Jump to content

வருங்கால கணவர் பெயரை அறிவித்த நயன்தாரா


Recommended Posts

வருங்கால கணவர் பெயரை அறிவித்த நயன்தாரா

 

முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா, தனது வருங்கால கணவர் யார் என்பதை உறுதியாக அறிவித்திருக்கிறார். #Nayanthara

 
201803251603280953_Nayantara-announcing-
 
தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக இருப்பவர் நயன்தாரா. அனைத்து தென்னிந்திய மொழிப் படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக திகழ்கிறார்.
 
நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருகிறார்கள். கடந்த மாதம் காதலர் தினத்தன்று இருவரும் ஒன்றாக சேர்ந்து ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து கொண்டாடினார்கள்.
 
அதன் பிறகு இருவரும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றனர். பிறந்த நாள் வாழ்த்து தெரிப்பது, காதலர் தின கொண்டாட்டம் என வெளிநாடு சென்ற படங்கள் இணைய தங்களில் வெளியானது. என்றாலும் இருவரும் தங்களது காதல் பற்றி வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.
 
இந்த நிலையில் முதல் முறையாக விக்னேஷ் சிவனை தனது வருங்கால கணவர் என்று நயன்தாரா குறிப்பிட்டுள்ளார். சென்னையில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் நயன்தாரா பங்கேற்று பேசினார்.
 
201803251603280953_1_Nayan_2._L_styvpf.j
 
அப்போது அவர் அம்மா, அப்பா, சகோதரர், என் வருங்கால கணவர் ஆகிய அனைவருக்கும் முதலில் நன்றி என்று குறிப்பிட்டார். இதன் மூலம் காதலரான விக்னேஷ் சிவனை வருங்கால கணவர் என்று நயன்தாரா தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
 
நயன்தாரா முதலில் நடிகர் பிரபுதேவாவை காதலித்து திருமணம் செய்யவும் முடிவு செய்தார். இதற்காக கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த நயன்தாரா இந்து மதத்துக்கு மாறினார். ஆனால் கடைசி நேரத்தில் இருவருக்கும் இடையேயான உறவு முறிந்து விட்டது.
 
அதன் பிறகு ராமராஜ்ஜியம் படத்தில் சீதையாக நயன்தாரா நடித்தபோது இந்து முறைப்படி விரதம் இருந்து நடித்ததாக ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/03/25160328/1153091/Nayantara-announcing-future-husband-name.vpf

Link to comment
Share on other sites

நயன்தாராவை ஏன் பிடிக்கும்? - மனம் திறந்த விக்னேஷ் சிவன்

 

நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வரும் நிலையில், எதற்காக நயன்தாரா பிடிக்கும் என்பதை மனம் திறந்து பேசியிருக்கிறார்.

201803281331421304_Vignesh-Shivan-Talks-
 
நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் நீண்ட நாட்களாகவே நெருங்கி பழகி வருகிறார்கள். வெளிநாடுகளுக்கு ஜோடியாக சென்றார்கள். டுவிட்டரில் இருவரும் நெருக்கமாக இருக்கும் படங்களை வெளியிட்டு, தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்கள். இதனால், இருவரும் காதலிக்கிறார்கள். திருமணம் செய்து கொள்ளப்போகிறார்கள் என்று கூறப்பட்டது. என்றாலும், நயன்தாராவோ, விக்னேஷ் சிவனோ காதலிப்பதாக சொல்லவில்லை. மறுக்கவும் இல்லை. 
 
இந்த நிலையில், சமீபத்தில் நடந்த ஒரு விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நயன்தாரா, விழா மேடையில் பேசும் போது, “நான் விருது பெறுவதற்கு காரணமாக இருந்த பெற்றோர், சகோதரர், வருங்கால கணவர் ஆகியோருக்கு நன்றி” என்று கூறினார்.
 
இதன்மூலம் விக்னேஷ் சிவனை காதலிப்பதை முதல் முறையாக நயன்தாரா வெளிப்படையாக தெரிவித்து இருக்கிறார். எனவே, இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள தயாராகி விட்டதாக கூறப்படுகிறது.
 
201803281331421304_1_vignesh-15._L_styvp
 
இந்த நிலையில், ஒரு டி.வி. இசை நிகழ்ச்சியில் விருந்தினராக கலந்து கொண்ட விக்னேஷ் சிவன், தன்னை நயன்தாரா கவர்ந்தது எப்படி? என்பது பற்றி கூறும்போது, “நயன்தாரா எனக்கு மிகவும் பிடித்தமான நடிகை. அதற்கெல்லாம் மேலாக எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் கொண்ட இரும்பு பெண்மணி. இதன் காரணமாக அவரை எனக்கு அதிகமாக பிடிக்கும். அந்த வகையில் நான் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டதாக கருதுகிறேன்” என்றார்.

https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/03/28133142/1153650/Vignesh-Shivan-Talks-about-Nayanthara.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பதான் நொஞ்சில பால்வாத்த மாதிரி இருக்கு.
இந்த குமர கரை செர்க்க பட்டபாடு. 

ஆனால் இவள் இரும்பு என்றால் கொஞ்சம் கஷ்டம்தான் லேசில உடையாது / வளையாது. உவர் என்ன கஷ்டப்பட போகின்றாறோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, colomban said:

இப்பதான் நொஞ்சில பால்வாத்த மாதிரி இருக்கு.
இந்த குமர கரை செர்க்க பட்டபாடு. 

ஆனால் இவள் இரும்பு என்றால் கொஞ்சம் கஷ்டம்தான் லேசில உடையாது / வளையாது. உவர் என்ன கஷ்டப்பட போகின்றாறோ.

"சூடக்கினால்" இரும்பு வளைந்து கொடுக்கும்,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த குமரையும் கரைசேர்க்க வழியிருந்தால் சொல்லுங்கப்பா...:17_heart_eyes:

DXYFLYBV4AEUNfO.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, குமாரசாமி said:

இந்த குமரையும் கரைசேர்க்க வழியிருந்தால் சொல்லுங்கப்பா...:17_heart_eyes:

DXYFLYBV4AEUNfO.jpg

இப்போதைக்கு நாய் வாழ்க்கைதான்.....!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் பழகுவவர்களுடன் முரண்பாடு ஏற்பட்டால் இதுவரை காலமும் இருந்தநட்பை கேவலப்படுத்து விதமாக ஒருவரைப்பற்றி மற்றவர் பேசுவது நம்மவர்களின் பொதுவான இயல்பு , இது அவர்களின் இரட்டை முகம். ஆனால் ஒரு சிலர் அதனை மவுனமாக கடந்து செல்வார்கள் ஆனால் தாம் பழகினவர்களை கேவலப்படுத்த மாட்டார்கள், ஆனால் தம்மை கேவலப்படுத்தினவர்களை தமது வாழ்க்கையில் இருந்து துடைத்தெறிந்து விடுவார்கள்.
ஒரு கேவலமான நடிகர் தான் நெருக்கமாக இருந்த நபருடன்  முரண்பாடு வந்தவுடன் இணயத்தில் படத்தை வெலியிட்டு மற்றவரை கேவலப்படுத்தினார் கடைசியாக  இன்னொரு  சமயத்தில் அதே மாதிரி  பரபரப்புக்காக பீப் பாடலை தானே இணயத்தில் வெலியிட்டு தானே கேவலப்பட்டு போனார். அவர் செய்த குற்றத்திற்கு அவராகவே அதே மாதிரியான தவறில் மாட்டி நாறிப்போனார், இத்தனைக்கும் அந்த நல்ல மனிதர் அதே நடிகருடன் பிறிதொரு படத்தில் நடித்திருந்தார் .
இந்த மாதிரியான ஒரு நல்ல மனிதர் பொது வாழ்கையில் மற்றவர் துன்பம் அறிந்து தானாக உதவும் அற்புதமான மனிதர் , இப்படியான மனிதர்கள் இலகுவாக தம்மை வெளிக்காட்டிக்கொள்வதில்லை , அடுத்தவர்களின் அவர்கள் தொடர்பான மதிப்பீடுகளைப்பற்றி அவர்கள் அலட்டிக்கோள்வதில்லை.
இந்த காரணங்களுக்காகவே பலருக்கும் நயந்தாராவை பிடிப்பதில் ஆச்சரியம் எதுவுமில்லை
துரோகிகளை மன்னிப்பதற்கு இரும்பு இதயம் தேவைதான் ஆனால் இவர் அவர்களை ஒரு  பொருட்டாகவே எண்ணுவதாக தெரியவில்லை என நினைக்கிறேன்

Link to comment
Share on other sites

On 3/28/2018 at 7:16 AM, குமாரசாமி said:

இந்த குமரையும் கரைசேர்க்க வழியிருந்தால் சொல்லுங்கப்பா...:17_heart_eyes:

DXYFLYBV4AEUNfO.jpg

முதலில் அவவுக்கு திருமணம் செய்யும் நோக்கம் உள்ளதோ என்று அறியவேண்டும். அதை செய்யுங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கலைஞன் said:

முதலில் அவவுக்கு திருமணம் செய்யும் நோக்கம் உள்ளதோ என்று அறியவேண்டும். அதை செய்யுங்கள். 

குமர்ப்பிள்ளையள் எங்கையாவது தங்களுக்கு கலியாணம் வேணும் மாப்பிளை வேணும் எண்டு நச்சரிச்சிருப்பினமே??? பெரியாக்கள்தான் அதை நேரகாலத்துக்கு உணர்ந்து செய்துவைக்க வேணும்.....

Link to comment
Share on other sites

On 3/28/2018 at 7:32 AM, suvy said:

இப்போதைக்கு நாய் வாழ்க்கைதான்.....!  

இந்த பிள்ளையுக்கு இப்ப என்ன குறை என்று சொல்லுறீங்கள்?

நன்றியுள்ள மூன்று நாய்கள்; ஒவ்வொன்றும் ஒவ்வோர் விதம், ஒவ்வோர் தனிச்சிறப்பு. அவற்றை தனித்தனியாய் உற்றுப்பாருங்கள்..

அடுத்ததாக பேச்சுத்துணைக்கு நல்ல ஒரு பாட்டி அருகில்..

மற்றது வசதியான வீடு..

சொகுசு கார்..

ருசியான காப்பி..

கண்ணை மூடி பிள்ளை இனிமை காண்கின்றது..

இந்த மகிழ்ச்சி திருமணம் செய்தால் கிடைக்குமா? :26_nerd:

சும்மா குறை பிடிப்பதே பெரிசுகளுக்கு வேலையாய் போயிற்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30.3.2018 at 1:23 AM, vasee said:

நாம் பழகுவவர்களுடன் முரண்பாடு ஏற்பட்டால் இதுவரை காலமும் இருந்தநட்பை கேவலப்படுத்து விதமாக ஒருவரைப்பற்றி மற்றவர் பேசுவது நம்மவர்களின் பொதுவான இயல்பு , இது அவர்களின் இரட்டை முகம். ஆனால் ஒரு சிலர் அதனை மவுனமாக கடந்து செல்வார்கள் ஆனால் தாம் பழகினவர்களை கேவலப்படுத்த மாட்டார்கள், ஆனால் தம்மை கேவலப்படுத்தினவர்களை தமது வாழ்க்கையில் இருந்து துடைத்தெறிந்து விடுவார்கள்.
ஒரு கேவலமான நடிகர் தான் நெருக்கமாக இருந்த நபருடன்  முரண்பாடு வந்தவுடன் இணயத்தில் படத்தை வெலியிட்டு மற்றவரை கேவலப்படுத்தினார் கடைசியாக  இன்னொரு  சமயத்தில் அதே மாதிரி  பரபரப்புக்காக பீப் பாடலை தானே இணயத்தில் வெலியிட்டு தானே கேவலப்பட்டு போனார். அவர் செய்த குற்றத்திற்கு அவராகவே அதே மாதிரியான தவறில் மாட்டி நாறிப்போனார், இத்தனைக்கும் அந்த நல்ல மனிதர் அதே நடிகருடன் பிறிதொரு படத்தில் நடித்திருந்தார் .
இந்த மாதிரியான ஒரு நல்ல மனிதர் பொது வாழ்கையில் மற்றவர் துன்பம் அறிந்து தானாக உதவும் அற்புதமான மனிதர் , இப்படியான மனிதர்கள் இலகுவாக தம்மை வெளிக்காட்டிக்கொள்வதில்லை , அடுத்தவர்களின் அவர்கள் தொடர்பான மதிப்பீடுகளைப்பற்றி அவர்கள் அலட்டிக்கோள்வதில்லை.
இந்த காரணங்களுக்காகவே பலருக்கும் நயந்தாராவை பிடிப்பதில் ஆச்சரியம் எதுவுமில்லை
துரோகிகளை மன்னிப்பதற்கு இரும்பு இதயம் தேவைதான் ஆனால் இவர் அவர்களை ஒரு  பொருட்டாகவே எண்ணுவதாக தெரியவில்லை என நினைக்கிறேன்

அந்த அற்புதமான நடிகரை இப்படியல்லவா வர்ணித்து வைத்திருக்கின்றார்கள்..

DZdNX8ZWsAIvQHn.jpg:large

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/31/2018 at 11:13 AM, குமாரசாமி said:

அந்த அற்புதமான நடிகரை இப்படியல்லவா வர்ணித்து வைத்திருக்கின்றார்கள்..

DZdNX8ZWsAIvQHn.jpg:large

கு சா அண்ணா சரியாத்தானே வர்ணித்துள்ளார்கள் சாஜகான் பெயர் வரலாற்றில்நிலைத்திருப்பதற்கு காரணம் தாஜ்மகால் , அதே போல் தாஜ்மாகாலுக்கு முகவரியுண்டு அனால் அதைக்கட்டின கொத்தனார்களுக்கு முகவரியே இல்லை சரியாகத்தான் வர்ணித்துள்ளார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.