Jump to content

தங்கக் கூண்டு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

                                                                                                                           தங்கக் கூண்டு

 

     என் பெயர் எழில். பருவப் பெண்களுக்கே உரிய வாழ்க்கை பற்றிய கனவுகள் எனக்கும் உண்டு - பிரத்தியேகமாக எனக்கென்றே பிரம்மனால் படைத்து அனுப்பப்பட்ட தலைவன் வெண்புரவியில் வந்து சேருவான் போன்ற அதீதமான கற்பனைகள் தவிர. இந்த மாதிரியான கற்பனைகள் தோன்றாததற்குக் காரணம் பாழாய்ப் போன(!) வாசிப்புப் பழக்கமும், என் தந்தையாரால் நேர்முகமாகவும் நூல் முகமாகவும் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்ட பகுத்தறிவாளர்களின் சிந்தனைகளும் என்றே நினைக்கிறேன்.

 

     என் விருப்பம் போல் அறிவியலில் ஆய்வு மாணவியானேன். என் விருப்பம் போல் ஏனைய பிறவும் வாசித்துத் தள்ளினேன். எழுத்து பற்றி என்னுள் எழுந்த வேட்கை என்னை சிறு பத்திரிக்கைகளில் எழுத வைத்தது. சான்றாண்மை மிக்க ஒரு சிலரின் கேண்மை இப்பூவுலகில் எனக்குக் கிடைத்த வரம். என் ஆரம்ப எழுத்துக்களை அவர்களிடம் வாசிக்க அளித்தேன். "அட ! உனக்கு எழுத்து நல்லாத்தான் வருது. உனக்கே உரிய அந்த அங்கத நடையுடன் நீ எழுத்துலகில் வீறு நடை போடலாம், வா !" என அவர்கள் பெரிய மனதுடன் வரவேற்புரை நல்கியது தேவர்கள் என் மீது சொரிந்த பூமாரி. அவர்கள் தூண்டுகோலாக நான் எழுதுகோல் ஆனேன். அவர்கள் ஆசியுடன் என் முதல் கட்டுரைத் தொகுப்பு புத்தகமாய் வெளிவந்த போது தரையிலிருந்து சிறிது எழுந்து காற்றில் மிதந்தது போன்ற உணர்வு. எழுத்துலகில் இன்னும் சரியாக காலே பதிக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் தடம் பதிக்க வேண்டும் என்ற கனவு உண்டு. இது நியாயமான கனவுதானே ! வெண்புரவிக் கனவு ஒன்றும் இல்லையே !

 

     வருடம் என்று ஒன்று உண்டு. வயது என்று ஒன்று உண்டு. காலாகாலத்தில் நடப்பவை நடக்க வேண்டும் என்று ஒன்று உண்டு. அம்மா, அப்பா, ஆச்சி, சித்தி, சித்தப்பா  எல்லோரும் எனக்கான அந்த வெண்புரவித் தலைவனைத் தேட ஆரம்பித்தார்கள். இக்காலத்தில் ஐவகை நிலங்களில் சென்றா தேட வேண்டும் ? இணையத்தில்தானே இணையைக் கண்டெடுக்க வேண்டும் ! கணினித் திரையில் குதிரைப் பந்தயத்தில் எத்தனையோ புரவிகள் ஓடின. நாங்கள் என்னதான் சுமாராயிருந்தாலும் எங்களுக்கும் கற்பனை வளங்களும் தெரிவுகளும் இருக்காதா என்ன !

 

     வீட்டுக்கே வந்து பெண்ணையோ பையனையோ பார்ப்பது இப்போதெல்லாம் கடைசிக் கட்டம்தான் என்றாலும், அருகாமையில் இருந்த காரணத்தால் ஒரு மாப்பிள்ளை வீட்டார் தயக்கத்துடன் அனுமதி கேட்டு நேரில் வந்தனர். இயற்கையின் விதியாக நானும் உயர் நடுத்தர வர்க்கத்தில் பிறந்திருந்தாலும், வந்தவர்கள் பெரும் வணிகச் சமூகத்தைச் சார்ந்த, பொருளாதாரத்தில் மிகவும் உயர் வகுப்பினர்; வேடிக்கையாக வியாபாரக் காந்தம் என்பார்களே, அக்காந்த சக்தி படைத்தவர்கள். ஆனால் அதற்கான பகட்டு எதுவுமின்றி எளிமையாகத்தான் பேசினார்கள், பழகினார்கள். இதையெல்லாம் பார்க்கும் போதுதான் மனித சமூகமும் நாகரிகமடைய முயல்கிறது என்ற ஐயம் ஏற்படுகிறது. அம்முயற்சி உண்மையானால் மகிழ்ச்சியே !

 

     பையனின் பெற்றோருக்கும் உற்றோருக்கும் பிடித்துப் போயிருக்க வேண்டும். அதனால்தான் அவர்களின் ஒரே நிபந்தனையான "பெண் வேலைக்குச் செல்லக் கூடாது" என்பதை வெளியிட்டனர். என் பக்கத்தில் யாரும் சரியென்று தலையை ஆட்டவில்லை. பார்த்துவிட்டுச் சென்றவர்கள் சுமார் பத்து நாட்கள் கழித்து, பையனும் பெண்ணும் பார்த்து பேசிக் கொள்ளலாமா எனக் கேட்டனர். "கண்டிப்பாக அவர்கள் பார்க்கத்தான் வேண்டும், பேசத்தான் வேண்டும். இருவரின் தலைக்கு மேலேயும் பல்பு எரிந்தால் மட்டுமே நாம் மேற்கொண்டு தொடர முடியும். நீங்கள் தாராளமாய் அழைத்து வரலாம்" என என் அப்பா - அம்மா பச்சைக் கொடி காட்டினார்கள். அந்த நாளும் வந்தது. முதன் முதலாக என்னைப் பார்க்க வந்த பையனுடன் பேசப் போகிறேன் என்ற திகிலோ, பரபரப்போ, பரவசமோ என்னிடம் இல்லை. என் வயதையொத்தவர்களை விட அறிவுலகில் வலம் வருகிறவர்களிடம் என் அப்பாவின் மூலமாக ஏற்பட்ட நட்பின் விளைவாக இருக்கலாம். ஆனாலும் பருவப் பெண்ணுக்கே உரிய அச்சம், மடம், நாணம் எதுவும் இல்லாமல் ஒரு விஷயத்தைச் சொல்லியே ஆக வேண்டும். பையனின் நிழற்படத்தைப் பார்த்த போது என் தலைக்கு மேல் மங்கலாக எரிந்த பல்பு, நேரில் பார்த்த போது பிரகாசமாய் எரிந்தது.

 

     சற்றுத் தூரத்தில் அமர்ந்து பேச ஆரம்பித்தோம். அவரே தொடங்கினார் (என்னது ! 'பையன்' என்பதிலிருந்து மாறி 'அவர்' என்று ஆனது பல்பின் மகிமையோ!), "நீ வேலைக்குச் செல்வதில் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் எங்களைப் போன்ற பெருவணிகச் சமூகத்தில் வழக்கமில்லை. மேலும் அம்மா-அப்பா விரும்பாத போது அவ்வழக்கத்தை ஏன் மாற்ற வேண்டும் என நினைக்கிறேன். நீ யோசித்துக் கொள். தற்போது உன் ஆய்வுப் படிப்பு முடிவடையும் வரை நீ தொடர்வதில் யாருக்கும் ஆட்சேபணை இல்லை. மற்றபடி பொதுவான விஷயங்களில் நம் ஆர்வம், விருப்பம் எனப் பேசலாமே" என்றார். பேசினோம். நன்றாகப் பேசினோம். அவரது தோற்றம் மட்டுமல்ல, எளிமையும் எனக்குப் பிடித்திருந்தது. ஆனாலும் ஏதோ ஒன்று உறுத்தியது. வணிகச் சமூகத்தில் உள்ள உறவினர் ஒருவர் கூறக் கேட்டிருக்கிறேன், "நாம் யாரோ ஒருவருக்குத் தலைவணங்கி வேலை பார்ப்பதை விட சுயதொழிலில் 'நானே வேலைக்காரன், நானே முதலாளி' என்றிருக்கலாமே!" அந்த உறவினரை அடுத்த முறை பார்க்கும் போது கேட்க வேண்டும், "நம் பெற்றோர்க்குத் தலை வணங்குவதும் அவர்களின் பொற்பாதங்களை நம் தலையில் தாங்குவதும் நாம் பெற்ற பேறு. ஆனால் உங்கள் நிறுவனத்துக்கு முதலாளிகளாய்ப் போன ஒரே காரணத்திற்காக உங்கள் பெற்றோர் முன் உங்கள் ஆசைகளைக் காலில் போட்டு மிதிக்கவில்லையா?  அவர்களின் விருப்பு வெறுப்பிற்கு முன் நீங்கள் தலை வணங்கவில்லையா? இதைத்தானே நிலவுடைமைச் சமூகத்தில் கூட்டுக் குடும்பமாய் வாழ்ந்த பிள்ளைகளும் செய்தார்கள்?"

 

     அதே சமயம் மாமனார் - மாமியார் என அனைவரும் சேர்ந்து வாழ்வதை விடுத்து தனித்தனியாய் வாழும் வாழ்க்கையிலும் எனக்கு விருப்பமில்லை. அனைத்து வகையான வாழ்க்கை முறைகளிலும் சிறந்த விஷயங்கள் அத்தனைக்கும் ஆசைப்படும் பேராசைக்காரி நான். கூடி வாழ வேண்டும். நியாயமான என் சுதந்திரமும் ஆசைகளும் பறிபோகக் கூடாது. இந்தச் சமூகத்திற்கானவள் நான் என்று ஊட்டி வளர்க்கப்பட்ட நான் நான்கு சுவற்றுக்குள் (எவ்வளவு பெரிய பங்களாவானாலும் நான்கு சுவர்கள்தானே !) எப்படி என்னைச் சுருக்கிக் கொள்வது ? என்னிடமுள்ள இன்னும் முழுமையடையாத சில திறமைகளுக்கே என்னைக் கொண்டாடும் சமூகத்தை விடுத்து வேறு எங்கோ எப்படிக் காணாமல் போவது? வெளியிற் சென்று வேலை பார்க்கும் எண்ணத்தை நான் உதறினாலும் கூட, அருகிலுள்ள என் தாய் வீடு செல்வதற்குக் கூட இவர்களிடம் கைகட்டி நிற்க வேண்டுமோ? அந்தப் பள்ளி அரங்கில் நடக்கும் நிகழ்வு ஒன்றிற்கு அ.மார்க்ஸ், சுப.உதயகுமார் ஆகியோர் பேச வருகிறார்கள். அங்கு செல்வதற்கும் இவர்கள் தயவை நாட வேண்டுமோ? மண வாழ்க்கை என்று ஒரு சாதாரண விஷயத்திற்காக என் அடையாளத்தையே நான் தொலைக்க வேண்டுமோ? மனித குல நீட்சிக்கு நான் ஒருத்தி பங்களிக்கா விட்டால் குடியா முழுகிப் போகும்? இவர்கள் தேடும் பெண் நான் இல்லையோ? இது போன்ற இனம் புரியாத பயம் அனைத்தும் என் கற்பனையாகக் கூட இருக்கலாம்.

 

     இனிய சம்பிரதாயங்களுடன் பெண் (பெண்ணும் ஆணும்) பார்க்கும் படலம் நிறைவு பெற்றது. பெண்ணுக்கும் பையனுக்கும் ஒருவரையொருவர் மிகவும் பிடித்திருக்கிறது. பெண் வீட்டாருக்கும் பிள்ளை வீட்டாருக்கும் மகிழ்ச்சியே. ஆனாலும் இத்திருமணம் நிகழும் வாய்ப்பு மிகவும் குறைவு. என்ன ஒரு நகைமுரண் ! அவர்களின் மரபு சார்ந்து ஒரு நிபந்தனையில் உறுதியாய் இருப்பதைத் தவிர மற்றபடி மாப்பிள்ளை வீட்டார் நல்ல குணமுடையவர்கள்; அவர்களின் மூத்த மருமகளைப் போல என்னையும் மகாராணி போல் வைத்துக் கொள்வார்கள் என்று எனக்கு மட்டுமல்ல, என் பெற்றோர் உற்றோர்க்கும் தோன்றியது. நாங்கள் கண்டவையும் கேட்டவையும் இதனை உறுதிப்படுத்தின. எனக்கு அவர்கள் வீட்டில் ஒரு தங்கக் கூண்டு தயாராய் இருக்கிறது என்பதை உணர்ந்தேன். கூண்டு கூண்டுதானே ! அதில் தங்கமென்ன ? இரும்பென்ன ?

 

     வீட்டு மாடியில் எனது அறையைத் திறந்து மின்விசிறியைச் சுழலவிட்டேன். அப்போது செல்பேசி ஒலிக்க அதில் கவனமானேன். ஜன்னல் கதவுகளை என் ஆச்சி அடைத்திருந்ததை உணரவில்லை. சாளரத்தில் கூடு கட்டி வாழ்ந்திருந்த குருவி கூட்டை விட்டு வந்து, வெளியே போக வழி தெரியாமல் சுற்றியது. செல்பேசியின் கவனத்தில் குருவியின் மீது மனம் செல்லவில்லை. திடீரென்று மின்விசிறியில் அடிபட்ட குருவி தொப்பென்று விழுந்தது. பஞ்சைப் போல அதன் இறகுகள் உதிர்ந்து நாலாபுறமும் பறந்தன. அந்தக் கோரக் காட்சியில் அதிர்ச்சியில் உறைந்து செல்பேசியைத் துண்டித்தேன். ஐயோ ! அந்த அறையை என்னுடன் பகிர்ந்த அந்தக் குருவி இனியில்லை. அதன் சிவந்த வால் என் கண்ணில் ஆடியது. செல்பேசி டவரால்தான் சிட்டுக்குருவி காணாமல் போனது என்பார்கள். இன்று என் செல்பேசியால் இந்த சிகப்பு வால் குருவி இவ்வுலகை விட்டுப் போனது என்ன ஓர் அவலக் குறியீடு? உயிர்த்தோழி சுதாவை (அதே நாசமாய்ப் போகிற) செல்பேசியில் அழைத்து அழுது தீர்த்தேன். "அழாதேமா ! நீ வேண்டுமென்றா சாகடித்தாய்? அதன் விதி அவ்வளவுதான்" எனத் தேற்ற முயன்றாள். அப்புறம்தான் அந்த மாப்பிள்ளை வந்து போன விஷயத்தைச் சொன்னேன். அதற்கும் பதில் தயாராய் வைத்திருந்தாள். "அது ஒரு பெரிய விஷயமில்லை. அதற்காக மறுக்காதே. திருமணத்திற்குப் பின் உன் இயல்பைப் பார்த்து அவர்களே மகிழ்ந்து மனம் மாறிவிடுவார்கள்". "இல்லை, சுதா ! நானும் ஏமாற வேண்டாம். அவர்களும் ஏமாற வேண்டாம். நானோ அவர்களோ ஏன் மாற வேண்டும்?" கனத்த இதயத்தோடு இதை நான் சொல்லும் போது என் மனக்கண்ணிலும் வெண்புரவி தோன்றியது. ஆனால் பின்னோக்கி மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. மீண்டும் குருவிக்கே வந்தேன், "நாளைக் காலையில் நான் விழிக்கும் போது அந்தக் குருவி இருக்காதே !" துக்கத்தில் தொண்டை அடைக்க பேச்சு வராது என்பார்கள். எனக்கு என் மூச்சான தமிழே வரவில்லை. "The sparrow has vacated its room" முனங்கினேன். மீண்டும் சுதா, "விடு எழில் ! வேறு குருவி வரும்............ வேறு மாப்பிள்ளையும் வருவான்". 

 

 

                                                                                                                                                                                                                                                                      - சுப.சோமசுந்தரம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 வணக்கம் சுப. சோம சுந்தரம் யாழ் களத்துக்கு இனிய நல்வரவு . 

அரிச்சுவடியிலேயே  அழகான முற்போக்கான ஒரு சிறுகதையுடன் வந்திருக்கிறீர்கள் பாராட்டுக்கள்.  கதைக்காக   வேறுபகுதி இருக்கிறது அங்கு உங்கள் பகிர்வை நகர்தினால்  நன்று அல்லது நிர்வாகத்தினரைக் கேட்கலாம்  மேலும் உங்கள் பதிவுகள்  அதிகம் வரவேண்டும் .தொடர்ந்து இணைந்து இருங்கள்.   . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் நிலாமதி அவர்களுக்கு நன்றி. தங்கள் ஊக்கம் என் எழுத்துக்கு ஆக்கம் தரும். சமூகச் சாளரம் என்னும் பகுதியில் இக்கதையைப் பதிவிட அனுமதி கேட்டுள்ளேன். தங்கள் கருத்துப்படி இனி சிறுகதை எனில் 'கதை கதையாம்' பிரிவில் வெளியிடுகிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துக்கள் !!!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்...சுப சோமசுந்தரம்!

தங்கள் வரவு நல்வரவாகட்டும்!

சிட்டுக்குருவியின் இறப்பைப் பற்றி...அதிகம் கவலைப்படாதீர்கள்!

நாளை....அது இன்னொன்றாக உருவெடுக்கும்!

அழிந்தது அதன் சூக்கும உடல் மட்டும் தான்.....!

இன்னொரு சிட்டுக்குருவியை....அதே இடத்தில் குடியேற்றுங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வரும்போதே படைப்போடு வருகிறீர்கள் 
நல்வரவு ஆகட்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'யாழ்' உலகினுள்  எனக்கு நல்வரவு கூறிய மற்றும் கூறப்போகும் நல்லுள்ளங்களுக்கு பெருநன்றி. இத்தனைக் காலம் இவ்வரிய நல்லுலகத்தை அறியாத இருளில் இருந்தமைக்கு வருந்துகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

வணக்கம் சுப. சோமசுந்தரம் .

வணக்கம் நவிலன். யாழில் உங்களைக் கண்டது மகிழ்ச்சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

வணக்கம். வாருங்கள் சோமசுந்தரம்.

வணக்கம் இணையவன். மகிழ்ச்சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையம் தன் இருபதாவது அகவையைப் பூர்த்திசெய்த இந்த இனிய தருணத்தில் இணைந்து முதல் கதையை அசத்தலாகத் தந்திருக்கும் சுப.சோமசுந்தரத்தை வாழ்த்தி வரவேற்கின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சு.ப.சோ.அழகாக கதை சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

இன்னும் சொல்லுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Kavallur Kanmani said:

யாழ் இணையம் தன் இருபதாவது அகவையைப் பூர்த்திசெய்த இந்த இனிய தருணத்தில் இணைந்து முதல் கதையை அசத்தலாகத் தந்திருக்கும் சுப.சோமசுந்தரத்தை வாழ்த்தி வரவேற்கின்றோம்.

நன்றி.

21 minutes ago, Kavi arunasalam said:

சு.ப.சோ.அழகாக கதை சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

இன்னும் சொல்லுங்கள்.

சொல்வேன். பேசுவோம்.நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சோமா....உங்கள் வரவு நல்வரவாகட்டும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி, தோழர் புத்தன் மற்றும் அபராஜிதன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரும்பொழுதே அழகான கதையுடன் வந்திருக்கிறீர்கள் இப்போதுதான் பொறுமையாக வாசித்தேன், அருமையாக இருக்கின்றது. தொடர்ந்து நிறைய எழுதுங்கள் சுப.சோமசுந்தரம்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/4/2018 at 3:21 PM, suvy said:

வரும்பொழுதே அழகான கதையுடன் வந்திருக்கிறீர்கள் இப்போதுதான் பொறுமையாக வாசித்தேன், அருமையாக இருக்கின்றது. தொடர்ந்து நிறைய எழுதுங்கள் சுப.சோமசுந்தரம்.....!  tw_blush:

 தோழர் சுவி அவர்களுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Quote

கூண்டு கூண்டுதானே ! அதில் தங்கமென்ன ? இரும்பென்ன ?

நல்லதோர் கதை.

பழக்கவழக்கம், பண்பாடு என்று சொல்லியே பழமையைப் பேணுவது ஒரு உத்திதான். காலாவதியான பெறுமதிகளை கைவிட்டு புதியவற்றை பற்றிக்கொள்ளுவதுதான் நாகரீக முன்னேற்றமாக இருக்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
    • `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்கச் சென்ற வயதான வாக்காளரின் பெயர், இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்ததால், வாக்களிக்க முடியாமல் அதிர்ச்சியடைந்து திரும்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.   ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி, பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், திமுக கூட்டணி சார்பில் நவாஸ்கனியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் விருவிருப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 3 மணி வரை ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 52.46 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க சென்ற வயது முதிர்ந்த பெண் ஒருவரின் பெயர், இறந்தபோன வாக்காளர் லிஸ்ட்டில் இடம்பெற்றிருந்தததால் வாக்களிக்க முடியாமல் திரும்பினார். துளசிபாவா மடம் பகுதியை சேர்ந்த காளியம்மாள் (65) என்பவர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப்புடன் தனது பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க சென்றுள்ளார்.         வாக்குப்பதிவு மையம் உ.பாண்டி     வாக்குச்சாவடி உ.பாண்டி வரிசையில் காத்திருந்த காளியம்மாள் வாக்குப்பதிவு மையத்தினுள் சென்று தனது பூத் சிலிப்பைக் கொடுத்துள்ளார். அதனை வாங்கிப் பார்த்த தேர்தல் பணியாளர், வாக்காளர் பட்டியலில் தேடி பார்த்தபோது, காளியம்மாளின் பெயர் இறந்தவர்களின் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து காளியம்மாளிடம் கூறிய தேர்தல் பணியாளர், அவரை வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார். உயிரோடு இருந்து ஓட்டுப்போட ஆர்வத்தோடு வந்த தன்னை, இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்த்திருப்பதை அறிந்த காளியம்மாள் அதிர்ச்சியடைந்ததுடன், வாக்களிக்க முடியாமல் போன வேதனையுடனும் வாக்குப்பதிவு மையத்திலிருந்து வெளியேறினார். `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! | name in the dead voters list ramanathapuram woman failed to cast her vote - Vikatan
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.