-
Tell a friend
-
Topics
-
18
By உடையார்
தொடங்கப்பட்டது
-
Posts
-
சரி, சீமானை வெறுக்கும் சிலர், அவரை வெறுப்பதற்கான காரணத்தை முன்வைக்கலாம். அதைவிட முக்கியமாக, அவர் வருவதைக் காட்டிலும் ஸ்டாலினோ, எடப்பாடியோ ஏன் வரவேண்டும் என்று விரும்புகிறார்கள் என்பதையும் கூறலாமே? சீமானைக் காட்டிலும் காங்கிரஸுடன் எம்மை சேர்ந்து நின்று அழித்த ஸ்டாலினோ அல்லது, இந்துமதவாதிகளுடன் கூட்டணி அமைத்து நிற்கின்ற எடப்பாடியோ எந்தவிதத்தில் உயர்ந்தவர்கள், இவர்களில் ஒருவர் வருவதால் ஈழத்தமிழர்களின் வாழ்வில் என்னவகையான மாற்றம் வந்துவிடப்போகிறதென்பதையாவது கூறலாம். சீமான், எடப்பாடி, ஸ்டாலின் ஆகிய மூவரில், சீமானைத் தவிர மற்றைய இருவருமே ஈழத்தமிழர் பற்றியும், அவர்களுக்கு நடந்த இனக்கொலைபற்றியும், இப்போது நடந்துவரும் திட்டமிட்ட ஆக்கிரமிப்புப் பற்றியும் பேசுகிறார்களா? குறைந்தது தமிழகத்தில் சிறையில் வாடும் 7 பேரையாவது விடுதலை செய்யவேண்டும் என்று நினைக்கிறார்களா? பிறகு எதற்காக இவர்கள்தான் வரவேண்டும் சீமான் வரக்கூடாதென்று அடம்பிடிக்கிறார்கள்? தலைவர் பெயரைப் பாவித்து அரசியல் செய்வதால் சீமான் வேண்டாம், ஆனால் எம்மில் ஒன்றரை லட்சம் பேரைக் கொன்ற காங்கிரஸ் - தி மு க கூட்டணியோ, அல்லது இன்றுவரை சிங்களத்திற்கு முண்டுகொடுக்கும் ப ஜ க - அ தி மு க வோ வந்தால் பரவாயில்லை, அப்படித்தானே? ஒருவன் எங்களுக்காக இரவும் பகலும் கூவுகிறான், அவன் கெட்டவன். ஆனால், எவன் எங்களை அழிக்கத் துணைபோனானோ, எவன் இன்றுவரை சிங்களவர்க்கு அனுசரணை வழங்குகிறானோ, அவன் நல்லவன். நன்றாக இருக்கிறது உங்கள் அரசியல் வியாக்கியானம்.
-
By புரட்சிகர தமிழ்தேசியன் · பதியப்பட்டது
என்னை முதல்வர் பதவியிலிருந்து அகற்றவேண்டும் என ராஜபக்ஸக்களின் விசுவாசிகள் துடிக்கிறார்கள்..! பல லட்சம் பணத்தையும் அதற்காக செலவிடுகிறார்கள்.. யாழ்.மாநகர முதல்வர் பதவியிலிருந்து என்னை அகற்றவேண்டும். என ராஜபக்ஸக்களின் விசுவாசிகள் துடிக்கிறார்கள். என குற்றஞ்சாட்டியிருக்கும் யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் பல லட்சம் பணத்தை அதற்காக செலவிட்டுள்ளதாகவும் கூறினார். சமகால நிலமைகள் தொடர்பாக இன்று ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், கடந்த காலங்களில் ஜனாதிபதி தேர்தலை புறக்கணியுங்கள் என கூறிய ராஜபக்ஸக்களின் விசுவாசிகள் சிலர் என்னை தற்போது யாழ்.மாநகர முதல்வர் பதவியில் இருந்து அகற்றவேண்டும். என துடிக்கிறார்கள். அவர்களே யாழ்.மாநகர செயற்பாடுகளை சீர்குலைப்பதற்கும் மாநகரசபையை ராஜபக்ஸக்களிடம் கொடுப்பதும் அவர்களின் திட்டம். இதன் ஓர் அங்கமாக எனக்கு ஆதரவான யாழ்.மாநகரசபை உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்யும் செயற்பாடு இடம்பெற்றது. முதல்வர் பதவி இழப்பாராயின் மாநகர சபை செயலற்றுப் போகும் என கருதி என் மீது வழக்குத் தாக்கல் செய்வதற்காக சுமார் 50 லட்சத்துக்கு அதிகமான தொகையை ராஜபக்ஷக்களின் விசுவாசிகள் செலவு செய்ததாக நான் அறிகிறேன். வழக்குகள் மூலம் என்னை பதவியிலிருந்து அகற்றி யாழ்.மாநகர சபையை வலுவிழந்ததாக மத்திக்கு தாரைவார்க்கும் ஏற்பாடுகள் முழுவீச்சில் இடம்பெற்றுவரும் நிலையில் யாழ்.கலாச்சார மத்திய நிலையத்தையும் மத்திக்குத் தாரைவார்க்கலாம் என சில தரப்புகள் கங்கணம் கட்டியுள்ளன. ஆகவே யாழ்.மாநகரத்தின் தனித்துவத்தை பாதுகாத்து எமக்கு வழங்கப்பட்ட குறுகிய காலத்தில் மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை சிறப்பாக செய்வோம் என அவர் மேலும் தெரிவித்தார். https://jaffnazone.com/news/23826 -
By தமிழ் சிறி · Posted
திடீர்னு 20 தொகுதிய கொடுத்துடானுவ எங்ககிட்ட 18 போட்டோ தான் இருந்துச்சு இந்த "ஸ்டிக்கர்" எவ்வளவு செலவு ஆனாலும், வாங்கி ஒட்டனும். -
By தமிழ் சிறி · Posted
அவதானம்⚠️: கண்ட இடத்திலை... 🐍 கடிச்சிட போகுது, பார்த்து இருக்கவும். 😂 🤣 -
உண்மைதான். அதற்கான காரணங்களை அடையாளம் கண்டு அவற்றை அகற்ற வேண்டும். தத்துவார்த்த சிந்தனையாளர்கள் தலைமைத்துவம் உள்ளவர்களாகவும் அமைவது அபூர்வம். மறைந்த அரசியல் தத்துவவியளாளர் அன்ரன் பாலசிங்கம் சிறந்த தத்துவவியளாளரும் இராஜதந்திரியுமாவார், ஆனால் ஆனால் அவர் விடுதலைப் புலிகளின் தலைவராக இருக்கவில்லை. அவரிலும் பார்க்க சிறப்பான தலைமைத்துவ ஆற்றல் கொண்ட ஒருவரே அந்த தலைமைத்துவத்தை வழங்கினார். இன்றைய தலைவர்கள் அஹிம்சை அல்லது ஆயுதப்போர் தவிர்ந்த மாற்று வழிமுறைகளில் ஆர்வமற்றவர்களாகவே இருக்கிறார்கள். இந்த முறைகள் மீண்டும் மீண்டும் தோற்றுப்போய் இருந்தாலும் தலைவர்களுக்கு இந்த முறைகளிலேயே நம்பிக்கை இருக்கிறது. அவர்களின் நம்பிக்கைகள் மாறும்வரை மற்ற முறைகளில் முயற்சி இடம்பெறும் சாத்தியம் குறைவாகவே இருக்கும்.
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.