Jump to content

'டமில்' நாட்ல என்னா சத்தம்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

டமில் நாட்ல என்னா சத்தம்..? vil2_deguiseh.gif

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்து தொடரும் நிலையில், தில்லி உச்சநீதிமன்ற நீதிபதி திரு.தீபக் மிஸ்ரா அவர்கள், தமிழக அரசு வழக்கறிஞரை அழைத்து, "டமில் நாட்ல என்ன நடக்கிறது, ஏனிந்த சத்தம்? எல்லாம் 9ந் திகதி வழக்கு விசாரணைக்கு வருகிறது, தமிழ்நாட்டிற்கு நிச்சயம் தண்ணீர் வரும்" எனக் கூறியதாக செய்தி வெளியானது.

அச்செய்தியை தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் தினமலர் என்ற ஊடகம், தமிழர்களை நக்கலடிக்கும் விதமாக கடைகளில் விற்கும் தினசரி விளம்பர தாள்களில் தலைப்புச் செய்தியாக அச்சடித்து தனது குதர்க்க ஆரிய புத்தியை வெளியிட்டுள்ளது.

அதைக் கண்டு வெகுண்டெழுந்த சில தமிழர்கள், தினமலர் அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு, தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்..

அவற்றின் சில உரையாடல்கள் ஒலியாக..இங்கே..! :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டு  மரம், கவிழ்ந்து.....  விட்டதா? 
போடுறா..... வெடியை. ஆடுறாரா.....  டான்ஸை..:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியர் திமுக காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சி செய்த போது ஏன் காவேரிப் பிரச்சனை தீர்க்கப்படவில்லை?

எப்படி உரையாடல்களை பதிவு செய்தனர்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது நெருங்கிய நண்பன் ஒருவன்....தமிழ்நாட்டில் தனது பொறியியல் படிப்பை முடித்தான்!

அவன் 'தினமலர்' பத்திரிகையை..எப்போதும்...தின மலம் என்று தான் அழைப்பதை அவதானித்துள்ளேன்!

இதனை ஏன்...தமிழ்நாட்டுத் தமிழர்கள் புரிந்து கொள்வதில்லை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

வன்னியர் திமுக காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சி செய்த போது ஏன் காவேரிப் பிரச்சனை தீர்க்கப்படவில்லை?

எப்படி உரையாடல்களை பதிவு செய்தனர்?

முக்கியமான தமிழர் விடயங்களில் தி.மு.க நிச்சயம் யோக்கியம் இல்லை.. இந்தி எதிர்ப்பு போராட்டமும் அதன் வெற்றியுமே இன்றளவிற்கு அவர்களின் அரசியல் மூலதனம்..

இந்த உரையாடல் குறூப்பாக திட்டமிட்டு ஊடக அலுவலகத்தை அழைத்து பதிவு செய்து அவற்றை ஒன்றிணைத்து வெளியிட்டுருக்கலாம்.. அவற்றின் உண்மைதன்மை அறிய இயலாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புங்கையூரன் said:

எனது நெருங்கிய நண்பன் ஒருவன்....தமிழ்நாட்டில் தனது பொறியியல் படிப்பை முடித்தான்!

அவன் 'தினமலர்' பத்திரிகையை..எப்போதும்...'தின மலம்' என்று தான் அழைப்பதை அவதானித்துள்ளேன்!

இதனை ஏன்...தமிழ்நாட்டுத் தமிழர்கள் புரிந்து கொள்வதில்லை?

நாங்களும் 'தினமலம்' என்றே பலரும் ஒருத்தருக்குள் அழைத்துக்கொள்வது.. பொதுவெளியில் நாகரீகம் கருதி அப்படி சொல்வதில்லை..!

பாமர மக்களுக்கு அரசியல் முதற்கொண்டு மிக எளிமையான மொழி(?)யில் நாட்டு நடப்புகளை கவர்ச்சியாக வெளியிடுவதில் தினத்தந்தி ஃபார்முலாவை அப்படியே காப்பியடித்து காசு பார்ப்பது இந்த தினமலரின் வியாபார உத்தி.

'பலே ஆசாமி, படபடவென்று பேசினார்.. டமாலென குதித்தார், வலைவீச்சு, பாலியல் வல்லுறவு, கில்லாடி' போன்ற பதங்களை செய்திகளில் மிக அதிகம் பாவிப்பது தினத்தந்தியும், தினமலரும் தான்.

செய்திகளில் கொஞ்சம் 'தமிங்லிஷை' கலந்து அப்பாவி மத்தியத்தர தமிழர்களை ஈர்ப்பது விகடனின் வியாபார உத்தி..!

உதாரணமாக, 'பேரிக்காட், கான்பிடன்ஷியல் நோட், விசிட், ஃப்லை செய்தார், வொர்க்கவுட் ஆகவில்லை..' இன்னபிற பதங்கள்..!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

நாங்களும் 'தினமலம்' என்றே பலரும் ஒருத்தருக்குள் அழைத்துக்கொள்வது.. பொதுவெளியில் நாகரீகம் கருதி அப்படி சொல்வதில்லை..!

பாமர மக்களுக்கு அரசியல் முதற்கொண்டு மிக எளிமையான மொழி(?)யில் நாட்டு நடப்புகளை கவர்ச்சியாக வெளியிடுவதில் தினத்தந்தி ஃபார்முலாவை அப்படியே காப்பியடித்து காசு பார்ப்பது இந்த தினமலரின் வியாபார உத்தி.

'பலே ஆசாமி, படபடவென்று பேசினார்.. டமாலென குதித்தார், வலைவீச்சு, பாலியல் வல்லுறவு, கில்லாடி' போன்ற பதங்களை செய்திகளில் மிக அதிகம் பாவிப்பது தினத்தந்தியும், தினமலரும் தான்.

செய்திகளில் கொஞ்சம் 'தமிங்லிஷை' கலந்து அப்பாவி மத்தியத்தர தமிழர்களை ஈர்ப்பது விகடனின் வியாபார உத்தி..!

உதாரணமாக, 'பேரிக்காட், கான்பிடன்ஷியல் நோட், விசிட், ஃப்லை செய்தார், வொர்க்கவுட் ஆகவில்லை..' இன்னபிற பதங்கள்..!!

நன்றி...வன்னியன்!

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.