Jump to content

``உண்மைதான்... லாக்அவுட் செஞ்சாலும் இந்த வழிகளில் கண்காணிக்கிறோம்!” - ஒப்புக்கொண்ட ஃபேஸ்புக்


Recommended Posts

``உண்மைதான்... லாக்அவுட் செஞ்சாலும் இந்த வழிகளில் கண்காணிக்கிறோம்!” - ஒப்புக்கொண்ட ஃபேஸ்புக்

 
 

டேட்டா. சில வருடங்களாக அதிகம் பேசப்பட்டு வரும் சொல். கடந்த சில வாரங்களாக இன்னும் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. காரணம் ஃபேஸ்புக். வரும் காலங்களிலும் இன்னும் இன்னும் பேசப்படும். ஏனெனில், உலக பொருளாதாரத்தில் 20 சதவிகிதத்தை முடிவு செய்வது நம்மைப் பற்றிய இந்த டேட்டாதான்.

கடந்த வாரம் மார்க் சக்கர்பெர்க் 500க்கும் அதிகமான கேள்விகளுக்கு செனட்டர்கள் முன் பதிலளித்தார். பல கேள்விகளுக்கு “அப்புறம் சொல்றேன்” என வாய்தா வாங்கினார். கடைசிவரை ஃபேஸ்புக் எப்படி செயல்படுகிறது என்பது பற்றி வாயே திறக்கவில்லை மார்க். இப்போது, பதில் சொல்லாத கேள்விகளுக்கான பதிலை அனுப்பி வருகிறது ஃபேஸ்புக். அதிலிருந்து சில விஷயங்களை மட்டும் தனது பிளாகில் வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் ஃபேஸ்புக் இப்போது ஒத்துக்கொண்டிருக்கும் விஷயம்தான் ``நீங்க ஃபேஸ்புக்கில் லாக் இன் செய்யாதபோதும் உங்களைக் கண்காணிக்கிறோம்” என்பது.

ஃபேஸ்புக்

இந்தப் பதிவில் நான்கு முக்கியமான டூல்களைப் (Tool) பற்றி பேசியிருக்கிறது ஃபேஸ்புக்

1) Social plugins:

  எந்த இணையதளத்துக்குச் சென்றாலும் “எங்களை லைக் பண்ணுங்க பாஸ்” என ஃபேஸ்புக்கின் லைக் சிம்பிள் முன்னால் வந்து நிற்கும். அந்த ப்ளக் இன் இருக்கும் எந்த இணையதளத்துக்குச் சென்றாலும் ஃபேஸ்புக்கும் நம்மை பின்தொடர்கிறது என்று அர்த்தம். 

2) Facebook Login:

இது பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். நிறைய இணையதளங்களில் புதிதாக ரெஜிஸ்டர் செய்யாமல், ஃபேஸ்புக் அல்லது கூகுள் லாக் இன்களைப் பயன்படுத்தி உள்ளே நுழையலாம். அபப்டி நுழையும்போது ஃபேஸ்புக் நமது நடவடிக்கைகள் ஒன்றை விடாமல் கவனிக்கிறது.

3) Facebook Analytics:

 நிறைய நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களைப் பற்றி அறிந்துகொள்ள ஃபேஸ்புக் தரும் சேவைகளைப் பயன்படுத்துவதுண்டு. அந்த இணையதளங்களில் நம் கண்களுக்கு ஃபேஸ்புக்கின் எந்த விஷயமும் தெரியாது. ஆனால், அப்போதும்  நாம் என்னவெல்லாம் செய்கிறோம் என்பதை உன்னிப்பாக நோட்ஸ் எடுத்துக்கொண்டுதான் இருக்கும். 

4) Facebook ads and measurement tools:

 ஃபேஸ்புக் விளம்பரதாரர்களில் விளம்பரங்களைப் பயன்படுத்தும் இணையதளங்கள் மற்றும் மொபைல் ஆப்ஸை நாம் பயன்படுத்தினாலும் ஃபேஸ்புக்கின் ராடாரின் கீழ் நாம் வந்துவிடுவோம். சுருக்கமாகச் சொன்னால் ஃபேஸ்புக் ஒரு டிஜிட்டல் பிக் பாஸ். நம்மால் ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது.

Facebook

ஒரு இணையதளத்துக்குள் நாம் நுழைந்தால் என்னவெல்லாம் நடக்கிறது?:

இப்போது நாம் ஒரு இணையதளத்துக்கு செல்ல நினைக்கிறோம். அப்போது, நாம் பயன்படுத்தும் பிரவுசர் நம் ஐபி முகவரி, என்ன பிரவுசர் வெர்ஷன், எந்த ஆப்ரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்துகிறோம், குக்கீஸ் மூலம் இதற்கு முன் என்ன என்ன இணையதளத்தைப் பார்த்திருக்கிறோம் போன்ற தகவல்களுடன் சென்று அந்தத் தளத்தின் சர்வரின் கதவைத் தட்டும். இப்போது அந்த இணையதளம் பதிலுக்கு இரண்டு விஷயங்களைத் தரும். ஒன்று, அந்தத் தளத்தின் கண்டென்ட்; இரண்டாவது ”இந்த எல்லா தகவல்களையும் நான் சொல்லும் நிறுவனங்களுக்கும் கொடுத்துவிடு” என்ற கட்டளை. ஆக, அந்த இணையதளம் ஃபேஸ்புக்கின் எதாவது ஒரு சேவையைப் பயன்படுத்தினாலும் நம் ஐபி முகவரி, நமது குக்கீஸ் உள்பட மொத்த டிஜிட்டல் டேட்டாவும் ஃபேஸ்புக் கைவசம் வந்துவிடும்; ஆனால் நாம் போகவே இல்லை.

https://www.vikatan.com/news/information-technology/122517-facebook-accepted-that-it-takes-user-data-even-when-they-are-not-on-facebook.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.