Jump to content

காவியுடையுடன் பொலிஸ் சேவையில் இணைய விரும்பிய பௌத்த பிக்கு


Recommended Posts

காவியுடையுடன் பொலிஸ் சேவையில் இணைய விரும்பிய பௌத்த பிக்கு

பொலிஸ் சேவையில் இணைய முன்வந்த பௌத்த பிக்கு ஒருவரை அரசு பொலிஸ் சேவையில் இணைக்க மறுத்துவிட்டது.

பொலிஸ் சீருடை அணியாது காவியுடையுடனும் கையில் துப்பாக்கியுடனும் பொலிஸ் சேவையில் இணைய இவர் விரும்பினார்.

எனினும் இது நடைமுறை விதிகளுக்கு பொருந்தாதென்பதால் இவர் திருப்பியனுப்பப்பட்டதாக பொலிஸ் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பௌத்த பிக்கு உதவிப் பொலிஸ் அத்தியட்சர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தார்.

நேர்முகப் பரீட்சைக்கு வந்த இவர் காவி உடையுடனே பொலிஸ் சேவையில் ஈடுபட விருப்பம் தெரிவித்தார். எனினும் பொலிஸ் சேவைகள் ஆணைக்குழு இதற்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டது.

காவியுடையில் இருப்பவர்களால் பொலிஸ் கடமையைச் செய்ய முடியாதெனத் தெரிவித்த, தேசிய பொலிஸ் ஆணைக்குழுத் தலைவர் நெவில் பியடிகம, இவர் பொலிஸில் இணைய விரும்பினாரா அல்லது தொடர்ந்தும் பிக்குவாகவே இருக்க விரும்புகிறாரா எனத் தெரியவில்லை என்றும் கூறினார்.

எனினும் அந்தப் பௌத்த பிக்கு யாரென்பதை அவர் கூற மறுத்துவிட்டார்.

இலங்கையில் பௌத்த பிக்குகள் பலர் ஆசிரியர்களாகவும், விரிவுரையாளர்களாகவும் ஆயுர்வேத வைத்தியர்களாகவும் இருக்கையில் இவர் ஏன் பொலிஸ் சேவையில் இணைய விரும்பினாரெனத் தெரியவில்லை.

http://www.thinakkural.com/news/2007/3/23/...s_page23848.htm

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் பௌத்த பிக்குகள் பலர் ஆசிரியர்களாகவும், விரிவுரையாளர்களாகவும் ஆயுர்வேத வைத்தியர்களாகவும் இருக்கையில் இவர் ஏன் பொலிஸ் சேவையில் இணைய விரும்பினாரெனத் தெரியவில்லை.

வேற எதுக்கு சம்பாதிக்கத்தான் :P

Link to comment
Share on other sites

இலங்கையில் பௌத்த பிக்குகள் பலர் ஆசிரியர்களாகவும், விரிவுரையாளர்களாகவும் ஆயுர்வேத வைத்தியர்களாகவும் இருக்கையில் இவர் ஏன் பொலிஸ் சேவையில் இணைய விரும்பினாரெனத் தெரியவில்லை.

வேற எதுக்கு சம்பாதிக்கத்தான் :P

இந்த கண்டுபிடிப்புக்கு நான் ஒரு விருது வழங்க போறேன்

:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காவியுடன் இருந்தால் காலன் வரமாட்டான் எண்டுதான் போலும்;

Link to comment
Share on other sites

காவியுடை போட்டு வெள்ள வான்ல கடத்தலா.........?

இல்லை எங்கன்ட 007,008 புலனாயிவு படி காவிக்குள் கசிப்பு கடத்த என்பது அறியபட்டது

:P

Link to comment
Share on other sites

இல்லை எங்கன்ட 007,008 புலனாயிவு படி காவிக்குள் கசிப்பு கடத்த என்பது அறியபட்டது

:P

அது வேற நடக்குதா..................................... ஆண்டவா இந்த புத்துட பரம்பரை பண்ணுர அட்டகாசத்தை கொஞ்சம் அடக்கு

Link to comment
Share on other sites

அது வேற நடக்குதா..................................... ஆண்டவா இந்த புத்துட பரம்பரை பண்ணுர அட்டகாசத்தை கொஞ்சம் அடக்கு

யார் புத்து நான்சன்ஸ்

:angry: :angry:

Link to comment
Share on other sites

நான் உம்மை வன்மையாக கண்டிக்கிறேன்.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் முழுக்க சீனா,யப்பான், தாய்லாந்து, இந்தியா என்று எல்லா இடமும் வணக்கத்துக்குரிய

பிக்குமார்கள் உள்ளனர். ஆனால் சிறிலங்காவில் மட்டும்தான் பிக்குகள் பாடு ஒரே பிக்கல் பிடுங்கலாய்

கிடக்கு.

ஒருவேளை உண்மையான பிக்குகள் இப்படியெல்லாம்செய்யக்கூடாத

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.