Jump to content

புதுவைக்கோர் புகழஞ்சலி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஈழ மண்ணினதும் மக்களினதும் விடுதலைக்காகக் களத்தில் நின்று புரட்சிக்கனல் கக்கிய அந்த மாபெரும் கவிஞனை சும்மா புதுவையென்றாலே தமிழ்த் தேசியவாதிகள் யாவருமறிவர். 2009 இலிருந்து காணாமற்போனோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுவிட்ட அக்கவிஞனை முகநூலில் சிலர் இன்று நினைவு கூர்ந்ததால் அவரைப் பற்றி முன்பொருகால் நானெழுதிய இந்தக் கவிதையை இங்கு பதிவிடுகிறேன்.

தணலை மூட்டிய தமிழ்க் கவி வாணன்

புதுவையென்னும் புகழுக்குரியவன்
புனிதவேள்விக் கவிகளியற்றுவோன்
எதுகை மோனை இலக்கணச் சாத்திரம்
எதிலுங் கட்டுப் படாதவன் ஆயினும்
வதுவை செய்து கவிமகள் தன்னையே
வாழ்வு முற்றும் அவட்கென வாழ்ந்தவன்
மதுவைத் தன்றன் தமிழிற் கலந்தனன்
மாந்தி வீழ்ந்து மயங்கினர் ஆயிரம்.

அகவை ஐம்பது ஆனது அவன் கவிக்(கு)
ஆயினும் பதினாறின் இளமையாள்
தகைமையால் தமிழ் ஈழமறவரின்
தழலெரிந்திடு நெஞ்சினை மூட்டினாள்
பகைமை தோற்றது பாயும் மறவரின்
படை நடந்தது பாரதம் சோர்ந்தது
இகமெலாம் தமிழ் வீரம் தெரிந்தது
ஈழதேசம் உயிர்த்து எழுந்தது.

நீரிலே நெருப்பேற்றிய எங்களின்
நேரிலாத் தலைவன் ஒளிர் சூரியன்
போரிலேற்றிய வெற்றிச் சுடர்களைப்
பொன்னெழுத்திற் புதுவை பொறித்ததால்
தேரிலேறிய தீந்தமிழாளவள்
திலகமாகத் திகழ அவன் கவி
பாரிலே தமிழீழப் பரணியைப்
பாட வேண்டியதில்லை யென்றானது.

காற்றையே கயிறாக முறுக்கியும்
கனலை நெஞ்சில் அடக்கியும் தங்களின்
ஆற்றல் யாவும் விடுதலைக்கேயெனும்
அணி வகுத்த மறவரின் நெஞ்சிலே
ஏற்றி ஏற்றி உணர்வினை ஊட்டிய
இரத்தினத்துரை எம் கவி வாணனைப்
போற்ற நாவிற் புகழ்மொழி ஆயிரம் 
பொய்யிலாதவர் நெஞ்சிலுதிக்குமாம்.

வாழ்வு வேறு கவிக்களம் வேறெனும்
வகை பிரித்த நடிப்புச் சுதேசியாய்
தாழ்பிடித்து உயர்ந்திடத் தன்னிலை
சாகஸங்கள் நடாத்த அறிந்திலான்
கூழ் குடித்து அரைவயிற்றோடுதன்
குடும்ப மோடினும் ஈழவிடுதலை
நாளை நோக்கி நலிந்தவப் பெற்றியான்
நமது தேசக் கவிதனைப் போற்றுவோம்!

வேறு:
புதுவைக் கவி எம் ரத்தினமே
புகழ்மிக்குயர் நட் சத்திரமே
எதுகைக்கொரு வெண் நித்திலமே
எழுசப்த சுரத்தின் நிலமே

வெல்லற்கரிய தமிழினிமை
மேவக் கவியால் தளையிடையே
அல்லல் படுமெம் நிலையுரைத்த
சொல்லேருழவா சீராளா

எழுத்தாம் அம்பை மழையாக்கி
எறியும் வில்லை நாவாக்கி
ஒளித் தூறல்களால் மானுடத்தின்
உயர்விற் குறிவைத்துரமூட்டி
புழுத்தே வழியும் சமுதாயப்
பொல்லா நாற்றச் சிணிபோக்கி
முழுத் தாரணியும் கழுவுண்ண
முழுக்காட்டினை நின் கவியாலே!

என்றும் உனது இனியகவி
ஈழமண்ணில் அழியாது
நின்று மறவர்க்(கு) உரம் ஊட்டும்
நின்றன் புகழைப் பறைசாற்றும்.

முற்றும்.

Link to comment
Share on other sites

நன்றி கவிஞா, என் ஆருயிர் நண்பன் புதுவையின் நினைவினைப் போற்றுவோன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 05/04/2018 at 6:13 PM, poet said:

நன்றி கவிஞா, என் ஆருயிர் நண்பன் புதுவையின் நினைவினைப் போற்றுவோன்.

நன்றிங்க.

On 06/04/2018 at 8:47 PM, Kavi arunasalam said:

தூசு தட்டாமலே

காசு பார்த்தவர் 

கூழ் குடித்து அரைவயிற்றோடுதன்
குடும்ப மோடினும் ஈழவிடுதலை
நாளை நோக்கி நலிந்தவப் பெற்றியான்
நமது தேசக் கவிதனைப் போற்றுவோம்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.