Jump to content

தமிழர்கள்- முசுலிம்கள் என்ற பகைப் புலத்தை வலுவாக்கித் தமிழீழ தாயகக் கோட்பாட்டை நலிவுபடுத்திய கீழின விலங்கு இந்தியாவே -மறவன்-


Recommended Posts

http://www.kaakam.com/?p=1079

 

RAW-BUSTED.jpg

முசுலிம்கள் மீதான சிங்கள பௌத்த பேரினவாதத்தின் ஒடுக்குமுறையும் திட்டமிட்ட வன்முறையும் முடுக்கி விடப்பட்டிருக்கும் இக்காலச் சூழலில், இலங்கைத்தீவில் முசுலிம்களின் அரசியல் குறித்து பலவாறு பலராலும் அவரவர் புரிதலுக்கேற்பவும் விருப்புகளிக்கேற்பவும் ஓரளவு முறையாகவும் பெரியளவு குறைப்புரிதலிலும் கருத்துகள் பகிரப்பட்ட வண்ணம் உள்ளது. இவற்றுள், இனப்படுகொலைக்குள்ளான தமிழ் மக்கள் தரப்பிலிருந்து அடிப்படை அறவுணர்வுக்கு புறம்பி நின்று முசுலிம்களின் மீதான சிங்கள பௌத்த பேரினவாத வெறியாட்டத்தினை அகமகிழ்ந்து கொண்டாடிய குறைக் கூட்டம் ஒரு புறமும் முசுலிம்களிற்கும் தமிழர்களுக்குமிடையிலான பகைமையுணர்வு தோன்றியமைக்கு அக்கால தமிழர் தலைமைகள் தான் காரணம் என்று சொல்லுவதனூடாக அந்தப் பகைப்புலம் தோற்றுவிக்கப்பட்டதன் பின்னாலுள்ள இந்திய உளவுத்துறையின் சூழ்ச்சி நுட்பமாக மறைக்கப்படுகின்றது. இந்தப் பகைப்புல உருவாக்கத்திற்கு சியோனிச நரபலியாளர்களைக் காரணங்காட்டியோரும் இந்தியாவால் ஏற்படுத்தப்பட்ட புலனாய்வுச் சூழ்ச்சியின் மிகப் பெரும் பங்கைப் பேசாமலே கடந்து செல்கின்றார்கள். எனவே இது குறித்து வரலாற்றுச் செய்திகளோடு நினைவுறுத்த வேண்டிய விடயங்களைப் பதியும் ஒரு ஆய்வுமுறை வழிக் கட்டுரையாக இப்பத்தி வரையப்படுகின்றது.

இலங்கைத்தீவில் உள்ள இசுலாமியர்களில் 2/3 பங்கு சிறிலங்காவிலும் 1/3 பங்கு தமிழீழத்திலும் வாழ்ந்து வருகின்றனர். ஆட்சியாளர்களால் முசுலிம்களாக அடையாளங் கூறப்பட்ட தமிழீழ தாயகத்தைச் சேர்ந்த முசுலிம்கள் தம்மைத் தமிழ் பேசும் முசுலிம்கள் என்றும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தொடக்க காலத்தில் புரட்சிகரமான இளையோரால் தமிழீழ இசுலாமியர்கள் என்றவாறே தம்மை உணர்ந்தும் அடையாளப்படுத்தியும் வந்தனர். சிறிலங்காவின் முசுலிம்களில் பெரும்பகுதி, வணிகமாற்றும் தரகு வர்க்கமாக அதாவது இரத்தினக்கல் வணிகம் போன்ற பெரும்பணமீட்டும் வணிகத்துறைகளில் தரகு அணியாக உள்ளவர்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தின் கீழ் திருப்தி அடைந்தவர்களாக இருக்கையில் வேளாண்மையையும் மீன்பிடித் தொழிலையும் பெரிதும் நம்பியிருக்கும் உழைக்கும் மக்களாகிய தமிழீழ முசுலிம்கள் குறிப்பாக தென் தமிழீழத்தைச் சேர்ந்தோர் தமிழினவழிப்பின் இனவாத ஒடுக்குமுறையால் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். இதன் விளைவாக தமிழீழ இசுலாமிய மறவர்கள் தமிழீழ விடுதலைக்காக விடுதலை இயக்கங்களில் இணைந்து களப்பலியுமானார்கள்.

1956 இல் தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்ட போது சிறிலங்கா முசுலிம்களே அதற்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால் தமிழர்கள் என்ற பெயரில் இந்துக்களாக வாழ்ந்த இந்தியாவைப் புனிதநாடு என்று படியளக்கும் கூட்டம் முசுலிம்கள் தனிச் சிங்களச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதான ஒரு தோற்றப்பாட்டைக் காட்டி தமிழீழ முசுலிம்கள் மீதான ஒரு நம்பிக்கையற்ற தன்மையை ஏற்படுத்த முனைந்தார்கள். ஆனாலும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் தமிழர் தாயக கோட்பாட்டுக்கும் முசுலிம்கள் நல்கிய பெரும் பங்களிப்புகளால் அந்த இந்துத்துவக் கூட்டங்களின் சில்லறைக் கருத்துகள் கூர்மைப்பட்டு அரசியல் வடிவம் பெறவில்லை.

ஒரே நிலம் என்ற தாயகப் பற்றுணர்வும் தமிழ்மொழி மீதான தீராத பற்றுமென வாழ்ந்த இசுலாமியத் தமிழர்கள் தமிழரசுக்கட்சியில் தீவிரமாகச் செயற்பட்டதோடு தம்மைத் தமிழரசுக்கட்சியினூடாகவே பெருமளவில் பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டார்கள். சிறிலங்கா முசுலிம்களோ தம்மை இரண்டு பெரிய சிங்கள தேசியக் கட்சிகள் மூலமே பிரதிநிதித்துவப்படுத்தித் தமது வர்க்க நலன்களைப் பேணியவாறு வணிகத்தினை வளப்படுத்திக் கொண்டார்கள். எனிலும் இவர்களும் தமிழர்களாக சிங்களத்தால் நோக்கப்பட்ட சமயங்களில் இருந்து தம்மைக் காத்துக்கொள்ள தமக்குச் சேர்பிய, பினீசிய, அரபு மூலத்தை தமது வரலாற்று வழியெனச் சொல்லி வந்ததோடு ஒரு சாரார் எல்லாவற்றையும் விஞ்சியவர்களாக பதவிகளுக்காக தம்மை சிங்களவர்களின் வழித்தோன்றல்கள் என்று அடையாளப்படுத்தியும் வந்தனர். சிறிலங்கா முசுலிம்களின் பிரதிநிதிகள் சிங்கள பேரினவாதத்திற்கு அடிவருடிகளாகச் செயற்பட்டு வரும் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தோராயிருந்தனர்.

இந்த சிறிலங்கா முசுலிம்கள் தமது வாக்கு வங்கிக்காக தமிழீழ முசுலிம்களைத் தம்பக்கம் இழுக்க பலவாறு விளக்கம் கொடுத்ததோடு மௌலவிமாரை வைத்து முசுலிம்கள் மதத்தைத் தான் முன்னிலைப்படுத்த வேண்டுமே தவிர மொழியையல்ல என்று குர்ஆன் விளக்கமும் கொடுத்தார்கள். தமிழீழ இசுலாமியர்களை ஏறெடுத்தும் பார்க்காத சிறிலங்கா முசுலிம்கள் தமது வாக்கு வங்கிக்காக தமிழீழ முசுலிம்களுக்கு பதவிகளையும் சலுகைகளையும் அள்ளி வழங்கலானார்கள். தமிழர் என்ற போர்வையில் இந்துவாய் இருந்தோரின் தற்குறி அரசியல், முசுலிம் அடிப்படைவாதத்தின் வெறித்தனங்கள், சிறிலங்கா முசுலிம்களின் வாக்கு வங்கிக்காக தமிழீழ முசுலிம்களிற்கு வழங்கப்பட்ட சலுகைகள் என எல்லாமாக முசுலிம்களை தமிழ்த் தேசிய இனத்தின் இணைபிரியாத உறுப்பு என்ற நிலையிலிருந்து பிரிக்கத் துடித்தன. எனினும் அசுரப் போன்ற அக்காலத்தில் தமிழரசுக்கட்சியின் இளைஞரணியில் தீவிராமகச் செயற்பட்ட இசுலாமிய இளையோர்கள் மாயவலைகளில் சிக்காமல் தமிழீழ முசுலிம்களிடத்தில் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

சிறிலங்காவில் முசுலிம்களின் வணிக ஆதிக்கத்தைக் கண்டு எரிச்சலடைந்த சிங்கள பௌத்த பேரினவாதம் 1915 இல் முசுலிம்களுக்கு எதிராக இன வன்முறை செய்ததன் தொடர்ச்சியாக பல செயற்பாடுகளைத் திரைமறைவில் அரங்கேற்றி வந்தது. புத்தளம் மாவட்டத்தில் முசுலிம்களின் இனவிகிதாசாரத்தை மாற்றி அந்த மாவட்டத்தின் எண்ணிக்கை பெரும்பான்மையாக இல்லாது செய்வதற்காக புத்தளத்தை சிலாபத்துடன் இணைத்து ஒருங்கிணைந்த மாவட்டமாக்கியதோடு புத்தளம் பேருந்து நிலையத்தில் இருந்த முசுலிம்களின் வணிக மேலாண்மையை அழிக்க எந்த அடிப்படையிலும் பொருத்தமில்லாத இடத்தில் புதிதாய் ஒரு பேருந்து நிலையத்தை அமைத்து அதில் சிங்களவர்களுக்கு கடைகளும் கட்டிக்கொடுக்கப்பட்டது.

Chelva.jpg

இந்த இனவொடுக்கல் நடவடிக்கைகளிற்கெதிராகப் போராடிய முசுலிம்களை அச்சுறுத்துவதற்காக 1976-02-02 அன்று புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்குள் புகுந்து சிங்களக் காவல்துறை துப்பாக்கிகளால் சுட்டு வெறியாட்டம் ஆடியது. இதனை எதிர்த்து ஒரு வரி கூடப் பேசாமல் சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்த முசுலிம்களும் கமீட் போன்ற ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்த முசுலிம்களும் வாய்மூடி சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு நோகாமல் நடந்துகொண்டனர். இதற்கெதிராக தந்தை செல்வா மட்டுமே பாராளுமன்றத்தில் பேசி இதற்குக் காரணமானவர்களைத் தயக்கம் இன்றித் தட்டிக் கேட்டார். இதனால் அசுரப் போன்ற தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட இளையோர் தமிழரசுக் கட்சியில் தாம் வைத்திருந்த நம்பிக்கையை மேலும் ஒரு படி உயர்த்தினர். வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு ஆதரவழித்து அதற்குப் பரப்புரையும் செய்து வந்த அசுரப்அண்ணன் அமிர்தலிங்கம் தமிழீழக் கோரிக்கையைக் கைவிட நேர்ந்தால் தம்பி அசுரப் அதனை முன்னெடுத்துச் செல்வேன்என்று கூறியும் வந்தார்.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு மக்களாதரவைக் காட்டுவதாக தமிழர் விடுதலைக் கூட்டணி 1977 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலைப் பயன்படுத்திய போது முசுலிம் ஐக்கிய விடுதலை முன்னணி என்ற பெயரில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பதாகையின் கீழ் தேர்தலில் போட்டியிட்ட அசுரப் அடங்கலானோர் கல்முனை, புத்தளம், சம்பாந்துறை ஆகிய இடங்களில் போட்டியிட்டுக் கூடத் தோல்வியைத் தழுவினர். ஏலவே கூறியது போல, தமிழர் என்ற போர்வையில் இந்துவாய் இருந்தோரின் தற்குறி அரசியல், முசுலிம் அடிப்படைவாதத்தின் வெறித்தனங்கள், சிறிலங்கா முசுலிம்களின் வாக்கு வங்கிக்காக தமிழீழ முசுலிம்களிற்கு வழங்கப்பட்ட சலுகைகள் போன்ற கூட்டுக் காரணங்களாலே தமிழீழம் கோரிய அசுரப் தமிழ்பேசும் முசுலிம் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாமல் போனார். இந்நிலையில் “இசுரேலிய நலன்காக்கும் பிரிவு” என்ற போர்வையில் தமிழ்ப் போராளிகளை ஒழித்துக்கட்டவென மொசாட் கூலிப்படை சிறிலங்கா அரசால் வரவழைக்கப்பட்டது. இதனை தமிழீழ விடுதலை இயக்கங்கள் எதிர்த்திருந்தாலும் ஏனைய தமிழ் அரசியல் தலைமைகளிடமும் தமிழ் மக்களிடமும் எதிர்க்க வேண்டிய தேவையை உணர்ந்த தன்மை இருந்தது போல் செயற்பாட்டில் தெரியவே இல்லை. ஆனால் இதனை எதிர்த்துக் கடுமையாகப் போராடிய தமிழீழ தாயகத்தைச் சேர்ந்த இசுலாமிய இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

India.jpg

அந்தக் காலத்தில் இரு துருவ உலக ஒழுங்கில் இந்து மா கடல் பகுதியில் அமெரிக்க எதிர் நிலையிலிருந்த இந்தியா, அமெரிக்காவின் தூதரகத்தில் ஒதுக்கிக் கொடுக்கப்பட்ட இடத்தில் இயங்கிய இசுரேலுக்கு எதிராகச் செயற்படுவதற்கு இசுலாமிய இளைஞர்கள் பயன்படுவார்கள் என்று கருதி அசுரப் உள்ளிட்ட சில இசுலாமிய இளைஞர்களுடன் ஒட்டான உறவை வளர்க்கத் தொடங்கியது.

1983 ஆம் ஆண்டு இனக்கொலைத் தாக்குதலில் அசுரப்பின் கல்முனையிலிருந்த வீடு தீக்கிரையாக்கப்பட்ட அளவிற்கு அவர் ஒரு தமிழ்த் தலைவராகவே சிங்களத்தால் அந்தக் காலத்தில் பார்க்கப்பட்டார். சிறிலங்கா முசுலிம்கள் தமிழீழ முசுலிம்களின் வாக்குகளைக் குறிவைத்து விரித்த சலுகையில் அதிகம் அரசியல் அறிவற்ற தமிழீழ முசுலிம்கள் வீழாதிருக்க அசுரப் இந்தியத் தொடர்புகள் அதிகம் ஏற்படாத காலம் வரை தொடர்ச்சியாக செயலாற்றி வந்தார். இந்நிலையில் தமிழர் தாயகக் கோட்பாட்டினை சிதைத்து தமிழீழ விடுதலையை இல்லாதொழிக்கும் சூழ்ச்சியை முன்னெடுக்க இந்தியா முனைந்தது. ஈழப் போராளி அமைப்புகளிடம் போர்க்கருவிகளைக் களைந்து வெண்களூரில் சார்க் மாநாட்டிற்கான ஏற்பாடுகளை ராசீவின் இந்திய நடுவண் அரசு செய்திகொண்டிருந்தது. அந்த மாநாட்டில் தமிழரின் தாயகக் கோட்பாட்டினை சிதைத்தழிக்கும் தீர்வுத் திட்டத்தை முன்வைப்பதன் மூலம் தெற்கு ஆசியப் பிராந்தியத்தில் ஒரு தேசிய இன விடுதலையைச் சாத்தியமற்றதாக்குவதோடு சார்க் பிராந்திய நாடுகளின் மீதான தனது மேலாதிக்கத்தைக் காட்டிக்கொள்ள தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்தியா முடிவெடுத்தது. இதற்காக அவர்கள் முன்வைத்த தீர்வுத் திட்டம் என்பதில் கிழக்கு மாகாணத்தை தமிழர்கள், முசுலிம்கள், சிங்களவர்கள் என்ற அடிப்படையில் தனித்தனியான நிருவாக அலகுகள் என்ற மூடுதிரைக்குள் தென் தமிழீழத்தை மூன்றாக உடைத்துத் தமிழீழ தாயகக் கோட்பாட்டைச் சிதைப்பது என்பது அடங்கியிருந்தது.

Anne-490x315.png

வெண்களூரில் வைத்து இந்தத் தீர்வுத் திட்டம் என்று சொல்லப்பட்ட இந்தியாவின் சூழ்ச்சித் திட்டத்தை விடுதலைப் புலிகளிடம் திணித்த போது அதனை விடுதலைப் புலிகளின் தலைமை எதிர்கொண்ட தன்மையும் உறுதியும் என்பது தமிழின விடுதலை குறித்து பேசும் ஒவ்வொருவரும் தம்மிடம் வளர்த்தெடுக்க வேண்டியவையாகும். இந்தச் சந்திப்பில் சிறிலங்காவிற்கான இந்தியத் தூதர் தீட்சித் மற்றும் இந்திய உளவுத்துறையின் மேல் மட்ட அதிகாரிகள் பங்கு பற்றி விடுதலைப் புலிகளின் தலைமைக்குப் பலவாறு அழுத்தம் கொடுத்துப் பார்த்தனர். அதில் வரைபட விளக்கத்துடன் பேசத் தொடங்கிய தீட்சித், கிழக்கு மாகாணம் தமிழர்கள், முசுலிம்கள், சிங்களவர் என்று மூவின மக்களும் வாழ்ந்து வரும் பகுதி என்று கூற, விடுதலைப் புலிகள் தரப்பு குறுக்கிட்டு தமிழர்களுக்கும் தமிழ் பேசும் இசுலாமியர்களுக்கும் அது தாயக நிலம். சிங்களவர்களில் மிகப் பெரும்பான்மையானோர் தமிழர்களின் தாயகத்தை கபளீகரம் செய்வதற்காகக் குடியேற்றப்பட்டவர்கள் என்று கூறினர். இதிலிருந்து முசுலிம்களை எப்படி தமிழீழ தேசத்தின் இணைபிரியாத உறுப்பு என்பதிலிருந்து பெயர்க்க இந்தியா அடிப்படையிட்டது என்பது விளங்கக் கடினமானதல்ல. கிழக்கு மாகாணத்தை மூன்று நிருவாக அலகுகளாகப் பிரித்து அதிகாரப் பரவலாக்கம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று இறுகிய முகத்துடன் உறுதியாகப் பேசிய தமிழீழ தேசியத் தலைவர் மேதகு. பிரபாகரன் அவர்கள்தமிழர் தாயகத்தைப் பிரிக்கவும் முடியாது. பிரிக்கவும் விட மாட்டோம்எனக் கூறி தமிழர்களின் தேசிய ஆன்மாவைக் காப்பாற்றினார்.

தமிழீழக் கோட்பாட்டுக்கு ஆதரவு கேட்டு தேர்தலில் தோல்வியடைந்த அசுரப்பிற்கு, முசுலிம் தனித்தன்மை பேச வைத்த அவரின் தேர்தல் அரசியலுடன் இந்தியத் தூதரக அதிகாரிகளின் கருத்தூட்டமும் சேர அவர் முசுலிம்கள் என்று பிரித்துப் பேசும் அரசியலைக் கூர்மைப்படுத்தலானார். பின்னர் இந்தியசிறிலங்கா ஒப்பந்தத்தில் முசுலிம்கள் ஒரு தரப்பாகத் தன்னும் கருதப்படவில்லை என்று அசுரப் பேச ஆரம்பித்ததோடு இந்தியத் தூதரகம் அசுரப்பின் செயலாற்றும் வேகத்தைப் பார்த்துத் தனது சூழ்ச்சி வலையில் மடக்கிப் போட்டது. இதனால் 1986 இல் தமிழ்த் தலைமைகளுடன் முற்றாக முரண்படத் தொடங்கிய அசுரப், அனைத்துப் போராளி இயக்கங்களும் ஒதுங்கி நின்றதும் விடுதலைப் புலிகளால் தடை செய்யப்பட்டதுமான 1987 உள்ளூராட்சித் தேர்தலில் முசுலிம் காங்கிரசு என்ற அசுரப்பினால் உருவாக்கப்பட்ட கட்சி பங்கு பெற முடிவெடுத்தது. இந்தத் தேர்தலில் பங்கு பற்றினால் கொலை செய்யப்படுவார்கள் என விடுதலைப் புலிகள் எச்சரித்தும் அதில் பங்கு பெற அசுரப் கங்கணம் கட்டி நின்றார். எனினும் இந்தியசிறிலங்கா ஒப்பந்த வருகையுடன் அந்தத் தேர்தல் இரத்துச் செய்யப்பட்டது.

Ashraf.jpg

பின்னர் அசுரப்பானவர் இந்தியாவின் முழுமையான முகவர் என்ற அளவில் மாறுதலாகிப் போன துன்பியல் நிகழ்வு நடந்தேறியது. 1989 ஆம் ஆண்டு நடந்த மாகாண அவைத் தேர்தலில் இந்திய அமைதிப்படை என்ற பெயரில் வந்த இனக்கொலைப் படை நிலைகொண்டிருந்த இடங்களில் போட்டியிட்டு தமது பிரதிநிதித்துவத்தை இந்திய ஒத்துழைப்புடன் அசுரப் ஏற்படுத்திக்கொண்டார். இந்திய அமைதிப் படை என்ற போர்வையில் வந்த இந்திய நரவேட்டைப் படைகள் வெளியேறும் போது இந்தியாவை வெளியேற வேண்டாம் என்றும் இந்தியா வடக்குகிழக்கிலிருந்து வெளியேறினால் முசுலிம்களுக்குப் பாதுகாப்பில்லை என்றும் அசுரப் வலியுறுத்தி வந்து தமிழர் தாயகத்தில் இந்தியாவின் மேலதிக்கத்தையும் வன்கவர்வையும் உறுதிப்படுத்த விரும்பித் தன்னை முழுமையாக இந்தியாவின் கைக்கூலி என்று உறுதிப்படுத்தினார். உண்மையில் இந்தியாவின் இன்னொரு கூலிப்படையாகச் செயலாற்றி வந்த .பி.ஆர்.எல்.எவ் என்ற இயக்கத்தை வைத்து முசுலிம்களின் மீது வன்முறையை ஏவிய இந்தியாதான் அசுரப்பிற்கு முசுலிம்களின் காவலனாகத் தெரிந்தது என்ற அளவில் இந்தியா எப்படி சூழ்ச்சி வலை விரித்து மண்ணிற்காக ஈகம் செய்ய வந்தோரையே மண்ணிற்கு இரண்டகராக்கியது என்பது தெளிவாக உணரப்பட வேண்டும்.

பின்னர் இந்தியாவின் நம்பிக்கையை வென்ற சந்திரிக்கா அம்மையாரின் ஆட்சியில் இந்தியாவின் முகவர் என்றாகி விட்ட அசுரப் எத்தகையதொரு முதன்மையை வகித்தார் என்பது எல்லோரும் அறிந்ததே. அசுரப் முன்வைத்த கரையோர மாவட்டம், முசுலிம் மாகாணம் போன்ற விடயங்கள் வெண்களூரில் சார்க் மாநாட்டை ஒட்டிய சந்திப்பில் தமிழர் கைகளில் திணிக்க முயன்ற, தமிழர் தாயகக் கோட்பாட்டைச் சிதைக்க இந்தியாவால் ஏற்படுத்தப்பட்ட சூழ்ச்சித் திட்டத்தை அடியொற்றியதே. சந்திரிக்காவின் தீர்வுப் பொதியை பாராளுமன்றில் வெளியிட்டவரும் இந்த அசுரப் தான் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, தமிழர்களை இந்துக்களாக்கத் துடிக்கும் இந்தியா தான் முசுலிம்களின் தலைமைகளை தமது கைக்கூலிகளாக்குவதிலும் செயலாற்றுகின்றது. முசுலிம்களினை தனித்த தரப்பாக இந்தியா காட்ட முனைந்ததே தமிழ்த் தேசியத்தின் இணை பிரியாத உறுப்பு என்பதிலிருந்து தமிழ் பேசும் முசுலிம்களைப் பெயர்த்து அவர்களை இசுலாமிய அடிப்படைவாதத்தில் முற்றாகப் புதைய வழி சமைக்கும் சூழ்ச்சிகளைச் செய்ததோடு அதனைக் காரணம் காட்டி இந்துத்துவ கோளாறுகளை தமிழர்களிடத்தில் புகுத்தி பிரித்தாளும் நர சூழ்ச்சியை இந்தியா செய்தது.

இந்துத்துவத்தின் வளர்ச்சி இந்தியாவின் மேலாதிக்கத்தினை எதிர்க்கும் உளநிலையற்ற அடிமைக் கூட்டத்தை அண்டை நாடுகளில் உருவாக்க இந்தியாவிற்குத் தேவையானது. இந்துத்துவ வளர்ச்சிக்கு இசுலாமிய அடிப்படைவாதமும் கிறுத்துவ அல்லேலூயா அமைப்புகளும் காரணங்காட்டத் தேவையானது. பௌத்த பேரினவாதம் இந்தித்துவத்தின் உற்ற நண்பன். சிறிலங்கா, பர்மா போன்ற அதன் அண்டை நாடுகளின் பௌத்த பேரினவாதங்கள் இந்துத்துவத்தின் பேட்டை ரவுடிகளாகும்.

தமிழர்கள்- முசுலிம்கள் என்ற பகைப் புலத்தை வலுவாக்கித் தமிழீழ தாயகக் கோட்பாட்டை நலிவுபடுத்திய கீழின விலங்கு இந்தியாவே. இதன் அடிப்படையின் தொடர்ச்சியான அவலமே முசுலிம் ஊர்காவல் படை என்ற பெயரில் சிங்களத்தின் கைக்கூலியாக முசுலிம்கள் செயற்பட்டு தென்தமிழீழத்தில் தமிழர்கள் மீது நரபலி வேட்டையாடி தமிழீழர்களின் நிலங்களை வன்கவர்ந்தமையாகும். அதனால் தென் தமிழீழத்தில் தமிழர்கள் முசுலிம் வெறியர்களால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகளில் கொன்றொழிக்கப்பட்டதன் வெளிப்படாக வட தமிழீழத்திலிருந்து முசுலிம்கள் வெளியேற்றப்பட்டனர்.அம்பாறை மாவட்டம் 1963 இல் மட்டக்களப்பில் இருந்து பிரிக்கப்பட்ட போது முசுலிம்களின் எண்ணிக்கைப் பெரும்பான்மை அம்மாவட்டத்தில் கிடைக்கின்றது என்று அகமகிழ்ந்த முசுலிம் அடிப்படைவாதமானது திகாமடுல்ல மாவட்டமாகிப் போன பின்பு தனது எண்ணிக்கைப் பெரும்பான்மையை இழந்துதான் நிற்கின்றது.

Anne-Hakeem.jpg

முசுலிம் தரப்பு தனது தமிழர் மீதான கொலைகளுக்கு ஒரு சிறு மன்னிப்பு கேட்காமல் சிங்களத்துடன் ஒத்தோடும் அரசியலைச் செய்து வந்த காலத்தில் தமிழர்கள் மிகப்பலம் பொருந்தி நிழலரசு அமைத்து ஆட்சி புரியும் நேரத்தில் முசுலிம்களிடம் தாம் முசுலிம்களை வெளியேற்றியமைக்கு தமிழர்களின் தலைமை வருத்தம் தெரிவித்து அவர்களின் மீள்குடியேற்றத்திற்கு செயலாற்றுவதாகவும் உறுதி தெரிவித்தது.

Tamilchelvan-with-muslims.jpg

எனினும் அந்தக் காலத்தில் தமிழரோடு இணைந்த தமிழ்த் தேசியத்தோடு இழைந்தோடும் ஒரு தீர்வு தான் இசுலாமியத் தமிழர்களுக்கு ஒரு ஒளிமயமான எதிர்காலத்தைக் கொடுக்கும் என்பதைப் புரிந்து செயற்படாமல் தொடர்ந்தும் சிங்களத்திடம் சலுகை பெற்று அரசியல் செய்யும் சிங்களத்தின் அடிவருடித் தரப்பாகவே சிறிலங்கா முசுலிம்களின் கருத்தியலாளுமைக்கு உட்பட்ட தமிழ்பேசும் முசுலிம் தரப்பு இருந்து வந்தமை இன்று முசுலிம்களை ஒரு இக்கட்டான சூழலுக்குள் தள்ளியுள்ளது.

தமிழீழ முசுலிம்களைத் தமக்குள் கரைத்த சிறிலங்கா முசுலிம்களின் கொழும்புவாழ் மேட்டுக்குடியும் தமிழீழ முசுலிம்களை தமிழ்த் தேசியத்தின் இணைபிரியாத உறுப்பென்ற நிலையிலிருந்து சூழ்ச்சியாக அகற்றிய இந்தியாவுமே தமிழ் பேசும் முசுலிம்களின் இன்றைய கையறு நிலைக்குக் காரணம். சிங்கள பௌத்த பேரினவாதத்திடமிருந்து தற்காத்துக்கொள்ள தமிழர்களுடன் இணைந்து விடுதலைக்காகப் போராடுவதைத் தவிர வேறெந்தக் குறுக்கு வழியும் இலங்கைத்தீவில் முசுலிம்களுக்கு இல்லை.

http://www.kaakam.com/?p=1079

-மறவன்-

2018-03-25

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.