் தேர்தலில் அந்தக் கட்சிக்கு நான் இருநூறு வாசகங்கள் எழுதிக் கொடுத்தேன். ஒரு குட்டித் தலைவரின் தேர்தல் சொற்பொழிவுகள் அனைத்தும் அன்றைக்கு நான் எழுதி அளித்தவைதான். தேர்தல் முடிந்த பிறகு எனக்குப் பத்தாயிரம் ரூபாய் பணம் தந்தார்கள்’ என்று சொன்னார்.

‘அது சரி, அந்தத் தேர்தலில் அவர்கள் வென்றார்களா?’

‘இல்லை. தோற்றுத்தான் போனார்கள். ஆனால் எனக்கு எதிர்க்கட்சிகளில் இருந்தெல்லாம் வாய்ப்புகள் வரத் தொடங்கிவிட்டன. உங்களுக்கு ஒன்று தெரியுமா? இந்தியாவிலேயே அரசியல் கட்சிகளுக்கான தனி நபர் விளம்பர ஏஜென்சியாக முதல் முதலில் வேலை செய்தவன் நாந்தான்’ என்று சொன்னார்.

அது எனக்கு வியப்பாக இருந்தது. பன்னிரண்டுக்கு பத்தடி உள்ள ஓர் அறையை வாடகைக்கு எடுத்து அதில் ஒரு மேசை நாற்காலி மட்டும் போட்டு அமர்ந்து அவர் தம் தொழிலைத் தொடங்கியிருக்கிறார். கட்சிக்காரர்கள் யார் வேண்டுமானாலும் வரலாம். பிரசார வாசகங்கள், கொள்கை விளக்கக் கையேடுகள், ஒரு வரி சுலோகன்கள், தேர்தல் அறிக்கைகள் என்று என்ன வேண்டுமானாலும் கேட்கலாம். அடிப்படைத் தரவுகளை அவர்கள் தந்துவிட வேண்டும். அதை இவர் சரியான மொழியில் வடிவமைத்துக் கொடுத்துவிடுவார்.

‘சொன்னால் நம்புவீர்களா? என் பதினாறு வயது வரை ஒரு நூறு ரூபாய்த் தாளை நான் கண்டதேயில்லை. ஆனால் பதினெட்டு வயதில் என்னிடம் ஆறு லட்ச ரூபாய் இருந்தது.’

இதை நம்புவதில் எனக்கு எந்தப் பிரச்னையும் இருக்கவில்லை. அரசியல், சினிமா, கிரிக்கெட். இந்தியாவில் இந்த மூன்று துறைகளில்தான் அதிகப்பணப் புழக்கம் என்பதை நான் அறிவேன். நாடெங்கும் வாழும் மக்களுக்காக ஒரு பகுதியும் இந்த மூன்று துறைகளைச் சேர்ந்தவர்களுக்காக வேறொரு பகுதியும் பணம் அச்சடிக்கிறார்கள் என்றுகூட எண்ணியிருக்கிறேன். ஒரு மாறுதலுக்கு நான் ஏன் நிறைய சம்பாதிக்கக் கூடாது?

அந்நாள்களில் நான் பணத்தைக் குறித்து நிறைய யோசித்திருக்கிறேன். என்னால் ஓர் அலுவலகத்துக்குச் சென்று வேலை பார்க்க முடியாது. யாருக்கும் கட்டுப்பட்டுப் பொருந்தியிருக்க முடியாது. நான் அதிகம் படித்ததில்லை. நானொரு பட்டதாரி அல்ல. நானொரு சன்னியாசி. அப்படித்தான் என்னைக் கண்டவர்கள் கருதினார்கள். உண்மையில் நான் அதுவுமல்ல. எனக்கு வேதங்களின் சில அங்கங்கள் தெரியும். தருக்கம் தெரியும். நாத்திகத்தைக் குறித்துச் சற்று நிறையவே வாசித்திருக்கிறேன். கம்யூனிச நாத்திகமோ, திராவிட நாத்திகமோ அல்ல. இது வேறு. முற்றிலும் வேறு.

விஷயம், அறிந்தவை என்ன என்பதல்ல. அது எப்படிப் பொருளாகும் என்பது பற்றியது. எனக்கு அப்போது நிறையப் பணம் தேவைப்பட்டது. ஆசிரமம் என்று சொன்னேனே தவிர என் இருப்பிடம் அப்போது மிகவும் சிறிதாக இருந்தது. மடிகேரியில் ஒரு வெங்காய வியாபாரிக்குச் சொந்தமான அரை ஏக்கராவுக்கும் குறைவான நிலத்தை எனக்கு அவர் நன்கொடையாக வழங்கியிருந்தார். என்னைத் தேடி வந்தவர்களுள் சற்றே வசதியானவர்கள் ஆளுக்குக் கொஞ்சம் பணம் போட்டு ஒரு கட்டடம் எழுப்பித் தந்திருந்தார்கள். எளிய வரவேற்பரை. உள்ளே நுழைந்ததும் ஒரு பெரிய ஹால். வெள்ளை வெளேரென்று உயரமான சுவர்களையும் விதானத்தையும் கொண்டது. அங்கே எந்தப் பொருளும் கிடையாது. அலங்காரச் சிற்பங்கள் கிடையாது. குத்து விளக்கு கிடையாது. நாற்காலிகள், மேசைகள் கிடையாது. மைக் கிடையாது. வெறும் ஹால். சுமார் நூறு பேர் அங்கே அமர முடியும். நான் உட்காரும் இடத்தை மட்டும் ஒன்றரை அடி உயரமாகக் கட்டச் சொல்லியிருந்தேன். மேலே சுழலும் மின் விசிறிகளின் சத்தம் அங்கு கேட்கும். இல்லாவிட்டால் நான் பேசும் மெல்லிய சத்தம். அவ்வளவுதான்.

அந்த ஹாலின் பின்புறம் ஒரு கதவு உண்டு. அந்த வழியாகப் போனால் ஒரு படிக்கட்டு வரும். ஏறி மேலே சென்றால் என் நூலகம். படுக்கையறை. அதனோடு இணைந்த ஒரு கழிப்பறை மற்றும் குளியலறை. அவ்வளவுதான் என் மொத்த ஆசிரமமே. அந்தக் கட்டடத்துக்கு வெளியே மிச்சமுள்ள இடங்களெங்கும் புல் வளர்த்து ஆங்காங்கே நிழற்குடை அமைக்கச் செய்திருந்தேன். எளிய மூங்கில் நிழற்குடைகள். வகுப்புகள் இல்லாத நேரங்களில் ஆசிரமத்துக்கு வருவோர் அந்தக் குடைகளின் அடியில் அமர்ந்து ஏதாவது படிக்கலாம். பேசலாம். ஓய்வெடுக்கலாம். அவர்கள் உபயோகத்துக்காக அங்கே தனியே ஒரு பெரிய கழிப்பறை மட்டும் இருந்தது.

மிகவும் யோசித்துத் திட்டமிட்டு நான் ஒரே ஒரு ஏற்பாடு செய்திருந்தேன். ஆசிரமத்துக்கென்று ஊழியர்கள் யாரும் இருந்துவிடக் கூடாது என்பதே அது. எந்தக் காலத்திலும் யாருக்கும் நான் கடமைப்பட்டுவிடவோ, எனக்கு இன்னொருவர் கடமைப்படவோ இடம் தரக் கூடாது என்ற முடிவில் இருந்தேன். என்னைத் தேடி வந்தவர்கள் ஆசிரமத்து வேலைகளைப் பங்கு போட்டுக்கொண்டு செய்ய ஆரம்பித்தார்கள். அதைக்கூட நான் யாரிடமும் சொன்னதில்லை. எவருக்கும் எந்த உத்தரவும் அளித்ததில்லை. நான்கு பேர் சேர்ந்து ஆசிரம வளாகத்தைப் பெருக்கி சுத்தம் செய்வார்கள். இன்னும் நான்கு பேர் என் ஆடைகளைத் துவைத்துப் போட்டுக் காயவைத்து எடுத்து மடித்து வைப்பார்கள். நூலகத்தை இரண்டு பேர் பராமரிக்க ஆரம்பித்தார்கள். தோட்டப் பராமரிப்பு வேறு சிலரின் பொறுப்பாகிப்போனது. என்றைக்கோ ஒரு நாள் யாரோ சொன்னார்கள். ஆசிரமத்தில் உணவு தயாரிக்கலாம்.

சிறிய அளவில் ஒரு கேண்டீன் திறக்கப்பட்டது. பெங்களூரில் ஒரு பெரிய உணவகம் நடத்திக்கொண்டிருந்தவர் அங்கிருந்து எனக்குச் சில பேரை அனுப்பித் தந்தார். சமையல் கலைஞர்கள். அவர்கள் என்னிடம் பணியாற்றவில்லை. எனக்காகப் பணியாற்றினார்கள். ஆசிரமத்தில் அப்போது முதல் மதிய உணவும் மாலைச் சிற்றுண்டியும் கிடைக்க ஆரம்பித்தது. வருகிறவர்கள் மலிவு விலையில் பசியாறிக்கொள்ள ஒரு வழி. நான் அதன் கணக்கு வழக்குகளில் தலையிடுவது கிடையாது. கேண்டீன்காரர்கள் பெங்களூர் முதலாளிக்கு நேரடியாக பதில் சொல்லிக்கொள்வார்கள். இதில் எனக்கிருந்த ஒரே லாபம், என் உணவுப் பிரச்னை உடனடியாகத் தீர்ந்ததுதான். எனக்கான உணவை கேண்டீன் கலைஞர்கள் தனியே சமைத்துத் தந்தார்கள்.

பொதுவாக, நான் மதியம் மூன்று மணி வரை எதையும் சாப்பிடுவதில்லை. மூன்று மணிக்கு இரண்டு வெள்ளரிப் பிஞ்சுகளை மென்று தின்றுவிட்டு ஒரு கறுப்புத் தேநீர் அருந்துவேன். ஐந்தரை மணிக்கு இரண்டு ஸ்பூன் வெண்ணெய். இரவு எட்டு மணிக்கு இரண்டு சப்பாத்திகள், கொஞ்சம் சோறு, பருப்புக் கூட்டு, ஒரு கப் தயிர். கொஞ்சம் பழங்கள். இந்த உணவுப் பாணியை என் குரு எனக்குக் கற்றுத் தந்திருந்தார். உணவு சார்ந்த ஆர்வங்களும் அக்கறையும் இல்லாமல் போவது ஒரு வரம். ஒருவிதத்தில் அது ஒரு யோகம். பல யோக முறைகளுக்கு உள்ளே நுழைவதற்கான வாசலும்கூட.

இதில் ரசமான விவகாரம் என்னவெனில், பக்தர்களாகவும் நண்பர்களாகவும் சீடர்களாகவும் என்னை நோக்கி வந்தவர்களில் பெரும்பாலானவர்களை இழுத்துப் பிடிக்கும் அம்சமாக இந்த உணவு முறையே இருந்தது. ஒரு மனிதன் ஒருவேளை உண்டால் போதுமா? இது எப்படி சாத்தியம் என்று என்னிடம் கேட்காதவர்களே கிடையாது. ‘ஏன் உங்களாலும் முடியுமே? சொல்லப்போனால் மனிதனுக்கு ஒருவேளை உணவு போதுமானது. தேவைக்கு அதிகமாகத்தான் நாம் திணித்துக்கொண்டிருக்கிறோம்’ என்று சொல்வேன். சில உணவு மாற்றங்களைச் செய்துகொடுத்து என்னால் சில பேரின் சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்றவற்றை முற்றிலுமாகக் குணப்படுத்த முடிந்தது. உண்மையில் நான் மருத்துவனல்லன். எனக்கு உணவின் அறிவியலும் தெரியாது. என் குருநாதர் கடைப்பிடித்த சில வழிமுறைகளைப் பரீட்சை செய்து பார்த்ததுடன் சரி.

சொன்னேனே, ஞானிகளல்ல; நோய் தீர்க்கத் தெரிந்தவர்களே நிலைத்து நிற்கிறார்கள்.

மிருதுளாவின் தந்தைக்கு நான் எந்த விதத்தில் உதவ முடியும் என்று யோசிக்க ஆரம்பித்தேன். ஆரம்பத் தயக்கம், அறிமுகத்துக்குப் பிறகு அவர் என்னிடம் மனம் விட்டுப் பேசத் தொடங்கியிருந்தார். அவரது பிரச்னை என்னவென்று அவருக்கு நானே புரியவைக்க வேண்டியிருந்தது என்பதுதான் இதில் பெரிய விசித்திரம்.

தேசம் ஒரு ஆட்சி மாற்றத்தை எதிர்கொள்ளத் தயாராகிக்கொண்டிருந்தது. நிச்சயமாக இம்முறை காங்கிரஸ் ஆட்சிக்கு வரக் கூடாது என்று அவர் சொன்னார். உதிரிகளின் மிகப்பெரிய கூட்டணி ஒன்றை அரசியல் பெரியவர்கள் உத்தேசித்திருந்தார்கள். ஒரு சமஷ்டி அரசு. எல்லாக் கட்சிகளுக்குமான நியாயமான பிரதிநிதித்துவம். அனுபவம் மிக்கதொரு பிரதம மந்திரி வேட்பாளர். அவரை முன்னதாகவே அறிவித்தாக வேண்டிய கட்டாயம் ஒன்றுமில்லை. கூட்டணி வென்றபின் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம், அது அவ்வளவு முக்கியமில்லை என்று அவர் சொன்னார்.

‘அப்படியா நினைக்கிறீர்கள்? நீங்கள் ஒரு தலைமை வேட்பாளரை முன்னிறுத்தாவிட்டால் உங்கள் கூட்டணி வெல்ல வாய்ப்பே இல்லை. தப்பித்தவறி வென்றாலும் ஆறு மாதங்களுக்கு மேல் அரசு நிற்காது’ என்று சொன்னேன்.

(தொடரும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

  • Replies 176
  • Created
  • Last Reply

48. லக்ஷ்மி கடாட்சம்

 

 

எனக்கு அரசியல் தெரியாது. எனக்கு எதுதான் தெரியும்? தெரியாதவற்றின் பூரணத்தில் திளைப்பவன் நான். முப்பது வயது வரை எனக்கு அந்தப் பதற்றம் இருந்தது. ஒன்றும் அறியாதிருப்பது பற்றிய தவிப்பு. அல்லது அனைத்திலும் மிதமானவற்றுக்கு மேலே தெரியாதிருப்பது குறித்த கவலை. குருநாதரோடு இருந்த காலத்தில் இதைப் பற்றி ஓரிரு முறை அவருடன் விவாதித்தும் இருக்கிறேன். அவர் புன்னகை செய்வார். ‘மனத்தை ஏன் ஒரு குப்பை லாரி ஆக்கிக்கொள்ள விரும்புகிறாய்?’ என்று கேட்பார்.

‘முற்றிலும் பெருக்கித் துடைத்து காலியாக வைக்க வழியில்லாதபோது, குப்பை லாரியாக இருப்பதுதான் சௌகரியம்’ என்று பதில் சொல்வேன். ‘யாரும் கிட்டே நெருங்க அஞ்சுவார்கள் பாருங்கள்? கழிவு நீர் ஊர்தியாக இருப்பது இன்னும் வசதி.’

அந்த வருடம் குடகில் வரலாறு காணாத மழை பெய்தது. ஒன்பது நாள்களுக்கு இருப்பிடத்தைவிட்டு வெளியே வரக்கூட முடியாத அளவுக்கு மழை. பல இடங்களில் மலைச்சரிவு உண்டாகி பாதை தடைபட்டுப் போயிருந்தது. காவிரி ஊழிப் பெருவெள்ளமாகப் பெருக்கெடுத்துப் பாய்வதாகச் சொன்னார்கள். தொலைத் தொடர்புகள் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டு, வழக்கமாக ஆசிரமத்துக்கு வருகிறவர்கள்கூட வராத சூழலில் நாங்கள் கட்டாயமாகச் சிறை வைக்கப்பட்டதுபோல உணர்ந்தோம். ஆசிரமத்தில் இன்னொரு நாலைந்து தினங்களுக்கு உணவுப் பொருள்கள் இருந்தன. ஆனால் குளித்து, துணி மாற்றத்தான் வழியில்லாதிருந்தது. மாணவர்களிடம் மூன்று ஜோடி உடைகளுக்கு மேல் இருக்கக் கூடாது என்று குரு சொல்லியிருந்தார். அவரிடம் இரண்டு உடுப்புகள் மட்டுமே இருந்தன. அனைத்துமே நனைந்து ஈரமாகிவிட்டிருந்தன. ஒன்பது நாள்களும் அவை கொடியில் தொங்கிக்கொண்டுதான் இருந்தன. ஆனால் உலரவேயில்லை. இதனாலேயே மழை விட்ட நிமிடங்களில் வெளியே போக நினைத்தாலும் முடியாமல் இருந்தது. நாங்கள் நாளெல்லாம் கம்பளியைச் சுற்றிக்கொண்டு அறைகளில் சுருண்டு கிடக்கும்படியாகிப்போனது.

அன்றைக்கு நான் மதியம் தூங்கிவிடுவது என்று முடிவெடுத்து, இரண்டு குவளைகள் வெந்நீர் மட்டும் குடித்துவிட்டுப் படுத்திருந்தேன். உறக்கத்தின் விளிம்புக்குச் சென்றடைந்த நேரம், குரு என் அறைக்குள் நுழைந்தார். ‘விமல், நாம் வெளியே போகலாம்’ என்று சொன்னார்.

நான் சற்றுத் தயங்கினேன். ‘இதுவும் நனைந்துவிடும் என்று அஞ்சாதே. வேறு வாங்கித் தருகிறேன் வா’ என்று சொன்னார்.

‘அதுசரி, கடைகள் ஏது இப்போது?’

‘பார்த்துக்கொள்ளலாம் வா’ என்று சொன்னார்.

நாங்கள் இருவரும் ஆசிரமத்தை விட்டு வெளியே வந்து நடக்கத் தொடங்கினோம். நகரம் முற்றிலும் நனைந்து விரைத்துப் போயிருந்தது. வீடுகளின் சுவர்களெல்லாம் நிறம் அழிந்து பழுப்பாகத் தெரிந்தன. வழியெங்கும் அத்தனை மரங்களில் இருந்தும் ஈரம் சொட்டிக்கொண்டிருந்தது. தரையெல்லாம் இலைகள் உதிர்ந்திருந்தன. மரக்கிளைகள் விழுந்திருந்தன. மண் சரிவால் பாதை முழுதும் சேறாகி, சோற்றுருண்டைகள் போலச் சரளைக் கற்கள் செம்மை பூசிப் பரவிக் கிடந்தன. சாலையில் நடமாட்டம் வெகுவாகக் குறைந்திருந்தது. பல கடைகள் மூடியிருந்தன. மூடிய கடைகளின் வெளியே நாய்கள் படுத்திருந்தன. ஒன்றிரண்டு சைக்கிள்கள் தவிர போக்குவரத்து அறவே இல்லாது போயிருந்தது.

‘ஊரின் இந்த முகம் நன்றாக இருக்கிறது இல்லையா?’ என்று குரு கேட்டார்.

‘ஆம். ஆனால் இது போரடித்துவிடும். நகரின் அழகு மனிதர்களால் வருவது’ என்று சொன்னேன்.

‘அப்படியா நினைக்கிறாய்? இயற்கைக்கு இரண்டாவது இடம்தானா?’

‘இரண்டாவது இடம் சத்தத்துக்கு. அடுத்த இடம் குப்பைகளுக்கும் புழுதிக்கும்.’

‘அப்படியானால், ஆசிரமத்தை நாம் பெங்களூருக்கோ மைசூருக்கோ மாற்றினால் நீ வருத்தப்படமாட்டாய் என்று நினைக்கிறேன்.’

ஒரு கணம் யோசித்தேன். எனக்கு மடிகேரியை மிகவும் பிடித்துப் போயிருந்தது. அது நகரமில்லை. கிராமாந்திரம் என்றும் சொல்லிவிட முடியாது. கூப்பிடு தொலைவில் காவிரி ஊற்றெடுத்துப் பொங்கிக்கொண்டிருக்கும் இடம். மாலை ஐந்து மணியானால் எங்கும் யாரும் தென்படமாட்டார்கள். இருட்டத் தொடங்கும் நேரம் மலைப்பாதையில் மேலே ஏறிப்போவது ஓர் அனுபவம். திரும்ப முடியுமா என்று சந்தேகம் வரும் எல்லைவரை நடந்துகொண்டே இருந்துவிட்டுத் திரும்பி வருவது இன்னொரு பேரனுபவம். ஆனாலும் அந்த அமைதியும் சாந்நித்தியமும் அல்ல; பகலின் சந்தடியும் இணைவதாலேயே எனக்கு அந்த ஊரைப் பிடித்தது. மைசூரிலோ பெங்களூரிலோ சத்தத்துக்குக் குறைவிருக்காது என்பது உண்மைதான். ஆனால் சத்தம் சௌந்தர்யத்துடன் சேரும்போதல்லவா ரசனைக்குரியதாகிறது?

‘ஆம். ஓசைக்கும் இசைக்குமான இடைவெளி அதில் உள்ளது’ என்று குரு சொன்னார். எனக்குப் புரிந்துவிட்டது. அவர் அந்தப் பேச்சை எடுக்கக் காரணமே, பாதி தெரிந்தவனாக இருப்பது பற்றிய குற்ற உணர்ச்சியை நான் வெளிப்படுத்தியதுதான். நான் புன்னகை செய்தேன். ‘புரிந்தது குருஜி’ என்று சொன்னேன்.

‘விமல், பாதி அறிந்திருப்பது ஓர் அழகு. உலகில் பாதிக்கு உள்ள மதிப்பு முழுமைக்கு இல்லை.’

‘அப்படியா நினைக்கிறீர்கள்?’

‘பாதிக்கு உள்ள சௌகரியத்தில் பாதிகூட முழுமைக்குக் கிடையாது. மூச்சு முட்டத் தின்றுவிட்டு உன்னால் என்ன செய்ய முடியும்? உன்னை நான் அரை வயிற்று உணவுக்குப் பழக்கியிருக்கிறேன் என்பதை எண்ணிப் பார். உன் உற்சாகம் அதனால் வருவது.’

‘அட ஆமாம். ஆனால் நிறைகுடம்தான் தளும்பாது என்பார்கள்.’

‘தளும்பாதிருப்பதில் என்ன அழகு? ஒரு பெண் குடத்தில் தண்ணீர் எடுத்து வரும்போது உற்றுப் பார். குடம் தளும்பி நீர் வெளியே தெறித்தால், அந்தப் பெண் இன்னும் அழகாகத் தெரிவாள்.’

நான் பேச்சற்றுப் போனேன். முக்கால் மணி நேரம் நடந்து காவிரி பாயும் வெளிக்கு வந்து சேர்ந்தோம். விரிந்த பெரும் படுக்கையில் ஆடை அவிழ்வது தெரியாமல் புரளும் ஒரு பெண்ணைப்போல் புரண்டோடிக்கொண்டிருந்தது நதி. ஓட்டத்தின் சத்தம் உற்சாகமளித்தது. நின்றிருந்த மழை மீண்டும் தூறலாகத் தொடங்கியிருந்தது. ‘குருஜி, நாம் முற்றிலும் நனைந்தபடிதான் திரும்ப வேண்டும் என்று நினைக்கிறேன்’ என்று சொன்னேன்.

‘ஆம். ஈரத்துடன் போய்ச் சேருவோம்.’

‘குளிர் கொல்லப் போகிறது. படுத்தால் தூக்கம் வரப் போவதில்லை.’

‘ஆனால் களைப்பில் உனக்குப் பாதி உறக்கம் நிச்சயம் வந்துவிடும். உறக்கத்திலும் பாதிதான் அழகு’ என்று அவர் சொன்னார்.

மிருதுளாவின் தந்தையுடன் பேசிக்கொண்டிருந்தபோது எனக்கு ஏனோ இந்தச் சம்பவம்தான் திரும்பத் திரும்ப நினைவுக்கு வந்துகொண்டிருந்தது. உண்மையில் அவர்தான் பேசிக்கொண்டிருந்தார். நான் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருப்பதை மட்டுமே முக்கியமாக நினைத்தேன். பேசாத சொற்கள் உருவாக்கும் பிம்பம் மிகப் பெரிது. அறியாமையும் பூரண ஞானமும் ஒரு நூல் கண்டின் இருவேறு முனைகளல்லவா? ஆனாலும் கண்டாக உள்ளபோது இரண்டும் அருகருகேதான் குடியிருக்கும். நாத்திகத்துக்கும் ஆத்திகத்துக்கும் உள்ள நெருக்கம் போல. ஒரு நாத்திகனைக் காட்டிலும் கடவுளை அதிகம் நினைப்பவன் யார்? இழுத்து இழுத்து மனத்தில் நிறுத்தி அவனை இல்லை என்று நிறுவுவதற்கு எத்தனைப் பிரயத்தனம் செய்யவேண்டி இருக்கிறது. மனம் குவியாத ஒரு நாம ஜபத்துக்கு நிகரானது அது.

‘உங்களுக்கு என்ன தோன்றுகிறது? இந்தத் தேர்தல் என்னவாகும் என்று நினைக்கிறீர்கள்?’ என்று அவர் கேட்டார்.

நான் சிறிது நேரம் யோசித்துவிட்டுச் சொன்னேன். ‘முயற்சி பெரிதுதான். ஒருவேளை உங்கள் பெருங்கூட்டணி வெல்லலாம். ஆனால் ஆட்சி நீடிக்காது.’

‘அப்படியா?’

‘அப்படித்தான் தோன்றுகிறது. எதற்கும் அளந்து செலவு செய்யுங்கள்.’

அவர் சற்றுப் பதற்றமானது போலத் தோன்றியது. எழுந்து சென்று தண்ணீர் குடித்துவிட்டு வந்து மீண்டும் அமர்ந்தார். ‘என் பங்குக்கு நான் எழுபது கோடி செலவு செய்தாக வேண்டும். இதில் என் சொந்தப் பணம் மட்டும் நாற்பது கோடி. மிச்சம் உள்ளவை வசூலானவை’ என்று சொல்லி, ஒரு பெரிய பெட்டியைக் காட்டினார்.

‘திறந்து காட்டுவீர்களா?’ என்று சிரித்தபடி கேட்டேன். உண்மையில் நிறையப் பணம் என்பதை நான் அதுநாள் வரை கண்டதேயில்லை. அதன் அடர்த்தியையும் வாசனையையும் நுகர்ந்து பார்க்க வேண்டும் என்று தோன்றியது. ஒரு சன்னியாசி இதைக் கேட்பதில் எந்தப் பிரச்னையும் இல்லை. இத்தனைப் பணத்தில் எனக்கு ஒரு கட்டு கொடுங்கள் என்று நான் நிச்சயம் கேட்கப்போவதில்லை. அப்படிக் கேட்கக்கூடியவனாக என் தோற்றம் ஒருபோதும் என்னை முன்னிறுத்தாது என்பதை நானறிவேன்.

அவர் யோசிக்கவில்லை. அறைக்கதவை மட்டும் எழுந்து சென்று தாழிட்டுவிட்டு வந்து பெட்டியைத் திறந்தார். பெட்டி என்றால் பெரிய கள்ளிப் பெட்டி. கனமானது. அதை நகர்த்துவதற்குச் சிறிதாக நான்கு சக்கரங்கள் பொருத்தப்பட்டிருந்தன. பெரிய பூட்டுப் போட்டு பூட்டியிருந்தார். பீரோவைத் திறந்து ஒரு சாவியை எடுத்து வந்து அந்தப் பூட்டைத் திறந்தார். முப்பது கோடி ரூபாய். பெரும்பாலும் நூறு ரூபாய்க் கட்டுகளாகவே இருந்தன. ஒரு சில ஐம்பது ரூபாய்க் கட்டுகளும் இருக்கலாம். சுருணைத் துணி சொருகி வைத்தாற்போலப் பெட்டிக்குள் ஓர் ஒழுங்கில்லாமல் மொத்தமாகத் திணித்திருந்தார்கள். நான் பெட்டியை மூடினேன். அவரைப் பார்த்துப் புன்னகை செய்தேன்.

‘என்ன?’ என்று கேட்டார்.

‘செலவுக்கு இந்தப் பணம் போதும். உங்கள் சொந்தப் பணத்தை வெளியே எடுக்காதீர்கள்’ என்று சொன்னேன்.

‘அது எப்படி முடியும்? இதெல்லாம் செய்தே தீர வேண்டிய செலவுகள். சேர்த்து அப்புறம் எடுத்துவிடலாம் என்று வையுங்கள். ஆனாலும்...’

‘அப்படியானால் ஒன்று செய்யுங்கள். இந்தப் பணத்தை நான் எடுத்துப் போகிறேன். இது உங்கள் கைக்கு வரவேயில்லை என்று நினைத்துக்கொள்ளுங்கள். உங்கள் பணத்தைச் செலவு செய்து முடித்துவிட்டு, அதற்குமேல் தேவைப்பட்டால் என்னிடம் வந்து வாங்கிக்கொள்ளுங்கள்’ என்று சொன்னேன்.

‘நீங்களா?’

‘ஆம். எனக்குச் செலவு கிடையாது. இந்தத் தாள்களால் எனக்குப் எந்தப் பயனும் இல்லை. தேர்தலில் வென்று நீங்கள் நினைத்தபடி ஒரு கூட்டாட்சி அமைத்து ஒரு மாதத்தில் அது கலைந்தபின் ஒரு வெறுமை வரும் பாருங்கள், அப்போது என்னிடம் வந்தால் இதைக் கொடுத்து அந்த வெறுமையைப் போக்குவேன்’ என்று சிரித்துக்கொண்டே சொன்னேன்.

அந்தச் சந்திப்பு அவருக்குப் பெரிய உற்சாகத்தை அளித்திருக்கும் என்று நான் நினைக்கவில்லை. மிருதுளாவின் விருப்பத்தின் பேரில்தான் நான் அவள் வீட்டுக்குப் போனேன். வாசனையான பெண். வசதியானவளும்கூட. அன்பாக அழைக்கும்போது எனக்கு மறுக்கத் தோன்றாததால்தான் போனேன்.

ஆனால் நானே எதிர்பாராத சம்பவம் ஒன்று நடந்தது. அது அந்தத் தேர்தலும் அதன் முடிவுகளும். நான் நினைத்தபடிதான் அந்தத் தேர்தல் முடிவுகள் அமைந்தன. மிருதுளாவின் தந்தை ஆதரித்த கர்நாடக அரசியல்வாதி ஒருவர்தான் அந்தமுறை பிரதமரானார். ஆனால் ஆட்சி நீடிக்கவில்லை. மிகச் சில தினங்களில் அந்த ஆட்சி கவிழ்ந்துபோனது.

அதற்குச் சரியாக மூன்று மாதங்களுக்குப் பிறகு மிருதுளா என்னை மீண்டும் அவள் வீட்டுக்கு வரச்சொல்லி அழைத்தாள். ‘அப்பா மிகவும் மனம் உடைந்து போயிருக்கிறார். அவரை எப்படி மீட்பது என்றே தெரியவில்லை.’

‘நான் வரவில்லை. அவரை அழைத்து வா’ என்று சொன்னேன்.

பத்து நாள் இடைவெளியில் மிருதுளா அவளது தந்தையை என் ஆசிரமத்துக்கு அழைத்து வந்தாள். அவர் என்னிடம் அளித்து, மறந்தே போயிருந்த அந்தப் பணப்பெட்டியை எடுத்து அவர் முன்னால் வைத்தேன். ‘நிறைய செலவு செய்திருப்பீர்கள். எல்லாமே இழப்புத்தான். ஆனால் மற்றவர்களைக் காட்டிலும் உங்களுக்கு இழப்பின் சதவீதம் குறைவு’ என்று சொன்னேன்.

அவர் நம்பவில்லை. பெட்டியைத் திறந்து பார்த்து சிறிது நேரம் பேச்சற்றிருந்தார். பிறகு சொன்னார், ‘நீங்கள் ஒரு அபூர்வம். உங்கள் ரேகைகூட இதில் பட்டிருக்காது என்று தோன்றுகிறது.’

நான் புன்னகை செய்தேன்.

மறுவாரமே நான் அவரோடு டெல்லிக்குப் போகவேண்டி இருந்தது. அது எனக்கு முதல் விமானப் பயணம். அசோகா ஓட்டலில் எனக்கு அவர் அறை ஏற்பாடு செய்திருந்தார். அது எனக்கு முதல் நட்சத்திர விடுதி வாசம். அடுத்த மூன்று தினங்களில் எனக்கு ஏராளமான அரசியல் தலைவர்கள் அடுத்தடுத்து அறிமுகமானார்கள். எனக்குத் தெரியாத அரசியலை நான் அவர்களிடம் தெரிந்துகொள்ள ஆரம்பித்தேன்.

ஊர் திரும்பியபோது, என்னையறியாமல் நான் ஏழெட்டுப் பேரின் நிதி ஆலோசகராகியிருந்தேன்.

(தொடரும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

49. மருந்தாகுதல்

 

 

மூடிய கண்களின் மீது இரண்டு வெள்ளரித் துண்டுகளை நறுக்கி வைத்திருந்தேன். மானசீகத்தில் எனக்கு அந்தத் துண்டுகள் சஹஸ்ரஹார சக்கரமாக உருமாறி, மெல்லக் கீழிறங்கி வந்து சுழலுவதுபோல் இருந்தது. அதன் குளிர்ச்சி மெல்ல மெல்ல என் விழிகளுக்குள் இறங்கி தலைக்குள் செல்வதுபோல எண்ணிக்கொண்டேன். எண்ணிக்கொள்வதுதான். உண்மையில் எந்த உணர்ச்சியையும் உறுப்புகளுக்கு நம்மால் கடத்த முடிவதில்லை. அது அங்கங்கே தன்னியல்பாக உற்பத்தியாவது. கணப்பொழுது மூளையுடன் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்துவிட்டுத் தன் தேவைகளை உறுப்புகள் நிறைவேற்றிக்கொண்டுவிடுகின்றன. உணர்ச்சிகளை மூளையின் கட்டளையாக என்னால் எண்ணிப் பார்க்க முடிந்ததில்லை. உணர்வின் மிகத் தெளிவான எதிர்நிலையில் என் மனத்தையும் மூளையையும் நிறுத்தப் பழக்கிக்கொண்டிருந்தேன். துக்கத்தில் புன்னகை செய்வதற்கும் மகிழ்ச்சிக்குரிய தருணங்களில் அதில் மறைந்திருக்கும் பிசிறுகளை ஆராயவும் எனக்குப் பிடித்தது. எந்தத் தருணத்திலும் நான் என் உணர்வின் வசத்தில் விழமாட்டேன் என்று எப்போதும் நினைத்துக்கொள்வேன். அந்நினைவு ஒரு போர்வை. கதகதப்பானது. சுகமளிப்பது. அது எனக்கு அவசியம் என்று நினைத்தேன்.

நான் மைசூரில் இருந்தேன். மிருதுளாவின் தந்தைதான் என்னை அங்கே அழைத்து வந்திருந்தார். ‘நீங்கள் ஒருவரைச் சந்திக்க வேண்டும். மிகப்பெரிய மனிதர். ஆனால் வெளியே சொல்ல முடியாத ஒரு பெருங்கஷ்டத்தில் இருக்கிறார். அவரது துக்கம் உங்களால் தீருமானால் நான் சந்தோஷப்படுவேன்’ என்று சொன்னார்.

நகரத்தின் ஆகப்பெரிய நட்சத்திர விடுதியில் அறையெடுத்து என்னைத் தங்கவைத்திருந்தார். பளபளப்பான பித்தளைப் பூண் போட்ட தேக்கு மரக் கதவுகளும் பச்சைத் தரை விரிப்புகளும் படுத்தால் ஓரடி ஆழத்துக்குப் புதைத்துக்கொள்ளும் படுக்கையும் இதர வசதிகளுமாக அந்த விடுதி அமர்க்களமாக இருந்தது. ஜன்னல் திரைச் சீலைகளை விலக்கி வெளியே பார்த்தபோது, நீல நிறத்தில் ஒரு துணியை விரித்து உலர்த்தியதுபோல நீச்சல் குளம் தென்பட்டது. ஆண்களும் பெண்களும் நீந்திக் களித்துக்கொண்டிருந்தார்கள். குளக்கரையில் சாய்வு நாற்காலிகள் காலியாக இருந்தன. எனக்கு அங்கே போய் அமர்ந்துகொள்ளலாம் என்று தோன்றியது. அறையைப் பூட்டிக்கொண்டு குளக்கரைக்குச் சென்றேன். சிறிது நேரம் குளத்தைப் பார்த்தபடி படுத்திருந்துவிட்டு, சிப்பந்தியிடம் சொல்லி இரண்டு துண்டு வெள்ளரி எடுத்துவரச் சொல்லி கண் மீது வைத்துக்கொண்டு மீண்டும் சாய்ந்து படுத்தேன்.

மிருதுளாவின் தந்தைக்கு நான் சூரிய நமஸ்காரம் செய்யக் கற்றுக்கொடுத்திருந்தேன். தவிரவும் பிராணாயாமம். மிக எளிய இந்த இரு பயிற்சிகளால் அவருக்கு இருந்த சைனஸ் தொந்தரவும் முதுகு வலியும் அவரைவிட்டு நீங்கியிருந்தன. அது ஒரு சுவாரசியமான சம்பவம். ஒருநாள் தொடர்ந்து ஏழெட்டு வியாதிகளைப் பற்றியும் அவற்றால் தான் எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதையும் சொல்லி மிகவும் வருந்திக்கொண்டிருந்தார்.

‘எங்கே உங்கள் கையை நீட்டுங்கள்?’ என்று சொல்லி நாடி பிடித்துச் சில விநாடிகள் பார்த்தேன். இந்த நாடி பார்ப்பது ஒரு கலை. நாடி ஜோதிடம் போன்றதல்ல. இது வேறு. இதயத்தின் சுருங்கி விரியும் தன்மையைப் பொறுத்து ஒருவனின் நாடி நடை அமையும். இதயத்தின் துடிப்பும் நாடியின் துடிப்பும் பெரும்பாலும் ஒத்திருக்கும். இதில் என்னவாவது சிக்கல் இருக்குமானால் நாடி வழியே இதயம் அதை வெளிப்படுத்தும். நாடியை மணிக்கட்டில் பார்க்கலாம். கண்டத்தில் பார்க்கலாம். காலின் பெருவிரல், கணுக்காலில்கூடப் பார்க்கலாம். என் குருநாதர் கணுக்காலில்தான் எப்போதும் நாடி பிடித்துப் பார்ப்பார். அது அத்தனை உத்தமம் இல்லை என்றாலும் அவருக்கு அதுதான் சௌகரியமாக இருக்கிறது என்று சொல்லுவார்.

‘விமல், நல்ல வைத்தியன் என்றால் நாடி ஒன்று போதும். சரீரத்தில் சிலேட்சுமம் ஒரு பங்கு, பித்தம் இரண்டு பங்கு, வாதம் நாலு பங்கு இருந்தால் ரோக சாத்தியம் குறைவு. இதில் மாற்றம் காணும்போது சிகிச்சை அவசியமாகிவிடும்’ என்று என்பார்.

எனக்கு அவரிடம் வைத்திய சாஸ்திரம் பயிலப் பெரிய விருப்பம் இல்லை. ஆனால் அவசரத்துக்கு உதவும் என்று ஒரு சிலவற்றை மட்டும் கற்றிருந்தேன். அங்காகர்ஷண நாசகாரி. ஆம்ல நாசகாரி. உதரவாத ஹரகாரி. கபஹரகாரி. ஸ்மிருதிரோதகாரி. சுரஹரகாரி. பூதி நாசகாரி. மூத்திர வர்த்தனகாரி. விஷநாசகாரி. எளிய வியாதிகளுக்கான எளிய தீர்வுகள். அவர் எனக்கு மருந்துகளை அறிமுகப்படுத்தியதேயில்லை. எல்லா வியாதிகளுக்கும் மூச்சில் உள்ளது தீர்வு என்று சொல்வார். ஆசிரமத்தில் யாருக்கு என்ன ரோகமென்றாலும் கூப்பிட்டு உட்காரவைத்துக் கணுக்காலில் நாடி பார்த்துவிட்டு மூச்சுப் பயிற்சியைத்தான் ஆரம்பிக்க வைப்பார். வியாதிக்கேற்ற பயிற்சி. ஒழுங்காகச் செய்யும்வரை விடவே மாட்டார். ஆனால் சொல்லிவைத்தாற்போல் மூன்று நான்கு தினங்களில் எப்பேர்ப்பட்ட நோயும் குணம் கண்டுவிடும்.

‘குருஜி, ஞானமார்க்கத்தில் மருத்துவத்துக்கு இருக்கிற இடம் ஏன் மற்றக் கலைகளுக்கு இருப்பதில்லை?’

‘ஞானம் என்பது பிரம்மத்தை அறிவது என்றா நினைக்கிறாய்? என்னைப் பொறுத்தவரை அது உடலை அறிவது. உடல் அழியும்போது பிரம்மம் அழிகிறது.’

‘ஆ, அகம் பிரம்மம்!’

‘அதுவல்ல. நீயே பிரம்மம், உனக்குள் பிரம்மம் என்பதெல்லாம் தத்துவம். நான் சொல்வது பிரம்மம் என்பது உன் புனைபெயர்.’

நான் அவரை இறுக்கிப் பிடித்துக்கொண்டதற்கு இதுதான் காரணம். தத்துவங்களுக்கு எதிர்நிலையில் ஒரு ஞான மையத்தை நிறுவும் முயற்சியில் அவர் இருந்தார். அதுதான் என்னை ஈர்த்தது. அவரது நூற்றுக்கணக்கான கடவுள்களை ஒருநாள் எனக்குக் காட்டித் தந்தபோது, அவர் மீதான பிரமிப்பும் மரியாதையும் மிகுந்தது. மனிதர்களின் விதவிதமான ரேகைகளைப் போலவே ஒவ்வொருவரின் சுவாச ஓட்டமும் வேறு வேறாக இருக்கும் என்று அவர் சொன்னார். மூச்சுக்காற்றின் போக்குவரத்தை அவர் கடவுளாகக் கருதினார். அதன் வேகம், அதன் இயல்பு, அதன் மணம், ருசி மாறுகிறபோது அவற்றை எண்களில் குறித்து வேறு வேறு கடவுள்களாகச் சொன்னார். எப்பேர்ப்பட்ட மனிதர்!

‘நீ இன்னும் சற்று உள்ளே வரலாம். உனக்கு வைத்திய சாஸ்திரம் எளிதாக அப்பியாசமாகும்’ என்று ஒருநாள் என்னிடம் சொன்னார்.

‘எனக்கு டாக்டராகும் விருப்பமில்லை குருஜி. பத்து ரூபாய் செலவிட்டால் ஒரு நல்ல டாக்டரும் சிறந்த மருந்துகளும் கிடைத்துவிடும் என்றால் அது என்ன பெரிய கலை?’

‘அப்படியா நினைக்கிறாய்?’ என்று புன்னகை செய்தவர், அப்போதுதான் எனக்கு இயேசுநாதரின் கதையைச் சொன்னார். ‘நீ பைபிள் படிக்க வேண்டும் விமல். மனித குலத்துக்கு எந்நாளும் செய்துகொண்டே இருப்பதற்கு நூறாயிரம் வைத்தியங்களின் தேவை இருந்தபடியே இருக்கிறது. தத்துவங்களும் தருக்கங்களும் தீர்க்காத சந்தேகங்களை ஒரு எளிய ஜலதோஷ நிவாரணி தீர்த்து வைத்துவிடும்.’

‘உண்மையாகவா?’

‘ஆம். உன் வாய்ச்சாலம் உனக்குக் கூட்டத்தைக் கட்டிப்போட்டு உட்காரவைக்கும். அதில் எனக்கு சந்தேகமில்லை. ஆனால் ஒரு கூட்டம் உன்னை நெருங்கிவர உன்னிடம் ஒரு மிட்டாயாவது இருக்க வேண்டியது அவசியம்.’

‘இயேசுநாதரின் மிட்டாய்!’ என்றேன் சிரித்தபடி.

அரைக் கணம் யோசித்துவிட்டு அவர் சொன்னார். ‘ஆம். அவர் ஒரு நல்ல மிட்டாய் வியாபாரி.’

நான் ஒரு சில மிட்டாய்களை எடுத்துக்கொண்டுதான் மைசூருக்கு வந்திருந்தேன். மிருதுளாவின் தந்தை குறிப்பிட்ட பிரமுகர், மரணத்தின் வெளி வாசலில் நின்றுகொண்டிருப்பதாகச் செய்தித் தாள்களில்கூட வர ஆரம்பித்திருந்தது. பழம்பெரும் அரசியல்வாதி. பழம்பெரும் திரைப்பட நடிகர். மூன்றோ அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையிலோ திருமணங்கள் புரிந்துகொண்டு குடும்பத்தைப் பல்கலைக் கழகமாக்கியிருந்தவர். அவருக்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் இருந்தது எனக்குத் தெரியும். முன்பொரு காலத்தில், அவர் திருவிடந்தைக்குப் படப்பிடிப்புக்கு வந்தபோது நானேகூட அவரிடம் ஆட்டோகிராஃப் வாங்கியிருக்கிறேன். ஆனால் அவர் அரசியலுக்குப் போனதெல்லாம் எனக்குத் தெரியாது.

மிருதுளாவின் தந்தை சொன்னார், ‘அவர் எங்களுக்கு முக்கியம். அவர் முக்கியம் என்றால் அவர் உயிருடன் இருப்பது. குறைந்தது இன்னும் சில ஆண்டுகளுக்கு.’

நான் யோசித்தேன். தவறான எந்த நம்பிக்கையையும் இந்த மனிதருக்குத் தந்துவிடக் கூடாது என்று தோன்றியது. ‘ஐயா, நான் வைத்தியன் அல்ல. எனக்குத் தெரிந்தவையெல்லாம் பிராண சக்தியைக் கட்டுப்படுத்துவதில் உள்ள சில முறைகள் மட்டுமே. நான் முற்றிலும் பயின்றவனல்ல. அது என் துறையுமல்ல.’

‘அதனாலென்ன? அவரை கவனித்துக்கொள்ளப் பல மருத்துவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் செய்வதை அவர்கள் செய்யட்டும். நீங்கள் செய்வதை நீங்கள் செய்யுங்கள்’ என்று சொன்னார். ஒரு முதுகுவலிப் பிரச்னை தீர்ந்ததுதான் இந்த மனிதரை என்பால் எத்தனைத் தீவிர நம்பிக்கை கொள்ள வைத்துவிட்டது! ஆனால் எனக்கென்னவோ, அவர் வியாதி சொஸ்தத்துக்காக மட்டும் என்னை அந்தப் பழம்பெரும் அரசியல்வாதியிடம் அழைத்துப் போக நினைப்பதாகத் தோன்றவில்லை. வேறு ஏதோ காரணம் இருக்க வேண்டும். பார்க்கலாம் என்று நினைத்துக்கொண்டேன்.

பிற்பகல் மூன்று மணிக்கு எங்களுக்குக் கார் வந்தது. நாங்கள் அதில் ஏறிப் புறப்பட்டோம். மைசூரைத் தாண்டி கார் தெற்கே பெங்களூர் செல்லும் சாலையில் போய்க்கொண்டிருந்தது.

‘எங்கே இருக்கிறார் அவர்?’ என்று கேட்டேன்.

‘வீடு மைசூரில்தான் உள்ளது. ஆனால் இப்போது சிலகாலமாக ஸ்ரீரங்கப்பட்டணத்தில் வசிக்கிறார். அங்கே அவருக்கு இன்னொரு வீடு உண்டு.’

‘தீவிர அரசியலில் இப்போது அவர் இல்லை அல்லவா?’

‘ஆம். ஆனால் இன்னமும் அவர் ஒரு தீர்மானிக்கும் சக்தியாகத்தான் இருக்கிறார். எந்த ஆட்சி இங்கே வந்தாலும் அவரைக் கேட்காமல் ஒன்றும் நடக்காது.’

‘அப்படியா?’

அவர் இன்னும் என்னென்னவோ சொன்னார். அந்த மனிதரின் அந்தரங்கக் கதைகள். அவருக்கு இருக்கும் வங்கிக் கணக்குகள். அயல் தேசத்துத் தொடர்புகள். இந்தியாவில் அவரை மட்டுமே அறிந்த சில வெளிநாட்டு ஆயுதக் குழுக்களைப் பற்றிக் கேள்விப்பட்டபோது எனக்கு வியப்பாக இருந்தது.

‘அதெல்லாமும் உண்டா?’ என்று கேட்டேன்.

‘நீங்கள் நேரில் பார்த்துப் பேசுங்கள். உங்களுக்கே அனைத்தும் புரியும்’ என்று சொன்னார்.

நாங்கள் ஸ்ரீரங்கப்பட்டணத்துக்குப் போய்ச் சேர்ந்தபோது வெளிச்சம் சாயத் தொடங்கிவிட்டிருந்தது. அவரது பங்களா ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஒரு பெரிய மாந்தோப்புக்குள் இருந்தது. காம்பவுண்டு சுவருக்கு வெளியே நின்று பார்த்தால் உள்ளே ஒரு பங்களா இருப்பதே தெரியாது. தோப்புக்குள் சுமார் எழுநூறு மீட்டர் தூரம் பயணம் செய்த பிறகுதான் வீடு கண்ணில் படும்.

புராதனமான பங்களா. முன்புறம் கார்கள் நிறுத்துவதற்குப் புதிதாகப் பெரிய போர்டிகோ அமைத்திருந்தார்கள். நான் வண்டியைவிட்டு இறங்கியபோது அங்கு ஏழெட்டு கார்கள் நின்றுகொண்டிருந்தன. கட்டிப்போடப்பட்ட நான்கு பெரிய நாய்கள் இருந்தன. ஏராளமான வேலைக்காரர்கள் சுற்றிக்கொண்டே இருந்தார்கள். எங்களை உள்ளே அழைத்துச் சென்று வரவேற்பரையில் அமரவைத்தவர், ஐந்து நிமிடங்கள் காத்திருக்கும்படிச் சொல்லிவிட்டு உள்ளே போனார். அங்கிருந்த பத்திரிகை ஒன்றை எடுத்துப் புரட்ட ஆரம்பித்தேன்.

யாரோ வெளியே வரும் சத்தம் கேட்டது. நான் பத்திரிகையில் இருந்து கண்ணை விலக்கிப் பார்த்தபோது முதலில் என்னால் அடையாளம் காண முடியவில்லை. ஆனால் சில விநாடிகளில் கண்டுபிடித்துவிட்டேன்.

வினய்யைப் பார்த்து எத்தனை வருடங்களாகிவிட்டன!

(தொடரும்)

http://www.dinamani.com/junction

Link to comment
Share on other sites

50. நதியில் ஒரு பரிசல்

 

 

எனக்கு மிக நன்றாக நினைவிருக்கிறது. அன்றைக்கு வினய்க்குப் பிறந்த நாள். நாற்பத்து நான்கு முடிந்து நாற்பத்து ஐந்தாவது வயதில் அவன் அடியெடுத்து வைத்திருந்தான். ஊரில் இருந்திருந்தால் அம்மா ஒரு பருப்பும் பாயசமும் கூடுதலாகச் சமைத்திருப்பாள். கையில் பணம் இருக்கிறதோ இல்லையோ. யாருக்குப் பிறந்த நாள் வந்தாலும் அப்பா எப்படியாவது ஒரு சட்டைக்கு ஏற்பாடு செய்துவிடுவார். எளிய தருணங்கள். எளிய சந்தோஷங்கள். ஆனால் அந்த வாழ்க்கை இப்போதில்லை. இனி என்றைக்குமே இல்லை என்று சொல்லிக்கொண்டேன். எனக்கு அதில் வருத்தமெல்லாம் கிடையாது. ஆனால் இம்மாதிரிச் சந்தர்ப்பங்களில் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடிந்ததில்லை.

அந்த ஸ்ரீரங்கப்பட்டணத்து அரசியல்வாதியின் வீட்டு வரவேற்பறையில் வினய்யைப் பார்த்தபோது எனக்கு வேறொன்றும் முதலில் செய்யத் தோன்றவில்லை. சட்டென்று எழுந்து சென்று அவன் கையைப் பிடித்துக் குலுக்கி, ‘பிறந்த நாள் வாழ்த்துகள்’ என்று சொன்னேன். அவன் என்னை அடையாளம் கண்டுகொள்ளச் சில விநாடிகள் தேவைப்பட்டன. என் கண்களை வெகுநேரம் உற்றுப் பார்த்துக்கொண்டே இருந்தான். பிறகு என் வலது தோள்பட்டையை அழுத்திப் பிடித்தான். அந்த அழுத்தம் லேசாக வலிக்கும் அளவுக்கு இருந்தது. நான் பொறுத்துக்கொண்டேன். புன்னகை மாறாமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

காலம் அவன் முகத்தை ஒடுங்கவைத்திருந்தது. கன்னங்கள் இரண்டும் டொக்காகியிருந்தன. பிதுங்கி விழுந்துவிடுவதுபோலக் கண்கள் திரண்டு வெளியே தெரிய, முகம் அடர்ந்த தாடியில் பாதி அதற்குள்ளாகவே வெளுத்திருந்தது. அவன் தலை வாருவதை நிறுத்திப் பல ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும். நாலைந்து சடைகள் உருவாகியிருந்தன. தோளுக்குக் கீழே முடி புரண்டுகொண்டிருந்தது. எலும்பு புடைத்த வெற்று மார்பும் அரையில் சிறியதொரு அழுக்கேறிய காவித் துணியும் அணிந்திருந்தான்.

‘எப்படி இருக்கே?’ என்று கேட்டேன்.

என்ன நினைத்தானோ, சட்டென்று என் உச்சந்தலையில் கை வைத்தான். மிருதுளாவின் தந்தைக்கு அங்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை. எழுந்து என்னருகே வந்து, ‘சுவாமி இவரை உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்டார்.

நான் சிரித்துவிட்டு, ‘இவரைத் தெரியாது. ஆனால் இவனைத் தெரியும்’ என்று சொன்னேன். நாங்கள் ஒரே குருகுலத்தில் படித்திருப்போம் என்று நினைத்திருப்பார்போல. தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கருதி நகர்ந்து சென்று அமர்ந்துவிட்டார்.

‘உள்ளே பெரியவர் அழைத்தால் நீங்கள் போய்ப் பேசிக்கொண்டிருங்கள். நான் சிறிது நேரத்தில் வருகிறேன்’ என்று சொல்லிவிட்டு அவன் கையைப் பிடித்து, ‘வா’ என்று அழைத்துக்கொண்டு வேகமாக அங்கிருந்து வெளியேறினேன்.

அரை மணி நேரம் நடந்து திரிவேணி சங்கமத்தை நாங்கள் அடைந்தோம். காவிரியில் பரிசல்கள் நிறையப் போய்க்கொண்டிருந்தன. சுற்றுலாப் பயணிகள் குடும்பம் குடும்பமாகப் பரிசல்களில் ஏறிச் சுற்றிக்கொண்டிருந்தார்கள். நான் வினய்யைப் பார்த்துக் கேட்டேன், ‘கரையில் அமர்ந்து பேசலாமா? பரிசலில் போய்ப் பேசலாமா?’

அவன் சில விநாடிகள் அமைதியாக இருந்துவிட்டு, ‘என்ன பேச வேண்டும்?’ என்று கேட்டான்.

நியாயமான கேள்விதான். என்ன இருக்கிறது பேசுவதற்கு? இருபத்து ஐந்து வருடங்களுக்கு முன்பு அவன் எனக்கு அண்ணனாக இருந்தான். அதற்கும் பத்தாண்டுகளுக்கு முன்பு உலகில் என்னைக் காட்டிலும் ஒரு பாசம் மிகுந்த தம்பி யாரும் இருந்திருக்கமாட்டார்கள். நான்கு சகோதரர்கள். ஒரு தாய் தந்தை. ஒரு தாய் மாமன். ஒரு வீடு. எண்ணிப் புல்லரித்துப்போக வண்ணமயமான நினைவுகள் அந்த வீடு சார்ந்து எனக்கு இல்லை என்பது உண்மையே. ஆனால் எண்ணாதிருந்ததில்லை. எனக்கு ஒரு தீர்மானம் இருந்தது. வினய்யோ, அண்ணாவோ, வினோத்தோ. வாழ்க்கை எங்கே தள்ளிக்கொண்டுபோய், என்னவாக ஆக்கிவிட்டிருந்தாலும் திருவிடந்தை வீட்டில் இருந்த நாள்களை எண்ணிப் பாராதிருக்க முடியாது. நதிகளுக்குப் புறப்பட்ட இடம் தெரியாதிருக்கலாம். மனிதர்களுக்கல்ல. அவர்கள் ஞானிகளேயானாலும் சரி.

‘நீ வீட்டைவிட்டுப் போய்டுவேன்னு எனக்குத் தெரியும்டா. ஆனா இப்படி ஆவேன்னு நினைக்கலை. உன்னை ஒரு மடாதிபதியா கற்பனை பண்ணி வெச்சிருந்தேன். கெடுத்துட்டே’ என்று சொல்லிச் சிரித்தேன்.

அவன் அமைதியாக இருந்தான்.

‘'பேசலாம், தப்பில்லை’ என்று சொன்னேன். ஆனால் அவன் அப்போது பேசவில்லை. திரும்பத் திரும்ப நான் அவன் எங்கே போனான், எப்படி மாறினான் என்று கேட்டுக்கொண்டே இருந்தேன். பல்வேறு விதங்களில் அவன் வாயைப் பிடுங்க முயற்சி செய்தேன் என்று சொல்வதே சரி. என்னுடைய எந்தக் கேள்விக்கும் அவன் பதிலே சொல்லாதிருந்ததில் சற்று சலிப்புற்று, ‘அம்மா இருக்காளா போயிட்டாளான்னாவது தெரியுமா? ஏன்னா எனக்கு அதுவும் தெரியாது’ என்று சொன்னேன்.

‘எனக்கும் தெரியாது’ என்று அப்போதுதான் அவன் வாய் திறந்தான். இது உண்மையிலேயே எனக்கு அச்சமூட்டக்கூடியதாக இருந்தது.

‘ஏண்டா?’

‘ஏன்னா?’

‘ஊருக்கு நீ அப்பறம் போகவேயில்லியா?’

‘நீ மட்டும் போனியா?’

‘ஆமா. நானும் போகலை. என்னவோ போகத் தோணலை. ஆனா நடுல கேசவன் மாமாவ ரெண்டொருதரம் பாத்திருக்கேன். நான் இருக்கற மடிகேரிக்கு அவர் வந்திருக்கார்.’

அவன் என்னை ஏற இறங்கப் பார்த்தான். ‘நீ மடிகேரில இருக்கியா?’

‘ஆமா. சின்னதா ஒரு ஆசிரமம். பதினஞ்சு பேர் ஸ்டூடன்ஸ் இருக்கா. வந்து போறவா அம்பது நூறு பேர் இருப்பா. வாழ்க்கை வேறயாயிடுத்து.’

இப்போது அவன் சிரித்தான். ‘ஆனா அதே பாப்பார பாஷை’ என்று சொன்னான்.

‘ஆமாமா. அது போகலை. ஆனா தேவைப்பட்டா மாத்திப்பேன்.’

அவன் சட்டென்று சொன்னான், ‘மொழிதான் உன் ஆயுதம்னு அண்ணா சொன்னான்.’

அதிர்ந்து போனேன். ‘அண்ணா சொன்னானா? எப்போ?’

‘ஸ்ரீரங்கத்துக்குப் போயிட்டு அங்கேருந்து நீ அவனைத் தேடி குத்தாலத்துக்குப் போனியாமே? பாக்க முடியாம திரும்பினவன், வீட்டுக்குப் போகாம அப்படியே திரியப் போயிட்டியாமே?’

எனக்கு தூக்கிவாரிப் போட்டுவிட்டது. சட்டென்று அவனை இழுத்துக்கொண்டுபோய் ஒரு பரிசலில் ஏற்றினேன். நானும் ஏறிக்கொண்டு பரிசல்காரனை எடுக்கச் சொன்னேன்.

‘எதுக்கு இதெல்லாம்?’ என்று அவன் கேட்டான்.

‘இருக்கட்டும். எனக்குப் பேசணும். நீ பாதில போயிடக் கூடாது பாரு. அதுக்குன்னு நினைச்சிக்கோ. சொல்லு. அண்ணாவ எங்க பாத்தே? எப்ப பாத்தே?’

‘ரெண்டு தடவை பாத்தேன் விமல். முதல் தடவை பாத்தப்போதான், நான் போயிடுறதுன்னு முடிவு பண்ணி காஞ்சீபுரம் போகாம வாலாஜாபாத்ல இறங்கி குண்டூருக்குப் போனேன்.’

‘ஓ...! அவனை அப்பவே பாத்துட்டியா நீ?’

‘ஆமா. வாலாஜாபாத் பஸ் ஸ்டாண்ட்ல இருந்தான். அன்னிக்கு என்னைப் பார்த்து அவன் சிரிச்சான் பாரு ஒரு சிரிப்பு.. சாகற வரைக்கும் மறக்காது.’

என் ஆர்வம் கட்டுக்கடங்காமல் போனது. வினய்யின் கைகளைப் பிடித்துக்கொண்டு கெஞ்சினேன். ‘தயவுசெஞ்சி சொல்லு. அவனை எப்படிப் பார்த்தே? என்ன சொன்னான்?’

அண்ணாவைப் பார்த்த கதையை வினய் எனக்குச் சொல்ல ஆரம்பித்தான்.

அன்றைக்கு அவன் பாடசாலைக்குப் போகிற முடிவோடுதான் பஸ் ஏறியிருந்தான். எங்களுக்கெல்லாம் தெரியாமல் பஸ் ஸ்டாண்டில் அவன் பத்மா மாமியின் மகள் சித்ராவை வேறு பார்த்திருக்கிறான். பஸ் ஏற்றிவிடப்போன அப்பாவும் மாமாவும் அருகே இல்லாதிருந்தால், கண்டிப்பாக அவளிடம் அவன் மனம் விட்டுப் பேசியிருப்பான்.

‘நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைக்கறேன். முடிஞ்சா ஆத்துல, அம்மாகிட்டே சொல்லி வை. அடுத்த தடவை நான் ஊருக்கு வரும்போது ஒரு உத்தியோகத்த தேடிண்டுதான் வருவேன். வந்ததும் மொத காரியம் உங்காத்துக்கு வந்து பொண்ணு கேக்கறதுதான்.’

மனத்துக்குள் சொல்லிப் பார்த்த வரிகளை நேரில் அவனால் சொல்ல முடியாது போய்விட்டது. அதனாலென்ன? அவனது பார்வை சித்ராவுக்குப் புரிந்தது. அவள் சற்று வெட்கப்பட்டாள். அதே சமயம் வேத வித்தாக ஊருக்குத் திரும்பி வந்தவன், இப்படி சொற்ப தினங்களில் திரும்பிப் போகிறானே என்று கவலைப்படவும் செய்தாள். பிரியத்தின் கனத்துக்குச் சிறிது துக்கத்தின் பூச்சு அவசியம் என்று அவனுக்குத் தோன்றியது. வலிக்கத்தான் செய்யும். ஆனாலும் நன்றாக இருக்கும்.

வழியெல்லாம் அவன் சித்ராவைப் பற்றியே நினைத்துக்கொண்டு போனான். எப்படியாவது ஸ்ரீரங்கம் கோஷ்டியில் இடம் பிடித்துவிட வேண்டும் என்பது அவனது அப்போதைய கனவாக இருந்தது. வரதராஜரைக் காட்டிலும் ரங்கநாதர் தனது சேவாகால கோஷ்டியினரை சௌக்கியமாக வைத்துக்கொள்கிறார். வேளைக்குச் சாப்பாடும் செலவுக்குப் பணமும் பெரிய விஷயமல்ல. அது எங்கும் கிடைக்கும், எப்படியாவது கிடைத்துவிடும். ஆனால் ஸ்ரீரங்கத்தில் வாழ்க்கையை ஆரம்பிப்பதே எதிர்காலத்துக்கு உகந்தது என்று வினய் நினைத்தான்.

பஸ் வாலாஜாபாத்தை நெருங்கிக்கொண்டிருந்தது. சட்டென்று அவனுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. காஞ்சீபுரம் போய் இறங்கியதும் சித்ரா வீட்டுத் தொலைபேசிக்கு அழைத்தால் என்ன? இது என்னவாவது விபரீதத்தில் கொண்டு விடுமா என்று ஒரு கணம் யோசித்தான். என்ன பெரிய விபரீதம்? மிஞ்சிப் போனால் பத்மா மாமி இங்கே எங்கள் வீட்டுக்கு வந்து அம்மாவிடம் விவரத்தைச் சொல்லுவாள். ‘உங்க பிள்ளை என்னத்துக்கு எம்பொண்ணுக்கு போன் பண்ணிப் பேசணும்னு கேக்கறேன்? உங்காத்துக்கு எதாவது தகவல் சொல்லிவிடணும்னா உங்களுக்கே பேச வேண்டியதுதானே? இல்லேன்னா கோயிலுக்குப் பண்ணி கேசவன்ட்ட பேசிட்டுப் போறது. இதெல்லாம் நன்னால்ல பாத்துக்கோங்கோ.’

அந்தவிதமாகவேனும் அம்மாவுக்கு அரசல் புரசலாக விஷயத்தைத் தெரியப்படுத்திவிட்டால் நல்லது என்று அவன் நினைத்தான். கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கும். ஆனால் என்ன பெரிய கொலைபாதகம்? இந்த வயதில் வராத இச்சை வேறெப்போது வரும்? அறியாத வயதில் அவன் பீடி குடித்திருக்கிறான். ‘விமல், உனக்குத் தெரியாது. நான் ஒரு சில சமயம் கடா மார்க் சாராயம்கூடக் குடித்துப் பார்த்திருக்கிறேன்!’ என்று சொன்னான்.

‘அப்படியா?’

‘கஞ்சா குடித்திருக்கிறேன். அபின் உண்டிருக்கிறேன். வேலி முட்டி தெரியுமா வேலி முட்டி?’

‘இல்லை. தெரியாது.’

‘இந்த உலகில் நான் இறங்கிப் பார்க்காத பாதாளம் என்று எதுவுமில்லை. ஆறு முறை விலைப் பெண்களைக்கூடத் தொட்டுப் பார்த்திருக்கிறேன். கொலை மட்டும் செய்யவில்லை.’

என்னால் அவன் சொன்னவற்றையெல்லாம் நம்பவே முடியவில்லை. வாழ்க்கை எத்தனை அழகாகத் திட்டமிடுகிறது. மனிதர்களின் திட்டங்களை எவ்வளவு அனாயாசமாக மாற்றிவிடுகிறது. வாழ்வென்பது வகுப்பெடுக்கும் ஆசிரியரல்ல. தேர்வுத் தாள் திருத்தும் ஆசிரியர். காஞ்சீபுரத்து அண்ணங்கராசாரியார் மடத்துக்குப் போய்ச் சேர்ந்த பின்பு அந்த வினய் அப்படியே அடியோடு மாறிவிட்டிருக்கிறான். புதிய சூழல். புதிய நட்புகள். புதிய பரிபாஷைகள். திருமண் ஸ்ரீசூர்ணம். கோயில், பெருமாள், பிரசாதம், பாராயணம். வேறொரு வாழ்க்கை. வேறொரு சூழல். அவனுக்கு அதுவும் பிடித்துப்போனது. அதில்தான் இனி தனது பயணம் என்று எண்ணியிருந்தான். ஒரு உத்தியோகம் சம்பாதித்துக்கொண்டு ஊருக்கு வந்து சித்ராவைக் கலியாணம் செய்துகொண்டு, ஒரு பெண், ஒரு பிள்ளை பெற்றுக்கொள்வது வரை கனவு கண்டு சேமித்து வைத்திருந்தான்.

துரதிருஷம் என்று சொல்வதா? ஆனால் நிச்சயமாக அது அதிர்ஷ்டமாக இருக்க முடியாது. அன்றைக்கு அவன் போய்க்கொண்டிருந்த பேருந்து வாலாஜாபாத் பஸ் ஸ்டாண்டில் நின்றபோது, அங்கே அண்ணா குத்துக்காலிட்டு அமர்ந்துகொண்டிருக்கக் கண்டான். முதலில் அது அண்ணாதானா என்று அவனுக்குச் சந்தேகமாக இருந்தது. ஜன்னல் வழியே தலையை முழுதும் வெளியே நீட்டி, ‘விஜய்...’ என்று கத்தியிருக்கிறான்.

ஒரு பிச்சைக்காரனின் தோற்றத்தில் பரட்டைத் தலையும் அழுக்கு வேட்டியும் குச்சிக் குச்சியாக தாடியும் ஒரு பைத்தியக்காரனின் சிரிப்புமாக அவன் அமர்ந்திருந்தான். வினய்யைப் பார்த்து சிரித்தானே தவிர அவன் எழுந்திருக்கவில்லை. அருகே ஓடி வரவில்லை. ஒருவேளை அவன் பார்க்கவேயில்லையோ என்ற சந்தேகத்தில் வினய் மீண்டும் ஜன்னல் வழியே தலையை நீட்டி விஜய் விஜய் என்று கத்தியிருக்கிறான். அப்போதும் அவன் அசையாமல் இருந்த இடத்திலேயே அமர்ந்து சிரித்துக்கொண்டிருந்ததால்தான் வினய் பேருந்தைவிட்டு இறங்க வேண்டியதானது.

(தொடரும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

51. ஒலித்த குரல்

 

 

பேருந்தைவிட்டு வழியில் இறங்கியிருந்ததை வினய் மறந்தே போனான். அதிர்ச்சியும் திகைப்புமாக அண்ணாவை நோக்கி ஓடினான். அவன் நெருங்கி வரும்வரை அண்ணா குத்துக்காலிட்டு அமர்ந்த நிலையிலேயே சிரித்துக்கொண்டிருந்தது வினய்க்கு வேறுவிதமான சந்தேகத்தை எழுப்பியிருந்தது. ஒருவேளை அவன் பைத்தியமாகிவிட்டானோ?

‘டேய், இங்கயாடா இருக்கே? என்னடா பண்ற இங்கே?’ என்று வினய் அவனைப் பிடித்து உலுக்கியதற்கும் அவன் சிரிப்பைத்தான் பதிலாகத் தந்தான்.

‘கேக்கறேனே, பதில் சொல்லுடா! இங்க என்ன பண்றே?’

‘நீ என்ன பண்ணப்போறியோ அதான்’ என்று அண்ணா பதில் சொன்னான். வினய்க்கு ஒன்றும் புரியவில்லை. ‘ஏண்டா இப்படி ஆயிட்டே? என்ன கோலம் இது? பெருமாளே.. நீ வா. வா சொல்றேன்’ என்று அவனை எழுப்பி இழுத்துக்கொண்டு போனான். ‘என்னோட காஞ்சீபுரத்துக்கு வந்துடறியா?’

அண்ணா இதற்கும் சிரித்தான்.

‘என்னடா ஆயிடுத்து ஒனக்கு? எதுக்கு இப்படி பைத்தியமா திரிஞ்சிண்டிருக்கே? அம்மா அப்பால்லாம் உன்னைக் காணாம எவ்ளோ கலங்கிப்போயிருக்கா தெரியுமா?’

‘இத்தனை வருஷம் கழிச்சுமா?’ என்று அண்ணா கேட்டான்.

‘முட்டாள். எத்தனை வருஷம் ஆனா என்னடா? பெத்த பிள்ளை இல்லாம போற துக்கம் உனக்கு எங்கே தெரியப் போறது?’

‘அப்படியா? உனக்கு மட்டும் எப்படித் தெரியும்? உனக்குக் கல்யாணமாகி குழந்தை பொறந்து காணாம போயிடுத்தா?’

வினய்க்குக் கடுமையாகக் கோபம் வந்தது. எங்கு நிற்கிறோம், என்ன செய்கிறோம் என்றே உணராமல் அண்ணாவைப் பளாரென அறைந்தான். ‘மரியாதையா என்னோட வா. முதல்ல நீ இங்கதான் இருக்கேன்னு அம்மாக்கு சொல்லணும். வா என்னோட’ என்று அவனை இழுத்துக்கொண்டு ஒரு டெலிபோன் பூத்துக்குச் சென்றான். அண்ணா முரண்டு பிடிக்கவில்லை. அவன் தன்னை அறைந்தது பற்றிய வருத்தமோ, கோபமோ உள்ளதாகக் காட்டிக்கொள்ளவும் இல்லை. இது இன்று நடந்தாக வேண்டும் என்ற விதியை அறிந்தவன் போல வினய் இழுத்த இழுப்புக்கு உடன் சென்றான்.

டெலிபோன் பூத்தில் வேறு யாரோ உள்ளே பேசிக்கொண்டிருந்ததால் வினய் சிறிது நேரம் காத்திருக்கும்படி ஆனது. எங்கே அதற்குள் அண்ணா தப்பித்துப் போய்விடுவானோ என்ற அச்சத்தில் அவன் கையை அழுத்திப் பிடித்துக்கொண்டே நின்றிருந்தான். ஆனால் அண்ணாவுக்குத் தப்பித்துச் செல்லும் உத்தேசம் இருப்பதாகவே தெரியவில்லை.

‘என்னதாண்டா ஆச்சு உனக்கு? ஏன் ஆத்தைவிட்டுப் போனே?’ என்று வினய் மீண்டும் கேட்டான்.

‘அங்கே எனக்கு மூச்சு முட்டித்து வினய். அதான் வெளியே வந்தேன்’ என்று அண்ணா சொன்னான்.

‘கொன்னுடுவேன் நாயே. அம்மாவும் அப்பாவும் நம்ம நாலு பேர்மேல உசிரா இருக்கா. ஒரு வார்த்தை உன்னைக் கடிஞ்சி பேசியிருப்பாளா? ஒருவேளை உனக்கு சாதம் போடாம இருந்திருப்பாளா? என்னடா குறை வெச்சா? எல்லாம் நன்னாத்தானே இருந்தது? எல்லாம் சரியாத்தானே போயிண்டிருந்தது? திடீர்னு ஏன் இப்படி கிறுக்கு பிடிச்சிது உனக்கு?’ என்று வினய் மூச்சு விடாமல் திட்டினான்.

‘கிறுக்குத்தான் இல்லே?’ என்று கேட்டுவிட்டு எங்கோ வெறித்துப் பார்க்க ஆரம்பித்தான். மீண்டும் அந்த அசட்டுச் சிரிப்பு. பைத்தியக்காரச் சிரிப்பு. அவன் பற்களெல்லாம் கறை படிந்து பார்க்கவே கண்றாவியாக இருந்தது வினய்க்கு. அண்ணா சலூனுக்குப் போவதையே முற்றிலும் நிறுத்திவிட்டிருந்தான்போல. முகமும் தலையும் காடாகியிருந்தது. புறங்கையிலும் பாதங்களின் மேற்புறமும் சொறி பிடித்தாற்போல வெள்ளை பூத்துக் கிடந்தது.

வினய்க்கு ஆற்றாமை தாங்க முடியவில்லை. ‘ஏண்டா இப்படி ஆயிட்டே? சாப்பாட்டுக்கு என்னடா பண்றே?’ என்று கேட்டபோது அவன் கண்கள் கலங்கிவிட்டன.

‘அழாதே’ என்று அண்ணா சொன்னான். ‘அவர் போயிட்டார் பார். நீ அம்மாக்கு போன் பேசணும்னு சொன்னியே, பேசு.’

வினய் அவனை நம்பவே முடியாமல் பார்த்துக்கொண்டிருந்தான். அம்மாவிடம் பேச மறுப்பான், தன்னிடமிருந்து தப்பித்து ஓடத்தான் பார்ப்பான் என்று அவன் நினைத்திருந்தான். அவன் எண்ணியிருந்ததற்கு முற்றிலும் மாறாக அண்ணா எந்த எதிர்ப்பும் காட்டாமல் உடன் நின்றது அவனுக்கு மிகுந்த குழப்பத்தையும் வியப்பையும் அளித்தது.

‘பேசேன்?’ என்று அண்ணா மீண்டும் சொன்னான்.

வினய் கண்ணைத் துடைத்துக்கொண்டு பூத்துக்குள் நுழைந்து போனை எடுத்தான். இம்முறை அவன் பிடித்து இழுக்காமல் அண்ணாவே அவன் பக்கத்தில் வந்து நின்றுகொண்டது அவனுக்கு மேலும் வியப்பாக இருந்தது.

‘இதோ பார், நான் கூப்பிடறேன். ஆனா நீதான் பேசணும்’ என்று வினய் சொன்னான். அண்ணா சிரித்தான். ‘முதல்ல கூப்டு.’

பெட்டிக்குள் காசு போட்டு வினய் காத்திருந்தான். ஏழெட்டு முறை தொலைபேசி ஒலித்தபின் எதிர்முனையில் போனை எடுக்கும் சத்தம் கேட்டது.

‘அம்மா நான் வினய் பேசறேம்மா. இங்க வாலாஜாபாத்லேருந்து பேசறேம்மா. என்னோட கூட விஜய் இருக்காம்மா. அவன் இங்கதான் இருக்கான். நான் பாத்துட்டேம்மா’ என்று மூச்சுவிடாமல் சொல்லி முடிக்கும்வரை, அண்ணா அவனையே கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

‘அம்மா, நான் பேசறது கேக்கறதா? விஜய்மா! இங்கதாம்மா இருக்கான்!’ என்று வினய் மீண்டும் சொன்னான்.

‘வினய், இன்னும் நீ ஏன் குழந்தையாவே இருக்கே?’ என்று எதிர்முனையில் கேட்ட குரல் அவனுக்கு மிகுந்த அதிர்ச்சியளித்தது. அது அம்மா இல்லை. அண்ணாவேதான்.

நம்பமுடியாமல் வினய் அண்ணாவைத் திரும்பிப் பார்த்தான். அவன் அங்கேதான் இருந்தான். வினய்யின் ஒரு கையைப் பிடித்துக்கொண்டுதான் நின்றிருந்தான். பேசாமல் அவனையே பார்த்துக்கொண்டுதான் இருந்தான். ஆனால் தொலைபேசிக்குள் அவனது குரல்தான் வினய்க்குக் கேட்டது.

‘டேய்...’ என்று வினய் அதிர்ச்சியடைந்தபோதும் அண்ணா வாய் திறக்கவில்லை. புன்னகைதான் செய்துகொண்டிருந்தான். ஆனால் தொலைபேசியில் அவன்தான் பேசிக்கொண்டிருந்தான்.

‘சிலதெல்லாம் சொல்லிப் புரியவெக்க முடியாது வினய். தானா புரியும்னுகூட சொல்ல முடியாது. அதுக்கு முட்டி மோதணும். செருப்படி படணும். புத்திய நெருப்புல வாட்டி வறுத்து எடுக்கணும். என்னமோ இன்னிக்கு உனக்கு இதைச் சொல்லணும்னு எனக்கு உத்தரவு ஆயிருக்கு, சொல்லிண்டிருக்கேன். கூடுமானவரைக்கும் புரிஞ்சிக்க முயற்சி பண்ணேன்?’

வினய்க்கு நெஞ்சொலியே நின்றுவிடும்போல் இருந்தது. அப்போதும் நம்பமுடியாமல் அம்மா, அம்மா என்றுதான் தொலைபேசியில் அழைத்துக்கொண்டிருந்தான். ஆனால் பார்வை விஜய்யின் மீதே இருந்தது. மிக நிச்சயமாக அண்ணா வாயைத் திறக்கவும் இல்லை; பேசவும் இல்லை. ஆனால் அவன் மனத்தின் ஓசை தொலைபேசி வழியே வினய்க்குக் கேட்டுக்கொண்டிருந்தது.

‘நீ ஆச்சரியப்படணும்னோ, அதிர்ச்சியாகணும்னோ நான் இதைப் பண்ணலைடா. சொன்னேனே.. எனக்கு இன்னிக்கு இது உத்தரவு. உனக்குச் சிலதைப் புரியவெக்கணும்.’

‘டேய்.. நீ பேயா? பேய் ஆயிட்டியாடா?’ என்று வினய் கேட்டான். ‘எப்படிடா இங்க நின்னுண்டு பேசறே? நான் அம்மாவுக்குத்தானே நம்பர் போட்டேன்?’

இப்போதும் நம்பமுடியாமல் வினய் அந்த அழைப்பைத் துண்டித்துவிட்டு மீண்டும் ஒருமுறை வீட்டு எண்ணைச் சுழற்றினான். இன்னொரு ஒரு ரூபாய் நாணயத்தைப் பெட்டியில் போட்டுவிட்டுக் காத்திருந்தான். இம்முறையும் ரிங் போகும் சத்தம் கேட்டது. யாரோ எடுக்கும் சத்தமும் கேட்டது. ஆனால் குரல் அண்ணாவுடையதுதான். பேசியதும் அவன்தான். வினய் என்ன நினைத்தானோ. சட்டென்று அண்ணாவை இழுத்துப் பிடித்துத் தன் கையால் அவன் வாயை அழுத்திக்கொண்டு ‘அம்மா, நான் பேசறது கேக்கறதா?’ என்று கத்தினான்.

தொலைபேசியின் மறுமுனையில் அண்ணாதான் பேசினான். ‘இவ்ளோ சத்தம் எதுக்கு? மெதுவா பேசினாலே கேக்கும்.’

அவனுக்கு வெலவெலத்துப் போனது. தளர்ந்துபோய் போனை வைத்துவிட்டான். நம்பமுடியாமல் அண்ணாவையே பார்த்துக்கொண்டிருந்தான். ‘எப்படிடா?’

‘நியாயமா நான் இதையெல்லாம் பண்ணக் கூடாது. ஆனா என்ன சொன்னாலும் நீ அம்மாக்கு பேசத்தான் செய்வேன்னு அடம் பிடிப்பே. வேற வழியில்லாம பண்ணிட்டேன்’ என்று அண்ணா சொன்னான்.

‘என்னது? எதைப் பண்ணே?’

‘போனுக்குள்ள என் குரல்தானே கேட்டது?’

‘ஆமா. அது எப்படி?’

‘அதைத்தான் சொன்னேன். அதை நான் செஞ்சிருக்கக் கூடாது. அது மகா பாவம்.’

வினய்க்கு ஒரு கணம் கிறுகிறுத்துவிட்டது. அப்படியே நெடுஞ்சாண்கிடையாக அண்ணாவின் காலில் விழுந்துவிடலாம் என்று நினைத்தான். சட்டென்று மனத்தை இழுத்துப் பிடித்து நிறுத்திக்கொண்டு, ‘இதோ பார், எனக்கு இதெல்லாம் புரியலை. புரியவும் வேணாம். நீ ஆத்துக்கு வரணும். இப்பவே என்னோட வரணும். இல்லேன்னா நான் கையோட உன்னை போலிஸ் ஸ்டேஷனுக்கு இழுத்துண்டு போயிடுவேன்’ என்று சொன்னான்.

அண்ணா சிரித்தான். ‘வா’ என்று சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தான். அவனைத் தவறவிட்டுவிடக் கூடாது என்ற தீர்மானத்துடன், வினய் ஓடிச்சென்று அவன் கையைப் பிடித்துக்கொண்டு உடன் நடந்தான்.

‘நான் போயிடமாட்டேன் வினய். நீ பயப்பட வேணாம்.’

‘என்னடா ஆச்சு உனக்கு? எனக்கு ஒண்ணுமே புரியலியே.. பெருமாளே. எப்படி இதெல்லாம்?’

திரும்பத் திரும்ப அவன் அதையே கேட்டுக்கொண்டிருந்தான். அண்ணா பதில் சொல்லவில்லை. ஐந்து நிமிடங்கள் நடந்தபின் வாலாஜாபாத் காவல் நிலையம் வந்தது. அண்ணா நின்றான். ‘போலிஸ் உதவி கேப்பேன்னு சொன்னியே. போய்ச் சொல்லு. நான் இங்கயே நிக்கறேன். இல்லேன்னா நானும் உள்ள வரேன்’ என்று சொன்னான்.

வினய்க்கு என்ன பேசுவதென்றே புரியவில்லை. அதிர்ச்சியா, வியப்பா, பரவசமா என்று புரியாதநிலையில், அவன் கண்ணில் இருந்து கரகரவென நீர் வழிந்தது. அண்ணா நெடுநேரம் அவனை வெறுமனே உற்றுப் பார்த்துக்கொண்டே இருந்தான். பிறகு, வினய்யின் நடு நெற்றியில் தனது கட்டைவிரலை வைத்து அழுத்தினான். ‘கொஞ்சம் உயிர் போற மாதிரி இருக்கும். பயந்துடாதே. ஆனா போகாது’ என்று சொன்னான்.

அடுத்தக் கணம் வினய்யின் உச்சந்தலையில் யாரோ ஓங்கி அடித்ததுபோல் இருந்தது. தலைக்குள்ளே இருந்த உறுப்புகள் அனைத்தும் உதிர்ந்து கீழே விழுவதுபோலத் தோன்றியது. இதயத் துடிப்பு பலநூறு மடங்கு அதிகரித்து, கால்கள் நிற்கமுடியாத அளவுக்கு உதறலெடுத்தது. அது ஒரு கணமா ஒரு மணி நேரமா என்று அவனுக்குத் தெரியவில்லை. தடாலென்று சரிந்து கீழே விழுந்தான்.

‘கண்ணு முழிச்சிப் பாத்தப்போ, நான் வரதர் கோயில் புஷ்கரணிக் கரைல இருந்தேண்டா’ என்று வினய் சொன்னான்.

(தொடரும்)

http://www.dinamani.com/

Link to comment
Share on other sites

52. வாசனை

 

 

எனக்குப் புரிந்தது. அது நிகழ வேண்டுமென்று முன்னெப்போதோ விதிக்கப்பட்டிருந்தது. ஓடிப்போய் பேருந்தில் ஏறி இடம் பிடிக்க சாமர்த்தியம் இல்லாதவனுக்காக இன்னொருவன் ஏறி அமர்ந்து இடம் தேடிக் கொடுப்பதை நிகர்த்ததுதான். எந்தப் பதற்றமும் அவசரமும் இன்றித் தன் தீர்மானத்தை நிறைவேற்றிக்கொண்ட ஊழிற் பெருவலி வேறில்லை. ஆனால் எனக்குத் தீராத வருத்தம் அண்ணாவின் மீதுதான். இதென்ன கண்ணாமூச்சியாட்டம்? அவனைத் தேடி எங்கெங்கோ நாயைப்போல் அலைந்தவன் நான். பெரிய நோக்கங்கள் பிற்காலத்தில் இல்லாது போய்விட்டாலும், ஏனோ அவனைக் குறித்த செய்தி ஏதாவது காதில் விழும்போதெல்லாம் என்னையறியாமல் தேடிக் கிளம்பிவிடுபவனாகவே எப்போதும் இருந்து வந்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் அவன் தனது இருப்பின் மிச்சங்களை எனக்காக வைத்துச் செல்பவனாகவே இருந்திருக்கிறான். தன்னையல்ல. தன் ஸ்தூலத்தையல்ல. தன் நினைவுகளை மட்டும். சில சம்பவங்களை மட்டும். ஒரு சமயம் தன் வாசனையை அவன் எனக்காக வைத்துவிட்டுப்போனதும் நிகழ்ந்தது.

அதைச் சொல்ல வேண்டும். சிறு வயதில் அம்மா அடிக்கடி அவனிடம் குறைப்பட்டுக்கொள்ளும் சங்கதி ஒன்றுண்டு. அது அவன் ஒழுங்காகத் தேய்த்துக் குளிப்பதில்லை என்பது. எனக்குத் தெரிந்து அவன் குளியலறைக்குச் சென்றால் அரை மணி நேரத்துக்கு முன்பாக வெளியே வந்ததேயில்லை. ஆனால் உள்ளே அவன் குளிக்கத்தான் செய்தானா என்று தெரியாது. ஒருவேளை அந்தத் தனிமையை உதறிப் போர்த்திக்கொண்டு தியானத்தில் உட்கார்ந்திருக்கலாம். அல்லது தாழிட்ட அறையின் சௌகரியத்தைப் பயன்படுத்திக்கொண்டு வேறு ஏதேனும் யோகாப்பியாசங்கள் செய்து பார்த்திருக்கலாம். எப்படியாயினும் அவன் வெளியே வர அரை மணி நேரமாகும். ஆனாலும் அவனது ஆடையைத் துவைக்க எடுத்துச் செல்லும்போதெல்லாம் அம்மா சொல்லுவாள், ‘என்ன நாத்தம்! அழுகின தேங்கா மாதிரி. எங்கேருந்துடா உன் சட்டையெல்லாம் இப்படி நார்றது? ஒழுங்கா தேய்ச்சிக் குளி விஜய். இல்லேன்னா சொறி சிரங்குதான் வரும்.’

அண்ணாவின் வியர்வை நெடி அழுகிய தேங்காயின் நெடியைப் போலத்தான் இருக்கும். அவன் ஓடியாடி எதையும் செய்யாமல் வெறுமனே உட்கார்ந்திருக்கும்போதும் சமயத்தில் அந்த நெடியை உணர்ந்திருக்கிறேன். மிகவும் நெருங்கிச் சென்றால் தெரியும். இதை நான் இப்போது நினைவுகூர ஒரு காரணம் இருக்கிறது. வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் அண்ணாவை நெருங்கித் தொட்டபோது அவன் மீது பச்சைக் கற்பூர நெடி அடித்ததாக வினய் என்னிடம் அப்போது சொன்னான். ‘இல்லையே, அவனது வாசனை அழுகிய தேங்காயின் வாசனை அல்லவா?’ என்று நான் கேட்டேன்.

‘அதென்னமோ தெரியலை. ஆனா நான் பிடிச்சி உலுக்கினப்போ பச்சைக் கற்பூர வாசனைதான் அடிச்சிது. அவன் இருந்த கோலத்துக்கும் அந்த அழுக்குக்கும் மூஞ்சில வழிஞ்ச எண்ணெய்க்கும் சம்மந்தமே இல்லாத நெடி.’

எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. ஒரு சமயம். அது ஒரு மோசமான வெயில் காலம். மோசமென்றால் கண் இமை, நகக்கண்களெல்லாம் எரிகிற அளவுக்குக் கொளுத்தி எடுத்துக்கொண்டிருந்த வெயில். நான் அப்போது பீகாரில் சுற்றுப்பயணம் செய்துகொண்டிருந்தேன். ஆறு சொற்பொழிவுகள். இரண்டு முக்கியமான அரசியல் சந்திப்புகள். சொற்பொழிவுகள் பொதுமக்களுக்காக. சந்திப்பு தனிப்பட்ட சங்கதி. எனக்கு அப்போது ஒரு பொறுப்பு அளிக்கப்பட்டிருந்தது. தேசிய அளவில் ஆட்டமான ஆட்டம் ஆடிக்கொண்டிருந்த ஒரு பிரகஸ்பதியைச் சற்று அடக்கிவைக்கிற பொறுப்பு.

‘எதையாவது செய்யுங்கள். எதைச் சொன்னால் அவன் வாலைச் சுருட்டிக்கொள்வான் என்று பாருங்கள். அதிகம் வேண்டாம். மூன்று மாதங்களுக்குப் போதும். நாட்டில் என்ன நிகழ்ந்தாலும் அவன் வாய் திறக்கக் கூடாது. மூன்று மாதங்களுக்கு அவன் நாட்டிலேயே இல்லாதிருக்கும்படிச் செய்தாலும் நல்லது’ என்று ஒரு அரசியல் தலைவர் என்னிடம் கேட்டுக்கொண்டிருந்தார். உருண்டு நகர்ந்த வருடங்களில், அம்மாதிரியான சிறு உதவிகள் பலவற்றை நான் பலபேருக்குச் செய்யத் தொடங்கியிருந்தேன். மந்திர தந்திரங்களெல்லாம் என்னிடத்தில் கிடையாது. கடவுள் கிடையாது. ஒன்றும் கிடையாது. நான் ஒரு சக்தி. நான் ஒரு விசை. என் பார்வையும் என் சொற்களும் எனக்காகப் பேசும். நான் நினைப்பதை அது சாதித்துத் தரும். ஒரு சில சொற்களில் எதிராளியின் வைராக்கியங்களைத் தகர்க்கத் தெரிந்தவனாக நான் மாறியிருந்தேன். அரசியலில் இருப்பவர்களுக்கு இந்தத் தோரணை அத்தனை எளிதில் பிடிபடாது. பிடிபடாதவற்றின் மீதான கவர்ச்சி மட்டும் நிரந்தரமாகத் தொக்கி நிற்கும் பிராந்தியம் அது.

நான் பீகாருக்குப் போனதன் முக்கியக் காரணம், அந்தக் குறிப்பிட்ட ஆசாமி அப்போது அங்கே முகாமிட்டிருந்ததுதான். அவன் நேரடி அரசியல்வாதி இல்லை. அரசியல் தொடர்பற்றவன் என்றும் சொல்லிவிட முடியாது. பெரும் பணக்காரன். வெளிப்பார்வைக்குத் தெரியும்விதமாக நான்கைந்து வர்த்தகங்களும், யாருக்குமே தெரியாத மேலும் நான்கைந்து வர்த்தகங்களும் அவனுக்கு இருப்பதாகச் சொன்னார்கள். அதில் மிக முக்கியமானது, ரஷ்ய எல்லையோரம் அவனுக்கு இருந்த ஒரு தாமிரச் சுரங்கம். அவன் பெயரோ, அவனது உறவினர்கள், நண்பர்கள் பெயரோ அந்த சுரங்க நிறுவனத்தின் பேரேடுகளில் இருக்காது. மகாகனம் பொருந்திய கொன்ஸ்டண்டின் செனங்கோ அமரராகி மிகைல் கோர்பசேவ் அப்போதுதான் ஆட்சியதிகாரத்துக்கு வந்திருந்தார். ஜாதகம் பார்க்காத, கிரக நிலை கவனிக்காத தேசம். சரியான கண்டச் சனி பிடித்திருந்த தருணத்தில் வந்து சேர்ந்திருக்கிறாரே என்று விவரமறிந்தவர்கள் கவலைப்பட்டார்கள். பதவிக்கு வந்த முதல் சில வருடங்களில் அவர் எந்த வெளியாட்களையும் சந்திக்கவேயில்லை. எனக்குத் தெரிந்து அவரைச் சந்தித்த முதல் வெளிநாட்டுக்காரன் அந்தத் தாமிரச் சுரங்க முதலாளிதான். எதற்கு அந்தச் சந்திப்பு, என்ன பேசினார்கள், என்ன நிகழ்ந்தது என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. ஆனால் சோவியத்து ரஷ்யா சிதறி உருண்டோடிய காலத்தில்கூட அவனது சுபிட்சத்துக்குக் குறைவேதும் வரவில்லை.

நான் அவனை பத்மா நதியில் மிதந்துகொண்டிருந்த ஒரு படகு இல்லத்தில் சந்திப்பதாக இருந்தேன். ஏற்பாடுகள் அனைத்தும் தயாராக இருந்த நிலையில், ஓரிரவு முழுவதையும் அவனோடு படகு இல்லத்தில் செலவிட ஆயத்தமாகி நான் நதிக்கரையை அடைந்தேன். நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் என்னோடு ஆற்றங்கரைவரை வந்திருந்தார். கிளம்பும்போதுகூடச் சொன்னார், ‘அவன் என்ன கேட்டாலும் ஒப்புக்கொள்ளுங்கள். இது மிகவும் சிக்கலான தருணம். அவனது இருப்பு சிக்கல்களை மேலும் சிக்கலாக்கிவிடக் கூடாது.’

அந்த விவகாரத்தை நான் முழுதும் சொல்லுவதற்கில்லை. ஒருவேளை தேவைப்பட்டால் பிறகு பார்த்துக்கொள்ளலாம். இங்கே நான் முக்கியமாகச் சொல்ல நினைத்தது நான் அந்தப் படகு இல்லத்துக்குள் நுழைந்தக் கணம்.

உள்ளே காலெடுத்து வைத்ததுமே எனக்கு அந்த வாடை முகம் சுளிக்கவைத்தது. அழுகிய தேங்காயின் வாடை. வெகு இயல்பாக நான் அண்ணாவை அப்போது நினைத்துக்கொண்டேன். ஆனால் ஒரு படகு இல்லத்தை வாடகைக்கு எடுத்து அவன் உல்லாசம் அனுபவித்திருப்பான் என்று தோன்றவில்லை. ஒருவேளை அந்தத் தாமிர முதலாளியைச் சந்திக்க வந்திருப்பானோ? எப்படி யோசித்துப் பார்த்தாலும் அதற்கான நியாயங்கள் எனக்குப் பிடிபடவில்லை.

யோசித்தபடி நான் அவனுக்காகக் காத்திருக்க ஆரம்பித்தேன். படகு கிளம்பி நதியில் ஓரிரு மைல்கள் ஓடி நின்றபோது இன்னொரு படகு அதன் அருகே வந்து நின்றது. சிப்பந்திகள் பரபரவென்று இரு படகுகளுக்கும் இடையே மரச் சட்டங்களைப் பொருத்தி பாலம் அமைத்தார்கள். அவன் ஒரு காகித அம்பைப்போல் அந்தப் படகில் இருந்து வெளிப்பட்டு மரப்பாலத்தைக் கடந்து நான் இருந்த படகுக்குள் வந்து சேர்ந்தான். ‘நமஸ்தே’ என்று கரம் குவித்தான்.

இரண்டுமே அவனுடைய படகுகள்தாம். அன்றைக்குக் காலை அவன் இந்தப் படகில்தான் இருந்திருக்கிறான். வேறொரு சந்திப்பு. வேறொரு விவகாரம். தீர்த்துவைக்கிற அவசரப் பணி. ‘நான் மிகவும் மதிக்கும் நபர்களை இந்தப் படகில்தான் சந்திப்பது வழக்கம். இது என் ராசிப் படகு’ என்று அவன் சொன்னான்.

‘அப்படியா? காலை யாரைச் சந்தித்தீர்கள்?’

‘அவர் ஒரு யோகி. மிகப் பெரிய மனிதர்.’

எனக்குத் தெரிந்துவிட்டது. ஆனால் இவன் ஒரு பொறுக்கியல்லவா? அயோக்கியன் அல்லவா? அண்ணா எப்படி இவனைச் சந்தித்திருக்கக்கூடும்? அதுதான் புரியவில்லை.

அவன் சொன்னான், ‘நீங்கள் சிரமப்பட வேண்டாம் குரு மகராஜ். போய் உங்கள் தலைவரிடம் சொல்லுங்கள். என்னால் அவருக்குச் சிக்கல் வராது.’

‘மன்னியுங்கள். எனக்கு யாரும் தலைவர் கிடையாது. நான் யாருக்கும் கட்டுப்பட்டவனும் இல்லை.’

‘ஆனாலும் நீங்கள் அவர் சார்பாகத்தான் வந்திருக்கிறீர்கள்.’

‘யார் சொன்னது?’

‘சொன்னேனே, ஒரு யோகி. அவர்தான் சொன்னார்.’

எனக்கு மிகவும் குழப்பமாக இருந்தது. நான் அதை நம்ப விரும்பவில்லை. பொருள்வயமான ஒரு பெருவெளியில் அண்ணாவின் சஞ்சாரம் அமையக்கூடும் என்று நான் நினைக்கவில்லை. என் வழி வேறு. நான் பூரணமான லௌகீகம் கடைப்பிடிப்பவன். என் சூட்சுமங்கள் வேறு. என் கணித வரிசை வேறு. அண்ணா அப்படியல்ல. தன் இல்லாமையில் அவன் நிலைநிறுத்திய அவனைக் குறித்த பிம்பம் முற்றிலும் வேறு.

‘அவர் மிகவும் தற்செயலாக என் வழியில் தென்பட்டார். அவரால் என் வாழ்க்கை முற்றிலும் மாறிப்போனது. ஒன்று சொல்லவா? நான் இந்த தேசத்தைவிட்டே இன்னும் சில மாதங்களில் போய்விடுவேன்.’

‘அப்படியா?’

‘ஆம். திரும்பி வரவும் போவதில்லை. என் வர்த்தகம் இனி இங்கே இருக்காது. ஏனெனில், எனக்கு இங்கே பிழைப்பில்லை என்று அவர் சொல்லிவிட்டார்.’

‘அவர் உங்களைச் சீடராக ஏற்றுக்கொண்டிருக்கிறாரா?’ என்று கேட்டேன்.

‘இல்லை. அந்தத் தகுதி எனக்கில்லை என்று சொல்லிவிட்டார். ஆனால், என் இடப்பெயர்ச்சி எனக்கும் இந்த நாட்டுக்கும் நல்லது என்று சொல்லியிருக்கிறார்.’

முற்றிலும் பூடகமான அந்தத் தகவல்கள் எனக்கு மொட்டவிழப் பல மாதங்கள் ஆயின. அண்ணாவை நினைத்து நான் பிரமித்துப்போன தருணம் அது. ஒரு அரசாங்கம், ஒரு ராணுவம் நிகழ்த்த வேண்டிய சாகசங்களை, இந்த தேசத்தின் உண்மையான யோகிகள் மறைமுகமாக நிகழ்த்திக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு நபர்கள் முக்கியமில்லை. அவர்களது தராதரம்கூடப் பொருட்டில்லை. இது நிகழ வேண்டும் என்றால் நிகழ்ந்தாக வேண்டும். இயற்கையின் உத்தரவு என்று அண்ணா சொன்னதாக அந்தத் தாமிர முதலாளி என்னிடம் சொன்னான்.

ஒன்று சொல்ல வேண்டும். அண்ணா அவனுக்கு நல்லது செய்தானா, நாட்டுக்கு நல்லது செய்தானா என்பதல்ல. நான் ஒரு மகத்தான சக்தி மையமாக உருக்கொள்ள அந்தப் படகுப் பயணம் மிக முக்கியக் காரணமானது. கரைக்கு வந்து அவனிடம் இருந்து விடைபெற்றுப் போனபின் நான் உரியவர்களைச் சந்தித்து நடந்ததைச் சொன்னேன்.

‘அவனால் சிக்கலில்லை. அவன் வெளிநாடு போய்விடுவான். இனி திரும்பமாட்டான்.’

‘எப்படி? எப்படி?’ என்று ஆர்வம் தாங்கமாட்டாமல் அலறினார் அந்த அமைச்சர்.

நான் ஒரு கணம் அமைதியாக யோசித்தேன். என் மானசீகத்தில் அண்ணாவிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு கூசாமல் சொன்னேன், ‘அவன் மன வரைபடத்தை நான் கலைத்துப்போட்டு வேறு படம் எழுதிவிட்டேன்.’

(தொடரும்)

http://www.dinamani.com/junction/yathi/2018/may/29/52-வாசனை-2928388.html

Link to comment
Share on other sites

53. மூன்றாவது வழி

 

 

ஸ்ரீரங்கப்பட்டணத்துப் பரிசல் பயணத்தின்போது வினய்யிடம் நான் அந்தச் சம்பவத்தை நினைவுகூர்ந்தேன். ‘நீயே யோசித்துப் பார். அவன் உன்னைச் சந்தித்திருக்கிறான். உன்னைப் போன்ற வேறு சில பொறுக்கிகளையும் சந்தித்திருக்கிறான். திட்டமிட்டு என்னைச் சந்திப்பதை மட்டும் தவிர்த்துக்கொண்டே வந்திருக்கிறான். சுத்த அயோக்கியன்.’

வினய் சிரித்தான். ‘விமல், வாழ்வில் நான் திரும்ப வேண்டிய கட்டம் ஒன்று வந்தது. பாதை இரண்டாக என் முன்னால் நீண்டிருந்தது. அவன் என்னை திசை திருப்ப அனுப்பப்பட்டிருக்கிறான். மற்றபடி அவனைப் பற்றி எனக்கு வேறு எதுவுமே தெரியாது’ என்று சொன்னான்.

‘நீ அவனை விசாரிக்கவில்லையா? அவன் எங்கே போனான், யாரிடம் இருந்தான் என்று கேட்கவில்லையா?’

‘கேட்டேன். ஆனால் அவன் அதற்கெல்லாம் பதில் சொல்லவில்லை.’

‘பிறகு?’

‘என்னைத் திருவானைக்காவுக்குச் சென்று அங்கே உள்ள ஒரு கிழவனைப் பார்க்கச் சொன்னான்.’

இப்போது நான் வாய்விட்டுச் சிரித்துவிட்டேன்.

‘என்ன?’ என்று வினய் கேட்டான்.

‘அந்தக் கிழவனை நானும் பார்த்தேன். சரியாகச் சொல்லுவதென்றால் என்னைத் தேடி அவன் வந்தான். அவன்தான் எனக்கு அபின் கொடுத்து இழுத்துச் சென்றான். அவனிடமிருந்து புறப்பட்டுத்தான் நான் குற்றாலத்துக்குப் போனேன்.’

வினய் ஒன்றும் சொல்லவில்லை. சிறிது நேரம் நதியின் ஓட்டத்தையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். சட்டென்று சொன்னான், ‘நாம் ஒன்றாகப் பிறந்தது ஒரு தற்செயல்.’

நான் யோசிக்கவேயில்லை. ‘பிறப்பு என்பதே ஒரு தற்செயல் அல்லவா?’ என்று கேட்டேன்.

‘உண்மைதான். திட்டமிட்டுப் பெற்றுக்கொள்ளும் குழந்தைகள் தத்திகளாகத்தான் இருக்கின்றன. அம்மா திட்டமே இல்லாமல் நம்மைப் பெற்றுவிட்டாள். அவளது பிழையும் நமது பிழையின்மையும் அதுதான்.’

எனக்குப் பசித்தது. நான் மைசூரில் இருந்து புறப்பட்டதில் இருந்து ஒன்றும் சாப்பிட்டிருக்கவில்லை. என்னுடைய கைப்பையில் பிஸ்கட்டுகள் வைத்திருந்தேன். ஆனால் ஸ்ரீரங்கப்பட்டணத்து அரசியல்வாதி வீட்டில் அந்தப் பையை வைத்துவிட்டு வந்துவிட்டேன். எனவே பரிசல்காரனிடம் சாப்பிட ஏதாவது வைத்திருக்கிறாயா என்று கேட்டேன். அவன் கரை திரும்பிவிடவா என்று பதிலுக்குக் கேட்டதும், உடனே வேண்டாம் என்று சொன்னேன். வினய் சிரித்தான்.

‘உன்னைத் திரும்ப எப்போது பார்ப்பேன் என்று தெரியாது. இன்னும் சிறிது நேரம் உன்னோடு இருக்க விரும்புகிறேன்’ என்று சொன்னேன். நாங்கள் பேசுவது பரிசல்காரனுக்குப் புரிந்துவிடக் கூடாது என்ற ஜாக்கிரதை உணர்வுடன் ஆங்கிலத்தில் உரையாடிக்கொண்டிருந்தோம். இந்தப் பிராந்தியங்களில் பெரிய பிரச்னை இதுதான். எல்லோருக்கும் குறைந்தது மூன்று மொழிகள் தெரிந்திருந்தன. தமிழ். கன்னடம். ஹிந்தி. நான் ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தபோது முதலில் சற்றுத் தயங்கினேன். வினய்க்கு ஆங்கிலம் பேச வருமா என்கிற குழப்பம் இருந்தது. ஆனால் அவன் தடையில்லாமல் பேசினான். பரிசல் ஓட்டியவனுக்கு அது நிச்சயமாகப் புதிய அனுபவமாகத்தான் இருக்கும். இரண்டு துறவிகள். இருவருமே காவி அணிந்தவர்கள். ஒருவன் காவி வேட்டியும் காவி மேல் துண்டும் தாடியும் ஜடாமுடியுமாக இருப்பவன். இன்னொருவன் அதே காவியில் அழகாக அங்கி தைத்து அணிந்திருப்பவன். அவனுக்கு ஜடாமுடி கிடையாது. கவனமாக அலங்கரிக்கப்பட்ட சிகை. மழுங்கச் சிரைத்த முகம். தங்க ஃப்ரேம் போட்ட மூக்குக் கண்ணாடி அணிந்த துறவி. இருவருமே படித்தவர்கள். ஆங்கிலம் பேசுகிறவர்கள். தரையில் பேச முடியாத எதை இப்படி நீருக்குள் வந்து அலசியெடுக்கிறார்கள்?

வினய் என்னை நோக்கிக் கையை நீட்டினான். நான் என்னவென்று கேட்டேன். ‘கையைக் கொடு. பசிக்கிறது என்றாயே?’

நான் சிரித்தபடி அவன் முன்னால் கையை நீட்டினேன். அவன் என் உள்ளங்கையின் மீது தன் கையை வைத்து மூடினான். நான்கு வினாடிகள் அப்படியே வைத்திருந்துவிட்டு அவன் கையை எடுத்தபோது என் உள்ளங்கையில் ஒரு பிஸ்கட் பொட்டலம் இருந்தது. எனக்கு அது வியப்பாகவோ, அதிர்ச்சியாகவோ இல்லை. நான் அறிவேன். என் கைப்பைக்குள் நான் வைத்திருந்த பிஸ்கட் பொட்டலம்தான் அது.

‘நீயும் இதில் இறங்கிவிட்டாயா? அருமை’ என்று சொன்னேன். அந்தப் பொட்டலத்தைப் பிரித்துச் சாப்பிட ஆரம்பித்தேன். அதுவரை எங்களை அவ்வளவாகப் பொருட்படுத்தாதிருந்த பரிசல்காரன் திடீரென்று என் கையில் இருந்த பிஸ்கட் பொட்டலத்தைக் கண்டதும் சற்று அதிர்ச்சியடைந்தான்.

‘அவனுக்கு இரண்டு பிஸ்கட்டுகள் கொடு’ என்று வினய் சொன்னான். நான் எனக்கு இரண்டு பிஸ்கட்டுகளை மட்டும் எடுத்துக்கொண்டு பொட்டலத்தை அப்படியே பரிசல்காரனிடம் கொடுத்தேன். என்ன நினைத்தானோ, அவன் அதை வாங்கிக் கண்ணில் ஒற்றிக்கொண்டு இடுப்பில் முடிந்துகொண்டான்.

‘சரி சொல், திருவானைக்கா கிழவன் உன்னை எங்கே அனுப்பினான்?’ என்று கேட்டேன்.

‘அவன் என்னை எங்கும் அனுப்பவில்லை. அவனிடம்தான் நான் ஆறு வருடங்கள் இருந்தேன்.’

‘நினைத்தேன். இந்த மாதிரி சில்லறை சித்துகளில் அவன் விற்பன்னன். ஏனோ எனக்கு அவன்மீது மரியாதையே வரவில்லை.’

‘இல்லை விமல். அவன் பெரிய ஆள்.’

‘அப்படியா நினைக்கிறாய்? பெரிய ஆள் பிஸ்கட் பொட்டலம் தரமாட்டானே?’ என்று சிரித்தேன்.

அவன் காயப்பட்டிருக்க வேண்டும். சிறிது நேரம் அமைதியாக இருந்தான். பிறகு, ‘நான் அவனைவிட்டு விலகியிருக்கக் கூடாது விமல். ஒரு சிறு பிழை செய்தேன். அது மொத்தமாக என்னை வேறொரு தளத்துக்கு நகர்த்திக்கொண்டு போய்விட்டது.’

பேசிக்கொண்டே இருந்தவன் சட்டென்று கண் கலங்கி இருந்ததைக் கண்டேன். இது எனக்கு வியப்பாக இருந்தது. ‘டேய், அழாதே’ என்று சொன்னேன்.

‘அழக் கூடாது என்று பல வருடங்களாக நினைத்திருந்தேன். ஏனோ இன்று அழத் தோன்றுகிறது. நான் உன்னைப் பார்த்திருக்கக் கூடாது.’

‘ஆம். எனக்கும் அதுதான் தோன்றுகிறது.’

‘நீ என் ரத்த உறவு என்ற எண்ணம் இன்னும் மனத்தில் இருக்கிறது. அந்தச் சுமை அதன் பங்குக்கு உறுத்திக்கொண்டே இருக்கிறது.’

‘வினய், உறவில் தவறே இல்லை. அதை ஏன் சிக்கலாக நினைக்கிறாய்? என்னைப் பார். நான் எந்த உறவையும் துறக்கவில்லை. கணந்தோறும் புதிய உறவுகளை உற்பத்தி செய்துகொண்டே இருக்கிறேன். என் துறவு என்பது என் உறவினர்களின் எண்ணிக்கை எத்தனை ஆயிரம் அல்லது லட்சம் என்பதில்தான் முழுமை அடைகிறது.’

‘அது வேறு. என்னால் அம்மாவைத் துறக்க முடிந்ததே. அது பெரிதல்லவா?’ என்று அவன் கேட்டான்.

‘முட்டாள். அனைத்தையும் துறந்த பின்புதான் நான் அம்மாவை அதிகமாக நேசிக்க ஆரம்பித்தேன். என் துறவின் பூரணமே அவளது நினைவின் இருப்புதான்’ என்று சொன்னேன்.

ஒரு கணம் அவன் அதிர்ச்சியடைந்தான். பிறகு, ‘நீயும் சித்ராவை விரும்பினாய்’ என்று சொன்னான்.

அடக்கஷ்டமே! எங்கிருந்து எங்கு தாவுகிறது இந்த அழகுக் குரங்கு மனம்! ஆம். நானும் சித்ராவை நேசித்தேன். அதிலென்ன சந்தேகம். ஆனால் அது காதல் இல்லை. எனக்கு அவளது கன்னங்கள் பிடித்தன. உதடு பிடித்தது. எச்சில் விழுங்கும்போது கழுத்தில் விழும் குழி பிடித்தது. அதே குழிகள் முலைகளுக்குக் கீழே, இடுப்புக்கு மேலே இடப்புறம் அவளுக்கு உண்டு. அது பிடித்தது. இன்னும் என்னென்னவோ. சித்ரா என்னைவிட வயதில் பெரியவளாக இருந்தது மட்டும்தான் எனக்கிருந்த ஒரே மனத்தடை. ஆனால் இப்போது நினைத்துக்கொள்கிறேன். வயதில் என்ன இருக்கிறது? அந்த ஒரு நினைவு அந்நாள்களில் என் பல சந்தோஷ நினைவுகளைப் பாதியில் கிள்ளி எறிந்திருக்கிறது.

வினய் என்னைப் புன்னகையுடன் உற்றுப் பார்த்துக்கொண்டே இருந்தான். பரிசல் இப்போது நகரவில்லை. நதியின் நடுவே இரு பெரும் பாறைகளுக்கு மத்தியில் மையம் கொண்டாற்போல் நின்றிருந்தது. ஓட்டச் சொன்னால் ஓட்டலாம் என்பது போல பரிசல்காரன் எங்களையே பார்த்துக்கொண்டிருந்தான். ஒருவேளை நதிக்கு நடுவே அமர்ந்து பேசுவது எங்களுக்கு உவப்பானதாக இருக்கும் என்று அவன் கருதியிருக்கலாம்.

‘வாழ்க்கைதான் எத்தனை குரூரமானது! அண்ணா என்னைச் சரியான நபரிடம்தான் அனுப்பினான். என் அவசர புத்தி என்னை அங்கிருந்து பெயர்த்தெடுத்துத் தூக்கிப் போட்டுவிட்டது’ என்று வினய் சொன்னான்.

‘புலம்பாதே. என்ன ஆனது என்று சொல். எப்படிச் சரி செய்யலாம் என்று நான் சொல்கிறேன்.’

‘நீயா!’ அவன் சிரித்துவிட்டான்.

‘ஏன், முடியாது என்று நினைக்கிறாயா? இந்த தேசத்தில் பல அரசியல் சிக்கல்களை நான் தீர்த்து வைப்பவனாக இருக்கிறேன். ஒன்று தெரியுமா? கடந்த வாரம் நடந்த கோவா பொதுத் தேர்தலே நான் தீர்மானித்ததுதான். இன்னும் அதன் முடிவு வெளியாகாதிருப்பதும் என் வார்த்தைக்குக் கட்டுப்பட்டுத்தான்.’

அவன் என் கையைப் பிடித்துத் தன் கரங்களுக்கு நடுவே வைத்துக்கொண்டான். இன்னும் நெருக்கமாக வந்து அமர்ந்துகொண்டு, ‘விமல்! உன் வழி வேறு என்று நினைக்கிறேன். நான் போகும் பாதைக்கு முற்றிலும் நேரெதிராக நீ போய்க்கொண்டிருக்கிறாய்.’

‘முட்டாள், நீயேதான் நீ விரும்பும் வழியில் போகவில்லை போலிருக்கிறதே? அப்புறம் என் வழியைப் பற்றிய விமரிசனம் எதற்கு?’

‘ஆம். ஒருவிதத்தில் சரி. ஆனால் இன்னொரு முறை நான் அண்ணாவைச் சந்தித்துவிட்டால் சரியாகிவிடுவேன் என்று நினைக்கிறேன்.’

‘அப்படியா? அதுசரி, நீ எதற்கு அந்த ஸ்ரீரங்கப்பட்டணத்து அரசியல்வாதி வீட்டுக்குப் போனாய்?’ என்று கேட்டேன்.

கணப் பொழுது அவன் யோசித்தான். பிறகு சொன்னான். ‘அவரோடு எனக்கு ஒன்றுமில்லை. அவரது மனைவி என்னை வரச் சொல்லியிருந்தாள்.’

‘எதற்கு?’

‘அவளுக்கு ஆவிகளுடன் பேசப் பிடிக்கும்.’

(தொடரும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

54. கபிலர்

 

 

வாழ்வில் எதற்குமே அதிர்ச்சியடைவதோ, உணர்ச்சிவசப்படுவதோ கூடாது என்று எப்போதும் நினைத்துக்கொள்வேன். எனக்குப் பசி தெரியும். பசி மறக்கவும் பசியை அடக்கவும் தெரியும். மறுபுறம் குபேர விருந்துகளை நானறிவேன். மேசையெங்கும் நிறைந்துகிடக்கும் விதவிதமான உணவுப் பண்டங்களின் நடுவே நீந்தி நீந்தி இஷ்டத்துக்கு எடுத்து உண்டிருக்கிறேன். பணக்காரர்கள், ஏழைகள், பெரிய மனிதர்கள், சிறிய மனிதர்கள், ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என நூறாயிரம் பேரைச் சந்தித்திருக்கிறேன். ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு முழு வாழ்க்கை. ஒவ்வொரு வாழ்விலும் எத்தனை அனுபவங்கள். அதிர்ச்சியடைய வைக்கவும், வியப்பூட்டவும் ஒவ்வொருவரிடத்திலும் குறைந்தது ஒரு விஷயமாவது நிச்சயம் உண்டு. நாளெல்லாம் வாழ்வெல்லாம் மனிதர்களைச் சந்தித்துக்கொண்டே இருப்பவன், கணந்தோறும் அதிரவும் வியக்கவும் செய்வது சிரமம். வெறும் மௌனத்தில், சிறு புன்னகையில் எதையும் கடந்துவிடப் பழகியிருந்தேன்.

ஆனால், வினய் சொன்ன தகவல் உண்மையில் என்னை அதிரவைத்தது. அதை நான் எதிர்பார்க்கவில்லை. ஒரு கணம் அவனுக்காகப் பரிதாபப்பட்டேன். என்னையறியாமல் கண் கலங்கினேனா என்ன? தெரியவில்லை. இருக்கலாம். வெளியெங்கும் விரிந்திருந்த நதியின் மேல் தோல் சற்றே மங்கித் தெரிந்தது. நெடுநேரம் பேச்சற்றுப் போய் அமர்ந்திருந்தேன். பிறகு சொன்னேன், ‘நீ சொன்னது சரி. நீ அந்த சொரிமுத்துக் கிழவனிடமே இருந்திருக்கலாம். அல்லது செத்துப் போயிருக்கலாம்.’

அவன் என்னை திடுக்கிட்டுப் போய்ப் பார்த்தான்.

‘நான் யோசிக்காமல் பேசவில்லை வினய். உண்மையிலேயே நீ இறந்திருக்கலாம். அண்ணா நிச்சயமாக உன்னை இப்படியொரு பாதைக்குத் திருப்ப எண்ணியிருக்கமாட்டான்.’

‘நான் அவனைப் பொருட்படுத்தவில்லை. என் வரையில் எனக்குச் சரியென்று பட்டதைத்தான் நான் செய்தேன்’ என்று சொன்னான்.

‘அதிருக்கட்டும். உண்மையிலேயே ஆவிகள் இருக்கின்றனவா?’ என்று கேட்டேன்.

‘ஆவிகள் இல்லை. ஆத்மாக்கள் உண்டு. இறப்புக்கும் இல்லாமல் போவதற்கும் இடைப்பட்ட ஒரு நிலையில் அவை ஊசலாடிக்கொண்டிருக்கும். நாங்கள் அவற்றை ஒரு போலிஸ் நாயைப்போல் பழக்கி வைத்திருப்போம்.’

‘எதற்கு? பிஸ்கட் பொட்டலம் எடுத்து வரவா?’

‘நீ கிண்டல் செய்கிறாய். உண்மையில் இது சித்துக்குச் சற்றும் சளைக்காத பணி.’

‘முட்டாள்!’ என்று கத்தினேன்.

‘இல்லை. உண்மையிலேயே அதுதான். இல்லாத ஒன்றை யாரும் உற்பத்தி செய்ய முடியாது விமல். எல்லாமே இருப்பதுதான். சிறு தெய்வங்களைக் கொண்டு செயல்படுகிறோமா, ஆத்மாக்களைக் கொண்டு செயல்படுகிறோமா என்பதுதான் வித்தியாசம்.’

அவனுக்குத் தீவிரமாக என்னவோ ஆகியிருக்கிறது என்று நினைத்தேன். அடி மனத்தில் அவனே வெறுக்கிற ஒரு செயலை மேல் மனத்தின் துணையுடன் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறானோ என்று சந்தேகமாக இருந்தது. இப்படியே விட்டால் வெகு விரைவில் வினய் தற்கொலை செய்துகொண்டுவிடுவான் என்று பட்டது. ஸ்ரீரங்கப்பட்டணத்து அரசியல்வாதி இன்னும் சில நாள்களுக்காவது சௌக்கியமாக இருப்பார். நான் வினய்யை முதலில் கவனித்தாக வேண்டும் என்று முடிவு செய்துகொண்டேன். மிகவும் வற்புறுத்தி என்ன நடந்தது என்று முழுதாகச் சொல்ல வைத்தேன்.

அவன் சொன்ன கதை உண்மையிலேயே மிகவும் பரிதாபகரமானது. அதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

வாலாஜாபாத்தில் அண்ணாவைச் சந்தித்த பிறகு வினய்க்கு காஞ்சீபுரம் செல்லத் தோன்றவில்லை. ‘இன்னிக்கு நான் உன்னோடவே இருந்துடறேனே’ என்று அண்ணாவிடம் அவன் கேட்டிருக்கிறான். அவன் பதில் சொல்லவில்லை என்றாலும் மறுக்கவும் இல்லை. அன்றிரவு அண்ணா அவனுக்கு இரண்டு பொறைகள் வாங்கிக் கொடுத்துச் சாப்பிடச் சொல்லியிருக்கிறான். ‘உனக்கு?’ என்று வினய் கேட்டதற்கு, ‘நான் இப்ப சாப்பிடறதில்லை’ என்று பதில் சொல்லியிருக்கிறான்.

‘பசிக்காதா?’

‘இல்லை. பசிக்காது. நீ சாப்டு’

வினய் அதற்குமேல் அவனை வற்புறுத்தவில்லை. பொறைகளைச் சாப்பிட்டுவிட்டு அந்த டீக்கடையிலேயே தண்ணீர் வாங்கிக் குடித்தான். ‘நீ எங்க தங்கியிருக்கே?’ என்று கேட்டான். அண்ணா சிரித்தான்.

‘எதுக்கு சிரிக்கறே? இந்த ஊர்லதானே இருக்கே?’ என்று வினய் மீண்டும் கேட்டான்.

‘இங்கேயும் இருப்பேன். அதைவிடு. உனக்குப் படுக்கணும். அதானே? என்னோட வா’ என்று சொல்லிவிட்டு எழுந்து நடந்தான். இருவரும் பத்து நிமிடங்கள் நடந்து ஒரு வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். அந்த வீட்டில் ஒரு கிழவி தனியாக இருந்தாள். அண்ணா அவளிடம், ‘இன்னிக்கு இவன் இங்க படுத்துக்கட்டும்’ என்று சொன்னான். யார் என்ன என்றுகூட விசாரிக்காமல் அவள் சரியென்று சொல்லிவிட்டு, ஒரு பாயை எடுத்து வந்து விரித்தாள். வினய் படுத்துக்கொண்டு, ‘நீயும் படுக்கறதுதானே?’ என்று அண்ணாவைப் பார்த்துச் சொன்னான். அவன் சிரித்தபடி, ‘சரி’ என்று சொல்லிவிட்டு அவனருகே படுத்தான்.

‘ரொம்ப வருஷமாச்சில்லே?’

‘என்னது?’

‘நம்மாத்துல நாம நாலு பேரும் இப்படித்தான் ஒருத்தர் பக்கத்துல ஒருத்தர் வரிசையா படுப்போம். ஒரு கோடில அப்பா. இன்னொரு கோடில அம்மா.’

‘ஆமா.’

‘நீ அதையெல்லாம் நினைச்சிப்பியாடா?’ என்று வினய் கேட்டான்.

‘இல்லே. நினைக்கறதில்லே’ என்று அண்ணா பதில் சொன்னான்.

‘எப்படிடா இப்படி எல்லாத்தையும் சட்டுனு உதறமுடிஞ்சிது உன்னால?’

‘தெரியல.’

‘இதெல்லாம் ஒரு பக்குவம் இல்லே? எனக்குத்தான் இதெல்லாம் புரியமாட்டேங்கறது. ஆனா நீ ஊரைவிட்டுப் போனப்பவே விமல் சொன்னாண்டா. நீ சாதாரண ஆள் இல்லை, குளத்துக்கு அடில பத்து நிமிஷம் மூச்சடக்கி தியானம் பண்ணுவே அப்படி இப்படின்னு என்னவோ...’

‘ஆமா.’

‘அந்த குளத்துல ரிஷிகள்ளாம் இருக்கான்னு சொல்லுவியாமே? சினிமாக்காராதான் அங்க பர்மனண்ட்டா இருப்பா.’

‘இல்லை வினய். அங்க ரிஷிகள் இருக்கா. அது பொய்யில்லே.’

‘நீ பாத்திருக்கியா?’

‘ஆமா.’

‘தப்பா நினைச்சிக்காத விஜய். என்னால நம்ப முடியலை’ என்று வினய் சொன்னான்.

‘அதனால ஒண்ணும் பிரச்னை இல்லை. நீ நம்பணும்னு நான் சொல்லலியே?’

‘இல்லே.. நிஜமாவே ரிஷிகள் இருந்தான்னா.. சரி, அப்படியே இருந்தாலும் நம்ம கண்ணுக்கெல்லாம் தெரியற மாதிரியாவா இருப்பா?’

‘என் கண்ணுக்குத் தெரிஞ்சா.’

‘நிஜமாவா?’

‘நான் பொய் சொல்லக் கூடாது வினய். எனக்கு அதுக்கு அனுமதி இல்லை.’

‘யாரோட அனுமதி?’

‘என் குரு.’

‘அது யாரு?’

‘உனக்குத் தெரியாது. கபிலர்.’

வினய்க்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. கபிலர்! எளிய சில சொற்களில் எத்தனை அநாயாசமாக இவன் காலங்களைக் கடந்துவிடுகிறான்! நீ நம்புவது நம்பாதது என் பிரச்னையில்லை என்று எத்தனை சுத்தமாக நகர்த்தி வைத்துவிடுகிறான்! எப்படி முடிகிறது இதெல்லாம்!

‘கபிலரா! அவரை நீ பாத்திருக்கியா?’

‘அவர்தான் என் குரு.’

‘சரி. எங்க இருக்கார் அவர்?’

அவன் சற்றும் தயங்காமல் பதில் சொன்னான். ‘முன்னாடி, நம்ம ஊர் அல்லிக் குளத்துக்கு அடியிலே இருந்தார். இப்போ அங்கே இல்லை.’

‘பின்னே?’

‘உங்க காஞ்சீபுரம் வரதர் கோயில் குளத்துக்கடியிலே இருக்கார்.’

வினய் சிரித்துவிட்டான். ‘அத்தி வரதருக்குத் துணையாவா?’

‘இல்லை. அத்தி வரதரே அவர்தான்.’

அதற்குமேல் என்ன பேசுவதென்று வினய்க்குத் தெரியவில்லை. ஒரு சன்னியாசிக்குரிய சகல லட்சணங்களும் அண்ணாவுக்குச் சேர்ந்துவிட்டதாக அவனுக்குத் தோன்றியது. அதற்குமேல் அவனை வற்புறுத்தி வீட்டுக்கு அழைப்பதெல்லாம் முடியாத காரியம் என்பது அவனுக்குப் புரிந்துவிட்டது. இந்த சித்து ஆட்டங்கள், மாய தந்திர விளையாட்டுகளை எங்கே கற்றுக்கொண்டான் என்பது மட்டும் தெரிந்துவிட்டால் போதும்.

‘விளையாட்டா? நான் எங்கே விளையாடினேன்?’ என்று அண்ணா கேட்டான்.

‘இல்லே.. என் பக்கத்துல நின்னுண்டு டெலிபோனுக்குள்ளேருந்து பேசினியே.. அதச் சொன்னேன்.’

‘அது விளையாட்டில்லை வினய். அது ஒரு அறிவியல்’ என்று அண்ணா சொன்னான்.

‘அதையும் கபிலர்தான் கத்துக் குடுத்தாரா?’

‘ஆமா.’

‘உனக்கு மட்டும்தான் கத்துக் குடுப்பாரா? இல்லே யார் கேட்டாலும் கத்துக் குடுப்பாரா?’

‘யார் கேட்டாலும் கத்துக் குடுப்பார். ஆனா, யார் கண்ணுல அவர் தென்படறார்னு ஒண்ணு இருக்கில்லியா?’ என்று சிரித்துக்கொண்டே கேட்டான்.

வினய் சிறிது நேரம் ஒன்றும் பேசவில்லை. உறங்கத் தொடங்கும் முன் ஒன்று மட்டும் சொன்னான், ‘உன்கிட்டே எதோ சில சக்தி இருக்குன்னு புரியறது விஜய். ஆனா நீ சொல்ற கபிலர் கதையெல்லாம் நம்பும்படியா இல்லை. தப்பா நினைச்சிக்காதே.’

‘அப்படியா?’

‘ஆமா. அப்படித்தான்.’

‘சரி தூங்கு. நான் அவர்கிட்டே கேக்கறேன்.’

‘என்னன்னு?’

‘என் தம்பிய நம்ப வெக்கறேளான்னு.’

‘சரின்னு சொல்லுவாரா?’

‘சொல்லிட்டார்னா நாளைக்குக் கார்த்தால ஒன்ன அவர்ட்ட கூட்டிண்டு போறேன்.’

‘எங்கே? காஞ்சீபுரம் வரதர் சன்னிதிக்கா?’

‘சன்னிதில எனக்கென்ன வேலை? குளக்கரைக்குப் போனா போதும். அவர் உள்ளதான் இருப்பார்.’

வினய் சரி என்று சொன்னான். சிரித்துக்கொண்டே உறங்கிப் போனான்.

மறுநாள் விடிந்தபோது, அவன் வரதர் கோயில் புஷ்கரணிக் கரையில் இருந்தான். அவன் பார்த்துக்கொண்டிருந்தபோதே அண்ணா குளத்துக்குள் இருந்து எழுந்து வெளியே வந்தான்.

‘வா. ஒன்ன கூட்டிண்டு வரச் சொல்லிட்டார்’ என்று சொன்னான்.

(தொடரும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

55. வேறிடம்

 

 

வினய்க்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. இரவு படுத்த இடம் ஒன்றாகவும் காலை விழித்த இடம் வேறாகவும் இருந்த குழப்பத்தில், சில விநாடிகள் பிரமை கொண்டு அமர்ந்திருந்தான். அண்ணா அவனை நீருக்குள் இறங்கச் சொல்லி அழைத்தபோது சற்று பயந்தான். எதற்கு இந்த விபரீதங்கள் என்று அவனுக்குத் தோன்றியது. கபிலர் இருந்தால் என்ன? இல்லாது போனாலென்ன? அவனுக்கு அவனது நம்பிக்கை. அதைக் கேள்விகளால் காயப்படுத்தி என்ன ஆகப்போகிறது? ஆனால் சந்தேகமில்லாமல் அண்ணா வேறு யாரோவாகியிருக்கிறான். சராசரிகளால் புரிந்துகொள்ள முடியாத சில சக்திகள் அவனுக்கு வந்திருக்கின்றன. அவன் அதைப் பயின்று பெற்றானா, தன்னியல்பாக வந்ததா என்பதல்ல முக்கியம். இனி எந்நாளும் அவன் வீடு திரும்பப் போவதில்லை என்பதுதான் அவனது நடவடிக்கைகள் சொல்லும் செய்தியாக இருந்தது.

அண்ணா அவனை மீண்டும் அழைத்தான். ‘பயப்படாமல் இறங்கு. நான் இருக்கிறேன்.’

‘எதற்கு?’ என்று வினய் கேட்டான்.

‘சொன்னேனே? உனக்கு அனுமதி தரப்பட்டிருக்கிறது.’

வினய் சிறிது யோசித்தான். ‘விஜய், நான் உன்னை மதிக்கிறேன். உன்னை நம்புகிறேன். ஆனால் எனக்கு இதெல்லாம் வேண்டாம்.’

அண்ணா புன்னகை செய்தான். இரண்டு தாவில் நீந்தி, படியருகே வந்தான். தண்ணீர் சொட்டச் சொட்ட வினய் அருகே நடந்துவந்து அவன் தலையில் கைவைத்தான்.

‘என்ன செய்கிறாய்? இதோ பார் மந்திர மாயங்களெல்லாம் எனக்கு வேண்டாம்.’

‘ஒன்றுமில்லை வினய். சிறிது அமைதியாக இரு’ என்றவன், அவன் தலை மீது வைத்த உள்ளங்கையை மெல்ல மெல்ல அழுத்த ஆரம்பித்தான்.

‘என்ன செய்கிறாய்? எனக்கு இதெல்லாம் வேண்டாம்’ என்று வினய் மீண்டும் சொன்னான். அவன் கையைத் தட்டிவிட்டு எழுந்து செல்ல முயன்றபோது, அண்ணா அவனை அப்படியே தூக்கிக் குளத்துக்குள் போட்டான்.

வினய்க்கு மூச்சடைத்துவிட்டது. அவனுக்கு நீச்சல் தெரியாது. இறந்துவிடப்போகிறோம் என்ற பதற்றத்தில், ஆவேசமாக அண்ணாவை உதைத்துத் தள்ளி வெளியே வரப் பார்த்தான். சில விநாடிகள்தாம். தான் இறக்கவில்லை என்பது புரிந்துவிட்டது. தவிர நீருக்குள் அதுவரை அவன் போனதில்லை என்பதால், அந்த அனுபவம் புதிதாக இருந்தது. உடலின் எடை முற்றிலுமாக இல்லாமலாகிவிட்டதாக உணர்ந்தான். ஒரு மீனைப்போல் போய்க்கொண்டே இருந்தான். திடீரென்று அவனுக்குக் குழப்பமாகிவிட்டது. குளம்தானே இது? ஆனால் எப்படி இத்தனை நீண்ட பயணத்தை அதன் ஆழத்தில் செய்கிறோம்? அத்தி வரதரேகூட இருபதடி ஆழத்தில்தான் இருப்பதாகச் சொல்லுவார்கள். ஆனால் இதென்ன அதையும் தாண்டிப் போய்க்கொண்டே இருக்கிறோம்?

தன்னோடு வந்துகொண்டிருந்த அண்ணாவிடம் வினய் இதைக் கேட்டான். அப்போது அவனுக்கு மீண்டும் வியப்பாக இருந்தது. தண்ணீருக்குள் எப்படித் தன்னால் பேச முடிகிறது? தன்னால் பேச முடிவது மட்டுமல்ல. பேசுவது அவனுக்குக் கேட்கவும் செய்கிறது. இதென்ன ஆச்சரியம்!

அண்ணா சொன்னான், ‘அத்தி வரதர் என்பவரை ஒரு சிலையாகவா கருதுகிறாய்?’

‘இல்லையா பின்னே? நாற்பது வருடங்களுக்கு ஒருமுறை குளத்து நீரை இரைத்து வெளியே கொட்டி அவர் சன்னிதிக்குப் போக வழி செய்வார்கள் என்று சொன்னார்களே.’

‘ஆம். அது உண்மைதான். ஆனால் கடவுள் என்பது சிலையல்ல.’

‘அதுசரி. கடவுள் என்பவர் சிலையல்லதான். ஆனால் அத்தி வரதர் சிலைதானே?’

‘இல்லை வினய். அவர் ஒரு ஆள். ஆசாமி. அவரது நிஜப்பெயர் கபிலர்.’

‘நீ பொய் சொல்கிறாய். இதையெல்லாம் நம்ப நான் குழந்தையில்லை’ என்று வினய் சொன்னான்.

அண்ணா சிரித்தான். ‘நீருக்குள் நீ நீந்தி வருகிறாய். நீருக்குள் உன்னால் பேச முடிகிறது. என்னோடு விவாதம் செய்ய முடிகிறது. இதையெல்லாம் மட்டும் எப்படி நம்புகிறாய்?’

வினய்க்குக் குழப்பமானது. ஆம். எப்படி இதெல்லாம் முடிகிறது?

‘வினய், அறிதலின் எல்லை என்று ஒன்று உள்ளது. அதேபோல, அறிவின் எல்லையும் ஒன்று உண்டு. அதற்கும் அப்பால் உலவும் சக்தியை அறிவதே ஆன்மிகம். வேறு வழியில்லை. இதையும் அறியத்தான் வேண்டும். ஆனால் மூளையைப் பயன்படுத்தி அறிய முடியாது. மனத்தால் நிகழ வேண்டியது இது’ என்று அண்ணா சொன்னான்.

வினய்க்கு அது புரியவில்லை. தனக்கு எதற்கு இது என்ற வினா மட்டும் அவன் மனத்தில் இருந்தது. ஆனால் அதை அவனிடம் கேட்கவில்லை. இருபது முப்பது நிமிடங்கள் நீருக்கடியில் போய்க்கொண்டிருந்த பின்பு அண்ணா அவன் கையை எட்டிப் பிடித்தான்.

‘என்ன?’

‘நாம் வந்தடைந்துவிட்டோம்.’

‘எங்கே?’

‘கபிலரின் இருப்பிடத்துக்கு. அங்கே பார்’ என்று அவன் சுட்டிக்காட்டிய திசையில் நீர்த்தாவரம் ஒன்று புதராகப் பெருகி வளர்ந்து மிதந்துகொண்டிருந்தது. அண்ணா அந்த இடத்துக்கு வினய்யை அழைத்துச் சென்றான். நீந்தியபடியே புதரை விலக்கி அவன் முன்னால் செல்ல, வினய் அவன் கால்களைப் பிடித்துக்கொண்டு பின்னால் மிதந்து சென்றான். முதலில் அது ஒரு புதரைப் போலத்தான் தெரிந்தது. ஆனால் போகப் போக அது ஒரு பெரும் கானகத்தின் நுழைவாயில் என்று புரிந்தது. அண்ணா அங்கே அடிக்கடி வருபவனைப் போல வெகு இயல்பாகப் போய்க்கொண்டே இருந்தான். நீருக்கடியில் இத்தனை பெரிய கானகம் எப்படி சாத்தியம் என்று வினய்க்குப் புரியவேயில்லை. வியப்பும் பிரமிப்புமாக அவன் நாலாபுறமும் பார்த்துக்கொண்டே போனான். சட்டென்று ஓரிடத்தில் நீரற்றுப் போனது. அந்தக் கணம் இருவருமே பொத்தென்று கீழே விழுந்தார்கள். பெரிய உயரமில்லை. ஒரு நாலடி உயரம்தான் இருக்கும். குளத்துக்குள் குதித்தது போலவே, குளத்தில் இருந்து குதித்தாற்போன்ற அனுபவம்.

‘டேய், நாம் குளத்துக்குள் அல்லவா இறங்கி வந்தோம்? திடீரென்று எப்படித் தரை தெரிகிறது? தவிர, இங்கு தண்ணீரின் சுவடே இல்லையே?’ என்று வினய் கேட்டான்.

‘தண்ணீர் இல்லாமல் எப்படி இத்தனைத் தாவரங்கள் இருக்கும்? அந்த மரத்தைப் பார். அப்படியொரு மரத்தை நீ எங்குமே கண்டிருக்க முடியாது’ என்று அண்ணா ஒரு மரத்தைச் சுட்டிக் காட்டினான்.

விழுந்த இடத்தில் எழுந்து நின்று திரும்பிப் பார்த்த வினய் பிரமிப்பில் மூச்சடைத்துப் போனான். ஆறடி உயரம்தான் அந்த மரம். நூறு கிளைகளும் கிளை மறைத்த வட்ட வடிவ இலைகளும் ஒவ்வொரு இலைக்கு நடுவிலும் ஒரு தாமரைப் பூவுமாக மிகவும் நூதனமாக இருந்தது அது. தாமரை எப்படி மரத்தில் பூக்கும்? அல்லது இது தாமரை போன்ற தோற்றமுடைய வேறு ஏதேனும் மலரா?

வினய் நம்ப முடியாத அதிசயத்தைக் கண்டவன்போல் அந்த மரத்தருகே சென்று ஒரு பூவைத் தொட்டுப் பார்த்தான். செந்நிறத்தில் பூத்துப் பொலிந்திருந்த அந்த மலர் அவன் விரல் பட்டதும் நீலமானது. அவன் பயந்துவிட்டான். அண்ணா புன்னகையுடன் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

‘இதைத் தொடக்கூடாதா?’ என்று வினய் கேட்டான்.

‘அப்படியெல்லாம் இல்லை. இன்னொன்றைத் தொடு’ என்று அண்ணா சொன்னான்.

வினய் தயக்கமுடன் இன்னொரு பூவைத் தொட்டான். உடனே அதுவும் நீலமானது.

‘இது என்ன அதிசயம்? இது எப்படி நிகழ்கிறது!’ என்று வினய் கேட்டான்.

‘நீ அதை வலக்கையால் தொட்டாய் அல்லவா? இம்முறை இடக்கையால் இன்னொரு பூவைத் தொடு’ என்று அண்ணா சொன்னான்.

வினய் இடது கரத்தால் இன்னொரு பூவைத் தொட்டதும், அது ஒரு கனியாக மாறி அவன் கரத்தில் விழுந்தது.

‘டேய் என்னடா இதெல்லாம்!’

‘சாப்பிடு’ என்று அண்ணா சொன்னான். வினய், வியப்பு நீங்காமல் அதை வாயில் வைத்து ஒரு துளி கடித்தான். அது இனிப்பாக இல்லை. கசப்போ துவர்ப்போ புளிப்போ காரமோ உப்போ இல்லை. சுவையற்றதாகவும் இல்லை. ஆனால் என்ன சுவையென்று அவனால் கண்டறிய முடியவில்லை. என்ன என்ன என்று அண்ணாவிடம் திரும்பத் திரும்பக் கேட்டான்.

‘நீ உனக்குத் தெரிந்த ஆறு சுவைகளில் இது எது என்று யோசிக்கிறாய். இதைத்தான் சொன்னேன். நீ அறிந்தவற்றுக்கு அப்பால் உள்ளவற்றை அறிந்ததைக் கொண்டு அளக்க முடியாது.’

‘அப்படியா? ஏழாவதாக ஒரு சுவை உண்டா?’

‘ஏழாயிரம் சுவைகள்கூட இருக்கலாம் அல்லவா?’

வினய்க்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. இன்றெல்லாம் இடைவிடாமல் அவன் தன்னை பிரமிப்பில் வீழ்த்திக்கொண்டே இருக்க முடிவு செய்திருப்பதாக நினைத்தான். ஒரு மாறுதலுக்கு அவனைச் சற்று அதிர்ச்சியடைய வைத்துப் பார்த்தால் என்ன?

சட்டென்று அவன் தன் கையில் இருந்த கனியை எறிந்துவிட்டு, அம்மரத்தின் இலைகளைப் பறித்து உண்ண ஆரம்பித்தான். கணப்பொழுதில் அவன் உடல் பச்சைப் பசேலென்று நிறம் மாறிப்போனது.

(தொடரும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

56. எடுத்தலும் வைத்தலும்

 

 

பரிசல் கரை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. மழை பெய்ய ஆரம்பித்தால் பரிசலைத் திருப்பிவிட வேண்டும் என்று அரசியல் அமைப்புச் சட்டத்தில் யாரோ சொல்லியிருக்க வேண்டும். நான் பரிசல்காரனிடம் எவ்வளவோ மன்றாடிப் பார்த்தும் அவன் அதற்குமேல் நீர்ப்பரப்பில் மிதந்துகொண்டிருக்க முடியாது என்று சொல்லிவிட்டான். இரண்டு சன்னியாசிகளின் பாதுகாப்பு அவனுக்கு மிகவும் முக்கியம். மழையில் நனைந்து ஜலதோஷம் பிடித்துக்கொண்டால் உட்கார வைத்துத் தைலம் தேய்த்துவிட எங்களுக்கு யார் இருக்கிறார்கள்? எனக்குச் சற்று எரிச்சலாக இருந்தாலும் அடக்கிக்கொண்டேன். சரி, எவ்வளவு நேரம்தான் நீர்ப்பரப்பில் அலைந்துகொண்டே இருப்பது? கரை ஏறித்தான் தீரவேண்டும்.

ஆனால் வினய்க்கு இன்னும் சிறிது நேரம் இருக்கலாம் என்று தோன்றியது. அவனும் பரிசல்காரனிடம் கெஞ்சிப் பார்த்தான். மழை விட்டதும் மீண்டும் வரலாம் என்று அவன் சொன்னான்.

‘விடு வினய். நாம் கரையிலேயே அமர்ந்து பேசுவோம். என்ன இப்போது?’ என்று நான் சொன்னேன்.

எனக்கு அவன் குளத்துக்கு அடியில் பயணம் மேற்கொண்டு கானகத்தை அடைந்த கதையைச் சொன்னபோதே புரிந்துவிட்டது. அண்ணா அவனுக்கு என்ன செய்திருக்கிறான் என்று தெரிந்துவிட்டபடியால் அதன்பின் அக்கதையில் எனக்குப் பெரிய ஆர்வம் உண்டாகவில்லை.

‘இரு. எப்படியும் நீ அந்த வாலாஜாபாத் கிழவி வீட்டில்தான் திரும்பக் கண் விழித்திருப்பாய். சரியா?’ என்று கேட்டேன்.

‘அதுதாண்டா எனக்கு ஆச்சரியம். கண் விழிச்சது அங்கேதான். ஆனா தொப்பலா நனைஞ்சிருந்தேனே?’

‘அவன் உம்மேல ஒரு குடம் தண்ணி ஊத்தியிருப்பான்’ என்று சொன்னேன். ‘இல்லேன்னா அந்தளவுக்கு வியர்க்க வெச்சிருப்பான்.’

‘வெறும் கனவுதான்னு சொல்றியா?’

‘கனவுதான். ஆனா தானா வந்ததில்லே. உன் கனவை அவன் எழுதியிருக்கான்.’

‘முடியுமா விமல்?’

‘ஏன் முடியாது? முழிச்சிண்டிருக்கறப்போ சொல்லிக்குடுக்கறதெல்லாம் மனசுல போய் உக்கார்றது இல்லியா? அதையேதான் அவன் கனவுல செஞ்சிருக்கான்.’

‘புரியலை.’

‘குழந்தை தூங்கறபோது அதோட கை கால் அகண்டிருந்தா அம்மா பார்த்து சரி பண்ணி படுக்க வெப்பாளே.. அந்த மாதிரி. உன் கனவு உன்னை இழுத்துண்டு போறப்போ, அதைத் தடுத்து நிறுத்திட்டு அவன் ஒரு கனவை அங்கே விதையாட்டம் தூவிட்டுப் போயிடுவான்.’

‘பயங்கரம்!’ என்றான் வினய். ‘ஆனா அன்னிக்கு நான் அவன் சொன்னதைக் கேட்டேன் விமல். என்னைத் திருவானைக்காவுக்குப் போகச் சொன்னான். சொரிமுத்து சித்தனைப் போய் பார்க்கச் சொன்னான்.’

‘அதைவிடு. குளத்துக்கு அடியிலே நீ கபிலரைப் பார்த்தியா?’

அவன் சில விநாடிகள் அமைதியாக இருந்தான். பிறகு, ‘ஆமா. பாத்தேன்’ என்று சொன்னான்.

‘எப்படி இருந்தார்?’

‘ஜடாமுடி இருந்தது. தாடி இருந்தது. நெத்தியிலே கோபி சந்தனம் வெச்சிண்டிருந்தார். ஆனா காவி இல்லே. வேட்டி பழுப்பா இருந்தது. கண்ணுக்கு நடுவிலே கருமணியே இல்லை.’

‘அதைவிடு. ஆன வயசுக்கு உதிர்ந்திருக்கும்’ என்று சொன்னேன். சிரித்தான்.

‘என்னமோ பண்ணிட்டாண்டா. நான் அப்படி மாறுவேன்னு நினைக்கவேயில்லை. அந்த கபிலர் என்னைத் தொட்டார். அது நிச்சயம். அவரோட இடது கை ஒரு ரெண்டு நிமிஷத்துக்கு என் உச்சந்தலை மேலதான் இருந்தது. கண்ணை மூடி என்னமோ சொன்னார். சொல்லிண்டே இருந்தார். அவர் முடிச்சிட்டு கைய எடுத்தப்போ எனக்கு வீடு, அப்பா அம்மா எல்லாம் மறந்துபோச்சு விமல். உடனே போயிடணும்னு தோணிடுத்து.’

‘எங்கே?’

‘தெரியலே.. எங்கயாவது போயிடணும். இமயமலைக்கா, வேற எங்கயாவதான்னு அப்ப எனக்கு நினைக்க முடியலை. ஆனா நான் வீட்டுக்கு சொந்தமானவன் இல்லைன்னு தோணிடுத்து.’

நான் சட்டென்று கேட்டேன். ‘சித்ராவையும் உதறிவிட்டா?’

அவன் என்னை உற்றுப் பார்த்தான். ‘நீ சித்ராவை மறக்கவேயில்லை’ என்று சொன்னான்.

நான் எப்படி மறப்பேன்? எதற்காக நான் எதையும் மறக்க வேண்டும்? நான் நினைவுகளின் முத்துச் சிமிழ். என் சிமிழுக்குள் பல்லாயிரம் கோடி நினைவுகளை நான் சேமித்துக்கொண்டே இருக்கிறேன். தேவைப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சரியான நினைவுகளைச் சிப்பி திறந்து வெளியே எடுத்து விரிக்கிறேன். வண்ணமயமான அதன் மேற்புறத்தில் லாவாக்கள் நீந்திக்கொண்டிருக்கும். நானும் என் நினைவுகளும். என்றைக்குமே நான் அவற்றை உதறியதில்லை. உதற விரும்பியதும் இல்லை.

‘ஆனால் சொரிமுத்துச் சித்தன் என்னிடம் முதலில் சொன்ன வார்த்தையே, நிர்வாணம்தான்!’ என்று வினய் சொன்னான்.

‘எனக்குத் தெரியும் வினய். சாத்தியமில்லாதவற்றை சாத்தியப்படுத்த முயற்சி செய்யும் துறையில் அவர்கள் இயங்குகிறார்கள். இறுதியில் இது சாத்தியமில்லை என்று சொல்லிக் கையெழுத்திட்டுவிட்டுப் போய்விடுவார்கள். சேரும் இடமல்ல. பயணம்தான் அவர்களுக்குப் பெரிது.’

‘அண்ணா சென்றடைய மாட்டான் என்கிறாயா?’

‘வாய்ப்பே இல்லை.’

‘எப்படி இத்தனைத் தீர்மானமாகச் சொல்கிறாய்? அவனுக்கு என்னென்ன வித்தைகள் தெரிந்திருக்கின்றன தெரியுமா?’

நான் சிரித்தேன். ‘ஒரு வித்தைக்காரனாவதா சாதனை?’

‘இல்லையா? வித்தை என்ற சொல்லை மலினமாக எண்ணாதே. வாலாஜாபாத்தில் இருந்து கணப் பொழுதில் நான் திருவானைக்கா போய்ச் சேர்ந்தேன். அது கனவல்ல. நிஜத்தில் நடந்தது’ என்று வினய் சொன்னான்.

‘அப்படியா? எனக்கென்னவோ நீ வாலாஜாபாத்துக்கே போகவில்லை என்றுதான் தோன்றுகிறது.’

‘ஆனால் நான் சொரிமுத்துவைப் பார்த்தேனே? அவனோடு ஆறு வருடங்கள் வாழ்ந்திருக்கிறேன்!’

‘இதோ பார் வினய். கண்ணுக்குத் தெரியாத உலகில் உலவுகிற ஜீவராசிகள் அவன் சொல்பேச்சு கேட்கின்றன. ஒரு ஜீவனுக்கோ, ஒன்றுக்கு மேற்பட்ட ஜீவன்களுக்கோ அவன் மேய்ப்பனாக இருக்கிறான். அவ்வளவுதான். இதை என்னால் ஒரு சாதனையாக எண்ணக்கூட முடியாது.‘

வினய் வெகுநேரம் அமைதியாக இருந்தான். மழை விட்டிருந்தது. இருட்ட ஆரம்பித்திருந்தது. ஏனோ எங்களுக்கு மீண்டும் நீருக்குள் செல்லத் தோன்றவில்லை. கேட்டிருந்தால் அந்தப் பரிசல்காரன் எங்களை மீண்டும் நதியில் அழைத்துச் சென்றிருப்பான். நாங்கள் கேட்கவில்லை. கரையிலேயே ஒரு பாறையின் மீது அமர்ந்து நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம்.

வினய், சொரிமுத்துச் சித்தனிடம் போய்ச் சேர்ந்த கதையைச் சொல்லிக்கொண்டிருந்தான். முதல் முதலில் அவனைக் கண்டபோது தனக்கு அருவருப்பாக இருந்ததாக வினய் சொன்னான்.

‘அவன் கிட்டேயே போக முடியாது. அப்படியொரு நாற்றம்’

‘அவன் வியாதிகளைத் தீர்ப்பவன்’ என்று நான் சொன்னேன்.

‘ஆம். உனக்கு அது தெரியுமா?’

‘யூகம்தான். வியாதிகளை அவன் துர்நாற்றமாக உருமாற்றித் தன் மீது பூசிக்கொண்டுவிடுகிறான். அவனைப்போலப் பல பேர் உண்டு. திருவண்ணாமலையில் நானும் ஓரிரண்டு பேரை அப்படிச் சந்தித்திருக்கிறேன்.’

‘ஆம். அவன் ஒரு மருத்துவன். நம்ப முடியாத மருத்துவன். ஒரு கேன்சர் நோயாளியை அவன் குணமாக்கியதை நேரில் பார்த்தேன். அன்றுதான் என் மானசீகத்தில் அவனுக்கு நான் சீடனானேன்’ என்று வினய் சொன்னான்.

‘என்ன செய்தான்?’

வினய் அந்தக் கதையை எனக்குச் சொன்னான். சமயபுரத்துக்கு அருகே வசித்து வந்த செருப்புத் தைக்கும் தொழிலாளி அவன். அவனுக்குப் புற்று நோய் என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள். சென்னை கேன்சர் இன்ஸ்டிடியூட்டுக்குப் போய் அட்மிட் ஆகச் சொல்லி சொல்லியிருக்கிறார்கள். தோராயமாக என்ன செலவாகும் என்று தெரியாத நிலையில், இருக்கும்வரை வாழ்ந்துவிட்டு, முடியும்போது இறந்துவிடலாம் என்று அவன் முடிவு செய்திருக்கிறான். ஆனால் வலி பொறுக்காமல் போனபோது கதறிவிட்டிருக்கிறான். வீட்டுக்கு விவரம் தெரிந்து யாரோ சித்த வைத்தியரிடம் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். வந்த மரியாதைக்கு அவர் ஏதோ சூரணத்தைக் கொடுத்துவிட்டு, திருவானைக்கா சித்தனைப் போய்ப் பார்க்கச் சொல்லியிருக்கிறார்.

மறுவாரம் வெள்ளிக்கிழமை அன்று காலை எட்டு மணிக்கு அந்த செருப்புத் தைக்கும் தொழிலாளி சொரிமுத்துவின் வீட்டுக்கு வந்தான். அவனை அவனது மனைவி அழைத்து வந்திருந்தாள். சொரிமுத்து அப்போது வீட்டுக்கு வெளியே குத்துக்காலிட்டு அமர்ந்து தேங்காய் உரித்துக்கொண்டிருந்தான். அவனைக் கண்டதும் என்னவென்று விசாரித்தான். செருப்புத் தைக்கும் தொழிலாளியின் மனைவி விவரத்தைச் சொல்லி அழுதாள்.

‘சாமி நீங்க யாருன்னு எங்களுக்குத் தெரியாது. வைத்தியருங்களா? உங்கள போய் பாக்கச் சொல்லி தென்னூர் கண்ணபிரான் வைத்தியர் சொன்னாருங்க’ என்று சொன்னாள்.

சொரிமுத்து அவனை வீட்டுக்குள் வரச் சொல்லிவிட்டு எழுந்து உள்ளே போனான். அவன் பின்னால் சென்றபோது, ‘வெளிய ஒரு காய் உரிச்சேன் பாரு. அதக் கொண்டு வா’ என்று சொன்னான்.

அவனும் பதில் பேசாமல் மீண்டும் வெளியே வந்து அவன் உரித்து வைத்திருந்த தேங்காயை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றான். வினய் அப்போது வீட்டுக்குள் சொரிமுத்துவுக்குக் காலை உணவைச் சமைத்துக்கொண்டிருந்தான். நொய்க் கஞ்சி. வீட்டுக்கு யார் புதிதாக வந்திருப்பது என்று வினய் திரும்பிப் பார்த்தான். ‘சீக்கிரம் கஞ்சி ஆவட்டும்’ என்று சொரிமுத்து சொன்னான். வந்தவனை உட்காரவைத்து, அவன் எதிர்பாராத கணத்தில் அவன் தலையில் முட்டி தேங்காயை உடைத்தான். அவன் திடுக்கிட்டு ஆவென்று அலற, ‘சத்தம் போடாம இரு’ என்று சொன்னான்.

அந்த செருப்புத் தைக்கும் தொழிலாளிக்கும் அவன் மனைவிக்கும் அங்கே என்ன நடக்கிறது என்று புரியவில்லை. சொரிமுத்துவை ஒரு சித்தன் என்று அவர்களால் நினைக்க முடியவில்லை. கண்ணபிரான் வைத்தியரைவிடப் பெரிய வைத்தியராக இருக்கும் என்று எண்ணித்தான் அவர்கள் அங்கே வந்திருந்தார்கள். ஆனால் இதென்ன? அழுக்கு வேட்டியும் பரட்டைத் தலையுமாக ஒரு மொடாக்குடிகாரனின் தோற்றத்தில் கண் சிவந்து இருக்கிறானே இவன்?

வினய் கஞ்சியை இறக்கி வேறொரு பாத்திரத்தில் கொட்டித் தாளித்து ஒரு குவளையில் எடுத்துவந்து சொரிமுத்துவின் அருகே வைத்தான். அது சூடாக இருந்தது. ஆவி பறந்தது. சிறிது நேரம் அதைக் கையில் எடுத்துப் பார்த்துக்கொண்டே இருந்த சொரிமுத்து, அதை அந்த செருப்புத் தைக்கும் தொழிலாளியிடம் கொடுத்து, ‘ஒரே மூச்சுல குடி’ என்று சொன்னான். அவன் தயங்கினான்.

‘குடின்னு சொல்றேன்ல?’

அச்சத்தில் அவன் சட்டென்று அந்தக் கஞ்சியைக் குடித்துவிட்டான். குடிக்கும்போதே ஆஊ என்று சூடு தாங்கமாட்டாமல் அலறினான். என்ன நடக்கிறது என்று புரியாமல் அவன் மனைவி திகைத்துப் போய்ப் பார்த்துக்கொண்டிருந்தபோது, ‘தொண்டைக்குள்ள விரலவிட்டு வாந்தி எடு’ என்று சொரிமுத்து சொன்னான். இப்போது வினய் அவன் அருகே வந்து நின்றுகொண்டான்.

‘என்ன சாமி?’

‘வாந்தி எடுடா’ என்று சொரிமுத்து மீண்டும் சொன்னான். மாட்டிக்கொண்டோமே என்று அவன் நினைத்திருப்பான். வேறு வழியின்றி தொண்டைக்குள் நடுவிரலை விட்டு வாந்தியெடுக்க முயற்சி செய்தான்.

‘நல்லா... நல்லா குடைஞ்சி எடு’ என்று சொரிமுத்து மீண்டும் சொன்னான்.

நான்கைந்து முறை அவன் முயற்சி செய்தபிறகு அவனுக்கு வாந்தி வந்தது. அவன் ஓக்காளமிட்டு வாந்தி எடுக்கத் தொடங்கியபோது சட்டென்று சொரிமுத்து, அவன் தலையில் அடித்து உடைத்த தேங்காயில் அதை ஏந்திக்கொண்டான். இரண்டு மூடிகள் நிறைய, அவன் எடுத்த வாந்தி.

‘சரியாப் போச்சி. நீ போவலாம்’ என்று சொரிமுத்து சொன்னான்.

‘சாமி?’

‘எந்திரிச்சிப் போடா. ஒனக்கு ஒண்ணுமில்லை’ என்று அவன் மீண்டும் சொன்னதும், விட்டால் போதும் என்று அவன் தன் மனைவியை அழைத்துக்கொண்டு கிளம்பிப் போய்விட்டான்.

சில நிமிடங்கள் சொரிமுத்து தன் கையில் வைத்திருந்த, அவன் எடுத்த வாந்தியை உற்றுப் பார்த்துக்கொண்டே இருந்தான். சட்டென்று அதைத் தான் எடுத்துக் குடித்தான்.

வினய் ஆடிப் போய்விட்டான். ‘என்ன பண்றிங்க?’ என்று கேட்டான்.

‘விட்றா. மருத்துவம் பாக்கப் பணமில்லாதவன். அவன் சம்சாரத்த பாத்தியா? தலைல அடிச்சிக் கையில குடுத்தா வாங்கிக்குவா. அவ்ளோ சாது. அப்பா அம்மா இல்லே. ஒரே ஒரு பொட்டப் புள்ள. பொழைக்கவெக்க வேணாமா?’

‘அதனால?’

‘அவன் புத்துநோயை நான் எடுத்துக்கிட்டேன்.’

‘ஐயோ!’ என்று வினய் அலறினான்.

‘கூவாத. நாஞ்சாவ மாட்டேன். இன்னொருத்தனுக்கு இது இப்ப தேவைப்படுது. அவனுக்குக் குடுக்கற வரைக்கும் என்கிட்ட இருக்கும்’ என்று சொரிமுத்து சொன்னான்.

(தொடரும்)

http://www.dinamani.com/

Link to comment
Share on other sites

57. நாய் வளர்ப்பு

 

 

ஒரு கையில் அடங்குகிற அளவுக்குப் பெரிய கூழாங்கல் ஒன்றை வாயில் திணித்து நெஞ்சுக்குள் புதைத்தாற்போல் இருந்தது என்று வினய் சொன்னான். அவனால் சொரிமுத்து சொன்னதை முதலில் நம்ப முடியவில்லை. அவன் சித்தன் என்று தெரியும். சில தந்திரங்கள் செய்யக்கூடியவன் என்பதை நேரில் கண்டிருக்கிறான். உணவின்றியும் உறக்கமின்றியும் நாள் கணக்கில் அவனால் நடந்துகொண்டே இருக்க முடிவதைப் பார்த்திருக்கிறான். ஒரு துண்டு மஞ்சளையும் ஆறு துளசி இலைகளையும் ஏழெட்டு மிளகுகளையும் ஒன்றாக வைத்து இடித்து ஒருவேளை உணவாக உட்கொண்டுவிட்டு, ஒன்பது நாள்களுக்கு வெறும் நீர் அருந்தி வாழ்வதைப் பார்த்திருக்கிறான். ஆனால் புற்று நோயைக் குணப்படுத்தக்கூடிய அளவுக்கு சக்தி வாய்ந்தவனா என்று சந்தேகமாக இருந்தது. அவனிடம் கேட்கவும் தயங்கினான்.

சொரிமுத்து அவனையே பார்த்துக்கொண்டிருந்தான். ‘என்னா? நம்பலியா?’ என்று கேட்டான்.

‘இல்ல.. மருத்துவத்துல இன்னும் இதுக்கு ஒரு தீர்வு கண்டுபிடிக்கலை. அதைத்தான் நினைச்சிண்டிருந்தேன்’ என்று வினய் சொன்னான்.

‘வியாதின்றது ஒண்ணுதாண்டா. ஊர்ப்பட்ட பேரு குடுத்து ரகத்துக்கு ஒண்ணா மருந்து சொன்னா அவம்பேரு டாக்டர். என்னைய கேளு. வியாதிக்கு ஒரே பேரு கர்மா. கர்மாவ அழிக்க முடியாது. ஆளு மாத்தி, இடம் மாத்தி வெக்க முடியும்’ என்று சொரிமுத்து சொன்னான்.

வினய்க்கு அது புரியவில்லை. ‘எடுத்த புத்துநோய இன்னொருத்தனுக்கு வச்சா நம்புவியா?’ என்று சொரிமுத்து கேட்டான்.

‘ஐயோ வேண்டாம். யாரா இருந்தாலும் பாவம்தான். துக்கம் கூடாதுன்றதுதான் உங்க கொள்கைன்னா, ஒருத்தன் துக்கத்தை இன்னொருத்தனுக்கு எப்படித் தரலாம்?’

அன்றைக்கு சொரிமுத்துச் சித்தன் வினய்யிடம் ஒரு விஷயம் சொல்லியிருக்கிறான். அவன் ஒரு மேஸ்திரி. சம்பளத்துக்கு நியமிக்கப்பட்ட மேஸ்திரி. திட்டம் தீட்டிய பொறியியல் வல்லுநர் வரைபடத்தைக் காட்டி கட்டடம் எப்படி எழும்ப வேண்டும் என்று விளக்கிச் சொல்லியிருக்கிறான். நிலத்தின் எல்லைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. சுற்றுச் சுவர் இது. வெட்டவெளி இது. வீட்டின் தொடக்கப் புள்ளி இது. இங்கே இந்த அறை. அங்கே அந்த அறை. இங்கே மாடிப்படி. அங்கே பால்கனி. ஜன்னல் இப்படி வைக்க வேண்டும். கதவு இன்ன மரத்தாலானதாக இருக்க வேண்டும். மணலை இந்தக் கடையில் வாங்கு. செங்கலை அந்தச் சூளையில் இருந்து தருவி. சிமெண்டுக்கு இங்கே பேசியிருக்கிறது. தண்ணீருக்குக் கிணறு அதோ. உனக்காக ஒதுக்கப்பட்ட வேலையாட்கள் இத்தனை பேர். அதில் ஆண்கள் இவ்வளவு. பெண்கள் அவ்வளவு. இது கடப்பாறை. அது மண்வெட்டி. வேலையைத் தொடங்க இதுவே தருணம்.

சொரிமுத்து தனக்கு அளிக்கப்பட்ட ஆட்களைப் பரீட்சித்துப் பார்த்தான். இன்னின்னாருக்கு இன்னின்ன வேலைகள் என்று ஒதுக்கிக் கொடுத்தான். வேலையில் சுணக்கம் நேரும்போது ஆட்களை மாற்றிப் போட்டான். நீ மண்ணெடுத்தது போதும். போய் கலவை போடு. அவனை இங்கே வந்து பூசச் சொல்லு. அளக்கத் தெரியாதவன் நூல் பிடிக்காதே. போய் கிணற்றில் இருந்து நீர் எடுக்கும் வேலையை நீ பார். நீ அங்கே பூசு. அவன் இங்கே பட்டி பார்க்கட்டும். கலவை தூக்கி வரும் அந்தப் பெண்ணுக்குக் கழுத்து வலிக்கிறது பார். சுமையை நீ வாங்கு. அவளைச் சற்று ஓய்வெடுக்கச் சொல்.

‘தம்பி நான் இவ்ளதான். வெறும் மேஸ்திரி.’

‘உங்களை விடுங்க. உங்ககிட்ட வர்றவங்கள பத்தி சொல்லுங்க. உங்களுக்கு ஒதுக்காத ஆளுங்களுக்கு நீங்க ஒண்ணும் செய்ய முடியாதா?’

முடியாது என்று சொரிமுத்து சொன்னான். ‘நான் மட்டுமில்ல தம்பி. என்னைய மாதிரி இருக்கற எல்லாரும் அப்பிடித்தான். சித்தருகிட்ட போனேன்.. சும்மா பழங்குடுத்து திருப்பி அனுப்பிட்டாருன்னு எத்தினியோ பேரு சொல்லிக் கேட்டதில்ல? நானாச்சும் பழம் குடுத்து அனுப்புவேன். சில பேர் துண்ணூறு பூசி அனுப்பிடுவாங்க.’

அன்று மாலை சொரிமுத்து வெளியே போகலாம் என்று சொல்லி அவனை அழைத்துக்கொண்டு கிளம்பினான். திருவானைக்கா லெவல் கிராசிங்கினுள் நுழைந்து தண்டவாளங்கள் சென்ற வழியிலேயே நடக்க ஆரம்பித்தார்கள். வினய்க்கு சரளைக் கற்கள் மீது நடக்கக் கஷ்டமாக இருந்தது. அடிக்கடி கால் தடுக்கி விழப் போனான். சொரிமுத்து ஒவ்வொரு முறையும் அவனைத் தாங்கிப் பிடித்து நேராக நடக்க வைத்தான்.

வினய் சொன்னான். ‘நான் ஏன் உங்ககிட்டே வந்தேன்னு தெரியலை. அண்ணா போகச் சொன்னான். என்னமோ அவன் சொன்னதையெல்லாம் தட்டாதவன் மாதிரி நேரா இங்க வந்துட்டேன். வந்ததுலேருந்து இங்கேயேதான் இருக்கேன். ஏன் இருக்கேன்னும் தெரியலே, நீங்களும் அதைக் கேக்கலே.’

‘எதுக்கு கேக்கணும்? போவணுன்னு தோணுறப்ப நீயே போயிடுவன்னு தெரியுமே?’ என்று சொரிமுத்து சொன்னான்.

‘நீங்க எனக்கு எதாவது கத்துத் தருவிங்களா?’

‘என்னது?’

‘இல்லே. இந்த சித்து.. எனக்கு இது புரியலை. ஆனா ஆர்வமா இருக்கு.’

‘இதெல்லாம் கத்துத் தரக்கூடியதில்லை’ என்று சொரிமுத்து சொன்னான்.

‘பின்னே?’

‘தானா வரும். வரணும்னு இருந்தா.’

‘ஆனா நான் உங்ககிட்ட வந்திருக்கேனே? வரணும்னு இருந்திருக்கே?’

‘என்னைத் தேடி தினம் ஒரு நாய் வரும் ராத்திரில. பாத்திருக்கியா?’ என்று சொரிமுத்து கேட்டான்.

வினய்க்குச் சற்று சங்கடமாக இருந்தது.

‘எப்பனாச்சும் நான் அதைத் துரத்தியிருக்கேனா? பன்னி வந்தாலும் துரத்த மாட்டேன், கழுதை வந்தாலும் துரத்த மாட்டேன், நீ வந்தாலும் துரத்த மாட்டேன்.’

‘ஆமால்ல? எல்லாம் ஒண்ணுதான். ஆனா நீங்க நாய்க்கு சாப்பாடு வெக்கறிங்க. அதைப் பாத்தேன்.’

சொரிமுத்து சிரித்தான். வினய்க்கு அது இன்னமும் புரியாத சங்கதியாகத்தான் இருந்தது. சொரிமுத்து பொதுவாக உணவு விஷயங்களில் அக்கறை இல்லாதவன். சில நாள் காலை வேளைகளில் கஞ்சி காய்ச்சச் சொல்லுவான். சில நாள் பிச்சை எடுத்து உண்பான். இன்னும் சில நாள்களில் ஓட்டல்களுக்குச் சென்று இரண்டு இட்லி சாப்பிடும் வழக்கமும் உண்டு. ஆனால் என்னவானாலும் ஒரு நாளில் ஒருவேளை உணவுதான் உட்கொள்வான். அதுவும் மிகக் குறைந்த அளவு. ஆனால் தினமும் இரவு பத்து மணிக்கு அவன் வீட்டைத் தேடி வரும் அந்தக் கறுப்பு நிற நாய்க்கு அவன் விதவிதமாகச் சாப்பிடக் கொடுப்பான். ஒரு நாள் பால் சோறு. ஒரு நாள் சாம்பார் சாதம், வெண்டைக்காய் பொரியல். ஒருநாள் வெறும் பால். இன்னொரு நாள் பிரியாணி. சில நாள் கமகமவென்று கறி சமைத்தும் போடுவான். அது சாப்பிடும்போது அருகே உட்கார்ந்து அதன் புறங்கழுத்தைத் தடவிவிட்டுக் கொண்டே இருப்பான். சாப்பிட்டு முடித்துவிட்டு அந்த நாய் அவன் முகத்தை நக்கும். அதனோடு சிறிது நேரம் கொஞ்சிவிட்டு சட்டென்று எழுந்து கல்லால் அடித்துத் துரத்திவிடுவான்.

வினய்க்கு அந்தப் பாசம் புரியவில்லை. அத்தனை அக்கறையாக உணவிடுகிற கிழவன் எதற்குக் கிளம்பும்போது மட்டும் கல்லால் அடித்துத் துரத்த வேண்டும்?

‘அது ஒனக்கு வேணாம் விடு’ என்று சொரிமுத்து சொன்னான்.

‘இல்லே. நாளைக்கு என்னையும் கல்லாலடிச்சி துரத்துவிங்களோன்னு ஒரு சந்தேகம்.’

அவன் சற்றும் யோசிக்கவில்லை. ‘ஒனக்கு கல்லு இல்லே. செருப்புதான். பிஞ்ச செருப்பு’ என்று சொல்லிவிட்டு கெக்கெக்கெ என்று சிரித்தான்.

உண்மையில் அவன் ஒரு சித்தன் என்பதை வினய் அறிந்ததே அவன் அந்த நாய்க்கு உணவிடுவதைப் பார்த்தபோதுதான்.

‘டேய் ஒரு தட்டு எடுத்தாடா’ என்று உள்ளே பார்த்துக் குரல் கொடுப்பான் சொரிமுத்து. எதற்கு என்று கேட்காமல் வினய் ஒரு பழைய அலுமினியத் தட்டை எடுத்துக்கொண்டு வெளியே வருவான். அதை இடது கையால் அவன் வாங்கும்போதே அவன் மனத்தில் நினைக்கும் உணவு தட்டில் நிரம்பிவிடும். உள்ளே சமைத்து வைத்ததைத்தான் வினய் எடுத்து வந்தாற்போல அதை அவன் நாய்க்குப் போட ஆரம்பிப்பான். நாய் சாப்பிட்டு முடித்துக் கிளம்பும்வரை வினய் அதையே பார்த்துக்கொண்டிருப்பான். வெறும் சம்பிரதாயமாகக்கூடக் கிழவன் அவனை ஒரு நாளும் நீ சாப்பிடுகிறாயா என்று கேட்டதில்லை. வினய்க்குப் பசித்தால், நொய்க்கஞ்சி வைத்துக் குடித்துக்கொள்ள வேண்டியதுதான். பால் சோறும் பிரியாணியும் நாய்க்கு மட்டும்தான் என்பதில் அவன் தெளிவாக இருந்தான்.

ரயில் தண்டவாளம் சென்ற வழியே அவர்கள் இருவரும் நடந்துகொண்டிருந்தார்கள். ஏழெட்டு ஸ்டேஷன்கள் கடந்த பின்பும் கிழவன் நடையை நிறுத்தவில்லை. வினய்க்குக் கால் வலித்தது. அதை அவன் சொரிமுத்துவிடம் சொன்னபோது, ‘வலிச்சா பரவால்ல’ என்று பதில் சொன்னான். அன்றைக்கு இரவெல்லாம் தன்னை அவன் நடக்கவைத்துவிடுவானோ என்று வினய்க்கு அச்சமாக இருந்தது. ஆனால் ஏதோ ஒரு காரணமின்றி அவன் தன்னை அத்தனை தூரம் அழைத்துச் செல்ல மாட்டான் என்றும் தோன்றியது. வானம் முற்றிலும் இருட்டிவிட்டது. ரயில் பாதை சத்தமற்றுப் போனது. எங்கோ தொலைவில் யாரோ ஒரு லைன்மேன் எப்போதேனும் நடந்து போவது தெரியும். திடீரென்று ஒரு ரயில் கடந்து போகும். அதன் செவ்வக வெளிச்சத்தில் வினய் சொரிமுத்துவின் முகத்தைப் பார்த்தான். சிக்குப் பிடித்த தாடியும் சடை விழுந்த தலைமுடியும் எண்ணெய் வழியும் முகமுமாக அவன் இப்படி அப்படித் திரும்பாமல் நடந்துகொண்டே இருந்தான்.

மூன்று மணி நேரங்களுக்கு மேல் அந்த நடை நிற்கவேயில்லை. அதற்குமேல் தன்னால் நடக்க முடியாது என்று வினய்க்குத் தோன்றிவிட்டது. சட்டென்று அவன் அப்படியே தரையில் உட்கார்ந்து விட்டான்.

‘என்ன?’ என்று கிழவன் கேட்டான்.

வினய்க்கு உண்மையிலேயே அழுகை வந்தது. ‘என்னால முடியலே. இது உங்களுக்குத் தெரியும். தெரிஞ்சும் என்னை இழுத்துண்டு போறேள்’ என்று வினய் சொன்னான்.

சொரிமுத்து மீண்டும் கெக்கெக்கே என்று சிரித்தான். ‘சரி எழுந்திரு.’

‘முடியாது.’

‘அட எந்திரிடா. இனிமே நடக்க வேணா’ என்று கிழவன் சொன்னான். சந்தேகத்துடன் வினய் எழுந்தான். அவன் சற்றும் எதிர்பாராவிதமாக சொரிமுத்து அவனை ஒரு குழந்தையை அள்ளுவதுபோல அள்ளித் தோளில் போட்டுக்கொண்டு நடக்க ஆரம்பித்தான்.

(தொடரும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

58. வெளிச்சம்

 

 

கண் விழித்து எழுந்தபோது அலையற்ற பெருங்கடல் ஒரு வெளிர் பச்சை நிறச் சேலையைப் போல விரிந்து கிடந்தது. வானத்தின் முனையோடு அது முடிந்துவைக்கப்பட்டிருந்தது. சுற்றிலும் ஆளரவமற்ற தனிமையில் அந்தக் கடல் தனக்காகவே காத்திருந்தாற்போல வினய் உணர்ந்தான். காரணமற்ற பரவசமும் எழுச்சியும் மனமெங்கும் நிறைந்து ததும்பிக்கொண்டிருந்தது. ஒரு அணிலைப் போல அவன் துள்ளியெழுந்து கரையோரம் சிறிது தூரம் ஓடினான். மீண்டும் கிளம்பிய இடத்துக்கே திரும்பி ஓடி வந்தான். அவனுக்காகவே அந்த நிலப்பரப்பு உற்பத்தி செய்யப்பட்டிருந்தாற்போலிருந்தது. வெண் மணலும் சிறு பாறைகளும் அடர்ந்த வெளி. தொலைவில் ஒரு சவுக்குக் காடு தெரிந்தது. கடற்காற்றில் மரங்கள் நொறுங்கி விழுவது போல் அசைந்துகொண்டிருந்தன. அவனுக்குச் சட்டென்று திருவிடந்தை நினைவு வந்தது. அங்கும் கடல் உண்டு. சவுக்குக் காடுகள் உண்டு. ஆனால் அந்தக் கடலில் அலைகள் இருக்கும். அந்தக் காற்றில் மிதமான சூடு இருக்கும். மரங்களின் அசைவில் ஒரு லயம் இருக்கும். காற்றடிக்கும் நேரம் சவுக்குக் காட்டுக்குள் நடந்தால் யாரோ வாயைக் குவித்து அடித்தொண்டைக்கும் கீழிருந்து ஓர் ஒலியெழுப்புவது போலக் கேட்கும். அது வேறு கடல். அது வேறு காற்று. இந்த இடம் மிகவும் புதிது. அவன் அதுநாள் வரை கண்டறியாத பிரதேசம்.

பத்து நிமிடங்கள் அவன் இலக்கற்றுத் திரிந்துகொண்டே இருந்தான். கண் கூசும் சூரிய வெளிச்சத்தை அந்தக் கடலின் வெளிர் பச்சை நிறம் தணித்துக்கொண்டிருப்பதாக அவனுக்குத் தோன்றியது. பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலிருந்தது. இன்னொரு நபர் மட்டும் அங்கே வந்துவிட்டால் அந்த மோனம் கெட்டுவிடும் என்று அஞ்சினான். ஆனால் யாருமற்ற வெளியில் எவ்வளவு நேரம் திரிந்துகொண்டிருக்க முடியும்? தனிமையை ஒரு லாகிரியாக மட்டுமே பயன்படுத்த இயலும் என்று தோன்றியது. கால் சோர்ந்து அவன் மீண்டும் நீர்ப்பரப்புக்கு அருகே வந்து அமர்ந்தபோது சொரிமுத்துக் கிழவன் அவனை நோக்கி வருவது தெரிந்தது. வினய் அவனைப் பார்த்துப் புன்னகை செய்தான்.

‘எங்க வந்திருக்கோம்?’ என்று கேட்டான்.

‘தனுஷ்கோடி.’

‘ஒரே ராத்திரியிலா? அதுவும் நடந்து.’

இதற்குக் கிழவன் பதில் சொல்லவில்லை. ‘அதுசரி. நீங்கதான் நடந்திங்க. நான் நடக்கலியே’ என்று வினய் மீண்டும் சொன்னான். இதற்கும் அவனிடம் பதில் வரவில்லை. அவன் அருகே வந்து அமர்ந்து வெகு நேரம் கடலையே பார்த்துக்கொண்டிருந்தான். வினய்யேதான் மீண்டும் பேசினான், ‘நான் ராமேஸ்வரம் கோயில் போனதில்லை. கூட்டிட்டுப் போறிங்களா?’

‘நாம கோயிலுக்குப் போக வரலை’ என்று சொரிமுத்து சொன்னான்.

‘வேற?’

‘போய் ஒரு முக்குப் போட்டுட்டு வா’

வினய் பதில் பேசாமல் சட்டையைக் கழட்டி வைத்துவிட்டுக் கடலுக்குள் இறங்கினான். தண்ணீர் குளிர்ச்சியாக இருந்தது. கடலே ஒரு பெருங்குளமாகக் காட்சியளிக்கும் அதிசயம் தீரவேயில்லை அவனுக்கு. சிறிது நேரம் நன்றாக நீந்திக் குளித்தான். கரையேறி வரும் வரை அமைதியாக அவனையே பார்த்துக்கொண்டிருந்த சொரிமுத்து, ‘டேய் ஒன்ன நான் முக்குப் போட்டுட்டில்ல வர சொன்னேன்? நீஞ்சிட்டு வந்தா என்ன அர்த்தம்?’ என்று கேட்டான்.

வினய் சிரித்தபடி மீண்டும் நீருக்குள் இறங்கினான். இடுப்பளவு ஆழத்துக்குப் போய் நின்றுகொண்டு, ‘ஒரு தடவையா? மூணு தடவையா?’ என்று கேட்டான்.

‘ஒரு முக்கு போடு போதும்’ என்று சொரிமுத்து சொன்னான்.

வினய் ஒரு முறை முங்கி எழுந்து மீண்டும் ஈரம் சொட்டக் கரைக்கு வந்தான்.

‘உக்காரு இப்பிடி.’

வினய் அவன் எதிரே அமர்ந்தான். சொரிமுத்து அவன் நடு நெற்றியில் தனது கட்டைவிரல் நகத்தை வைத்து ஸ்ரீசூர்ணம் இடுவது போலக் கீறினான். லேசாக வலித்தது. பிறகு, ‘கண்ண மூடிக்க. இதுவரைக்கும் நினைச்சதில்லேன்னாலும் பரவால்ல. இப்ப சிவனை நினை’ என்று சொன்னான்.

வினய் கண்ணை மூடினான். ஒரு சிவ லிங்கத்தை மனத்துக்குள் கொண்டுவந்து நிறுத்தப் பார்த்தான். அவனால் லிங்கம் வைக்கப்பட்டிருக்கும் ஆவுடையைக் காண இயலவில்லை. ஒரு ஸ்டூலின் மீது லிங்கத்தை வைத்தாற்போலக் கண்டான்.

‘வந்துருச்சா? அதையே பாரு’ என்று சொரிமுத்து சொல்வது கேட்டது. வினய், தனது மூடிய கண்களுக்குள் தெரிந்த லிங்கத்தை உற்றுப் பார்க்கத் தொடங்கினான்.

‘அப்படியே கொஞ்சம் கொஞ்சமா மேல போ. லிங்கத்தோட உச்சந்தலையப் பாரு’

மொழுங்கென்று இருந்த அதன் சிரத்தை வினய் கண்டான். உற்றுப் பார்த்தான். சட்டென்று அவனது உச்சந்தலையில் யாரோ ஓங்கி அடிப்பது போலிருந்தது. அதன்பின் அவன் கவனம் எங்குமே நகரவில்லை. இந்த உலகில் அவன் இருந்தான். அந்த லிங்கம் இருந்தது. அதன் சிரத்தின் வழுவழுப்பு இருந்தது. எங்கும் வேறெதுவும் இருக்கவில்லை. எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்திருந்தோம் என்று வினய்க்குத் தெரியவில்லை. காலமும் வெளியும் மறைந்து போய் அகண்ட பேருலகின் ஒரே உயிராக அவன் கணக்கற்ற தொலைவுகளைக் கணப்பொழுதில் சுற்றி வந்தான். கண் விழித்தபோது அவனுக்கு மிகவும் பரவசமாக இருந்தது. அதுவரை உணராத பக்திப் பெருக்குடன் அவன் சொரிமுத்துவை நோக்கிக் கரம் குவித்தான். அவன் கண்ணில் இருந்து நிற்காமல் நீர் வழிந்துகொண்டிருந்தது.

‘என்ன பார்த்தே?’ என்று சொரிமுத்து கேட்டான்.

‘எதுவுமில்லை.’

‘ஆனா வெறுமையும் இல்லை. கரீட்டா?’

‘ஆமா.’

‘வெளிச்சமா இருந்திச்சா? இருட்டா இருந்திச்சா?’

‘சரியா தெரியலே. வெளிச்சம்தான்னு நினைக்கறேன்.’

‘கண்ணு கூசிச்சா?’

‘இல்லை. நான் இமைக்கவேயில்லை. அது மட்டும் எப்படியோ நினைவிருக்கு.’

‘ம்ம். அப்ப செரி. போ. போய் இன்னொருக்கா முக்குப் போட்டுட்டு வா’ என்று சொன்னான்.

வினய் எழுந்து சென்று மீண்டும் ஒருமுறை முங்கிக் குளித்துவிட்டு எழுந்து வந்து எதிரே அமர்ந்தான்.

சொரிமுத்து பேச ஆரம்பித்தான்.

இது பாடம் அல்ல. இது கல்வியல்ல. இது அறிவியலோ மற்றதோ அல்ல. ஆன்மிகமா என்றால் மிகவும் யோசித்துவிட்டுத்தான் ஆமென்று சொல்ல முடியும். ஆனால் ஒரு சௌகரியத்துக்குக் கலை என்று சொல்லிக்கொள்ளலாம். நமக்குள் மட்டும்தான். வெளியாளுக்கல்ல. உலகத்துக்கல்ல. ஒரு சித்தன் உயிருள்ளவற்றின் நன்மைக்காக மட்டுமே இயங்க வேண்டும். மனிதர்கள். விலங்குகள். தாவரங்கள். நுண் உயிரிகள்.

‘வைரஸா?’ என்று வினய் கேட்டான்.

‘உயிருள்ள எல்லாம்’ என்று சொரிமுத்து சொன்னான்.

‘எனக்கு ஒரு கேள்விக்கு பதில் வேணும். கடவுள் நிஜமா?’

அவன் சற்றும் யோசிக்காமல் சொன்னான். ‘அதுல என்ன டவுட்டு? இப்பம் நீ பாத்தியே?’

‘எங்கே?’

‘முட்டாள். கண்ணை இமைக்காம வெளிச்சம் பார்த்தேன்னு சொன்னல்ல? அதுதான்.’

‘அதுவா!’ நம்ப முடியாமல் வினய் கேட்டான்.

‘பின்னே? இப்ப வேணா கண்ணை மூடிப் பாரு. அந்த வெளிச்சம் திரும்ப வராது.’

அவனுக்குச் சந்தேகமாக இருந்தது. மீண்டும் கண்ணை மூடிப் பார்த்தான். இருட்டாகத்தான் இருந்தது. வெளியே அடித்த சூரிய வெளிச்சத்தின் நிழலும் கடலின் அலையடிப்பும் மங்கலாகத் தெரிந்தது.

‘இருக்குதா?’

‘இல்லை. அப்ப பார்த்தது இப்ப இல்லை.’

‘அதான். அவ்ளதான்.’

‘அப்ப கடவுள்னா வெளிச்சமா?’

‘இருட்டுந்தான்’ என்று சொரிமுத்து சொன்னான். வினய்க்குக் குழப்பமாக இருந்தது. அவன் தனது வேட்டி மடிப்பில் இருந்து சருகு போலாகியிருந்த ஒரு இலையை எடுத்தான். ‘இத மோந்து பாரு’ என்று வினய்யிடம் நீட்டினான். வினய் அதை வாங்கி மூக்கருகே கொண்டு சென்று வைத்து முகர்ந்தான். ஒரு வாசனையும் இல்லை. அதை அவன் சொன்னபோது சொரிமுத்து சிரித்தான்.

‘அதுக்கு வாசனை இருக்குது. ஆனா உனக்கு இப்ப அத கண்டுக்கற பக்குவம் இல்லை.’

‘அப்படியா? அப்படியொரு பக்குவம் வருமா? அது வர நான் என்ன செய்யணும்?’ என்று வினய் கேட்டான்.

அன்றைக்கெல்லாம் சொரிமுத்து அவனிடம் நெடு நேரம் பேசிக்கொண்டிருந்தான். உச்சாடணம். ஆகர்ஷணம். பேதனம். மோகனம். வசியம். வித்துவேஷணம். மாரணம். தம்பனம்.

‘சில மந்திரங்கள் இருக்குதுடா. அதே மாதிரி சில மூலிகைகள் இருக்குது. மூலிகை உடம்பு. மந்திரம் உசிரு’ என்று சொரிமுத்து சொன்னான்.

‘புரியுது. ரெண்டும் சேர்ந்தா பவர்னு சொல்றிங்க’

அவன் கெக்கெக்கே என்று சிரித்துவிட்டு, ‘சேக்கத் தெரிஞ்சவண்ட்டதான் பவரு’ என்று சொன்னான்.

வினய்க்குச் சற்றுக் குழப்பமாக இருந்தது. அவனுக்கு நீலாங்கரை சித்த வைத்தியரைத் தெரியும். அவனும் ஸ்கவுட்ஸ் வகுப்புகளின்போது அவர் வீட்டுக்குப் போயிருக்கிறான். அங்கே குவியல் குவியலாக மூலிகைகள் குவித்துவைக்கப்பட்டிருப்பதைக் கண்டிருக்கிறான். சில மூலிகைகளை புடைவை விரித்து நிழலில் உலர்த்தியிருக்கும். சிலவற்றை வீட்டுக்கு வெளியே வெயில் படும்படியாகவும் அவர் உலர்த்தியிருப்பார். புத்தகக் கட்டுகள், சுவடிக் கட்டுகள், மூலிகைகள், குப்பிகள், அம்மி, குழவியாலான வீடு.

‘அதுவுந்தான். லச்சம் மூலிகை இருக்கு. ஒண்ணொண்ணும் ஒண்ணொண்ண செய்யும். சுளுவா கிடைக்கறத வெச்சி வைத்தியஞ் செய்வான். செரமப்பட்டுத் தேடிப் பிடிக்கறத வெச்சி சித்து பண்ணலாம்.’

வினய்க்கு அப்போது சட்டென்று முன்பொரு சமயம் வீட்டுக்கு வந்திருந்த சட்டையணிந்த சித்தரின் நினைவு வந்தது. வாழைப் பழத்தில் இருந்து பிள்ளையார் சிலை எடுத்த சித்தர். அவன் சொரிமுத்துவிடம் அந்தச் சம்பவத்தைச் சொன்னான். கேட்ட மாத்திரத்தில் சட்டென்று சொரிமுத்து சிறிது சிரித்தான். உடனே அமைதியாகிவிட்டான்.

‘அதுக்கெல்லாமும் மூலிகை தேவையா?’ என்று வினய் கேட்டான்.

‘எல்லாத்துக்குந்தான். பாரு, இது விளையாட்டில்லெ’

‘அது புரிஞ்சுடுத்து. நீங்க விளையாடலை’ என்று வினய் தீவிரமாகச் சொன்னான்.

‘நிறைய வேலை செய்யலாம் தம்பி. வியாதி விரட்றது ரொம்ப மேம்போக்கு. அதுக்கும் மேல நிறைய இருக்கு. ஆகர்சனம்னா தேவதைங்கள கூப்ட்டு சகாயம் பண்ண வெக்குறது. நீ பாக்குற ஒண்ண உன் கண்ணெதிர்ல இன்னொண்ணா மாத்திப்புடலாம். அது பேதனம். மாரணம்னா சாவடிக்கறது..’

‘ஐயோ..’

‘என்ன ஐயோ? அந்த கேன்சர்காரன்ட்டேருந்து எடுத்து வெச்சேன்ல? எதுக்குன்னு நினைக்கற? வேற யாருக்கு சாவு அவசியமோ அவனுக்குக் குடுக்கறதுக்குத்தான்.’

சட்டென்று வினய் கேட்டான், ‘இதையெல்லாம் மனுஷா பண்ண முடியும்னா அப்பறம் கடவுள் என்னதான் பண்ணுவார்?’

சொரிமுத்து சிரித்தான். ‘நாம மனுசன், வேற எவனோ ஒருத்தன் கடவுள் உத்தியோகம் பாத்துக்கிட்டிருக்கான்னு நினைக்கற வரைக்கும் நீ சித்தனாக முடியாது’ என்று சொன்னான்.

(தொடரும்)

http://www.dinamani.com/

Link to comment
Share on other sites

59. காற்றின் இருப்பிடம்

 

 

பொட்டல் வெளியான தனுஷ்கோடியில் மூலிகை கிடைக்கும் என்று வினய் நினைக்கவில்லை. ஆனால் அதற்காகத்தான் அங்கே வந்திருப்பதாக சொரிமுத்து சொன்னான்.

‘இங்கே சவுக்கு தவிர வேற மரம்கூட இல்லையே’ என்று வினய் கேட்டான்.

‘ஆமால்ல?’ என்று மட்டும் சொல்லிவிட்டு சொரிமுத்து சிரித்தான். பகல் பன்னிரண்டு மணி வரை கடலோரத்தில் அமர்ந்திருந்துவிட்டு அதன்பின் ‘போலாம் வா’ என்று சொரிமுத்து எழுந்து நடக்க ஆரம்பித்தான். வினய்யால் அவன் வேகத்துக்கு நடக்க முடியவில்லை. ஒரு ராட்சசனைப் போல் மணலில் பாதங்களைப் புதைத்துப் புதைத்து அவன் விரைந்துகொண்டிருந்தான். எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் கைப்பிடி அளவு மணல் மேலே துள்ளியெழுந்து கால்களை மூடின.

அவர்கள் சவுக்குக் காட்டுக்கு வந்து சேர்ந்தபோது நான்கைந்து மட்டக் குதிரைகள் அங்கே மேய்ந்துகொண்டிருந்ததை வினய் கண்டான். கிட்டே போய்த் தொட்டுப் பார்க்க ஆசையாக இருந்தது. ஆனால் வேண்டாம் என்று சொரிமுத்து சொன்னான். ‘எதையும் யாரையும் தொந்தரவே பண்ணக் கூடாது, தெரிஞ்சிக்கிட்டியா? நாம எதுக்கு வந்தோமோ அத மட்டும்தான் பாக்கணும்.’

‘நாம எதுக்கு வந்தோம்?’

‘இதத்தான் நானும் உங்கண்ணனும் எங்கள மாதிரி இன்னும் சில பேரும் ரொம்ப வருசமா கேட்டுக்கிட்டிருக்கோம்’ என்று சொல்லிவிட்டு கெக்கெக்கே என்று சிரித்தான்.

‘இல்லை. நிஜமாவே எனக்கு இது தெரியணும். நான் காஞ்சீபுரத்துல பாடசாலைல படிச்சிண்டிருந்தேன். பிரபந்தத்துல ரெண்டாயிரம் எனக்கு அத்துப்படி. கோயில், உற்சவம், கோஷ்டி, சேவைன்னு வாழ்க்கை வேற விதமாத்தான் இருந்திருக்கணும். எல்லாத்தையும் விட்டுட்டு ஏன் உங்ககிட்ட வந்தேன்னே புரியலை.’

சொரிமுத்து அவனைச் சிறிது உற்றுப் பார்த்தான். பிறகு தோளில் கை போட்டு நடக்க ஆரம்பித்தான்.

‘பாடசாலைக்கு முன்னாடி என்ன செஞ்சிட்டிருந்தே?’

‘ஸ்கூல்ல படிச்சிண்டிருந்தேன்.‘

‘அப்போ அந்தப் பொண்ணு சித்ரா?’

தூக்கிவாரிப் போட்டது வினய்க்கு. அண்ணாவுக்குத் தெரிந்திருக்குமா? அவந்தான் சித்ராவைக் குறித்து இவனிடம் சொல்லியிருக்க வேண்டும். ஒரு காதலாகக் கூட மலராத வெறும் நினைவைக் குறிப்பிட்டு விசாரிக்க என்ன அவசியம் இருக்கும் என்று அவனுக்குப் புரியவில்லை.

‘டேய், நடிக்காத. காதலெல்லாம் இல்லை. நீ அவளைத் தொட நினைச்சியா இல்லியா? அதச் சொல்லு. மார புடிச்சி கசக்கிப் பாக்க ஆசைப்பட்டல்ல?’ என்று சொரிமுத்து கேட்டான்.

வினய்க்கு பயமாகிவிட்டது. மனத்துக்குள் ஓடுவதை இவன் எப்படிப் படிக்கிறான். நினைக்கும் விஷயத்தில் இருந்து கேள்விகளை உருவாக்கத் தெரிந்தவனாக இருக்கிறான். நல்லது. இது சித்துதான். இவனிடம் எதையும் ஒளித்துப் பயனில்லை என்று அவனுக்குத் தோன்றியது.

‘இப்ப நினைச்ச பாத்தியா? அதாங்கரீட்டு. எதையும் மறைக்காத. அப்படியே சொல்லு.’

‘எதுக்கு சொல்லணும்? உங்களுக்கேதான் எல்லாம் தெரிஞ்சிருக்கே?’

‘பரவால்ல, நீ சொல்லு’ என்று அவன் மீண்டும் தூண்டினான்.

வினய் சிறிது நேரம் யோசித்தான். இனி மறைக்க ஒன்றுமில்லை. இவனிடம் ஏன் வந்தோம் என்பது தெரிய வேண்டுமானால் இவனுக்கு நேர்மையாக இருந்தே தீர வேண்டும் என்று தோன்றியது. எனவே சொல்ல ஆரம்பித்தான்.

‘ஆமா. எனக்கு அவளத் தொடணும்னு தோணித்து. படுக்கவெச்சி நாக்கால உடம்பு பூரா நக்கிப் பாக்கணும்னு அடிக்கடி தோணும்.’

‘உம். அப்பறம்?’

‘எங்க ஊருக்கு நிறைய சினிமாக்காரா வருவா. அங்க டெய்லி ஷூட்டிங் நடக்கும்.’

‘சரி.’

‘எல்லா நடிகையையும் கிட்டப் போய் மோந்து பாக்கணும்னு தோணும்.’

‘போடு. மேல சொல்லு.’

‘எந்த பொம்மனாட்டிய பாத்தாலும் அவா புடவைய அவுத்துட்டு குளிக்க ரெடியாற மாதிரி மனசுக்குள்ள நினைச்சிப்பேன்.’

‘உங்கம்மாவையுமா?’ என்று சொரிமுத்து கேட்டான்.

‘ஐயோ’ என்று வினய் அலறிவிட்டான்.

‘இல்லேன்னா இல்லேன்னு சொல்லு. அவ்ளதான். மேல போ.’

வினய்க்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ‘இதெல்லாம் எல்லாருக்கும் தோணறதுதான். நான் மட்டும் ஒண்ணும் தப்பா நினைக்கலை. என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும்கூட இப்படித்தான் நினைப்பாங்க.’

‘ஆங். அதச் சொல்லு. எல்லாரும் இப்படித்தான் நினைப்பானுக. ஆனா யாரும் மார பாத்துட்டு, மாருக்குள்ள எலும்பும் நரம்பும் ஓடுறத நினைக்கறதா சொல்ல மாட்டாங்க இல்லே?’

சட்டென்று வினய் அவன் காலில் விழுந்தான். நெடுநேரம் அவனது கால்களைப் பிடித்தபடி குமுறிக் குமுறி அழுதுகொண்டே இருந்தான். அவன் தடுக்கவில்லை. கால்களை நகர்த்தவும் இல்லை. பேச்சற்றுக் கடந்த கணங்களை சவுக்குக் காட்டின் காற்று விழுங்கிக்கொண்டிருந்தது. அவன் சமநிலைக்கு வந்து எழுந்தபோது, சொரிமுத்து அன்போடு அவன் தலையை இரு கரங்களாலும் ஏந்திப் பிடித்து, ‘இந்தப் பொய் இருக்கே, அதுதான் ஆலகால வெசம். நீ உன் தம்பிகிட்ட மட்டும்தான் அதச் சொன்னே. ஆனா அப்படிச் சொன்னதைத்தான் இப்பம் வரைக்கும் நினைச்சிக்கிட்டிருக்க. ஆமாவா இல்லியா?’

‘ஆமா’

‘இப்பம் புரியிதா ஒனக்கு? பொய்தான் உன்னோட கேன்சர். ஒன்ன அதுதான் தின்னுக்கிட்டிருக்கு.’

‘நான் சரியானவன் இல்லை. அது எனக்குத் தெரியும். ஆனா பொம்மனாட்டிய நினைக்காத ஆம்பளைகள் இல்லை. அப்படி நினைக்கறது தப்புன்னா வம்ச விருத்தியே இல்லியே?’

‘தப்புன்னு நாஞ்சொல்லலியே?’

‘பின்னே?’

‘கசக்கணும்னு சொன்னே. நக்கிப் பாக்கணும்னு சொன்னே. அதைச் சொல்ல வேண்டியதுதானே உன் தம்பிகிட்ட? அதை விட்டுட்டு, மாருக்குள்ள எலும்ப பாக்கறேன், ரத்தத்த பாக்கறேன்னு எதுக்கு சொன்னே?’

‘அவன் சின்னப் பையன். அவன் என்னைத் தப்பா நினைச்சிட்டான்னா அதை என்னால தாங்க முடியாது.’

கிழவன் சிரித்தான். ‘சரி வா’ என்று அவனை இன்னும் சிறிது தூரம் அழைத்துச் சென்றான். சவுக்குக் காடு அங்கே இன்னும் அடர்ந்து நிறைந்திருந்தது. வெளிச்சம் மிகக் குறைவாகவே இருந்தது. கண்ணுக்கெட்டிய தொலைவு வரை மனித நடமாட்டமே இல்லாதிருந்தது.

‘நாம இங்க எதுக்கு வந்திருக்கோம்?’ என்று வினய் மீண்டும் கேட்டான்.

‘சொல்றேன். முதல்ல இந்த இடத்தைக் கொஞ்சம் தோண்டு’ என்று சொரிமுத்து ஓரிடத்தைச் சுட்டிக்காட்டினான். சற்றே இறுகியிருந்த மணல்தான். அங்கு தோண்டுவதற்கு கடப்பாறையெல்லாம் வேண்டாம் என்று வினய்க்குத் தோன்றியது. குனிந்து உட்கார்ந்து கைகளால் விறுவிறுவென்று தோண்டத் தொடங்கினான். சட்டென்று கிழவனைப் பார்த்து, ‘திருவிடந்தை பீச்சுல சின்ன வயசுல இப்படித் தோண்டித் தோண்டி கோபுரம் கட்டுவோம்’ என்று சொன்னான்.

‘நான் என் சின்ன வயசுல மாடமாளிகையெல்லாம் கட்டியிருக்கேன். மண்ணுல கட்டாத கொழந்தை ஏது? போற இடத்துமேல பொறந்ததுலேருந்து பாசம் இருக்கத்தாஞ் செய்யும்’ என்று சொரிமுத்து சொன்னான்.

வினய் அரை மணி நேரம் அங்கே தோண்டிக்கொண்டே இருந்தான். மூச்சு வாங்கியது. மூக்கில் வியர்த்து ஒரு சொட்டு கீழே உதிர்ந்தது. இப்போது அவன் தோண்டிய இடத்தில் சிறியதாக ஒரு புடைவை நுனி தென்பட்டது. அவன் அதிர்ச்சியுடன் சொரிமுத்துவை நிமிர்ந்து பார்த்தான்.

‘நீ தோண்டினது போதும். நகந்துக்க’ என்று சொல்லிவிட்டு அவன் அந்தக் குழிக்கு அருகே வந்து அமர்ந்துகொண்டான். கண்ணை மூடி ஏதோ சொன்னான். பிறகு குனிந்து அந்தப் புடைவை நுனியைத் தொட்டான். ஒரு கொத்துத் தாள்களில் இருந்து ஒன்றை மட்டும் தொட்டு உருவுவதுபோல அவன் அந்தப் புடைவை நுனியைப் பிடித்து இழுக்க ஆரம்பித்தான். வினய்யால் தான் கண்டதை நம்ப முடியவில்லை. அவன் தோண்டிய குழி அகண்டுகொண்டே சென்று அதில் ஒரு பெண் புதைக்கப்பட்டிருப்பதைக் கண்டான். ஐயோ என்று அலறினான்.

‘கத்தாதே. சைலண்டா இரு’ என்று சொரிமுத்து சொன்னான்.

‘என்ன பண்றிங்க? யாரு இது? இங்க எப்படி.. எனக்கு ஒண்ணும் புரியலை’ என்று வினய் படபடத்தான்.

‘அட இருடான்றன்ல?’

மிகச் சில விநாடிகளில் அந்த உருவம் முழுதும் வெளிப்பட்டிருந்தது. ஒரு பெண்ணின் பிணம். புதைத்துப் பல நாள்கள் ஆகியிருக்க வேண்டும். நிச்சயமாக அது இயல்பான மரணமாக இருக்க முடியாது என்று வினய்க்குத் தோன்றியது. இல்லாவிட்டால், இப்படி சவுக்குக் காட்டில் கொண்டு வந்து ஏன் புதைத்திருக்க வேண்டும்?

சொரிமுத்து அந்தப் பிணத்தின் மீது படிந்திருந்த மண்ணைக் கையால் தட்டி அகற்றினான். முகம் அழுகிவிட்டிருந்தது. வினய்யால் அதைப் பார்க்க முடியவில்லை. ஐயோ ஐயோ என்று அரற்றிக்கொண்டே இருந்தான்.

இப்போது சொரிமுத்து அந்தப் பிணத்தின் மீதிருந்த புடைவையை அகற்றினான். ஜாக்கெட்டின் ஊக்குகளை விடுவித்தான். பாதி அழுகிய மார்பகங்கள் தெரிந்தன. வினய்யைப் பார்த்து ஈஈஈ என்று சிரித்தான்.

‘வேண்டாமே? எனக்கு பயம்மா இருக்கு.’

‘பயம் போகணும்னா இதப் பாரு’ என்று சொல்லிவிட்டு ஒரு குச்சியை எடுத்து பாதி அழுகியிருந்த அந்த மார்பின் மீது வைத்துக் கிளறினான். உள்ளிருந்து வெள்ளையாக சீழ் போலொரு திரவம் வெளிப்பட்டது. சதை அழுகிக் கரைந்து எலும்பு தெரிந்தது. ரத்தமும் சீழும் எலும்போடு கலந்து முழுமையாக வெளிப்பட்டபோது, வினய் இமைக்க மறந்து அதனைப் பார்த்துக்கொண்டே இருந்தான்.

எவ்வளவு நேரம் அப்படியே நின்றிருந்தான் என்று அவனுக்குத் தெரியவில்லை. ஒரு பெண். பிணமாகிவிட்ட பெண். புதைக்கப்பட்டவள். அழுகிக்கொண்டிருக்கும் உடல். சதை. எலும்பு. ரத்தம். சீழ். துர்நாற்றம்.

‘பாத்தியா?’ என்று சொரிமுத்து கேட்டான். வினய் தலையசைத்தான்.

‘சரி, இனிமே மூடிடு’ என்று சொல்லிவிட்டு அவன் எழுந்துகொள்ள, காத்திருந்தாற்போல வினய் ஆவேசமாக அள்ளிக் கொட்டிய மண்ணை மீண்டும் அதன் மீது கொட்டி மூட ஆரம்பித்தான். இருபது நிமிடங்களில் மொத்தமாக மூடி சமப்படுத்திவிட்டு பொத்தென்று கீழே விழுந்தான். சொரிமுத்து சிரித்தான்.

‘என்ன பாத்தே?’

வினய்க்குப் புரியவில்லை. அவன் மீண்டும் அதையே கேட்டான்.

‘பொணம். பொண்ணோட பொணம்.’

‘பொண்ணா? பொணமா? கரீட்டா சொல்லு.’

‘பொணம்தான்.’

‘ஏன் அவ பொண்ணில்லியா?’

‘பொண்ணும்தான். ஆனா பொணம்.’

‘ஆக காத்துதான் எல்லாம்னு புரியுதா? வெளிய கெடக்குற காத்து உள்ள கெடந்தா பொண்ணு. உள்ள கெடக்குற காத்து வெளிய போயிட்டா பொணம்.’

அதற்குப் பின் வினய் பேசவில்லை. இனி எந்நாளும் சொரிமுத்துவைவிட்டுத் தான் வேறெங்கும் போகப் போவதில்லை என்று நிச்சயம் செய்துகொண்டான்.

(தொடரும்)

http://www.dinamani.com/

Link to comment
Share on other sites

60. சபித்தவன்

 

 

தனக்கு நடந்தவற்றை வினய் சொல்லிக்கொண்டே வந்தபோது எனக்கொரு சந்தேகம் எழுந்தது. அவனை சன்னியாசியாக்கித் திரிய விடுவதற்காக அண்ணா அவனை சொரிமுத்துச் சித்தனிடம் அனுப்பியிருக்க மாட்டான் என்று நினைத்தேன். வினய்யிடம் ஏதோ ஒரு பிரச்னை இருப்பதாக அவன் நினைத்திருக்க வேண்டும். அதை மட்டும் சரி செய்துவிட்டால், அவன் வாழ்க்கை சிக்கலில்லாமல் போகும் என்று தோன்றியிருக்கும். அவனறிந்த உலகில், அவனறிந்த மனிதர்களில் சொரிமுத்துச் சித்தன் சரியாக இருப்பான் என்று எண்ணியிருப்பான். இவன்தான் அதைத் தவறாகப் புரிந்துகொண்டுவிட்டானோ?

வினய்யிடம் நான் எனக்குத் தோன்றியதைச் சொன்னபோது, ‘இல்லே விமல். சன்யாசம் என் விதி’ என்று சொன்னான்.

‘யாரு சொன்னது?’

‘சொரிமுத்து. எனக்கு மட்டுமில்லே. நம்ம நாலு பேருக்குமே அதுதான் விதி. நாம யாரும் வீடு தங்கப் பொறக்கலை.’

‘அவனுக்கு எப்படி தெரியுமாம்?’

அப்போதுதான் அவன் அந்தச் சுவடியைப் பற்றிச் சொன்னான். அண்ணா வைத்திருந்த சுவடி. அது ஒரு மருத்துவச் சுவடிதான் என்று வைத்தீஸ்வரன் கோயில் நாடி வல்லுநர் சொல்லிவிட்ட பின்பு வீட்டில் அதை யாரும் பொருட்படுத்தவில்லை. அது மீண்டும் பரணுக்குச் சென்றதா அல்லது கீழேயே கிடக்கிறதா, அம்மா வெளியில் தூக்கிப் போட்டிருப்பாளா என்றுகூட எனக்குத் தெரியாது. ஓரிரு முறை கேசவன் மாமாவைச் சந்திக்க நேர்ந்தபோதெல்லாம் அதைக் குறித்துக் கேட்க வேண்டும் என்று எண்ணிக்கொள்வேன். எப்படியோ மறந்துவிடும்.

ஆனால் அது மருத்துவச் சுவடியல்ல என்று வினய் சொன்னான். ‘அண்ணா அதை அப்படி மறைச்சி, மாத்தி வெச்சிருக்காண்டா. உண்மைல அது நம்மோட வம்ச சரித்திரம். அதுல ஒரு செய்தி இருக்கு.’

‘என்ன செய்தி?’

‘செய்தியில்லே. ஒரு ரகசியம். ஒரு பயங்கரமான கதை.’

‘நாலு வரி பயங்கரக் கதையா?’

‘நீ நம்பலை இல்லே?’ என்று வினய் கேட்டான்.

நான் எதையும் நம்பவும் நம்ப மறுக்கவும் கூடாதென்ற விரதத்தில் உள்ளதை அவனுக்கு எப்படிப் புரியவைப்பேன்? எத்தகைய அற்புதங்களையும் வெறும் தகவல்களாக்கி உள்ளே போட்டுக்கொள்வதில் ஒரு குரூரமான சந்தோஷம் இருக்கிறது. மிகச் சிறந்ததொரு லௌகீகியால் மட்டுமே அந்த சந்தோஷத்தை நுகர முடியும். நான் புன்னகை செய்தேன். ‘வினய், அது ஒரு பொய். புனைவு. என்னைப் பார். என் உடை மட்டும்தான் காவி. நான் சன்னியாசி இல்லை. மிக நிச்சயமாக நான் எதையும் துறக்கவில்லை’ என்று சொன்னேன்.

‘அப்படியா?’

‘ஆம். என்னிடம் பணம் இருக்கிறது. எங்கெங்கிருந்தோ, யார் யாரோ கொண்டு வந்து தருகிறார்கள். என்னை ஒரு விசையாகக் கருதித் தமக்காகச் செலுத்தும் அரசியல்வாதிகள் என் சௌக்கியத்துக்கு பங்கமின்றிப் பார்த்துக்கொள்கிறார்கள். அழகிய இளம்பெண்கள் பலரை நான் அறிவேன். நான் அவர்களைத் தொடுகிறேன். சுவைக்கிறேன். சுகிக்கிறேன். நான் எதையும் அடக்குவதில்லை. எதையும் விட்டு உதறுவதும் இல்லை.’

அவன் அதிர்ந்து போய்ப் பார்த்தான். ‘நிஜமாவா?’ என்று கேட்டான்.

‘நான் என் சகோதரனிடம் பொய் சொல்லவே மாட்டேன். உண்மையிலேயே நான் ஒரு பரம லௌகீகி. பணம், பெண், புகழ், போதை எதையும் துறக்கவில்லை.’

‘ஆனா வீட்டைத் துறந்தியே?’ என்று வினய் சொன்னான்.

யோசித்துப் பார்த்தால், ஒருவிதத்தில் அது மட்டும்தான் உண்மை. நான் வீட்டைத் துறந்துதான் வந்தேன். ஆனால் யாருடைய நினைவையும் துறக்கவில்லை. இன்றுவரை அம்மாவின் அன்பும் புன்னகையும் எனக்கு நினைவில் இருக்கின்றன. அப்பாவின் வாசனை நினைவில் இருக்கிறது. கேசவன் மாமாவின் பாசம், திருவிடந்தை கோயிலின் தயிர்சாத வாசனை, சித்ராவின் மார்புச் செழுமை.

வினய் வாய்விட்டு உரக்கச் சிரித்தான். ‘ஆனாலும் அநியாயம். அண்ணன் தம்பிகள் மொத்தமாக நாம் அவளை நினைவில் தொட்டுத் தோய்ந்திருக்கிறோம்.’

‘அண்ணாவுமா?’ என்று கேட்டேன்.

‘தெரியலை. ஆனா அதெப்படி இல்லாம இருக்கும்?’ என்று வினய் சொன்னான்.

‘அடுத்த தடவை அவனைப் பாத்தேன்னா மறக்காம கேளு’ என்று சொன்னேன்.

‘ஏன் நீயே கேக்கலாமே?’

‘நான் பாக்க மாட்டேன்.’

‘ஏன்?’

‘ஏனோ? எனக்கு அப்படித்தான் தோணறது. என்னிக்கும் நான் அவனைப் பார்க்கப் போறதில்லை.’

அன்றைக்கு ஶ்ரீரங்கப்பட்டணத்து முன்னாள் நடிகரும் அரசியல்வாதியுமான பிரமுகரை நான் பார்க்க முடியவில்லை. மிகவும் நேரமாகிவிட்டபடியால் மறுநாள் வந்து பார்ப்பதாகத் தகவல் மட்டும் அனுப்பிவிட்டு ஓட்டலுக்குத் திரும்பிவிட்டேன். மிருதுளாவின் அப்பாவுக்குத் தீராத வியப்பு. என் சகோதரனும் ஒரு சன்னியாசி என்பதை அவரால் நம்பவே முடியவில்லை. நான் அவருக்கு வினய்யை அறிமுகம் செய்து வைத்தேன். அவனை மிகவும் கட்டாயப்படுத்தித்தான் நான் தங்கியிருந்த நட்சத்திர விடுதிக்கு அழைத்துச் செல்ல முடிந்தது. அவன் மிகவும் யோசித்தான். வேண்டாமே என்று மறுத்துப் பார்த்தான்.

‘எல்லாம் பரவால்ல வா’ என்று சொன்னேன்.

‘இல்லே. நான் அந்த மாதிரி இடத்துல எல்லாம் தங்கறதில்லே.’

‘ஏன், தங்கினா விரதம் கெட்டுடுமா? ஒரு இடம் உன்னை மாத்தும்னா அப்பறம் அது என்ன பெரிய சன்னியாசம்?’

‘இடம் இல்லை. சொகுசு’ என்று வினய் சொன்னான்.

‘எல்லாம் பரவாயில்லை. நான் கட்டிலில் படுத்துக்கறேன். நீ தரையில் படு’ என்று சொல்லித்தான் அழைத்துப் போனேன். அன்று இரவு முழுதும் நாங்கள் தூங்கவில்லை. அவன் துறந்தவன் என்பதையே மறந்து, என்னிடம் மனம் விட்டுப் பேசிக்கொண்டிருந்தான். சில சமயம் அவன் என்னைச் சகோதரனாக எண்ணிப் பேசுவதுபோலத் தோன்றும். சட்டென்று நான் கவனிக்காத கணத்தில் அவன் பொதுவில் யாருடனோ பேசுவதுபோலப் பேசினான். எனக்கு இரண்டுமே பரவாயில்லை என்றுதான் தோன்றியது. இரவு பதினொரு மணி வரை நாங்கள் சாப்பிட மறந்து பேசிக்கொண்டே இருந்தோம். சட்டென்று நாந்தான் கேட்டேன். ‘டேய் உனக்குப் பசிக்குமே? எதாவது ஆர்டர் பண்ணவா?’

‘வேண்டாம்’ என்று வினய் சொன்னான்.

‘இல்லை. இங்க சாப்பாடு நன்னாருக்கு. சிம்பிளா எதாவது சொல்றேனே?’

வேண்டவே வேண்டாம் என்று அவன் மறுத்துவிட்டான். நான் எனக்கு மட்டும் நான்கு சப்பாத்திகளும் ஒரு பருப்புக் கூட்டும் வரவழைத்து உண்டேன். தகதகவெனப் பணத்தின் செழுமையில் ஒளிர்ந்துகொண்டிருந்த அந்தப் பெரிய, குளிரூட்டப்பட்ட அறையில் நாங்கள் இருவரும் சோபாக்கள், நாற்காலிகளைப் புறக்கணித்துவிட்டு தரையில் கால் நீட்டி அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.

வினய் அந்த ஓலைச் சுவடியைப் பற்றி நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தான். அண்ணாவின் சுவடி. சொரிமுத்து அவனுக்கு அந்தச் சுவடியைப் பற்றிச் சொல்லியிருக்கிறான். பாரத தேசத்தில் இதுவரை ஆறு பேர் வீடுகளில் இம்மாதிரி நடந்திருக்கிறது. பிறக்கிற பிள்ளைகள் அத்தனை பேரும் துறவு கொண்டு போகிற சம்பவம்.

‘யாரந்த ஆறு பேர்?’ என்று கேட்டேன்.

‘அது அவன் சொல்லவில்லை. ஒரிசாவில் ஒரு குடும்பத்தைச் சொன்னான். ஜம்முவில் ஒரு குடும்பம். தமிழ்நாட்டிலேயே இன்னொரு குடும்பம் இருக்கிறதாம். ராமேஸ்வரத்தில் என்று சொன்னான்.’

‘பிறகு?’

‘ராஜஸ்தானில் ஒன்று. அருணாசல பிரதேசத்தில் ஒன்று.’

எனக்கு அந்தக் கதை சுவாரசியமாக இருந்தது. அது ஒரு குல சாபம் என்று வினய்யிடம் சொரிமுத்து சொல்லியிருக்கிறான். என் அம்மாவின் பாட்டனாருக்கு இடப்பட்ட சாபம். சாபமிட்ட முனிபுங்கவர் யாராக இருப்பார்? அது தெரியவில்லை. ஆனால் சாபம்தான். உன் வம்சத்தில் ஆண் குழந்தைகள் பிறக்காது. பிறந்தால் ஒரே குடும்பத்தில் மொத்தமாகப் பிறக்கும். மொத்தமாக அவை சன்னியாசம் பெற்றுச் சென்றுவிடும்.

‘இதுதான் அந்த ஓலைச்சுவடியில் இருந்ததா?’

‘ஆம்’ என்று வினய் சொன்னான்.

‘நீ இப்படியொரு முட்டாளாக இருப்பாய் என்று நான் நினைக்கவில்லை வினய். ஒரே குடும்பத்தில் மொத்தமாகப் பிறக்கும் ஆண் குழந்தைகள் சன்னியாசியாகும் என்றால், கேசவன் மாமா எந்தக் குடும்பத்தில் பிறந்தார்? அவர் ஏன் இன்னும் வீட்டைக் கட்டிக்கொண்டு அழுகிறார்?’

அவன் கணப்பொழுதும் சிந்திக்கவில்லை. ‘மாமா நம்ம தாத்தாவுக்குப் பொறக்கலை’ என்று சொன்னான்.

நான் சட்டென்று எழுந்துவிட்டேன்.

‘நம்ப முடியலை இல்லியா? ஆனா அதுதான் உண்மை. இது அம்மாவுக்கே தெரியாது.’

‘ஓ, மாமாவுக்குத் தெரியுமா?’

‘தெரியாது.’

‘சொரிமுத்துவுக்கு மட்டும்தான் தெரியுமா?’

‘அண்ணாவுக்குத் தெரியும்னு சொரிமுத்து சொன்னான்.’

சில விநாடிகள் நான் மாமாவைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டிருந்தேன். பெரிய அதிர்ச்சியெல்லாம் இல்லை. ஆனாலும் சிறிது வருத்தமாக இருந்தது. கேசவன் மாமாவை எனக்கு மிகவும் பிடிக்கும். ஒருவிதமான ஆக்ரோஷப் பாசம் அவருடையது. தனது அக்காவின் குடும்பத்துக்காகத் தன்னை உருக்கி ஊற்றிக்கொண்டிருக்கிற மனிதர். ஒருக் கணமும் அவர் அம்மாவைப் பிரிந்ததே இல்லை.

மடிகேரியில் நான் இருக்கிற விவரம் அறிந்து முதல் முதலில் அவர் என்னைக் காண வந்தபோது ஒன்று சொன்னார். ‘பெத்த தாயைவிட எதுவும் பெரிசில்லே. சன்யாசம், ஞானம், தெய்வம் உள்பட.’

நான் தெய்வத்தையோ சன்னியாசத்தையோ பெரிதாக எண்ணுபவனல்ல என்பதை எப்படி அவருக்குப் புரியவைப்பது என்று யோசித்தேன். புரியும் என்று தோன்றவில்லை. லௌகீகம்தான் சரி என்று எண்ணுபவன் வீட்டுக்கு வந்து தொலைத்தால் என்னவென்று கேட்டுவிடுவார். நியாயமான கேள்விதான். ஆனால் என் தடுப்புச் சுவர்களை நான் மெல்ல மெல்ல நகர்த்திக்கொண்டே போய்க்கொண்டிருந்தேன். எல்லைகளற்ற உலகம் என ஒன்றில்லை. ஆனால் என் எல்லைக் கற்களை என்னால் நகர்த்தி வைக்க முடியும். அதன் தேவையும் முக்கியத்துவமும் மாமாவுக்குப் புரிய வாய்ப்பில்லை.

‘மாமா, அம்மான்றவ ஒருத்தி இல்லே. உறவுங்கறது நாலஞ்சு பேரோட முடியறதும் இல்லே.’

‘இருந்துட்டுப் போகட்டுமே? அவ அழுகைய விடவாடா உன் ஞானம் பெரிசு?’ என்று குழந்தை போலக் கேட்டார்.

ஞானமா! நான் அதன் கோரப் பிடியில் இருந்து என்னை முற்றிலுமாக விடுவித்துக்கொள்ளப் போராடிக்கொண்டிருப்பவன் அல்லவா? என்ன சொன்னால் இவர் சமாதானம் ஆவார் என்று யோசித்தேன். இறுதியில், ‘நான் தமிழ்நாட்டுக்குக் கூடிய சீக்கிரம் வருவேன். அப்ப உங்காத்துக்குக் கண்டிப்பா ஒரு நடை வரேன்’ என்று சொன்னேன்.

மாமா அதிர்ந்துபோனார். ‘எங்காமா!’ என்று திரும்பத் திரும்பக் கேட்டார். அவரை எழுந்து போகவைக்க எனக்கு அப்போது வேறு வழி தெரியவில்லை. சீ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

வினய்யிடம் இதனைச் சொன்னேன். ‘பாவம் மனிதர்’ என்று வருத்தப்பட்டான்.

‘அவர் தாத்தாவுக்குப் பொறக்கலைன்னு எப்பவாவது அவர்கிட்டே நீ சொல்லுவியா?’ என்று கேட்டேன்.

‘அவசியமில்லைன்னு நினைக்கறேன். அவசியப்பட்டா அண்ணா சொல்லிப்பான்.’

இப்போது நான் வெடித்துச் சிரித்தேன்.

(தொடரும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

61. சர்க்கரைப் பொங்கல்

 

 

வினய், சொரிமுத்துச் சித்தனோடு ஆறேழு வருடங்கள் சுற்றியிருக்கிறான் என்று அறிந்தபோது எனக்குச் சற்று வியப்பாக இருந்தது. அவன் நிறைய மூலிகைகளைப் பற்றி வினய்க்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறான். இங்கு கிடைக்காத மூலிகைகள். எங்குமே இன்று கிடைக்காத மூலிகைகள். ஆனால் மூலிகைகள் இன்றி சித்து இல்லை. அப்படிச் செய்யப்படுபவை எதுவும் சித்தில் சேர்த்தி இல்லை.

‘வேறென்ன?’ என்று வினய் கேட்டதற்கு, ‘துஷ்ட சகவாசம்’ என்று சொரிமுத்து பதில் சொன்னான். ஆவிகள். பேய்கள். அமைதியுறாத ஆத்மாக்கள்.

‘ஒண்ணு தெரிஞ்சிக்கடா. இந்த உலகத்துலே மொத சித்தன் பரமசிவன். அவன் சுடுகாட்டு வாசி. விட்டுட்டு மலைக்கு ஓடிட்டான். கடேசி சித்தன் உங்கண்ணன். அவனும் சுடுகாட்ட விட்டுட்டு மலைக்குத்தான் ஓடினான்’ என்று சொரிமுத்து சொன்னபோது வினய்க்கு வியப்பாகிவிட்டது. அண்ணா சுடுகாட்டில் இருந்தானா?

‘பின்னே? திருச்சினாப்பள்ளி கண்டோன்மெண்டு சுடுகாட்லதாங் கெடப்பான். அப்பறம் கொஞ்சநாளு பெரம்பலூர்ல இருந்தான். குடிகாரப் பசங்க தொல்ல தாங்கலன்னு சொல்லிட்டு என்னாண்ட வந்து புலம்பினான். நாந்தான் அவனை விஜயவாடாவுக்கு அனுப்பிவெச்சேன். அங்க ஒரு வெட்டியான் நம்ம சினேகிதன்’ என்று சொன்னான்.

வினய்க்கு மிகவும் குழப்பமாக இருந்தது. அண்ணாவுக்கு சித்து தெரியும் என்று நம்புவதில் அவனுக்குப் பிரச்னை இருக்கவில்லை. ஆனால் அவனை எப்படி இவன் கடைசிச் சித்தன் என்று சொல்கிறான் என்பது புரியவில்லை.

‘அது அப்பிடித்தான். ஒனக்கு புரியாது. ஒரு சித்தன் எப்பம் பூரணமடையிறான் தெரியுமா? அவன் சித்து வேல செய்யிறத நிறுத்திட்டு அடுத்த லெவலுக்குப் போவுறப்ப.’

‘அடுத்த லெவல்னா?’

‘சொன்னனே, காத்த கட்டுப்படுத்தறது.’

‘பிராணாயாமம் மாதிரியா?’

சொரிமுத்து சிரித்தான். ‘எலேய் உங்கண்ணன் ஒண்ற அவருக்கு நான் ஸ்டாப்பா வலது நாசியால காத்த இழுத்து இடது நாசியால வெளிய விடுவான். தெரியுமா ஒனக்கு?’

‘அப்படியா?’

‘இதையே இருவத்தி நாலு மணி நேரமும் செய்யறவங்க இருக்காங்க. காத்துக்கு பர்மனெண்டா ஒன்வே ரோடு.’

‘எதுக்கு?’

‘சொன்னனேடா சோம்பேறி. காத்துதான் எல்லாம். அத கண்ட்ரோல் பண்ணத் தெரிஞ்சிட்டா முடிஞ்சிது கதை. அஞ்சு பூதமும் அப்பம் சமமாயிரும். நெருப்பு சுடும்னும் தெரியாது, தண்ணி உள்ளார இழுக்கும்னும் கிடையாது.’

ஹட யோகம். வினய்க்கு அந்தச் சொல் அப்போதுதான் அறிமுகமாகியிருக்கிறது. உன் அண்ணா ஒரு ஹடயோகி என்று சொரிமுத்து சொன்னபோது, அவனுக்கு உடலுக்குள் லேசாக நடுக்கம் கண்டது.

‘இப்பஞ்சொல்லு. காத்த கண்ட்ரோல் பண்ணுறது பெரிசா? இல்ல, காத்துக்குள்ள மறைஞ்சிக்கிட்டு சொல்றத செய்யிற ஆத்மாக்கள கண்ட்ரோல் பண்ணுறது பெரிசா?’

அண்ணாவுக்குச் சட்டை முனி என்ற சித்தரின் தொடர்பு பதினைந்து வருடங்களுக்கு முன்பு கிடைத்ததாக வினய்யிடம் சொரிமுத்து சொல்லியிருக்கிறான். கணக்கற்ற நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சித்தர் அவர். பாம்பாட்டிச் சித்தருக்கு ஞானம் உதிக்கக் காரணமாயிருந்தவர். மருதமலைக் காட்டில் ஒரு பிடாரனைப் பாம்பாட்டிச் சித்தராக்கிய சட்டை முனி, அண்ணாவைத் தொடர்புகொண்டிருக்கிறார் என்பது வினய்க்கு வியப்புக்குரிய தகவலாக இருந்தது. ‘இது நிஜமா?’ என்று திரும்பத் திரும்பக் கேட்டிருக்கிறான்.

‘ஆமா. உங்கண்ணனும் கொஞ்ச காலம் பாம்பு புடிச்சிக்கிட்டிருந்தான். பாம்பு வெசத்த சாப்பாடா தின்றவன பத்தி கேள்விப்பட்டிருக்கியா? உங்கண்ணன் திம்பான்.’

‘ஐயோ.’

‘என்ன ஐயோ? வெசம்னு நெனச்சா வெசம். மருந்துன்னு நினைச்சா மருந்து. அதை அவன் சாப்பாடுன்னு நினைச்சிருக்கான். அவ்ளதான் மேட்டரு. இதுல உள்ள மேட்டரு புரியிதா ஒனக்கு?’

‘ம்ம். நினைப்புதான் எல்லாம்.’

‘அவ்ளதான். வெளிய உள்ளதுல காத்துதான் எல்லாம். உள்ளார இருக்கறதுல நெனப்புதான் எல்லாம். இந்த காத்து - நெனப்பு ரெண்டும் வசமாயிட்டா அவன் யோகி.’

‘எனக்கு அந்த சட்டை முனிய பத்தி சொல்லுங்க. அண்ணாவுக்கு அவர்தான் ஞானம் குடுத்தாரா?’ என்று வினய் கேட்டான்.

‘ஆமாமா. சும்மா வெசத்த திங்காதடா, இந்தா இந்த பாம்பத் தின்னுன்னு ஒரு மலப்பாம்ப எடுத்து நீட்னாராம். சரி குடுங்கன்னு வாங்கி ஸ்டிரெய்ட்டா அது தலைய வாய்க்குள்ளார வெச்சி கடிச்சிருக்கான். இவன் கடிச்சா பாம்பு சும்மாருக்குமா? அது பதிலுக்கு இவன கடிச்சிருக்கு. பயபுள்ள செத்துட்டான்.’

‘ஐயோ.’

‘அதெல்லாம் அப்பிடித்தாண்டா. இவன சாவடிக்கறதுக்கா ரெண்டாயிரம் வருசத்து சித்தர் வருவாரு? அது ஒரு தீட்சை. கர்மத்த கழிக்கிறது.’

‘அப்படின்னா?’

‘ஒனக்கு புரியாது. எனக்கு தீட்சை குடுத்தவரு என் கர்மத்த கழிக்க என்னைய இருவது நாள் நிறுத்தாம செருப்பால அடிச்சிக்கிட்டே இருந்தாரு. அதுவும் வெறும் செருப்பில்லே. ஒரு கூடை நிறைய சாணிய எடுத்தாந்து வச்சிக்கிட்டு அதுல தோய்ச்சி தோய்ச்சி அட்ச்சாரு. இந்த ஒலகத்துல உள்ள ஒரே வாடை, சாணி வாடைதான்னு நான் நம்புற அளவுக்கு அடிச்சிட்டு, போய் குளிச்சிட்டு வந்துருன்னாரு. அதோட செரி.’

வினய் திகைத்திருந்தான். அது அவனறியாத உலகம். அண்ணா அந்த உலகில் எப்படியோ தன்னைப் பொருத்திக்கொண்டு உள்ளே நெடுந்தூரம் போய்விட்டான். இனி அவன் திரும்பப்போவதில்லை. என்றென்றைக்குமாக அவன் அந்த உறவின் உரிமைக்கு அப்பாற்பட்டவன் ஆகிவிட்டான். எவ்வளவு நெஞ்சுரம் இருந்திருக்க வேண்டும் அவனுக்கு! சிறு வயதில் அவனை இப்படியாக யாரும் எண்ணிக்கூடப் பார்த்ததில்லை. அதற்கு அவன் இடம் கொடுத்ததில்லை என்பதுதான் முக்கியம்.

‘ஆனா எனக்குத் தெரியும் வினய்’ என்று நான் சிரித்தபடி சொன்னேன். ‘நான் உன்கிட்டேகூட அதைப்பத்தி ஒரு மாதிரி சொல்லியிருக்கேன். நீ அப்ப நம்பலை.’

‘ஆமா. நம்பத்தான் முடியலை’ என்று வினய் சொன்னான். ‘ஆனா மொதமொத நான் ஒரு சித்து பண்ணிப் பாக்கறப்ப நம்பினேன் விமல்! அன்னிக்கெல்லாம் அண்ணாவையேதான் நினைச்சிண்டிருந்தேன்’ என்று உணர்ச்சி வயப்பட்டவனாகச் சொன்னான்.

அது, சொரிமுத்துவிடம் வினய் பயிற்சியில் இருந்த காலம். திடீரென்று ஒருநாள் காலை சொரிமுத்து, உறக்கத்தில் இருந்த வினய்யை எழுப்பி, ‘எனக்கு பசிக்குது. சக்கர பொங்கல் வேணும்’ என்று சொல்லியிருக்கிறான். சமைக்கலாம் என்று அடுப்படிக்கு வந்து பாத்திரங்களை எடுத்துப் பார்த்த வினய், ஒரு அரிசிமணியும் இல்லாததைக் கண்டு, பிட்சை எடுத்து வரலாம் என்று கிளம்பியிருக்கிறான்.

சொரிமுத்து ஒரு விஷயத்தில் மிகவும் உறுதியாக இருந்திருக்கிறான். எந்நாளும் அவன் தனது சித்துகளைத் தன் தேவைக்குப் பயன்படுத்தி வினய் பார்க்கவில்லை. ‘என்னிக்கி அது நடக்குதோ, அன்னிக்கி நான் செத்துருவேன்’ என்று சொரிமுத்து அவனிடம் சொல்லியிருக்கிறான். பிட்சை எடுத்துத்தான் உணவு. வினய்யையும் அவன் அப்படித்தான் பழக்கியிருந்தான்.

எனவே பிட்சைக்குக் கிளம்பிய வினய், திடீரென்று சந்தேகம் வந்து சொரிமுத்துவிடம் கேட்டிருக்கிறான். ‘அரிசி கிடைக்கும். வெல்லத்துக்கு எங்கே போக?’

‘நெய்க்கு மட்டும் எங்க போவ? முந்திரி பருப்பு? ஏலக்கா? தபாரு, எனக்கு சக்கர பொங்கல் இலக்கண சுத்தமா இருக்கணும் சொல்லிட்டேன்.’

 

வினய் ஒரு கணம் கண்மூடி யோசித்தான். இது ஒரு தேர்வு. எழுதிப் பார்த்தால்தான் என்ன? கிளம்பியவன், சட்டையைக் கழட்டிவிட்டுக் கிணற்றடிக்குப் போய்க் குளித்தான். ஈரம் சொட்டச் சொட்ட மீண்டும் அடுக்களைக்கு வந்து ஒரு அலுமினியத் தட்டை எடுத்து வைத்துக்கொண்டு வடக்குப் பார்த்து அமர்ந்தான். கண்ணை மூடிக்கொண்டு சொரிமுத்து சொல்லிக் கொடுத்த ஒரு வழியைப் பரிசோதிக்கப் பார்த்தான்.

கணப் பொழுதில் அது நிகழ்ந்திருக்க வேண்டும். ஆனால் அவனுக்கு ஆறு நிமிடங்கள் பிடித்தன. திருவானைக்கா கோயில் பிரசாதம். சுடச் சுட சர்க்கரைப் பொங்கல். தட்டில் அது வந்து விழுந்ததும் எடுத்துக்கொண்டு வந்து சொரிமுத்துவிடம் நீட்டினான்.

‘என்னதிது?’

‘சர்க்கரைப் பொங்கல். ஆனா நீங்க இதைச் சாப்பிட வேண்டாம். என்னால முடியிதான்னு பாத்தேன்.’

சொரிமுத்து நெடுநேரம் அவனை உற்றுப் பார்த்துக்கொண்டே இருந்தான். பிறகு புன்னகை செய்தான். பிறகு சொன்னான், ‘முடிஞ்சிதில்லே?’

‘ஆமா.’

‘இன்னொருக்கா டிரை பண்ணேன்னா வராது.’

‘ஐயோ ஏன்?’

‘டேய் பேட்ரி மாதிரிடா இதெல்லாம். ஒருக்கா யூஸ் பண்ணா சார்ஜு போயிரும். திரும்ப சார்ஜு ஏத்திக்கிட்டுத்தான் செய்யணும்.’

அடுத்த இருபத்தியொரு தினங்களுக்கு முழு உபவாசம் இருந்து கோடி முறை ஜபித்து, இழந்ததை அவன் திரும்பப் பெற்றிருக்கிறான். ‘வந்திரிச்சா? சரி, இன்னொரு பிளேட்டு சக்கர பொங்கல் எடுத்தா. திருவானைக்கா கோயில் பொங்கல் வேணா. வெல்லஞ்சரியில்லே. வரவர புது வெல்லத்தப் போட்டு சக்கர பொங்கல் டேஸ்டையே கெடுத்துடறானுக. திருப்பதிலேருந்து கொண்டா’ என்று சொரிமுத்து சொன்னான்.

திருப்பதி கோயில் சர்க்கரைப் பொங்கலைக் கொண்டுவந்ததற்கு அவன் நாற்பத்தி எட்டு தினங்கள் விரதம் இருக்க வேண்டியதானது. அதன்பின் சொரிமுத்து முன்பொரு முறை கட்டடத் தொழிலாளி ஒருவனிடம் இருந்து எடுத்த கேன்சரை ஒரு எள்ளுருண்டையில் அடைத்து வினய்யிடம் கொடுத்து, ‘இதக் கொண்டுபோயி நாஞ்சொல்ற ஆளுகிட்ட குடுத்து சாப்ட சொல்லு’ என்று சொன்னான்.

அந்தப் பயணத்தின்போதுதான், வினய் நிரந்தரமாக சொரிமுத்துவை விட்டு நகர்ந்துவிடும்படியானது.

(தொடரும்)

 

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

62. எள்ளுருண்டை

 

 

திருச்சிராப்பள்ளியில் இருந்து மார்த்தாண்டம் போகிற பஸ்ஸில் வினய்யை ஏற்றிவிட்டுத் தானே டிக்கெட்டும் எடுத்துக்கொடுத்த சொரிமுத்து, வழிச் செலவுக்குப் பத்து ரூபாய் பணமும் கொடுத்தான்.

‘இது போதாதே? திரும்பி வர என்ன செய்ய?’ என்று வினய் கேட்டபோது, ‘அங்க ஒருத்தன் டிக்கெட் எடுத்துத் தருவான் போ’ என்று சொல்லியிருக்கிறான். வழியெல்லாம் வினய் அந்த எள்ளுருண்டையையே நினைத்துக்கொண்டிருந்தான். அது ஒரு நோய். தீர்க்கவே முடியாத நோய். ஒரு எள்ளுருண்டைக்குள் ஒரு நோயை அடைக்கிற வித்தை பெரிதல்ல. நோய் என்று தெரிந்தும் அதை எடுத்துச்சென்று ஒருவனுக்கு அளிக்க வேண்டிய பணி அவனுக்கு மிகுந்த மன உளைச்சலைத் தந்தது.

‘ரொம்ப சிந்திக்காதடா. மூள சூடாயிரும்’ என்று சொரிமுத்து சொன்னான்.

‘அப்படித்தான் நினைக்கறேன். ஆனாலும் மனசுக்கு கஷ்டமாவே இருக்கு’ என்று வினய் பதில் சொன்னான்.

‘என்னா கஸ்டம்?’

‘இல்லே. இது ஒரு வியாதின்னு தெரியும். இதைக் கொண்டுபோய் ஒருத்தனுக்குக் குடுத்து அனுபவின்னு சொல்லிட்டு வர்றது குரூரம் இல்லியா?’

‘அது அவனுக்கு விடுதலையா இருந்திச்சின்னா?’

‘அது தெரியலை. ஆனாலும் கஷ்டப்பட்டு அப்பறம்தானே சாவான்? சாவுதான் விடுதலைன்னா, ஒரு சொட்டு விஷத்த குடுத்து சாகடிச்சிடலாமே?’

‘லூசு. அவங்கர்மம் கழிய வேணாவா?’ என்று கேட்டான்.

கண்ணுக்குத் தட்டுப்படாத கர்மம். அதைத்தான் சொரிமுத்து மூச்சுக்கொரு முறை சொல்லிக்கொண்டிருந்தான். முன்னெப்போதோ வாங்கிய கடனுக்கு தண்டம் கட்டுகிற சோலி. ஆனால் அதைச் செய்துதான் தீர வேண்டும் என்று சொரிமுத்து சொன்னான்.

‘மனுசன் சொமக்குற எடையில பேர்பாதி கர்மந்தான். அதக் குறைக்கறதுக்கு ஒலகத்துல டயட்டே கிடையாது. சொமந்துதான் தீரணும்’ என்று சொரிமுத்து சொன்னது வினய்க்கு மிகுந்த குழப்பமாக இருந்தது. செருப்பைச் சாணியில் தோய்த்து முகத்தில் அடித்தால் அதே கருமம் தொலைந்துவிடுகிறது. அடிக்கிற கை எது, தோய்க்கிற சாணி எது என்பது சங்கதி. எல்லோருக்கும் அது வாய்ப்பதில்லை. விழுகிற எல்லா செருப்படிகளும் கருமம் தொலைப்பதுமில்லை.

‘ஒனக்கு இதெல்லாம் புரியணுன்னா நீ தவஞ்செய்யணும்’ என்று சொரிமுத்து சொன்னான்.

சொரிமுத்து தினமும் தவம் செய்வான். சரியாக இரவு பதினொரு மணிக்கு அவனது தவம் ஆரம்பிக்கும். வீட்டுக்குள்தான் செய்வான். படுத்திருக்கும் பாயை எடுத்து சுருட்டி வைத்துவிட்டு வெறுந்தரையில் மீண்டும் அதே போலப் படுப்பான். இடது காலையும் வலது கையையும் செங்குத்தாக உயர்த்தி நிறுத்தி வைப்பான். கண் மூடியிருக்கும். மூன்றில் இருந்து நான்கு மணி நேரம் அப்படியே அசையாது கிடப்பான். அந்த நேரத்தில் அவனைத் தொட்டால், கிள்ளினால், அடித்தால், உதைத்தால் அவனுக்கு உறைக்காது. சற்றும் அசையாமல் கிடப்பான். வினய் ஓரிரு சமயம் அவன் தவத்தில் இருக்கும்போது உயர்த்தியிருக்கும் அவனது காலைப் பிடித்துக் கீழே இறக்கிவைத்திருக்கிறான். ஒரு ரப்பரைப் போல அந்தக் கால் மீண்டும் உயர்ந்து செங்குத்தாக நிற்கும். சொரிமுத்து கண்ணைத் திறக்க மாட்டான்.

அவனது அன்றைய சாதகம் முடிந்து அவனாகக் கண்ணைத் திறக்கும்போதுதான் அவனுக்கு சூழல் தெரிய ஆரம்பிக்கும்.

‘நான் உங்க காலைப் பிடிச்சி இழுத்தேன்’ என்று வினய் சொன்னான்.

‘அப்பிடியா?’ என்றுதான் சொரிமுத்து கேட்டான். சுய உணர்வற்றுப் போகிற சாதகம். அவன் பேசிய பல விஷயங்கள் வினய்க்குப் புரியவில்லை. ஒரே ஒருமுறை முக்கால் மணி நேரம் சமாதி நிலையில் இருந்திருப்பதாக ஒரு நாள் சொரிமுத்து சொன்னான். ‘அப்ப எங்குருநாதர் பக்கத்துல இருந்தாரு. அதுக்கப்பறம் தனியா எவ்ளவோ டிரை பண்ணிப் பாத்துட்டேன். எனக்கு அது விதிக்கலை’.

‘அண்ணா இருப்பானா?’

‘தெரியாது’ என்று சொன்னான். ‘எனக்குத் தெரிஞ்சி ராமகிருஷ்ண பரமஹம்சர் இருந்திருக்காரு. அவருதான் லாஸ்டு. அதுக்கப்பறம் சமாதியோகம் தெரியுன்னு சொல்லிக்கிட்டுத் திரியறவன் பூராம் ஃப்ராடு. பத்து நிமிசம், இருவது நிமிசம், ஒன்னவர் இருக்கலாம். நாள் கணக்கா நம்மளால எல்லாம் முடியாது.’

‘எப்படி இருக்கறது?’

‘சொன்னேன்ல? காத்து. ட்யூபுலேருந்து புடுங்கி உடுற மாதிரி காத்த புடுங்கி வெளிய வெச்சிடுறது. டைம் செட் பண்ணிட்டு அப்பறம் திரும்ப உள்ளார கொண்டு வெச்சிடுறது.’

காற்றை நிகர்த்த கேன்சர். ஒரு உள்ளிருந்து எடுத்துச் சிறிது காலம் வெளியே வைத்திருந்துவிட்டு மீண்டும் இன்னொரு உள்ளுக்குக் கொண்டுபோய் வைக்க முடிகிற பொருள்.

பொருளா! ஆம். அப்படித்தான் சொல்ல வேண்டும். அப்படிச் சொல்லுவதற்கு வசதியாகத்தான் சொரிமுத்து அதை ஒரு எள்ளுருண்டையாக்கிக் கொடுத்திருந்தான். செல்லும் வழியெல்லாம் வினய் தன் இடுப்பில் முடிந்து வைத்திருந்த எள்ளுருண்டையைப் பற்றியே நினைத்துக்கொண்டிருந்தான். அடிக்கடி அதைத் தொட்டுப் பார்த்துக்கொண்டான்.

‘பாரு, நீ மார்த்தாண்டம் பஸ் ஸ்டாண்டுலே இறங்கினதும் அங்கேருந்து களியக்காவிளைக்கு எப்படிப் போவணுன்னு யார்ட்டயாச்சும் கேளு. பஸ்ஸு போவுற ரூட்டுல நடந்து போய்க்கிட்டே இரு. சரியா மூணாங் கிலோமீட்டர்ல அவன் ஒன்னைய வந்து பாப்பான்.’

‘யாரு?’

‘இசக்கியப்பன்.’

‘கிறிஸ்டியனா?’

‘என்ன களுதையானா ஒனக்கென்ன?’

‘இல்லே. நான் அதுக்கு கேக்கலை. இசக்கியப்பனுக்கு விடுதலை வேணும்னா அவர் அவரோட சர்ச் ஃபாதர்கிட்டயோ, நேரா இயேசுநாதர்ட்டயோ கேட்டுக்கப் போறார். நீங்க எதுக்கு அவருக்கு?’

சொரிமுத்து சிரித்தான். ‘மண்ட பூராம் குப்பை. ம்ம்?’ என்று மீண்டும் சிரித்தான்.

‘இல்லே. தெரிஞ்சிக்கறதுக்காகத்தான் கேக்கறேன்.’

‘இதெல்லாம் சொல்லித் தெரியாதுடா. தானா அப்பப்ப வெளங்கும். நீ கெளம்பு’ என்று சொன்னான்.

முகமறியாத இசக்கியப்பனைத் தேடி, வினய் மார்த்தாண்டம் பஸ்ஸில் ஏறிப் பயணம் செய்ய ஆரம்பித்தான். இரவெல்லாம் உறங்காதிருந்து மறுநாள் காலை பேருந்து திருநெல்வேலியைக் கடந்து டீ குடிக்க ஓரிடத்தில் நின்றபோது, வினய் கீழே இறங்கினான். ஒதுங்கிச் சென்று சிறுநீர் கழித்துவிட்டு முகம் கழுவிக்கொண்டு வந்து பேருந்தின் அருகே நின்றான்.

அப்போதுதான் அவன் முகமது குட்டியைச் சந்தித்தான். அவன் அதே பேருந்தில் வந்தவனா, வேறு வண்டியில் பயணம் செய்துகொண்டிருந்தவனா என்று வினய்க்குத் தெரியவில்லை. எங்கோ பார்த்துக்கொண்டு நின்றிருந்த முகமது குட்டி சட்டென்று நினைவுக்கு வந்தவன் போல நேரே வினய்யிடம் வந்து, ‘எனக்கு அந்த எள்ளுருண்டை தேவைப்படுகிறது. தருவாயா?’ என்று கேட்டிருக்கிறான்.

வினய்க்கு அச்சமாகிவிட்டது. தன்னிடம் உள்ள எள்ளுருண்டையைப் பற்றி இவனுக்கு எப்படித் தெரியும்? சொரிமுத்து வீட்டில் வேட்டி மடிப்பில் வைத்து முடிந்துகொண்ட பிறகு இன்னும் அவனே அதை வெளியே எடுக்கவில்லை. அப்படி இருக்கையில், முன்பின் அறிமுகமில்லாத யாரோ ஒருவன், தான் கொடுத்து வைத்ததை வந்து கேட்பது போல அல்லவா இவன் கேட்கிறான்!

‘நீ எனக்கு அதை சும்மா தரவேண்டாம். பதிலுக்கு நீ எதையாவது விரும்பிக் கேட்டால் அதை நான் உனக்கு வரவழைத்துத் தருவேன்’ என்று முகமது குட்டி சொன்னான்.

‘நீங்கள் யார்?’

‘அது அத்தனை அவசியமா? உன் இடுப்பு மடிப்பில் உள்ள எள்ளுருண்டையை அறிந்தவன் என்பது போதாதா?’

‘அது புரிந்தது. அந்த எள்ளுருண்டைக்குள் என்ன இருக்கிறது என்பதும் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.’

‘ஆம். கேன்சர்.’

‘உங்களுக்கு அது எதற்கு?’

‘எனக்கல்ல. வேறு ஒருவனுக்கு.’

‘உருவாக்கி எடுத்துச் செல்ல வேண்டியதுதானே?’

‘அது என் திட்டமில்லை. உனக்குச் சொன்னால் புரியாது. உன்னால் தர முடியுமா? முடியாதா?’

‘நான் அனுமதி கேட்க வேண்டும்.’

‘யாரிடம்?’

‘என் குரு.’

‘சரி கேள்’ என்று முகமது குட்டி சொன்னான்.

வினய்க்குக் குழப்பமாக இருந்தது. கண்ணை மூடி மனத்துக்குள் சொரிமுத்துவை நினைத்தான். நெருக்கடி நேரத்தில் கண்ணை மூடி என்னை நினைத்துக்கொண்டால் நான் உன்னோடு பேசுவேன் என்று சொரிமுத்து அவனிடம் சொல்லியிருந்தான். ஏற்கெனவே ஓரிரு முறை அப்படிப் பேசியும் இருக்கிறான். அந்த நம்பிக்கையில் அம்முறையும் கண்ணை மூடி சொரிமுத்துவை நினைத்தான். முழுதாக ஒரு நிமிடம் ஆகியும் சொரிமுத்து அவனிடம் வரவில்லை.

‘என்ன?’ என்று முகமது குட்டி கேட்டான்.

‘இன்னும் உத்தரவு வரவில்லை.’

‘சரி, மீண்டும் முயற்சி செய்’ என்று சொல்லிவிட்டு, அவன் வேறு புறம் திரும்பி நின்றுகொண்டான்.

வினய் மீண்டும் கண்ணை மூடிக்கொண்டு சொரிமுத்துவை உள்ளுக்குள் கூப்பிட்டுப் பார்த்தான். அவன் வரவில்லை. இதற்குள் டீ குடிக்கப்போயிருந்த ஓட்டுநரும் நடத்துநரும் வந்துவிட்டார்கள். பயணிகள் பேருந்துக்குள் ஏறத் தொடங்கிவிட்டார்கள்.

‘என்ன? கிடைத்ததா?’ என்று முகமது குட்டி அவசரப்படுத்தினான்.

‘இல்லை. மன்னித்துக்கொள்ளுங்கள்’ என்று சொல்லிவிட்டு அவன் பேருந்தில் ஏறப் போனபோது, முகமது குட்டி அவனைத் தொட்டு நிறுத்தினான். ‘இதோ பார், எனக்கு அது வேண்டும். உன்னிடம் அது உள்ளது என்று தெரிந்துகொள்ள முடிந்தவனால் உனக்குத் தெரியாமல் எடுத்துக்கொள்ளவும் முடியும். ஆனால் நான் அப்படிச் செய்யவில்லை, பார்த்தாயா?’

இப்போது வினய்க்குக் கோபம் வந்தது.

(தொடரும்)

 

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

63. காற்று மறைப்பு

 

 

கொழுகொழுவென்று இரண்டு பெரிய கூழாங்கற்களை ஒன்றன் மீது ஒன்று நிறுத்திவைத்தாற்போல் இருந்தான் அவன். உயரம் நாலரை அடிகூட இருக்காது. தொப்பையைத் தூக்கிக்கொண்டு அவனால் வேகமாக நடக்கக்கூட முடியாது என்று வினய்க்குத் தோன்றியது. முழங்கால் தெரியும்படி லுங்கியை உயர்த்திக் கட்டியிருந்தான். லுங்கியில் பாதியை மறைக்கும் நீளத்துக்கு தொளதொளவென்று ஒரு ஜிப்பா அணிந்திருந்தான். கழுத்தில் கிடந்த கறுப்புக் கயிறில் ஒரு தாயத்து இருந்தது. தனது மிகச் சிறிய கண்களை அடிக்கடி சுருக்கிச் சுருக்கிப் பேசினான். அப்படிக் கண்ணைச் சுருக்கும்போது அவனது காது மடல்கள் விரிந்து அடங்குவதை வினய் கண்டான்.

ஒரு பொருள். எள்ளுருண்டை. மார்த்தாண்டம் இசக்கியப்பனுக்கு விதிக்கப்பட்ட அதனை இந்த முகமது குட்டி ஏன் கேட்கிறான்? இத்தனைப் பேர் உலவும் இந்த நெடுஞ்சாலைத் தேநீர்க் கடை வளாகத்தில் மிகச் சரியாகத் தன்னிடம் வந்து இடுப்பில் இருப்பதை எடுத்துக் கொடு என்று கேட்கிற மனிதன் யாராக இருப்பான் என்று வினய்க்குப் புரியவில்லை. முகமது குட்டியை ஒரு சித்தனாக அவனால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. சிவன் மனத்தில் உட்காராவிட்டால் சித்து வராது என்று சொரிமுத்து சொல்லியிருந்தான். ‘எல்லா கடவுளும் ஒண்ணில்லியா அப்போ?’ என்று வினய் கேட்டதற்கு, ‘பாலுந்தயிரும் ஒண்ணுன்னு சொன்னா என்னா உண்மையோ அதான் இதும்’ என்று பதில் சொன்னான். சரியான பதில்தான். ஒன்றாகவும் ஒன்றல்லதாகவும் உள்ளவையும் இருக்கத்தானே செய்கின்றன?

‘இதோ பாருங்கள். எனக்கு நீங்கள் யாரென்று தெரியாது. அது தெரிய வேண்டிய அவசியமும் இல்லை. நீங்கள் என்னிடம் எதிர்பார்ப்பதை நான் இப்போது செய்யக்கூடிய சூழ்நிலையில் இல்லை. ஒருவேளை நீங்கள் இதை என்னிடமிருந்து பறித்துச் செல்லக்கூடிய வல்லமை கொண்டவராக இருக்கலாம். என்னால் உங்களைத் தடுக்க முடியாது போகலாம். அதுவல்ல பிரச்னை. இன்னொருவரின் பொருளுக்கு நீங்கள் ஆசைப்படுவது சரியல்ல’ என்று வினய் சொன்னான்.

அவன் சிறிது நேரம் தனது தாடியைத் தடவிக்கொண்டிருந்துவிட்டு, ‘இல்லை. நான் எடுத்துத்தான் தீர வேண்டும்’ என்று சொன்னான்.

வினய்க்கு அச்சமாகிவிட்டது. மீண்டும் மனத்துக்குள் சொரிமுத்துவை நினைத்தான். கிழவன் ஏன் இப்படிப் படுத்துகிறான்? எங்கே போய்த் தொலைந்திருப்பான்? இப்படி ஒரு நெருக்கடியில் உதவாமல் இவன் என்ன குருநாதர்? அவன் வேகவேகமாக யோசித்தான். பேருந்து கிளம்பிவிட்டது. சட்டென்று அதன் முன்பக்கம் ஓடி ஏறிக்கொண்டான். ‘டேய், டேய்’ என்று கத்தியபடியே முகமது குட்டி தன் தொப்பையைத் தூக்கிக்கொண்டு பின்னாலேயே துரத்தி வந்து அவனும் தொற்றிக்கொண்டான். இதற்குள் முன்புற வழியாக ஏறிய வினய் ஒரே ஓட்டமாகப் பாய்ந்து பேருந்தின் பின் வழியே வெளியே குதித்தான். திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. ஒரு வேட்டை நாயின் வேகத்தில் பாய்ந்து, கிளம்பிக்கொண்டிருந்த இன்னொரு பேருந்தில் அவன் ஏறி ஜன்னல் வழியே பார்த்தபோது, அவன் ஏற வேண்டிய பேருந்து நெடுஞ்சாலையை அடைந்து வேகமெடுத்துவிட்டிருந்தது. முகமது குட்டி அதில்தான் இருந்தான்.

அவனுக்கு மிகுந்த பதற்றமாக இருந்தது. காலியாக இருந்த ஓர் இருக்கையில் உட்கார்ந்து சிறிது ஆசுவாசப்படுத்திக்கொண்டான். அந்தப் பேருந்து எங்கே போகிறது என்று அவனுக்குத் தெரியவில்லை. யாரிடமாவது கேட்கலாம். அது அவசியமா என்றும் தெரியவில்லை. கிளம்பும்போது சொரிமுத்து கொடுத்த பத்து ரூபாய்த் தாள் பாக்கெட்டில் பத்திரமாக இருந்தது. இடுப்பைத் தொட்டுப் பார்த்துக்கொண்டான். எள்ளுருண்டையும் இருந்தது. நடத்துநரிடம் விவரம் சொல்லி டிக்கெட் வாங்கிக்கொள்ளலாம் என்று நினைத்தான். ஆனால் எங்கே என்று கேட்பது?

குழப்பத்தில் சில நிமிடங்கள் போனது. பிறகு ஒரு முடிவுடன் எழுந்து நடத்துநரிடம் சென்று ‘இந்த பஸ் எங்க போகுது?’ என்று கேட்டான். அவனை ஏற இறங்கப் பார்த்த நடத்துநர், ‘நீ எங்க போகணும்?’ என்று பதிலுக்குக் கேட்டார்.

‘நான் மார்த்தாண்டம் போகணும்.’

‘எங்க ஏறின?’

‘அங்க டீக்கடைல வண்டி நின்னப்ப..’

‘பஸ்ஸு மாறிட்ட தம்பி. இது மதுரை போற வண்டி. அடுத்த ஸ்டாப்புல இறங்கிக்க’ என்று நடத்துநர் சொன்னார்.

‘இல்லே. மதுரைக்கு டிக்கெட் எவ்ளோ?’

நடத்துநர் அங்கேயே விசில் ஊதி வண்டியை நிறுத்தினார். ‘இறங்கிக்க’ என்று சொன்னார். அதற்குமேல் அவருடன் என்ன பேசுவதென்று வினய்க்குப் புரியவில்லை. வண்டி நின்ற இடத்தில் இறங்கிக்கொண்டான். பேருந்து வந்த வழியிலேயே திரும்பி நடக்க ஆரம்பித்தான்.

முக்கால் மணி நேரம் நடந்தபின்பு அவனுக்கு மிகவும் களைப்பாகிப் போனது. சாலையோரம் ஒரு மரத்தடியில் அமர்ந்தான். குடிக்க நீர் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. தாகம் கொன்றுகொண்டிருந்தது. ஆனால் கண்ணில் பட்ட தூரத்தில் கடைகள் ஏதுமில்லை. நீர் நிலையும் எதுவும் தென்படவில்லை. ஆளற்ற நெடுஞ்சாலை ஓர் அசுரன் வீழ்ந்து கிடப்பது போல நீண்டு கிடந்தது. அவ்வப்போது சில வாகனங்கள் சத்தமுடன் கடந்து போனது தவிர, நடமாட்டம் ஏதுமின்றி வெறும் வெளியாக இருந்தது.

இப்போது அவன் மீண்டும் கண்ணை மூடி சொரிமுத்துவை நினைத்தான். எண்ணி ஐந்து விநாடிகளில் சொரிமுத்து அவனுக்கு பதில் சொன்னான்.

‘எங்க போயிட்டிங்க நீங்க? எத்தன தடவை கூப்டுவேன்? காதுலயே விழலியா?’

‘கூப்ட்டியா? எப்ப?’

‘இப்ப ஒரு மணி நேரம் முன்ன. இங்க எனக்குப் பெரிய சிக்கல்.’

‘என்னாது?’ என்று சொரிமுத்து கேட்டான்.

‘முகமது குட்டின்னு ஒருத்தன் என்கிட்டே வந்து எள்ளுருண்டைய குடுன்னு கேட்டான்.’

சொரிமுத்து சிறிது நேரம் அமைதியாக இருந்தான். பிறகு, ‘நீ என்ன சொன்ன?’

‘உங்கள கேக்காம அதெல்லாம் முடியாதுன்னு சொன்னேன்.’

‘ஒத்துக்கிட்டானா?’

‘என்னால அதை உன்கிட்டேருந்து எடுத்துக்க முடியும்னு சொன்னான். நான் பயந்தே போயிட்டேன். தப்பிச்சி ஓடி, இப்ப எங்கயோ இருக்கேன். எந்த இடம்னுகூடத் தெரியலை.’

அவன் மீண்டும் சிறிது நேரம் அமைதியாக இருந்தான். வினய் மீண்டும் கேட்டான், ‘நான் கூப்ட்டப்ப நீங்க ஏன் வரலை?’

‘நீ கூப்ட்டது நெசம்னா, அது எனக்குக் கேக்கலைன்றதும் நெசம்.’

‘அது எப்படி கேக்காம போகும்?’

‘கேக்கலை. அதான் சங்கதி. நீ இருந்த இடத்துக் காத்து செஞ்ச சதி.’

‘புரியலை.’

‘காத்துதாண்டா எல்லாம். உன் எதிர்ல இருந்தவன் எப்படி இருந்தான்?’

‘ரொம்ப குள்ளம். ரொம்ப குண்டா இருந்தான். துலுக்கன். லுங்கி கட்டிண்டு, தாடி வெச்சிண்டு... பேர் கேட்டப்போ முகமது குட்டின்னு சொன்னான்.’

‘சரிவிடு. தப்பான ஆளு. அதான் தப்பான காத்து. உருண்ட பத்திரமா இருக்குதில்ல?’

‘ஆமா’ என்று இடுப்பைத் தொட்டுப் பார்த்தபடி சொன்னான்.

‘அப்பஞ்செரி. நாஞ்சொல்லுறத செய்யி. எங்க நிக்குற நீ?’

‘மெயின் ரோட்ல. பைபாஸ்.’

‘காலுங்கீழ என்ன மண்ணு இருக்குது?’

அவன் குனிந்து பார்த்துவிட்டு, ‘செம்மண்’ என்று சொன்னான்.

‘ஒரு பிடி அள்ளு.’

வினய் அவன் சொன்னதைப் போலச் செய்தான்.

‘எடுத்தியா?’

‘உம்.’

‘சரி. அத ரெண்டா பிரிச்சி பீச்சாங்கையில பாதிய போடு.’

வினய் எடுத்த மண்ணை இரு கரங்களிலுமாகப் பிரித்துக்கொண்டான்.

‘செஞ்சியா?’

‘உம்.’

‘செரி. எண்பது செகிண்டு சும்மா இரு. நான் ஒண்ணு பண்றேன்’ என்று சொல்லிவிட்டு சொரிமுத்து அமைதியானான்.

 

வினய் காத்திருந்தான். சொரிமுத்து அவனுக்குச் சொல்லிக் கொடுத்திருந்த தியான மந்திரங்களில் ஒன்றை மனத்துக்குள் உச்சாடனம் செய்யத் தொடங்கினான். கண்ணை மூடி நின்றபடி அவன் மந்திர உச்சாடனத்தில் ஈடுபடத் தொடங்கிய சில விநாடிகளில் அவனுக்கு உலகம் மறந்துபோனது. சட்டென்று யாரோ தன்னைத் தொடுவதுபோலிருக்க, மந்திரத்தைப் பாதியில் நிறுத்திவிட்டுக் கண்ணைத் திறந்தான்.

எதிரே முகமது குட்டி நின்றிருந்தான். வினய் அலறிவிட்டான். அவன் கரங்களில் இருந்த மண் அவனையறியாமல் கீழே விழுந்தது. அரைக் கணமும் தாமதிக்காமல் அங்கிருந்து அவன் ஓடத் தொடங்கினான்.

‘டேய் ஓடாதே.. தம்பி டேய்’ என்றபடியே முகமது குட்டி அவன் பின்னால் ஓட்டமும் நடையுமாக வரத் தொடங்க, இதென்ன தொல்லை என்று வினய்க்கு எரிச்சலாக வந்தது. ஒரு கணம் யோசித்துவிட்டுச் சட்டென்று நின்றான். குனிந்து ஒரு கருங்கல்லை எடுத்தான்.

‘கிட்ட வந்தேன்னா தலையப் பொளந்துடுவேன்’ என்று முகமது குட்டியைப் பார்த்துக் கத்தினான்.

துரத்திக்கொண்டு வந்த முகமது குட்டி இப்போது சிரித்தான். வினய் சட்டென்று கண்ணை மூடி மீண்டும் சொரிமுத்துவை அழைக்கப் பார்த்தான். பதில் வரவில்லை. ஐயோ என்று ஆகிவிட்டது அவனுக்கு. தனக்குத் தெரிந்த குறைந்த அளவு சித்து அறிவைக் கொண்டு இவனை ஏதாவது செய்ய முடியுமா என்று யோசித்துப் பார்த்தான். ‘ஒனக்கு மந்திர ஜப வேகம் ரொம்பக் கம்மியா இருக்குதுடா. மனசு இன்னும் முழுசா குவியலை. கோடி, பத்து கோடி, நூறு கோடி உச்சாடனம் பண்ணி உருவேத்தி வெச்சவனுகல்லாம் இருக்கானுக. நீ இன்னும் நாப்பதாயிரம் தாண்டல பாரு. அதாங் கஸ்டப்படுற’ என்று சொரிமுத்து சொன்னது நினைவுக்கு வந்தது.

இதற்குள் முகமது குட்டி அவன் அருகே வந்துவிட்டிருந்தான். சிரித்தான். ‘எள்ளுருண்ட தர்றியா?’ என்று மீண்டும் கேட்டான்.

‘முடியாது. போயிடு.’

‘அப்ப சரி’ என்று சொல்லிவிட்டு வினய் சற்றும் எதிர்பாராதவிதமாக அவன் திரும்பிச் செல்ல ஆரம்பித்தான். சிறிது நேரம் அவன் போவதையே பார்த்துக்கொண்டிருந்த வினய்க்கு சட்டென்று பயம் வந்து இடுப்பைத் தொட்டுப் பார்த்தான். முடிந்துவைத்த இடத்தில் அது இருந்தது. இருந்தாலும் சந்தேகம் தீர அவன் முடிப்பை அவிழ்த்து உருண்டையை எடுத்தான்.

எள்ளுருண்டை இல்லை. ஒரு கமர்கட்டு இருந்தது.

(தொடரும்)

 

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

64. சிவம்

 

 

இரை கண்ட முதலையின் ஆக்ரோஷம் போன்றதொரு சினம் மனத்துக்குள் ஒரு புள்ளியாகக் குவிந்தது. இன்றைக்கு அந்த முகமது குட்டியைக் கொல்லாமல் விடப்போவதில்லை என்று முடிவு செய்துகொண்டு, வினய் அவன் போன பாதையில் துரத்திக்கொண்டு ஓட ஆரம்பித்தான். தான் தோற்றிருக்கிறோம் என்று எண்ணவே அவனுக்குப் பிடிக்கவில்லை. அது தோல்விதானா. துலுக்கன் சக்கையாக ஏமாற்றிவிட்டான். அயோக்கியன். அவனை சும்மா விடுவதற்கில்லை. வெட்டிக் கூறுபோடாமல் இந்த ஆத்திரம் தணியாது என்று அவனுக்குத் தோன்றியது. நெடுஞ்சாலையில் இருந்து இடதுபுறம் பிரிந்த ஒரு பாதையில் இறங்கித்தான் முகமது குட்டி சென்றான். வினய் அதே வழியில் அவனைத் தேடிக்கொண்டு போனான். எவ்வளவு நேரம் ஓடியிருப்பானோ, எங்கெல்லாம் தேடியிருப்பானோ கணக்கே இல்லை. பார்வையில் கருமை படர்ந்து கால்கள் நடுங்க ஆரம்பித்தபோது, இதற்கு மேல் முடியாது என்று தோன்றிவிட்டது. அழுகை வந்தது. ஆள்களற்ற ஒரு பேருந்து நிழற்குடையின் அடியில் இருந்த சிமெண்டு பெஞ்சில் போய் விழுந்தான். தனது இயலாமையும் கையாலாகாத்தனமும் அவனைக் குத்திக் கிழித்துக்கொண்டிருந்தன. எத்தனை திறமையான மோசடி!

அவன் அயோக்கியன்தான். சந்தேகமில்லை. ஆனால் ஒரு அயோக்கியனுக்கு இத்தகைய சக்திகள் எப்படிக் கைகூடும்? அதுதான் புரியவில்லை. சிவனை நினையாதவனுக்கு சித்து வராது என்று சொரிமுத்து சொன்னது உண்மைதான் என்று அவன் நம்பத் தொடங்கியிருந்தான். அவன் சிறு வயது முதல் ராமனையும் திருப்பதி வேங்கடாசலபதியையும் திருவிடந்தை நித்யகல்யாணப் பெருமாளையும் மட்டுமே வணங்கி வந்திருந்தான். கடவுளே என்று மனத்துக்குள் நினைத்தால் உடனே அவனுக்கு ஆதி வராக மூர்த்திதான் கடவுளாக உருத் திரள்வார். சொரிமுத்துவிடம் சேர்ந்த பின்பு சிவனை நினைப்பதற்கும் சிவபூஜை செய்வதற்கும் தன்னைப் பழக்கப்படுத்திக்கொள்ள ஆரம்பித்து, மனம் கூடாமல் மிகுந்த சிரமப்பட்டான்.

சொரிமுத்து ஒருநாள் சொன்னான். ‘நீ ஒரு வேல செய்யிறியா? நேரா உங்கூருக்கே போ. அங்க கோவளத்துல தர்கா வாசல்ல ஒரு பக்கிரி இருப்பான்.’

‘தெரியும்.’

‘அவனைப் போய்ப் பாரு. உம்பிரச்னைய அவன்கிட்டெ சொல்லு. பெயிண்டு கலர மாத்தி அடிக்கிறதுல அவன் எக்ஸ்பர்ட்டு.’

வினய்க்கு இது ஆச்சரியமாக இருந்தது. கோவளம் பக்கிரியைப் பற்றி இவனுக்கு எப்படித் தெரியும்? அம்மா எப்போதாவது அந்தப் பக்கிரியிடம் சென்று மந்திரித்த திருநீறு வாங்கி வருவதுண்டு. சில சிறிய வியாதிகளுக்கு அவனது வைத்தியம் பயன்பட்டிருக்கிறது. அவன் சித்தரா?

‘டவுட்டா ஒனக்கு? சித்தந்தான். நீ போய் நான் சொன்னேன்னு அவன்கிட்டே சொல்லு. உம்மனசுல இருக்கற மத்த சாமிங்கள பெருக்கித் தள்ளிட்டு சிவனை உக்கார வச்சி, ஆணியடிச்சி அனுப்பிடுவான்.’

‘என்னால நம்ப முடியலை’ என்று வினய் சொன்னான்.

‘டேய், ஒன்னால எதைத்தான் நம்ப முடியுது? சொன்னதச் செய்டா. நேரா போய் அவனை மட்டும் பாத்துட்டு திரும்பி வந்துடு.’

‘ஏன், அதை நீங்க செய்ய முடியாதா?’

‘முடியாது. அந்த பவர் எனக்கில்லை’ என்று சொரிமுத்து சொன்னான். இதுவும் வினய்க்குக் குழப்பமாக இருந்தது.

‘ஒண்ணே ஒண்ணு மட்டும் கேக்கறேன். இதுக்கு மட்டும் நேரா பதில் சொல்லிடுங்கோ. அந்த பக்கிரி சிவபக்தரா?’

சொரிமுத்து ஹோவென்று குரல் உயர்த்திச் சிரிக்க ஆரம்பித்தான். நெடுநேரம் சிரித்துக்கொண்டே இருந்தான். கண் முழியெல்லாம் கலங்கிப்போகிற அளவுக்கு அப்படியொரு சிரிப்பு.

‘என்ன சிரிப்பு?’

‘என்ன கேட்டே நீ?’

‘அந்தப் பக்கிரி சிவபக்தரான்னு கேட்டேன்.’

‘லூசு. அவன் சிவனேதாண்டா’ என்று சொரிமுத்து சொன்னான். ‘புத்திய குவிச்சி நாஞ்சொல்றத உறிஞ்சிக்க. சிவன்னு சொல்றேன் இல்ல? அது ஒரு ஆள் இல்ல. அது ஒரு பவர். கரண்டு மாதிரி ஒரு பவர். காத்துல கரண்டு இருக்கும். தண்ணில கரண்டு இருக்கும். நெலத்துக்குள்ளார கரண்டு இருக்கும். நெருப்பு சுடுது பாத்தியா? அதுவும் கரண்டுதான்.’

‘சரி.’

‘மின்சார வாரியம் என்னா செய்யிது? அனாமத்தா கெடக்குற கரண்ட உருட்டி, திரட்டி எடுத்து சேமிச்சி வெக்குது. லைட்டு எரிய, ஃபேன் எரிய, டிவி பொட்டி படம் காட்ட, கம்பி வழியா வீடுங்களுக்கு அனுப்புது. கரீட்டா?’

‘ஆமா.’

‘அதேதான் நாஞ்சொல்றதும். சிவன்றது ஒரு பவர். ஒரு கரண்டு. அத வெச்சி நிறைய காரியம் பண்ண முடியும்.’

‘ஆனா, சிவன் ஹிந்துக் கடவுள் இல்லியோ?’

‘கடவுள்னு நினைச்சிக்கறது வசதியா இருந்திச்சின்னா நெனச்சிக்க. ஒனக்கு பன்னின்னு நினைச்சிக்கணுன்னு தோணிச்சின்னாலும் நெனச்சிக்க. கருவாடுன்னு வேணாக்கூட நினைச்சிக்க. ஆனா, நீ நினைக்கறது சிவமாத்தான் இருக்கணும். இந்துவா, இன்னொருத்தனான்னு பாக்காத. நெனப்புக்கு மதமில்லே.’

‘வராகப் பெருமாள் பன்னியாத்தான் வந்தார். எங்கூர்ல அவர்தான் பெருமாள். அவரை நினைச்சிண்டா?’

‘சிவம்தான் வராகமாச்சின்னு நெனச்சிக்கிட்டன்னா செரி. ஆனா நீ அப்பிடி நினைக்கமாட்டியே? மகாவிஷ்ணுவல்ல நினைப்ப?’

‘அது தப்பா?’

‘தப்புன்னு நாஞ்சொன்னனா? விஷ்ணுவ நினைச்சி சித்து படிக்க முடியாது. அந்த வடிவத்துக்கு அந்த பவர் கெடியாது.’

‘அதான் ஏன்?’

ஐயோ ஐயோ என்று சொரிமுத்து தலையில் அடித்துக்கொண்டான். ‘எப்பிட்றா உங்காத்தா உங்கண்ணன பெத்தப்பறம் ஒன்னைய பெத்தா? லூசு.’

வினய்க்கு அழுகை வந்தது. ‘தெரிஞ்சிக்கத்தானே கேக்கறேன்? இப்படித் திட்டினா என்ன அர்த்தம்?’

‘தபாரு, தண்ணில கரெண்டு இருக்குது. ரைட்டா?’

‘ஆமா.’

‘குடிக்கறதுக்கு உங்க வீட்ல குடத்துல புடிச்சி வெக்குற தண்ணில கரண்டு இருக்குதா? கிளாசுல எடுத்து குடிக்கறப்ப ஷாக்கடிக்குதா?’

‘இல்லே.’

‘அதான். கிளாசுல எடுத்துக் குடிக்கற தண்ணிக்கு தாகம் தீக்கற பவர் மட்டும்தான் இருக்கும். ஆக்ரோசமா அது அருவியா விழசொல்லத்தான் கரண்டு வரும்.’

சட்டென்று ஏதோ பிடிபட்டாற்போல் இருந்தது.

‘தண்ணி ஒண்ணுதான். பவர் ஒண்ணுதான். நீ கிளாசுல எடுக்கிறியா, கம்பில தேக்குறியான்றதுதான் மேட்டரு.’

வினய் சட்டென்று சொரிமுத்துவின் காலைக் குனிந்து தொட்டு கண்ணில் ஒற்றிக்கொண்டான்.

‘புரிஞ்சிடுத்து. ஆனா இன்னும் ஒண்ணே ஒண்ணு.’

‘கேளு.’

‘அந்த கோவளத்து பக்கிரி சித்து எதுவும் செஞ்சதா நான் கேள்விப்பட்டதில்லே. மந்திரிச்சி விபூதி தருவார். எங்கப்பாவுக்குக்கூட ஒரு சமயம் வயித்து வலி வந்தப்ப அவர் மந்திரிச்சிக் குடுத்த விபூதி ஹெல்ப் பண்ணியிருக்கு.’

‘உங்கண்ணுக்குத் தெரியறாப்ல சித்து வேல பண்ண அவன் என்ன கேனயனா? அந்தப் பக்கிரி ஒரு பூரண புருசன். என்னிக்கானா உங்கண்ணன பாத்தன்னா அவனப் பத்திக் கேளு.’

‘அண்ணாவுக்கு அவரைத் தெரியுமா?’

‘திருப்போரூர் சாமி மடத்துல உங்க வம்சத்து சுவடி இருக்குதுன்றத உங்கண்ணனாண்ட சொன்னதே அவந்தான்.’

‘நிஜமாவா!’

‘அந்த சாமி ஒரு அப்புராணி. அதுக்கு சுவடியெல்லாம் படிக்கத் தெரியாது. சொம்மா பளக்க தோசத்துல நமசிவாயம் வாழ்கன்னு சொல்லிக்கிட்டிருக்கும். என்னிக்கோ யாரோ கொண்டாந்து வெச்ச சுவடிங்க அந்த மடத்துல ஏகமா கெடக்குது. அதுல ஒண்ண உருவிட்டு வந்தான் உங்கண்ணன்.’

வினய் நெடுநேரம் அதன்பிறகு பேசவேயில்லை. தனியே சென்று அமர்ந்து யோசித்துக்கொண்டே இருந்தான். கோவளத்துப் பக்கிரி. எத்தனையோ நூறு மைல்கள் தொலைவில் தர்கா வாசலில் கிடக்கிறவன். ஒரு பிச்சைக்காரனாக ஊருக்கு அவனைத் தெரியும். போடுகிற ஐந்து, பத்து காசுகளுக்கு இடது கையை உயர்த்தி ஆசி வழங்குகிற மனிதன். ஒரு மருத்துவனாக அவனை அம்மா வீட்டுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறாள். மந்திரிக்கத் தெரிந்த பக்கிரி. ஆனால் அவன் அதெல்லாம் இல்லை. அவை அனைத்துக்கும் மேலே என்று சொரிமுத்து சொன்னான்.

முகமது குட்டியைப் பற்றி நினைக்கும்போது உடனே வினய்க்கு அந்தக் கோவளத்துப் பக்கிரியின் நினைவுதான் வந்தது. பூரண புருஷன். என்ன ஒரு சொல். அந்த ஒற்றைச் சொல்லில் சொரிமுத்து அந்தப் பக்கிரியின் மீதான மதிப்பையும் பக்தியையும் வினய் மனத்தில் கண்காணா உயரத்துக்கு ஏற்றி வைத்துவிட்டான். முகமது குட்டியும் துலுக்கன் தான். இவனுக்கும் ஏதோ சில சக்திகள் இருக்கின்றன. சித்தோ, சித்தைப் போன்ற வேறெதுவோ அறிந்திருக்கிறான். இன்னொருத்தன் இடுப்பு முடிப்பில் இருந்து ஒரு பொருளைத் திருடும் வல்லமை அவனுக்கு இருக்கிறது. அவன் அருகில் வரும்போது சொரிமுத்துவுடன் தொடர்புகொள்ளக்கூட முடியாமல் போய்விடுகிறது. காற்று சரியில்லை என்று சொரிமுத்து சொல்கிறான். சிவமற்றுப்போகிற ஒரு சூழலை ஒருவனால் உருவாக்க முடியுமா. அதில் அற்புதங்களையும் நிகழ்த்த முடியுமா.

நடந்தது அற்புதமல்ல. அபத்தம்தான். அயோக்கியத்தனமும்கூட. அதனால்தான் வினய் கொந்தளித்துப்போனான். ஏதாவது செய்து முகமது குட்டியைப் பழிவாங்கிவிட வேண்டும் என்று மிகவும் விரும்பினான். ஆனால் இதை அவன் சொரிமுத்துவிடம் சொல்ல விரும்பவில்லை. எள்ளுருண்டை போனால் போகிறது; நீ திரும்பி வந்துவிடு என்று அவன் சொல்லிவிடுவான். எள்ளுருண்டை அல்ல பிரச்னை. ஏமாற்றப்பட்டதுதான் பெரும் பிரச்னை.

வினய் அந்தப் பேருந்து நிறுத்தத்தில் ஒரு மணிநேரம் அமர்ந்திருந்தான். கண்ணை மூடி, முகமது குட்டி எங்கே சென்றிருப்பான் என்று தியானம் செய்ய ஆரம்பித்தான். சொற்ப அளவில் தான் சேகரித்து வைத்திருந்த சக்தி முழுவதையும் செலவிட்டாவது அதைக் கண்டுபிடித்தே தீர வேண்டும் என்று நினைத்தான். பத்து நிமிடங்கள் போராடிய பிறகு, அவனுக்குப் பச்சை நிறச் சுண்ணாம்பு அடித்த ஒரு வீட்டின் தோற்றம் தரிசனமானது. மிகச் சிறிய வீடு. முன்புறம் ஓட்டுச் சரிவு போடப்பட்டு வாசலில் ஒரு கயிற்றுக் கட்டில் இருந்தது. வீட்டுக் கதவுக்கு நீல நிறத்தில் பெயிண்ட் அடித்திருந்தது. திறந்து உள்ளே போனால் சிறியதாக ஒரு கூடம், அதனை ஒட்டிய ஓர் அறை தென்பட்டது. அறைக்குள் பாய் விரித்திருந்தது. அறையின் சுவரெல்லாம் காரை பெயர்ந்து உதிர்ந்து கிடந்தது. உதிர்ந்த துகள்களை அப்புறப்படுத்தக்கூடச் செய்யாமல் அப்படியே தூசு படிய விட்டிருந்தது. வினய் பார்த்துக்கொண்டே இருந்தபோது, அந்த அறைக்குள் முகமது குட்டி நுழைந்தான். ஜிப்பாவைக் கழட்டிக் கடாசிவிட்டு ஒரு துண்டை எடுத்து அக்குள்களில் துடைத்துக்கொண்டான். கீழே கிடந்த பாயின் மீதிருந்த அழுக்குத் துணிகளைத் திரட்டி, சுருட்டித் தலையணை போல வைத்துக்கொண்டு படுத்தான். உறங்க ஆரம்பித்தான்.

மூடிய விழிகளுக்குள் இதைப் பார்த்துக்கொண்டிருந்த வினய், அப்படியே மெல்ல மெல்லப் பின்வாங்கி வீட்டுக்கு வெளியே வந்தான். அந்த வீதியைக் கவனித்தான். ஒரு பெயர்ப் பலகை. ஒரு பின்கோடு கண்ணில் பட்டுவிட்டால் போதும். இடம் தெரிந்துவிடும். ஆனால் அவன் பார்த்தவரையில், அந்த வீதியில் கடைகளே தென்படவில்லை. வீதி முனையில் பெயர்ப்பலகையும் இல்லை. என்ன செய்வதென்று புரியாமல், தனது நோக்கு தீட்சண்யத்தை மேலும் நீட்டி விஸ்தரித்து அடுத்த வீதி வரை செலுத்திப் பார்த்தான்.

சட்டென்று காட்சி கலைந்துவிட்டது. சோர்வுடன் கண்ணைத் திறந்தான். அவன் எதிரே ஒரு நாய் நின்றிருந்தது. சொறி பிடித்த கறுப்பு நிற நாய். அவன் பார்க்கும்வரை அசையாது நின்றிருந்த அந்த நாய், அவன் பார்வை தன் மீது பட்டதும் திரும்பி நடக்க ஆரம்பித்தது. அது தன்னை எங்கோ அழைத்துப் போக வந்திருப்பதாக வினய்க்குத் தோன்றியது. சட்டென்று எழுந்து அதன் பின்னால் நடக்க ஆரம்பித்தான்.

(தொடரும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

65. தாகம்

 

 

ஒரு பயணத்திட்டத்தைச் சற்றும் எதிர்பாராதவிதமாக அந்த முகமது குட்டி குலைத்துப் போட்டுவிட்டான். எத்தனைத் திறமையாகத் தன்னை ஏமாற்றிவிட்டு அந்த எள்ளுருண்டையை எடுத்துக்கொண்டு போனான்! நினைக்க நினைக்க வினய்க்கு அவமான உணர்வும் துக்கமும் பொங்கிப் பொங்கித் தணிந்தது. ஏதாவது செய்து அவன் வாழ்நாளிலேயே மறக்க முடியாத பேரிடியை அவனுக்குத் தந்துவிட வேண்டும் என்று நினைத்தான். சற்றும் இலக்கில்லாமல் அந்த நாய் சென்ற வழியே அதன் பின்னால் நடக்க ஆரம்பித்தான்.

அந்த நாய் நடந்துகொண்டே இருந்தது. எங்குமே நிற்கவில்லை. வினய்க்கு அது ஒரு குறியீடாகத் தோன்றியது. தன்னைச் செலுத்திப் போகிற குறியீடு. உண்மையில் அப்படி இல்லாவிட்டாலும், அப்படி நினைத்துக்கொள்வது வசதியாக இருப்பதாக அவனுக்குப் பட்டது. சொரிமுத்து அவனுக்குச் சொல்லியிருந்த ஒரு விஷயத்தை மட்டும் திரும்பத் திரும்ப நினைத்துப் பார்த்துக்கொண்டான்.

‘ஒண்ணு சொல்றேன் மனசுல வெச்சிக்க. எது ஒண்ண நீ திரும்பத் திரும்ப நினைக்கிறியோ, அதைத்தான் உன்னால சுளுவா நெருங்க முடியும். நல்லதா கெட்டதான்னு கிடையாது. தேவையா இல்லியான்னும் இல்ல. நெனப்பு மனசுக்குள்ளாற அப்பிடியே சர்ப்புல நனச்ச வேட்டியாட்டம் ஊறணும். ஊறி ஊறி உன் நெனப்பும் நீயும் ஒண்ணுன்னு ஆயிரணும். தூக்கத்துலகூட அந்த நெனப்பத் தவிர வேறெதுவும் இருக்கக் கூடாது. அதுக்குப் பேருதான் யோகம். பரமாத்ம சொரூபத்த நினைக்கறது அல்டிமேட்டு. அதுதான் பெருவழி. அந்த ரூட்ல போவசொல்ல, வழில நீ நினைக்கறதுக்கு நிறைய கிடைக்கும். நின்னு பாத்து ரசிக்க எத்தினியோ வரும். சித்தெல்லாம் அதுல ஒண்ணுதான்.’

வினய், முகமது குட்டியை தண்டிப்பதைத் தவிர வேறெதையும் நினைப்பதில்லை என்று முடிவு செய்துகொண்டான். தண்டித்து முடிக்கும்வரை மட்டுமே அவன் நினைப்பு. அதன்பின் மறந்துவிட வேண்டும். தன் வழி வேறு. தன் பாதை வேறு. சட்டென்று நகர்த்தி வைத்துவிட்டுத் திருவானைக்கா போய்விட வேண்டும். எப்படியும் சொரிமுத்து கடிந்துகொள்வான். இதெல்லாம் வேண்டாத வேலை என்றுதான் சொல்லுவான்.

‘பாரு, ஆறு வருசம் அப்பியாசம் பண்ணி சேத்த சொத்தெல்லாம் போச்சே?’ என்பான். பரவாயில்லை என்று வினய்க்குத் தோன்றியது. சொத்து சேர்க்கும் கலையை அவன் அறிவான். ஆறு வருட அப்பியாசம். ஆயுள் இன்னும் இருக்கிறது. மீண்டும் ஆரம்பிக்கலாம். சொரிமுத்துவிடம் சொல்லிவிட்டுத் தனியே எங்காவது போகலாம். அண்ணா சுடுகாடு தேடி ஆந்திரத்துக்குப் போனதாக சொரிமுத்து சொன்னான். தனக்குச் சுடுகாடு வேண்டாம் என்று வினய்க்குத் தோன்றியது. அவன் மனத்தில் ஒரு நீர்நிலை நிழற்படமாக எப்போதும் எழுந்து வந்து நிற்கும். அது நதியல்ல. ஏரியோ குளமோ கடலோ அல்ல. ஒரு ஆர்மோனியம் வாசிப்பவரின் இடது கை அசைவை நிகர்த்த சலசலப்பு அந்த நீர்ப்பரப்பில் இருக்கும். நீரின் நிறம் இளஞ்சிவப்பாக இருக்கும். சட்டென்று வெளிர் மஞ்சளாக மாறும். கண்ணை மூடும்போதெல்லாம் அந்த நீர்ப்பரப்பு அவனுக்குள் உதித்து எழுந்து வரும். இந்த உலகில் ஏதோ ஒரு மூலையில் அப்படியொரு நீர்நிலை இருக்கத்தான் வேண்டும் என்று வினய் எப்போதும் நினைப்பான். கரையற்ற, முற்றுமுழுதான நீர்நிலை. எல்லைகளற்றது. அதன் ஆழம் தெரியாது. அதில் மீன்கள் உண்டா, வேறு நீர்வாழ் விலங்குகள் உண்டா என்று தெரியாது. அவன் கண்ணுக்கு அது தென்படும்போதெல்லாம் ஆர்மோனிய அசைவு மட்டும்தான் அதில் இருக்கும். அமைதியான இடம். அந்த இடத்தைத் தேடிக் கண்டுபிடித்து அங்கே சென்று அமர்ந்துவிட வேண்டும் என்று வினய் நினைத்துக்கொண்டான்.

இரண்டு மணி நேரம் அந்த நாய் இடைவிடாமல் நடந்துகொண்டே இருந்தது. பல்வேறு சாலைகளைக் கடந்து கிராமாந்திரமான ஒரு இடத்துக்கு அவனை அழைத்துச் சென்றது. இங்கொன்றும் அங்கொன்றுமாக பத்திருபது குடிசை வீடுகள் கண்ணில் பட்டன. விரித்துப்போட்டாற்போல ஊரைச் சுற்றி வயல்வெளி நிறைந்திருந்தது. உழவு முடித்த மனிதர்கள் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்கள். ஏதோ ஒரு குடிசைக்குள் இருந்து மாநிலச் செய்திகள் கேட்டது. நாய் அந்த குடிசை வாசலுக்குப் போய் சற்று நின்றது. வினய்யும் நின்றான். அதுவரை திரும்பிப் பாராமல் நடந்துகொண்டிருந்த நாய் அங்கே நின்றதும் வினய்யைத் திரும்பிப் பார்த்தது. ஒரு கணம் உட்கார்ந்துவிட்டு உடனே எழுந்து ஓடிவிட்டது.

வினய்க்கு அது புரியவில்லை. ஒருவேளை அது தனக்கான சூசகமாக இருக்குமோ என்று நினைத்தான். நாய் நடந்துகொண்டிருந்தவரை பின்னால் நடந்து வந்தவன், அது ஓடத் தொடங்கியதும் தானும் ஓடுவதா வேண்டாமா என்று யோசித்தான். இதற்குமேல் தன்னால் ஓட முடியாது என்று அவனுக்குப் பட்டது. எனவே, அந்த குடிசையின் வெளித் திண்ணையில் உட்கார்ந்துகொண்டான். சாணம் மெழுகிய சிறு மேடை போலிருந்தது அது. கால் நீட்டிப் படுத்தால் உடனே தூங்கிவிடுவோம் என்று தோன்றியது. ஆனால் அவன் தூங்க விரும்பவில்லை. அன்று இரவுக்குள் முகமது குட்டியைக் கண்டுபிடிக்க ஒரு வழி தேடியாக வேண்டும். எத்தனைக் குயுக்தியாகத் தன்னிடம் இருந்து எள்ளுருண்டையை அவன் அபகரித்துச் சென்றானோ, அதே வழியில் அவனிடமிருந்து அதை மீட்க வேண்டும். தவிர அவன் வாழ்நாளில் மறக்க முடியாதபடி ஒரு தண்டனை. அதைப் பிறகு யோசித்துக்கொள்ளலாம். முதலில் உருண்டையை மீட்பது.

அவனுக்குத் தாகமாக இருந்தது. வீட்டுக் கதவு மூடியிருந்தது. உள்ளே யாரும் இருப்பது போலத் தெரியவில்லை. வேலைக்குப் போயிருந்தாலும் இந்நேரம் திரும்பியிருப்பார்களே என்று நினைத்தான். எங்காவது சென்று தன்ணீர் மட்டும் குடித்துவிட்டு வரலாம் என்று நினைத்து அவன் எழுந்தபோது கதவு திறந்து ஒரு பெண் வெளிப்பட்டாள்.

‘யாரு?’ என்று கேட்டாள்.

‘நான் திருச்சினாப்பள்ளிலேருந்து வரேன். மார்த்தாண்டம் போகணும். வழியிலே ஒரு சிக்கல்... வந்து.. எனக்குக் குடிக்க தண்ணி வேணும்.’

அந்தப் பெண் உள்ளே சென்று ஒரு சொம்பில் நீர் எடுத்துவந்து கொடுத்தாள். குடித்து முடித்தபோது வினய்க்கு மனம் நெகிழ்ந்திருந்தது. வெறும் தண்ணீர். ஆனால் தாகத்துக்குக் கிடைக்கிறபோது, அது வேறு பரிமாணமல்லவா எய்திவிடுகிறது? அவனுக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. சொரிமுத்துவுடன் ஒருநாள் அவன் பிட்சைக்குப் போய்க்கொண்டிருந்தபோது திடீரென்று சொரிமுத்து, ‘டேய் எனக்கு டீ குடிக்கணும்டா இப்பொ’ என்று சொன்னான். அவர்களிடம் அப்போது ஒரு பத்து பைசா நாணயம்கூட இல்லை. நாற்பது நாள்களுக்குக் காசுப் பிச்சை ஏற்பதில்லை என்று சொரிமுத்து விரதம் கொண்டிருந்தான். உணவுக்கு மட்டுமே கையேந்தும் விரதம். அப்படி இருக்கையில், டீ குடிக்கப் பணத்துக்கு எங்கே போவது?

ஒரு வீட்டு வாசலில் நின்று பிட்சை கேட்டபோது, அந்த வீட்டுப் பெண்மணி ‘கஞ்சிதான் இருக்கு. பரவால்லியா?’ என்று கேட்டாள்.

‘பரவால்ல’ என்று சொரிமுத்து சொன்னான். அவள் உள்ளே சென்று ஒரு கலயத்தில் கஞ்சியை எடுத்துவந்து கொடுத்து, ‘குடிச்சிட்டு அப்படி வெச்சிட்டுப் போயிடு’ என்று சொன்னாள்.

சொரிமுத்து கஞ்சியைப் பார்த்தான். வினய் அவனையே பார்த்துக்கொண்டிருந்தான்.

‘சரி, நீ குடி’ என்று வினய்யிடம் கலயத்தை நீட்டினான்.

‘பரவால்ல. நீங்க முதல்ல குடிங்க’ என்று வினய் சொன்னான். ஒரு நாளைக்கு ஒரு வீட்டில் மட்டுமே சென்று கையேந்த வேண்டும். எந்த வீடு முதல் பிட்சை போடுகிறதோ, அதுதான் அன்றைய உணவு. அளவு குறைவாக இருந்தாலும் அவ்வளவுதான். அதிகமாக இருந்தாலும் அவ்வளவுதான்.

அந்தப் பெண்மணி கொண்டுவந்து கொடுத்த கஞ்சி மிஞ்சிப்போனால் ஒன்றரை தம்ளர் அளவுக்கு இருக்கும். கண்டிப்பாக ஒருவர் பசியைக்கூட அது தணிக்காது. அதனால்தான் வினய், சொரிமுத்துவை முதலில் அருந்தச் சொன்னான்.

‘டேய் நீ குடிடான்றன்ல? கடேசில ஒரு வாய் மட்டும் மிச்சம் வெச்சிட்டுக் குடி’ என்று சொரிமுத்து மீண்டும் சொன்னான்.

வேறு வழியின்றி வினய் அந்தக் கஞ்சியைக் குடித்து முடித்தான். கலயத்தில் மிகச் சிறிய அளவு கஞ்சி மட்டுமே எஞ்சியிருந்தது. சொரிமுத்து அதை வாங்கிப் பார்த்தான். சட்டென்று, ‘எனக்கு இப்பம் டீ குடிக்கணும்’ என்று மீண்டும் சொன்னான். வினய்க்குப் புரிந்தது. சில விநாடிகள் கண்மூடி மந்திரம் சொல்லிக் கலயத்தைக் கையால் மூடித் திறந்தான். உள்ளே சுடச்சுடத் தேநீர் இருந்தது. சொரிமுத்து அதை வாங்கி ஒரே வாயில் குடித்து முடித்தான்.

வினய்க்கு அது சற்று வியப்பாக இருந்தது. சொரிமுத்து ஒருநாளும் தனது சித்து வேலைகளைத் தன் சொந்த லாபத்துக்குப் பயன்படுத்துபவனல்லன். வினய்யைக் கொண்டு தேநீர் வரவழைத்தாலும், அது தனக்குத்தானே செய்துகொள்வதுதான் அல்லவா? எனவே சொரிமுத்துவிடம் அவன் தனது சந்தேகத்தைக் கேட்டான்.

‘இந்த வீட்டுலேருந்தேதானே எடுத்த?’ என்று சொரிமுத்து கேட்டான்.

‘ஆமா. அந்தம்மா உள்ள டீ போட்டு வெச்சிருந்தாங்க.’

‘தெரியும். அதுல பல்லி விழுந்திருச்சி. அத்தக் குடிச்சிட்டு அவ புருசன் பேதி புடுங்கிக்கிட்டு நிப்பான். எதுக்கு பாவம்னுதான் நான் எடுத்துக் குடிச்சிட்டேன்‘ என்று சொன்னான். ‘ஒனக்கு ஒரு வாய் கஞ்சி ஊத்தினவளுக்கு எதோ என்னால முடிஞ்சது.’

அந்தப் பெண் கொடுத்த தண்ணீரைக் குடித்து முடித்தபோது, ஏனோ வினய்க்கு இந்தச் சம்பவம் நினைவுக்கு வந்தது. இவளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. குடித்து முடித்த சொம்பைச் சில விநாடிகள் உற்றுப் பார்த்தான். பிறகு வலது கையால் ஒருமுறை அதை மூடித் திறந்தான். ‘இந்தாம்மா’ என்று நீட்டினான்.

ஒரு காலிச் சொம்பை எதிர்பார்த்துக் கை நீட்டியவள், சொம்பு நிறையப் பால் இருப்பதைக் கண்டு திகைத்துப்போனாள்.

(தொடரும்)

http://www.dinamani.com/

Link to comment
Share on other sites

66. வேறொருத்தி

 

அந்தப் பெண் முதலில் அச்சப்பட்டிருக்கத்தான் வேண்டும். இவன் யாரோ மந்திரவாதி என்று தோன்றிவிட்டால், அடுத்தக் கணம் அலறிக்கொண்டு ஓடியிருப்பாள். ஆனால் அவளுக்கு நம்பிக்கையளிக்கும் விதத்தில் வினய் புன்னகை செய்தான். கைகூப்பி வணங்கி, ‘தாகத்துக்குத் தண்ணி தர்றது உடம்புக்கு உயிரக் குடுக்கறதுக்கு சமம்’ என்று சொன்னான்.

‘நீங்க யாரு?’ என்று அவள் கேட்டாள். வினய் ஒன்றும் சொல்லவில்லை. வெளிச்சம் முற்றிலுமாக மறையத் தொடங்கிவிட்டிருந்தது. அவள் வினய்யை வீட்டுக்குள் அழைத்துச் என்று உட்காரச் சொன்னாள். சாப்பிடுவதற்கு ஏதாவது வேண்டுமா என்று விசாரித்தாள். வினய் வேண்டாம் என்று மறுத்துவிட்டான். அந்தச் சிறு குடிசையை அரைக்கணப் பொழுதில் முற்றிலும் கவனித்துவிட முடிந்தது. எளிய குடிசை. நான்கைந்து பாத்திரங்களும் இரண்டு புடைவைகளும் மட்டுமே அவ்விடத்தின் உடைமைகளாக இருந்தன. ஒரு நாடாத் திரி அடுப்பு இருந்தது. மண் சுவரின் ஓரிடத்தில் ஆணியடித்து சிறியதாகக் கண்ணாடி ஒன்று மாட்டியிருந்தது. அதில் ஒரு ஓரத்தில் ரசம் போயிருந்தது. வினய் அதைக் கண்டதும், ‘ரசம்போன கண்ணாடியை வீட்ல வெக்காதே’ என்று சொன்னான்.

அவள் ஏன் என்று கேட்காமல் கண்ணாடியைக் கழட்டிக் கீழே வைத்தாள்.

‘வெளியே கொண்டு போட்டுடு’ என்று வினய் சொன்னான்.

அவள் அப்படியே செய்தாள்.

‘உனக்குக் கல்யாணம் ஆயிடுச்சா?’

அவள் தலையசைத்தாள்.

‘புருஷன் என்ன செய்யறான்?’

‘அந்தாள் என்னோட இல்லை.’

‘ஓ. இந்த ஊர்ல இருக்கானா?’

‘இல்லை. எங்க இருக்கான்னு தெரியாது’ என்று அவள் சொன்னாள்.

‘உன்னோட வேற யார் இருக்கா?’

‘யாருமில்லை. நான் தனி’ என்றவள், வினய் சற்றும் எதிர்பாராவிதமாக அவன் காலில் விழுந்தாள்.

அதற்கு முந்தைய நாள் அதிகாலை அவளுக்கு ஒரு கனவு வந்திருக்கிறது. யாரென்று தெரியாத யாரோ ஒரு நபர் அவள் வீட்டு வாசலில் வந்து நின்று குரல் கொடுத்திருக்கிறான். பிரிந்துபோன தனது கணவனாக இருக்கும் என்று அவள் நினைத்தாள். சட்டென்று எழுந்து வெளியே வந்து பார்த்தபோது, அவளுக்கு அறிமுகமில்லாத யாரோ ஒருவன் அங்கே நின்றிருக்கிறான். அழுக்கு வேட்டி. உடலுக்குப் பொருத்தமில்லாத பெரிய சட்டை. அவன் கழுத்தில் ஒரு ருத்திராட்சம் இருந்தது. தலை கலைந்திருந்தது. முகம் மண்டிய தாடியும் கை விரல் நகங்களெங்கும் அழுக்கும் மண்டிக் கிடந்தன. யார் வேண்டும் என்று அவள் கேட்டாள். அவன் பதில் சொல்லவில்லை. அவளை நகர்த்திவிட்டு நேரே வீட்டுக்குள் நுழைந்தவன், சற்றும் யோசிக்காமல் சுவரில் மாட்டியிருந்த கண்ணாடியை மட்டும் எடுத்துக்கொண்டு வெளியே வந்துவிட்டான். என்ன என்று அவள் திகைத்தபோது, ‘போய் வருகிறேன்’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான்.

‘சொல்லிவைத்த மாதிரி நீங்கள் அந்தக் கண்ணாடியை எடுக்கச் சொன்னீர்கள்’ என்று அவள் சொன்னாள்.

வினய் புன்னகை செய்தான். ‘ரசம் போன கண்ணாடி வீட்டில் இருப்பது தவறு’ என்று சொன்னான்.

அன்றிரவு வினய் அந்தக் குடிசை வாசலில்தான் படுத்துக்கொண்டான். நாளெல்லாம் நடந்த களைப்பில் படுத்த உடனே உறங்கியும் போனான். அதிகாலை கண் விழித்தபோது அவன் மீது ஒரு போர்வை போர்த்தப்பட்டிருப்பதைக் கண்டான். தலைமாட்டில் ஒரு சொம்பு தண்ணீர் வைக்கப்பட்டிருந்தது. அவன் எழுந்து சென்று முகம் கழுவி வாய் கொப்புளித்தான். அந்தப் பெண் அதற்குள் எழுந்துவிட்டிருந்தாள். ‘காப்பி குடிக்கிறிங்களா?’ என்று கேட்டாள்.

‘இல்லே. எனக்கு அதெல்லாம் பழக்கமில்லை.’

‘வெறும் காப்பித்தண்ணிதான். பாலெல்லாம் இல்லை.’

‘ஏன் நேத்து நான் ஒரு சொம்பு பால் குடுத்தேனே. அதைக் காய்ச்ச வேண்டியதுதானே?’

அவள் ஒரு கணம் வெட்கியது போல் இருந்தது. சிறிது இடைவெளி விட்டு, ‘ராத்திரி நான் அதைக் குடிச்சிட்டுத்தான் படுத்தேன்.’

‘ஓ. அப்ப சரி’

‘காப்பித்தண்ணி கலக்கப்போறேன். ஒரு கிளாஸ் குடிங்க’ என்று சொல்லிவிட்டு அவள் அடுப்படிக்குச் சென்றாள். சில நிமிடங்களில் வெந்நீரில் கரைத்து வடிகட்டிய காப்பித்தண்ணீரை எடுத்துவந்து அவன் முன் வைத்தாள். வினய் ஒன்றும் சொல்லாமல் அதை எடுத்துக் குடித்தான்.

‘நீங்க சித்தருங்களா?’ என்று அவள் கேட்டாள்.

வினய் இதற்குப் பதில் சொல்லவில்லை. என்ன சொல்வதென்று அவனுக்குத் தெரியவில்லை. சிறிது சிறிதாக இன்னும் நான்கைந்து சித்துகள் தன்னால் செய்ய இயலும் என்று அவனுக்குத் தோன்றியது. மந்திர ஜப வலுவில்லாதது உறுத்தியது. முகமது குட்டியை மானசீகத்தில் தேடிப் பிடிக்க மேற்கொண்ட முயற்சியில் தனது பெரும்பாலான சக்தி கரைந்துவிட்டதாகத் தோன்றியது. ஒரு வாரம் போதும். யாருமற்ற தனிமையில் போய் அமர்ந்துவிட முடிந்தால், சற்று வலுவேற்றிக்கொண்டு திரும்ப முடியும். அதற்கு முன்னால் முகமது குட்டியைத் தேடிக் கண்டுபிடித்துவிட முடிந்தால் நன்றாயிருக்கும்.

இவ்வாறு அவன் யோசித்துக்கொண்டிருந்தபோதே, அந்தப் பெண் அவனிடம் தன்னைப் பற்றிக் கூற ஆரம்பித்தாள். இருபது வயதில் அவளுக்குத் திருமணம் ஆகிவிட்டது. திருமணத்தின்போது அவளது பெற்றோர் அவளோடுதான் இருந்தார்கள். பையனைப் பார்த்துப் பேசி திருமணத்தை அவர்கள்தான் நடத்தி முடித்தார்கள். விசாரித்தபோது எல்லாமே சரியாகத்தான் இருந்திருக்கிறது. ஆனாலும் திருமணத்துக்குப் பிறகு எதுவுமே சரியில்லை என்று அவளுக்குத் தோன்ற ஆரம்பித்தது. அவனிடம் என்னவோ ஒரு பிரச்னை இருந்தது. அது என்னவென்று அவளுக்குத் தெரியவில்லை. கெட்ட பழக்கங்கள் அவனுக்குக் கிடையாது. ஒரு வேலைக்குப் போய்க்கொண்டிருந்தான். கூலி வேலை. ஒரு விறகுத் தொட்டியில் அவன் வேலை பார்த்தான். நாள் முழுதும் சுமை தூக்கிவிட்டு இருட்டும் நேரம் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டுப் படுப்பான். மீண்டும் மறுநாள் காலை ஏழு மணிக்கு வேலைக்குக் கிளம்பிச் சென்றுவிடுவான். பணம் கேட்டால் கொடுப்பான். எங்காவது வெளியே போக வேண்டும் என்று சொன்னால் அழைத்துச் செல்வான். சண்டை போடுகிற வழக்கமில்லை. சாதாரணமாகத்தான் இருந்தான். சாதாரணமாகத்தான் பழகினான். ஆயினும் ஒரு நாள் சொல்லிக்கொள்ளாமல் எங்கோ போய்ச் சேர்ந்தான்.

பிறகு இருபது தினங்களுக்குப் பிறகு அவனிடம் இருந்து ஒரு அஞ்சல் அட்டை அவளுக்கு வந்தது. அதில் அவன் தான் வேறொரு பெண்ணுடன் வாழ்வதாகத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தான். உனக்கு வேண்டுமென்றால் நீ இன்னொருவனைத் திருமணம் செய்துகொண்டு போகலாம்; எனக்குப் பிரச்னை இல்லை என்றும் எழுதியிருந்தான்.

அவள் பல நாள் அந்த அஞ்சலட்டையைக் கண்டு அழுதுகொண்டே இருந்தாள். அது அவளது பெற்றோர் இருவரும் அடுத்தடுத்து காலமாகிவிட்டிருந்த சமயம். வேறு உறவுகளோ, நட்புகளோ இல்லாதிருந்தவளுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. யாரிடமும் இதைக் கொண்டுபோய்ப் பேசவும் பிடிக்கவில்லை. உன் புருஷன் எங்கே என்று கேட்டவர்களுக்கெல்லாம் அவன் மதராஸில் வேலை கிடைத்துப் போயிருப்பதாகச் சொல்லியிருக்கிறாள். அதை மாற்றவும் விருப்பமில்லை.

தன் வயிற்றைக் கழுவ சிறு சிறு விவசாயக் கூலி வேலைகள் செய்து பிழைக்க ஆரம்பித்தாள். அப்படியே வருடங்கள் நகர்ந்து அவளுக்கு இப்போது முப்பது வயதாகிவிட்டிருந்தது.

‘நீ அவனைத் தேடிப் போகவேயில்லியா?’ என்று வினய் கேட்டான்.

‘எதுக்கு?’

‘வாழறதுக்குன்னு சொல்லலே. குறைஞ்சது சண்டை போடவாச்சும்?’

‘பிரயோசனமில்லியே சாமி. வேணான்னுதானே போயிட்டான்? போய் சண்ட போட்டு மட்டும் என்னா ஆயிடப்போகுது?’ என்று அவள் கேட்டாள்.

 

வினய் அவளை உற்றுப் பார்த்தான். முப்பது வயது என்று அவள் சொன்னாலும் தோற்றத்தில் அத்தனை தெரியவில்லை. அவளுக்குச் சற்றுப் பெரிய கண்கள். மூக்கு சற்றுப் பட்டையாக இருந்தது. அது விகாரமாகத் தெரியாதபடி கன்னங்கள் அகன்று திரண்டு நின்றன. மண்வெட்டி பிடித்து வேலை செய்கிறவளைப் போலத் தோள்கள் வலுவாக இருந்தன. ஏதோ ஒருவிதத்தில் அவள் அழகிதான் என்று வினய் நினைத்தான். ஆனாலும் அவள் புருஷனுக்கு அவளைப் பிடிக்காமல் போயிருக்கிறது. என்ன காரணம் என்று அவன் சொல்லவில்லை. வீட்டில் பெரிய சண்டைகளும் நடந்ததில்லை என்று அவள் சொன்னாள்.

வினய் நெடுநேரம் அவளைக் குறித்து யோசித்தபடி இருந்தான். சட்டென்று ஏதோ தோன்ற, ‘உன் பேர் என்ன?’ என்று கேட்டான்.

‘இவ்ள நேரம் நீங்களும் கேக்கலை, நானும் சொல்லலை பாருங்க’ என்று சொல்லிவிட்டு அவள் சிரித்தாள்.

‘பரவால்ல. இப்ப சொல்லு. உன் பேர் என்ன?’

தன் பெயர் சித்ரா என்று அவள் சொன்னாள்.

(தொடரும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

67. தொட்ட இடம்

 

 

நெடுநேரம் சிரித்துக்கொண்டே இருந்தேன். கண்ணில் நீர் வரும் அளவுக்குச் சிரித்தேன். என்னால் தாங்கவே முடியவில்லை. உண்மையில் நான் அப்படிச் செய்திருக்கக் கூடாது. அது வினய்யைக் காயப்படுத்தும் என்பதை நான் அறிவேன். இருப்பினும் என்னால் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால் வாழ்க்கை இப்படித்தான். என் சிறு வயதுகளில் கேசவன் மாமா மசால்வடையில் மருந்து தடவி எலிப்பொறிக்குள் வைப்பதைக் கண்டிருக்கிறேன். வெறும் மசால்வடை போதாதா எலியை அழைக்க? எலியைப் அழைப்பதல்ல. எலியை அழிப்பது முக்கியம் என்று மாமா சொல்லுவார். இரவு வைக்கும் மசால்வடைக்கு விடியலில் எலி பொறிக்குள் செத்துக் கிடக்கும். மாமா அதை அப்படியே தூக்கிச் சென்று கடலில் எறிந்துவிட்டு வந்து சோப்புப் போட்டு கையை அலம்பிக்கொள்வார்.

வினய் சந்தித்த பெண் எனக்கொரு மசால்வடையாகத் தெரிந்தாள். அவள் பெயர் சித்ராவாக இருந்தது, அதில் தடவிய மருந்து. நட்சத்திர விடுதி அறையில் வினய் தன்னையறியாமல் நெடு நேரம் அழுதுகொண்டே இருந்தான். அவன் அழுது முடிக்கக் காத்திருந்தேன். உண்மையில் அவன் மிகவும் வருந்தியதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அது சற்றும் எதிர்பாராத ஒரு சந்திப்பு. தாகத்துக்குத் தண்ணீர் கொடுத்த பெண். அவளுக்கு அவன் ஒரு சொம்பு பாலைக் கொடுத்ததே அதிகப்படி. அதைச் செய்திருக்க வேண்டாம் என்று நான் சொன்னேன்.

‘விமல், இது உனக்குத் தெரியாது அல்லது புரியாது. சித்து பயில்பவர்களுக்கு சட்டென்று ஒரு கணம் மனத்தில் தோன்றும். இந்த நிமிடம் இதைச் செய் என்று எங்கிருந்தோ ஒரு கட்டளை வரும்.’

‘அது உன் மனம் சொல்வதுதான்’ என்று சொன்னேன்.

‘இருக்கலாம். என் மனம், உன் மனம் என்று தனித்தனியே இல்லை. மனம் ஒன்றுதான். கட்டளைகள் மட்டும் இடம் மாறி வரும்.’

‘கடவுள் அனுப்புவாரா?’

‘அப்படித்தான் நம்புகிறேன்’ என்று வினய் சொன்னான்.

எனக்குக் கடவுள்கள் இல்லாதிருப்பது எத்தனை சொகுசாக இருக்கிறது! பொதுவாக நான் என் மனத்துக்குள் பேசுவதே கிடையாது. பேச்சு என்ற செயலுக்கு எதிராளி ஒருவன் முக்கியம். அல்லது பலபேர். யாருமற்ற நேரங்களில் நான் மிதமாக மது அருந்திவிட்டுத் தூங்கிவிடுவேன். வினய்யிடம் இதைச் சொன்னபோது அவன் அதைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. அவனது வருத்தமெல்லாம், அந்தப் பாளையங்கோட்டைக்காரியிடம் வீழ்ந்து கிடந்த தினங்களைப் பற்றியதாகவே இருந்தது.

‘என்னால் மீளவே முடியவில்லை விமல். என் கண்ணெதிரே நான் தோற்றுக்கொண்டிருந்தேன். ஒருமுறை இருமுறையல்ல. ஒவ்வொரு முறையும்.’

அவளை சக்தி வடிவமாகக் கொண்டு உள்ளே புகப் பார்த்ததில் ஆரம்பித்திருக்கிறது சிக்கல். அவன் மனக்கண்ணில் தெரிந்த நீர்நிலை, அவளைக் கண்ட பிறகு ஒரு பெண்ணுருவம் கொண்டிருக்கிறது. ஒரு நாள் நள்ளிரவு, உறங்கிக்கொண்டிருந்த சித்ராவைத் தட்டியெழுப்பி, ‘பெண்ணே இப்படி எதிரில் வந்து உட்கார்’ என்று சொல்லியிருக்கிறான். ஒரு சொம்புப் பாலில் தடுக்கி விழுந்த அந்தப் பெண், வினய் சொன்னதற்கு மறுப்பேதும் சொல்லாமல் சம்மதித்து எதிரே வந்து அமர்ந்தாள். வினய் அவளது கண்களை உற்றுப் பார்த்தான். உதடுகளை உற்றுப் பார்த்தான். பார்வையை அப்படியே மெல்லக் கீழிறக்கி, கழுத்தைப் பார்த்தான். சற்றே தெரிந்த இடுப்பைப் பார்த்தான். அவள் எதிர்பாராத ஒரு கணத்தில் அவள் சேலையைத் தனது இடக்கரத்தால் விலக்கி மார்பகங்களைக் கண்டான். அதைத் தொட்ட கணத்தில், அவன் நினைவில் இருந்து சொரிமுத்து முற்றிலுமாக நகர்ந்துபோனான்.

‘இல்லை. அது தவம்தான். நான் சக்தி சொரூபத்தை அவளது தேகத்தில் மானசீகமாக ஆவாகனம் செய்தபின்தான் பூஜிக்க ஆரம்பித்தேன்’ என்று வினய் சொன்னான்.

‘முட்டாள். உன் மனத்தில் சிவமே உட்காரவில்லை. சக்தி எப்படி ஆவாகனமாவாள்?’

அவன் கேவிக்கேவி அழத் தொடங்கினான். ‘என் சக்திகள் என்னை விட்டுப் போய்விட்டன விமல். நான் அந்தக் கணம் ஒரு சித்தனாகும் தகுதியை இழந்தேன். என் உடலெங்கும் சாக்கடை ஓடத் தொடங்கியது. அதன் துர்நாற்றம் என் நினைவெங்கும் படர்ந்து ஒரு கிருமியாக என்னைத் தின்ன ஆரம்பித்தது. என்னால் தாங்கவே முடியவில்லை. மீளவும் முடியவில்லை.’

‘எத்தனைக் காலம்?’

‘ஒன்பது மாதங்கள். அவள் ஒரு கருக்கலைப்புச் செய்யவேண்டி வந்தது. அன்றைக்கு நான் அந்த இடத்தைவிட்டு ஓடிப்போனேன்’ என்று வினய் சொன்னான்.

‘சுத்த அயோக்கியன்.’

‘ஆம். சந்தேகமில்லை. அயோக்கியன்தான். இந்தப் பாடுக்கு நான் காஞ்சீபுரம் வேதபாட சாலையிலேயே இருந்திருக்கலாம். படித்து முடித்து பத்மா மாமியின் மகளைத் திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாக வாழ்ந்திருக்கலாம்.’

‘இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை வினய். பத்மா மாமியின் மகளுக்கு வேண்டுமானால் திருமணமாகிக் குழந்தை பிறந்து வளர்ந்திருக்கலாம். நீ வேறு பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்துகொண்டு வாழலாம்’ என்று சொன்னேன்.

‘இல்லை. அது முடியாது. நான் ஒரு பெரிய குழிக்குள் இருக்கிறேன். பிசாசுகளும் குட்டிச் சாத்தான்களும் என்னைச் சூழ்ந்திருக்கின்றன. பூரணத்தை நோக்கிய ஒரு பெரும் பயணத்தை மேற்கொண்டு, அந்தப் பாழாய்ப் போன முகமது குட்டியால் சூனியத்துக்குள் விழுந்துவிட்டேன்’ என்று தலையில் அடித்துக்கொண்டு அழுதான்.

எனக்கு மிகவும் பரிதாபமாக இருந்தது. அவன் ஏன் முகமது குட்டியைப் பழிவாங்க நினைத்தான் என்பதுதான் எனக்குப் புரியவில்லை. நான் அதை அவனிடம் கேட்கவில்லை. அந்த நேரத்து ஆங்காரம் என்பது பதிலாக இருக்கும். எனக்கென்னவோ அவன் முகமது குட்டியின் வித்தையின் மீது தன்னையறியாமல் மையல் கொண்டிருப்பான் என்று தோன்றியது. ஒரு சுண்டியிழுப்பு. ஒரு வசீகரம். உன் இடுப்பில் இருந்ததை என் இடுப்புக்கு மாற்றிவிட்டேன் பார் என்கிற எகத்தாளம் அளித்த ஆத்திரத்தின் அடியில் புதைந்திருந்த ஆச்சரிய உணர்வு. அவன் சித்தனல்ல என்று வினய்க்குத் தெரிந்திருந்தது. ஒரு சித்தன் செய்யக்கூடிய காரியத்தை சித்தனல்லாத ஒருவன் செய்வது எப்படி என்று குழம்பிப் போயிருக்கிறான்.

ஒரு சமயம் டெல்லியில் நானொரு மேஜிக் ஷோ பார்க்கப் போயிருந்தேன். அசோகா ஓட்டலின் விஸ்தாரமான அரங்கமொன்றில் மிகப்பெரிய முக்கியஸ்தர்கள் சிலருக்காக நிகழ்த்தப்பட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சி. உண்மையில் அது ஒரு முக்கியமான அரசியல் ஆலோசனைக் கூட்டம். ரகசியக் கூட்டமும் கூட. ஆலோசனைகள் செவ்வனே நிறைவேறியதும், களைப்பு நீங்க மதுவருந்திவிட்டு உணவுத் தட்டுகளோடு எல்லோரும் மேஜிக் ஷோ பார்க்க அமர்ந்தோம்.

அந்தக் கலைஞன் மிகவும் இளைஞனாக இருந்தான். ஒல்லியாக, சிவப்பாக, தோள்வரை புரண்ட தலைமுடியோடு மிகவும் வசீகரமாக இருந்தான். வழக்கமான தொடக்கக் காட்சிகளைப் பரபரவென்று செய்துகாட்டிக் கைதட்டல் பெற்ற பின்பு, யாராவது ஒருவர் மேடைக்கு வர முடியுமா என்று கேட்டான்.

குறைந்தபட்சம் ஒரு எம்பி பதவி, குறைந்தபட்சம் ஐம்பது கோடி ரூபாய் சொத்து, குறைந்தபட்சம் ஆறு பங்களாக்கள், பத்து கார்கள் வைத்திருந்தவர்கள் அவர்கள். அந்தக் கூட்டத்தில் என்னைச் சேர்த்து ஓரிருவர் மட்டுமே பணக்காரர்கள் அல்லாதவர்கள். ஆனால் முன் சொன்ன எம்பிக்கள் பல பேரின் பலகோடிக்கணக்கான பணம் எங்களிடம்தான் புழங்கிக்கொண்டிருந்தது. அதுவல்ல விஷயம். அன்றைக்கு அந்த மேஜிக் கலைஞன் யாராவது மேடைக்கு வர முடியுமா என்று கேட்டவுடன் நாலைந்து பேர் எழுந்து முன்னால் போனார்கள். அவன் ஒருவரை மட்டும் தேர்ந்தெடுத்து தன்னருகே அழைத்தான். ஒரு ஸ்டூலைப் போட்டு அதன் மீது ஏறி நிற்கச் சொன்னான். குஜராத்தில் பிரம்மாண்டமான பால் பண்ணை ஒன்றை நடத்துகிற அந்த மனிதர், ஸ்டூல் மீது ஏறி நிற்பது பற்றிச் சற்றும் வெட்கமுறாமல் அவன் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு ஏறி நின்றார். அவன் அந்தப் பெரிய மனிதருக்கு இரண்டு உயரமான கழிகளைக் கொடுத்து இரு கைகளிலும் பிடித்துக்கொள்ளச் சொன்னான். ஒரு பாதுகாப்பு போல. பிடிமானத்துக்காக. அவன் சொன்னபடியே அவர் கழிகளைப் பிடித்துக்கொண்டு ஸ்டூல் மீது நின்றதும், அவன் தனது குச்சியைச் சுழற்றி ஏதோ செய்தான். பிறகு சட்டென்று அவர் நின்றுகொண்டிருந்த ஸ்டூலை உருவி நகர்த்திவிட்டான். பிரமுகர் விழவேயில்லை. அந்தரத்தில் அப்படியே நின்றுகொண்டிருந்தார். கூட்டத்தில் இருந்தவர்கள் ஓவென்று சத்தமிட்டு பலமாகக் கைதட்டினார்கள். அவன் அதோடு நிறுத்தவில்லை. அவரது பிடிமானத்துக்காகக் கொடுத்த இரு கழிகளையும் அதேபோல் உருவி, நீக்கிவிட்டான். இப்போது பிரமுகர் முற்றிலும் புவியீர்ப்பு விசைக்கு எதிராகச் செயல்பட்டுக்கொண்டிருந்தார்.

இரண்டு நிமிடங்களுக்கு இந்த மேஜிக் நீடித்தது. அதன்பின் அவன் மீண்டும் ஸ்டூலை நகர்த்தி அவர் காலுக்கடியில் வைத்து நிற்கும்படிச் செய்து கீழே இறக்கினான்.

இது எப்படி, இது எப்படி என்று அத்தனை பேரும் அந்த மேஜிக் நிபுணனைத் துளைத்து எடுத்துவிட்டார்கள். ‘திஸ் இஸ் மேஜிக்’ என்று சொன்னானே தவிர, அவன் அதன் சூட்சுமத்தைச் சொல்லவில்லை. நான் அந்தப் பால் பண்ணை அதிபரிடம் சென்று, ‘நீங்கள் அந்தரத்தில் மிதந்ததை உணர்ந்தீர்களா?’ என்று கேட்டேன்.

ஆமாம் என்று உடனே பதில் சொன்னவர் சற்று யோசித்துவிட்டு, ‘சரியாகத் தெரியவில்லை. அப்படித்தானே நீங்கள் எல்லோரும் சொல்கிறீர்கள்?’ என்று கேட்டார்.

இந்தச் சம்பவத்தை நான் வினய்யிடம் சொன்னபோது, ‘கண்கட்டு’ என்று சொன்னான். ‘ஏவலாளி ஜாதி ஒன்று இருக்கிறது. அவர்களைக் கூப்பிட்டு இதையெல்லாம் செய்வது சுலபம்’ என்றான்.

‘அதைத்தானே முகமது குட்டி செய்தான்?’ என்று கேட்டேன்.

அவன் சற்றுத் தயங்கினான். பிறகு, ‘ஆம். நான் உன்னிடம் மறைக்க விரும்பவில்லை. ஶ்ரீரங்கப்பட்டணத்து நடிகரின் மனைவிக்கு இதெல்லாம்தான் பிடிக்கும். அவளைப் போல எனக்குப் பலபேரைத் தெரியும்.’

எனக்கு அவனைப் பார்க்கப் பாவமாக இருந்தது. ஒரு ஞானத்தேடல் இப்படியொரு வியாபார உத்திக்குள் அவனை விழச் செய்திருக்க வேண்டாம்.

(தொடரும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

68. முதலும் ஈடும்

 

 

திட்டமிட்ட தேதியில் நான் அந்த ஸ்ரீரங்கப்பட்டணத்து நடிகரைப் பார்க்க முடியவில்லை. வினய் அதைக் கெடுத்தான். முப்பது வருடங்களுக்குப் பிறகு என் உடன் பிறந்த சகோதரனைச் சந்திக்கிறேன் என்பதை மிருதுளாவின் தந்தை நல்லவிதமாகப் புரிந்துகொண்டதால், அவரிடம் சொல்லி ஒரு நாள் தள்ளி மீண்டும் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார்.

அந்த மனிதரை நான் ஒரு அரசியல்வாதியாக என்றுமே எண்ணிப் பார்த்ததில்லை. ஆனால் கர்நாடகத்து அரசியலில் அவருக்குப் பெரும் பங்கு இருந்திருக்கிறது. அதுவும் நெடுங்காலமாக. ஒரு கட்சிக்காரராகத் தன்னைக் காட்டிக்கொள்ளாமலேயே எட்டாண்டுகள் அவர் அரசியல் செய்திருக்கிறார் என்பது வியப்பாக இருந்தது. முதுமையும் தள்ளாமையும் நெருங்கியபோதுதான் அவர் தன்னை ஒரு கட்சியுடன் இணைத்துக்கொண்டார். தேசியக் கட்சி.

‘சுவாமிஜி, கட்சி என்கிறோம். கொள்கை என்கிறோம். அரசியல் பேசுகிறோம். மக்களைக் குறித்துப் பேசுகிறோம். எல்லாவற்றுக்கும் அடிப்படை ஒன்றுதான்’ என்று அவர் சொன்னார்.

‘ஆம். பணம்.’

‘மற்றத் துறைகளில் பணம் இல்லாமல் இல்லை. இங்கு சற்று அதிகம். சினிமாவைவிட அதிகம்.’

‘சரி.’

‘நீங்கள் எங்கள் கட்சியில் பல பேருக்கு பினாமியாகச் செயல்படுவதாக லிங்கப்பா சொன்னார். நான் சுற்றி வளைக்காமல் கேட்கிறேன். எனக்கு நீங்கள் வேலை செய்ய முடியுமா?’

நான் யோசித்தேன். என்னிடம் அப்போது ஒன்பது கஸ்டமர்கள் இருந்தார்கள். ஆறு அரசியல்வாதிகள் ஒரு அதிகாரி. இரண்டு நடிகைகள். இவர்கள் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை என்னிடம் அனுப்பிவிடுவார்கள். பிரேசிலில் ஒரு காப்பிக் காடு நான் அனுப்பும் பணத்தில்தான் விளைந்துகொண்டிருந்தது. மூன்று மத்தியக் கிழக்கு எண்ணெய் கம்பெனிகளில் முதலீடு செய்திருந்தேன். இது போக ஒரு நகைக்கடை. பிரம்மாண்டமானது. தேசமெங்கும் அதற்கு ஏழெட்டுக் கிளைகள் உண்டு. அரசியல்வாதிகளுக்கு என்னைப் பிடித்துப் போக ஒரே ஒரு காரணம்தான். அவர்கள் தரும் பணத்தில் ஒற்றைக் காசைக்கூட நான் தொடுவதில்லை. நான் துறவி. எனக்கு எதற்குப் பணம்? என் உணவுத் தேவைகளைக் கவனித்துக்கொள்ள ஆள் இருந்தால் போதும். என் உறைவிடம் இன்னொருவர் பொறுப்பு. பயணங்கள், தங்குமிடச் செலவுகள் வேறொருவருடையது. ஆசிரமத்துக்குத் தேவையானவற்றை பக்தர்களே நிறைவேற்றிவிடுகிறார்கள். இதற்குமேல் ஒண்டிக்கட்டையான எனக்குப் பணத்தின் தேவைதான் என்ன?

யோசித்துப் பார்த்தால் எனக்கே அது சற்று வியப்பாகத்தான் இருந்தது. இத்தனை ஆண்டுகளில் வங்கிக் கணக்கு என்ற ஒன்று எனக்கு இருந்ததே இல்லை. அதற்கு அவசியமும் வந்ததில்லை. முதல் முறை நான் வெளிநாடு செல்ல நேர்ந்தபோது, வங்கிக் கணக்கும் பண அட்டையும் அவசியம் என்று சொன்னார்கள். நான் சிரித்தேன். ‘என்னை அழைப்பவர்களிடம் அவை இருக்கிறதல்லவா? போதும்’ என்று சொன்னேன். என் ஆசிரமத்துக்கு வருவோருக்குச் சில நிபந்தனைகள் உண்டு. வெளியே அவர்கள் செருப்பை அவிழ்த்து விடும்போது, பர்ஸையும் சேர்த்துத்தான் விட்டு வர வேண்டும். லாக்கர்கள் இருக்கும். அவரவர் பணப்பையை அதில் வைத்துப் பூட்டிக்கொள்ளலாம்.

‘பணத்தைத் தொடாமல் ஒரு மணி நேரம் இருப்பதும் ஒருவித தியானம்தான்’ என்று அடிக்கடிச் சொல்வேன். உண்மையில் அது என்னுடைய அபாரமான கண்டுபிடிப்பு. எந்தத் துறவியும் ஞானியும் சொல்லாதது. நான் பணமற்றவன். அதற்கான தேவையும் அற்றவன். எனது சம்பாத்தியம் என்பது மனிதர்கள் மட்டுமே. இதனாலேயே நான் என்ன நினைத்தாலும் நடந்தது. எது கேட்டாலும் கிடைத்தது. என்னை நம்பிப் பணத்தை ஒப்படைக்கும் அத்தனை பேருக்கும் கணக்கு சுத்தமாக வருடம்தோறும் நேரடியாகப் பணம் போய்விட ஏற்பாடு செய்திருந்தேன். அடுத்தவர் பணம். யாரோ எங்கோ உழைத்து அதைப் பெருக்கித் தருகிறார்கள். அவர்களுக்கான சம்பளத்தை இன்னும் யாரோ கொடுக்கிறார்கள். இடையில் நின்று கைகாட்டிவிடுவது மட்டுமே நான். வெறும் இடையன். வெறும் மேய்ப்பன். வருமான வரித் துறைக்கு வேலையே வைக்காத ஒரு ஆசிரமத்தை நடத்திக்கொண்டிருப்பதால், என்னை நம்பியவர்கள் என்றும் நிம்மதியுடன் இருந்தார்கள்.

அந்த முன்னாள் நடிகரிடம் நான் கேட்டேன், ‘உங்களுக்கு எந்தத் தொழிலில் முதலீடு செய்ய விருப்பம்?’

‘தங்கம் வேண்டாம். காப்பி வேண்டாம். எண்ணெய் வேண்டாம்.’

‘என்ன வேண்டும் என்று சொல்லுங்கள்.’

‘எனக்கு வேண்டியது பெரும் பணம். சுவாமிஜி, இன்னும் மூன்றாண்டுகளில் பொதுத் தேர்தல் வந்துவிடும். அந்தத் தேர்தல்தான் என் இலக்கு. என் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப்போகிற தேர்தல் அது.’

எனக்கு சிரிப்பு வந்தது. அவருக்கு எப்படியும் அறுபத்து ஐந்தில் இருந்து எழுபது வயதுக்குள் இருக்கும் என்று தோன்றியது. எதிர்காலம் என்பது இன்னும் எத்தனை ஆண்டுக்காலம் இருக்கும் என்று உத்தேசித்திருக்கிறார்? நான் சட்டென்று கேட்டேன், ‘உங்களுக்கு சர்க்கரை வியாதி இருக்கிறதா?’

‘ஆம்.’

‘ரத்த அழுத்தம்?’

‘உண்டு.’

‘வேறு ஏதேனும் உடல் நலன் சார்ந்த சிக்கல்கள் இருந்தால் சொல்லுங்கள்.’

அவர் யோசித்துவிட்டு, ‘இல்லை. இந்த இரண்டும்தான்.’

‘எத்தனைக் காலமாக?’

‘குறைந்தது முப்பது வருடங்கள்.’

‘மாத்திரைகளை ஒழுங்காக எடுத்துக்கொள்கிறீர்களா?’

‘ஒருநாளும் தவறுவதில்லை.’

சிறிது நேரம் அமைதியாக இருந்தேன். பிறகு, ‘நான் சொல்கிற மாதிரி உங்களால் சாப்பிட முடியுமானால், இந்த இரண்டு வியாதிகளில் இருந்தும் நீங்கள் நிரந்தரமாக விடுதலை பெறலாம். உங்கள் அரசியல் எதிர்காலத்தை வியாதி தின்றுவிடக் கூடாதல்லவா?’

அவர் உற்சாகமாகிவிட்டார். ‘உண்மையாகவா? சர்க்கரை நோய் தீரவே தீராது என்றல்லவா சொல்கிறார்கள்?’

நான் புன்னகையுடன் அவர் நாடி பிடித்துப் பார்த்தேன். ‘உங்கள் எடை என்ன?’ என்று கேட்டேன். அவர் யோசித்துவிட்டு, ‘சமீபத்தில் பார்க்கவில்லை. எப்படியும் தொண்ணூறு கிலோ இருப்பேன் என்று நினைக்கிறேன்’ என்று சொன்னார்.

‘சரி. நாளை முதல் ஒரு வாரத்துக்கு முட்டை தவிர வேறு எதையும் உண்ணாதீர்கள்’ என்று சொன்னேன்.

‘என்ன?’

‘வெறும் முட்டை. பசிக்கும்போதெல்லாம் முட்டை. பசி அடங்கும்வரை முட்டை.’

‘அப்படிச் சாப்பிட்டால் என்ன ஆகும்?’

‘ஒருவாரம் சாப்பிட்டுவிட்டு ஒரு ரத்தப் பரிசோதனை செய்து பாருங்கள். உங்களுக்கே புரியும்’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டேன்.

உண்மையில், நான் அவரது பணத்துக்குப் பொறுப்பேற்றதைவிட அவர் அதிகம் மகிழ்ச்சி கொண்டது அதில்தான். எண்ணி ஒரு வாரம். வெறும் முட்டை மட்டுமே சாப்பிட்டதில், அவரது ரத்த சர்க்கரை கணிசமாகக் குறைந்துவிட்டிருந்தது. அலறிக்கொண்டு எனக்கு போன் செய்து இந்தத் தகவலைச் சொன்னார். ‘என் மருத்துவர், மாத்திரைகளின் அளவைப் பாதியாகக் குறைத்துவிட்டார். இது எப்படி? என்ன செய்தீர்கள் நீங்கள்?’

நான் ஒன்றுமே செய்யவில்லை என்பதைச் சொல்லவில்லை. அவருக்கான என் பிரார்த்தனையைப் பரம்பொருளிடம் சேர்ப்பித்துவிட்டதாகச் சொன்னேன். என் சீடன் ஒருவன் மூலம் அவருக்கு நான் அனுப்பிவைத்த முட்டைகளுக்குள் ஏதோ மந்திரித்து சேர்த்து அனுப்பிவைத்திருப்பதாக அவர் மனப்பூர்வமாக நம்பினார். என் கைகளைப் பிடித்துக்கொண்டு கண்ணீர் விட்டு நன்றி சொன்னார். அவரது மனைவி, சந்தோஷத்தில் எனக்கு ஒரு பெரிய விருந்தே அளித்தார். அந்த விருந்தின்போதுதான் அவர் சொன்னார், ‘ஆயுதங்களில் முதலீடு செய்யுங்கள். புரட்சி நடக்கும் தேசங்களில் விளைச்சல் அதிகம் இருப்பதாகச் சொல்கிறார்கள்.’

நான் உடனடியாக அவருக்குச் சம்மதம் சொல்லவில்லை. ஒரு மாத காலம் அவகாசம் வேண்டும் என்று சொல்லிவிட்டுக் கிளம்பிச் சென்றேன். அமெரிக்காவில் எனக்கு அப்போது சில சீடர்கள் சேர்ந்திருந்தார்கள். விடுமுறைக்கு இந்தியா வந்தபோது, என் சொற்பொழிவுகளைக் கேட்டு சீடர்களானவர்கள். அந்த தேசத்துக்கு என்னைச் சொற்பொழிவாற்ற வரச்சொல்லிக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவனைத் தேர்ந்தெடுத்துக் கடிதம் எழுதினேன். நான் அமெரிக்கா வருகிறேன். ஆனால் அங்கிருந்து மெக்ஸிகோ செல்ல விரும்புகிறேன். அந்தப் பயணத்துக்கும் சேர்த்து ஏற்பாடு செய்ய முடிந்தால் நல்லது.

அமெரிக்கச் சீடர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்கள். உடனடியாக எனது பயணத்துக்கு ஏற்பாடுகள் செய்யத் தொடங்கினார்கள். நான் மீண்டும் அந்தக் கன்னட நடிகரைச் சந்தித்து, ‘ஒரு மாதம் போதாது. இன்னொரு மாதம் காத்திருங்கள்’ என்று சொல்லிவிட்டு மிருதுளாவின் தந்தையை என்னோடு அமெரிக்காவுக்கு வரமுடியுமா என்று கேட்டேன். இடைப்பட்ட நாள்களில் அடிக்கடி என்னை அவர் சந்தித்ததில் மிருதுளாவைப் போலவே அவரும் என் வயமாகியிருந்தார். நான் மொழியின் குழந்தை. ஒரு தையல்காரனின் லாகவத்துடன் என்னைத் தேடி வருகிறவர்களுக்கான சொற்களைத் தேர்ந்தெடுத்துப் பேசுகிறேன். அவர்கள் என் சொல்லில் மூழ்கித் திளைக்கிறார்கள். என் வங்கியின் மனிதக் கணக்கு, பணத்தைக் காட்டிலும் வேகமாகப் பெருகுகிறது. மனிதர்கள், பணத்தைக் காட்டிலும் வலிமை மிக்கவர்கள். எனக்குத் தெரிந்த இந்த உண்மை என்னைத் தவிர பிறருக்குத் தெரியாது என்பதுதான் என் அதிர்ஷ்டம்.

அந்த மனிதர் தன்னால் அமெரிக்காவுக்கு வர முடியாதது பற்றி மிகவும் வருத்தப்பட்டார். ஆனால் மிருதுளாவை அழைத்துச் செல்லுங்கள் என்று சொன்னார்.

(தொடரும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

69. ஒரு பயணம்

 

 

பதினாறாம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஸ்பானியர்கள் மெக்ஸிகோவுக்குப் படையெடுத்து வென்றதற்கும், இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நான் மெக்ஸிகோவுக்குப் பயணம் மேற்கொண்டதற்கும் சில பொருத்தங்கள் இருப்பதாக எனக்குத் தோன்றியது. நான் ஊர் சுற்றிப் பார்க்கப் போகவில்லை. அங்கே உள்ள உல்லாசங்களை அனுபவிக்க எனக்கு நேரமும் இல்லை; விருப்பமும் இல்லை. என்னை அறிந்தவர்களோ, என் மொழி தெரிந்தவர்களோ அங்கு யாருமிருக்கவில்லை. ஆனால், வட அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் எல் பசோ நகரத்தில் வசித்துவந்த எனது சீடர்களுள் ஒருவனான விக்கி என்கிற விக்னேஸ்வரனுக்கு மெக்ஸிகோவில் ஒரு தொடர்பு இருந்தது. அமெரிக்காவில் நிரந்தரமாகக் குடியேறிவிட்ட ஒரு மெக்ஸிகக் குடும்பத்தில்தான் அவன் பெண் எடுத்துத் திருமணம் செய்திருந்தான். அந்தப் பெண்ணின் உறவினர்கள் பலர் மெக்ஸிகோவில் இன்னமும் வசித்துக்கொண்டிருந்தது சௌகரியமாக இருந்தது. என்னை வரவேற்கவும் தங்கவைப்பதற்கும் அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டார்கள்.

இருபது நாள் அமெரிக்காவில் சொற்பொழிவுகளை முடித்துக்கொண்டு நான் மெக்ஸிகோ போய்ச் சேர்ந்தபோது, ‘இங்கே நாம் என்ன செய்யப் போகிறோம் குருஜி?’ என்று மிருதுளா கேட்டாள்.

‘தெரியவில்லை பெண்ணே. உன் தந்தைக்கு மிகவும் வேண்டப்பட்ட ஒரு பெரிய மனிதருக்கு உதவ ஏதாவது வழியிருக்கிறதா என்று பார்க்க வந்திருக்கிறேன்’ என்று சொன்னேன்.

உண்மையில் எனக்கு அதுவரை நிழல் உலகத்துடனான தொடர்புகள் சொல்லிக்கொள்ளும்படியாக இருந்ததில்லை. பணத்தின் மீதான விருப்பத்தை அறவே களைந்தவனுக்கு அதன் தேவையும் இல்லை. ஓரிருவரை எனக்குத் தெரியும். உஸ்பெகிஸ்தானில் ஒரு போதைக் கடத்தல் தலைவன். திபெத்தில் வசிக்கும் ஒரு வெடிகுண்டு நிபுணன். இதைச் சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். அவன் பெயர் கேம்போ. பார்த்த கணத்தில் விழுந்து வணங்கத் தூண்டும் விதத்தில் அவனது தோற்றம் அப்படியொரு சாந்த வடிவமாயிருக்கும். தூய காவி உடையும் மழுங்கச் சிரைத்த தலையும் முகமும் எப்போதும் புத்த பெருமானின் திருநாமத்தை உச்சரித்துக்கொண்டிருக்கும் உதடுகளும் அவனை ஒரு துறவியாகக் காட்டும். அது உண்மையும்கூட. கேம்போ ஒரு துறவிதான். அவனுக்குக் குடும்பம், குழந்தை குட்டியெல்லாம் கிடையாது. நானாவது மடிகேரியில் ஒரு ஆசிரமம் வைத்திருக்கிறேன். அவனுக்கு அப்படியும் ஒன்றுமில்லை. எளியதொரு கிராமப்புற வீட்டில் வசித்துக்கொண்டு, பிட்சை எடுத்து உண்டு வாழ்பவன். கிராமத்துச் சிறுவர்களைக் கூப்பிட்டு உட்காரவைத்து இலவசமாகப் பாடம் சொல்லிக் கொடுப்பவனாகப் பிராந்தியத்தில் அவனை அறியாதவர்கள் இல்லை.

அவனை வேறுவிதமாக அறிந்தவர்கள் உலகில் மிகச் சிலரே. என்னோடு சேர்த்து இருபது பேர் இருந்தால் அதிகம். கேம்போ ஒரு சிறந்த வெடிபொருள் நிபுணன். இலக்கு, நோக்கம், எதிர்பார்ப்பைச் சொல்லிவிட்டால், மிகச் சரியாகத் தேவையைப் பூர்த்தி செய்துவிடுவான். நூறு பேர் இறக்க வேண்டுமென்றால் நூறு பேர். ஆயிரம் பேர் இறக்க வேண்டுமென்றால் ஆயிரம் பேர். கட்டடம் நொறுங்க வேண்டுமானால் அதற்கான ஆயத்தம். கப்பல் வெடிக்க வேண்டுமானால் அதற்கொரு வழி. நான்கு வருடங்களுக்கு முன்பு கேம்போ இந்தியாவுக்கு வந்திருந்தான். எனக்கு மிகவும் பரிச்சயமான அரசியல்வாதி ஒருவர் என்னை அவனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். பவுத்தம் ஏன் இந்தியாவில் எடுபடாமல் போனது என்பது பற்றி நான் அவனுக்கு முக்கால் மணி நேரம் சொற்பொழிவாற்றினேன்.

‘சராசரி இந்தியர்கள் எத்தனை பெரிய ஏமாற்றங்களையும் விழுங்கி செரிக்கத் தயாராக இருப்பார்கள். ஆனால், கடவுள் இல்லை என்பதை அவர்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். கம்யூனிச நாத்திகமும் திராவிட நாத்திகமும் இங்கே எடுபடாமல் போவது அதனால்தான். கடவுளைக் குறித்துப் பேசாமல் நீங்கள் எத்தனை காலத்துக்கு வேண்டுமானாலும் இங்கே அரசியல் செய்ய முடியும். ஆனால், கடவுள் கிடையாது என்பீர்களானால் உங்கள் வாழ்வு முடிந்தது’ என்று சொன்னேன்.

‘ஆனால் தத்துவங்கள்...’

‘ஆ, தத்துவங்கள்! அவற்றின் தேவைதான் என்ன இங்கே? பசியினும் பெரிய தத்துவம் இல்லை. பசியாற்றுவதினும் பெரிய அறம் இல்லை. எளிய மக்கள் தத்துவங்களின் பக்கம் ஒதுங்குவதில்லை நண்பரே. மூளை ஒரு நகை. அதைத் துடைத்துப் பெட்டியில் வைத்துப் பூட்டி வைக்கவே விரும்புகிறோம். விசேஷக் காலங்களில் மட்டும்தான் அதற்கு வேலை. உங்களால் எளிய உணர்ச்சிகளைத் தூண்டிவிட முடிந்தால் போதும். சிந்திக்கச் சொல்லாதீர்கள். அதற்கெல்லாம் நேரமில்லை. அதற்குள் ரேஷன் கடை மூடிவிடுவார்கள்’.

நானொரு நாத்திகன் என்று அறிந்தபோது, கேம்போ ஆச்சரியப்பட்டான். ‘இந்தியாவில் நாத்திகமும் ஒரு மதம் என்று தெரியுமல்லவா? இன்றைக்கு இல்லை. ஒரு காலத்தில். இன்று நாத்திகம் அரசியலுக்கு மட்டும் பயன்படுகிற ஒரு கருவி. அதுவும் தோற்பதற்கு உதவும் கருவி.’

‘எனில் உங்கள் கடவுள் யார்?’ என்று கேம்போ கேட்டான்.

சந்தேகமென்ன? என் கடவுள் நானேதான். என் குருவுக்கு இருந்த நூற்றுக்கணக்கான கடவுள்களின் முழுத் தொகுப்பாக நான் என்னைக் கண்டேன். என் கடவுள் என்பது என் சிந்தனை மட்டுமே என்று கேம்போவிடம் சொன்னேன். அவனுக்கு என்னை மிகவும் பிடித்துப் போய்விட்டது. என்னை திபெத்துக்கு வரும்படி அன்போடு அழைத்தான். அதற்கென்ன? என்றைக்காவது ஒருநாள் அவசியம் வருகிறேன் என்று சொன்னேன்.

உண்மையில் நான் மெக்ஸிகோவுக்குப் போவது நல்லது என்று எனக்கு ஆலோசனை சொன்னது கேம்போதான்.

‘அங்கே நடப்பது போதைப் போர்கள்தான். ஆனால், ஆயுத மார்க்கெட்டுடன் தொடர்புடைய ஒரு சிலர் அங்கே இருக்கிறார்கள்’ என்று சொல்லி, எனக்கு ஒரு தொடர்பையும் அவன்தான் ஏற்படுத்திக் கொடுத்தான். மிருதுளாவிடம் நான் இதையெல்லாம் எப்படிச் சொல்ல முடியும்? அழகான சிறுமி அவள். மிகச் சில மூச்சுப் பயிற்சிகளை மட்டும்தான் நான் அவளுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறேன். சிரத்தையாக அவற்றை அப்பியாசம் செய்து சில வியாதிகளில் இருந்து அவள் விடுதலையாகியிருந்தாள். ஒரே ஒருமுறை அவளை நிஷ்டையில் அமரவைத்து சஹஸ்ரார சக்கரத்தைச் சுழலவிட்டுக் காட்டியிருக்கிறேன். கிறுகிறுத்துப் போய் சுருண்டு விழுந்துவிட்டாள். மூன்று மணி நேரத்துக்கு அவள் எழுந்துகொள்ளவேயில்லை. ஆசிரமத்தில் சுற்றி நின்று வேடிக்கை பார்த்த சீடர்கள் சற்று மிரண்டு போனார்கள். ‘குருஜி இவள் எப்போது எழுந்திருப்பாள்?’ என்று அச்சத்தோடு கேட்டார்கள். நான் புன்னகை செய்தேன். அவர்களை வெளியே போகச் சொல்லிவிட்டு அறைக்கதவை மூடினேன். எனக்குத் தெரியும், அவளுக்கு என்ன நிகழ்ந்தது என்று. சின்னப் பெண் அல்லவா? அவள் கண் விழிக்கும்வரை அவள் அருகேயே அமர்ந்திருந்தேன். விழித்து எழுந்ததும் என்னைக் கண்டு சிரித்தாள். கட்டியணைத்து என் கன்னத்தில் முத்தமிட்டாள். ‘தேங்க்யூ குருஜி, தேங்க்யூ குருஜி!’ என்று வாய் ஓயாமல் சொல்லிக்கொண்டே இருந்தாள். அதன்பின் ஒருவார காலம் ஆசிரமத்தில் நான் சொற்பொழிவு நிகழ்த்தவேயில்லை. தனக்கு நேர்ந்த அனுபவத்தை ஆயிரமாயிரம் சொற்களில் மிருதுளா திரும்பத் திரும்ப விவரித்துக்கொண்டே இருந்தாள். கேட்பவர்களுக்கெல்லாம் சொன்னாள். கேட்காதவர்களையும் கூப்பிட்டு வைத்துச் சொல்லிக்கொண்டிருந்தாள்.

என்றோ ஒருநாள் அவளுக்கு அந்தச் சந்தேகம் வந்துவிட்டது. ‘குருஜி, எனக்கு ஒன்று நிகழ்ந்தது. நான் என்னால் முடிந்தளவு அதை மற்றவர்களுக்கு விளக்கப் பார்க்கிறேன். ஆனால் நான் உணர்ந்ததை எந்தச் சொல்லும் சரியாக வெளிப்படுத்தவேயில்லை’ என்று சொன்னாள்.

நான் புன்னகை செய்தேன்.

‘தயவுசெய்து உதவுங்கள். எனக்கு நேர்ந்ததை நான் எப்படி விளக்குவது?’

சில விநாடி அமைதியாக இருந்துவிட்டு நான் சொன்னேன், ‘சொல் தோற்கும் இடங்களில் மௌனம்தான் வெல்லும்.’

கேம்போ தந்திருந்த மெக்ஸிகனின் முகவரி, நான் தங்கியிருந்த விடுதியில் இருந்து சுமார் ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. தொலைபேசியில் அவனை அழைத்து, நான் வந்துவிட்ட விவரத்தைச் சொல்லும் பொறுப்பை நான் மிருதுளாவிடம் தந்திருந்தேன். அவள் ஏழெட்டு அழைப்புகளுக்குப் பிறகு அவனுடன் நேரில் பேசினாள். ‘சுவாமிஜி நாளை உங்களைச் சந்திக்க விரும்புகிறார்’ என்று சொன்னாள். அவனுக்கு ஆங்கிலம் அத்தனை வராது போலிருக்கிறது. திரும்பத் திரும்ப மிருதுளா சொன்னதையே சொல்லிப் புரியவைக்கப் பார்த்தாள். பத்து நிமிடங்கள் பேசிய பிறகு நன்றி சொல்லி போனை வைத்தாள்.

நான் ‘என்ன’ என்று கேட்டேன்.

‘சொல்லிவிட்டேன் குருஜி. நாளைக் காலை ஒன்பது மணிக்கு நம்மை அழைத்துச் செல்ல இங்கே வண்டி வரும்’ என்று சொன்னாள்.

இடையில் பதிமூன்று மணி நேரம் இருந்தது. ஒரு விடுதி அறையில் அடைந்து கிடப்பதில் என்ன இருக்கிறது? நாம் வெளியே போகலாம் என்று மிருதுளாவிடம் சொன்னேன். அன்றிரவு இரண்டு மணி வரை நாங்கள் மெக்ஸிகோ நகரெங்கும் சுற்றித் திரிந்தோம். எங்கெங்கோ சாலையோரக் கடைகளில் விதவிதமான மெக்ஸிகோ உணவு ரகங்களை ருசி பார்த்தோம். கால் களைத்தபோது அறைக்குத் திரும்பி வந்து படுத்தோம்.

இரண்டு மணி நேரம்கூடத் தூங்கியிருக்க மாட்டோம். திடீரென்று நாங்கள் தங்கியிருந்த விடுதிக்கு வெளியே இடைவிடாமல் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்க ஆரம்பித்தது. திடுக்கிட்டுக் கண் விழித்து ஜன்னல் திரைச்சீலைகளை விலக்கி நான் வெளியே பார்த்தேன். மிருதுளா அச்சத்துடன் என் பின்னால் பதுங்கி நின்று கவனித்தாள். ஐந்தாறு நிமிடங்கள் நீடித்த துப்பாக்கிச் சூட்டின் இறுதியில், சாலையில் ஒன்பது பிணங்கள் தனியே கிடந்தன. ஒரு நாய் மட்டும் அவற்றுக்கிடையே உயிருடன் சுற்றிச் சுற்றி வந்தது.

(தொடரும்)

http://www.dinamani.com/

Link to comment
Share on other sites

70. கொன்றவன்

 

 

மிருதுளா பயந்திருந்தாள். பேரச்சத்தின் மைய மின்சாரப் புள்ளியை அவள் கண்களில் நான் பார்த்துவிட்டேன். இருள் பிரியாத அதிகாலை நேரத்தில் ஒன்பது உயிர்கள் நடுச் சாலையில் உடலை விட்டுப் பிரிந்திருக்கின்றன. அவர்கள் யார்? அத்தனை பேரையும் மொத்தமாகக் கொன்று குவிக்கும் வெறி எப்படி ஒரு மனிதப் பிறவிக்கு ஏற்படும்? கொள்கையா? யுத்தமா? பழிவாங்கும் வெறியா? வேறென்னவாகவும் இருக்கட்டும். ஒரு உயிர் என்பது பெரிதல்லவா?

நான் சொன்னேன். ‘உயிர் பெரிதுதான். உயிர் துறத்தல் அதைவிடப் பெரிது.’

‘குருஜி அவர்கள் வெறும் கொள்ளைக்காரர்களாக இருப்பார்களா? பணத்துக்காகவோ, பொருளுக்காகவோ இதை அவர்கள் செய்திருப்பார்கள் என்றால் சத்தியமாக நான் சாகும்வரை அவர்களை மன்னிக்கமாட்டேன்’ என்று உணர்ச்சிவசப்பட்டுச் சொன்னாள்.

‘பெண்ணே, கொலை என்பது ஒரு செயல். மரணம் என்பது ஒரு நிகழ்வு. காரணம் இதில் தேவையில்லாதது. ஒரு பூவைப் பறிப்பது போல. ஒரு பழத்தை மரத்தில் இருந்து கொய்வதுபோலத்தான் உடலில் இருந்து உயிரைப் பிடுங்குவதும். இது பாவமென்றால் நீ வாழைப்பழம் சாப்பிடுவதும் பாவம். இதனை நீ மன்னிக்கமாட்டாய் என்றால், நீ பூஜைக்காக தினமும் வீட்டுத் தோட்டத்தில் பூப்பறிப்பதையும் மன்னிக்க இயலாமல் போய்விடும்.’

அவள் அதிர்ந்துவிட்டாள். ‘என்ன சொல்கிறீர்கள் நீங்கள்? மனிதன் மகத்தானவன் அல்லவா!’

‘சந்தேகமில்லை மிருதுளா. மரணம் அதனினும் மகத்தானது’ என்று சொன்னேன். எனக்கு அப்போது வினய் அந்த மார்த்தாண்டத்துக்காரனுக்கு எள்ளுருண்டை எடுத்துச் சென்ற கதை தெரியாது. அவனை முன்னதாகச் சந்தித்திருந்தால் அந்தச் சம்பவத்தை நான் மிருதுளாவிடம் சொல்லியிருப்பேன். அவளுக்கு நான் வேறொரு கதை சொன்னேன்.

அது நான் என் குருநாதருடன் வாழ்ந்துகொண்டிருந்த காலம். ஒரு பனிக்காலத்தில் அவரைத் தேடி ஓர் இசைக்கலைஞர் எங்கள் ஆசிரமத்துக்கு வந்தார். குருநாதருக்குத் திரைப்படமெல்லாம் தெரியாது. நடிகர்கள், பாடகர்கள், இசையமைப்பாளர்கள் குறித்தெல்லாம் அறிந்துகொள்வதில் அவர் ஆர்வம் செலுத்தியதில்லை. ஆசிரமத்துக்கு வருபவர் யாராக இருந்தாலும் கூப்பிட்டு உட்காரவைத்துப் பேசுவது அவர் வழக்கம். அப்படித்தான் அவர் அந்த இசைக்கலைஞருடன் பேசிக்கொண்டிருந்தார். அவர் இந்தியா முழுதும் பிரபலமான ஒரு பாடகர். லட்சக்கணக்கில் ரசிகர்களைக் கொண்டவர். செல்வத்துக்கோ புகழுக்கோ பஞ்சமற்ற பெருவாழ்வு வாழ்ந்துகொண்டிருந்தவர். ஆனாலும் அவருக்கு வாழ்வில் நிம்மதி இல்லாமல் இருந்தது. காரணம் அவருக்கு இருந்த ஒரு வியாதி. அது என்ன வியாதி என்று குருஜி எங்களிடம் இறுதிவரை சொல்லவில்லை. நிச்சயமாகப் புற்று நோயாக இருக்க முடியாது என்று எனக்குத் தோன்றியது. ஒரு புற்று நோயாளிக்குரிய தோற்றம் அவருக்கு இல்லை. மினுமினுப்பிலும் ஊட்டச் செழுமையிலும் குறைவற்றிருந்தார். இருந்தாலும் ஒரு வியாதி. வேறு ஏதோ ஒன்று. அது முக்கியமல்ல.

குருவிடம் அவர் தனது வியாதியைக் குறித்து நெடு நேரம் புலம்பிக்கொண்டிருந்தார். ‘இதில் இருந்து எனக்கு விடுதலை வேண்டும்’ என்று சொன்னார்.

குருஜி திரும்பத் திரும்ப அவரிடம் கேட்டதெல்லாம் ஒரே ஒரு வினாதான். ‘உண்மையிலேயே நீங்கள் விடுதலையை விரும்புகிறீர்களா?’

அவர் ஆம் என்று தீர்மானமாகச் சொன்ன பிறகு அன்றிரவு மட்டும் அவரை எங்கள் ஆசிரமத்திலேயே குருநாதர் தங்கச் சொன்னார். மறுநாள் அதிகாலை அவருக்குத் தன் கையாலேயே ஏதோ ஒரு மூலிகையை அரைத்துக் கொடுத்து மோருடன் விழுங்கச் சொல்லி ஆசீர்வதித்து அனுப்பிவைத்தார்.

ஓரிரு வாரங்களில் செய்தித் தாள்களில் அவர் காலமான செய்தி வந்தது. நான் அதை குருவிடம் சொன்னபோது, ‘நான் என்ன செய்ய? விடுதலை என்பதே அவரது கடைசி ஆசையாக இருந்தது. மிகவும் வற்புறுத்தியதால் செய்யவேண்டியதாகிவிட்டது’ என்று சொன்னார்.

மிருதுளாவுக்கு நான் இந்தக் கதையைச் சொன்னபோது அவள் அதிர்ச்சியில் பேச்சற்றுப் போய்விட்டாள். உண்மையாகவா, உண்மையாகவா என்று திரும்பத் திரும்பக் கேட்டாள்.

‘பெண்ணே, நான் பொய் சொல்வதில்லை. அது ஒரு சுமை.’

‘கொலை பாவமே இல்லையா?’

‘பாவம் என்றே ஒன்றில்லை என்கிறேன்.’

‘அப்படியானால் இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் உங்களை பாதிக்கவேயில்லையா?’

‘நிச்சயமாக பாதித்தது மிருதுளா. ஆனால் அது உன்னை பாதித்ததற்கும் என்னை பாதித்ததற்கும் ரக வித்தியாசம் உண்டு.’

‘அப்படியென்றால்?’

‘ரத்தம் உன்னை நிலைகுலைய வைத்தது. சரியா?’

‘ஆம்.’

‘நான் சுட்டுக் கொன்றவனின் மன வரைபடத்தை யோசிக்கிறேன். இறந்தவனின் இயலாமையின் பின்னணி என்னவாயிருக்கும் என்று யோசிக்கிறேன். இரண்டுமே கோரமானவை. இரண்டுமே சகிக்க முடியாதவை. இரண்டின் பின்னாலும் இருந்திருக்கக்கூடிய மோசமான வளர்ப்பு, மோசமான கல்வி, மோசமான சமூகச் சூழலைப் பற்றிச் சிந்திக்கிறேன்.’

‘ஆக, கண்ணீருக்கு உங்களிடம் வேலையில்லை.’

‘ஒரு மரணத்துக்குக் கண்ணீர் சிந்துபவன் துறவியாக இருக்க முடியாது பெண்ணே. மரணம் ஒரு விடுதலை. துறவு வேறுவித விடுதலை.’

எப்படி முடியும், எப்படி முடியும் என்று அவள் திரும்பத் திரும்பக் கேட்டாள். ஒரு மனிதனின் மரணம் நிலைகுலையச் செய்யாமல் போய்விடுமா? அங்கேயும்கூட அறிவுதான் தீட்டிக்கொண்டு முன்னால் நிற்குமா? மனித வாழ்வைக் காட்டிலும் மகத்தான ஒன்று வேறென்ன உள்ளது?

நான் புன்னகை செய்தேன். ‘மனிதன் மகத்தானவன் என்று உனக்கு யார் சொன்னது?’

‘எனில், வேறு எதுதான் மகத்தானது?’

‘மகத்தான எதையும் படைக்காமல் கவனம் காக்கும் இயற்கையை வேண்டுமானால் சொல்லலாம்.’

அவளுக்கு நான் சொன்னது புரியவில்லை. ஆனால் நிச்சயமாக யோசிப்பாள் என்று தோன்றியது.

உண்மையில் மரணத்தைக் குறித்த எனது தீர்மானங்கள் யாராலும் எளிதில் ஜீரணிக்கத் தகுந்ததாக இருக்காது என்பது எனக்குத் தெரியும். அம்மா இறக்கப் போகிறாள் என்று கேசவன் மாமாவிடம் இருந்து தகவல் வந்ததும் நான் இதையெல்லாம்தான் எண்ணிப் பார்த்துக்கொண்டேன்.

அன்றைக்கு மிருதுளா மிகவும் குழப்பமாக இருந்தாள். அவளால் ஓரிடத்தில் அமரக்கூட முடியவில்லை. விடுதி அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்துகொண்டே இருந்தாள். அந்தச் சம்பவம் நடந்த இருபது நிமிடங்களுக்குப் பிறகு மெக்சிகன் போலிசார் அங்கே வந்து சேர்ந்தார்கள். பிணங்களை அப்புறப்படுத்திவிட்டு, சாலையில் படர்ந்திருந்த உதிரத்தைத் தண்ணீர் ஊற்றிக் கழுவ ஏற்பாடு செய்துவிட்டுப் போனார்கள். யாரும் விழித்திருந்த சமயமல்ல என்பதால் அவர்களால் அதிகம் பேரை விசாரிக்க முடியவில்லை. என்னைக் கேட்டிருந்தால் நான் ஒரு தகவல் சொல்லியிருப்பேன். துப்பாக்கிச் சத்தம் கேட்டதும் நான் ஓடிச் சென்று ஜன்னலைத் திறந்து பார்த்தேன். சுட்டுக்கொண்டிருந்தவர்களுள் ஒருவனது தலை சரி பாதி சிரைத்திருந்தது. ஒரு பக்கம் மட்டும் முடி வைத்திருந்தான். அந்தத் தோற்றம் எனக்கு வினோதமாக இருந்தது. ஒருவேளை மெக்சிகோவில் இது இளைஞர்களிடையே புழக்கத்தில் உள்ள நாகரிகமாயிருக்கும் என்று எண்ணினேன். அப்படி இல்லாத பட்சத்தில், அந்தத் தகவல் நிச்சயமாகக் காவல் துறைக்கு உதவிகரமாக இருக்கும். ஒரு பக்கம் மழுங்கச் சிரைத்தவன். தேடிக் கண்டுபிடிப்பதில் பெரிய சிரமம் இராது என்று தோன்றியது.

 

எட்டு மணி ஆனபோது நான் கிளம்ப வேண்டும் என்பதை மிருதுளாவுக்கு நினைவுபடுத்தினேன். அவள் நெடுநேரம் அமைதியாக இருந்துவிட்டு, ‘மன்னித்துக்கொள்ளுங்கள் குருஜி. நீங்கள் மட்டும் போய் வாருங்கள். என்னால் இன்று யாருடனும் சகஜமாகப் பேச முடியும் என்று தோன்றவில்லை. நான் மிகவும் உடைந்திருக்கிறேன்’ என்று சொன்னாள்.

நான் அவளை வற்புறுத்த விரும்பவில்லை. குளித்துவிட்டு நான் மட்டும் தயாரானேன். ஒரு காப்பி மட்டும் அருந்திவிட்டு, மிருதுளாவுக்கு காலை உணவுக்குச் சொல்லிவிட்டு வண்டி வருவதற்காகக் காத்திருந்தேன். சரியாக ஒன்பது மணிக்கு எனக்கான வண்டி வந்துவிட்டது. கீழே இருந்து என்னைக் கூப்பிட்டார்கள். வருகிறேன் என்று சொல்லிவிட்டு, மிருதுளாவிடம் கதவைப் பூட்டிக்கொள்ளச் சொல்லிவிட்டுக் கிளம்பிச் சென்றேன்.

முதல் நாள் வந்தபோது நான் அந்த விடுதியைச் சரியாகப் பார்க்கவில்லை. இப்போதுதான் பார்த்தேன். அது ஒரு புராதனமான தங்கும் விடுதி. சுவர்களுக்கு அவர்கள் சுண்ணாம்பு அடித்திருக்கவில்லை. பெரிய பெரிய பாறாங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட சுவர்கள் அப்படி அப்படியே விடப்பட்டிருந்ததால், ஒரு தோற்றத்தில் அந்த விடுதியே ஒரு பெரும் குகை போலிருந்தது. தரையெங்கும் மரத்தால் இட்டு நிரப்பியிருந்தார்கள். எனவே நடக்கும்போது பலத்த சத்தம் எழுந்தது. எந்தச் சுவரிலும் விளக்குகள் இல்லை. மாறாக ஆங்காங்கே தரையிலேயே விளக்குகளை எரியவிட்டு அதன்மீது பின்புறம் ஓட்டையிடப்பட்ட மண் பானைகளைக் கவிழ்த்திருந்தார்கள். ஜப்பானியர்களைப் போலப் பாய்களைத் தொங்கவிட்டு அலங்காரம் செய்திருந்தார்கள். முயற்சி புரிந்தது. ஆனால் அந்த விடுதி என்னை அவ்வளவாகக் கவரவில்லை. நான் குடித்த காப்பி நன்றாக இல்லாததும் ஒரு காரணமாயிருக்கும் என்று எண்ணிக்கொண்டேன்.

வரவேற்பரையில் இருந்த பெண்ணிடம் நான் கிளம்புவதாகச் சொன்னேன். என்னோடு வந்திருக்கும் பெண் அறையில்தான் இருக்கிறாள்; அவளைக் கவனித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு விடுதியைவிட்டு வெளியே வந்தேன். எனக்காகக் காத்திருந்த நீண்ட நெடிய கறுப்பு நிற வேனில் ஏறி அமர்ந்தபோது வண்டி ஓட்டுநர் என்னைத் திரும்பிப் பார்த்து வணக்கம் சொன்னான்.

அவன்தான். எனக்குப் பார்த்ததுமே தெரிந்துவிட்டது. தலையை ஒரு பக்கம் மட்டும் மழுங்கச் சிரைத்தவன். என் அடையாளத்தை உறுதிப் படுத்திக்கொண்டதும் அவன் சிநேகமாக என்னைப் பார்த்துச் சிரித்தான். மெக்சிகோவுக்கு நல்வரவு என்று சொன்னான்.

‘இதே இடத்துக்கு இன்று நீ இரண்டு முறை வரவேண்டியதாகிவிட்டதல்லவா?’ என்று கேட்டேன்.

அவன் சற்றும் யோசிக்கவில்லை; திடுக்கிடவும் இல்லை. ‘ஓ, அதிகாலை விழித்திருந்து பார்த்தீர்களா?’ என்று கேட்டான்.

(தொடரும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

71. முதலீடு

 

 

புவியின் முடிவற்ற விளிம்பை நோக்கிப் போய்க்கொண்டே இருந்தது அந்தச் சாலை. எங்குமே வளையவில்லை. எங்குமே எதிரே ஒரு வண்டி வரவில்லை. சாலையின் இரு புறங்களிலும் கோதுமை வயல்கள் பழுப்பு நிறத்தில் அசைந்தாடிக்கொண்டிருந்தன. அபூர்வமாக ஓரிரு இடங்களில் கொத்துக் கொத்தாகச் சாலையோரம் சில மரங்கள் வளர்ந்திருந்தன. மெக்ஸிகோ நகரத்தில் நான் கவனித்த சந்தடியும் நாகரிகமும் வண்ணமயமும், நகரை நீங்கிய இருபது நிமிடங்களில் எங்கு போனதென்றே தெரியாத அளவுக்கு கிராமத்தின் எளிய உருவம் புவியைப் பூசி நின்றது. உண்மையில் எனக்கு அது பிடித்திருந்தது. ஒவ்வொரு தேசத்தின் நிலப்பரப்பும் அத்தேசத்தின் மனிதர்களைப் போலத்தான். எண்ணாத கணங்களில் சட்டென்று தன் முகத்தை மாற்றிக்கொள்ளும் திறன் பெற்றது.

மெக்ஸிகோவின் புறநகர்ப் பகுதி ஒன்றில் நான் சந்தித்த அந்த ஆயுத வியாபாரி, நான் உள்ளே நுழைந்த நேரம் யோகா செய்துகொண்டிருந்ததைக் கண்டபோது எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. அவனிடம் நான் இதைச் சொன்னபோது, ‘உண்மைதான் சுவாமிஜி. ஒரேமாதிரி இருப்பது விரைவில் அலுத்துவிடுமல்லவா?’ என்று கேட்டான். ஏழெட்டு வருடங்களுக்கு முன்னர் அவன் அமெரிக்காவில் சந்தித்த யாரோ ஒரு இந்தியன் அவனுக்கு யோகா சொல்லிக் கொடுத்திருக்கிறான். உடல் ஆரோக்கியத்துக்கு எனக்கு இது ஒன்றுதான் ஒரே வழி என்று அவன் சொன்னான்.

அவனுக்குத் தீராத ஆச்சரியம், எனக்கு கேம்போவை எப்படித் தெரிந்திருந்தது என்பது. அப்போதுதான் நான் கேம்போவைக் குறித்த கூடுதல் விவரங்கள் சிலவற்றை அறிந்தேன். பொதுவாக, அவன் புதியவர்கள் யாரையும் சந்திப்பதே இல்லை என்று அந்த மெக்ஸிகன் சொன்னான். புதிய அறிமுகங்களை அவன் விரும்புவதே கிடையாது. தெரிந்த மிகச் சிலர் மூலம்தான் அவனது தொழில் நடந்துகொண்டிருந்தது.

‘எந்தத் தொழிலாக இருந்தாலும் இந்த மனோபாவம் சரியில்லையே?’ என்று நான் கேட்டேன்.

‘அது உண்மைதான். ஆனால் கேம்போ அப்படித்தான். உங்கள் நாட்டு அமைச்சர் ஒருவரை அவன் அறிந்திருந்தாலும், உங்களைச் சந்திக்க ஒப்புக்கொண்டது என்னளவில் வியப்புக்குரியதுதான். அதோடு நிறுத்திக்கொள்ளாமல் என்னைக் குறித்து உங்களுக்குத் தெரிவித்து, எனக்கும் போன் செய்து தகவல் சொல்லி நம்மைச் சந்திக்க வைக்கிறான் என்றால் இது என்னால் நம்ப முடியாததாக உள்ளது’ என்று சொன்னான்.

நான் தங்கியிருந்த விடுதி வாசலில் அன்று காலை நடைபெற்ற துப்பாக்கிச் சூடு குறித்து அவனிடம் பேசிக்கொண்டிருந்தேன். ‘என்ன செய்ய? சில கொலைகள் தவிர்க்க முடியாததாகிவிடுகின்றன. அரசியல் கொலைகளுக்குக் காரணமெல்லாம் கேட்காதீர்கள்’ என்று சிரித்தான்.

எனக்கு காரணங்கள் அநாவசியம். காரியமுமேகூட. நான் ஒரு திட்டத்துடன் அவனிடம் சென்றிருந்தேன். அவன் ஆயுதங்கள் உற்பத்தி செய்பவன். கனரகத் துப்பாக்கிகள். வெடி மருந்துகள். சிறிய ரக பீரங்கிகள். மட்ட ரக ராக்கெட் லாஞ்ச்சர்கள். அவனது இரண்டு தொழிற்சாலைகளுள் ஒன்று மெக்ஸிகோவிலும் இன்னொன்று ஆப்பிரிக்காவில் காங்கோவிலும் உள்ளதாக அவன் சொன்னான். உலகெங்கும் புரட்சி நடக்கிற தேசங்களில் அவனுக்குக் கடைகள் உண்டு. புரட்சியாளர்களுக்கு ஆயுதங்கள் தேவைப்படுகின்றன. அவர்கள் ஆயுதங்கள் சம்பாதிப்பதற்காக மக்களிடம் வரி வசூலிக்கிறார்கள். கொள்ளையடிக்கிறார்கள். போதைக் கடத்தலில் ஈடுபட்டுப் பணம் ஈட்டுகிறார்கள். அந்தப் பணம் கணக்கற்றது. எண்ண முடியாத அளவுக்குப் பெரும் தொகையாக இருப்பது. அதில் அவர்கள் தமக்கென்று எதையும் சேமித்து வைப்பதில்லை. அத்தனைக் காசும் ஆயுதங்களில் போய் விழுகின்றன.

அந்த மெக்ஸிகன் தனது பெயரைச் சொன்னபோது, அது என் நினைவில் தங்குவது சிரமம் என்று தோன்றியது. அதை நான் அவனிடம் சொன்னபோது சிரித்துவிட்டு, ‘நீங்கள் என்னைச் சுருக்கமாக ஜிக்ரா என்று அழைக்கலாம்’ என்று சொன்னான். அவனைக் குறித்து கேம்போ என்னிடம் சொன்னபோது, ஜிக்ரா என்ற பெயரைப் பயன்படுத்தவில்லை. பதினாறு எழுத்துகள் கொண்ட அவனது முழுப் பெயரைத்தான் குறிப்பிட்டான்.

‘ஜிக்ரா, நான் ஒரு நடு மனிதன். நீங்கள் இதைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். என்னிடம் பணம் கிடையாது. சல்லிக் காசுகூடக் கிடையாது. நான் ஒரு சன்னியாசி. பிட்சை எடுத்து உண்கிறவன்.’

‘அப்படியா?’ என்று அவன் வியப்பாகக் கேட்டான்.

‘ஆம். எனக்கென்று ஒரு வங்கிக் கணக்குக்கூடக் கிடையாது. ஆனால், என்னை நம்பி எங்கள் நாட்டில் சில பெரிய மனிதர்கள் தங்கள் பணத்தைக் கொடுக்கிறார்கள். நான் சதவீத கமிஷன் கேட்பதில்லை என்பது ஒரு காரணமாயிருக்கலாம். பணத்தின் தேவை எனக்கு இல்லை என்பது இன்னொரு காரணமாயிருக்கலாம்.’

‘அதெப்படி முடியும்? பணமே இல்லாமல் எப்படி வாழ்வீர்கள்?’ என்று அவன் மீண்டும் ஆச்சரியப்பட்டான்.

‘இதோ பார். நான் பதிமூன்றாயிரம் கிலோமீட்டர்கள் பயணம் செய்து இங்கே உன்னை வந்து சந்தித்துக்கொண்டிருக்கிறேன். இத்தனை தூரப் பயணத்துக்கு என்ன செலவு பிடிக்கும் என்று எனக்குத் தெரியாது. யாரோ எனக்குப் பயணச் சீட்டு எடுத்துக் கொடுத்தார்கள். வேறு யாரோ என்னை மெக்ஸிகோ நகரத்தில் தங்குவதற்கு ஏற்பாடு செய்தார்கள். உங்கள் ஊர் சாப்பாடு எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. ஆனாலும் நான் பசியோடு இல்லை. இதோ, நீ வண்டி அனுப்பி என்னை உன் இருப்பிடத்துக்கு அழைத்து வந்திருக்கிறாய். நீயேதான் என்னைத் திருப்பிக் கொண்டு விடவும் போகிறாய். நான் என் ஊருக்குத் திரும்ப வேறொருவர் பயணச் சீட்டு தருவார். அங்கே நான் விமான நிலையம் வந்து சேர்ந்த தகவல் தெரிந்ததும், இன்னொருவர் வண்டி எடுத்துவந்து அழைத்துச் சென்று விடுவார்.’

அவனுக்குப் புரிந்தது. மிகவும் அதிசயமாக என்னைப் பார்த்தான். வெகு நேரம் கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டே இருந்தவன் சட்டென்று, ‘நீங்கள் மாயாஜாலமெல்லாம் செய்கிற சுவாமிஜியா?’ என்று கேட்டான்.

‘இல்லை. எனக்கு அதெல்லாம் தெரியாது.’

‘ஓ. பொதுவாக இந்திய சாமியார்கள் சித்து வேலைகள் செய்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.’

‘எல்லோரும் அல்ல. மிகச் சிலர். ஆனால் அவர்கள் கள்ள ஆயுத உற்பத்தியில் முதலீடு செய்யவெல்லாம் வரமாட்டார்கள்.’

‘அப்படியானால் நீங்கள் போலிச் சாமியார்!’ என்று சொல்லிவிட்டு, அவன் விழுந்து விழுந்து சிரித்தான். அவன் சிரித்து முடிக்கும்வரை காத்திருந்துவிட்டு, ‘போலி மனிதர்கள்தாம் உண்டே தவிர, போலிச் சாமியார்கள் என்று யாருமில்லை’ என்று சொன்னேன்.

‘ஆன்மிகத்தைத் தவறாகப் பயன்படுத்துபவர் போலிச் சாமியார்தானே?’

‘அதைத்தான் சொன்னேன். அவன் போலி மனிதன். அவன் சாமியார் கிடையாது. என் விஷயத்தில் நான் ஆன்மிகத்தின் பக்கம் ஒதுங்குவதே இல்லை. எனக்கும் அதற்கும் வெகுதொலைவு. நான் ஒரு நாத்திகன்’ என்று சொன்னேன்.

அதற்குமேல் அவன் என்னுடன் விவாதிக்கவில்லை. சிறிது நேரம் நாங்கள் வந்த விஷயத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். உண்மையில், அவன் மிகப்பெரும் பணத்தேவையில் இருந்த சமயம் அது. சோமாலியாவுக்கும் உஸ்பெகிஸ்தானுக்கும் ஏராளமான ஆயுதங்களை உற்பத்தி செய்து அனுப்பிவிட்டு, வர வேண்டிய பணம் வந்து சேராமல் தவித்துக்கொண்டிருந்தான்.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்தத் தொழிலில் கூடவா கடனுக்குக் கொள்முதல் நடக்கும்?

‘பொதுவாக அப்படி நடக்காது. ஆனால் இம்முறை இரு இடங்களிலும் எனது நேரடித் தொடர்பில் உள்ளவர்கள் ஒன்று தலைமறைவாகிவிட்டார்கள்; அல்லது இறந்துவிட்டார்கள்’ என்று சொன்னான்.

‘அடடா!’

‘இருபது மில்லியன் டாலர் வரை பணம் மிச்சம் உள்ளது. நான் உஸ்பெக்குக்கு ஒரு பயணம் மேற்கொள்ள இருந்த நேரத்தில்தான் நீங்கள் வந்துவிட்டீர்கள்’ என்று சொன்னான்.

அன்று மதியம் நான் அவனோடுதான் உணவு உட்கொண்டேன். அரைக் கிலோ பச்சை வெள்ளரிக்காயும் கேரட்டும் சாப்பிட்டுவிட்டு, ஒரு சொம்பு நிறையத் தயிர் அருந்தி நான் என் மதிய உணவை முடித்துக்கொண்டேன். அவனால் அதை நம்பவே முடியவில்லை. இவ்வளவுதானா! இவ்வளவுதானா! என்று திரும்பத் திரும்பக் கேட்டான். ‘உங்களைப் பட்டினி போட்டு அனுப்புவதுபோல உணர்கிறேன்’ என்று சொன்னான். ‘ஒரு சிக்கன் துண்டாவது எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று கெஞ்சினான்.

‘நான் இரவில் மட்டும்தான் மாமிசம் உட்கொள்வது வழக்கம். மதிய வேளைக்கு எனக்கு இது போதும்’ என்று சொன்னேன்.

கிளம்பும்போது, அவன் தனது ஞாபகார்த்தமாக எனக்கு ஒரு சிறிய பிஸ்டலைப் பரிசளித்தான். உள்ளங்கையைவிடச் சிறிது. ‘இது இன்னும் புழக்கத்துக்குப் போகவில்லை. என்னுடைய புதிய கண்டுபிடிப்பு இது. பத்தடி தூரத்துக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால் வீரியம் அதிகம்’ என்று சொன்னான். அந்த பிஸ்டலுக்குரிய ரவைகள் அடங்கிய சிறு பெட்டி ஒன்றையும் சேர்த்து அளித்தான். ஶ்ரீரங்கப்பட்டணத்து நடிகரின் பணத்தை அவனுக்கு அனுப்பிவைப்பதற்கான முறைகளைப் பேசி, இருவரும் தெளிவுபடுத்திக்கொண்ட பிறகு நான் புறப்பட்டேன்.

ஹோட்டல் அறைக்கு நான் வந்து சேர்ந்தபோது, ஆசிரமத்தில் இருந்து எனக்கொரு தகவல் வந்திருந்தது. கேசவன் மாமா அங்கே என்னைப் பார்ப்பதற்காக வந்திருக்கிறார்.

(தொடரும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.