Jump to content

கொலைக் குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் போராளிகள் விடுதலை!


Recommended Posts

 
 
 

அரசியல் கைதிகள் இருவர் இன்று விடுவிக்கப்பட்டனர்

 

அரசியல் கைதிகள் இருவர் கொழும்பு உயர் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டனர்.

கடந்த பத்து வருடங்களாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகளான இவர்களின் குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில் இன்று விடுவிக்கப்பட்டனர்.

2009 ஆம் ஆண்டு முன்னால் அரசதலைவர் மகிந்த ராஜபக்ச, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ச மற்றும் இராணுவத் தளபதி சனத் பொன்சேகா ஆகியோரை சுதந்திரத் சதுக்கத்தில் வைத்து கொலை செய்ய சதி தீட்டம் திட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினத்தின் புதல்வரான ஆதித்தியன் மற்றும் கோகுலநாத் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களின் வழக்குத் தொடர்பில் மூத்த சட்டத்தரணி கே.வி. தவராசா நீதிமன்றில் தொடர்ச்சியாக முன்னிலையாகினார்.

இந்த வழக்கு நேற்று உயர் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது குற்றத்தை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படாத நிலையில் இவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

http://newuthayan.com/story/79139.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுவிச்சாச்சு நல்ல விடயம். செய்யாத குற்றங்களுக்கு பெற்ற தண்டனைகளுக்கு பரிகாரம் என்பது விடுதலை ஆகுதல் என்றதோடு மட்டுப்படுத்தப்பட முடியாது. 

இப்படி போலிக் குற்றச்சாட்டுகளோடு சிறையில் வாடுபவர்கள் சார்பில்.. அவர்கள் மீது போலிக் குற்றம் சுமத்தியவர்கள் தண்டிக்கப்படுவது அவசியம். விடுதலையோடு அவையும் நடைபெற்றால்.. தான்.. இந்த அநியாயங்களுக்கு குறைந்த பட்ச நீதியாவது கிடைத்தது என்றாகும். :rolleyes:

Link to comment
Share on other sites

 

இனப்படுகொலையாளிகள் மஹிந்த ராஜபக்ஷ , கோத்தாபய ராஜபக்ஷ, சரத் பொன்சேகா ஆகியோரை கொலைச் செய்ய சதித் திட்டம் தீட்டி செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள்   இருவரை கொழும்பு மேல் நீதிமன்றம் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் இன்று விடுதலை செய்தது.

குறித்த இருவராலும் வழங்கப்பட்டதாக கூறப்படும் குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தை மையப்படுத்தி தக்கல் செய்யப்பட்டிருந்த குறித்த வழக்கில், குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க முறைப்பாட்டாளர் தரப்பான சட்ட மா அதிபர் தவறிவிட்டதாக கூறி, பிரதிவாதிகளின் சட்டத்தரணியான சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி. தவராசாவின் வாதத்தை ஏற்ற கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் அபேகோன் இந்த தீர்ப்பை அளித்து பிரதிவாதிகள் இருவரையும் விடுவித்தார்.

கிரிதரன், கிரி, கண்ணன் மற்றும் தாஸ் ஆகிய பெயர்களால் அறியப்படும் கணகரத்தினம் ஆதித்தன் , இம்பன், தம்பி, கோபால் ரத்னம், தயாபரன் ஆகிய பெயர்களால் அறியப்படும் கந்தகவனம் கோகுல்நாத் ஆகியோரே இவ்வாறு கொழும்பு மேல் நீதிமன்றினால் விடுவிக்கப்ப்ட்டுள்ளனர்.

கடந்த 2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட மேற்படி இருவருக்கும் எதிராக 2011 ஆம் ஆண்டு சட்ட மா அதிபரால் பயங்கரவாத தடை சட்ட விதிவிதாங்களுக்கு அமைவாக மூன்று குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

2009 ஆண்டு ஜனவரி முதலாம் திகதிக்கும் நவம்பர் 11 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் கொழும்பில் வைத்து மஹிந்தவையும், கோத்தாபயவையும் கொலைசெய்ய சதித் திட்டம் தீட்டியதுடன் தியத்தலாவையில் வைத்து சரத் பொன்சேகாவை கொலைசெய்ய சதி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. அது தொடர்பில் நீண்ட வழக்கு விசாரணைகளின் பின்னரே இன்று நீதிபதி தீர்ப்பறிவித்து, குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் விடுவித்தார்.

 

https://wp.me/p7CIsm-1LR

Link to comment
Share on other sites

மஹிந்த, கோத்தா, பொன்சேகாவை கொலை செய்ய  சதித் திட்டம் : இருவருக்கு விடுதலை 

 

 
 

 

(எம்.எப்.எம்.பஸீர்)

 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ஷ, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோரை கொலைச் செய்ய சதித் திட்டம் தீட்டி செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்கள் எனக் கூறப்படும் இருவரை கொழும்பு மேல் நீதிமன்றம் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் இன்று விடுதலை செய்தது.

colombo-high-court.jpg

 குறித்த இருவராலும் வழங்கப்பட்டதாக கூறப்படும் குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தை மையப்படுத்தி தக்கல் செய்யப்பட்டிருந்த குறித்த வழக்கில், குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க முறைப்பாட்டாளர் தரப்பான சட்ட மா அதிபர் தவறிவிட்டதாக கூறி, பிரதிவாதிகளின் சட்டத்தரணியான  சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி. தவராசாவின் வாதத்தை ஏற்ற கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் அபேகோன் இந்த தீர்ப்பை அளித்து பிரதிவாதிகள் இருவரையும் விடுவித்தார்.

கிரிதரன், கிரி, கண்ணன் மற்றும் தாஸ் ஆகிய பெயர்களால் அறியப்படும் கணகரத்தினம் ஆதித்தன் , இம்பன், தம்பி, கோபால் ரத்னம், தயாபரன் ஆகிய பெயர்களால் அறியப்படும் கந்தகவனம் கோகுல்நாத் ஆகியோரே இவ்வாறு கொழும்பு மேல் நீதிமன்றினால் விடுவிக்கப்ப்ட்டுள்ளனர். 

கடந்த 2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட மேற்படி இருவருக்கும் எதிராக 2011 ஆம் ஆண்டு சட்ட மா அதிபரால் பயங்கரவாத தடை சட்ட விதிவிதாங்களுக்கு அமைவாக மூன்று குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

2009 ஆண்டு ஜனவரி முதலாம் திகதிக்கும் நவம்பர் 11 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் கொழும்பில் வைத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவையும் முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபயவையும் கொலைசெய்ய சதித் திட்டம் தீட்டியதுடன் தியத்தலாவையில் வைத்து முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை கொலைசெய்ய சதி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. அது தொடர்பில் நீண்ட வழக்கு விசாரணைகளின் பின்னரே இன்று நீதிபதி தீர்ப்பறிவித்து, குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் விடுவித்தார்.

http://www.virakesari.lk/article/31996

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதல்வராக வந்துடுவார் என்று இதுவரை யாருமே சொல்லலை. இருந்தும் குத்திமுறிவதைப் பார்த்தால் முதல்வராக வந்திடுவாரோ என்று பயப்பிடுவது போல இருந்தது.
    • அவரும் வரம்பு மீறவில்லை. நானும் மீறவில்லை.  சீமானை எதிர்த்து எழுதுவோர் பயத்தில் எழுதுவதாக எழுதினார் - அதை மறுத்து நான் கருத்து எழுதியுள்ளேன். அதே போல் யாழில் நாம் குத்தி முறிவது வீண் வேலை என்றார் - ஆம் இரு பக்கத்திலும் அது வீண்வேலையே என அவருடன் உடன்பட்டேன். ஏன் எண்டால் நான் திமுக அனுதாபியோ அல்லது கருணாநிதி குடும்ப வக்கீலோ அல்ல. ஆகவே அவர்களை defend பண்ணி மினெக்கெட நான் தயாரில்லை. சீமானை எதிர்ப்பவர் = திமுக ஆதவாளர் என்பது நீங்கள் போட்ட தவறான சமன்பாடு. நான் சீமானை எதிர்க்க ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்கள் உண்டு, திமுக ஆதரவு அதில் ஒன்றல்ல.
    • ◌தமிழுக்கும் யாழுக்கும் எமக்கும் தேவையான  உறவு வாருங்கள்  கூடுவோம் பேசுவோம்  மகிழ்ந்திருப்போம்..
    • ஒவ்வொரு பொது த‌ள‌ங்க‌ளிலும் காணொளி பார்த்து முடிந்தது வாசிப்ப‌து உண்டு..................... சீமானுக்கு ஆத‌ர‌வாக‌ 180க்கு மேலான‌ யூடுப் ச‌ண‌ல் இருக்கு......................... புதிய‌த‌லைமுறை ம‌ற்றும் வேறு ஊட‌க‌ங்க‌ளில் ம‌க்க‌ளின் ம‌ன‌ நிலை என்று கீழ‌ வாசிப்ப‌துண்டு நீங்க‌ள் மேல‌ ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கு எழுதின‌தில் என‌க்கு உட‌ன் பாடு இல்லை ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா யாழில் யார் கூட‌வும் வ‌ர‌ம்பு மீறி எழுதும் ந‌ப‌ர் கிடையாது நீங்க‌ள் சீமானில் ஒரு குறை க‌ண்டு பிடிச்சால் க‌ருணாநிதி குடும்ப‌த்தில் ப‌ல‌ நூறு குறைக‌ள் என்னால் க‌ண்டு பிடிக்க‌ முடியும் அதில் பாதி தான் நேற்று உங்க‌ளுக்கு எழுதின‌து ஆனால் நீங்க‌ள் ப‌தில் அளிக்க‌ முடியாம‌ ந‌க‌ர்ந்து விட்டீங்க‌ள்...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.