Jump to content

அ.தி.மு.க நடத்தும் அடடே உண்ணா விரதம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அ.தி.மு.க நடத்தும் அடடே உண்ணா விரதம்!

சென்னை : அதிமுக நடத்தும் உண்ணா விரத போராட்டத்தில் கட்சியினர் இடையிடையே சாப்பாடு, நொறுக்குத் தீனி சாப்பிடுவதாக குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது. மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து அதிமுக அரசு உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறது. மாவட்ட தலைநகரங்களில் கட்சி நிர்வாகிகள் காலையில் இருந்து உண்ணாவிரதம் இருக்கிறார்கள். சென்னையில் அதிமுக போராட்டத்தை முதல்வர், துணை முதல்வர் தொடங்கி வைத்தார்கள். தற்போது இந்த போராட்டம்தான் பெரிய அளவில் சர்ச்சையில் சிக்கி இருக்கிறது.

இந்த உணர்ச்சிகரமான போராட்டத்தை அதிமுக கொண்டாட்டம் போல கொண்டாடி வருகிறது. பல மாவட்டங்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் களைகட்டி வருகிறது. முக்கியமாக பழைய எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பாடல்கள் இதில் ஒலிபரப்பப்பட்டு, அதற்கு தொண்டர்கள் நடனமாடி வருகிறார்கள்.

அதே சமயம் அதிமுகவினர் இடையிடையே நொறுக்குத் தீனிகளை சாப்பிட்டு வருகிறார்கள். கடலைமிட்டாய், சிப்ஸ், சாக்லேட், சமோசா, வடை என நிறைய தின்பண்டங்கள் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் சாப்பிடுவதை சமூக வலைதளத்தில் பலர் கலாய்த்து வருகிறார்கள்.

அதே சமயத்தில் புதுக்கோட்டையில் வேறு மாதிரி உண்ணாவிரத(!) போராட்டம் செய்து இருக்கிறார்கள். அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தின் இடையில் மதிய உணவு இடைவெளி கேட்டு வெளியே சென்று இருக்கிறார்கள். இந்த சம்பவம் அங்கே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

அதே சமயத்தில் இந்த உண்ணா விரத போராட்டம் காலையிலேயே பெரிய பிரச்னையை உருவாக்கியது. அதிமுக கட்சியினர் 10 மணிக்கு மேல்தான் பல இடங்களில் போராட்டம் தொடங்கினர். இதனால் காலை உணவை சாப்பிட்டுவிட்டு உண்ணா விரத போராட்டத்திற்கு கட்சியினர் வந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

tamil-nadu-cm-edappadi-k-palaniswami-dep

admk-hunger-strike-1522751990.jpg

xadmk-hunger-strike22323-1522751973.jpg.

admk-hunger-strike2233-1522751965.jpg

 

ஒன் இந்தியா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைவிட கருணாநிதியின் உண்ணாவிரதம் பரவாயில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

tamil-nadu-cm-edappadi-k-palaniswami-dep

வேட்டி மடிப்பு குலைக்காத மாணிக்கங்கள்.
இதெல்லாம் எப்படி சாத்தியமாகின்றது???????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

வேட்டி மடிப்பு குலைக்காத மாணிக்கங்கள்.
இதெல்லாம் எப்படி சாத்தியமாகின்றது???????

தமிழ்நாட்டில் ஒவ்வொன்றுக்கும் விலை இருக்கிறது..

சிறிது 'நரித்தனம்' இருந்தால் எளிதில் மக்களை திசைதிருப்பி விலைக்கு வாங்கிடலாம்.. அவ்வளவு 'பே சனங்கள்' திரியுதுகள்..!

இங்கே தண்ணீர் உரிமைக்காக தமிழகம் அல்லாடுது..!

ஓட்டுக்கும் இலவசங்களுக்கும் விலைபோகும் பொதுசனங்கள் ஒருபுறம், மற்றொரு பக்கம் இளசுகள், ஐ.பி.எல். க்கு 'டிக்கட் வாங்க' க்யூவில் அடிபடுதுகள்..!!

ஏன் மற்ற நாட்டுக்காரன் ஏறி மேய மாட்டான்..? :unsure:

Link to comment
Share on other sites

11 minutes ago, ராசவன்னியன் said:

தமிழ்நாட்டில் ஒவ்வொன்றுக்கும் விலை இருக்கிறது..

சிறிது 'நரித்தனம்' இருந்தால் எளிதில் மக்களை திசைதிருப்பி விலைக்கு வாங்கிடலாம்.. அவ்வளவு 'பே சனங்கள்' திரியுதுகள்..!

இங்கே தண்ணீர் உரிமைக்காக தமிழகம் அல்லாடுது..!

ஓட்டுக்கும் இலவசங்களுக்கும் விலைபோகும் பொதுசனங்கள் ஒருபுறம், மற்றொரு பக்கம் இளசுகள், ஐ.பி.எல். க்கு 'டிக்கட் வாங்க' க்யூவில் அடிபடுதுகள்..!!

ஏன் மற்ற நாட்டுக்காரன் ஏறி மேய மாட்டான்..? :unsure:

தமிழக இளசுகள் பறவாயில்லை.  ஈழத்து இளசுளில் சில, தங்கள் இனத்தினை, ஒரு இலட்சம் பேர்களைக் கொன்று அழித்தவர்களின் அணியை ஆதரிக்க  சிங்கக் கொடிகளுடன், சிங்கக்கொடி போட்ட டில்மா ஆடைகளை அணிந்து   சென்று இலண்டன் லோட்சிலும், ஓவலிலும், அவுஸ்திரெலியா எஸ் எஸ் சியிலும், எம் சி சி களிலும் முன்பாக நுளைவுச் சீட்டுக்கு அழைகிறார்களே.   ஈழத்துக்காக தன்னுடயுரைத் தியாகம் செய்தவன் முத்துக்குமார் என்ற இளைஞன். ஈழத்துக்காக மெரினாவில் கூடியவர்களும் பல தமிழகத்து இளைஞர்கள். 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.