Jump to content

ஓட் எமக்கு தேவை தானா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

டாக்ரர் சிவராமின் அறிவுரைகளைக் கேட்டதிலிருந்து ரொம்பவுமே குழப்பமாக இருக்கிறது.

எனக்கு 1997 இல் இருதயநோய் வந்தது.இந்த நோய்க்கேற்ற சாப்பாடு ஓட் தான் என்று டாக்ரர்கள் மட்டுமல்ல பார்க்க வந்தவர்களுமே சொன்னார்கள்.

மெத்தப் படித்தவர்கள் பெரியவர்கள் எல்லோரும் சொன்னால் தட்ட முடியுமோ?அன்று தொடக்கம் இன்று வரை காலை உணவு ஓட் தான்.எனக்காக நலமாக இருக்கும் எனது மனைவியும் என்னுடன் சேர்ந்து தானும் ஓட்சைத் தான் சாப்பிடுவார்.எங்கேயாவது போனால் கூட நாய்க்குட்டியை கொண்டு திரிவதைப் போல ஒரு ஓட் பொதியையும் சுமந்து கொண்டு தான் வருவார்.

                   இப்போ இந்த டாக்ரரின் உரை அறிவுரையைக் கேட்ட பின் 
ஓட்சை எப்படி தயாரிக்கிறார்கள்?

எந்த எந்த இரசாயனங்கள் ஏன் கலக்கிறார்கள்?

மொத்தத்தில் குதிரைக்காக செய்த உணவை எம்மையும் சாப்பிட வைத்துவிட்டார்கள்.

வெறும் குப்பையிலே போடும் இந்த சாப்பாட்டை உலகம் பூராவும் விரும்பி சாப்பிடுகிறார்களே?  என்று மனவேதனையுடன் பேசுகிறார்.

இவரது பேச்சைக் கேட்டது முதல் ஆயிரம் பேர் சேர்ந்து சவுக்கால் அடித்தது போலவே இருந்தது.இருபது வருடத்திற்கு மேலாக இதையா சாப்பிடுகிறோம்?

          தொடர்ந்து சாப்பிடுவதா?ஏற்கனவே வாங்கி அடுக்கி வைத்திருக்கும் ஓட் முடியவிடலாமா?சரி ஏதோ நடக்கிறது நடக்கட்டும் என்று ஓட்சையே தொடரலாமா? எல்லாமே ஒரே குழப்பமாக இருக்கிறது.
 
        போதாக்குறைக்கு நானும் ஏதோ டாக்ரர் மாதிரி பலருக்கு இலவச அறிவுரையும் வழங்கி இனிமேல் இதைத் தவிர வேறு எதையும் காலையில் சாப்பிட கூடாது என்று சொல்லி அவர்களுக்கும் வாங்கிக் கொடுத்துவிட்டேன்.இந்த காணெளியைப் பார்த்த பின் மிகவும் வெட்கமாகவும் குழப்பமாகவும் இருக்கிறது.

Link to comment
Share on other sites

On ‎3‎/‎22‎/‎2018 at 4:48 PM, ஈழப்பிரியன் said:

டாக்ரர் சிவராமின் அறிவுரைகளைக் கேட்டதிலிருந்து ரொம்பவுமே குழப்பமாக இருக்கிறது.

எனக்கு 1997 இல் இருதயநோய் வந்தது.இந்த நோய்க்கேற்ற சாப்பாடு ஓட் தான் என்று டாக்ரர்கள் மட்டுமல்ல பார்க்க வந்தவர்களுமே சொன்னார்கள்.

மெத்தப் படித்தவர்கள் பெரியவர்கள் எல்லோரும் சொன்னால் தட்ட முடியுமோ?அன்று தொடக்கம் இன்று வரை காலை உணவு ஓட் தான்.எனக்காக நலமாக இருக்கும் எனது மனைவியும் என்னுடன் சேர்ந்து தானும் ஓட்சைத் தான் சாப்பிடுவார்.எங்கேயாவது போனால் கூட நாய்க்குட்டியை கொண்டு திரிவதைப் போல ஒரு ஓட் பொதியையும் சுமந்து கொண்டு தான் வருவார்.

                   இப்போ இந்த டாக்ரரின் உரை அறிவுரையைக் கேட்ட பின் 
ஓட்சை எப்படி தயாரிக்கிறார்கள்?

எந்த எந்த இரசாயனங்கள் ஏன் கலக்கிறார்கள்?

மொத்தத்தில் குதிரைக்காக செய்த உணவை எம்மையும் சாப்பிட வைத்துவிட்டார்கள்.

வெறும் குப்பையிலே போடும் இந்த சாப்பாட்டை உலகம் பூராவும் விரும்பி சாப்பிடுகிறார்களே?  என்று மனவேதனையுடன் பேசுகிறார்.

இவரது பேச்சைக் கேட்டது முதல் ஆயிரம் பேர் சேர்ந்து சவுக்கால் அடித்தது போலவே இருந்தது.இருபது வருடத்திற்கு மேலாக இதையா சாப்பிடுகிறோம்?

          தொடர்ந்து சாப்பிடுவதா?ஏற்கனவே வாங்கி அடுக்கி வைத்திருக்கும் ஓட் முடியவிடலாமா?சரி ஏதோ நடக்கிறது நடக்கட்டும் என்று ஓட்சையே தொடரலாமா? எல்லாமே ஒரே குழப்பமாக இருக்கிறது.
 
        போதாக்குறைக்கு நானும் ஏதோ டாக்ரர் மாதிரி பலருக்கு இலவச அறிவுரையும் வழங்கி இனிமேல் இதைத் தவிர வேறு எதையும் காலையில் சாப்பிட கூடாது என்று சொல்லி அவர்களுக்கும் வாங்கிக் கொடுத்துவிட்டேன்.இந்த காணெளியைப் பார்த்த பின் மிகவும் வெட்கமாகவும் குழப்பமாகவும் இருக்கிறது.

ஈழப்பிரியன் அண்ணா,

நேரப் பற்றாக்குறை காரணமாக நீங்கள் இங்கு இணைத்து இருக்கும் வீடியோவை பார்க்கவில்லை. ஆனால் உங்கள் பிரதானமான கேள்வி ஓட்ஸ் உண்பது இதய நோயிற்கு நல்லதா என்பதால் எனக்கு தெரிந்தவற்றை எழுதலாம் என நினைக்கின்றேன். நான் இந்த துறையில் வேலை செய்தவனோ அல்லது படித்தவனோ அல்ல.

Eats Ontario எனும் இலாப நோக்கற்ற அமைப்பு மற்றும் சில உணவு தொடர்பான அமைப்புகள் ஓட்ஸ் இனை சிறந்த காலை ஆகாரமாக சிபாரிசு செய்கின்றார்கள். கனடியர்கள் காலை உணவாக அதிக கொழுப்பு உள்ள பர்கர் / சொசேஜஸ் / பேகன் / சலாமி /3 முட்டைகள் அடங்கிய சாண்ட்விச்/ பீஸா பொக்கட் போன்றவற்றை வழக்கமாக உண்ணுகின்றவர்கள் என்பதால் அவர்களுக்கு சிபாரிசு அவசியாமகின்றது.

ஓட்ஸ் ஒரு முழு தானியம்; அதில் உள்ள கார்போஹைதரேட்டில் உள்ள அதிகபடியான Fiber குளுக்கோசாக மாற்றமடையாமல் இரத்தத்தில் குளுக்கோசின் அளவை கூட்டாமல் விடுகின்றது. இதுவே ஒரு கோதுமை மா சாப்பாடு என்றால் (புட்டு / இடியப்பம்/ தோசை )  அதில் உள்ள அதிகப்படியான கார்போஹைதரேட் (Carbs) நேரடியாக குளுக்கோசாக மாற்றப்பட்டு உடலில் சுகரின் அளவை கூட்டும். இதனால் தான் மற்ற உணவுகளை விட Fiber அதிகம் உள்ள உணவை சிபாரிசு செய்கின்றனர். Fiber இதய நோயையோ அல்லது கொழுப்பையோ அல்லது சுகரின் அளவையோ குறைக்கும் மருந்து அல்ல. ஆனால் மாச்சத்து எக்கச்சக்கமாக அடங்கி இருக்கும் உணவை எடுத்து இவற்றை கூட்டாமல் Fiber அதிகமான ஓட்ஸ் போன்றவற்றை உள்ளெடுக்கும் போது சுகரின் அளவை / கொழுப்பை கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருக்கலாம்.

எனக்கு இதுவரைக்கும் சுகர் / கொழுப்பு பிரச்சனை உள்ளது என மருத்துவ அறிக்கைகள் கூறவில்லை. நான் காலையில் உணவாக நான்கு நாட்களுக்கு ஒரு சமன் மீன் துண்டும் ஒரு முட்டை பொரியலும் (Avacado oil ல் பொரித்தது, முட்டையும் Free run hen's egg) உண்பது வழக்கம். ஒரு நாளுக்கு மட்டும் ஓட்ஸ். மிச்ச இரண்டு நாளும் வல்லாரை / கருவேப்பிலை / கீரை கஞ்சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரோக்கியம் நல வாழ்வு  fb குழுமத்தை சிறிது வாசித்து பாருங்கோ. குறை மாவு நிறை கொழுப்பு (paleo) உணவு பழக்கத்தின் நன்மைகள், சலரோகம் கட்டுப்படுத்தல், மற்றும் எடை குறைப்பு எவ்வாறு நிகழ்கிறது  என புரிந்து கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

ஓட்ஸ் ஒரு முழு தானியம்; அதில் உள்ள கார்போஹைதரேட்டில் உள்ள அதிகபடியான Fiber குளுக்கோசாக மாற்றமடையாமல் இரத்தத்தில் குளுக்கோசின் அளவை கூட்டாமல் விடுகின்றது. இதுவே ஒரு கோதுமை மா சாப்பாடு என்றால் (புட்டு / இடியப்பம்/ தோசை )  அதில் உள்ள அதிகப்படியான கார்போஹைதரேட் (Carbs) நேரடியாக குளுக்கோசாக மாற்றப்பட்டு உடலில் சுகரின் அளவை கூட்டும். இதனால் தான் மற்ற உணவுகளை விட Fiber அதிகம் உள்ள உணவை சிபாரிசு செய்கின்றனர். Fiber இதய நோயையோ அல்லது கொழுப்பையோ அல்லது சுகரின் அளவையோ குறைக்கும் மருந்து அல்ல. ஆனால் மாச்சத்து எக்கச்சக்கமாக அடங்கி இருக்கும் உணவை எடுத்து இவற்றை கூட்டாமல் Fiber அதிகமான ஓட்ஸ் போன்றவற்றை உள்ளெடுக்கும் போது சுகரின் அளவை / கொழுப்பை கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருக்கலாம்.

நிழலி இந்த காணெளியை 25 ஆவது நிமிடத்திலிருந்து கேட்டுப் பாருங்கள்.

நிழலி மட்டுமல்ல ஓட் சாப்பிடும் எல்லோருமே கண்டிப்பாக கேட்க வேண்டியது.

மொத்தத்தில் வெறும் குப்பை குப்பை குப்பை என்று அடித்து சொல்கிறார்.ஆனால் இன்றும் கூட அதே ஓட் தான் சாப்பிட்டேன்.

இத்தனை நாளும் மனம் நிறைவாக சாப்பிட்டேன்.இப்போ மனம் குழம்பி போய் ஒரு விரக்தியான நிலையிலேயே சாப்பிடுகிறேன்.

என்னைப் போலவே நீங்களும் ஓட் மேல் ஒரு உயர்வான எண்ணம் கொண்டவர் போலவே தெரிகிறது.

உங்கள் கருத்துக்கு நன்றி.

1 hour ago, ஏராளன் said:

ஆரோக்கியம் நல வாழ்வு  fb குழுமத்தை சிறிது வாசித்து பாருங்கோ. குறை மாவு நிறை கொழுப்பு (paleo) உணவு பழக்கத்தின் நன்மைகள், சலரோகம் கட்டுப்படுத்தல், மற்றும் எடை குறைப்பு எவ்வாறு நிகழ்கிறது  என புரிந்து கொள்ளலாம்.

நன்றி ஏராளன்.

Link to comment
Share on other sites

3 minutes ago, ஈழப்பிரியன் said:

நிழலி இந்த காணெளியை 25 ஆவது நிமிடத்திலிருந்து கேட்டுப் பாருங்கள்.

நிழலி மட்டுமல்ல ஓட் சாப்பிடும் எல்லோருமே கண்டிப்பாக கேட்க வேண்டியது.

மொத்தத்தில் வெறும் குப்பை குப்பை குப்பை என்று அடித்து சொல்கிறார்.ஆனால் இன்றும் கூட அதே ஓட் தான் சாப்பிட்டேன்.

இத்தனை நாளும் மனம் நிறைவாக சாப்பிட்டேன்.இப்போ மனம் குழம்பி போய் ஒரு விரக்தியான நிலையிலேயே சாப்பிடுகிறேன்.

என்னைப் போலவே நீங்களும் ஓட் மேல் ஒரு உயர்வான எண்ணம் கொண்டவர் போலவே தெரிகிறது.

உங்கள் கருத்துக்கு நன்றி.

 

வீட்டை போனபின் பார்க்கின்றேன். 

ஓட்ஸ் பற்றி நல்ல எண்ணம் உள்ளது, ஆனால் அதை வாரத்தில் ஒரே ஒரு நாள் ஒரே ஒரு நேரம் மட்டுமே உண்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நிழலி said:

வீட்டை போனபின் பார்க்கின்றேன். 

ஓட்ஸ் பற்றி நல்ல எண்ணம் உள்ளது, ஆனால் அதை வாரத்தில் ஒரே ஒரு நாள் ஒரே ஒரு நேரம் மட்டுமே உண்கின்றேன்.

முழு காணெளியும் பார்க்க தேவையில்லை.25 ஆவது நிமிடத்திலிருந்து கேட்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓட்ஸ் எனக்கு விருப்பமில்லை.இருந்தாலும் ஓரிரு தடவைகள் சாப்பிட்டுளேன்.ஊரில் மாட்டுக்கு புண்ணாக்கு கரைச்சு ஊத்திய ஞாபகம் வந்து போச்சுது. அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

காலை உணவாக எனது மனைவி ஓட்ஸ் சாப்பிட்டுக்கொண்டு வந்தார்.....சுகர் கூடிக்கொண்டு வருவதாக மருத்துவர் கூறினார். அன்றுடன்(2010) எனது வீட்டில் ஓட்ஸ் தடைப்பொருள்...

சாப்பாட்டு விசயத்திலை நான் முடிந்தளவுக்கு என்ரை தாய் தகப்பன் பாட்டன் முப்பாட்டன் சாப்பிட்டதையே சாப்பிட்டன்....சாப்பிடுறன்......சாப்பிடுவன்.
நாகரீகம் எண்ட பெயரிலை கண்ட களிசறைகளை சாப்பிட நான் தயாரில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சனி, ஞாயிறு தவிர்ந்த மற்றைய நாட்களில்...காலை உணவாக 'ஓட்ஸ்' தான் சாப்பிடுவது வழக்கம்!

சனி, ஞாயிறு...அனேகமாக..தோசை...புட்டு..போன்ற உணவுகள் தான்!

இன்னும் ஈழப்பிரியன் இணைத்த காணொளியைப் பார்க்கவில்லை!

பின்னேரம் பார்த்து விட்டுக் கருத்தை எழுதுகின்றேன்!

முட்டை...அதிக கொழுப்புள்ளது என்று ஒரு காலத்தில் கூறினார்கள்!

தேங்காய் எண்ணெய் அதிக கொழுப்புள்ளது என்றும் கூறினார்கள்!

இப்போது இரண்டுமே...உடலுக்கு நல்லது என்று கூறுகிறார்கள்!

காலத்துக்குக் காலம்...சந்தைப் படுத்தலுக்கு இசைய...இவற்றை மாற்றிக்கொண்டே இருப்பார்கள்!

குமாரசாமி அண்ணை மேலே கூறியது போல....இப்போதெல்லாம் இறைச்சி அதிகம் சாப்பிடுவதில்லை! மீன் தான் அதிகம் சாப்பிடுவது!

ஏனெனில் எமது முன்னோர்...சாப்பிட்ட உணவு..அது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, புங்கையூரன் said:

முட்டை...அதிக கொழுப்புள்ளது என்று ஒரு காலத்தில் கூறினார்கள்!

தேங்காய் எண்ணெய் அதிக கொழுப்புள்ளது என்றும் கூறினார்கள்!

இப்போது இரண்டுமே...உடலுக்கு நல்லது என்று கூறுகிறார்கள்!

காலத்துக்குக் காலம்...சந்தைப் படுத்தலுக்கு இசைய...இவற்றை மாற்றிக்கொண்டே இருப்பார்கள்!

 முந்தியொருக்கால் வருசத்துக்கு இரண்டு தரம் ஆட்டுறைச்சி சாப்பிட்ட என்னை துப்பரவாய் சாப்பிடாதை எண்டு வெருட்டிச்சினம்.....

நான் இப்ப  ஆட்டுறைச்சி சாப்பிடுறேல்லை எண்டால் முறைச்சு பாக்கினம்.tw_blush:

Link to comment
Share on other sites

ஓட் பற்றியும் உடலில் சேரும் சீனி பற்றியும் பலருக்குச் சரியான புரிதல் இல்லை என்று நினைக்கிறேன்.

இரத்தத்தில் சீனியின் அளவைக் குறைக்க வேண்டுமாயின் இனிப்புப் பண்டங்களை மட்டும் தவிர்த்தால் போதுமானதல்ல.

நாம் உணவு உட்கொண்ட இரண்டு மணித்தியாலத்துக்கு உட்பட்ட நேரத்தில் இரத்தத்தில் சீனியின் அளவை ( blood sugar level) அதிகரிக்கும் எல்லா உணவுகளும் இனிப்புப் பண்டத்துக்கு ஒப்பானவை.

அது சோறாக இருக்கலாம் ஓட்டாகவும் இருக்கலாம். சோறை நன்றாக அவித்தால் சீனியின் அளவு அதிகரிக்கும். இது குத்தரிசியாக இருந்தாலும் ஒன்றுதான். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்குக் குத்தரிசி நல்லது என்ற எண்ணத்தில் கோப்பை நிறைய நன்றாக அவித்த குத்தரிசிச் சோறு சாப்பிடுபவர்கள் உள்ளனர். இதே போல்தான் Omega-3 உள்ளது என்பதற்காக கடைகளில் விற்கும் எண்ணையை அதிகளவில் பாவிப்பவர்களும் உள்ளனர்.

சாதாரண அரிசியைக் கூட முக்கால் அவியலாக உண்டால் அதிலுள்ள மாப்பொருள் சீனியாக மாறி இரத்தத்தில் மெதுவாகவே கலக்கும். பச்சையாகக் கரட் சாப்பிடுவதை விட அவித்துச் சாப்பிட்டால் 30 வீதமான சீனி உடலில் உடனடியாகச் சேரும். பச்சைக் கரட்டிலும் அவித்த கரட்டிலும் ஒரே அளவான கலோரிகள் இருந்தாலும் கரட்டை அவித்தால் 30 வீதமான சீனி அதிகரிக்கிறது என்று கூறுவது பொருத்தமாக இருக்கும். 

இப்போது கீழுள்ள கலோரி அளவுகளைப் பாருங்கள்.

தீட்டாத அரிசி (அவிக்காதது) 100 கிராம்  - 370 கிலோ கலோரிகள்
தீட்டாத கோதுமை மா 100 கிராம்  -  342 கிலோ கலோரிகள்
ஓட் 100 கிராம்  - 389 கிலோ கலோரிகள்

ஓட் எப்படி சீனியையும் கொழுப்பையும் குறைக்கிறது என்று பார்க்கலாம். ஓட் தானியத்தில் உள்ள தவிடு அதன் கனவவைப்போல் 30 மடங்கு கனவளவான திரவத்தைத் தன்னுள் இழுத்து வைத்திருக்கும் தன்மையைக் கொண்டது. இதுதான் முக்கியமாக உடலில் சீனியின் அளவை உடனடியாக அதிகரிக்காமல் தடுப்பது. உடலில் சீனி உடனடியாக ஏறும்போது மிதமிச்சிய சீனியை ஈரல் கொழுப்பாக மாற்றி இரத்தத்தில் கலந்துவிடும். இதைப் புரிந்து கொண்டால் உடல் எடை, நீரிழிவு நோய், கொலஸ்ரறோல் எல்லாவற்றையும் எமது சாப்பாடு மூலம் குறைக்கலாம்.

ஓட் சாப்பிடுவதில் என்ன பிரச்சனை ?
ஓட் கஞ்சியில் ஏனைய தானியங்களைப் போலவே சீனியின் அளவு உள்ளது. அதனை அதிகமாகச் சாபிட்டுக் கொண்டு அதில் உள்ள தவிட்டால் ஓரளவு சீனியைக் குறைத்துக் கொள்வது அதிக பலன் தராது.

ஓட் தவிடு மட்டும் பொடியாக விற்கிறார்கள். அதனை நீங்கள் சாப்பிடும் எல்லாச் சாப்பாட்டிலும் 1 அல்லது 2 தேக்கரண்டி கலந்து சாப்பிட்டால் சீனியை வெகுவாகக் குறைக்கலாம். ஆனால் அதிலும் பிரச்சனை. ஓட் தவிடு சாப்பாட்டிலுள்ள விற்றமின்களையும் உறிஞ்சிக் கொள்ளும். அதிகமாக ஓட் தவிடு சாப்பிடுபவர்கள் விற்றமின்களைக் குறிப்பாக விற்றமின் D போன்றவற்றை மருந்துகளாக உட்கொள்ள வேண்டும்.

அப்படியானால் உடல் எடையைக் குறைக்க வழிதான் என்ன ?
என்னைப் பொறுத்த வரைக்கும் ஒட் சாப்பிடுவது கடைசி முயற்சியாகவே இருக்கும்.

முதலாவதாக உண்ணும் உணைவைப் புரிந்து உண்ண வேண்டும். நிழலி குறிப்பிட்டதுபோல் காலையில் கொழுப்பு, புரதம் உள்ள உணவுகளை உட்கொள்ளலாம்.  உதாரணமாக 2 அவித்த முட்டைகளைச் சாப்பிட்டு வெறும் நீர் குடிப்பது நல்ல ஆரோக்கியத்தைத் தரும். ஒரு முட்டையில் வெறும் 90 கி.கலோரிகளே உள்ளன. அத்துடன் பெருமளவு விற்றமின்களும் கனியுப்புகளும் உள்ளன. அல்லது உலகில் சிறந்த காலை உணவான இட்டலி, தேங்காய்ச் சம்பல் நல்லது. எமது ஊரில் சாப்பிட்ட புட்டும் சம்பலும் நல்லெண்ணையில் பொரித்த கத்தரிக்கய்ப் பொருயலையும் சாப்பிட வசதி இருந்தால் தெரிவு செய்வேன்.

இரண்டாவதாக உடற்பயிற்சி. 1 மணித்தியால மிதமான உடற்பயிற்சி சுமாராக 500 கி.கலோரியை (80 கிராம் சீனியையும் 20 கிராம் கொழுப்பையும்) உடலிலிருந்து வெளியேற்றும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணையவன் நிறைய தகவல்கள் தந்திருக்கிறீர்கள். நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1.4.2018 at 11:19 PM, இணையவன் said:

ஓட் பற்றியும் உடலில் சேரும் சீனி பற்றியும் பலருக்குச் சரியான புரிதல் இல்லை என்று நினைக்கிறேன்.

இரத்தத்தில் சீனியின் அளவைக் குறைக்க வேண்டுமாயின் இனிப்புப் பண்டங்களை மட்டும் தவிர்த்தால் போதுமானதல்ல.

நாம் உணவு உட்கொண்ட இரண்டு மணித்தியாலத்துக்கு உட்பட்ட நேரத்தில் இரத்தத்தில் சீனியின் அளவை ( blood sugar level) அதிகரிக்கும் எல்லா உணவுகளும் இனிப்புப் பண்டத்துக்கு ஒப்பானவை.

அது சோறாக இருக்கலாம் ஓட்டாகவும் இருக்கலாம். சோறை நன்றாக அவித்தால் சீனியின் அளவு அதிகரிக்கும். இது குத்தரிசியாக இருந்தாலும் ஒன்றுதான். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்குக் குத்தரிசி நல்லது என்ற எண்ணத்தில் கோப்பை நிறைய நன்றாக அவித்த குத்தரிசிச் சோறு சாப்பிடுபவர்கள் உள்ளனர். இதே போல்தான் Omega-3 உள்ளது என்பதற்காக கடைகளில் விற்கும் எண்ணையை அதிகளவில் பாவிப்பவர்களும் உள்ளனர்.

சாதாரண அரிசியைக் கூட முக்கால் அவியலாக உண்டால் அதிலுள்ள மாப்பொருள் சீனியாக மாறி இரத்தத்தில் மெதுவாகவே கலக்கும். பச்சையாகக் கரட் சாப்பிடுவதை விட அவித்துச் சாப்பிட்டால் 30 வீதமான சீனி உடலில் உடனடியாகச் சேரும். பச்சைக் கரட்டிலும் அவித்த கரட்டிலும் ஒரே அளவான கலோரிகள் இருந்தாலும் கரட்டை அவித்தால் 30 வீதமான சீனி அதிகரிக்கிறது என்று கூறுவது பொருத்தமாக இருக்கும். 

இப்போது கீழுள்ள கலோரி அளவுகளைப் பாருங்கள்.

தீட்டாத அரிசி (அவிக்காதது) 100 கிராம்  - 370 கிலோ கலோரிகள்
தீட்டாத கோதுமை மா 100 கிராம்  -  342 கிலோ கலோரிகள்
ஓட் 100 கிராம்  - 389 கிலோ கலோரிகள்

ஓட் எப்படி சீனியையும் கொழுப்பையும் குறைக்கிறது என்று பார்க்கலாம். ஓட் தானியத்தில் உள்ள தவிடு அதன் கனவவைப்போல் 30 மடங்கு கனவளவான திரவத்தைத் தன்னுள் இழுத்து வைத்திருக்கும் தன்மையைக் கொண்டது. இதுதான் முக்கியமாக உடலில் சீனியின் அளவை உடனடியாக அதிகரிக்காமல் தடுப்பது. உடலில் சீனி உடனடியாக ஏறும்போது மிதமிச்சிய சீனியை ஈரல் கொழுப்பாக மாற்றி இரத்தத்தில் கலந்துவிடும். இதைப் புரிந்து கொண்டால் உடல் எடை, நீரிழிவு நோய், கொலஸ்ரறோல் எல்லாவற்றையும் எமது சாப்பாடு மூலம் குறைக்கலாம்.

ஓட் சாப்பிடுவதில் என்ன பிரச்சனை ?
ஓட் கஞ்சியில் ஏனைய தானியங்களைப் போலவே சீனியின் அளவு உள்ளது. அதனை அதிகமாகச் சாபிட்டுக் கொண்டு அதில் உள்ள தவிட்டால் ஓரளவு சீனியைக் குறைத்துக் கொள்வது அதிக பலன் தராது.

ஓட் தவிடு மட்டும் பொடியாக விற்கிறார்கள். அதனை நீங்கள் சாப்பிடும் எல்லாச் சாப்பாட்டிலும் 1 அல்லது 2 தேக்கரண்டி கலந்து சாப்பிட்டால் சீனியை வெகுவாகக் குறைக்கலாம். ஆனால் அதிலும் பிரச்சனை. ஓட் தவிடு சாப்பாட்டிலுள்ள விற்றமின்களையும் உறிஞ்சிக் கொள்ளும். அதிகமாக ஓட் தவிடு சாப்பிடுபவர்கள் விற்றமின்களைக் குறிப்பாக விற்றமின் D போன்றவற்றை மருந்துகளாக உட்கொள்ள வேண்டும்.

அப்படியானால் உடல் எடையைக் குறைக்க வழிதான் என்ன ?
என்னைப் பொறுத்த வரைக்கும் ஒட் சாப்பிடுவது கடைசி முயற்சியாகவே இருக்கும்.

முதலாவதாக உண்ணும் உணைவைப் புரிந்து உண்ண வேண்டும். நிழலி குறிப்பிட்டதுபோல் காலையில் கொழுப்பு, புரதம் உள்ள உணவுகளை உட்கொள்ளலாம்.  உதாரணமாக 2 அவித்த முட்டைகளைச் சாப்பிட்டு வெறும் நீர் குடிப்பது நல்ல ஆரோக்கியத்தைத் தரும். ஒரு முட்டையில் வெறும் 90 கி.கலோரிகளே உள்ளன. அத்துடன் பெருமளவு விற்றமின்களும் கனியுப்புகளும் உள்ளன. அல்லது உலகில் சிறந்த காலை உணவான இட்டலி, தேங்காய்ச் சம்பல் நல்லது. எமது ஊரில் சாப்பிட்ட புட்டும் சம்பலும் நல்லெண்ணையில் பொரித்த கத்தரிக்கய்ப் பொருயலையும் சாப்பிட வசதி இருந்தால் தெரிவு செய்வேன்.

இரண்டாவதாக உடற்பயிற்சி. 1 மணித்தியால மிதமான உடற்பயிற்சி சுமாராக 500 கி.கலோரியை (80 கிராம் சீனியையும் 20 கிராம் கொழுப்பையும்) உடலிலிருந்து வெளியேற்றும்.

எங்கடை தாய் தந்தை அப்பு ஆச்சிமாரும் சாப்பிட்டிலை கலோரி கணக்குப்பார்த்து சாப்பிடவுமில்லை....ஓட்சை கலக்கி குடிக்கவுமில்லை...அரையவியல் சோறு சாப்பிடவுமில்லை. எல்லாரும் சாகும் மட்டும் நோய் நொடியில்லாமல் 80,90 வயதுமட்டும் வாழ்ந்தவையள்.
இப்பவெல்லாம் புதுப்புது படிப்புகள் வரவர புதுப்புது வருத்தங்களும் வந்து கொண்டேயிருக்குது.....புதுப்புது மருந்து மாத்திரைகளும் வந்து கொண்டேயிருக்குது...

சாப்பாட்டிலை நஞ்சு...தண்ணியிலை நஞ்சு...சுவாசிக்கிற காத்திலை நஞ்சு....

Link to comment
Share on other sites

18 hours ago, குமாரசாமி said:

எங்கடை தாய் தந்தை அப்பு ஆச்சிமாரும் சாப்பிட்டிலை கலோரி கணக்குப்பார்த்து சாப்பிடவுமில்லை....ஓட்சை கலக்கி குடிக்கவுமில்லை...அரையவியல் சோறு சாப்பிடவுமில்லை. எல்லாரும் சாகும் மட்டும் நோய் நொடியில்லாமல் 80,90 வயதுமட்டும் வாழ்ந்தவையள்.
இப்பவெல்லாம் புதுப்புது படிப்புகள் வரவர புதுப்புது வருத்தங்களும் வந்து கொண்டேயிருக்குது.....புதுப்புது மருந்து மாத்திரைகளும் வந்து கொண்டேயிருக்குது...

சாப்பாட்டிலை நஞ்சு...தண்ணியிலை நஞ்சு...சுவாசிக்கிற காத்திலை நஞ்சு....

 

உண்மைதான்,  ஆனால் வாழ்விட சூழல் வேறாக இருந்தது. அங்க இயல்பாக வேர்க்கும் ஆனால் இங்கு உடலை வேர்க்க வைப்பதே மிப்பெரிய பிரச்சனை. காசு கொடுத்து உண்ணவேணும் உண்டு உடல் பெருத்த பின்னர் காசுகொடுத்து ஜிம்முக்கு போகவேணும்.

உணவை பார்த்து ஆசைப்பட்டு ரசித்து ருசித்து சாப்பிடும் காலம் போய் பயப்பிடும் நிலமையாகிவிட்டது. 

மேலும் நீங்கள் கூறுவதுபோல் உணவு தண்ணி மருத்துவம் இவைகள் மிகப்பெரிய வியாபாரம்.  ஊரில் எமக்கென்று தோட்டம் இருந்தது அல்லது எங்க உணவுப்பொருட்கள் விளைகின்றது என்பது தெரிந்திருந்தது. உற்பத்திக்கும் நுகர்வுக்கும் தொடர்பிருந்தது. இங்கே அதற்கு இடமில்லை. எமக்கும்  சூப்பர்மார்க்கெட்டுக்கும் தான் தொடர்பு. வருங்காலத்தில் அத்தொடர்பும் குறைந்து ஒன்லைனில் ஓடர் செய்தால் வீட்டு பொருட்கள் வரும். எங்க என்ன எப்படி செய்கின்றார்கள் என்ன கலக்கின்றார்கள் எதுவும் தெரியாது. அந்த உணவு நல்லது இந்த உணவு நல்லது என்று கணணியில் பார்த்து அவற்றை உண்ணவேண்டியது தான். நல்லது கூடாது என்ற காணொளிகளிலும் வியாபாரம் எமாற்று வேலைகள் உண்டு. பகல் இருந்தால் இரவு இருப்பது போல் தொழில் நுட்ப வளர்ச்சி மனிதனை மிகப்பெரிய புத்திசாலியாக்கின்ற  அதேநேரம் மிமோசமான முட்டாளாகவும் மாற்றுகின்றது.

Link to comment
Share on other sites

On 4/1/2018 at 4:19 PM, இணையவன் said:

சாதாரண அரிசியைக் கூட முக்கால் அவியலாக உண்டால் அதிலுள்ள மாப்பொருள் சீனியாக மாறி இரத்தத்தில் மெதுவாகவே கலக்கும். பச்சையாகக் கரட் சாப்பிடுவதை விட அவித்துச் சாப்பிட்டால் 30 வீதமான சீனி உடலில் உடனடியாகச் சேரும். பச்சைக் கரட்டிலும் அவித்த கரட்டிலும் ஒரே அளவான கலோரிகள் இருந்தாலும் கரட்டை அவித்தால் 30 வீதமான சீனி அதிகரிக்கிறது என்று கூறுவது பொருத்தமாக இருக்கும். 

 

நல்ல தகவல்கள்.. நன்றி

 

Link to comment
Share on other sites

19 hours ago, குமாரசாமி said:

எங்கடை தாய் தந்தை அப்பு ஆச்சிமாரும் சாப்பிட்டிலை கலோரி கணக்குப்பார்த்து சாப்பிடவுமில்லை....ஓட்சை கலக்கி குடிக்கவுமில்லை...அரையவியல் சோறு சாப்பிடவுமில்லை. 

உண்மை.
எனது பாட்டனார் தனது ஆயுட்காலம் முழுவதும் சாப்பிட்ட மொத்தச் சீனியை இன்று ஒரு பிள்ளை தனது 7 வயதிற்குள் சாப்பிட்டு விடுகிறது.
இன்று ஆரோக்கியத்துடன் வாழ வேண்டுமானால் கலோரிகளை எண்ணிச் சாப்பிட வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம்.

 

19 hours ago, குமாரசாமி said:

எங்கடை தாய் தந்தை அப்பு ஆச்சிமாரும் சாப்பிட்டிலை கலோரி கணக்குப்பார்த்து சாப்பிடவுமில்லை....ஓட்சை கலக்கி குடிக்கவுமில்லை...அரையவியல் சோறு சாப்பிடவுமில்லை. எல்லாரும் சாகும் மட்டும் நோய் நொடியில்லாமல் 80,90 வயதுமட்டும் வாழ்ந்தவையள்.

தவறான கருத்து. ஒருசிலரை நோய் நொடியில்லாமல் 80-90 வருடங்கள் வாழ்ந்ததாகக் கூறலாம். 70 - 80 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததை விடத் தற்போது சராசரி ஆயுட் காலம் அதிகரித்து வருகிறது.
https://data.worldbank.org/indicator/SP.DYN.LE00.IN?locations=LK

Link to comment
Share on other sites

அன்றுபோல் என்றும் வாழ்க்கையும் சுற்றாடலும் ஒன்றாக இருப்பதில்லை. தற்போதைய சுற்றாடலுக்கு ஏற்றவாறு எமது வாழ்க்கையை மாற்றிக்கொண்டே செல்லவேண்டுமே தவிர சுற்றாடல் எமக்காக மாறப் போவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சண்டமாருதன் said:

 

உண்மைதான்,  ஆனால் வாழ்விட சூழல் வேறாக இருந்தது. அங்க இயல்பாக வேர்க்கும் ஆனால் இங்கு உடலை வேர்க்க வைப்பதே மிப்பெரிய பிரச்சனை. காசு கொடுத்து உண்ணவேணும் உண்டு உடல் பெருத்த பின்னர் காசுகொடுத்து ஜிம்முக்கு போகவேணும்.

உணவை பார்த்து ஆசைப்பட்டு ரசித்து ருசித்து சாப்பிடும் காலம் போய் பயப்பிடும் நிலமையாகிவிட்டது. 

மேலும் நீங்கள் கூறுவதுபோல் உணவு தண்ணி மருத்துவம் இவைகள் மிகப்பெரிய வியாபாரம்.  ஊரில் எமக்கென்று தோட்டம் இருந்தது அல்லது எங்க உணவுப்பொருட்கள் விளைகின்றது என்பது தெரிந்திருந்தது. உற்பத்திக்கும் நுகர்வுக்கும் தொடர்பிருந்தது. இங்கே அதற்கு இடமில்லை. எமக்கும்  சூப்பர்மார்க்கெட்டுக்கும் தான் தொடர்பு. வருங்காலத்தில் அத்தொடர்பும் குறைந்து ஒன்லைனில் ஓடர் செய்தால் வீட்டு பொருட்கள் வரும். எங்க என்ன எப்படி செய்கின்றார்கள் என்ன கலக்கின்றார்கள் எதுவும் தெரியாது. அந்த உணவு நல்லது இந்த உணவு நல்லது என்று கணணியில் பார்த்து அவற்றை உண்ணவேண்டியது தான். நல்லது கூடாது என்ற காணொளிகளிலும் வியாபாரம் எமாற்று வேலைகள் உண்டு. பகல் இருந்தால் இரவு இருப்பது போல் தொழில் நுட்ப வளர்ச்சி மனிதனை மிகப்பெரிய புத்திசாலியாக்கின்ற  அதேநேரம் மிமோசமான முட்டாளாகவும் மாற்றுகின்றது.

ஏன் தோட்டம் துரவு என்று பெரிய வார்த்தையெல்லாம் எழுதுகின்றீர்கள்?

நாம் வாழும் மேலைத்தேய நாடுகளிலும் எமக்கிருக்கும் அதே உணவுப்பிரச்சனைதான் இவர்களுக்கும் இருக்கின்றது.

புதுப்புது உணவுகளின் வருகையால் இவர்களும் அவதிப்படுகின்றார்கள். இங்கிலாந்தில் புதிதாக இனிப்பு பதார்த்தங்களுக்கு மேலதிக வரி அறவிடப்போகின்றார்களாம்.

நிலவரம் இப்படியிருக்க....

ஆரோக்கிய உணவுகளை உண்ணும் நாடுகளில் இருந்து வந்த எம்மவர்களோ விபரம் தெரியாமல் நுணுக்கம் பிடிக்கின்றார்கள்.
இங்கேயும் எமது ஆசிய நாட்டு உணவுகளுக்கீடான காய்கனிகள் தானியங்கள் நிறையவே உள்ளன.

அவற்றை எமது நாட்டு முறையில் செய்து சாப்பிட்டு பாருங்கள். அசந்து போவீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, இணையவன் said:

அன்றுபோல் என்றும் வாழ்க்கையும் சுற்றாடலும் ஒன்றாக இருப்பதில்லை. தற்போதைய சுற்றாடலுக்கு ஏற்றவாறு எமது வாழ்க்கையை மாற்றிக்கொண்டே செல்லவேண்டுமே தவிர சுற்றாடல் எமக்காக மாறப் போவதில்லை.

 ஒவ்வொரு மனிதனும் வியாபாரிகளுக்கேற்ப தன் வாழ்க்கையை மாற்றியமைக்க வேண்டும் என்று சொல்ல விழைகின்றீர்கள்?

சூழலையும் சுற்றாடலையும் வியாபாரிகள் தான் தீர்மானிக்கின்றார்கள். அதை  மாற்றும் சிந்தனை ஒவ்வொரு மனித உள்ளத்திலும் வரவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

சூழலையும் சுற்றாடலையும் வியாபாரிகள் தான் தீர்மானிக்கின்றார்கள். அதை  மாற்றும் சிந்தனை ஒவ்வொரு மனித உள்ளத்திலும் வரவேண்டும்.

இதற்காகவே சிறு சிறு முதலாளிகளை ஒழித்து பெரு முதலாளிகளை உருவாக்குகிறார்கள்.அவர்கள் தான் அரசுகளுக்கு விசுவாசமாக இருந்து வேண்டியன செய்து கொண்டிருப்பார்கள்.

Link to comment
Share on other sites

25 minutes ago, குமாரசாமி said:

ஏன் தோட்டம் துரவு என்று பெரிய வார்த்தையெல்லாம் எழுதுகின்றீர்கள்?

நாம் வாழும் மேலைத்தேய நாடுகளிலும் எமக்கிருக்கும் அதே உணவுப்பிரச்சனைதான் இவர்களுக்கும் இருக்கின்றது.

புதுப்புது உணவுகளின் வருகையால் இவர்களும் அவதிப்படுகின்றார்கள். இங்கிலாந்தில் புதிதாக இனிப்பு பதார்த்தங்களுக்கு மேலதிக வரி அறவிடப்போகின்றார்களாம்.

நிலவரம் இப்படியிருக்க....

ஆரோக்கிய உணவுகளை உண்ணும் நாடுகளில் இருந்து வந்த எம்மவர்களோ விபரம் தெரியாமல் நுணுக்கம் பிடிக்கின்றார்கள்.
இங்கேயும் எமது ஆசிய நாட்டு உணவுகளுக்கீடான காய்கனிகள் தானியங்கள் நிறையவே உள்ளன.

அவற்றை எமது நாட்டு முறையில் செய்து சாப்பிட்டு பாருங்கள். அசந்து போவீர்கள்.

 

ge-map.png

 

நீங்கள் கூறுவது ஒரு பார்வை. இருக்கும் நாடுகளைப் பொறுத்து சில நுணுகக்கங்களை பாரக்கவேண்டியுள்ளது.  கனடாவைப் பொறுத்தவரை மரபணுமாற்றப்பட்ட உணவுகள் எது என்று கண்டுபிடிக்க அதற்கான லேபிள் எதுவும் பிரத்தியோகமாக இல்லை. அதற்கான சட்டமும் இல்லை. மரபணு மாற்றப்பட்ட வளர்ப்பு மீன்கள், பன்றிகள் காய்கறிகள் எல்லாம் ஒன்றாகவே இருக்கின்றது. பல நாடுகள் மரபணு மாற்றப்பட்ட உணவுகளை தனித்துக்காட்டும் லேபிளுடன் தான் விற்க முடியும் என்ற சட்டங்களை கொண்டுள்ளது பல நாடுகள் வியாபாரிகளுக்குச் சாதகமாக உள்ளது. உணவு விசயத்தில் பல விசயங்கள் திட்டமிட்டே மறைக்கப்படுகின்றது. இவ்வாறான சில பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கின்றது.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"தான் அறியா சிங்களம் தன் பிடரிக்கு சேதம்"

காரசாரமான விவாதம் நடக்கும்போது இப்போ "ஓட்"டுக்குள்ள 
போறது பொருத்தமாக இருக்காது என்று எண்ணி 
பொதுவாக எங்கு பிரச்சனை குழப்பம் வருகிறது என்று பார்க்கலாம்.

மீன் உண்ணுவதால் பாரிய அளவில் உடலுக்கு பாதிப்பு இல்லை 
என்பது பொதுவான கருத்து..... அது உண்மையும் கூட.
ஆனால் .......... நாம் சாப்பிடும் மீனில் பிரச்சனை இருக்கா இல்லையா ?
என்பதுதான் குழப்பம். அதை புரிந்து தெளிய 
இந்த மீன் எங்கு வளர்க்க படுகிறது ?
இதற்கு இரையாக எதை ஊட்டுகிறார்கள் ?
நெரிசலான இடத்தில் வளருவதால் நோய் தோற்று இல்லாமல் 
இருக்க நீரில் என்ன இரசாயனம் கலக்கிறார்கள்??

போன்ற கேள்விகளுக்கான விடைகளில்தான் 
குறித்த மீன் ஆரோக்கியமா ? உடலுக்கு அழிவா?
என்பதை நிற்னயிக்க போவது 

இது ஓட் டுக்கும் பொருந்தும் ........உருளைக்கிழங்கிக்கும் பொருந்தும். 
இப்போ கெட்டுவிடாமல் இருக்க ..... குறுகிய காலத்தில் வளர்ச்சி அடைய 
கூடிய விளைச்சல் தர என்று பல தரப்படட இரசாயனம் கலக்கப்பட்டு இருக்கிறது 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஓட்ஸ் கஞ்சி (Porridge) எனது காலை உணவாக நீண்ட காலம் உள்ளது. மாற்றும் எண்ணமில்லை. Process பண்ணாத உணவுகளை உண்பதுதான் ஆரோக்கியம். 

தானியங்களான தினை, வரகு, குரக்கன், கொள்ளு எல்லாம் சாப்பிடலாம். தமிழ்க் கடைகளில் கிடைக்கின்றது.

Link to comment
Share on other sites

ஓட்ஸ் காலையில் நேரத்தை மீதப்படுத்தி தயாரிக்க முடியும்.இதனால் சில வருடங்கள் இதனையே தொடர்கிறேன். ஆராய்ச்சி எனும் பெயரில் வரும் கதைகள் எந்தளவு சரியானவை என்று தெரியவில்லை. எதுவும் அளவோடு சாப்பிட்டு வந்தால் சரி. இதுவே என் நிலைப்பாடு.

Link to comment
Share on other sites

நான் துபாய்க்கு வேலைக்கு போன புதிதில் காணாததை கண்டமாதிரி கண்ட கண்ட பீசா பர்கர் எல்லாம் சாப்பிட்டு 1 1/2  வருடத்தில் வெயிட் 100kg ஐ தாண்டிவிட்டது. அத்துடன் வெயிட் கூடினதால முழங்கால் வலி வேறு வந்துவிட்டது. அப்போதுதான் இந்த மரமண்டைக்கு தெரிஞ்சது, வெயிட்  கடுமையாக கூடிவிட்டது எப்படியாவது குறைக்க வேண்டும் என்று. எனக்கு தெரிந்த சில நண்பர்களின் ஆலோசனைப்படி, காலைச்சாப்டாக ஓட்ஸ் சாப்பிட தொடங்கினான். காலையில் ஓட்ஸ்  சாப்பிடுவதால் மத்தியானம் கடுமையான பசி பசிக்கும் எனவே ஒரு full கட்டு காட்டுவதுதான் வேலை. வெயிட் குறைந்தபாடில்லை. 

இப்படியே சில மாதங்கள் போனபின்பும் சொல்லிக்கொள்ளும்படி வெயிட் குறையவில்லை. ஒருமுறை ஊருக்கு விடுமுறையில் சென்றபொது, எதேச்சயாக ஒரு தமிழ்வைத்திய பரியாரியார் ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருடன் உரையாடும்போது, வெயிட் குறைப்பது பற்றியும் ஓட்ஸ் சாப்பிடுவது பற்றியும் கதைத்தேன். அவர் சொன்னார் "தம்பி ஓட்ஸ் சாப்பிடுவதால் வெயிட் ஐ குறைப்பது கடினம். நீ மூன்று நேரமும் அளவான (மூக்கு முட்ட சாப்பிடக்கூடாது) ஆரோக்கியமான சாப்பாடு  சாப்பிடு, சாப்பாடுக்கு இடையில் பசித்தால் நொறுக்கு தீனி சாப்பிடாமல் ஏதாவது பழம் சாப்பிடு. ஒவொருநாளும் குறைந்தது 1 மணித்தியாலம் வியர்வை வரும்படி ஏதவது வேலைசெய். ஒரு 5 அல்லது 6 மாதத்தில் குறிப்பிடத்தக்க வெயிட் குறையும்." என்று சொன்னார். எனக்கு அதில் அப்போது பெரிதாக நம்பிக்கை இல்லை என்றாலும் கொஞ்ச நாளுக்கு அவர் சொன்னதை செய்வது என்ற முடிவுடன் விடுமுறை முடிந்த மீண்டும் துபாய்க்கு வந்துவிட்டேன்.

பிறகு அவர் சொன்னமாதிரி 3 நேரமும் நல்ல உணவு அளவாக சாப்பிட்டு, குறைந்தது 1 மணித்தியாலம் நடை பயிற்சி செய்து வந்தேன் (பீசா பர்கர் மற்றும் பாஸ்ட் food சாப்பிடுவதை முற்றாக நிறுத்திவிட்டன்). அவர் சொன்ன மாதிரி சிறிது சிறிதாக வெயிட் குறைய தொடங்கியது. இப்படியே தொடந்து செய்துவர 1 வருடத்தில் கிட்ட த்தட்ட 15kg குறைந்து விட்டது.இதன் மூலம் உற்சாகம் அடைந்த நான் நடக்கும் நேரத்தை 1.5 மணியாக அதிகரித்து இப்பொது 78kg வெயிட் ல இருக்கிறான். இப்ப நான் எல்லாசப்படும் சாப்பிடுகிறானான் ஆனால் அளவாக. எவ்வளவு டேஸ்ட் ஆக இருந்தாலும் அளவுக்கு மிஞ்சி சாப்பிடுவதில்லை. அத்துடன் ஒவொருநாளும் குறைந்தது 1.5 மணித்தியாலம் உடற்பயிற்சி செய்ய தவறுவதில்லை. வெயிட் ம் கண்ட்ரோலுக்குள்ளை இருக்குது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.