Jump to content

`ஜெயலலிதா எம்பாமிங் படிவத்தில் கையொப்பமிட்டது கார்த்திகேயனா?' - சசிகலாவை நெருக்கும் ஆறுமுகசாமி ஆணையம்


Recommended Posts

`ஜெயலலிதா எம்பாமிங் படிவத்தில் கையொப்பமிட்டது கார்த்திகேயனா?' - சசிகலாவை நெருக்கும் ஆறுமுகசாமி ஆணையம்

 
 

ஜெயலலிதா மரணம்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணைக் கமிஷன், 130 நாள்களைக் கடந்துவிட்டது. விசாரணை, குறுக்குவிசாரணை எனத் தீவிரமாக இயங்கினாலும், ஜெயலலிதா மரணம் தொடர்பான மர்மங்கள் இன்னும் விலகவில்லை. `இறுதி நாள்களில் என்ன நடந்தது என்ற முடிவுக்கு கமிஷன் வந்துவிட்டது. சசிகலாவுக்கு எதிரான விஷயங்கள் இதில் ஏராளம் அடங்கியிருக்கின்றன' என்கின்றனர் ஆணைய வட்டாரத்தில். 

 

முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணத்தில் உண்மையைக் கண்டறிவதற்காக, ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. கடந்த நவம்பர் 22-ம் தேதியிலிருந்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. `ஜெயலலிதா மரணம் குறித்து ஏதாவது தகவல் இருந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் அதுகுறித்த விவரத்தை பிரமாணப் பத்திரமாகவோ அல்லது புகார் மனுவாகவோ ஆணையத்தில் தாக்கல் செய்யலாம்' என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து, தி.மு.க பிரமுகர் டாக்டர்.சரவணன், ஜெ.தீபா, மாதவன், தீபக் உள்பட 70 பேர் நேரடியாகவும் தபால் மூலமாகவும் பிரமாணப் பத்திரத்தை அளித்தனர். சசிகலா உறவினர்களான மருத்துவர் சிவக்குமார், விவேக் ஜெயராமன், கிருஷ்ணபிரியா, கார்டன் உதவியாளர்கள் ராஜம்மாள், கார்த்திகேயன், கார் ஓட்டுநர் அய்யப்பன் ஆகியோருக்கு ஆணையத்திலிருந்து சம்மன் அனுப்பப்பட்டது. அவர்களும் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர். மருத்துவ சிகிச்சை தொடர்பான ஆவணங்களை அப்போலோ நிர்வாகமும் அளித்தது. அதேநேரம், ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா தரப்பு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின் சில பகுதிகள் வெளியாகின. இதனால் அதிர்ந்து போன விசாரணை ஆணையம், `சசிகலா வாக்குமூலம் தொடர்பாக வெளியான தகவல்கள் 70 சதவிகிதம் உண்மையில்லை. வெளியான தகவல்கள் எதுவும் சசிகலா தாக்கல் செய்த பிராமணப் பத்திரத்தில் இல்லை. செப்டம்பர் 27-ம் தேதி காவிரி பற்றி ஜெயலலிதா, ஆலோசனை நடத்திய விவரமும் சசிகலா வாக்குமூலத்தில் இல்லை' எனத் தெரிவித்தது. 

ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி

இந்நிலையில், விசாரணை ஆணையத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து நம்மிடம் விவரித்த ஆணையத்தின் முக்கிய அதிகாரி ஒருவர், `` 130 நாள்களாக நடந்து வந்த விசாரணையில் பல உண்மைகள் தெரியவந்துள்ளன. ஒரு மாநில முதல்வருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்களில் வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்படவில்லை. பல விஷயங்களை மூடி மறைக்கும் வேலைகள் நடந்துள்ளன. டிசம்பர் மாதம் 4-ம் தேதி ஜெயலலிதாவுக்கு இதய முடக்கம் வருவதற்கான காரணங்களையும் மருத்துவரீதியாக ஆணையம் ஆராய்ந்து வருகிறது. அன்று காலை 6.30 மணியளவில் ஜெயலலிதாவுக்கு காபி கொடுத்திருக்கிறார்கள். அதன்பிறகு, வாய்வழியாக எந்த உணவுகளும் அவருக்கு வழங்கப்படவில்லை.

சசிகலாஅவருடைய ரத்தத்தில் பொட்டாசியம் அளவு அதிகரித்ததுதான் மரணத்துக்குக் காரணம் என்கிறார்கள். அதுகுறித்துத் தீவிர விசாரணை நடந்து வருகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய காலகட்டங்களில், அவருக்கு அளவுக்கு அதிகமான ஸ்டீராய்டுகள் (ஊக்க மருந்து) கொடுக்கப்பட்டுள்ளன. இதைப் பற்றி சரியான விளக்கத்தை மருத்துவர் சிவக்குமார் தெரிவிக்கவில்லை. முதல்வரின் உடல்நிலையைக் கண்காணிக்க ஐந்து அரசு மருத்துவர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவரையும் மருத்துவமனைக்குள் அப்போலோ நிர்வாகம் அனுமதிக்கவில்லை. அப்போலோவின் 27 சிசிடிவி கேமராக்களும் ஏன் அணைத்து வைக்கப்பட்டன என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது" என விவரித்தவர், 

`` ஜெயலலிதா மரணமடைந்த பிறகு, மரணத்துக்கான காரணத்தைக் கண்டறியும் கிளினிக்கல் அட்டாப்சி செய்யப்படவில்லை. அவரது மரணத்துக்கான காரணங்களை மறைக்கும் வேலைகள் நடந்துவந்துள்ளன. அவர் இறந்த பிறகு, எம்பாமிங் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ரத்தச் சம்பந்தமுள்ள உறவினர்களின் கையொப்பம் அவசியம். இந்தக் கையொப்பத்தை யார் போட்டார்கள் எனப் பார்த்தால் அதிர்ச்சியே மிஞ்சியது. கார்டனில் சசிகலாவுக்கு உதவியாளராக இருந்த கார்த்திகேயன்தான் இந்தக் கையொப்பத்தைப் போட்டிருக்கிறார். இந்தச் சட்டவிரோதக் காரியத்துக்கு அப்போலோ மருத்துவமனையும் துணைபோயுள்ளது.

கார்த்திகேயனின் பின்புலத்தையும் தீவிரமாக விசாரித்தோம். இவர் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்தவர். ஜெயலலிதாவின் உதவியாளராக பூங்குன்றனும் சசிகலாவின் உதவியாளராக கார்த்திகேயனும் இருந்துள்ளனர். இடையில் சசிகலாவோடு மனஸ்தாபம் ஏற்பட்டு, கார்டன் பணியிலிருந்து விலகிவிட்டார். நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு அவரை சசிகலா அழைத்து வந்திருக்கிறார். இந்த இடைப்பட்ட காலத்தில், திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் அவர் ஆசிரியராகவும் வேலை பார்த்திருக்கிறார். எம்பாமிங் நடவடிக்கையில் ஏராளமான சந்தேகங்கள் முளைத்துள்ளன. அவரது மரணத்துக்கான காரணத்தை யாரும் கண்டறிந்துவிடக் கூடாது என்ற நோக்கத்திலேயே எம்பாமிங் பணிகள் நடந்துள்ளன. மருத்துவச் சிகிச்சையின் அனைத்து மர்மங்களும் விலகத் தொடங்கியிருக்கின்றன. விரைவில் அனைத்து உண்மைகளையும் அரசிடம் சமர்ப்பிக்க இருக்கிறார் ஆறுமுகசாமி" என்றார் விரிவாக. 

https://www.vikatan.com/news/tamilnadu/121150-did-karthikeyan-sign-in-jayas-embalming-sasikala-again-in-trouble.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.