Jump to content

வாழ்க்கை எப்படிப் போகின்றது?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

ஆனால்  உங்கள்  வயதில்

நம்பிக்கை  ஒன்றுதான்  வாழ்வாக  இருக்கும்

இருக்கணும்

வாழ்க  வளமுடன்

நன்றி அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/04/2018 at 10:16 PM, சண்டமாருதன் said:

 

 

On 15/04/2018 at 10:16 PM, சண்டமாருதன் said:

 

 

On 15/04/2018 at 10:16 PM, சண்டமாருதன் said:

 

 

On 15/04/2018 at 10:16 PM, சண்டமாருதன் said:

பதிவுக்கு நன்றிகள் இன்னுமொருவன்..

எனது அனுபவத்தில் வாழ்க்கையின் வெற்றிடத்தை நிரப்புவது, அர்த்தம் தருவது அல்லது அதை நாடிய முயற்சிகள் எனபது அவரவரோடு சேர்நத வாழ்விடமும் சேர்ந்தது.  ஊரில் வயதான ஒருவர் தனது காணியின் வேலிக்கு கதியால் போட்டு அடைத்துக்கொண்டிருப்பார்,  தனத காணியில் மரங்கள் நடுவார், பாராமரிப்பார் இப்படியே சதா தோட்டம் வயல்களோடு தன்னை ஐக்கியப்படுத்திக்கொள்வார். அவர் இயல்பாகவே அதைச் செய்வார், யாரும் அவருக்கு செய் என்று கட்டளை இடமாட்டார்கள். கட்டளைக்கு கட்டுப்பட்டு செய்வதை விட அதிகமாக வேலைகளை செய்வார். அதிலிருந்து தனது வாழ்வாதாரத்துக்கானதையும் எடுத்துக்கொள்வார். தொடர்ச்சியாக உயிர்வாழுதல் என்பது தான் அடிப்படை.  அதைத்தான் எல்லோரும் செய்கின்றார்கள். அதை எப்படி செய்வது என்பதில் தான் அர்த்தம் இருக்கின்றது அல்லது நிறைவு இருக்கின்றது.  வயதானவர் அவரது வழ்வை முடிந்தளவுக்கு அவரே தீர்மானிக்கின்றார். இங்கே எமது வாழ்வை நாம் தீர்மானிக்க முடியாது.  "நான்" என்பது வயதானவரை பொறுத்தவரை அவரது வளவு தோட்டம் மரங்கள் என்ற பெருவட்டத்தைக்கொண்டிருக்கும். அவர் தனியே ஒரு மனித உருவமாக மட்டும் அடயாளம் பெற மாட்டார். இங்கே "நான் " என்றால் எதுவும் இல்லை. எனது வட்டத்துக்குள் என்ன என்று பார்த்தால் ஒரு வீடு ஒரு கார் இரண்டும் எனக்கு சொந்தமா என்று பார்த்தால் அதற்கான கடனை கட்டும் வரை எனக்கு சொந்தமில்லை. கடன் எப்போ முடியும் என்று பார்த்தால் அண்ணளவாக எனது ஆயுள் முடியும் காலம் வரை அது இருக்கும். வேலை நிரந்தரமா என்று பார்த்தால் அதுவும் எப்போ என்ன நடக்கும் என்று தெரியாது. சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பில் வயதானவரும் அவரது காணியை விட்டு விரட்டப்பட்டு விட்டார். 

மனிதன் ஒரு வேட்டை விலங்கு. இந்த உலகம் ஒரு வேட்டைக்காடு. இந்த அடிப்படைக்கு உள்ளகவே வழ்க்கை அமைகின்றது. எமது சந்தோசம், நிறைவு, அர்த்தம் ஆன்மீகம் கடவுள் என அனைத்தும் இந்த அடிப்படைக்கு உள்ளகவே தனது எல்லையை கொண்டிருக்கின்றது. அந்தவகையில் வாழ்வின் பொருள் அர்த்தம் நிறைவு என்பதை பெரிய விசயமாக உணர்வதில்லை. அவ்வப்போது கிடைக்கும் சின்ன சின்ன திருப்திகளை அனுபவிப்பது. வேணுமான தருணத்தில் நல்ல ஒரு தேத்தண்ணி உள்ளடங்கலாக. வாழ்க்கை போகுது... 
 

 

எங்கள் நிலமையை இட்டு நாங்கள் திருப்த்தி படுவதற்க்காக அந்த மனிதரும் விரட்டப்பட வேண்டி இருக்குது.:unsure:அவர் ஒரு தமிழர் அல்லாமல் வேறு நாட்டவராக இருந்தால் அவர் தொடர்ந்து சுதந்திரமாத்தான் வாழவார;

Link to comment
Share on other sites

நன்றி அனைவரின் கருத்துக்களிற்கும். 

கந்தப்பு நன்றி உங்கள் கருத்திற்கு. நீங்கள் கூறுகின்ற ‘நேரத்தைப் புறக்கணித்த, கணத்தில் வாழ்தல்” என்பது காலாதிகாலத்திற்கு மனிதனோடு ஒரு தேடலாக, கிழர்ச்சியாக இருந்து வருகின்றது. ‘காலபைரவன்’ மற்றும் ‘சும்மா இருப்பதே சுகம்” என்பதெல்லாம் இந்த வகையறா தான். இருப்பினும் இது எத்தனை பேரிற்கு நடைமுறைச்சாத்தியமாகிறது என்பது தெரியவில்லை. அனேகமாக நுகர்வோர் உலகில் சந்தை இதை அனுமதிக்hது பார்த்துக்கொள்வதில் கவனமாகவே இருக்கிறது.
 

நுணாவிலான் நீங்கள் இணைத்த பதிவு கூறுவதுபோல், மூச்சிரைக்க ஓடிக்கொண்டிருக்கையில் இந்தப் பிரச்சினைகள் வருவதில்லைத் தான். தேடல் பெரிதென்பது தேடல் இல்லாமற்போதல் என்பதை நோக்கியதாக மட்டும் தான் இரு;கமுடியும் என்பது எனது அபிப்பிராயம்.

On 4/17/2018 at 6:35 PM, Kavallur Kanmani said:
..
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்...
 

 

On 4/18/2018 at 2:35 PM, Kavi arunasalam said:

வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை ....

 

பாட்டுக்கள் போன்று கவித்துவமாகவே வாழ்க்கையினை அணுகுகின்றீர்கள் என்பது பார்;பதற்கு மகிழ்வாக இருக்கிறது. 

On 4/17/2018 at 10:02 AM, விசுகு said:

நல்லதொரு சுய  மீட்டல்

 

நீங்கள் மேலே  குறிப்பிட்டது போல

எல்லாவற்றையும்   இலகுவாக அடைந்துவிட  வாங்கிவிட முடிகிற  வாழ்க்கை

சுவையுள்ளதாக  இருக்குமா??

எம் முன்னோர்கள்  எப்பொழுதே  சொன்னார்களே

போதும்  என்ற  மனமே பொன் செய்யும் மருந்து என்று

இன்று  எதை  அடைந்த போதும்

அது போதுமானதாக

தனிப்பட

நான்  எனது  வாழ்வின்  இலட்சியங்களை

கனவு  கண்ட  வாழ்வை

நான்  வாழ  எண்ணிய வாழ்க்கையை

அடைந்தேனா  என்றால்  இல்லை  என்பது தான் பதிலாக  இருக்கும்

எல்லாம்  இருந்தும் ஏதோ  ஒன்றை  தொலைத்த  வெறுமை

பெரும் புத்தகமாக எழுதக்கூடிய அனுபவங்கள்

அடியெடுத்து வைத்தவை

அல்லது முயற்ச்சித்தவை  

அவற்றில்  வென்றவற்றை  பார்த்தால்????

எம்மை ஏமாற்றியவர்கள்

நம்பவைத்து கழுத்தறுத்தவர்கள்

இன்னும் இருவேடமிடும் சொந்தங்களுக்கு  மத்தியில்

இவற்றை அறவே துறந்து

இவன் மனச்சாட்சிப்பட  நடப்பவன் என்ற  நல்ல பெயரோடு

வாழ்ந்தால் இவர் போல  வாழணும்

இவர் போல பிள்ளைகளை  வளர்க்கணும் என நாலு பேர்  சொல்லும் அளவுக்கு

வாழ்ந்து முடித்திருப்பதே இப்போதைக்கு  என்னுடன்  கூடவே வருவது.

 

அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். உங்களது முன்னைய பதிவுகளிலும் கவனித்துள்ளேன், நீங்கள் பதறாது கருமமாற்றும் பக்குவம் கொண்டுள்ளமை தெரிகிறது. மற்றையவரின் மதிப்பீடுகள் சார்;ந்து என்னதான் நாம் அதற்கு அப்பாற்பட்டவர்களாக வாழ முனையினும் சமூகம் என்பது மற்றையவர் மதிப்பீட்டைப் பல பங்கு உள்ளடக்கித் தான் நகர்கிறது என்பது மறுப்பதற்கில்லை.

ரதி, கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் என்பது நமது மரபாக இருப்பது உண்மைதான். இருப்பினும் எனக்கு ஏனோ இறப்பின் உடல் என்பது சார்ந்து எந்தக் கரிசனையும் இல்லை. சுப்பர்மாக்கற்றில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் கோழி, மீன் மற்றும் இறைச்சி வகைககளிற்கும் இறப்பின் பின் மனிதனிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதே எனது அபிப்பிராயம். ஆனால் இறப்பின் பின் உடல் அழகாக வைக்கப்பட்டிருக்கவேண்டும் என்பது, ஒருவேளை இதை நீங்கள் எழ்ழலாகக் கூறிநீர்களோ தெரியாது, உளவியல் சார்;ந்து தற்போதைய வாழ்வைப் பார்க்க உதவும். சுவாரசியமான முனை.

Link to comment
Share on other sites

18 hours ago, சுவைப்பிரியன் said:

 

 

 

எங்கள் நிலமையை இட்டு நாங்கள் திருப்த்தி படுவதற்க்காக அந்த மனிதரும் விரட்டப்பட வேண்டி இருக்குது.:unsure:அவர் ஒரு தமிழர் அல்லாமல் வேறு நாட்டவராக இருந்தால் அவர் தொடர்ந்து சுதந்திரமாத்தான் வாழவார;

 

கருத்துக்கு நன்றி சுவைப்பிரியன் 

விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட வன்னி பெருநிலப்பரப்பில் இருந்து ஒருவர் மிச்சமில்லாமல் தமது வாழ்வாதாரத்தை விட்டு வெளியேறிய இறுதிப்போர்க்காலங்களை தவிர்த்துச் செல்லமுடியாது. வெளியேறியவர்களில் பாதிப்பேரும் திரும்பச் செல்லவில்லை. சனத்தொகை சரிபாதிக்கும் குறைந்துவிட்டது. இவை எல்லாவற்றுக்கும் அப்பால் மண்ணுக்கும் அவர்களுக்குமான பிணைப்பின் குறுக்கே அச்சம் நம்பிக்கையின்மை என்ற பல விசயங்கள் வந்துவிட்டது.  வாழ்க்கை எதை நோக்கிப் போகின்றது என்ற கேள்வியின் கனதி எம்மை விட அவர்களுக்கு பல பத்து மடங்கு அதிகம். மேலும் தமிழர் அல்லாத வேறு நாட்டவர்கள் என்றாலும் அவர்கள் சுதந்திரத்தை தீர்மானிப்பதும் பணம் படைத்த முதலாளித்துவவாதிகளே ! 

 உதாரணமாக இந்தியா எங்கும் விவசாயிகளின் வாழ்வாதாரம் பழங்குடிகளின் வாழ்வாதரம் பறிக்கப்படுவதானாலும் சரி.. நாம் முகநூலை பயன்படுத்துகின்றோம்  அதன் மூலம்  அதன் நிறுவனர் பல பில்லியன் சம்பாதிக்கின்றார். அமரிக்காவின் ஹவாயில் அவர் நூறு மில்லியன் டொலரில் நிலம் வாங்குகின்றார். அங்கு இருக்கும் அந் நிலத்துக்கே சொந்தமான விவசாயிகள் விரட்டியடிக்கப்படுகின்றார்கள். அவர்கள் தம் வாழ்வு எப்படிப் போகின்றது என்று கேட்கின்றார்கள். 

உங்கள் கருத்து ஒரு நெருடலை ஏற்படுத்துகின்றது.  இருந்தும் எமக்குத் தெரியாது நாம் உலகில் எங்கோ இருக்கும் என்னுமொருதனின் வாழ்வு சிதைக்கப்படுவதற்கு  சிறு துளி பெருவெள்ளமாக காரணமாக இருக்கின்றோம் என்பது. 

 

Link to comment
Share on other sites

இதே தேடலை தான் நான் இன்னும் தேடி கொண்டிருக்கிறேன். வாழ்க்கை என்றால் என்ன .?  அதில் "நான்" என்ற கதாபாத்திரத்துக்கு என்ன பங்கு.? இது ஒரு விடைகாணா கேள்வியாக படிந்துவிட்டது. 

இந்த கட்டுரை அதன் பின்னரான பதிவுகள் அந்த தேடலை இன்னும் ஊக்கபடுத்தியுள்ளது. தேடல் பரப்பை மேலும் அதிகரித்து இருக்கிறது. ஒரே ஆறுதல் நான் மட்டும் மல்ல "வாழ்க்கையை" இன்னும் நிறையப்பேர் (என் சார்ந்தவர்கள்) தேடுகிறார்கள் என்பதே.

நவீன தத்துவவாதிகளின் "எல்லாமே ஒன்றுமே இல்லை"(Everything is Nothing or Nothing is Everything) என்ற கருத்தை உள்வாங்கி வாழுவோம் என்றால் இந்த உலக அமைப்பு/ சமூக அமைப்பு அதற்கு உடன்பாடானதாக இல்லை. 

"புக்காரஸ்டில்" எனது ரொமேனிய பயிற்சியாளன் சொல்லுவான் இமையமலையில்(தனிமையில்) போய் தவமிருப்பதை காட்டிலும் கடினமானது இந்த சமூக கட்டமைப்பில்  "எல்லாமே ஒன்றுமே இல்லை" என்று வாழ்வது.

அவனிடம் சரி அப்போ எப்படித்தான் வாழ்வது என்று கேட்டுப்பார்த்தேன்.

உனக்கு பிடித்தமானதை செய் அல்லது உனக்கு பிடித்தாமனதாக வாழு. ஆனால் அதை இதைவிட யாராலும் சிறப்பாக செய்ய/வாழ முடியாது என்று சொல்லுமளவிற்கு செய்/வாழு.

அது பிடிக்கவில்லையா வேறு எது பிடிக்கிறதோ அதை செய். அதையும் உன்னை வென்றுவிடாத அளவிற்கு சிறப்பாக செய். இது தான் வாழ்க்கை என்றான்.

புரிந்த மாதிரியும் இருக்கு புரியாத மாதிரியும் இருக்கு. என்றாலும் எதையாவது அவன் சொன்னமாதிரி செய்து பார்த்துவிட்டு தீர்மானிப்போம் என்று இருக்கிறேன்.

இன்னும் பயிற்சிகள் இருப்பாதால் தொடர்ந்தும் விவாதிக்க சந்தர்ப்பம் இருக்கு..

யாழில் அதற்கான ஒரு வெளி உருவாக்கிய இன்னுமொருவனுக்கும் இங்கு கருத்துகளை பதிவிடும் உறவுகளுக்கும் நன்றிகள்.

நாங்கள் ஒரே படகில் பயணிக்கிறோம் என்ற உணர்வு ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி கீறலை ஆழ்மனதில் உருவாக்கி இருக்கிறது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவன்,இறந்த பின் மனிதர்களாயினும் சரி,மிருகங்கள் ஆயினும் சரி சதைப் பிண்டங்கள் தான்...உயிரோடு இருக்கும் போது இப்படித் தான் வாழ வேண்டும்  என்று நினைக்கிறீர்களா அல்லது எப்படியும் வாழலாம் என்று வாழும் வாழ்க்கை சரியா
 

Link to comment
Share on other sites

இன்னுமொருவன் / சுகன் / பகலவன்/ கிருபன்  மற்றும் எல்லோரிடமும் நான் கேட்க நினைக்கும் கேள்வி

நாம் வாழ்க்கையில் ஏன் 'அர்த்தத்தை' தேட வேண்டும்? வாழ்க்கையில் ஏன் 'தேடல்' அவசியம் என்று நினைக்கின்றீர்கள்?

இயற்கையில் இருக்கும் எதுவும், வேறு எந்த உயிரினமும் இப்படி தன் வாழ்க்கையில் அர்த்தத்தை அல்லது 'நான் எனும் கதாபாத்திரத்தின் அர்த்தம் என்ன', 'எது மெய் உணர்வு' 'எது உண்மையான சந்தோசம்' என்று எல்லாம் அலட்டிக் கொண்டு இருக்காமல் அந்த நாயை போல மகிழ்வாக இருக்கும் போது நாம் மட்டும் ஏன் இப்படி குறுக்கு கேள்விகளுடன் அலைய வேண்டும்?

(இந்த திரிக்கு தாமதமாக வந்து விட்டேன் என நினைக்கின்றேன். நேரம் கிடைக்கவில்லை)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீளவும்இவ்விடத்தில் இன்னுமொருவனின் தேடலில்

 

எங்கிருந்து ஆரம்பிப்பது எப்படி நகர்த்துவது தீர்மானம் இல்லாத அலைக்கழிவைஒவ்வொரு வினாடியும் எதிர் நோக்குவதே நிகழ்வாக அமைகிறது. எதை நோக்கியோ ஓடிக் கொண்டிருப்போம் சற்றும் எதிர்பாராத திருப்பு முனைகளைச் சந்திப்போம். சில சமயங்களில் திகைப்பில் இருந்து விடுபட முடியாமலே தேடல் சறுக்கிவிடும். மாறிக் கொண்டிருக்கும் ஓட்டத்திற்குள் முனைப்பெடுத்து திட்டமிட முடியாமல் வாழ்க்கை நழுவிக்கொணடிருக்கும்.இந்த மனித உடல் எடுத்த பாத்திரத்திற்குள் சிக்கி சின்னாபின்னப்பட்டு நடித்து முடித்து விடைபெறும்வரை தேடல்களுக்கும் பஞ்சம் இருக்காது. நிறைய எழுதவேண்டும் என்று தோன்றுகிறது. மீளவும் எழுதுவேன்.

நன்றி இன்னுமொருவன்

Link to comment
Share on other sites

4 hours ago, நிழலி said:

இன்னுமொருவன் / சுகன் / பகலவன்/ கிருபன்  மற்றும் எல்லோரிடமும் நான் கேட்க நினைக்கும் கேள்வி

நாம் வாழ்க்கையில் ஏன் 'அர்த்தத்தை' தேட வேண்டும்? வாழ்க்கையில் ஏன் 'தேடல்' அவசியம் என்று நினைக்கின்றீர்கள்?

இயற்கையில் இருக்கும் எதுவும், வேறு எந்த உயிரினமும் இப்படி தன் வாழ்க்கையில் அர்த்தத்தை அல்லது 'நான் எனும் கதாபாத்திரத்தின் அர்த்தம் என்ன', 'எது மெய் உணர்வு' 'எது உண்மையான சந்தோசம்' என்று எல்லாம் அலட்டிக் கொண்டு இருக்காமல் அந்த நாயை போல மகிழ்வாக இருக்கும் போது நாம் மட்டும் ஏன் இப்படி குறுக்கு கேள்விகளுடன் அலைய வேண்டும்?

(இந்த திரிக்கு தாமதமாக வந்து விட்டேன் என நினைக்கின்றேன். நேரம் கிடைக்கவில்லை)

 

survival

தொடர்ச்சியான உயிர்வாழ்தலுக்கான போராட்டம், அர்த்தம் அதன் நிமர்த்தமானதே. அல்லது போராட்டத்தின் களைப்பில் நிம்மதி சார்ந்ததே. ஐயத்தில் இருந்து தப்பித்தல் சார்ந்து.. 

உண்மையில் ஒரு நாயின் வாழ்வை விட ஆயிரம் மடங்கு சிக்கலானது மானுடத்தின் வாழ்வு. நான் சில வருடங்களுக்கு முன்னர் பிறவியில் மனவளம் உடல்வளம் பாதிக்கப்பட்டவர்களுக்கான இடத்தில் வேலை செய்தேன். அதில் பலருக்கு எந்த உணர்வும் இல்லை. நாய்க்கான தற்காப்பு உணர்வு கூட இல்லை. நாய் ஒருவரை சார்ந்து அவருக்கு நன்றியுடன் இருக்கும் ஆனால் இவர்களுக்கு அந்த இயல்புகூட இல்லை. அவ்விடத்தில் ஒரு பாதிக்கப்பட்டவருக்கு குறைந்தது 12 இல் இருந்து 15 பேர் வேலை செய்கின்றார்கள். மூன்று சிப்ட் வேலை. வைத்தியர், தாதிகள் பராமரிப்பாளர்கள், உணவு வழங்கல் பிரிவு, என்று ஒரு பக்கம், பொறியிலாளர்கள் கட்டட பராமரிப்பு என்று அது ஒரு பக்கம், நிர்வாகம், வாகன ஓட்டுனர்கள், இப்படியே ஒரு பெரிய லிஸ்ட் போடலாம். ஆரம்பத்தில் நான் நினைத்தேன் இந்த இடத்தில் வேலை செய்வதில் ஒரு திருப்தியும் ஒரு அர்த்தமும் இருக்கின்றது என்று ஆனால் பின்னர் தான் எனக்கு புரிந்தது அவர்களால் நான் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். ஒரு பாதிக்கப்பட்டவர் 15 பேருக்கு வேலைகொடுத்துக்கொண்டிருக்கின்றார். (இவர்களுக்கான பொருட்களை சப்பிளை செய்பவர்களும்  இவர்களால் பிழைத்துக்கெண்டிருக்கின்றார்கள்) அவர்கள் வாழ்வு அர்த்தமுள்ளது என்றால் அதை அவர்களால் உணரமுடியவில்லை, நான் அங்கு வேலை செய்வது அர்த்தம் உள்ளது என்றால் அதில் உண்மையும் இல்லை. 

அண்மையில் ஒருநாள் ஒரு அறிவித்தலை குடியிருப்பாளர் கதவில் ஒட்ட வேண்டியிருந்தது. நான் கதவடியில் சென்றதும் உள்ளிருந்த நாய்குட்டி வீட்டுகாரர் தான் வந்துவிட்டர் கதவை திறக்கின்றார்  என்று கதவை பிராண்டி உள்பக்கமாக பரிதவித்துக்கொண்டிருந்தது. வீட்டுக்காரர் வேலைக்கு சென்றுவிட்டார் அது தனிமையில் வாடுகின்றது. 

இன்றிலிருந்து 300 வருடங்களுக்கு முன்பு நான் எங்கிருந்தேன் 300 வருடங்களுக்கு பின்பு எங்கிருப்பேன் என்று ஒரு கேள்வி கேட்கும் போது ஒன்றின் மீதான பிடிவாதம் தளர்ந்து போகின்றது. 

லட்சியம், அர்த்தம், தேடல் என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபடுகின்றது. அதன் கனதி வேறுபடுகின்றது. 

உங்கள் கேள்விகளுக்கான விடை  கேள்விக்கு சாதகமானதாகவே இருக்கும். அர்த்தம் தேடல் என்பது ஒன்றுமில்லை என்றுதான் இறுதியில் முடியும்.

 

Link to comment
Share on other sites

17 hours ago, நிழலி said:

இன்னுமொருவன் / சுகன் / பகலவன்/ கிருபன்  மற்றும் எல்லோரிடமும் நான் கேட்க நினைக்கும் கேள்வி

நாம் வாழ்க்கையில் ஏன் 'அர்த்தத்தை' தேட வேண்டும்? வாழ்க்கையில் ஏன் 'தேடல்' அவசியம் என்று நினைக்கின்றீர்கள்?

இயற்கையில் இருக்கும் எதுவும், வேறு எந்த உயிரினமும் இப்படி தன் வாழ்க்கையில் அர்த்தத்தை அல்லது 'நான் எனும் கதாபாத்திரத்தின் அர்த்தம் என்ன', 'எது மெய் உணர்வு' 'எது உண்மையான சந்தோசம்' என்று எல்லாம் அலட்டிக் கொண்டு இருக்காமல் அந்த நாயை போல மகிழ்வாக இருக்கும் போது நாம் மட்டும் ஏன் இப்படி குறுக்கு கேள்விகளுடன் அலைய வேண்டும்?

(இந்த திரிக்கு தாமதமாக வந்து விட்டேன் என நினைக்கின்றேன். நேரம் கிடைக்கவில்லை)

உங்கள் கேள்விக்கு ஏகப்பட்ட கோணத்தில் பதிலளிக்கத் தோன்றுகின்றது. நேரம் போதவில்லை. சிலவற்றை இப்போ பதிவிடுகிறேன்.


1)    மனிதன் “எதையாவது தேடுவோம்” என்று றூம் போட்டு சிந்திப்பதில்லை. தேடல் இயல்பாகப் பிறக்கின்றது. மூச்சிரைக் ஓடிக்கொண்டிருத்தல், வாழ்வாதரப் போராட்டம் மூச்சுவிட முடியாதபடி வைத்திருத்தல், பயம், போதை, மயக்கம், கோபம் போன்று ஏகப்பட்ட விடயங்கள், தேடல் உள்ளதை தற்காலிகமாக மறைத்து வைப்பினும், தேடல் மனிதனின் இயல்பு. எப்ப வரும், எப்பிடி வரும் வந்தால் எப்படிப் புரியப்படும் என்பதற்கெல்லாம் அப்பால் தேடல் அற்ற மனிதன் இயல்பு நிலையில் இல்லை. அந்த வகையில், நீங்கள் சொல்வது போன்றே பார்த்தாலும், வாழ்வைப் பிரித்தாராயாது அதன்பாட்டில் எடுத்தாலும், வாழ்வின் இயல்பான அங்கமான இந்தத் தேடல் இயல்பாய்த் தானே பிறக்கிறது. குகைமனிதன் காலம் தொட்டே மனிதன் தேடிக்கொண்டு தான் இருந்தான்.


2)    மிருகங்களின் உளவியல் பற்றி எமக்கு இன்னமும் போதிய புரிதல் இல்லை என்பது எனது அபிப்பிராயம். செயற்கை அறிவின் முனைப்பில் இது புரியப்படும் என்பது எனது அனுமானம். அதுவரைக்கும், மிருகங்களிற்குத் தேடலில்லை என்றே வைத்துக்கொள்வோம். ஏன் மனிதனிற்கு மட்டும் இந்தத் தேடல் என்ற கேழ்வி மட்டுமல்ல, இது போன்று பல கேள்விகள் உள்ளன. உதாரணமாக, ஏன் காட்டு விலங்குகளிற்கு ஒபீசிற்றி பிரச்சினையில்லை மனிதனிற்கு மட்டும் தான் இந்த உடல் பருமன் பிரச்சினை என்ற கேள்வியினை எடுக்கலாம். இப்பிடி நிறைய கேழ்விகள் வரும் போதும் அவற்றிற்கான விடைகள் உள்வாங்கப் படுகின்றனவா என்பது கேள்விக்குரியதாகவே தொடர்கிறது.

இப்போ காட்டு விலங்குக்கு இல்லாத ஒபீசிற்றி ஏன் மனிதனிற்கு இருக்கு என்ற கேழ்விக்கு “சந்தை” என்ற ஒரு சொல்லு பதிலாகும். ஆனால் அது புரியப்படாது. மாக்ஸ் மட்டுமல்ல அதற்கு முன்னரும் பின்னரும் மனிதன் தானும் ஒரு விலங்கு என்பதை மறந்து, புறம்பாகத் தள்ளி நின்று விலங்கோடு தன்னை ஒப்பிட்டு கேள்வி எழுப்பிக்கொண்டே இருக்கிறான். எனது அபிப்பிராயம், மனிதன் செய்யும் அனைத்துமே அவனது விலங்குத் தன்மையின் இயல்பின் வெளிப்பாடுகள் தான். முதல் விலங்கு பில்லியன்களான ஆண்டுகள் சுவாசித்ததால் வழி மண்டலம் உருவானது, மனிதனின் நகர்ச்சி என்ன என்பது ஒரு வேளை இப்போதைக்குத் தெளிவின்றி இருப்பினும், மனிதனும் இயற்கையின் உருவாக்கமே. எதேச்சையானதா, திட்டமிடப்பட்டதா என்ற கேள்விக்கு அப்பால் மனிதன் என்ற விலங்கின் இயல்பையே நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

இந்த இயல்பில் தேடல் அடக்கம். 
 

Link to comment
Share on other sites

On ‎4‎/‎30‎/‎2018 at 10:40 PM, சண்டமாருதன் said:

 

survival

தொடர்ச்சியான உயிர்வாழ்தலுக்கான போராட்டம், அர்த்தம் அதன் நிமர்த்தமானதே. அல்லது போராட்டத்தின் களைப்பில் நிம்மதி சார்ந்ததே. ஐயத்தில் இருந்து தப்பித்தல் சார்ந்து.. 

உண்மையில் ஒரு நாயின் வாழ்வை விட ஆயிரம் மடங்கு சிக்கலானது மானுடத்தின் வாழ்வு. நான் சில வருடங்களுக்கு முன்னர் பிறவியில் மனவளம் உடல்வளம் பாதிக்கப்பட்டவர்களுக்கான இடத்தில் வேலை செய்தேன். அதில் பலருக்கு எந்த உணர்வும் இல்லை. நாய்க்கான தற்காப்பு உணர்வு கூட இல்லை. நாய் ஒருவரை சார்ந்து அவருக்கு நன்றியுடன் இருக்கும் ஆனால் இவர்களுக்கு அந்த இயல்புகூட இல்லை. அவ்விடத்தில் ஒரு பாதிக்கப்பட்டவருக்கு குறைந்தது 12 இல் இருந்து 15 பேர் வேலை செய்கின்றார்கள். மூன்று சிப்ட் வேலை. வைத்தியர், தாதிகள் பராமரிப்பாளர்கள், உணவு வழங்கல் பிரிவு, என்று ஒரு பக்கம், பொறியிலாளர்கள் கட்டட பராமரிப்பு என்று அது ஒரு பக்கம், நிர்வாகம், வாகன ஓட்டுனர்கள், இப்படியே ஒரு பெரிய லிஸ்ட் போடலாம். ஆரம்பத்தில் நான் நினைத்தேன் இந்த இடத்தில் வேலை செய்வதில் ஒரு திருப்தியும் ஒரு அர்த்தமும் இருக்கின்றது என்று ஆனால் பின்னர் தான் எனக்கு புரிந்தது அவர்களால் நான் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். ஒரு பாதிக்கப்பட்டவர் 15 பேருக்கு வேலைகொடுத்துக்கொண்டிருக்கின்றார். (இவர்களுக்கான பொருட்களை சப்பிளை செய்பவர்களும்  இவர்களால் பிழைத்துக்கெண்டிருக்கின்றார்கள்) அவர்கள் வாழ்வு அர்த்தமுள்ளது என்றால் அதை அவர்களால் உணரமுடியவில்லை, நான் அங்கு வேலை செய்வது அர்த்தம் உள்ளது என்றால் அதில் உண்மையும் இல்லை. 

அண்மையில் ஒருநாள் ஒரு அறிவித்தலை குடியிருப்பாளர் கதவில் ஒட்ட வேண்டியிருந்தது. நான் கதவடியில் சென்றதும் உள்ளிருந்த நாய்குட்டி வீட்டுகாரர் தான் வந்துவிட்டர் கதவை திறக்கின்றார்  என்று கதவை பிராண்டி உள்பக்கமாக பரிதவித்துக்கொண்டிருந்தது. வீட்டுக்காரர் வேலைக்கு சென்றுவிட்டார் அது தனிமையில் வாடுகின்றது. 

இன்றிலிருந்து 300 வருடங்களுக்கு முன்பு நான் எங்கிருந்தேன் 300 வருடங்களுக்கு பின்பு எங்கிருப்பேன் என்று ஒரு கேள்வி கேட்கும் போது ஒன்றின் மீதான பிடிவாதம் தளர்ந்து போகின்றது. 

லட்சியம், அர்த்தம், தேடல் என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபடுகின்றது. அதன் கனதி வேறுபடுகின்றது. 

உங்கள் கேள்விகளுக்கான விடை  கேள்விக்கு சாதகமானதாகவே இருக்கும். அர்த்தம் தேடல் என்பது ஒன்றுமில்லை என்றுதான் இறுதியில் முடியும்.

 

நீங்கள் எதை ' வாழ்க்கையின்அர்த்தம்' என்று குறிப்பிடுகின்றீர்கள் என்பதை புரிந்து கொள்வதில் தடுமாறுகின்றேன். ஒருவர் பலரின் வாழ்வாதாரத்துக்கு தேவையான விடயங்களை பெற்றுக் கொள்வதில் முக்கியகர்த்தாவாக இருந்தால் அவர் வாழ்வு அர்த்தம் நிறைந்ததாக ஏற்றுக் கொள்கின்றீர்கள் என நினைக்கின்றேன். நீங்கள் குறிப்பிடும் 'அர்த்தம்' என்பதன் அர்த்தம் இதுவா?

அப்படியாயின், எவருக்கும் எந்தவிதமான வாழ்வாதாரத்தையும் தர வசதியற்றவர்களாக எம் வாழ்வு போனால் அது அர்த்தம் அற்றதாகி விடுமா? எவருக்கும் உதவ முடியாது அதே வேளை தன்னளவில் திருப்தியும் வேறு எவருக்கும் சிரமமும் கொடுக்காது வாழ்ந்து போகின்றவர்களின் வாழ்வு அர்த்தம் அற்றதாகி விடுமா?

நீங்கள் குறிப்பிடும் தேடல் என்பது  'நான் முன்பு எங்கிருந்தேன் இன்னும் 300 வருடங்களுக்கு பின் எங்கிருப்பேன்' என்பதை அறிந்து கொள்வது பற்றியது என நம்புகின்றேன் (இன்னுமொருவன் தேடல் எனச் சொல்வது இதை அல்ல என நினைக்கின்றேன்). அப்படியாயின் அதை ஏன் நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஒரு வினாடியில் உயிராக உருவான நாம் இன்னொரு வினாடி ஒன்றில் இறந்து விடுகின்றோம். முன்னரும் நாம் இருக்கவில்லை, பின்னரும் நாம் இருக்க போவதில்லை. உண்மை இப்படி இருக்க ஏன் மனசை வீணாக அலைக்கழிப்பான்?

அண்மையில் இறந்த என் மாமி (மனைவியின் அம்மா) இறுதி நாட்களில் உயிர்காப்பு உபகரணங்களின் உதவியுடன் தான் உயிரை பிடித்துக் கொண்டு இருந்தார். மருத்துவமனையில் என்னைக் காணும் நேரம் முழுதும் 'நான் எல்லாவற்றையும் பார்த்து அனுபவித்து விட்டேன்..இனி காணும் ஏன் இன்னும் வைத்து இருக்கின்றீர்கள்.... உதை கழட்டி விடுங்கள்' என கேட்டுக் கொண்டே இருந்தார். ஈற்றில் தாதிகள் ஒரு வினாடி அசந்த நேரம் பார்த்து கைகளை கட்டி வைத்து இருப்பினும் கூட எப்படியோ முயன்று மூச்சை வழங்கி கொண்டு இருந்த குழாய்களை இழுத்து எறிந்து வெளியே எடுத்து விட்டார். மீண்டும் தாதிகளை தனக்கருகில் வர விடவும் இல்லை. சரியாக 15 நிமிடங்களில் இதயம் அடங்கி விட்டது. என்னைப் பொறுத்தவரைக்கும் 'இனி காணும் போவம்' என்ற சிந்தனை ஒரு முழுமையான சிந்தனையாக தென்படுகின்றது. தான் ஏன் இங்கே வந்தேன் எங்கு போகப் போகின்றேன் என்ற எந்த சிந்தனையும் இல்லாமல் வாழ்வு முழுமையாக வாழ்ந்திட்டன் என்ற மனத் திருப்தி தான் நிறைவான வாழ்க்கை என் எண்ணுகின்றேன். விடையே கண்டு பிடிக்க முடியாத விடயங்களை பற்றி சிந்திப்பதை விட வாழ்கின்ற வாழ்க்கையை திருப்தியாக வாழ்வது தான் சிறந்தது?

Link to comment
Share on other sites

On ‎5‎/‎1‎/‎2018 at 10:30 AM, Innumoruvan said:

உங்கள் கேள்விக்கு ஏகப்பட்ட கோணத்தில் பதிலளிக்கத் தோன்றுகின்றது. நேரம் போதவில்லை. சிலவற்றை இப்போ பதிவிடுகிறேன்.


1)    மனிதன் “எதையாவது தேடுவோம்” என்று றூம் போட்டு சிந்திப்பதில்லை. தேடல் இயல்பாகப் பிறக்கின்றது. மூச்சிரைக் ஓடிக்கொண்டிருத்தல், வாழ்வாதரப் போராட்டம் மூச்சுவிட முடியாதபடி வைத்திருத்தல், பயம், போதை, மயக்கம், கோபம் போன்று ஏகப்பட்ட விடயங்கள், தேடல் உள்ளதை தற்காலிகமாக மறைத்து வைப்பினும், தேடல் மனிதனின் இயல்பு. எப்ப வரும், எப்பிடி வரும் வந்தால் எப்படிப் புரியப்படும் என்பதற்கெல்லாம் அப்பால் தேடல் அற்ற மனிதன் இயல்பு நிலையில் இல்லை. அந்த வகையில், நீங்கள் சொல்வது போன்றே பார்த்தாலும், வாழ்வைப் பிரித்தாராயாது அதன்பாட்டில் எடுத்தாலும், வாழ்வின் இயல்பான அங்கமான இந்தத் தேடல் இயல்பாய்த் தானே பிறக்கிறது. குகைமனிதன் காலம் தொட்டே மனிதன் தேடிக்கொண்டு தான் இருந்தான்.


2)    மிருகங்களின் உளவியல் பற்றி எமக்கு இன்னமும் போதிய புரிதல் இல்லை என்பது எனது அபிப்பிராயம். செயற்கை அறிவின் முனைப்பில் இது புரியப்படும் என்பது எனது அனுமானம். அதுவரைக்கும், மிருகங்களிற்குத் தேடலில்லை என்றே வைத்துக்கொள்வோம். ஏன் மனிதனிற்கு மட்டும் இந்தத் தேடல் என்ற கேழ்வி மட்டுமல்ல, இது போன்று பல கேள்விகள் உள்ளன. உதாரணமாக, ஏன் காட்டு விலங்குகளிற்கு ஒபீசிற்றி பிரச்சினையில்லை மனிதனிற்கு மட்டும் தான் இந்த உடல் பருமன் பிரச்சினை என்ற கேள்வியினை எடுக்கலாம். இப்பிடி நிறைய கேழ்விகள் வரும் போதும் அவற்றிற்கான விடைகள் உள்வாங்கப் படுகின்றனவா என்பது கேள்விக்குரியதாகவே தொடர்கிறது.

இப்போ காட்டு விலங்குக்கு இல்லாத ஒபீசிற்றி ஏன் மனிதனிற்கு இருக்கு என்ற கேழ்விக்கு “சந்தை” என்ற ஒரு சொல்லு பதிலாகும். ஆனால் அது புரியப்படாது. மாக்ஸ் மட்டுமல்ல அதற்கு முன்னரும் பின்னரும் மனிதன் தானும் ஒரு விலங்கு என்பதை மறந்து, புறம்பாகத் தள்ளி நின்று விலங்கோடு தன்னை ஒப்பிட்டு கேள்வி எழுப்பிக்கொண்டே இருக்கிறான். எனது அபிப்பிராயம், மனிதன் செய்யும் அனைத்துமே அவனது விலங்குத் தன்மையின் இயல்பின் வெளிப்பாடுகள் தான். முதல் விலங்கு பில்லியன்களான ஆண்டுகள் சுவாசித்ததால் வழி மண்டலம் உருவானது, மனிதனின் நகர்ச்சி என்ன என்பது ஒரு வேளை இப்போதைக்குத் தெளிவின்றி இருப்பினும், மனிதனும் இயற்கையின் உருவாக்கமே. எதேச்சையானதா, திட்டமிடப்பட்டதா என்ற கேள்விக்கு அப்பால் மனிதன் என்ற விலங்கின் இயல்பையே நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

இந்த இயல்பில் தேடல் அடக்கம். 
 

குகை மனிதனின் காலத்தில் இருந்து இன்று வரைக்குமான மானுட வளர்ச்சி என்பது இயற்கையை வெல்லுதல் என்பதன் அடிப்படையில் உருவானது. இயற்கையை வெல்லுதல் என்பது மனிதனின் அடிப்படை குணங்களில் ஒன்று. அப்படி இயற்கையை வெல்ல முயற்சிக்காத  மிச்ச விலங்குகளில் இருந்து அவன்/ள் தன்னை வேறுபடுத்தி பார்க்கும் போதே தன்னை உயர் பிறவியாக நினைக்கின்றான்/ள். இந்த வளர்ச்சியையும் வளர்ச்சி நோக்கிய அவன்/ள் முயற்சியையா தேடல் என்கின்றீர்கள்? தட்டையாக சொல்வது என்றால் தன் வாழ்வாதார வசதிகளை பெருக்குது, ஒன்றை அடைந்த பின் இன்னொன்றுக்கு ஆசைப்படுவது, அது கிடைத்த பின் இன்னொன்றை நோக்கி ஓடுவது என்ற பொதுவான மனித குணத்தின் இயல்பையா தேடல் என்கின்றீர்கள்?

அல்லது சுகன் குறிப்பிடுவது போன்று, நான் நேற்று எங்கிருந்தேன் நாளை எங்கு போகப் போகின்றேன் என விடை காண முற்படுவதையா தேடல் என்கின்றீர்கள்?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, நிழலி said:

நீங்கள் எதை ' வாழ்க்கையின்அர்த்தம்' என்று குறிப்பிடுகின்றீர்கள் என்பதை புரிந்து கொள்வதில் தடுமாறுகின்றேன். ஒருவர் பலரின் வாழ்வாதாரத்துக்கு தேவையான விடயங்களை பெற்றுக் கொள்வதில் முக்கியகர்த்தாவாக இருந்தால் அவர் வாழ்வு அர்த்தம் நிறைந்ததாக ஏற்றுக் கொள்கின்றீர்கள் என நினைக்கின்றேன். நீங்கள் குறிப்பிடும் 'அர்த்தம்' என்பதன் அர்த்தம் இதுவா?

அப்படியாயின், எவருக்கும் எந்தவிதமான வாழ்வாதாரத்தையும் தர வசதியற்றவர்களாக எம் வாழ்வு போனால் அது அர்த்தம் அற்றதாகி விடுமா? எவருக்கும் உதவ முடியாது அதே வேளை தன்னளவில் திருப்தியும் வேறு எவருக்கும் சிரமமும் கொடுக்காது வாழ்ந்து போகின்றவர்களின் வாழ்வு அர்த்தம் அற்றதாகி விடுமா?

நீங்கள் குறிப்பிடும் தேடல் என்பது  'நான் முன்பு எங்கிருந்தேன் இன்னும் 300 வருடங்களுக்கு பின் எங்கிருப்பேன்' என்பதை அறிந்து கொள்வது பற்றியது என நம்புகின்றேன் (இன்னுமொருவன் தேடல் எனச் சொல்வது இதை அல்ல என நினைக்கின்றேன்). அப்படியாயின் அதை ஏன் நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஒரு வினாடியில் உயிராக உருவான நாம் இன்னொரு வினாடி ஒன்றில் இறந்து விடுகின்றோம். முன்னரும் நாம் இருக்கவில்லை, பின்னரும் நாம் இருக்க போவதில்லை. உண்மை இப்படி இருக்க ஏன் மனசை வீணாக அலைக்கழிப்பான்?

அண்மையில் இறந்த என் மாமி (மனைவியின் அம்மா) இறுதி நாட்களில் உயிர்காப்பு உபகரணங்களின் உதவியுடன் தான் உயிரை பிடித்துக் கொண்டு இருந்தார். மருத்துவமனையில் என்னைக் காணும் நேரம் முழுதும் 'நான் எல்லாவற்றையும் பார்த்து அனுபவித்து விட்டேன்..இனி காணும் ஏன் இன்னும் வைத்து இருக்கின்றீர்கள்.... உதை கழட்டி விடுங்கள்' என கேட்டுக் கொண்டே இருந்தார். ஈற்றில் தாதிகள் ஒரு வினாடி அசந்த நேரம் பார்த்து கைகளை கட்டி வைத்து இருப்பினும் கூட எப்படியோ முயன்று மூச்சை வழங்கி கொண்டு இருந்த குழாய்களை இழுத்து எறிந்து வெளியே எடுத்து விட்டார். மீண்டும் தாதிகளை தனக்கருகில் வர விடவும் இல்லை. சரியாக 15 நிமிடங்களில் இதயம் அடங்கி விட்டது. என்னைப் பொறுத்தவரைக்கும் 'இனி காணும் போவம்' என்ற சிந்தனை ஒரு முழுமையான சிந்தனையாக தென்படுகின்றது. தான் ஏன் இங்கே வந்தேன் எங்கு போகப் போகின்றேன் என்ற எந்த சிந்தனையும் இல்லாமல் வாழ்வு முழுமையாக வாழ்ந்திட்டன் என்ற மனத் திருப்தி தான் நிறைவான வாழ்க்கை என் எண்ணுகின்றேன். விடையே கண்டு பிடிக்க முடியாத விடயங்களை பற்றி சிந்திப்பதை விட வாழ்கின்ற வாழ்க்கையை திருப்தியாக வாழ்வது தான் சிறந்தது?

 

எனக்கு உங்கட மாமியைப் பற்றித் தெரியாது...சில நேரம் உயிரோடு படுக்கையில் இருந்து மற்றவர்களுக்கு கரைச்சல் கொடுக்க கூடாது என்பதாக கூட இருக்கலாம்.{ உங்கள் பெரியவர் உரையாடலில் தலையைப் போட்ட்திற்கு மன்னிக்கவும் }
 

Link to comment
Share on other sites

8 hours ago, நிழலி said:

நீங்கள் எதை ' வாழ்க்கையின்அர்த்தம்' என்று குறிப்பிடுகின்றீர்கள் என்பதை புரிந்து கொள்வதில் தடுமாறுகின்றேன். ஒருவர் பலரின் வாழ்வாதாரத்துக்கு தேவையான விடயங்களை பெற்றுக் கொள்வதில் முக்கியகர்த்தாவாக இருந்தால் அவர் வாழ்வு அர்த்தம் நிறைந்ததாக ஏற்றுக் கொள்கின்றீர்கள் என நினைக்கின்றேன். நீங்கள் குறிப்பிடும் 'அர்த்தம்' என்பதன் அர்த்தம் இதுவா?

அப்படியாயின், எவருக்கும் எந்தவிதமான வாழ்வாதாரத்தையும் தர வசதியற்றவர்களாக எம் வாழ்வு போனால் அது அர்த்தம் அற்றதாகி விடுமா? எவருக்கும் உதவ முடியாது அதே வேளை தன்னளவில் திருப்தியும் வேறு எவருக்கும் சிரமமும் கொடுக்காது வாழ்ந்து போகின்றவர்களின் வாழ்வு அர்த்தம் அற்றதாகி விடுமா?

நீங்கள் குறிப்பிடும் தேடல் என்பது  'நான் முன்பு எங்கிருந்தேன் இன்னும் 300 வருடங்களுக்கு பின் எங்கிருப்பேன்' என்பதை அறிந்து கொள்வது பற்றியது என நம்புகின்றேன் (இன்னுமொருவன் தேடல் எனச் சொல்வது இதை அல்ல என நினைக்கின்றேன்). அப்படியாயின் அதை ஏன் நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஒரு வினாடியில் உயிராக உருவான நாம் இன்னொரு வினாடி ஒன்றில் இறந்து விடுகின்றோம். முன்னரும் நாம் இருக்கவில்லை, பின்னரும் நாம் இருக்க போவதில்லை. உண்மை இப்படி இருக்க ஏன் மனசை வீணாக அலைக்கழிப்பான்?

அண்மையில் இறந்த என் மாமி (மனைவியின் அம்மா) இறுதி நாட்களில் உயிர்காப்பு உபகரணங்களின் உதவியுடன் தான் உயிரை பிடித்துக் கொண்டு இருந்தார். மருத்துவமனையில் என்னைக் காணும் நேரம் முழுதும் 'நான் எல்லாவற்றையும் பார்த்து அனுபவித்து விட்டேன்..இனி காணும் ஏன் இன்னும் வைத்து இருக்கின்றீர்கள்.... உதை கழட்டி விடுங்கள்' என கேட்டுக் கொண்டே இருந்தார். ஈற்றில் தாதிகள் ஒரு வினாடி அசந்த நேரம் பார்த்து கைகளை கட்டி வைத்து இருப்பினும் கூட எப்படியோ முயன்று மூச்சை வழங்கி கொண்டு இருந்த குழாய்களை இழுத்து எறிந்து வெளியே எடுத்து விட்டார். மீண்டும் தாதிகளை தனக்கருகில் வர விடவும் இல்லை. சரியாக 15 நிமிடங்களில் இதயம் அடங்கி விட்டது. என்னைப் பொறுத்தவரைக்கும் 'இனி காணும் போவம்' என்ற சிந்தனை ஒரு முழுமையான சிந்தனையாக தென்படுகின்றது. தான் ஏன் இங்கே வந்தேன் எங்கு போகப் போகின்றேன் என்ற எந்த சிந்தனையும் இல்லாமல் வாழ்வு முழுமையாக வாழ்ந்திட்டன் என்ற மனத் திருப்தி தான் நிறைவான வாழ்க்கை என் எண்ணுகின்றேன். விடையே கண்டு பிடிக்க முடியாத விடயங்களை பற்றி சிந்திப்பதை விட வாழ்கின்ற வாழ்க்கையை திருப்தியாக வாழ்வது தான் சிறந்தது?

 

மனசை அலக்களிக்காமல் வைத்திருப்பது, நிம்மதியாக திருப்தியாக நிறைவாக வாழ்வது சாத்தியமில்லை.  எமது வாழ்க்கையை நாம் தீர்மானிப்பது போல் தான் எமக்கு தோன்றும் ஆனால் அது உண்மை இல்லை. நான் எவ்வளவு நேரம் நித்திரை கொள்ளவேண்டும் எத்தனை மணிக்கு எழும்ப வேண்டும் எவவளவு நேரம் வேலை செய்யவேண்டும் எவ்வளவு நேரத்துக்குள் காலை மதிய உணவுகளை உண்ணவேண்டும் என்பது முதல் இருப்பிடம் உணவு அதற் எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்பது  அடங்கலாக பெரும்பகுதி மற்றவர்களால் தீர்மானிக்கப்படுகின்து. எம் கண்ணுக்கு புலப்படாமல் எம் கை கால்களில் இருக்கும் விலங்குகளுடன்  நிம்மதியான வாழ்வு சாத்தியமில்லை. 

இன்று காலை நீங்கள் சந்தோசமாக இருக்கின்றீர்கள் என வைத்துக்கொள்வோம், மாலை கணனியை திற்கும் போது தாயகத்தில் போரால் பாதிக்கப்பட்ட ஒருவரின் அவல நிலையை காணநேருகின்றது. சீரளிக்கப்பட்ட ஒரு சிறுமி குறித்த செய்தி பாரக்க நேரிடுகின்றது.. இவ்வாறு பல.. சமூகம் சார் சிந்தனை அக்கறை உள்ளவருக்கு நிம்மதி  நிறைவு என்பது சாத்தியமில்லை. முடிந்தவரை போராடுவதே நிறைவாக மாறும். 

அக புற நிலை அழுத்தங்கள்,  அது சார்ந்த மன அழுத்தம் இரத்த அழுத்தம் என வாழ்வின் சிக்கலை சமநிலை நோக்கி நகர்த்தும் ஒரு உத்தியாகவே 300 வருடங்களுக்கு முன்னரும் பின்னருமான வாழ்க்கை குறித்த கற்பனை. 

தேடல் அர்த்தம் என்பது திருப்தியான நிறைவான வாழ்க்கைநோக்கிய போராட்டம்தான் என எண்ணுகின்றேன்.அத்தேடலில் கிடைக்கப்போவது ஒன்றும் இல்லை.. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.