Jump to content

எங்கே அவன் தேடுதே சனம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே அவன் தேடுதே சனம்

 அவரை எல்லோரும் நாட்டாமை என்றுதான் அழைப்பார்கள். மற்றவர்கள் அவரை நாட்டாமை என்று அழைப்பதில் அவருக்கு நிறைந்த மகிழ்ச்சி. கலியாண வீடா? சாமத்தியச் சடங்கா? பிறந்தநாள் விழாவா? இல்லை செத்த வீடா? எங்கள் நகரத்தில் தமிழர்களுடைய எந்த நிகழ்வானாலும் நாட்டாமையே பிரதம விருந்தினர்.

 புலம் பெயர்ந்து யேர்மனிக்கு வந்த காலத்தில் வேலை செய்வதற்கான அனுமதி எங்களுக்குக் கிடையாது. அப்படியான நிலையிலேயே நாட்டாமை, பூ விற்றுக் காசு சேர்த்தவர். பூ விற்பவர் என்பதால் அவரது பெயரோடுபூஎன்பது  அடைமொழியாயிற்று. அதாவதுபூ சபாஎன்றாயிற்று. சேர்த்த பணம், அதனால் வந்த அங்கீகாரம் அதோடு இணைந்த ஆணவம் எல்லாம் சேர்ந்ததால் காலம் செல்ல அவர் நாட்டாமை ஆகிப்போனார்.

 அதெப்படி பூ வித்து காசு சேர்க்கலாம் என்று நினைப்பீர்கள். சொல்லி விடுகிறேன். இந்தப் பூ விற்பனையை முதலில் அறிமுகப் படுத்தியவர்கள் புலம் பெயர்ந்து வந்த பாகிஸ்தானியர்கள். அவர்களிடம் இருந்து கற்றுக் கொண்டவர்கள் நம்மவர்கள். மாலையில் ஆறு மணிக்குத் தொடங்கும் பூ விற்பனை நள்ளிரவில் முடிவடையும். ரோஜாப் பூக்களோடு ரெஸ்ரோறண்ட் உரிமையாளரிடம் போய் உள்ளே போக அனுமதி பெற வேண்டும். எல்லா ரெஸ்ரோறண்ட் உரிமையாளர்களும் உள்ளே செல்ல அனுமதிப்பார்கள் என்றில்லை. சில உரிமையாளர்கள்இந்தப் பக்கம் வரக்கூடாதுஎன்று துரத்தியும் விடுவார்கள்

 ரெஸ்ரோறண்ட்டில்  சோடியாக அமர்ந்து உணவருந்திக் கொண்டிருப்பவர்களை அணுகி, முகத்தைப்  பரிதாபமாக வைத்துக் கொண்டு அதே நேரம் சிறு புன்னகையை உதட்டில் தவள விட்டபடி அவர்களிடம் பூக்களை நீட்ட வேண்டும். அப்படி பூக்களை நீட்டும் போது  „Gruss  Gott“  (கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்) என்று அன்போடு சொல்லவும் வேண்டும். உதட்டின் சிரிப்பிலும், உதிரும் வார்த்தையிலும், நிற்கும் பரிதாப நிலை கண்டும் உணவருந்திக் கொண்டிருக்கும் ஆண் பூவை வாங்கிக் கொண்டால் காசு பார்க்கலாம். பிறகு அந்தப் பூ ஆண் இடம் இருந்து பூவைக்கு கைமாறும். ஆணின் மனது மகிழ்வாக இருந்தால் அல்லது பெண்ணுக்கு விலாசம் காட்டும்மூட்டில் அவன்  இருந்தால் பூவுக்கு நோட்டாக பணம் வரும். அப்படியில்லாது அவன் மனது ஏனோதானோ என்றிருந்தால் அதிகபட்சம் இரண்டு மார்க்குகள்தான் ஒரு பூவுக்கான சில்லறையாகக்  கிடைக்கும்.

 பூக்களை மொத்தமாக கொள்வனவு செய்தால், ஒரு பூவின் விலை 25 பெனிக். அதையே பூந்தோட்டத்தில் போய் நேரடியாகப் பறித்துக் கொண்டால் 10 பெனிக். பாகிஸ்தானியர்கள் மொத்தமாக கொள்வனவு செய்தார்கள். நம்மவர்கள் ஒருபடி மேலே போய் தோட்டத்திலேயே பறித்துக் கொண்டார்கள். ஒரு கட்டத்தில் நாட்டாமை, பூக்களுக்கு ஏஜென்ட் ஆகி, தனக்கு தொழில் கற்றுத்தந்த பாகிஸ்தானியர்களுக்கும் மற்றவர்களுக்கும்  விநியோகம் செய்ய ஆரம்பித்து விட்டார். பூ வியாபாரத்தில் அவர் பல வியாபார உத்திகளைக் கற்றுக் கொண்டார்.

 992_C278_F-5_E6_A-46_A3-81_EC-_B074_D2_B

அங்கும் இங்கும் அலையாமல் இருந்த இடத்தில் இருந்து கொண்டே காசு பார்க்க முடிந்ததால் பணத்தை மேலும் பெருக்க சீட்டுப் பிடிக்க ஆரம்பித்து பிறகு வட்டிக்கு பணம் கொடுத்து வருவாயைப் பெருக்கி தன் உடலையும் பெருப்பித்துக் கொண்டார்.

 நாங்களும் சாதாரணமானவர்கள் கிடையாது. புத்தக வெளியீட்டு விழா என்றால் முதலில் நாங்கள் போய்ப் பார்ப்பது நாட்டாமையைத்தான். மேடையில் அவரது பெயரை அறிவித்து, முதல் பிரதியை அவரிடம் நீட்டினால் 500யூரோவை தட்டில் வைத்து விட்டு புத்தகத்தை எடுத்து, வஞ்சகமில்லாமல் போட்டோவுக்கும் சிரித்து, வாழ்த்தி விட்டும் போவார். ஆனால் 200 பேருக்கு குறைவான பார்வையாளர்கள் வரும் மேடைகளுக்கு அவர் வர விரும்புவதில்லை.

 அந்த நாட்டாமையைத்தான் கொஞ்சக்காலமாக நகரத்தில் காணக் கிடைக்கவில்லை. விசாரித்ததில் கிடைத்தது இதுதான்,

 சமீபத்தில் நாட்டில் இருந்து  புலம் பெயர்ந்து வந்த புதியவர்களுக்கு நாட்டாமைதான் எல்லாமே. தனக்குத் தெரிந்வர்கள் மூலம் அவர்களுக்கு வேலை எடுத்துக் கொடுப்பபதுகாசை வீணாக்காதீங்களடாஎன்று  அறிவுரை சொல்லி அவர்களை தன்னிடம் சீட்டுப் போட வைப்பது என்று அவரது பொதுநலம் ஏராளம். வந்த, வாங்கிய கடன்களை திருப்பிக் கொடுக்க அவர்களில் யாராவது சீட்டு எடுக்க முற்பட்டால்,  “உனக்கென்ன விசரே? இப்ப கனக்க கழிவு போகுது. கடைசித் துண்டு வரக்கை பாக்கலாம். இப்ப உனக்கு எவ்வளவு வேணும் சொல்லு. நான் தாறன்என்று பணத்தைக் கொடுத்து பிறகு அதற்கு வட்டியும்  வாங்கிக் கொள்வார்

 ஒரு தடவை, புதிதாக வந்த ரவி என்ற நபரின் மனைவிக்கு அடி வயிற்றில் இடைவிடாத நோ இருந்தது. அவர்களின் குடும்ப மருத்துவர், அவர்களை gynecology போய் பார்க்கும் படியும், யேர்மனிய மொழி தெரிந்த ஒருவரை கூட்டிக் கொண்டு போவது நல்லது எனவும் சொல்லி இருக்கிறார். தம்பதிகள் நேராக ஆபத்தாண்டவர் நாட்டாமையைப் போய்ப் பார்த்தார்கள்.

 “இதென்ன பெரிய விசயமே? ரெலிபோனிலையே விசயத்தைச் சொல்லி இருக்கலாம்தானே. இதைக் கேக்கிறதுக்கு மினக்கெட்டுட்ராம்எடுத்து வந்தனீங்களே. எப்ப எண்டு சொல்லுங்கோ நான் வாறன்நாட்டாமை உரிமை எடுத்துச் சொன்னார்.

 அந்த நாளும் வந்தது. ரவி தனது மனைவியுடன் மருத்துவரின் நிலையத்துக்கு நேரத்துக்குப் போய் காத்திருந்தான். சொன்ன நேரத்துக்கு நிமிடம் பிந்தாமல் நாட்டாமை வந்து சேர்ந்தார்

 “மூன்று பேரும் ஒண்டா உள்ளை போறது நல்லா இருக்காது. நீங்கள் கூட்டிக் கொண்டு போங்கோரவி ஒதுங்கிக் கொண்டான்.

 மருத்துவரிடம் உள்ளே போன நாட்டாமையும், அந்தப் பெண்ணும் சிறிது நேரம் கழித்து திரும்பி வந்தார்கள்.

 காத்திருந்த ரவியிடம்பிரச்சினை ஒண்டும் இல்லையடாப்பா. மருந்து விட்டிருக்கினம். பிள்ளை விளக்கமாகச் சொல்லுவாள்”  சொல்லிய நாட்டாமை விடைபெற்றுக் கொண்டார். ரவி மனைவியின் முகத்தைப் பார்த்தான். அவள் முகம் பொலிவிழந்திருந்தது.

 வீட்டுக்குப் போன பிறகுதான் நடந்தது என்னவென்பதை  ரவி அறிந்து கொண்டான். அவளது அடிவயிற்றில் நோ இருந்ததால் அவளை முழுமையாகச் சோதனை செய்ய வேண்டி இருந்தது. அதற்காக அவளை ஒரு அறைக்குள்  அழைத்துச் சென்று உடைகளைக் களைந்து பரிசோதித்திருக்கிறார்கள். நாட்டாமை அந்த அறைக்குள் போக வேண்டிய அவசியமில்லை. அவளின் கணவன்தான் நாட்டாமை என்று நினைத்து அவர்களும் கண்டு கொள்ளவில்லை. ஆனால் நாட்டாமை கண்கொட்டாமல் எல்லாவற்றையும் கண்டு கொண்டிருந்தார்.

மனைவி சொல்லச் சொல்ல ரவிக்கு தலைக்கு ஏறி விட்டது. மனைவியின் சகோதரர்களுக்கும், தனது சகோதரர்களுக்கும் போன் எடுத்துநாட்டாமை இப்பிடிச் செய்து போட்டான்என அழுதான்.

 வீடு புகுந்து அடித்தார்கள் என்று செய்திகள் வாசித்திருப்போமே அதுதான் அன்று நாட்டாமைக்கும் நடந்தது. விழுந்த அடி உதைகளை விட அவரது மனைவி உச்சரித்த வார்த்தைகள் மிகப் பலமான தாக்குதலாக அவருக்கு இருந்தது. வெளிக்காயங்களை விட உள் காயங்கள் அவருக்கு அதிகம். வைத்தியசாலைக்குப் போனால் கேள்விகள் கேட்டு மாட்டி பொலீஸ்வரை போய்விடலாம் என்ற பயத்தில் குடும்ப வைத்தியரிடம் போனார்.

 படி ஏறும் போது தடுக்கி விழுந்து விட்டேன் என்று வைத்தியரிடம் நாட்டாமை பொய் சொன்னார்

 “என்ன ஒவ்வொரு படியிலும் துள்ளித் துள்ளி விழுந்திருக்கிறீங்கள் போலை”  என்று வைத்தியர் கேட்டது காயங்களுக்குப் போட்ட மருந்தின் எரிச்சலைவிட  நாட்டாமைக்கு அதிகமாக இருந்தது.

 பிரபலமானவர்கள் சிரித்தாலே பெரிய செய்தியாக்கும் நாங்கள் நாட்டாமை விடயத்தை சாதாரணமாக விட்டுவிடுவோமா என்ன? நாட்டாமையின் நடமாட்டம் வீட்டுக்குள்ளேயே மட்டுப்படுத்தப் பட்டுவிட்டது.

 வெள்ளிக்கிழமைகளில் தங்கம் மின்ன கோயிலில் நிற்கும் நாட்டாமையைக் காணாமல் ஐயருக்கு அர்ச்சனை உச்சரிக்க நாக்கு ஒத்து வரவில்லை

 சனிக்கிழமைகளில்  சாமத்திய சடங்குகளில், பிறந்த நாட்களில் கூட்டமாக நின்று கதைத்துக் கொண்டிருக்கும் எங்களவர்களின் மத்தியில் நடுநாயகமாக இருக்கும் நாட்டாமையைக் காணக் கிடைக்கவில்லை.

 Audi காரில் வலம் வரும் நாட்டாமை தம்பதிகளின் தரிசனத்தை நகர்வீதி இழந்திருந்தது.

 இந்தச் சோக நிலைகளுக்கு  நடுவே சீட்டுக்கு காசு கட்டுபவர்கள்தான் முதலில் அந்தச் செய்தியை அவிட்டு விட்டார்கள். அதுநாட்டாமையைக் காணவில்லைஎன்ற செய்தி.

 மாதத்தில் கடைசி சனிக்கிழமைதான் சீட்டுக் கூறும் நாள்இந்தமுறை நாட்டாமை ஒருத்தருக்கும் முன்அறிவித்தல் தரவில்லை. சீட்டுக் கூறூம் நாள் போய்ப் பார்த்தால், நாட்டாமை வீட்டில் ஒருத்தரும் இல்லை.

 நாட்டாமை குடும்பமாக லண்டன் போனாராபரிஸ் போனாரா? இல்லை யேர்மனியிலேயே வேறொரு நகரத்துக்கு இடம் மாறிவிட்டாரா? தெரியவில்லை

 சீட்டை ஏற்கனவே எடுத்தவர்களும், வட்டிக்குப் பணம் வாங்கியவர்களும் நிறைந்த மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். “கழிவு நல்லாப் போகோணும்என்று  சீட்டின் கழிவை ஏற்றி, கட்டுக்காசை வெகுவாகக் குறைத்து கடைசிச் சீட்டெடுக்க காத்து நின்ற சிலர் மட்டும்எங்கே அவன் தேடுதே சனம்என்று கவலை கொண்டிருக்கிறார்கள்.

 

கவி அருணாசலம்

07.04.2018

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Kavi arunasalam said:

எங்கே அவன் தேடுதே சனம்

...

 நாட்டாமை குடும்பமாக லண்டன் போனாராபரிஸ் போனாரா? இல்லை யேர்மனியிலேயே வேறொரு நகரத்துக்கு இடம் மாறிவிட்டாரா? தெரியவில்லை

 சீட்டை ஏற்கனவே எடுத்தவர்களும், வட்டிக்குப் பணம் வாங்கியவர்களும் நிறைந்த மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். “கழிவு நல்லாப் போகோணும்என்று  சீட்டின் கழிவை ஏற்றி, கட்டுக்காசை வெகுவாகக் குறைத்து கடைசிச் சீட்டெடுக்க காத்து நின்ற சிலர் மட்டும்எங்கே அவன் தேடுதே சனம்என்று கவலை கொண்டிருக்கிறார்கள்.

போலீசுக்கு முறைப்பாடு கொடுத்தால், அக்காலத்தில் கடவுச்சீட்டு, வாகனப் பதிவு எண்கள் மூலம் நாட்டாமையை தேடிப் பிடித்துவிடலாமே..?
அதிலையும் 'கோக்கு மாக்கு' செய்யுமளவிற்கு ஜெர்மனியின் அரசு அலுவலகங்களில், ஊழல் இல்லையென எண்ணுகிறேன்..!

படத்தில், 'Thambi' signature is badly missing..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதையின்படி பார்த்தால் நாட்டாண்மையில் எந்த தவறும் இல்லையே?

வைத்தியரைப் பார்க்க போன மனைவி தான் கணவருக்கு மொங்கியிருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavi arunasalam said:

எங்கே அவன் தேடுதே சனம்.

 ...ஆனால் நாட்டாமை கண்கொட்டாமல் எல்லாவற்றையும் கண்டு கொண்டிருந்தார்.

 

13 minutes ago, ஈழப்பிரியன் said:

கதையின்படி பார்த்தால் நாட்டாண்மையில் எந்த தவறும் இல்லையே..?

நாட்டாமை, கள்ளன்.

பெரிய மனுசன் செய்யுற வேலையா இது..? Decency, மனசாட்சி வேணாம்..?? நொங்கெடுத்ததில் தப்பே இல்லை..!

ஆனால் ரவி மாதிரி 'பேக்கு'கள் ஏமாறுவதால்தான், கள்ளன்களுக்கு வாழ்க்கை!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kavi arunasalam said:

நாட்டாமை அந்த அறைக்குள் போகவேண்டிய அவசியமில்லை. அவளின் கணவன்தான் நாட்டாமை என்று நினைத்து அவர்களும் கண்டு கொள்ளவில்லை. ஆனால் நாட்டாமை கண்கொட்டாமல்எல்லாவற்றையும் கண்டு கொண்டிருந்தார்.

மனைவி சொல்லச் சொல்ல ரவிக்கு தலைக்கு ஏறி விட்டது. மனைவியின் சகோதரர்களுக்கும், தனது சகோதரர்களுக்கும் போன் எடுத்துநாட்டாமை இப்பிடிச் செய்து போட்டான்என அழுதான்.

நாட்டாண்மை  என்றால்.... எல்லா அறைக்குள்ளும்  போகவேண்டும் என்று, "பூ  சபா"  நினைத்து விட்டார் போலுள்ளது. :rolleyes:

அவரின் கஷ்டகாலம்... ரவிக்கும், அவரின் மனைவிக்கும் அதிக சகோதரங்கள் இருந்து... மொத்தி எடுத்து விட்டார்கள். :grin:

இவ்வளவு நடந்த பிறகு.... நாட்டாண்மை  எப்படி வெளியில் தலை காட்டுவது? 
சனம்... காறித் துப்பும், என்ற பயம்  இருக்கும் தானே.....  :D:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ராசவன்னியன் said:

போலீசுக்கு முறைப்பாடு கொடுத்தால், அக்காலத்தில் கடவுச்சீட்டு, வாகனப் பதிவு எண்கள் மூலம் நாட்டாமையை தேடிப் பிடித்துவிடலாமே..?
அதிலையும் 'கோக்கு மாக்கு' செய்யுமளவிற்கு ஜெர்மனியின் அரசு அலுவலகங்களில், ஊழல் இல்லையென எண்ணுகிறேன்..!

படத்தில், 'Thambi' signature is badly missing..! :)

ராசவன்னியன்,

யேர்மனியில் ஒருவர் வாழும் இடம் பற்றிய விபரங்கள் பதிவில் இருக்க வேண்டும் என்பது நடைமுறை. ஆனால் ஒருவரைப் பற்றிய தகவல்களை கேட்டவுடன்  மற்றவர்களுக்கு அரசு சுலபமாகத் தந்துவிடாது.

 சீட்டு, வட்டி என்பன அங்கீகரிக்கப்படாத, வருமான வரி செலுத்தாத  எங்களது உள்ளூர் வியாபாரங்கள். எழுத்து மூலமாக பணம் கொடுத்து வாங்காத தொழில். சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாது. ஒருவேளை ஏதாவது வழி இருந்தால் கூட. “நான் இப்போது திவால்என்று கையை விரித்தால் ஒன்றும் செய்ய இயலாது.

ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. அது, அடுத்த சீட்டுப் பிடிப்பாளர் வரும்வரை நம்மவர்கள் காத்திருப்பது.?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

கதையின்படி பார்த்தால் நாட்டாண்மையில் எந்த தவறும் இல்லையே?

வைத்தியரைப் பார்க்க போன மனைவி தான் கணவருக்கு மொங்கியிருக்க வேண்டும்.

ஈழப்பிரியன்,

gynecology இல் முதலில் பிரச்சனை என்னவென்று கேட்டு வைத்தியரின் அறையில் விசாரிப்பார்கள். அதன் பின்னரே ஒரு பிரத்தியேமான அறையில்  நோயாளியைப் பரிசோதிப்பார்கள். பரிசோதனையின் பிறகு திரும்ப வைத்தியரின்  அறைக்கு கூட்டி வந்து நோய் பற்றிய விபரங்களையும் நிவாரணங்களையும் சொல்வார்கள்.

நாட்டாமை அந்த பிரத்தியேக அறைக்கு போகாமல் இருந்திருக்கலாம். குறைந்த பட்சம் தான் ஒரு மொழி பெயர்ப்பாளர் என்றாவது சொல்லி இருக்கலாம்.

புதிதாக வந்தவர்களுக்கு மட்டுமல்ல முன்னர் வந்த சிலருக்குக்கூட எதெதற்கு என்னென்ன வைத்தியர் என்பதில் தெளிவில்லை. நாட்டில் ஒரு வைத்தியரே ஆஸ்பத்திரிகளில் எல்லாரோல்களையும் செய்து கொண்டிருப்பார்கள்

ரவி போன்றவர்களில் பிழையைச் சொல்வதை விடுத்து, முன்னவர்கள் தங்களுக்குத்  தெரிந்ததை பின்னர் வருபவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பது நல்லது.?

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டாண்மைக்கு... ஏன்  அடி  விழுந்ததென்று.... அவரின் மனைவிக்கு,  தெரியுமா?   :grin:
தெரிந்தால்... "கொசுறாக"   இன்னும்,  நாலு அடி  கிடைப்பது நிச்சயம். :D:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 09/04/2018 at 5:33 AM, தமிழ் சிறி said:

நாட்டாண்மைக்கு... ஏன்  அடி  விழுந்ததென்று.... அவரின் மனைவிக்கு,  தெரியுமா?   :grin:
தெரிந்தால்... "கொசுறாக"   இன்னும்,  நாலு அடி  கிடைப்பது நிச்சயம். 

தமிழ்சிறி,

வீடு புகுந்து அடிக்கும் போது சொல்லிச் சொல்லித்தான் அடித்தார்கள். அதை எல்லாம் நாட்டாமையின் மனைவியும் கேட்டார். அதனால்தான் இப்படிக் குறிப்பிட்டேன்.

விழுந்த அடி உதைகளை விட அவரது மனைவி உச்சரித்த வார்த்தைகள் மிகப் பலமான தாக்குதலாக அவருக்கு இருந்தது. வெளிக்காயங்களை விட உள் காயங்கள் அவருக்கு அதிகம்

மற்றும்படி நாலு அடி அல்லது உதை அவரது மனைவியிடமிருந்து கிடத்திருக்கலாம். அது உள்ளூர் சமாச்சாரம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் சீட்டால் நொந்து வெந்தவர்கள் பல பேர் 

உங்களிடம் நிறைய கதை கையிருப்பில் உள்ளது போலும் எடுத்து விடுங்கோ   .. காலத்துக்கு காலம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கூறும் விடயத்தில் தவறு இருக்கு கவி அண்ணா. யேர்மனியில் நான் பதினெட்டு ஆண்டுகள் இருந்திருக்கிறேன். பெண் ஆண் வைத்தியர்களைப் பார்த்திருக்கிறேன். கணவனே ஆனாலும் கணவனுக்கு முன்னால் மனைவியின் உடையை அவிழ்த்துவிட்டு வைத்தியர் பரிசோதிப்பதில்லை. கணவனை வெளியேதான் இருக்கச் சொல்வார்கள்.ஒன்றில் உங்களுக்குக் கதை கூறியவர்கள் அரைகுறையாகவோ அன்றி திரித்தோதான் கதையைக் கூறியுள்ளனர். அல்லது உண்மையிலேயே அப்படி நடந்தாலும் நல்ல மனநிலையில் உள்ள எந்தப் பெண்ணும் இன்னொரு ஆடவனின் முன்னே உடையை அவிழ்க்கும் போது மறுத்தோ அன்றி எதோ ஒருவகையில் தன எதிர்ப்பைக் காட்டித்தான் இருப்பார். அப்போது மருத்துவரே புரிந்துகொண்ட அந்த மனிதனை வெளியே அனுப்பி இருப்பார். ரவியின் மனைவி அவர் பார்த்து முடித்தபின் வெளியே வந்து கணவனுக்குக் கூறியது என்பது நம்பமுடியாத செய்தி.

அதுசரி நீங்களும் சீட்டுக் கட்டி ஏமாந்திட்டியளோ?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவி அருணாச்சலம்! ஒரு கதையில் பல விடயங்கள் சொல்லியிருக்கின்றீர்கள். tw_thumbsup:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நீங்கள் கூறும் விடயத்தில் தவறு இருக்கு கவி அண்ணா. யேர்மனியில் நான் பதினெட்டு ஆண்டுகள் இருந்திருக்கிறேன். பெண் ஆண் வைத்தியர்களைப் பார்த்திருக்கிறேன். கணவனே ஆனாலும் கணவனுக்கு முன்னால் மனைவியின் உடையை அவிழ்த்துவிட்டு வைத்தியர் பரிசோதிப்பதில்லை. கணவனை வெளியேதான் இருக்கச் சொல்வார்கள்.ஒன்றில் உங்களுக்குக் கதை கூறியவர்கள் அரைகுறையாகவோ அன்றி திரித்தோதான் கதையைக் கூறியுள்ளனர். அல்லது உண்மையிலேயே அப்படி நடந்தாலும் நல்ல மனநிலையில் உள்ள எந்தப் பெண்ணும் இன்னொரு ஆடவனின் முன்னே உடையை அவிழ்க்கும் போது மறுத்தோ அன்றி எதோ ஒருவகையில் தன எதிர்ப்பைக் காட்டித்தான் இருப்பார். அப்போது மருத்துவரே புரிந்துகொண்ட அந்த மனிதனை வெளியே அனுப்பி இருப்பார். ரவியின் மனைவி அவர் பார்த்து முடித்தபின் வெளியே வந்து கணவனுக்குக் கூறியது என்பது நம்பமுடியாத செய்தி.

அதுசரி நீங்களும் சீட்டுக் கட்டி ஏமாந்திட்டியளோ?????

இது 20/30 வருடங்களுக்கு முந்தைய கதையாக இருக்கலாம் என நினைக்கின்றேன். அன்றைய காலகட்டங்களில் இது மாதிரியான சம்பவங்கள் நிறைய நடந்தேறியுள்ளன.ஜேர்மனியில்  ஆரம்ப காலங்களில் மொழிப்பிரச்சனை புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு பாரிய பிரச்சனையாக இருந்தது.அந்தக்காலங்களில் மானப்பிரச்சனையை விட விசாப்பிரச்சனை பெரிதாக இருந்தது. தமிழருக்குள் ஆங்கிலம்/டொச் தெரிந்தவர்கள் கடவுளாக தெரிந்தார்கள்.

 பெண்  உடை மாற்றும் இடங்களில் ஒரு ஆண் இருப்பதை எந்த நாட்டிலும் அனுமதிக்க மாட்டார்கள். அது நீச்சல்தாடகத்திற்கு கணவன் மனைவியாக சென்றாலும் கூட...அங்கேயும் தனித்தனி அறைகள் தான்...

வைத்திய பரிசோதனை அறைகளில் நோயாளிக்கு  மொழிப்பிரச்சனை வருமாயின்... அவர் நிர்வாணமாக இருந்தாலும் மொழிபெயர்ப்பாளரை நிச்சயம் அழைப்பார்கள்.


ஒரு நாட்டில் பதினெட்டு வருடங்கள் வாழ்ந்தது பெரிதல்ல...வாழ்ந்த நாட்டில் உள்ள தமிழ்மக்களின் கஸ்டங்களை அறிந்து கொள்வதுதான் பெரிது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

நீங்கள் கூறும் விடயத்தில் தவறு இருக்கு கவி அண்ணா

 

 

மெசொபொத்தேமியா, ரவி கூறியதில் சரி இருக்கு.

பிரத்தியேக அறையில் கணவனுக்கு அனுமதி இருக்கிறது.

இன்னொரு ஆடவனின் முன்னே உடையை அவிழ்க்கும் போது மறுத்தோ அன்றி எதோ ஒருவகையில் தன எதிர்ப்பைக் காட்டித்தான் இருப்பார்என்று நீங்கள் குறிப்பிடுவது போன்று அல்ல. ஒரு அறையில் ஆடைகளைக் கலைந்துவிட்டு பரிசோதிக்கும் அறைக்கு வரவேண்டும். அங்கே கணவனும் இருக்கலாம் அவள் விரும்பினால் கணவனல்லாத இன்னுமொரு ஆடவனையும் துணைக்கு கூடிச் செல்லலாம். இதை மறுக்கும் சட்டம் ஏதும் யேர்மனியில் இல்லை.

அந்தப் பெண் அப்பாவியாக இருந்தால்  சொல்வதற்கு என்ன இருக்கிறது.

சமீபத்தில்  பெருமளவு இஸ்லாமியர்கள் யேர்மனிக்கு வந்திருக்கிறார்கள். அவர்களது மனைவிகள் பல்வைத்தியரிடம் பல்லைக் காட்டும் போதும் கைகட்டி அருகிலேயே இருக்கிறார்கள். அவர்களது மனைவிகள் gynecology இடம் போகும் போது எங்கே இருப்பார்கள்?

நம்புங்கள் இது ஒரு உண்மைச் சம்பவம்.

சுமேரியர், நான் சீட்டு விளையாடுவேன். கட்டுவதில்லை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

இது 20/30 வருடங்களுக்கு முந்தைய கதையாக இருக்கலாம் என நினைக்கின்றேன். 

குமாரசாமி, இது அதரப் பழசல்ல சிறிது காலத்துக்கு முந்தியது.

நீச்சல் தடாகத்தில்  உடை மாற்றுவது தனியாக இருக்கலாம். saunaவுக்குப் போனால் எப்படி இருப்பார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, குமாரசாமி said:

இது 20/30 வருடங்களுக்கு முந்தைய கதையாக இருக்கலாம் என நினைக்கின்றேன். அன்றைய காலகட்டங்களில் இது மாதிரியான சம்பவங்கள் நிறைய நடந்தேறியுள்ளன.ஜேர்மனியில்  ஆரம்ப காலங்களில் மொழிப்பிரச்சனை புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு பாரிய பிரச்சனையாக இருந்தது.அந்தக்காலங்களில் மானப்பிரச்சனையை விட விசாப்பிரச்சனை பெரிதாக இருந்தது. தமிழருக்குள் ஆங்கிலம்/டொச் தெரிந்தவர்கள் கடவுளாக தெரிந்தார்கள்.

 பெண்  உடை மாற்றும் இடங்களில் ஒரு ஆண் இருப்பதை எந்த நாட்டிலும் அனுமதிக்க மாட்டார்கள். அது நீச்சல்தாடகத்திற்கு கணவன் மனைவியாக சென்றாலும் கூட...அங்கேயும் தனித்தனி அறைகள் தான்...

வைத்திய பரிசோதனை அறைகளில் நோயாளிக்கு  மொழிப்பிரச்சனை வருமாயின்... அவர் நிர்வாணமாக இருந்தாலும் மொழிபெயர்ப்பாளரை நிச்சயம் அழைப்பார்கள்.


ஒரு நாட்டில் பதினெட்டு வருடங்கள் வாழ்ந்தது பெரிதல்ல...வாழ்ந்த நாட்டில் உள்ள தமிழ்மக்களின் கஸ்டங்களை அறிந்து கொள்வதுதான் பெரிது.

எழுந்தமானத்தில் நீங்கள் இப்படிக் கூறுவது தவறு குமாரசாமி. வைத்தியரிடம் செல்வதற்கும் விசாவுக்கும் என்ன தொடர்பு.????  அவர் நிர்வாணமாக இருந்தாலும் மொழிபெயர்ப்பாளரை அழைப்பார்கள். ஆனால் ஆணை அல்ல பெண்ணைத்தான் அழைப்பார்கள். வயிற்று நோவுக்கு வைத்தியரிடம் போனவர்களையே  மேலதிக சிகிச்சைக்காக இன்னொரு வைத்தியரிடம் அனுப்பும்போது ஏற்கனவே கொஞ்சமாவது விளங்கித்தானே இருக்கும் ரவிக்கும் மனைவிக்கும். அதுக்குப் பிறகும் தான் உள்ள போகாமல் வெளியில ரவி நிண்டால் அது அவரின் முட்டாள் தனமேயன்றி நாட்டாண்மையில் என்ன தவறு???
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, Kavi arunasalam said:

 

மெசொபொத்தேமியா, ரவி கூறியதில் சரி இருக்கு.

பிரத்தியேக அறையில் கணவனுக்கு அனுமதி இருக்கிறது.

இன்னொரு ஆடவனின் முன்னே உடையை அவிழ்க்கும் போது மறுத்தோ அன்றி எதோ ஒருவகையில் தன எதிர்ப்பைக் காட்டித்தான் இருப்பார்என்று நீங்கள் குறிப்பிடுவது போன்று அல்ல. ஒரு அறையில் ஆடைகளைக் கலைந்துவிட்டு பரிசோதிக்கும் அறைக்கு வரவேண்டும். அங்கே கணவனும் இருக்கலாம் அவள் விரும்பினால் கணவனல்லாத இன்னுமொரு ஆடவனையும் துணைக்கு கூடிச் செல்லலாம். இதை மறுக்கும் சட்டம் ஏதும் யேர்மனியில் இல்லை.

அந்தப் பெண் அப்பாவியாக இருந்தால்  சொல்வதற்கு என்ன இருக்கிறது.

சமீபத்தில்  பெருமளவு இஸ்லாமியர்கள் யேர்மனிக்கு வந்திருக்கிறார்கள். அவர்களது மனைவிகள் பல்வைத்தியரிடம் பல்லைக் காட்டும் போதும் கைகட்டி அருகிலேயே இருக்கிறார்கள். அவர்களது மனைவிகள் gynecology இடம் போகும் போது எங்கே இருப்பார்கள்?

நம்புங்கள் இது ஒரு உண்மைச் சம்பவம்.

சுமேரியர், நான் சீட்டு விளையாடுவேன். கட்டுவதில்லை?

யேர்மனியில் பெண் வைத்தியர்களிடம் செல்லும்  அனைவருக்கும் AOK விலிருந்து அறிவுறுதல்கள் அனுப்புவார்கள். அதில் ஆண் வைத்தியர்களிடம் பெண்கள் செல்லும்போது வைத்தியர் மேலாடையையும் கீழாடையையும் ஒருங்கே களற்ரும்படி கூறுவது குற்றம். அப்படிக் கூறுமிடத்து அந்த ஆண் வைத்தியருக்கெதிராக நீங்கள் முறைப்பாடு செய்ய முடியும் என்று. அதுவும் சட்டத்துள்த்தான் அடங்கும்.

போக ரவியின் மனைவியைப் பரிசோதித்தது ஆணா பெண்ணா என நீங்கள் குறிப்பிடவில்லை. அவர் ஆணாக இருந்தால் ரவி கோபம் கொண்டதில் எந்த நியாயமும் இல்லை. அங்கு பலரும் ஆண் வைத்தியர்களிடம் தான் சென்று மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதனை செய்து கொள்வது. மகப்பேறு நடக்கும்போது கூடப் பலருக்கு ஆண் மருத்துவர்கள் தான். அதை மட்டும் யாரும் குறை கூறுவதில்லை, தடுப்பதுமில்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வைத்தியரிடம் செல்வதற்கும் விசாவுக்கும் என்ன தொடர்பு.???? 

மன்னிக்கவும்.

கதாசிரியரே இது நேற்றைய பிரச்சனை எனும் போது இதற்குமேல் மூக்கை நுழைக்க விரும்பவில்லை.

இனியும் ஜேர்மனியைப்பற்றி விளக்கம் கொடுக்காதீர்கள். நாறிப்போவீர்கள்.

கதையும் கத்தரிக்காயும். 

Link to comment
Share on other sites

"யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்"ல் உங்களின் கதையை எழுதியிருந்தால் அதிகப்பேர் வாசித்திருப்பார்கள்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 08/04/2018 at 2:25 PM, Kavi arunasalam said:

ஆனால் நாட்டாமை கண்கொட்டாமல் எல்லாவற்றையும் கண்டு கொண்டிருந்தார்.

நாட்டாமை...ஊரை விட்டே ஓடிற அளவுக்கு....அப்படி  என்னத்தைத் தான் கண்டு பயந்திருப்பார்?

51cy9Mz1TTL.jpg

கதையும்...கதையின் நகர்வும்...அருமை, கவி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/04/2018 at 6:57 AM, கந்தப்பு said:

 

"யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்"ல் உங்களின் கதையை எழுதியிருந்தால் அதிகப்பேர் வாசித்திருப்பார்கள்

 

யாழ் 20 அகவை-சுய ஆக்கத்தில் 9 பத்திகள் ஏற்எகனவே  எழுதிவிட்டேன். அத்தோடு 30.03இல் குறிப்பிட்ட கால அவகாசம் முடிந்துவிட்டதால் முற்றத்துக்கு வந்துவிட்டேன். உங்களைப் போன்றவர்கள் தேடி வந்து வாசித்து அது பற்றி பதிவிடும் போதே நிறைவாக இருக்கிறது மனம். நன்றி கந்தப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18.4.2018 at 7:07 AM, புங்கையூரன் said:

நாட்டாமை...ஊரை விட்டே ஓடிற அளவுக்கு....அப்படி  என்னத்தைத் தான் கண்டு பயந்திருப்பார்?

51cy9Mz1TTL.jpg

கதையும்...கதையின் நகர்வும்...அருமை, கவி!

புங்கையூரானுக்கு.... கிளு கிளுப்பான.....  பதில் வேணும் போல கிடக்கு. tw_glasses:
நீங்கள் போடும் தூண்டிலில், சிக்கும் மீன்கள்... நாங்கள் அல்ல.  :grin:

ரவியின் சகோதரங்களும், அவரின் மனைவியின் சகோதரங்களும்,  கொடுத்த அடியை, பார்த்து... 
நாட்டாண்மை பயந்து... ஊரை காலி பண்ணி என்று தான் நினைக்கின்றேன்.  :D:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நாட்டாமை திட்டம்போட்டு ரவியின் மனைவியின் நிர்வாணத்தை ரசிக்கவில்லை. அந்தத் தருணத்தில் கனவானாக நடக்கவில்லை. அவ்வளவுதான்!

 அதற்காக நாட்டாமையை மொத்தி சீட்டுக் கட்டிய பலரின் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை சுருட்டப்பண்ணியது நியாயமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பிய நாடுகளில் gynaecologist ஆக இருப்பவர்கள் பெரும்பாலும் ஆண்களே.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/5/2018 at 8:21 AM, கிருபன் said:

நாட்டாமையை மொத்தி சீட்டுக் கட்டிய பலரின் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை சுருட்டப்பண்ணியது நியாயமா?

நியாயம் இல்லை கிருபன்

16 hours ago, MEERA said:

 

 ஐரோப்பிய நாடுகளில் gynaecologist ஆக இருப்பவர்கள் பெரும்பாலும் ஆண்களே.

 

நானும் அவதானித்திருக்கிறேன் மீரா. அவர்களைப் பிடித்து மொத்த எந்த கணவரும் வருவதில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.