Jump to content

``ஏன் தடுமாறினேன்னு எனக்கே தெரியலை..!'' - பங்களாதேஷ் போட்டி பரபரப்பு சொல்லும் விஜய் ஷங்கர் #VikatanExclusive


Recommended Posts

``ஏன் தடுமாறினேன்னு எனக்கே தெரியலை..!'' - பங்களாதேஷ் போட்டி பரபரப்பு சொல்லும் விஜய் ஷங்கர் #VikatanExclusive

 

அந்தக் கடைசி பாலில் தினேஷ் கார்த்திக் மட்டும் சிக்ஸர் அடிக்கவில்லையென்றால், இந்திய ரசிகர்களிடம் சிக்கி படாதபாடுபட்டிருப்பார் தமிழத்தின் விஜய் ஷங்கர். கடைசி ஓவரில் ஒரு பெளண்டரி அடித்திருந்தாலும், 18-வது ஓவரில் தொடந்து நான்கு பந்துகளில் ரன் அடிக்காமல்விட்டதுதான் விஜய் ஷங்கர் மீது வைக்கப்படும் விமர்சனம். `பங்களாதேஷ் மேட்ச்சில் நடந்தது என்ன?' - விஜய் ஷங்கரிடம் பேசினேன்.

விஜய் ஷங்கர்``இந்தியாவுக்காக ஆடும் முதல் சீரிஸ். இறுதிப்போட்டியில் இந்தியாவுக்காக பேட்டிங் ஆடும் முதல் வாய்ப்பு. மிகவும் பதற்றமாக இருந்ததா?''

 

``நிச்சயமா இல்லை. நான் மைதானத்துல நுழையும்போது ஒரு ஓவருக்கு 10 ரன்னுக்குமேல அடிச்சாதான் ஜெயிக்க முடியும்கிற சூழல். `முதல் மேட்ச் பேட்டிங் ஆட வாய்ப்பு கிடைச்சிருக்கு. அதுவும் ஃபைனல் மேட்ச். இந்த மேட்ச்ல ஆடி ஜெயிச்சிக்கொடுத்தா ரொம்ப ஸ்பெஷலாயிருக்கும்'னு எனக்குள்ள ரொம்ப மோட்டிவேட்டான ஃபீலிங்கோடுதான் ஆட வந்தேன்.

நான் பேட்டிங்குக்கு வந்தது 13-வது ஓவர்ல. நல்லா ஸ்ட்ரைக்கை ரொட்டேட் பண்ணிட்டுத்தான் இருந்தேன். ஆனா, 18-வது ஓவர் ஏன் தடுமாறினேன்னு எனக்கே தெரியலை. எப்பவுமே ஒரு டாட் பால் விழுந்துச்சுன்னா, அடுத்த பால் சிங்கிள் ஆடுவேன். கேப்ல தட்டிவிடுவேன். ஆனா, அன்னிக்கு எதுவுமே வொர்க்-அவுட் ஆகலை. அடுத்த பால் நிச்சயம் அடிப்பேன்கிற ஃபீலிங்கோடு ஆடும்போது, அடுத்தடுத்த பாலும் அடிக்க முடியாம போனதும் எனக்கே பிரஷராகிடுச்சு. ஆனா, தினேஷ் கார்த்திக் அடிச்சு இந்தியா ஜெயிச்சதுல ரொம்ப சந்தோஷம். பர்சனலா, எனக்குக் கிடைச்ச நல்ல வாய்ப்பை மிஸ்பண்ணிட்டேன்னு நினைக்கும்போது கொஞ்சம் வருத்தமாயிருக்கு.''

``தொடர்ந்து டாட் பால்ஸ் விழும்போது தினேஷ் கார்த்திக் என்ன சொன்னார்?''

``தமிழ்நாடு டீம்ல நான் எப்படி ஆடுவேன்னு தினேஷ் கார்த்திக்குத் தெரியும். அதனால, அப்ப அவர் மென்டலா, டெக்னிக்கலா என்ன பண்ணணும்னு சொன்னார். `பிரஷர் ஆகாதீங்க'னும் சொன்னார்.'' 

``மேட்ச் முடிஞ்சதும் கேப்டன் ரோஹித் ஷர்மா எதுவும் பேசினாரா?''

`` `ஒவ்வொரு கிரிக்கெட்டரும் தங்களோட கரியர்ல இப்படி ஒரு சூழலைச் சந்திச்சுட்டுத்தான் வந்திருப்பாங்க. அதனால, நடந்ததை நினைச்சு கவலைப்படாத'னு சொன்னார். `இந்த அனுபவத்தை எடுத்துக்கிட்டு அடுத்தடுத்த மேட்ச்ல எப்படி பர்ஃபார்ம் பண்றதுன்னு யோசி' என்றார்.''

விஜய் ஷங்கர்

``ஃபைனலுக்கு முன்னாடி பாம்பு டான்ஸ் ஆடி பங்களாதேஷ் அலப்பறை பண்ணாங்க. அந்த டீமோட ஆட்டத்தை அடக்கணும்னு எதுவும் டீம்ல பேசிக்கீட்டீங்களா?'' 

``பங்களாதேஷைப் பற்றி தனியாலாம் எதுவும் பேசல. `இந்தியாவுக்காக ஆடுறோம். இந்தியா ஜெயிக்கணும்'கிற எண்ணம்தான் எங்களுக்குள்ள இருந்துச்சு. பங்களாதேஷா இருந்தாலும் சரி, பாகிஸ்தானா இருந்தாலும் சரி, இந்தியா ஜெயிக்கணும்கிறதுலதான் எங்க கவனம் இருக்கும்.''

``27 வயசுலதான் இந்தியாவுக்காக ஆடும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைச்சிருக்கு. ரொம்ப லேட்டா வந்துட்டோம்னு ஃபீல்விஜய் ஷங்கர் பண்றீங்களா?''

``இப்ப இந்தியாவுக்காக ஆட ஆரம்பிச்சுட்டேன்னு சந்தோஷப்படுறேன். என்னோட கரியர்ல முக்கியமான நேரத்துல முட்டியில ஆபரேஷன் பண்ணவேண்டியதாப்போச்சு. ஆஸ்திரேலியா `ஏ' டீமுக்கு எதிரான போட்டியில் கிளம்பும்போதுதான் இப்படி ஒரு சூழல். ஆபரேஷன் முடிஞ்சி கிட்டத்தட்ட ஆறு மாசம் பேட்டையே தொட முடியலை. அதுலயிருந்து மீண்டு தமிழ்நாடு அணி, ரஞ்சி டிராஃபி, தமிழ்நாட்டுக்கு கேப்டன்னு விட்ட இடத்துலயிருந்து திரும்ப வந்தேன். அதான் கொஞ்சம் லேட் ஆகிடுச்சு. ஒவ்வொரு கட்டத்துலயும் சூப்பரா பர்ஃபார்ம் பண்ணித்தான் இந்த இடத்துக்கு வந்திருக்கேன்கிறதுல ரொம்ப சந்தோஷம்.''

``முதல்முறையா இந்திய அணிக்குள்ள மூன்று தமிழ்நாட்டு வீரர்கள். நீங்க, தினேஷ் கார்த்திக், வாஷிங்டன் சுந்தர்னு எப்படி இருந்து அந்த அனுபவம்?''

``ரொம்ப கம்ஃபர்ட்டபிளா இருந்துச்சு. மூணு பேருமே நல்லா விளையாடினோம்கிறதுல ரொம்ப சந்தோஷம். மூணு பேருமே கன்சிஸ்டென்ட்டா இருந்தோம். இவ்வளவு வருஷ கடுமையான உழைப்பாலதான் இங்க வந்திருக்கோம்கிறதை மூணு பேருமே நிரூபிச்ச மாதிரிதான் இந்த சீரிஸை நான் பார்க்கிறேன்.''

``உங்க குடும்பம் பற்றிச் சொல்லுங்க?''

``அப்பா, விளம்பர நிறுவனம் வெச்சிருக்கார். அம்மா, வீட்டைப் பார்த்துக்கிறாங்க. அண்ணன், தனியார் நிறுவனத்துல வேலைபார்க்கிறார்.''

``அடுத்தது என்ன?''

 

``ஐ.பி.எல்-ல டெல்லி அணிக்காக விளையாடப்போறேன். ரொம்ப பாசிட்டிவா இருக்கேன். நிறைய ரன், விக்கெட்கள் எடுக்கணும். டீம் ஜெயிக்கணும். இப்போதைக்கு அதுதான் என் ப்ளான்.''

https://www.vikatan.com/news/sports/120262-vijayshankar-open-talk-about-what-happened-in-match-against-bangaldesh.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.