Jump to content

ஆகாசத்தின் உத்தரவு


Recommended Posts

ஆகாசத்தின் உத்தரவு - சிறுகதை

நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு... இமையம், ஓவியங்கள்: பாலு

 

சிமென்ட் மேடையில் ஒரு குதிரையின் மீது கிழக்கு பார்த்த நிலையில் முனியசாமி மாதிரி கொடூரத் தோற்றத்தில் ஒரு சாமி உட்கார்ந்து இருந்தது. சாமி சிலைக்கு முன் எந்த அவசரமும் இல்லாமல் கருத்த நிறமுடைய ஓர் ஆள் கும்பிட்டுக் கொண்டிருந்தான். நடந்து வந்த களைப்பால் வழிந்த வியர்வை யைக்கூடத் துடைக்க வில்லை.

கீழே வைத்திருந்த பையில் இருந்து செய்தித்தாள் ஒன்றை எடுத்து, தரையில் விரித்துப்போட்டான். பையில் இருந்த பொரிகடலை பொட்டலத்தை எடுத்துப் பிரித்துவைத்தான். ஒரு சீப்பு வாழைப்பழத்தை எடுத்துவைத்து அதில் ஊதுவத்தியைச் செருகினான். குவாட்டர் பிராந்தி பாட்டில் இரண்டு, சிகரெட் டப்பி ஒன்றை எடுத்து அடுக்கினான். எலுமிச்சைப்பழம், கற்பூரம், தேங்காய், பூ, வெற்றிலைபாக்கு... என்று படையலுக்கு உரிய பொருள்களை எடுத்துவைத்தான். கற்பூரத்தை எடுத்து, சாமி குதிரையின் காலடியில் வைத்து ஏற்றினான். கற்பூர தீபத்தில் மூன்று முறை காட்டிவிட்டு தேங்காயை உடைத்தான்; ஊதுவத்தியைக் கொளுத்தினான். எலுமிச்சைப்பழத்தை எடுத்து, அருகில் இருந்த சூலத்தில் செருகி இரண்டு இரண்டாக நான்கு பழங்களைப் பிளந்தான். அதில் திருநீறு, குங்குமத்தைத் தடவிவைத்துவிட்டு நெடுஞ்சாண்கிடையாக விழுந்து கும்பிட்டான். எழுந்து எலுமிச்சைப்பழத் துண்டுகளை எடுத்துக் கும்பிட்டு, கண்களில் ஒற்றிக்கொண்டு நான்கு திசைகளிலும் விட்டெறிந்தான்.

பொரிகடலையை ஒரு பிடி அள்ளி, குதிரை மீது இருந்த சாமியின் பக்கம் விசிறினான். எஞ்சியதை நான்கு திசைகளிலும் தூவினான். பிராந்தி பாட்டிலில் ஒன்றைத் திறந்து தண்ணீர் தெளிப்பது மாதிரி சாமி மேடையைச் சுற்றிவந்து தெளித்தான். குதிரையின் மீதும் கொஞ்சம் தெளித்தான். நான்கு வாழைப்பழங்களை எடுத்து தோலை உரித்துவிட்டு, மாவு பிசைவது மாதிரி பிசைந்தான். நான்கு உருண்டைகளாக்கி நான்கு திசைகளிலும் விட்டெறிந்தான். குதிரையின் காலடியில் கொட்டிக்கிடந்த திருநீறு, குங்குமத்தை அள்ளி நெற்றி நிறையப் பூசிக்கொண்டு விழுந்து கும்பிட்டுவிட்டு எழுந்தான்.

p74c.jpg

நான்கு திசைகளிலும் பார்த்தான். ஏழு, எட்டு வன்னிமரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நின்றுகொண்டிருந்தன. ஒரு வேப்பமரம், கால் மைல், அரை மைல் தூரம் தள்ளி சவுக்குத் தோப்புகள், மக்காச்சோளக் காடுகள் இருந்தன. கோயிலைச் சுற்றி எதுவும் இல்லை. வெறும் கட்டாந்தரை, களர் நிலமாக இருந்தது. ஆடு-மாடுகள்கூடக் கண்ணில் படவில்லை. சாமியின் பக்கம் திரும்பிக் கும்பிட்டான். ரகசியம் மாதிரி முணுமுணுத்தான்.

''இன்னிக்கி மாசி மகம். தெப்பத் திருநா நடக்கிற எடத்துக்குத் தொழிலுக்குப் போவப்போறேன். அதான் ஒங்கிட்ட உத்தரவு கேக்க வந்தேன். நீ உத்தரவு குடுத்தாப் போறேன். இல்லைன்னா, திரும்பி வூட்டுக்குப் போறேன்!'' என்றபடி அவன் கோயிலைச் சுற்றிலும் பார்த்தான். ஆட்கள் நடமாட்டம் இல்லை. காக்கா-குருவிகள்கூட இல்லை.

காற்றின் அசைவு மட்டும்தான் இருந்தது என்பதைக் கவனித்தவன்... சாமியிடம் ரகசியம் மாதிரி சொன்னான், ''இன்னிக்குத் தொழிலுக்குப் போகவா... வாணாமா? உத்தரவு குடு. பல்லி வந்து எனக்குச் சகுனம் சொன்னாத்தான் போவேன். அதுவும் பீச்ச கை பக்கம் தாங்கல்ல சொல்லக் கூடாது. போற காரியம் விடியாது. சோத்து கை பக்கம் ஏவல்ல சொல்லணும். அப்பத்தான் போற காரியம் ஜெயிக்கும். புரியுதா? இன்னம் செத்தயில இருட்டிப்புடும். சட்டுனு உத்தரவு குடு'' என்று சொல்லிவிட்டு அந்த ஆள் தரையில் உட்கார்ந்தான்.

அவனுடைய பார்வை சிமென்ட் மேடை, குதிரை, சாமி சிலை... என்று அங்குலம் அங்குலமாக ஆராய்ந்தது. அதோடு தன்னைச் சுற்றிலும் பார்த்தான். பல்லியின் சத்தம் கேட்கிறதா என்று காதுகளைக் கூர்மையாகத் தீட்டி வைத்துக்கொண்டிருந்தான்.

ஐந்து, பத்து நிமிடங்கள் வரை உட்கார்ந்திருந்தான். தட்டான் பறக்கிற சத்தம்கூடக் கேட்கவில்லை. மேற்கில் பார்த்தான், சூரியன் சீக்கிரத்தில் மறைந்துவிடும் போல் இருந்தது. அவனுடைய முகம் கடுகடுவென்று மாறியது. சாமியிடம் கோபித்துக்கொண்டவன் மாதிரி சொன்னான், ''இங்கிருந்து நடந்து ரெண்டு மைலு தாண்டிப் போயித்தான் காரப் புடிக்கணும். அப்பறம் அங்க இருந்து அரை மணி நேரம். கார வுட்டு எறங்குனா தெப்பத் திருநா நடக்கிற எடத்துக்கு நடந்து போவணும். இங்கியே லேட்டாப் போனா, காரியம் ஆவுமா? கூட்டம் கலஞ்சிப்புடாதா? கூட்டம் கலஞ்சிப் புட்டா? நான் போயி அலஞ்சி, திரிஞ்சி வெறும் ஆளா திரும்பணுமா? ஏன் எதுக்கும் பதிலு சொல்லாம குந்தியிருக்க? 'காயா... பழமா?’னு சொல்லிடு. முடியாதுனா அப்பறம் எதுக்கு ஒம் மூஞ்சியில முழிக்கப்போறன்!'' - தரையில் இருந்து அந்த ஆள் எழுந்தான்.

சாமி மேடையைச் சுற்றி வந்தான். சுற்றும் முற்றும் பார்த்தான். தரை, சிமென்ட் மேடை, குதிரை, சாமி என்று எல்லா இடத்திலும் பார்த்தான். பல்லி இருக்கிற மாதிரியே தெரியவில்லை. சத்தம் வருகிறதா என்று கவனித்தான். சாமி கோயிலுக்கு வரும் வழியைப் பார்த்தான். ஆட்கள் யாரும் வரவில்லை. மேற்கில் பார்த்தான். இன்னும் சற்றைக்கெல்லாம் சூரியன் மறைந்துவிடும்போல் இருந்தது.

நேராக சாமியின் முன் வந்து கோபமாகக் கேட்டான், ''குவாட்டரு பாட்லு, சிகரெட், எலுமிச்சங்கா, பூ, பழம்னு ஒனக்கு வேண்டிய எல்லாத்தையும் கொண்டாந்து படையல் போட்டுட்டேன். எல்லா கருமாதியும் செஞ்சப் பின்னாலயும் எனக்கு ஏன் உத்தரவு குடுக்க மாட்டேங்கிற? கை நெறயப் பொருளு கெடைக்கணும்; கெடைக்கிறதுலதான் பாதியக் கொண்டாந்து ஒனக்கு சூலம், மணி, அங்கவஸ்திரம், கோழி காவு, குவாட்டரு பாட்லுனு கல்லு கருமாந்தரம் எடுக்கிறனே அப்பறம் என்ன? எனக்கு ஏன் உத்தரவு குடுக்காம லேட்டாக்கிற?

போன வெள்ளிக்கிழமை வேப்பூர் சந்தைக்குப் போனேன். பாவப்பட்ட சனியந்தான் மாட்டுச்சி. பாவப்பட்டதுனு நெனச்சா, நான் எப்புடிச் சோறு திங்கிறது? என் வவுறு மண்ணையாத் திங்கும்? மறுநாளு ஒனக்குப் படையல் போட்டனா... இல்லியா? நேரமாவறது ஒனக்குத் தெரியலியா?'' என்று கேட்ட அந்த ஆள், பல்லியின் சத்தம் கேட்கிறதா என்று கவனமாகக் கேட்டான்.

சலிப்பு மேலிட, ''சகுனத் தடங்கலோட போவக் கூடாதுனு ஒனக்குத் தெரியாதா?'' என்று கேட்டான்.

வேப்பமரத்துக்குப் போனான். சிறிது நேரம் நின்றுகொண்டிருந்தான். சகுனம் கிடைக்கவில்லை. வேப்பமரத்துக்கு வடக்கில் இருந்த வன்னிமரத்துக்குக் கீழே போய் நின்றுகொண்டிருந்தான். நேரம் போனது. ஆனால், அவன் நினைத்த காரியம் நடக்கவில்லை. வெறுப்போடு திரும்பி வந்து சாமிக்கு நேரெதிராக நின்றுகொண்டு கோபத்தோடு கேட்டான்.

''உத்தரவு குடுக்காட்டி போ. போனவாட்டிக்கும் மொதவாட்டி என்னா செஞ்ச? ஒரே ஒரு செயினுதான் அம்புட்டுச்சி. வெரலு மொத்தத்துல இருக்கேனு பார்த்தா, கடைசியில அது கவரிங். அதுக்குத்தான் அம்மாம் அடி... ஒதை. மயிரான்... நீயா அம்மாம் அடியும் ஒதையும் வாங்குன? கவரிங் நகைக்குத்தான் பெரிய கூட்டமாக் கூடி அடிச்சானுவ. நகைக்காரி வந்து 'கவரிங்’னு சொன்னதாலதான் உசுரோட உட்டானுவ. இல்லைன்னா போலீஸ், கோர்ட்டுனு ஒரு மாசம் ஜெயிலுக்குப் போயிருக்கணும்.

பெரிய கோயிலுக்கு உள்ளாரப் போவயிலதான் குண்டா இருக்கா, கிழவியா இருக்கானுதான் செயினை அறுத்தேன். அறியாப்புள்ளைவுளவிட அந்தக் கிழட்டு முண்டதான் அதிகமாச் சத்தம் போட்டா. 'செயினை அறுத்திட்டான். புடி... புடி’னு அவ போட்ட சத்தத்துலதான் வழியில இருந்த தேங்காக் கடைக்காரன் வளைச்சிப் புடிச்சிட்டான். 'ஓடியாங்க... ஓடியாங்க’னு கிழவி போட்ட சத்தத்துல கூட்டம் கூடிப்போச்சி. கதறக் கதற அடிச்சானுவ. பாவ-புண்ணியம் பார்க்கலை. சாமி கும்புட வந்த மொத்தக் கூட்டமும் கூடிப்போச்சி. ஆம்பள, பொம்பள எல்லாருந்தான் அடிச்சாங்க. காறி எம் மூஞ்சியிலயே துப்புனாங்க. தரும ஞாயம் பார்க்கலை!'' - அந்த ஆளுடைய கண்களில் இருந்து நீர் வழிந்தது.

கண்ணீரை, புறங்கையால் துடைத்துவிட்டு உள்ளடங்கின குரலில் சொன்னான், ''அன்னிக்கி வாங்கின அடியை நெனச்சா, இப்பியும் வலிக்குது. கூட்டத்தில் இருந்து என்னைக் காப்பாத்திவுட ஒன்னால முடியல. எங் காலுக்கு ஓடுறதுக்குத் தெம்பக் குடுக்க ஒன்னால முடியல. ஒண்ணும் செய்யாததுக்கு நீ எதுக்கு 'குலசாமி’னு இருக்கே? 'ஆகாச வீரன்’னு ஒனக்கு எந்த மயிராண்டி பேரு வெச்சான்? என்னைவிட ஓக்கியன் ஒலகத்துல யாருங்கிறமாரிதான் எல்லாரும் அடிச்சாங்க.

ஒலகத்துல எவன் ஓக்கியம்? 'பொய் சொன்னது இல்லை; பித்தலாட்டம் செஞ்சது இல்லை; அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்பட்டது இல்லை; தொட்டதும் இல்லை’னு சொல்ற ஓக்கியன் எவனும் இன்னும் பூமியில பொறக்கலை. நேரம் சரியில்லை. ஒன்னோட துணை எனக்கு இல்லை; ஒன்னோட அருளு இல்லை. அதான் அன்னிக்கி மாட்டிக்கிட்டேன்.

20 வயசுல காத்து மாரி ஓடுனேன். அப்ப முயலுகூட எங்கூடப் போட்டிபோட முடியாது. இப்ப ஓட முடியலை. வயசாயிடிச்சு. எங் காலுக்கு மின்னலா ஓடி மறையுற தெம்ப நீ குடுத்திருந்தா, நான் எதுக்கு மாட்டிக்கப்போறேன்? அம்மாம் அடியையும் ஒதையையும் வாங்கிக்கிட்டு ஒங்கிட்டத்தான் வந்து நிக்கிறேன். நீ உத்தரவு குடுக்க மாட்டேங்கிற. படையல வாங்கித் தின்னுப்புட்டு, எத்தனை தடவை என்னை அலையவெச்சி வெறுங்கையோட அனுப்பியிருக்க? அப்பல்லாம் ஒன்னையைத் திட்டுனனா? அன்னிக்கி பெரிய கோயில்ல நீதான் என்னை மாட்டிவுட்டுட்ட, மின்ன மாரி ஊராங்க அடியை என்னால தாங்க முடியுதா? நீ என்ன எனக்குப் பிறத்தியாளா... அந்நியமா? நீ எனக்குக் குலசாமி.

என்னை ஒனக்கே நல்லாத் தெரியும். திருநாவுக்குத் திருநா வந்து படையல் போடுற ஆளில்லை நானு. என்னோட மூணு புள்ளைங்களுக்கும் ஒன்னோட சந்நதியிலதான், மொட்டை போட்டேன்; காது குத்துனேன்; பேரும் வெச்சேன். எல்லாத்துக்கும் மேல எங்கம்மா ஒன்னோட பேரைத்தான எனக்கு 'ஆகாசம்’னு வெச்சா. பேரைச் சொன்னா ஊருல மட்டும் இல்லை, போலீஸ் ஸ்டேசன்ல, கோர்ட்டுல எல்லாரும் சிரிக்கிறாங்க. ஆனா, ஒன்னைப் பத்தி நான் எல்லார்கிட்டயும் பெருமையாத்தான் சொல்றேன். குத்தம் சொன்னனா? அதுக்கும் மேல எம் பெரிய மவனுக்கு ஒம் பேரைத்தான் 'ஆகாஷ்’னு வெச்சிருக்கேன். 'பிரமாதமான பேரு’னு சொல்றாங்க. அதுக்காச்சும் உத்தரவு குடுடா திருட்டுப்பயலே'' என்று சொன்ன அந்த ஆள், மடியில் இருந்த ஒரு பீடியை எடுத்துப் பற்றவைத்துக் குடித்துக்கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தான். சகுனம் கிடைக்கிறதா என்று கூர்மையாகக் கவனித்தான். அவன் கேட்டது கிடைக்காததால் வெறுப்புற்று எஞ்சியிருந்த ஒரு பாட்டில் பிராந்தியைத் திறந்து கையில் ஊற்றி குதிரையின் மீதும், சாமியின் மீதும் சுள்ளென்று தெளித்தான்.

கோபம் மேலிட, ''இப்பயாச்சும் ஒன் ஆக்ரோசம் அடங்கி உத்தரவக் குடுடா'' என்று கேட்டான். சுற்றும் முற்றும் பார்த்தான். பல்லி, கண்ணில் படவில்லை. வெறுப்படைந்துபோய் சொன்னான், ''இப்பத்தான் எல்லாம் பயலுவலும் ஒரம், பூச்சிமருந்துனு தெளிச்சி காட்டுல இருக்கிற பூச்சி, பொடுவ எல்லாத்தையும் கொன்னுப்புட்டானுவ. அப்பறம் எங்க இருந்து வரும் பல்லி?''

மேற்கில் பார்த்தான். சூரியன் மறைந்துவிட்டிருந்தது. லேசாக இருள் படர ஆரம்பித்திருந்தது தெரிந்தது. எப்போதையும்விட இப்போது அவனுக்குக் கோபம் கூடுதலாக வந்தது. வேகமாகக் கேட்டான், ''நேரமாவுறது ஒனக்குத் தெரியலியாடா?'' - கோபத்தில் மேடையைச் சுற்றிச் சுற்றி வந்தான். வெறுத்துப்போய் தரையில் உட்கார்ந்தான்.

சிறிது நேரம் தலையைக் கவிழ்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தவனுக்கு என்ன தோன்றியதோ வெடுக்கென்று தலையைத் தூக்கி 'நீயெல்லாம் சாமியா?’ என்பது மாதிரி பார்த்தான். பிறகு, சண்டைக்காரனிடம் கேட்பது மாதிரி சாமியிடம் கேட்டான், ''எனக்குச் சோதனை வெக்கிறியா? இத்தினி வருசமா இல்லாம இன்னிக்கி ஏன் எனக்கு உத்தரவு குடுக்க மாட்டேங்கிற? ஒன்னோட உத்தரவு இல்லாம என்னிக்காச்சும் திருடப் போயிருக்கனா? நீ திருட்டுக்குப் பேர்போன சாமிதானே? திடுதிப்புனு நீ திருந்திப்புட்டா, நான் என்னா செய்யுறது? கருமாதி... எனக்கு வேற தொழிலும் தெரியாதே. ஒங்கிட்ட நான் என்னா கேக்கிறேன்? என்னை எம்.எல்.ஏ. ஆக்கு, எம்.பி. ஆக்கு, மந்திரியாக்கு, பணக்காரனாக்குன்னா கேட்கிறேன்? திருடப்போற எடத்துல மாட்டக் கூடாதுனுதானே கேட்கிறேன். அது பெரிய குத்தமா?

p74b.jpgநான் திருடப்போறது மாடி வூடு கட்டவா? காரு, பங்களா வாங்கவா? நெலம் நீச்சு வாங்கவா? எம் பொண்டாட்டிக்கி வைரத்துல ஒட்டியாணம் செஞ்சி போடவா? கருமாதி... சோத்துக்குத்தானே செயினை அறுக்கப்போறேன். ஒரு நாளு போனா, ஒரு மாசம், ரெண்டு மாசம் பொழப்பு ஓடிப்புடும். கையில காசு இருக்கிறப்ப நான் திருடப் போறனா? எங்கப்பா, எங்கம்மா சம்பாரிச்சி வெச்சிருந்தா, நான் எதுக்கு சாமி சாட்சியா கட்டுன தாலியை அறுக்கப்போறேன்? பால் குடிக்கிற புள்ள இடுப்புல கெடக்கிற கொடிய அறுக்கப்போறேன்?''.

அப்போது, பல்லி கத்தியது மாதிரி அவனுக்குத் தோன்றியது. பேச்சை நிறுத்திவிட்டு சுற்றும் முற்றும் பார்த்தான். ஒரே நேரத்தில் பல்லி சகுனம் சொன்ன மாதிரியும் இருந்தது. சொல்லாத மாதிரியும் இருந்தது. சந்தேகத்தில் அசைவின்றி உட்கார்ந்திருந்து சத்தம் கேட்கிறதா என்று கவனித்தான். காற்றின் அசைவுகூட இல்லை. அவன் கடுப்பாகிவிட்டான். சாமியிடம் முறைப்பது மாதிரி சொன்னான், ''உத்தரவைக் குடு. முடியாதுனா வுடு. இங்க நிக்கிற சூலத்தை எல்லாம் புடுங்கிக்கிட்டுப் போயி பழைய இரும்புக் கடையில போட்டுட்டு அரிசி, பருப்பு வாங்கிப்புடுவேன். குலசாமியுமாச்சி... மசுருமாச்சினு போற ஆளு நானு... தெரியுமில்ல!'' என்று சொன்னவனின் குரலின் வேகம் குறைந்தது.

தனக்குத்தானே சொல்லிக்கொள்வது மாதிரி சொன்னான், ''இதென்ன பழைய காலமா? சோளக் கதிரை அறுக்கிறது, நெல்லு கதிரை அறுக்கிறது, பூசணிக்காய், பரங்கிக்காய் அறுக்கிறதுன்னு அறுத்தாந்து சோறு திங்கிறதுக்கு. இப்பத்தான் எல்லாப் பயளுவுலும் பருத்திய ஊணுறான். சவுக்க நட்டுப்புடுறான். மிஞ்சினா கருப்பங்கயி. அதுவும் இல்லன்னா பிளாட்டா போட்டுடுறான். அப்பறம் எங்கேயிருந்து கதிரை அறுத்தாந்து சோறு திங்கறது? கோழி திருடுறது, ஆடு-மாடு திருடுறது, மோட்டார் கொட்டாயில் கரண்டு கம்பியைத் திருடுறதுனு எல்லாம் செஞ்சி பாத்தாச்சு. அதெல்லாம் ஒரு வார சோத்துக்குக்கூடத் தேற மாட்டேங்கிது. அதோடவும் உள்ளூர் பயலுவோ அடையாளம் கண்டுபுடிச்சி வந்துடுறானுவ. திருடன்கிற பேரோட உள்ளூர்ல குடும்பம் நடத்த முடியுமா?

இப்பல்லாம் எவன் ஆடு-மாடு வளக்குறான்? திருடறதுக்கு. ஊர்நாட்டுல கோழிகூட இல்லை. ஊருக்கு ஊரு பிராய்லர் கோழிக் கடையைப் போட்டுட்டானுவோ. காலம் மாறி, ஊரு நாடெல்லாம் மாறிப்போச்சுன்னு ஒனக்குத் தெரிய மாட்டேங்குது. அதனாலதான் ஒண்ணுத்துக்கும் ஒதவாத களர் நெலத்துல ஒன்னைக் கொண்டாந்து குடிவெச்சியிருக்கானுவ. ஒனக்கு ஒரு கூரைகூட போடல தெரியுமில்ல.

இப்பல்லாம் மோட்டார் வண்டி, காரு எடுத்துக்கிட்டுப் போயி திருடுறாங்க. ஊர் ஊராப் போயி ரூம் போட்டுத் தங்கித் திருடுறாங்க. சொல்லப்போனா கோயில்லயே திருடுறாங்க. உண்டியலை ஒடைக்கிறாங்க. கொஞ்சம் துணிஞ்சவங்க, சாமி சிலையவே திருடி விக்கிறாங்க. நான் அந்த மாரியா செய்யுறேன்? விருத்தாசலம், நெய்வேலி, திட்டக்குடி, பெண்ணாடம், உளுந்தூர்பேட்டைனு சுத்திச் சுத்தி வரேன். பட்டப்பாட்டுல பாதிக்குப் பாதி வீணாப்போவுது. பாதிக்குப் பாதி கவரிங்கா இருக்கு. ஒனக்கு படையல் போடுற செலவு தண்ட கருமாதியாப் போவுது.

தங்கம், வைரம்னு போட்டுக்கிட்டு இருக்கிற நாயிவோ எல்லாம் எந்த எடத்துக்கு வந்தாலும் காருலியே வருதுவோ, எந்த எடத்துக்குப் போனாலும் காருலியே போவுதுவோ. கவரிங் மாட்டியிருக்கிற நாயிவோதான், சந்தைக்குச் சந்தை மஞ்சப்பையத் தூக்கிக்கிட்டு நடக்குதுவோ. காயி வாங்க வர்ற கிராக்கிவோ கவரிங்கத்தான் மாட்டியிருக்கும். பகலா இருந்தா, பார்த்து அறுக்கலாம். இருட்டுல எப்புடிப் பார்த்து அறுக்கிறது? முட்டுச்சந்துல, இருட்டுல வரும்போதுதானே செயினைப் புடிச்சி இழுக்க முடியும்? கவரிங் அம்புட்டுதுனு ஒனக்குப் படையல் போடாம இருந்திருக்கிறேனா? எப்ப கொற வெச்சேன்?''

சத்தம் கேட்டது மாதிரி இருக்கவே திரும்பிப் பார்த்தான் அந்த ஆள். ஆட்கள் யாரும் கோயிலுக்கு வரவில்லை என்பது தெரிந்தது. ஆடு, மாடு எதுவும் இல்லை. காக்கை, குருவி, பருந்து எதுவும் பறக்கவில்லை. மரங்கள்கூட அசையவில்லை. பிறகு எப்படி ஆள் வருவது மாதிரி சத்தம் கேட்டது? மீண்டும் சுற்றும் முற்றும் பார்த்தான். ஆள் யாரும் இல்லை என்று உறுதிப்படுத்திக்கொண்டதும் மீண்டும் சாமியிடம் சொன்னான், ''நெய்வேலியில் கைநெறயா பொருளு அம்புட்டப்ப ஒனக்கு ஒரு சூலம் வாங்கியாந்து நட்டுவெச்சேன். ஒரு கல்யாண ஊட்டுல செயின் அடிச்சப்ப, அதே விருத்தாசலம் ரெட்டைத் தெருவுல இருக்கிற கொசவன்கிட்ட சொல்லி ஒனக்கு வேட்டைக்கிப் போறதுக்கு ஒரு மங்குதிர வாங்கியாந்து வெச்சேன். ரெண்டு, மூணு முறை அங்கவஸ்திரம் வாங்கியாந்து போட்டேன்.

ஒருமுறை வெங்கல மணி வாங்கியாந்து கட்டினேன். வருசா வருசம் கோழி காவு கொடுத்து முப்பூசை போட்டிருக்கேன். எல்லாத்தையும் வாங்கித் தின்னுப்புட்டு இப்ப உத்தரவு குடுக்க மாட்டேங்கிற. குடுக்காட்டிப் போ. எம் மசுருக்கென்ன, நீதான் பட்டினி கெடப்ப!''

அந்த ஆள், பீடி ஒன்றைப் பற்றவைத்தான். புகையை ஊதிக்கொண்டே பல்லியைத் தேடினான். அது கண்ணில் படும் என்பதற்கு எந்த அறிகுறியும் தென்படவில்லை. வாயில் இருந்து பீடியை எடுத்து தரையில் தேய்த்து அணைத்துவிட்டு சலிப்புடன் சொன்னான், ''என்னிக்கும் இல்லாம இன்னிக்கென்ன எங்கிட்ட ஒனக்கு வெளயாட்டு? எதுக்காக சகுனத்தைக் குடுக்காம சோதனை வெக்கிற? இப்பல்லாம் நான் செல்போனு எடுக்கிறதையும் உட்டுட்டேன். இப்ப அதுக்கு கிராக்கி இல்லை. ஆயிரத்துக்கே போனு வந்துடுச்சி. கஷ்டப்பட்டு அடி, மிதிபட்டு திருடிக்கிட்டுப் போயி கொடுத்தா 100, 50-தான் தரேன்ங்கிறானுவோ'' - லேசாகச் சிரித்தான்.

பிறகு, ''திருட்டுப் பொருளுக்கு அதுக்கு மேல எவன் தருவான்? திருட்டுப் பொருளுனாலே அடிமாட்டு விலைதானே! அதனால இப்ப நான் செல்போன தொடுறதில்லைனு ஒனக்குத்தான் தெரியுமே!'' - சட்டென்று வேகம் வந்துவிட்ட மாதிரி அடுத்து ஒரு பீடியைப் பற்றவைத்தான்.

மேற்கில் பார்த்தான். மறுநொடியே அவனுடைய முகம் கருத்துவிட்டது. வார்த்தைகளும் தடித்துவிட்டன. ''ஒன்னைச் சொல்லிக் குத்தமில்லடா. என்னைப் பெத்தவளைச் சொல்லணும். எல்லா கருமாதியும் அவதான் கத்துக்கொடுத்தா. இருட்டுனதும் பக்கத்து ஊட்டுல நின்ன முருங்கை மரத்துல இருந்து யாருக்கும் தெரியாம முருங்கக் கீரயை அவதான் ஒடிச்சியாரச் சொன்னா. நடைபாதையில நின்னுக்கிட்டு வயக்காட்டுல போயி புளிச்சக் கீரையைப் புடுங்கியாரச் சொன்னா. கம்பு கதிரை ஒடிச்சியாரச் சொன்னா. பரங்கிக்காயை, பூசணிக்காயை அறுத்துத் தூக்கியாரச் சொன்னா. எவன் ஊட்டு காட்டுலியோ கல்லச்செடியைப் புடுங்கியா. கத்திரிக்காயை, வெண்டக்காயைப் பறிச்சிக்கிட்டு வா. ஊரான் ஊட்டு புளியமரத்துல புளியாம்பழம் பறிச்சி வானு அவதான் சொன்னா. பஸ்ஸுல போவயில வயசைக் கொறச்சிச் சொல்லுனு சொல்லி, டிக்கெட் வாங்காம சண்டை போட்டா. கூலி வேலைக்குப் போனா வயசைக் கூட்டிச் சொல்லி சம்பளம் கேட்டு சண்டை போட்டா. தட்டு மாத்திப் பேச அவதான் கத்துக்குடுத்தா. எல்லா கருமாதியும் அந்தச் சண்டாளிதான் கத்துக்கொடுத்தா.

காலுல போட்டுக்கிட்டுப் போனா செருப்போட வாரு அறுந்துபோவும்னு நாளெல்லாம் கையிலயே செருப்பைத் தூக்கிக்கிட்டுப் போன உண்ணாமலை பெத்த புள்ளதான நானு? எல்லாத்துக்கும் அவ ஒங்கிட்டதான் வந்தா. நானும் ஒன்னத்தான் சுத்திச் சுத்தி வரேன். மத்தவங்கள மாரி மாசத்துக்கு ஒரு சாமிக்கிட்டியா போறேன்? மாசத்துக்கு ஒரு கோயிலுன்னா போறேன்? ஒரே சாமி நீதான்னு ஒங்கிட்டியே வரேன். நீ என்னடான்னா, சகுனம் சொல்ல மாட்டேங்கிற; உத்தரவு குடுக்க மாட்டேங்கிற!'' என்று சொல்லிவிட்டு, வேகம் வந்தவன் மாதிரி தரையில் விழுந்து கும்பிட்டபடியே கிடந்தான்.

p74.jpgமுனகுவது மாதிரி சொன்னான், ''என்னமோ ஒலக அதிசயமா நான் மட்டுந்தான் அடுத்தவனைக் கெடுக்கிறதுக்கு வேண்டுறேன்னு நெனக்காத. எவன் வந்து எனக்கு அடுத்தவனைக் கெடுக்காத மனசைக் குடு, அடுத்தவன் பொருளு மேல ஆசப்படாத மனசைக் குடு, அடுத்தவனைப் பார்த்துப் பொறாமைப்படாத, அடுத்தவன் பொண்டாட்டியைப் பார்த்து ஆசைப்படாத மனசைக் குடு. என்னிக்கும் என்னை ஏழையாவே, பிச்சைக்காரனாவே வெச்சிருனு வேண்டுறவன் யாரு? கூரை வூட்டுலியே என்ன வெச்சிருனு சொல்றவன் யாரு?'' என்று கேட்டபோது, பல்லி கத்தியது மாதிரியும், அதுவும் வலது கை பக்கம் கத்துவது மாதிரியும் இருந்தது. வெடுக்கென்று தலையைத் தூக்கி வலது கை பக்கம் பார்த்தான். பல்லி சகுனம் சொல்லிவிட்டதாகவே நம்பி உற்சாகத்தோடு எழுந்தான். சாமி கும்பிட்டான். சிரித்துக்கொண்டே, ''போதும்டா!'' என்று சொன்னான்.

''இரு 'பூவா, தலையா?’னு ஒரு தடவை பார்க்கிறேன். 'காயா... பழமா?’னு தெரிஞ்சிட்டா துணிஞ்சி போயிடுவேன்'' என்று சொல்லிக்கொண்டே பாக்கு தடிமனில் சிறு சிறு கற்களாக ஒரு பிடி பொறுக்கி எடுத்தான். இரண்டு கைகளுக்கு உள்ளும் கற்களை வைத்துக்கொண்டே சாமி கும்பிட்டான். மூன்று, நான்கு முறை குலுக்கிவிட்டு தரையில் போட்டான். உட்கார்ந்துகொண்டு பதற்றம் கூடக் கூட இரண்டு இரண்டு கற்களாக ஜோடி சேர்த்து பக்கத்தில் வைத்தான். கற்கள் குறைய குறைய அவனுடைய பதற்றம் கூடிக்கொண்டே இருந்தது. விரல்கள் நடுங்கின. லேசாக வியர்த்தது. கடைசி ஜோடி கற்களை எடுத்த பிறகு ஒரே ஒரு கல் மட்டும் எஞ்சிக்கிடப்பதைக் கண்டதும் அவனுடைய முகம் மலர்ந்தது; சிரித்தான். தங்கம் மாதிரி அந்தச் சிறு கல்லை எடுத்து மடியில் பத்திரப்படுத்தினான். ''ஒனக்கு அப்பப்ப கிறுக்குப் புடிச்சிப்போவும். என்னை வீணா அலையவுடுவ; காத்திருக்க வைப்ப. சில நேரம் புடிச்சிக் குடுத்திடுவ. ஆனா, இந்த முறை சகுனம் சொல்லிடிச்சு. இப்ப கல்லுலயும் பூ குடுத்திட்ட. ஒன்னோட தொண இல்லாம, ஒம் பேச்சைக் கேக்காம ஒரு எடத்துக்கும் அடி எடுத்துவைக்க மாட்டேன் தெரியுமில்ல!'' என்று சொல்லிக்கொண்டே எழுந்தான்.

''நீ சக்தி உள்ள தெய்வம்டா. காரணம் இல்லாமியா ஒன்ன நான் கும்புடுவன்?'' என்று கேட்டான். கும்பிட்டுக்கொண்டே சிமென்ட் மேடையை மூன்று சுற்றுச் சுற்றி வந்தான். குதிரையின் காலடியில் கிடந்த திருநீற்றை அள்ளி நெற்றி நிறையப் பூசிக்கொண்டு, 'போற காரியம் நல்லபடியா முடிஞ்சதும் நாளக் காலையில வரேன்'' - சொல்லிவிட்டு, நடைபாதையை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

இருட்டாக இருந்தாலும் அவனுடைய கால்களுக்குப் பாதை தெளிவாகத் தெரிந்தது!

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவி என்னமா பிரார்த்தனை வைக்கிறான். இவனுக்கு அந்த ஆகாஸ்தான் நல்ல வழி காட்டிடணும் .....!  tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், அலெசியா பிராங்கோ மற்றும் டேவிட் ராப்சன் பதவி, ஃபீச்சர்ஸ் செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் புதன் கோள், அதன் "பொருத்தமில்லாத" மையப்பகுதியில் தொடங்கி அதன் மேற்பரப்பின் குழப்பமான ரசாயன கலவை வரை, ஆச்சரியங்கள் நிறைந்தது. இந்தக் கோளின் தோற்றம் குறித்த பின்னணியிலும் ஆச்சரியத்திற்குக் குறைவு இல்லை. ஆனால், சைப்ரஸில் காணப்படும் பாறைகளில் அதற்கான சில பதில்கள் கிடைக்கக்கூடும். அறிவார்வம் பல ஆய்வாளர்களைப் பலி வாங்கியுள்ளது. அந்த வரிசையில் தாம் அடுத்தாக இருக்கக்கூடும் என்று நிக்கோலா மாரி அஞ்சினார். சைப்ரஸின் தொலைதூர மலைகளைச் சுற்றி வாகனம் ஓட்டும்போது மாரி வழிகாட்டலுக்கு தனது செல்போனை நம்பியிருந்தார். ஆனால் பகல்பொழுது சாய்ந்தபோது அவரது போனின் பேட்டரியும் குறைந்தது. தனது தங்குமிடத்திற்குத் திரும்பிச் செல்ல வழி தெரியாமல் அவர் தவித்தார். ”நான் 50 கி.மீ.க்கும் அதிகமாக (31 மைல்கள்) பயணித்தேன். அதன்போது நான் ஒரு வாகனத்தைக்கூட பார்க்கவில்லை," என்று அவர் கூறுகிறார். அவர் தனது வயிறு, இயந்திரம் மற்றும் தொலைபேசி பேட்டரிகளை நிரப்பக்கூடிய உணவு விடுதிக்குச் செல்லும் வழி தனக்கு நினைவில் இருப்பதாக நினைத்தார். ஆனால் அவர் அங்கு சென்றபோது அது வெறிச்சோடியிருப்பதைக் கண்டார். ஒரு திருப்பம் இறுதியில் அவரை மற்றொரு ஸ்தாபனத்திற்கு அழைத்துச் சென்றது, ஆனால் அந்த தனிமையான மலைச் சாலைகளில் தனது உயிருக்குப் பயந்ததாக அவர் ஒப்புக்கொள்கிறார். "நான் சில மோசமான கணிப்புகளைச் செய்தேன்," என்று அவர் கூறுகிறார். அதிர்ஷ்டவசமாக அவரது பயணம் வீண் போகவில்லை. மாரி இத்தாலியில் உள்ள பாவியா பல்கலைக்கழகத்தில் கோள் புவியியலாளராக உள்ளார். அவர் சூரிய குடும்பத்தில் நமது அண்டை கோள்களின் உருவாக்கம் மற்றும் பரிணாம வளர்ச்சியை ஆய்வு செய்கிறார். அவர் தனது முனைவர் பட்டத்திற்காக செவ்வாய் கோளின் எரிமலை குழம்பு ஓட்டங்களை ஆய்வு செய்தார். இந்த நேரத்தில் அவர் சைப்ரஸ் வழியாக புதன் மீது தனது பார்வையைச் செலுத்துகிறார். புதனில் காணப்படும் பாறைகளுடன் வினோதமான ஒற்றுமையைக் கொண்டிருப்பதாக நம்பப்படும் "போனினைட்" என்று பெயரிடப்பட்ட ஒரு குறிப்பிட்ட வகை பாறையைக் கண்டுபிடிப்பதே அவரின் நோக்கமாக இருந்தது. அவர் நினைப்பது சரியாக இருந்தால் அந்தக் கோளின் தனித்துவமான தோற்றம் தொடர்பான ஒரு துப்பு கிடைக்கலாம்.   சூரியனில் இருந்து முதல் பாறை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் புதன் கோளில் அனைத்துமே உச்ச அளவில் உள்ளது. சந்திரனைவிட சற்றே அதிக கன அளவு கொண்ட புதன், சூரிய குடும்பத்தின் மிகச் சிறிய கோள். அது சூரியனுக்கு மிக அருகில் உள்ளது. அதில் வெப்பத்தைத் தக்கவைக்க வளிமண்டலம் இல்லை. அதாவது மேற்பரப்பில் வெப்பநிலை பகலில் 400 டிகிரி செல்ஷியஸ் முதல் இரவில் -170 டிகிரி செல்ஷியஸ் (750F முதல் -275F) வரை மாறுபடும். இது சூரிய குடும்பத்தில் மிகச் சிறிய சுற்றுப்பாதையைக் கொண்டுள்ளது; அதன் ஒவ்வோர் ஆண்டும் 88 புவி நாட்கள் மட்டுமே உள்ளன. ”இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த மொத்த கோளின் உட்கருவைத் தவிர வேறில்லை” என்கிறார் நிக்கோலா மாரி. புதன் இருக்கும் இடமானது விஞ்ஞானிகளின் ஆய்வை மிகவும் கடினமாக்கியுள்ளது. இதற்கு வெப்பமும் ஒரு காரணம். சூரியனுக்கு மிக அருகில் சுற்றும் இந்தக் கோளை நெருங்கும் விண்கலங்கள் வெப்பத்தைத் தாங்கும் திறன் கொண்டவையாக இருக்க வேண்டும். இரண்டாவது ஈர்ப்பு விசை. சூரியனை நெருங்க நெருங்க அதன் இழுவை சக்தி வலுவடையும். இது விண்கலத்தை விரைவுபடுத்தும். மிக வேகமாகப் பயணிப்பதைத் தவிர்க்க விண்கலம் ஒரு சிக்கலான பாதையில் செல்ல வேண்டும். இது மற்ற கிரகங்களைச் சுற்றி நிறைய மாற்றுப் பாதைகளை உள்ளடக்கியதாக இருக்கும். இது அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும். ஆனால் விண்கலம் தன் வேகத்தைக் குறைத்து, கட்டுப்பாட்டை மீண்டும் பெற அதிக எரிபொருள் தேவைப்படுகிறது.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,இந்த பண்டைய ‘சால்ட் லேக்’ போன்ற சைப்ரஸின் சில பகுதிகளில் காணப்படும் தரிசு நிலப்பரப்புகள், புதன் கோளின் தோற்றம் பற்றிய தடயங்களைக் கொண்டிருக்கலாம். "சுற்றுப்பாதை கண்ணோட்டத்தில் பார்த்தால் வியாழனைவிட புதன் கோளை அடைவது கடினம்,” என்று கூறுகிறார் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் ’பெபிகொலம்போ’ என்று அழைக்கப்படும் புதன் கோளுக்கான பயணத் திட்டத்தின் விண்கல இயக்க மேலாளர் இக்னாசியோ கிளெரிகோ. மாரி சைப்ரஸில் செய்துகொண்டிருக்கும் பணி இந்தத் திட்டத்தில் பங்கு வகிக்கிறது. இந்த சிரமங்கள் காரணமாக நமது மற்ற அண்டை கோள்களைவிட புதன் குறைவாகவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இரண்டு முந்தைய பயணங்கள் - மரைனர் 10 மற்றும் மெசஞ்சர் - அதன் மேற்பரப்பை வரைபடமாக்கும் அளவுக்கு நெருக்கமாகப் பறந்தன. புதன் பள்ளங்களால் நிரம்பியுள்ளதையும், அதன் கட்டமைப்பு பற்றிய சில முக்கிய ஆச்சரியங்களையும் அது வெளிப்படுத்தியது. புதன் கோளின் மையப்பகுதி ஆச்சரியங்கள் நிறைந்தது. மற்ற பாறை அடிப்படையிலான கிரகங்கள் - வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் அனைத்தும் ஒப்பீட்டளவில் சிறிய மையப்பகுதியைக் கொண்டுள்ளன. அவை தீக்குழம்பால் செய்யப்பட்ட தடிமனான மேலோடு மற்றும் கடினமான மேற்பரப்பால் சூழப்பட்டுள்ளன. இருப்பினும் புதனின் மேலோடு வியக்கத்தக்க வகையில் மெல்லியதாகத் தோன்றுகிறது. அதே நேரம் அதன் மையமானது எதிர்பாராதவிதமாக மேற்பரப்பைவிட மிகப் பெரியதாக உள்ளது. "இது பொருத்தமில்லாதது," என்று மாரி கூறுகிறார். மேலும் புதன் ஒரு காந்தப்புலத்தால் சூழப்பட்டிருப்பதை இந்தப் பயணங்கள் வெளிப்படுத்தின. அதன் அடர்த்தியுடன் இணைந்து, இது ஒரு இரும்பு மையத்தைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. மேலும் பூமியைப் போலவே அதன் மையப் பகுதியும் ஓரளவு உருகிய தீக்குழம்புகள் அடங்கியதாகக் இருக்கக்கூடும். புதனின் மேற்பரப்பில் உள்ள ரசாயனங்களின் விகிதம் மிகவும் அசாதாரணமானது. தொலைவில் இருந்து கிரகத்தின் வேதியியல் கலவையைப் பகுப்பாய்வு செய்ய "ஸ்பெக்ட்ரோமெட்ரி" என்ற நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் விஞ்ஞானிகள், புதன் கோள் தனது அண்டை கோள்களைக் காட்டிலும் தோரியத்தின் அதிக செறிவுகளைக் கொண்டிருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். ஆரம்பக்கால சூரிய குடும்பத்தின் தீவிர வெப்பத்தில் தோரியம் ஆவியாகியிருக்க வேண்டும். அதற்குப் பதிலாக அதன் தோரியம் அளவு மூன்று கோள்கள் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்திற்கு ஒத்ததாக உள்ளது. சூரியனில் இருந்து அதன் தூரம் காரணமாக செவ்வாய் கிரகத்தில் குளிர்ந்த வெப்பநிலையில் தோரியம் உருவாகியிருக்கும்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,"ஆலிவின்ஸ்" என்று அழைக்கப்படும் பல பச்சை படிகங்களைக் கொண்ட போனினைட்டின் மாதிரி இத்தகைய முரண்பாடுகள், சூரியனில் இருந்து வெகு தொலைவில் செவ்வாய் கோளுக்கு அருகில் புதன் உருவாகியிருக்கக்கூடும் என்று சில கோள் விஞ்ஞானிகள் ஊகிக்க வழிவகுத்தது. அதன் பெரிய மையப்பகுதிக்கு ஏற்ற, பூமியின் அளவை ஒத்த நிலைத்தன்மையுடன் அது முதலில் உருவாகியிருக்க வேண்டும். அதன் வரலாற்றின் ஒரு கட்டத்தில், புதன் மற்றொரு கோளின் மேற்பரப்புடன் மோதியதாகவும், இந்த மோதல் சூரியனை நோக்கி அதை சுழலச் செய்ததாகவும் அனுமானிக்கப்படுகிறது. அத்தகைய மோதல் அதன் மேலோடு மற்றும் அதன் மேற்பரப்பின் பெரும்பகுதியைத் தகர்த்து அதைப் பறக்கச் செய்திருக்கும். அந்த நேரத்தில் ஒரு பெரிய திரவ மையம் உருவாகியிருக்கும். "இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த கிரகத்தின் உட்கருவைத் தவிர வேறொன்றுமில்லை," என்று மாரி கூறுகிறார். வேற்றுகிரக பாறைகள் இந்தக் கோட்பாட்டை சோதிப்பதற்கான சிறந்த வழி, புதனின் மேற்பரப்பில் இருந்து பாறைகளின் மாதிரிகளைப் பகுப்பாய்வு செய்வது அல்லது அதன் மேற்பரப்பில் துளையிடுவது. ஆனால் எந்த ஆய்வும் மேற்பரப்பில் தரையிறங்க முடியவில்லை. இதனால் விஞ்ஞானிகள் மற்ற தகவல்களைத் தேடுகிறார்கள். சில தடயங்கள் ஆபிரைட்டுகள் எனப்படும் விண்கற்களில் இருந்து வரலாம், அவை முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பிரான்ஸ் கம்யூன் ஆப்ரெஸின் பெயரால் அறியப்படுகிறது. இந்தப் பாறைகளின் ரசாயன கலவை புதன் கோளைப் போலவே உள்ளது. புதனை அதன் தற்போதைய நிலைக்குக் கொண்டுவந்த, கோள்களுக்கு இடையே நிகழ்ந்த மோதலின் விளைவாகச் சிதறிய பாறைத் துண்டுகளாக அவை இருக்கக்கூடும் என்றுகூட சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இது ஒரு நம்பக்கூடிய கருதுகோள்தான். ஆனால் மாரிக்கு இதில் சந்தேகம் உள்ளது. புதன் உருவான அதே சூரிய நெபுலா பகுதியில் உருவான சிறுகோள்களில் இருந்து ஆபிரைட்டுகள் வந்ததாக இதுவரை கிடைத்த சான்றுகள் தெரிவிக்கின்றன. ஆனால் அவை ஒருபோதும் கிரகத்தின் பகுதியாக இல்லை. "புவி வேதியியல் ஒப்புமைகள்" என்பதில் இருந்து ஒரு மாற்று ஆதாரம் வரலாம். அதாவது பூமியில் உருவாகும் பாறைகள் மற்ற கிரகங்களில் காணப்படும் அமைப்புகளை ஒத்திருக்கும். பூமிக்கு அருகில் புவியியல் செயல்முறைகள் பற்றிய சிறந்த அறிவை நாம் பெற்றுள்ளோம். மேலும் இந்தப் புரிதலைப் பயன்படுத்தி இதை ஒத்த தோற்றத்துடன் இருக்கும் பிற கோள்களின் உருவாக்கம் பற்றிய கோட்பாடுகளை நாம் உருவாக்கலாம்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,டெதிஸ் பெருங்கடலின் அடிப்பகுதியில் வெடித்த பழங்கால எரிமலையின் தடயங்களை சைப்ரஸில் உள்ள ஒரு வெளிப்பகுதி காட்டுகிறது. சைப்ரஸுக்கான மாரி செய்துவரும் பணியின் நோக்கம் இதுதான். அவர் தேடும் குறிப்பிட்ட கட்டமைப்பை அது கொண்டிருக்கலாம் என்று கிடைக்கப் பெறும் புவியியல் தரவுகள் கூறுகின்றன. இந்த ஆளரவமற்ற மலைகள் வழியாகத் தனது தேடலைத் தொடங்கும்போது அவர் தன்னை ஒரு "நவீன இந்தியானா ஜோன்ஸ்" போல் உணர்ந்ததாகக் குறிப்பிடுகிறார். சைப்ரஸ் என்பது 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டெதிஸ் பெருங்கடலுக்கு அடியில் உருவான பூமியின் மேலோடு. மோதிய கண்டத்தட்டுகள் (tectonic plates) இறுதியில் அதை மேற்பரப்பை நோக்கித் தள்ளியது. இன்று நாம் அறியும் தீவாக அது மாறியது. தாதுக்கள் நிறைந்த பச்சைப் பாறைகளுடன் அந்த நிலப்பரப்பு வேறு ஒரு உலகத்தின் உணர்வைக் கொண்டுள்ளது என்கிறார் மாரி. "சைப்ரஸ் மலைகளின் சில பகுதிகளில் நடக்கும்போது நீங்கள் இன்னும் ஒரு பண்டைய கடல் படுகையில் நடப்பது போல் உணர்கிறீர்கள்," என்று அவர் கூறுகிறார். இறுதியில் அவர் தான் தேடும் போனினைட்ஸ் எனப்படும் எரிமலைக் குழம்புகளின் குறிப்பிட்ட துண்டுகளைக் கண்டுபிடித்தார். மாரி வீடு திரும்பினார். நாசா மற்றும் இத்தாலியில் உள்ள கோள் அறிவியல் அருங்காட்சியகத்தில் சக ஊழியர்களுடன் பணிபுரிந்து, பாறைகளின் கலவையைப் பகுப்பாய்வு செய்து, புதனிலிருந்து எடுக்கப்பட்ட அளவீடுகளுடன் ஒப்பிட்டார். முடிவுகள் வந்தபோது அவர் ஆச்சரியப்பட்டார். "அவை ஒன்று போல் இருக்கவில்லை. ஒன்றாகவே இருந்தன." மெக்னீசியம், அலுமினியம், இரும்பு போன்ற தனிமங்களின் கலவையானது, ராட்சத மையத்துடன் இருக்கும் ஒரு மர்மமான கோளில் காணப்படுவது போலவே இருந்தது. ஒரே வித்தியாசம் என்னவென்றால், சைப்ரஸின் பாறைகள் ஆக்ஸிஜனேற்றப்பட்டன. இது பூமியின் ஆக்ஸிஜன் நிறைந்த வளிமண்டலத்தில் தவிர்க்க முடியாதது. இது புதன் கோளின் முதல் உண்மையான நிலப்பரப்பு அனலாக் என்று மாரி கூறுகிறார். கிரகத்தைப் பற்றிய நமது புரிதலுக்கு மதிப்புமிக்க கூடுதல் தரவை இது வழங்குகிறது. இந்த பாறைகள் பற்றிய கூடுதல் ஆய்வு, புதனின் கடந்த கால புவியியல் செயல்பாடு பற்றிய சில தடயங்களைக் கண்டறிய உதவும். எல்லாவற்றுக்கும் மேலாக சைப்ரஸ் போனினைட்டுகள் பூமியின் மேலோட்டத்தில் ஓர் ஆழமற்ற புள்ளியில் இருந்து வெடித்த எரிமலைக் குழம்பில் இருந்து உருவானவை என்பதை நாம் அறிவோம். புதன் கோளில் உள்ள பாறைகளுடனான அவற்றின் முழுமையான ஒற்றுமை, அங்குள்ள மேலோட்டம் வழக்கத்திற்கு மாறாக மேற்பரப்புக்கு அருகில் உள்ளது என்பதைக் காட்டுகிறது. இது கிரகத்தின் அசல் மைய மேலோடு வெடித்ததால் ஏற்பட்ட தோற்றத்துடன் ஒத்துப் போகிறது.   எதிர்கால பயணங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES மாரியின் கண்டுபிடிப்புகள் மிகப் பெரிய புதிரின் ஒரு பகுதி. மேலும் பல நுண்ணறிவுகள் பெபிகொலம்போ பணியிலிருந்து வரக்கூடும். இது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் மற்றும் ஜப்பானுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஆகும். இது அக்டோபர் 2018இல் தொடங்கப்பட்டது. இதற்கு கணிதவியலாளரும் பொறியியலாளருமான கியூசெப்பே (பெபி) கொலம்போவின் பெயர் சூட்டப்பட்டது. மரைன் 10 விண்கலத்தின் சிக்கலான பாதையைத் திட்டமிட அவர் உதவினார். விண்கலத்தின் சுற்றி வளைந்து செல்லும் பாதையின் ஒரு பகுதியாக புதனுக்கு அருகில் இருந்து மூன்று முறை செல்லும் பாதைகளை பெபி கொலம்போ உருவாக்கியுள்ளார். விண்கலத்தின் வேகத்தைக் குறைப்பதே இதன் நோக்கம். விண்கலம் 2025இல் கிரகத்திற்கு அதன் இறுதி அணுகலைச் செய்யும். அங்கு அது இரண்டு சுற்றுக் கலங்களாக பிரியும். ஒன்று காந்தப்புலத்தை அளவிடும். மற்றொன்று மேற்பரப்பு மற்றும் உட்புற அமைப்பை ஆய்வு செய்யும். புவி வேதியியல் ஒப்புமைகள் குறித்த மாரியின் ஆராய்ச்சி இங்கே பொருத்தமானதாக இருக்கலாம். ஏனெனில் அவை இந்த அளவீடுகளில் சிலவற்றுக்கான வரையறைகளாகப் பயன்படுத்தப்படலாம் என்று அவர் கூறுகிறார். "புதன் போன்ற ஒப்புமைகளின் ஆய்வக அளவீடுகள் எங்கள் அகச்சிவப்பு (வெப்ப அகச்சிவப்பு) ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மற்றும் சில வகையான எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மூலம் பெறப்பட்ட அளவீடுகளின் முடிவுகளைச் சிறப்பாக விளக்க உதவுகிறது," என்று பெபிகொலம்போவின் திட்ட விஞ்ஞானி ஜோஹன்னஸ் பென்காஃப் விளக்குகிறார். அதன் பிறகான ஆண்டில் இந்தக் கலங்கள் புதனின் கனிம கலவை, அதன் நிலப்பரப்பு மற்றும் அதன் உட்புற அமைப்பு ஆகியவற்றின் துல்லியமான அளவீடுகளைச் செய்யும். முந்தைய பயணங்களின் தரவுகளுடன் இந்தத் தரவை ஒப்பிடுவதன் மூலம், கிரகம் இன்னும் புவியியல் ரீதியாக "உயிருடன்" உள்ளதா என்பதை விஞ்ஞானிகள் தீர்மானிக்க முடியும். புதனின் உள்ளே இருந்து பொருள் ஆவியாவதால் உருவானதாகத் தோன்றும் ’வெற்று இடைவெளிகள்’ மேற்பரப்பில் உள்ளன. ஆனால் இந்தச் செயல்முறை இன்னும் நடக்கிறதா என்பது தெளிவாக இல்லை. இந்த அளவீடுகள் இறுதியாக புதனின் மர்மமான தோற்றத்தின் வேர்வரை செல்ல அனுமதிக்கலாம். மேலும் அதை நீட்டிப்பதன் மூலம் பிரபஞ்சத்தில் நமது இடம் பற்றியும் அதிகம் சொல்ல முடியும். "புதன் ஏன் மிகவும் அடர்த்தியாக உள்ளது, அதன் மையப்பகுதி ஏன் மிகவும் பெரிதாக உள்ளது என்ற கேள்விகள் நமது சூரிய மண்டலத்தின் உருவாக்கம் மற்றும் வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் முக்கியமானது" என்று பென்காஃப் கூறினார். ”விண்கலத்தில் மிகவும் பரந்த அளவிலான உபகரணங்கள் மற்றும் கருவிகள் உள்ளன. அவை உண்மையில் நமது அறிவியல் அறிவை மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்." சூரியனுக்கு அருகில் இருக்கும் முதல் கிரகத்தை நாம் பார்க்கும் விதம் ஏற்கெனவே நிறைய மாறிவிட்டது. "பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, புதன் ஒரு ஆர்வத்தைத் தூண்டாத கிரகமாகக் கருதப்பட்டது," என்கிறார் பென்காஃப். "ஆனால் நான் இன்னும் பல ஆச்சரியங்களை எதிர்பார்க்கிறேன்,"என்று அவர் குறிப்பிட்டார். மாரிக்கு புதன் கோள் ஆரம்பம் மட்டுமே. "வட அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவான லான்சரோட்டில் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ளது போன்ற எரிமலைக்குழம்பு கிடைத்தது. மேலும் வெள்ளி கோளின் தடயங்களைக் கண்டறிய, சிசிலி, ஹவாய், இந்தோனீசியா மற்றும் ரஷ்யாவில் உள்ள கம்சட்காவை ஆய்வு செய்து வருகிறோம்," என்றார் அவர். பெபி கொலம்போவின் முழு அறிவியல் செயல்பாடுகள் 2026இல் தொடங்க இருக்கும் நிலையில் பூமியில் உள்ள இந்தப் பாறைகள் சூரியக் குடும்பத்தில் உள்ள நமது மற்ற அண்டை கோள்களைப் பற்றி எவ்வளவு சொல்ல முடியும் என்பதை விரைவில் நாம் தெரிந்துகொள்ள முடியும். https://www.bbc.com/tamil/articles/c89z8v501p9o
    • அப்படியெல்லாம் லேசில விடமுடியாது பையா ....... எப்படியும் உங்களுக்கு சந்தர்ப்பம் தராத பெரியப்பாவுக்கு கொஞ்சம் மேல நின்றால்தான் மனம் ஆறும்.......!  😂
    • மீண்டும் மீண்டும் இந்த 5% வந்து கிலியைக் கிளப்புகிறதே😂?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.