Jump to content

ஒட்டுக்குழு ஈபிடிபியால் கடத்தப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு தமிழரசு கட்சி விடை தருமா?


Recommended Posts

சிறிலங்காவில் பொறுத்த வரையில் 2004 – 2010 வரையிலான காலப்பகுதியில் 44 ஊடகவியலாளர்கள், ஊடகப் பணியாளர்கள் கொல்லப்பட்டும் கடத்தப்பட்டும் காணாமல் போயும் உள்ளனர் என இலங்கையில் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு கூறுகிறது.

வட தமிழீழத்தில் அரசாங்கத்தின் அனுசரணையோடு, ஒட்டுக்குழு ஈபிடிபியால் ஊடகவியலாளர்களின், ஊடகப் பணியாளர்களின் உயிர் பட்டப்பகலில் பறிக்கப்பட்டது. கொல்லப்பட்டவர்களின் உறவுகள் நீதியை நாடமுடியாத அளவுக்கு அச்சுறுத்தலுக்கும் உள்ளாக்கப்பட்டார்கள். 30இற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் உயிர் அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்தார்கள்.

வட தமிழீழம் , யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்ட தமிழ் ஊடகவியலாளர் ஒருவரான சுப்பிரமணியம் ராமச்சந்திரன் யாழ்ப்பாணத்தில் 2007 பெப்ரவரி 15 அன்று ஒட்டுக்குழு ஈபிடிபியால் கடத்தப்பட்டு காணாமல்போனார்.

ஒட்டுக்குழு ஈபிடிபியால் இராணுவச் சோதனைச் சாவடியிலும், முகாம்களிலும் அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்ததற்கான நேரில் கண்ட சாட்சியங்கள் இருந்த போதிலும், இன்று வரை அவரது நடமாட்டம் பற்றி அறியமுடியவில்லை. நாளாந்தம் அவரது வருகைக்காக அவரது வயதான பெற்றோரும் குடும்பத்தினரும் காத்திருக்கின்றனர்.

ஏதேனும் பிரச்சினை மீது அச்சமின்றி எழுதக்கூடிய துணிவுமிக்க ஊடகவியலாளர் ஒருவராக அவரது சகபாடிகளும், குடும்பத்தினரும் அவரை நினைவுகூருகின்றனர். யுத்தத்தின்போது இராணுவத்தினராலும், வேறு சிறிலங்கா அரச ஒட்டுக்குழு ஈபிடிப்பியால் இழைக்கப்படும் துஷ்பிரயோகத்தினதும், உரிமை மீறல்களினதும் மீது அறிக்கையிடுவதைத் தொடர்ந்த வட தமிழீழம் ,யாழ்ப்பாணத்தில் தளத்தைக் கொண்ட ஒரு சில ஊடகவியலாளர்களில் அவரும் ஒருவராவார்.

ஒரு நாள் ராமச்சந்திரன் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையில் இன்றுவரை அவரது குடும்பத்தினர் காத்திருக்கின்றனர். ராமச்சந்திரன் என்றாவது வீட்டுக்கு மீளத்திரும்பி வருவாரா? அவர் காணாமல்போன பின்னர் அவருக்கு என்ன நடந்தது என்று? இன்று சிறிலங்கா அரச ஒட்டுக்குழு ஈபிடிபியுடன் கரம் கோர்த்திருக்கும் தமிழரசு கட்சி விடை தருமா?

http://www.thaarakam.com/முக்கிய-செய்திகள்/ஒட்டுக்குழு-ஈபிடிபியால்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எத்தனையோ ஆயிரம் தமிழ் அம்மாமாரின் கண்ணீருக்கு காரணமான ஈபிடிபி உட்பட்ட ஒட்டுக்குழுக்களோடு கூட்டு வைச்சு... சம்சும்மாவை கும்பல் செய்யும் அராஜக அரசியல் என்பது.. தமிழரசுக் கட்சியின் சர்வாதிகார மிச்சமே அன்றி.. அது தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற போர்க்கால அரசியல் கட்சியின் தோற்றமில்லை.

ஈபிடிபி கொலைகாரக் கும்பலின் தலைவன் இப்ப மனித உரிமை கதைக்கிறார்.. எங்களில் சிலர் அவருக்கு பாவமன்னிப்பும் கொடுக்கத் தயாராக இருக்கினம். ஆனால்.. சொந்த பந்தங்களின் உயிர்களை இந்த ஒட்டுக்குழுவின் பணத்தாசை காட்டிக்கொடுப்புக்கு நரபலி இடலுக்கு தாரைவார்த்த மக்களுக்கு நீதி என்பது சாகடிக்கப்பட்டதாகக் கூடாது.

எனவே ஒட்டுக்குழுக்களுக்கு சம்சும் மாவை கும்பல்.. வெள்ளையடிச்சு சனநாயக சாயம் பூசுவதை தமது சுயநலத்தை முன்னிறுத்திச் செய்து கொண்டிருப்பதை உடனடியாக நிறுத்த மக்கள் இவர்களை எல்லா வகையிலும் வற்புறுத்த வேண்டும். அதற்கான அழுத்தங்கள் மக்களிடம் இருந்து இவர்களை நோக்கிப் போகவும் வேண்டும்.

ஒரு சில ஒட்டுக்குழு வால்பிடிகள் ஊருக்கு நாலு வாக்குப் போடுவதால்.. ஒட்டுக்குழு சனநாயக வேடம் போட முடியாது.. என்பதற்கு இந்த மக்களின் கண்ணீர் சாட்சி. tw_angry:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.