Jump to content

'' ‘கில்லி’ல நல்லா நடிச்சேன்... இப்போ பிசினஸ் பண்றேன்!'' - ஜெனிஃபர்


Recommended Posts

'' ‘கில்லி’ல நல்லா நடிச்சேன்... இப்போ பிசினஸ் பண்றேன்!'' - ஜெனிஃபர்

 
 

கில்லி’ படத்தில் ‘புவி’ கதாபாத்திரம் மூலம் நம்மைக் கவர்ந்தவர் ஜெனிஃபர். தற்போது சன் டி.வி-யில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘ஸ்டார் வார்’ நிகழ்ச்சியில் சக போட்டியாளர்களுக்கு நிகராக போட்டி போட்டு விளையாடி வருகிறார். அவரோடு ஒரு ஜாலி கேலி இன்டர்வியூ.

 

ஜெனிஃபர்

``ஒரு கல்யாண வீட்டுக்குப் போயிருந்தப்போ என்னை பார்த்துட்டு பி.வாசு சார் அவருடைய படத்துல நடிக்கக் கேட்டார். வீட்டிலேயும் ஒத்துக்கிட்டு என்னை நடிக்க வைச்சாங்க. என்னுடைய முதல் படம் ‘கிழக்கு கடற்கரை’. அப்ப ஆரம்பிச்ச பயணம் இப்பவரைக்கும் தொடருது’’ என்றவர் சீரியல் பயணம் பற்றிப் பேசினார். 

``சின்ன வயசுல படங்களில் நடிச்சிட்டு இருந்த மாதிரி சீரியலிலும் நடிச்சிட்டு இருந்தேன். ‘கில்லி’ படம் பண்ணதுக்கு அப்புறம் படிக்கணும்னு கொஞ்சம் பிரேக் எடுத்தேன். சின்னத்திரைக்குள் ‘மானாட மயிலாட’ மூலமா ரீ - என்ட்ரி கொடுத்தேன். அதைத் தொடர்ந்து சீரியலில் நடிக்க ஆரம்பிச்சேன். பாஸிட்டிவ், நெகட்டிவ்னு ரெண்டு கேரக்டரில் நடிச்சிருந்தாலும், என்னுடைய ஃபேவரைட் நெகட்டிவ்தான்” என்றவர் இத்தனை வருடம் கழித்தும் கில்லி புவியை மக்கள் ஞாபகம் வைத்திருப்பது குறித்துப் பேசினார்.

ஜெனிஃபர்

`` வெளிய எங்க போனாலும் இன்னமும் ‘புவி’ன்னு தான் கூப்டுறாங்க. எல்லா நடிகைகளுக்கும் இமேஜ் ரொம்ப முக்கியம். எனக்கு அந்த இமேஜை புவி தந்தா.  அந்தப் படத்துல நடிக்கும்போது நிறைய விஷயங்களைக் கத்துக்கிட்டேன். குறிப்பா, பொறுமை எவ்வளவு முக்கியங்கிறதை விஜய் அண்ணா தன்னோட செயல்களால புரிய வைச்சார். பார்க்க அமைதியா உட்கார்ந்து இருப்பார்; ஆனா, கேமராவை ஆன் பண்ணின உடனேயே பட்டாசு மாதிரி வெடிப்பார். அமைதிங்குற ஆயுதத்தை வைத்தும் சாதிக்க முடியுங்குறதை எப்பவும் நிரூபிப்பார். இப்பவும் எதாவது ஒரு நிகழ்ச்சியில என்னைப் பார்த்தா கில்லி தங்கச்சி வசனத்தைப் பேசச் சொல்லி ரசிப்பார். விஜய் அண்ணாவுக்கு தங்கச்சின்னா ரொம்பப் பிடிக்கும். அண்ணன், தங்கச்சி பட லிஸ்டுல நிச்சயம் கில்லிக்கு ஒரு தனி இடம் உண்டு. இத்தனை வருஷம் கழிச்சும் மக்கள் அதைப் பத்தி பேசுறது ஆச்சர்யமா இருக்கு.

நடிப்பைப் பொறுத்தவரைக்கும், எப்போ வாய்ப்பு அமையும், அமையாதுன்னு சொல்லவே முடியாது. அதனால துபாயில் ஹேர் & மேக்கப் புரொபஷனல் கோர்ஸ் படிச்சேன். கடந்த ஒன்றரை வருஷமா பிரைடல் மேக்கப் பிஸினஸ்ல இருக்கேன். பிரைடல் மேக்கப்பை பொறுத்தவரை என் ஸ்டைல்... மணப்பொண்ணோட கண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறதுதான். எங்க இருந்து பார்த்தாலும் மணப்பெண்ணோட கண்கள் பளிச்சுனு தெரியணும்.  கூடவே, ஈவன்ட் மேனேஜ்மென்ட் கம்பெனியும் நடத்திட்டு இருக்கேன்” என்கிறவருக்குப் புத்தகம் படிப்பது என்றால் கொள்ளை பிரியமாம். 200 புத்தகங்களுக்கு மேல் வைத்திருக்கிறார். யாரிடம் புத்தகத்தை கொடுத்தாலும் அதை மறக்காமல் திரும்ப வாங்கிவிடுவாராம்.

ஜெனிஃபர்

``நாலு வருஷத்துக்கு முன்னாடி ஒரு  நிகழ்ச்சிக்காக தோஹா போயிருந்தேன். அந்த நிகழ்ச்சியில் ‘தசாவதாரம்’ நிகழ்வுகளை பிரதிபலிக்குற மாதிரி நடனம் ஆடினேன். அதைப் பார்த்து ரசித்த பார்வையாளர்களில் ஒரு அம்மா, என்னைத் தேடி டிரெஸிங் ரூமுக்கு வந்து ரொம்ப கண் கலங்கி பாராட்டினாங்க. பாராட்டுனதோட விடாமல், அவங்க கையில் போட்டிருந்த தங்க மோதிரத்தை என் கையில் மாட்டிவிட்டாங்க. இப்போ வரைக்கும் அந்த மோதிரத்தை நான் கழட்டவே இல்ல. அது எனக்கு ரொம்ப ஸ்பெஷல். 

 

பிரெஞ்ச், ஜெர்மன்னு ரெண்டு மொழிகளிலும் நாலு லெவல் முடிச்சிருக்கேன். அதைப் பயன்படுத்தி டிரான்ஸிலேஷன் ஜாப் பண்ணணும்னு எண்ணம் இருக்கு.  அதோட, என் பிஸினஸை அடுத்தகட்டத்துக்குக் கொண்டு போகணுங்கிறதுதான் என் ஆசை’’ எனப் புன்னகைக்கிறார் ஜெனிஃபர்.

https://cinema.vikatan.com/tamil-cinema/interview/122739-actress-jennifer-talks-about-her-experience-in-ghilli-movie.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கூடா ந‌ட்ப்பு கேடா முடியும் என்று கலைஞர் சொன்னது 2011 நடுப்பகுதியில். திகார் சிறைச்சாலையில் அவரது மகள் கனிமொழி இருந்தினாலும் 2011  சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்ததுக்கும் காரணதத்தினால்தான். 
    • ஒரு கொள்கை பற்றுள்ள தலைவன் தானும் தன் குடும்பமும் அந்த கொள்கை வழி நிண்டு காட்டல் வேண்டும். சகாயம், இஸ்ரோ விஞ்ஞானிகள், அப்துல் கலாம்….ஏன் சீமான் கூட, தமிழ் நாட்டில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்று வாழ்வில் நல்ல நிலையை அடைந்தோர் பலர் உள்ளனர். ஆகவே தமிழ் நாட்டில், தமிழ் வழி கல்வி அப்படி மோசமான ஒன்றல்ல. அப்படி இருந்தும் சீமான் ஆங்கில கல்வியை நாடியது அவரின் ஆங்கில மோகம், சுய நலத்தையே காட்டுகிறது.  தமிழ் மந்திர உச்சரிப்புக்கு போராடி விட்டு, மகனின் காது குத்தில் ஐயரை வைத்து சமஸ்கிருதத்தில் ஓதியது.  குடும்ப அரசியலை எதிர்த்து கொண்டே, மச்சானுக்கு சீட், மனைவிக்கு கட்சியில் பதவியில்லா அதிகாரம் வழங்கியது. அந்த வகையில் சீமானின் இன்னொரு தகிடு தத்தம்தான் இதுவும். கருணாநிதியை போலவே சீமானின் சொல்லுக்கும் செயலுக்கும் வெகுதூரம். தன் சுய நலத்துக்கு எதையும் மாற்றுவார். அவரை போலவே இவருக்கும் என்ன செய்தாலும் முட்டு கொடுக்கவும் சில கொத்தடிமைகள் இருக்கிறார்கள். #சின்ன கருணாநிதி இருக்கு. பெரிய கருணாநிதி பச்சை கள்ளன் என்பதே விடை. பொருந்தும். அச்சொட்டாக. ஏன் இல்லாமல்? தமிழ் தமிழ் என எல்லாரையும் ஏமாற்றிய கருணாநிதி குடும்ப பிள்ளைகள் ஆங்கில கல்வி கற்றதை நானும் பலரும் சிலாகித்து எழுதியுள்ளோமே. ஆகவே இந்த விடயத்தில் பெரிய கருணாநிதி கள்ளன் என்பதில் மாற்று கருத்தே இல்லை. இப்போ நான் கேட்கும் கேள்வி…. கருணாநிதி செய்ததை அப்படியே கொப்பி அடிக்கும் சீமான் கள்ளன் இல்லையா? # சின்ன கருணாநிதி
    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.