Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

இங்க பிற்க்கின்ற்ன பிள்ளைகளும்,உந்த ரோபோக்களும் ஒரே மாதிரித் தான். சொன்னதை மட்டும் தான் செய்யும்<_<

தாயும் தகப்பனும் முழு நேர வேலை என்றால் பள்ளிப்படிப்பை தவிர்த்து உலக சொந்த கலாசார விடயங்களை யார் சொல்லிகொடுப்பது ?

Link to comment
Share on other sites

On 25 mars 2018 at 3:08 PM, Innumoruvan said:

அதாவது மனிதன் இயந்திரம் போன்று தொழிற்பட்டுக் காசு சேர்த்த காலம் முடிவிற்கு வருகிறது. இனிமேல் மனிதன் மனிதனாய் இருந்தால் மட்டும் காசு சேர்க்கமுடியும். மனிதனிற்கு இனிமேல் மனிதவேலைகள் மட்டும் தான் மிஞ்சும். அதுவும் நல்லது தான்.

உங்கள் ஆழமான வசீகரமான கருத்துக்கு நன்றி இன்னுமொருவன்.

பிரான்ஸ் அரசு குழு ஒன்றை அமைத்துத் தனக்குச் செயற்கை அறிவு தொடர்பான ஒரு அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு மூன்று மாதங்களுக்கு முன்னர் கேட்டிருந்தது. அதில் கணித வலுனரான பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தலைமை ஏற்றிருந்தார். போன கிழமை அக் குழு அறிக்கையைச் சமர்ப்பித்திருந்தது. அதில் கீழ் குறிப்பிடப்பட்ட முக்கிய பரிந்துரைகள் சிந்திக்க வைப்பவையாக உள்ளன.

- உடனடியாக செயற்கை அறிவு பற்றிய ஆராச்சியாளர்களின் சம்பளம் இரு மடங்காக்கப்பட வேண்டும்.
- 3 வருடங்களுக்குள் செயற்கை அறிவு ஆராச்சியாளர்களின் எண்ணிக்கை 3 மடங்காக அதிகரிக்கப்பட வேண்டும்.
- பல்கலைக் கழகங்களில் செயற்கை அறிவு தொடர்பான தனிப்பட்ட பிரிவுகள் உருவாக்கப்பட வேண்டும்.

இவற்றைப் பார்க்கும்போது ஒரு நிழல் யுத்தம் ஒன்றிற்கான ஆயத்தங்கள் முன்னெடுக்கப்படுவதுபோல் தோன்றுகிறது.

இன்னுமொரு நிகழ்வையும் கூற விரும்புகிறேன்.
சென்ற ஜனாதிபதித் தேர்தலில் சோசலிசக் கட்சி ஒன்றின் தேர்தல் விஞ்னாபனத்தில் பொதுவான சம்பளம் (Global Revenue) என்ற ஒன்றை முன்வைத்தது. அதாவது வேலை செய்வோர் செய்யாதோர் எல்லோருக்கும் அரசாங்கம் சம்பளம் வழங்கும். இச் சம்பளம் ஒருவரது வாழ்க்கைக்குப் போதுமானது. மேலதிகமாக ஒருவர் முன்னேற நினைத்தால் ஏதாவது தொழில் செய்யலாம். அதன் மூலம் அவர் மேலதிகமாகச் சம்பாதிக்கலாம்.

வேலை செய்ய விரும்பாதவர்கள் என்ன செய்யலாம் ? அவர்கள் தங்கள் தோட்டத்தைப் பராமரிக்கலாம். வீட்டை அழகுபடுத்தலாம். தமது குடும்பத்தவர்களுக்கு, அயலவர்களுக்கு உதவலாம். இன்னுமொருவன் சொன்ன மனிதவேலைகள் முன்னெடுக்கப் படலாம். இவை அனைத்தும் மனிதன் தனது நாட்டிற்குச் சேர்க்கும் செல்வமாகக் கணிக்கப்படும். இயந்திரங்கள் மனித சேவைக்காகப் பயன்படுத்தப்படும்.

பொதுவான சம்பளத்தை (Global Revenue)  முன்வைத்துத் தேர்தலில் போட்டியிட்ட கட்சி படுதோல்வியடைந்தது. 
தற்போது நடக்கும் வேலையில்லாத் திண்டாட்டம், வேலைநிறுத்தப் போராட்டங்கள் போன்றவற்றைப் பார்க்கும்போது என்றாவது ஒருநாள் பொதுச் சம்பளம் வரும்போலவே தோன்றுகிறது.

Link to comment
Share on other sites

On 1 avril 2018 at 2:17 PM, ரதி said:

இங்க பிற்க்கின்ற்ன பிள்ளைகளும்,உந்த ரோபோக்களும் ஒரே மாதிரித் தான். சொன்னதை மட்டும் தான் செய்யும்<_<

எனது அனுபவத்தில் இங்கு பிறந்து படித்து வளர்ந்த எம்மவர்களின் பிள்ளைகள் பெரும்பாலும் பரந்த மனப்பான்மையுடனும் மனிதாபிமானத்துடனும் சிறந்த சிந்தனையுடனும் உள்ளனர். நாம்தான் அவர்களுக்கு எமது வரலாற்றையும் சரியான கலாச்சாரத்தையும் கற்றுக் கொடுக்கத் தவறுகிறோம் என்று தோன்றுகிறது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎06‎/‎04‎/‎2018 at 10:10 AM, இணையவன் said:

எனது அனுபவத்தில் இங்கு பிறந்து படித்து வளர்ந்த எம்மவர்களின் பிள்ளைகள் பெரும்பாலும் பரந்த மனப்பான்மையுடனும் மனிதாபிமானத்துடனும் சிறந்த சிந்தனையுடனும் உள்ளனர். நாம்தான் அவர்களுக்கு எமது வரலாற்றையும் சரியான கலாச்சாரத்தையும் கற்றுக் கொடுக்கத் தவறுகிறோம் என்று தோன்றுகிறது.  

 

இணையவன்,உங்கள் குழந்தைகள் அனுபவ அறிவு மிக்கவர்களாக இருப்பதை இட்டு மிக்க சந்தோசம்:101_point_up:.
 
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.