Jump to content

கல்லெறிந்த கைகள் குருத்தோலை தாங்கின


Recommended Posts

கல்லெறிந்த கைகள் குருத்தோலை தாங்கின

 

 
shutterstock82399075

குருத்தோலை ஞாயிறு - மார்ச் 25

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு யூதேயா தேசத்தின் தலைநகரமாக இருந்தது எருசலேம். அதன் அருகில் யோர்தான் நதியின் அக்கரையில் இருந்த ஒரு கிராமத்தின் பெயர் பெத்தானியா. அது இயேசுவுக்கு மிகவும் பிடித்த கிராமம். காரணம் அங்கேதான் இயேசுவின் அன்புக்குப் பாத்திரமான லாசர் என்பவரும் அவருடைய இரு சகோதரிகளான மார்த்தாள், மரியாள் ஆகியோரும் வசித்துவந்தனர். இவர்கள் இயேசுவின் போதனைகளை ஏற்று அவரை மெசியா என்று நம்பினார்கள்.

இயேசு பெத்தானியா வழியே செல்லும்போதெல்லாம், அவரையும் சீடர்களையும் வரவேற்று, தங்கள் இல்லத்துக்கு அழைத்துச் சென்று உபசரிப்பதை லாசரின் குடும்பம் பெரிய மகிழ்ச்சியுடன் செய்துவந்தது. லாசரின் அன்பைக் கண்ட இயேசு அவரைத் தன் நண்பனாகக் கருதினார். அப்படிப்பட்ட லாசர் நோய்வாய்ப்பட்டு இறந்துபோனார்.

அப்போது இயேசு தூரத்தில் இருந்த சமாரியாவில் போதித்துக்கொண்டிருந்தார். ஆனால், லாசர் நோயால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும்போதே அவருடைய சகோதரிகள் இயேசுவுக்கு ஆள் அனுப்பி. “ எஜமானே, உங்கள் பாசத்துக்குரிய நண்பன் வியாதியால் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறான்” என்று தகவல் அனுப்பினார்கள்.

இயேசு விரைந்துவந்து தங்கள் சகோதரனை நோயிலிருந்து மீட்டெடுப்பார் என்று அந்தச் சகோதரிகள் நம்பினார்கள். ஆனால், அவர்கள் அனுப்பிய செய்தியைக்கேட்ட இயேசு, “இந்த நோயின் முடிவு இறப்பு அல்ல, நம் தந்தைக்கு மகிமைதான் உண்டாகும்; இதன் மூலம் தந்தைக்கு மகனுக்கும் இடையிலான உறவின் மகிமை இவ்வுலகுக்குப் புலப்படும்” என்றார். லாசர் கவலைக்கிடமாக இருக்கிறார் எனத் தகவல் கிடைத்தும் உடனே செல்லாமல் மேலும் இருதினங்கள் அங்கேயே போதித்துக்கொண்டிருந்தார்.

 

கல்லெறிந்த ஊருக்குப் போகவேண்டாம்

அதன் பின்னர் அவர் தன் சீடர்களிடம், “ வாருங்கள் மீண்டும் யூதேயாவுக்குப் போகலாம்” என்றார். அதற்குச் சீடர்கள், “ரபீ சமீபத்தில்தானே யூதேயா மக்கள் உங்களைக் கல்லெறிந்து கொல்லப் பார்த்தார்கள், மறுபடியுமா அங்கே போகப் போகிறீர்கள்?” என்று ஆச்சரியத்தோடு கேட்டார்கள். அதற்கு அவர் “நம்முடைய நண்பன் லாசர் இறந்துவிட்டான்.” என்று அவர்களிடம் வெளிப்படையாகவே சொன்னார்.

இயேசு பெத்தானியா போய்ச் சேர்ந்தபோது, லாசரின் உடல் கல்லறையில் வைக்கப்பட்டு ஏற்கெனவே நான்கு நாட்கள் ஆகியிருந்தன. ஆனால், ஊருக்குள் செல்லாமல் இயேசு ஒரு மரநிழலின் கீழ் சீடர்களோடு அமர்ந்திருந்தார்.

இயேசு வந்துவிட்டதைக் கேள்விப்பட்டபோது அவரைச் சந்திக்க மார்த்தாள் விரைந்து போனாள். ஆனால், துக்கம் கேட்க வந்திருந்தவர்களுக்காக மரியாள் வீட்டிலேயே உட்கார்ந்திருந்தாள். மார்த்தாள் இயேசுவை நெருங்கி அழுகையை அடக்கமுடியாமல், “எஜமானே, நீங்கள் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான். ஆனாலும், நீங்கள் கடவுளிடம் எதைக் கேட்டாலும் அவர் உங்களுக்குத் தருவாரென்று இப்போதும் நம்புகிறேன்” என்று சொன்னாள். இயேசு அவளிடம், “உன் சகோதரன் எழுந்திருப்பான்” என்று சொன்னார்.

அதற்கு மார்த்தாள், “கடைசி நாளில் உயிர்த்தெழுதல் நடக்கும்போது அவன் உயிரோடு வருவான் என்று எனக்குத் தெரியும்” என்று சொன்னாள். அப்போது இயேசு, “நானே உயிர்த்தெழுதலும் வாழ்வுமாக இருக்கிறேன். என்மேல் விசுவாசம் வைக்கிறவன் இறந்தாலும் உயிர்பெறுவான். உயிரோடிருந்து என்மேல் விசுவாசம் வைக்கிற யாரும் இறந்துபோகவே மாட்டார்கள். இதை நம்புகிறாயா?” என்று கேட்டார். அதற்கு அவள், “ ஆமாம், எஜமானே. நீங்கள்தான் கடவுளுடைய மகனாகிய கிறிஸ்து, நீங்கள்தான் இந்த உலகத்துக்கு வரவேண்டியவர் என்பதை நம்புகிறேன்” என்று சொன்னாள். உடனே விரைந்து சென்ற மார்த்தாள் மரியாளை அழைத்து வந்தாள்.

 

கண்ணீர் சிந்திய இயேசு

இயேசு இருந்த இடத்துக்கு மரியாள் வந்து, அவரைப் பார்த்ததும் அவருடைய காலில் விழுந்து, “எஜமானே, நீங்கள் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்” என்று கதறி அழுதாள். அவள் அழுவதையும் அவளோடு வந்த யூதர்கள் அழுவதையும் இயேசு பார்த்தபோது உள்ளம் குமுறினார், மனம் கலங்கினார். “அவனை எங்கே வைத்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார்.

அதற்கு அவர்கள், “எஜமானே, வந்து பாருங்கள்” என்று அழைத்துப் போனார்கள். அப்போது இயேசு கண்ணீர்விட்டு அழுதார். அதனால் யூதர்கள், “பாருங்கள், அவன்மேல் இவருக்கு எவ்வளவு பாசம்!” என்று பேசிக்கொண்டார்கள். ஆனால் அவர்களில் வேறு சிலர், “குருடனுடைய கண்களைத் திறந்த இவரால் லாசரின் சாவைத் தடுக்க முடியவில்லையா?” என்று கேட்டார்கள்.

லாசர் அடக்கம் செய்யப்பட்டிருந்த குடவரைக் கல்லறை கல்லால் மூடப்பட்டிருந்தது. “இந்தக் கல்லை எடுத்துப் போடுங்கள்” என்று இயேசு சொன்னார். அப்போது மார்த்தாள் இயேசுவிடம் “எஜமானே, அடக்கம் செய்து நான்கு நாட்கள் ஆகிவிட்டன, துர்நாற்றம் அடிக்குமே?” என்று சொன்னாள். அதற்கு இயேசு, “நீ நம்பிக்கை வைத்தால் தந்தையின் மகிமையைப் பார்ப்பாய் என்று உனக்குச் சொன்னேன், இல்லையா?” என்று கேட்டார்.

இயேசு கூறியபடி கல்லை எடுத்துப் போட்டார்கள். அதன்பின், இயேசு வானத்தை அண்ணாந்து பார்த்து, “தந்தையே என் ஜெபத்தைக் கேட்டதற்காக உங்களுக்கு நன்றி சொல்கிறேன்.” அப்படிக் கூறிய பின்பு, “லாசருவே, வெளியே வா!” என்று சத்தமாகக் கூப்பிட்டார். அப்போது, இறந்தவன் உயிரோடு வெளியே வந்தான்; அவனுடைய கால்களும் கைகளும் துணிகளால் சுற்றப்பட்டிருந்தன. முகத்திலும் ஒரு துணி சுற்றப்பட்டிருந்தது.

இயேசு அவர்களிடம், “இவனுடைய கட்டுகளை அவிழ்த்துவிடுங்கள், இவன் போகட்டும்” என்று சொன்னார். அவ்வாறே செய்தார்கள். இறந்த லாசர் எழுந்தான், இயேசுவைக் கண்டு கட்டி அணைத்துக்கொண்டான். சகோதரிகளைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தான்.

 

வெகுண்டு எழுந்த மதவாதிகள்

மரியாளைக் கண்டு துக்கம் கேட்க வந்திருந்த யூதர்கள் நிறையப் பேர் இயேசு செய்ததைக் கண்டு அவர்மேல் நம்பிக்கை வைத்தார்கள். ஆனால், இயேசுவின் மீது அவருடைய சீடர்கள் மீது முன்பு கல்லெறிந்து கொல்ல முயன்ற கூலிக் கூட்டத்தினரில் சிலர் பரிசேயர்களிடம் போய், இயேசு இறந்துபோன லாசரை உயிரோடு எழுப்பியது பற்றிச் சொன்னார்கள். இதனால் முதன்மை குருமார்களும் பரிசேயர்களும் நியாய சங்கத்தைக் கூட்டி, இயேசுவைக் கொல்வதற்குத் திட்டம் தீட்டத் தொடங்கினர்.

 

இயேசுவைத் தேடிய மக்கள்

லாசர் உயிரோடு நடமாடுவதைக் காண மக்கள் கூட்டம் கூட்டமாக வந்துசென்றார்கள். இதனால் லாசரைக் கொன்று இயேசுவுக்குக் களங்கம் கற்பிக்க மதவாதிகள் திட்டமிட்டார்கள். இயேசுவை யாராவது கண்டால் உடனே நியாயச் சங்கத்தாரிடம் தெரிவிக்க வேண்டும் என்று அவர்கள் கட்டளை பிறப்பித்து இருந்தார்கள். இயேசு யூதர்கள் மத்தியில் வெளிப்படையாக நடமாடாமல் பெத்தானியாவிலிருந்து புறப்பட்டுச் சென்று எப்பிராயீம் என்ற நகரத்தில் தன் சீடர்களோடு தங்கி போதித்துவந்தார்.

அப்போது யூதர்களுடைய புனிதப் பண்டிகையான பாஸ்கா நெருங்கிக்கொண்டிருந்தது. தூய்மைச் சடங்கு செய்துகொள்வதற்காகக் கிராமப்புறத்திலிருந்து நிறையப் பேர் பாஸ்காவுக்கு முன்பே தேவாலயம் அமைந்திருந்த எருசலேமுக்குப் போனார்கள். அங்கே அவர்கள் இயேசுவைத் தேடினார்கள். இயேசுவைக் காண மாட்டோமா என்று ஏங்கினார்கள். இயேசுவை எங்கே பார்க்கலாம் என்று கிராமவாசிகள் விசாரிக்கத் தொடங்கினார்கள். இது மதவாதிகளை மேலும் எரிச்சல் அடையச் செய்தது. “அவர் பாஸ்கா பண்டிகைக்கு எருசலேமுக்கு வர மாட்டாரா, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று பரஸ்பரம் கேட்டுக்கொண்டார்கள்.

 

இயேசுவின் பவனி

பாஸ்கா பண்டிகைக்கு ஏழு நாட்களுக்கு முன்பு மீண்டும் இயேசு எருசலேம் நகரத்துக்குள் வந்தார். அது நிசான் மாதத்தின் 9-⁠ம் நாள் ஞாயிற்றுக்கிழமை. இயேசு எருசலேமுக்குப் பவனி வருகிறார். தீர்க்கதரிசி சகரியா புத்தகத்தின் 9:9-⁠ல் ‘சீயோன் மகளே, சந்தோஷத்தில் துள்ளு! எருசலேம் மகளே, வெற்றி முழக்கம் செய்! இதோ உன் ராஜா உன்னிடம் வருகிறார்! அவர் நீதியுள்ளவர்; மீட்பு தருகிறவர். அவர் தாழ்மையுள்ளவர்; அவர் கழுதைக் குட்டியின் மேல் ஏறிவருகிறார்.’ என்று கூறப்பட்டிருக்கும் வசனங்கள் நிறைவேறும்படியாக இயேசு, ஒரு கழுதைக் குட்டியின் மீது ஏறி எருசலேமுக்குள் வந்தார்.

நகரத்தை அவர் நெருங்குகையில் அவரைச் சுற்றி கூடிவந்த திரளான மக்களில் பெரும்பான்மையர் தங்கள் மேல் அங்கிகளையும் துப்பட்டிகளையும் பாதையில் விரித்தார்கள். பலர் ஒலிவ மரக்கிளைகளை வெட்டி அவற்றைத் தரையில் பரப்பினார்கள். இன்னும் சிலர் பலர் அவற்றைக் கைகளில் ஏந்திக்கொண்டு “கடவுளின் பெயரால் வருகிறவராகிய ராஜா ஆசீர்வதிக்கப்பட்டவர்” என்று கூறி ஆர்ப்பரித்தார்கள்.

சில வாரங்களுக்கு முன்பு இறந்த லாசரை, இயேசு உயிருடன் எழுப்பியதை அந்தக் கூட்டத்திலிருந்த பலர் கண்டிருந்தார்கள். அப்போதிலிருந்து இவர்கள் அந்த அற்புதத்தைப் பற்றி மற்றவர்களிடம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அதனால் இயேசு எருசலேமுக்குள் நுழைந்தபோது முழு நகரமும் இயேசுவை வரவேற்கும் பேரணியால் நிறைந்தது.

முன்பு மதவாதிகளின் கூலிகளாக இயேசுவின் மீது கல்லெறிந்து கொல்லத் துரத்தியவர்கள், இப்போது மனமாற்றம் பெற்றவர்களாகக் கைகளில் ஒலிவ மரக் கிளைகளுடன் இயேசுவை வரவேற்கிறார்கள். கல்லெறிந்த கைகள் இப்போது குருத்தோலை தாங்கிச் சென்றன.“இதோ, உலகமே அவனுக்குப் பின்சென்று போயிற்றே (மத்தேயு 21:10)” என்று புலம்பிக்கொண்டிருந்தனர் மதத்தின் பெயரால் வயிறு வளர்த்துக்கொண்டிருந்தவர்கள்.

http://tamil.thehindu.com/society/spirituality/article23312138.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓசன்னா, கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இஸ்ரவேலின் ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர் !

ஓசன்னா, கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இஸ்ரவேலின் ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர் !

ஆண்டவரே, இந்த குருத்தோலை ஞாயிரு அன்று பாடுகளின் முன்னோட்டத்தை எங்களுக்கு காட்டுகின்றீர். இதே கூட்டம் இன்னும் சில நாட்களில் இவனை சிலுவையில் அறையும்!, சிலுவையில் அறையும்!! என்று கத்தப்போவதும் உமக்கு தெரியும். 

ஆனாலும் ஆண்டவரே, "நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், "என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்" 

என்று எங்களை தேற்றுபவரே. உமக்கு நன்றியப்பா. எங்களின் இரட்சிப்புக்காக நீர் அனுபவித்த பாடுகளுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

ஈஸ்டர்... ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு உயரும் வழி சொன்ன உயிர்ப்பு நாள்! #Easter

 
 

மூடிவைத்த கல்லறையின் முத்திரை தெறித்தது. மேகத் திரைகளை மின்னல் கிழிக்க, தாகம் தீர்க்கும் வான் மழை பொழிந்தது. இறந்த மானுடம் மறுபடி பிறந்தது. ஆம்... இன்று இயேசு கிறிஸ்து வெற்றி வீரராக உயிர்த்தெழுந்த புனித நாளாம் `ஈஸ்டர் திருநாள்' (Easter).

ஈஸ்டர்

 

சாவை வீழ்த்தி, பாவத்தை அழித்து, இருளை வெற்றி கொண்ட இறைமகன் இயேசு உயிர்த்தெழுந்த நாள் `பாஸ்கா பண்டிகை' (Pascha) எனப்படும் `ஈஸ்டர் திருநாள்'.

`பாஸ்கா' என்றால் `கடந்து போதல்' என்று பொருள். சாவைக் கடந்து, இயேசு உயிர்ப்பு பெற்றதால் `பாஸ்கா பண்டிகை' எனக் கொண்டாடப்படுகிறது. 

அடிமை வாழ்விலிருந்து விடுதலையாகி, வாக்களிக்கப்பட்ட வளமான நாட்டுக்கு இஸ்ரேல் மக்கள் கடந்து சென்றதைப்போல நாமும் பாவ வாழ்விலிருந்து விடுபட்டு, நீதியான, சமத்துவமான, மனிதநேயமிக்க வாழ்வைத் தேர்ந்தெடுப்போம். இயேசு உயிர்த்தெழுந்ததுபோல, நாமும் அவரோடு ஒன்றி உயிர்த்தெழுவோம்.

`ஞானஸ்நானம்' எனப்படும் திருமுழுக்கு வழியாக நாம் இயேசுவின் பாடுகளிலும் மரணத்திலும் உயிர்ப்பிலும் பங்குபெறுகிறோம். புனித பவுலடியார் பாவத்துக்காக இறக்கவும், இயேசுவில் வாழவும் நம்மை அழைக்கிறார்.

எவ்வளவுக்கு நம்மில் பாவமும் பாவநாட்டங்களும் சாகின்றனவோ அவ்வளவுக்கு இயேசு நம்மில் வாழ்ந்துவருகிறார். ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு உயர்ந்து செல்லும் வழியைச் சொன்ன இந்த உயிர்ப்பு நாளில் தீமையின் கரங்கள் ஓங்கி நின்றாலும், நன்மையே வெற்றி பெறும். `சாவு வீழ்ந்தது, வெற்றி கிடைத்தது' என்கிறார் புனித பவுலடியார் (1 கொரி. 15:54).

ஈஸ்டர் மெழுகுவர்த்தியை கையில் ஏந்தி, இரவைப் பகலாக்கி, திறந்த கல்லறையின் முத்திரையை திருமுழுக்கில் பெற்றதைத் திரும்பிப் பார்ப்போம். உள்ளும் புறமும் பதுங்கி நிற்கும் தீமைகளின் சக்திகள் தலைதூக்காத வண்ணம் ஈஸ்டர் மெழுகுவத்தியை உயர்த்திப் பிடித்து `அல்லேலூயா'பாடுவோம்.

ஈஸ்டர் பெருநாளில் நம்மிடமும் நல்ல பல உயிர்ப்பு உணர்வுகள் புலப்பட வேண்டும், புறப்பட வேண்டும். தனிமனித வாழ்வில், சமூக வாழ்வில் மனித நேயம் உயிர்பெற வேண்டும்.

கடத்தல் - உயிர்ப்பு - மாற்றம் என ஈஸ்டர் பல்வேறு பொருள்களைக் கொண்டிருந்தாலும் `ஈஸ்டர் திருவிழா' என்றவுடன் `ஈஸ்டர் முட்டை' நமக்கு நினைவுக்கு வரும். மேலைநாடுகளில் `ஈஸ்டர் முட்டை' என்ற பெயரில் பல வண்ணங்களில் சாக்லேட், கேக் தயார் செய்யப்பட்டு, அதைப் பிறருடன் பகிர்ந்துகொள்வார்கள். அதுமட்டுமல்லாமல், வீட்டில்  வளர்க்கும் விலங்குகளுக்கும் உயிரியல் பூங்காவில் உள்ள வனவிலங்களுக்கும்கூட ஈஸ்டர் முட்டையை உணவாகத் தருவதை வழக்கமாகக்கொண்டிருக்கிறார்கள். 

முயல் - முட்டை

முட்டை வடிவில் கோழியிலிருந்து வெளிவரும் உயிர், பிறகு முட்டையை உடைத்துக்கொண்டு குஞ்சாக வெளிவருகிறது. இரு பிறப்பு அல்லது மறுபிறப்பின் அடையாளமாக முட்டை இருக்கிறது. எனவேதான் நமது பழைய வாழ்க்கையில் இருந்து, புதிய வாழ்க்கைக்கு மாறுவது புதுப்பிறப்பின் ஈஸ்டர் திருநாளின் அர்த்தத்தைத் தரக்கூடியதாக அமைகிறது.

சாவை வென்று உயிர்த்தெழுந்து என்றும் வாழும் இயேசு பெருமான் நம் அனைவரையும் ஆசீர்வதிப்பார்.

https://www.vikatan.com/news/spirituality/120840-easter-also-called-pascha-or-resurrection-sunday.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கனடாவில் இடம்பெற்ற தங்கக் கொள்ளை – 6 பேர் கைது! கனடாவில் இடம்பெற்ற மிகப் பெரிய தங்கக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என கனேடிய தகவல்கள் தெரிவித்துள்ளன ஏப்ரல் 2023 இல், டொராண்டோவில் உள்ள பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது இதன் மதிப்பு 16 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என கனேடிய தகவல்கள் தெரிவிக்கின்றன. அவற்றில் மொத்தம் 400 கிலோ எடை கொண்ட 6,600 தங்கக் கட்டிகள் மற்றும் வெளிநாட்டு பண கையிருப்பு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1378752
    • அமெரிக்கா உடனடி பதில் தாக்குதலை தான் ஆதரிக்கவில்லை என்று கூறிவிட்டது. அப்படியென்றால் முதல் பத்தியில் இருக்கும் 74% உம் பொருந்தும்தானே!!
    • ரஷ்யாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது-சர்வதேச நாணய நிதியம்! உலகின் அனைத்து முன்னேறிய பொருளாதாரங்களையும் விட இந்த ஆண்டு ரஷ்யாவின் பொருளாதாரம் வேகமாக வளரும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. சர்வதேச நாணய நிதியம் இந்த ஆண்டு ரஷ்ய பொருளாதாரம் 3.2% வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கிறது என்றும் இது பிரித்தானியா ,பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியை விட கணிசமாக வேகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . இதேவேளை சர்வதேச நாணய நிதியம், எண்ணெய் ஏற்றுமதி “நிலையாக” இருப்பதாலும், உயர்வாக இருப்பதாலும், அரசாங்க செலவினங்களின் வளர்ச்சிக்கு பங்களிக்கிறது என கூறுகிறது. மொத்தத்தில், ரஷ்யப் பொருளாதாரம் உலகப் பொருளாதாரத்தை எதிர்கொள்வதற்கான சிறந்த நிலைப்பாட்டில் இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் மேலும் தெரிவித்துள்ளது. மேலும் ரஷ்யா வங்கி அமைப்பை பெருமளவில் மீள்தன்மையுடன் வைத்திருக்க முடிந்ததுடன் உலகளாவிய மந்தநிலையைத் தவிர்க்க முடிந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1378768
    • எந்த வயதினர் என்றாலும் funny life மனித வாழ்வில் தேவையான ஒன்றே. அந்த வகையில் தாயகத்தில் தற்போதைய  இள வட்டங்களின் funny life video   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.