Jump to content

இன்றைய நாளில் நிகழ்ந்தவை


Recommended Posts

ஜூன் 12 ஆண்டின் 163ஆவது நாளாகும்.ஆண்டு முடிவிற்கு மேலும் 202 நாட்கள் உள்ளன

பிலிப்பீன்ஸ் - விடுதலை நாள்

உலகக் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு நாள் (World Day Against Child Labor )

ரஷ்யா - ரஷ்ய நாள்

  • 1830 - 34,000 பிரெஞ்சுப் படைகள் அல்ஜீரியாவை அடைந்ததில் இருந்து பிரெஞ்சுக் குடியேற்றம் அந்நாட்டில் ஆரம்பமாகியது.
  • 1898 - பிலிப்பீன்ஸ் ஸ்பெயினிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
  • 1899 - ஐக்கிய அமெரிக்கா நியூ றிச்மண்டில் இடம்பெற்ற சூறாவளியில் 117 பேர் கொல்லப்பட்டனர்..
  • 1964 - தென்னாபிரிக்க நீதிமன்றம் நெல்சன் மண்டேலாவுக்கு ஆயுள்கால சிறைத்தண்டனை விதித்தது.
  • 1987 - மத்திய ஆபிரிக்கக் குடியரசின் முன்னாள் மன்னர் ஜீன்-பெடெல் பொக்காசாவுக்கு மரணதண்டனை அறிவிக்கப்பட்டது.
  • 1991 - போரிஸ் எல்ட்சின் ரஷ்யக் குடியரசின் அதிபரானார்.
  • 1991 - மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் 65 தமிழர்கள் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
  • 2003 - தமிழர் விடுதலை இயக்கம் என்ற அமைப்புக்குத் தமிழக அரசு தடை விதித்தது.
  • 2005 - அருளானந்தம் சுரேஸ் ஜோக்கிம் ten bin bowling என்ற விளையாட்டினை ரொரண்டோவில் உலக சாதனைக்காக 100 மணித்தியாலங்கள் தொடர்ந்து விளையாடி தனது முப்பதாவது கின்னஸ் உலக சாதனையினை நிலைநாட்டினார்.
  • 2006 - கூகுள் எர்த், லினக்ஸ் பதிப்பு வெளியிடப்பட்டது.
  • 2006 - மட்டக்களப்பில் புலிகளின் அரசியற்துறை அலுவலர்களில் ஒருவரான ரமணிதரன் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
  • 2006 - காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் அப்பாவித் தொழிலாளர்கள் 8 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர்.

Link to comment
Share on other sites

  • Replies 107
  • Created
  • Last Reply

ஜூன் 13 ஆண்டின் 164ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 201 நாட்கள் உள்ளன.

  • 1900 - சீனாவில் வெளிநாட்டவருக்கு எதிரான Boxer இயக்கம் தொடங்கியது.
  • 1912 - மிஸ்ஸிசிப்பியில் கேப்டன் ஆல்பர்ட் பெர்ரி (captain Albert Berry ) வெற்றிகரமாக ஒரு விமானத்திலிருந்து வான்குடை மூலம் குதித்தார்.
  • 1993 - இந்தியா பிரித்திவி ஏவுகணையை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
  • கி.மு - 323மாவீரன் மகா அலெக்சாண்டர் ஆம் ஆண்டு பாபிலோனில் காலமானார்
  • 1934 - ஹிட்லரும் முசோலினியும் வெனிசில் சந்தித்தனர்.
  • 1948 - ஈழத்தின் முதல் எழுத்தாளர் சங்கமான தமிழிலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.
  • 1948 - மலாயா தொழிற்சங்கங்களின் சம்மேளனம் மலேசியாவில் தடை செய்யப்பட்டது.
  • 1983 - பயனியர் 10 புளூட்டோவைத் தாண்டிய முதலாவது விண்கப்பல்

.

Link to comment
Share on other sites

ஜூன்14 ஆண்டின் 165ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 200 நாட்கள் உள்ளன.

போக்லாந்துத் தீவுகள் - விடுதலை நாள்

ஐக்கிய அமெரிக்கா - கொடி நாள்

ஆப்கானிஸ்தான் - அன்னையர் நாள்

உலக இரத்த வழங்கல் நாள்

உலக வலைப்பதிவர் நாள்

  • 1800 - நெப்போலியனின் பிரெஞ்சு இராணுவம் வடக்கு இத்தாலியில் ஆஸ்திரியர்களுடன் போரிட்டு வெற்றி பெற்று இத்தாலியை மீளவும் கைப்பற்றியது.
  • 1872 - கனடாவில் தொழிற் சங்கங்கள் அதிகாரபூர்வமாக்கப்பட்டன.
  • 1900 - ஹவாய் ஐக்கிய அமெரிக்காவுடன் இணைக்கப்பட்டது.
  • 1940 - இரண்டாம் உலகப் போர்: பாரிஸ் ஜெர்மனியின் வசமாகியது.
  • 1962 - ஐரோப்பிய வான் ஆராய்ச்சி மையம் பாரிசில் ஆரம்பிக்கப்பட்டது.
  • 1967 -சீனா தனது முதலாவது ஐதரசன் குண்டைச் சோதித்தது.
  • 1982 - போக்லாந்து போர் முடிவுக்கு வந்தது. ஆர்ஜென்டீனா நிபந்தனை இன்றி பிரித்தானியாவிடம் சரணடைந்தது.
  • 1985 - TWA 847 விமானம் கிறீசில் இருந்து ரோம் செல்லுகையில் ஹெஸ்புல்லா இயக்கத்தினரால் கடத்தப்பட்டது.
  • 1999 - தென்னாபிரிக்காவின் அதிபராக தாபோ ம்பெக்கி பதவியேற்றார்.
  • 2002 - கராச்சியில் அமெரிக்க தூதராலயத்துக்கு முன்னர் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 12பேர் கொல்லப்பட்டு 50 பேர் காயமடைந்தனர்.
  • 2003 - விடுதலைப் புலிகளின் வணிகக் கப்பல் ஒன்று இலங்கைக் கடற்படையினரால் தாக்கி அழிக்கப்பட்டதில் 11 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்

Link to comment
Share on other sites

  • 1 month later...

மன்னிக்கவும் சில தவிர்க்கமுடியாதகாரணங்களால் த்டரமுடியவில்லை, இனிமேல் தொடர்ந்து தருகிறேன் :lol: B) :lol::lol: ;)

Link to comment
Share on other sites

ஜூன் 15 கிரிகோரியன் ஆண்டின் 166ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 167ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 199 நாட்கள் உள்ளன.

டென்மார்க் - கொடி நாள் மாலாவி - விடுதலை நாள்

1752 - மின்னல் ஒரு வகை மின்னோட்டம் என்பதை பெஞ்சமின் பிராங்கிளின் நிறுவினார். 1846 - Royal Asiatic Society of Ceylon என்ற அமைப்பின் முதலாவது சஞ்சிகை வெளிவந்தது. 1904 - நியூ யோர்க்கில் ஜெனரல் ஸ்லோகம் என்ற கப்பலில் ஏற்பட்ட தீவிபத்தில் 1000 பேர் கொல்லப்பட்டனர். 1996 - ஐக்கிய இராச்சியம், மான்செஸ்டரில் இடம்பெற்ற தீவிரவாதிகளின் குண்டுத்தாக்குதலில் 200 பேர் காயமடைந்தனர். 1984 - யாழ்ப்பாணம் காரைநகரில் இலங்கையின் கடல் விமானம் ஒன்று விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது. 2006 - முல்லைத்தீவில் இலங்கை விமானம் குண்டுவீசியதில் 5 பேர் படுகாயமடைந்தனர்.1838 - ரோணியஸ், ஜெர்மனியத் தமிழறிஞர் இறப்பு 1849 - ஜேம்ஸ் போக், ஐக்கிய அமெரிக்காவின் 11வது அதிபர் இறப்பு

180px-Umartahmbi.jpg

உமர் தம்பி பிறந்த நாள்

இவர் தமிழ் கணிமைக்கு சிறந்த பங்களிப்புக்களை வழங்கிய ஆளுமைகளுள் ஒருவராவார்.இவர் கணினியிலும் இணையத்திலும் தமிழை பயன்படுத்துவதற்கு உதவக்கூடிய பல செயலிகளையும் கருவிகளையும், எழுத்துருக்களையும் ஆக்கியளித்துள்ளார்ஜூன் 15 2007 - உலகின் மிகவும் நீளமான 34 கிமீ நீள தொடருந்து சுரங்கப் பாதை சுவிட்சர்லாந்தில் ஆல்ப்ஸ் மலைக்குக் கீழாக அமைக்கப்பட்டது. (பிபிசி) ஜூன் 15 2007 - தெற்கு தாய்லாந்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் குறைந்தது 7 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். (பிபிசி)

Link to comment
Share on other sites

ஜூன் 16 கிரிகோரியன் ஆண்டின் 167ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 168ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 198 நாட்கள் உள்ளன

தென்னாபிரிக்கா - இளைஞர் நாள்

  • 1819 - குஜராத்தில் இடம்பெற்ற 8.0 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 2000 பேர் மாண்டனர்.
  • 1940 - லித்துவேனியாவில் கம்யூனிச ஆட்சி உருவானது.
  • 1963 - உலகின் முதலாவது பெண் விண்வெளி வீரர் ரஷ்யாவின் வலன்டீனா டெரெஷ்கோவா வஸ்தோக் 6 விண்கலத்தில் பயணமானார்.
  • 1964 - லியோனிட் பிரெஷ்னேவ் சோவியத் ஒன்றியத்தின் அதிபரானார்.
  • 1976 - தென்னாபிரிக்காவில் சுவெட்டோவில் 15,000 கறுப்பின மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் காவற்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 566 மாணவர்கள் கொல்லப்பட்டனர்.
  • 1983 - யூரி அந்திரோபொவ் சோவியத் ஒன்றியத்தின் அதிபரானார்.
  • 1994 - சீன விமானம் TU-154 புறப்பட்டுப் 10 நிமிடங்களில் வெடித்ததில் 160 பேர் மாண்டனர்.

Link to comment
Share on other sites

ஜூன் 17

கிரிகோரியன் ஆண்டின் 168ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 169ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 197 நாட்கள் உள்ளன

ஐஸ்லாந்து - தேசிய நாள்

  • 1631 - முகலாய மன்னன் ஷாஜகானின் மனைவி மும்தாஜ் மஹால் தனது 14வது மகப்பேறின் போது காலமானார்.
  • 1911 - செங்கோட்டை வாஞ்சிநாதன் திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் துரையை சுட்டுக் கொன்று தன்னையும் சுட்டு மரணம் அடைந்தார்.
  • 1944 - ஐஸ்லாந்து டென்மார்க்கிடம் இருந்து விடுதலை அடைந்தது.
  • 1954 - குவாத்தமாலாவில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.
  • 2006 - மன்னார் பேசாலைப் பகுதியில் கடற்படையினருக்கும் புலிகளுக்கும் இடையிலான மோதலின் பின்னர் ஆறு பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
  • 1703 - ஜோன் வெஸ்லி, மெதடிஸ்தமதத்தை ஆரம்பித்தவர் பிறப்பு
  • 1942 - மொகம்மது எல்பரதேய், பன்னாட்டு அணுசக்தி அமைப்பின் தலைமை இயக்குனர். நோபல் பரிசு பெற்றவர் புறப்பு
  • 1973 - லியாண்டர் பயஸ், இந்திய டென்னிஸ் வீரர் பிறப்பு
  • 1858 - ராணி லட்சுமிபாய் (ஜான்சிராணி), இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை (பி. 1828)
  • 1911 - வாஞ்சிநாதன், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1886)

Link to comment
Share on other sites

ஜூன் 18

கிரிகோரியன் ஆண்டின் 169ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 170ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 196 நாட்கள் உள்ளன

சிஷெல்ஸ் - தேசிய நாள்

  • 1429 - ஜோன் ஆஃப் ஆர்க் தலைமையில் பிரெஞ்சுப் படைகள் ஆங்கிலப் படையினரைத் தோற்கடித்தன (Battle of Patay).
  • 1812 - பிரித்தானியா மற்றும் அயர்லாந்து மீது அமெரிக்கக் காங்கிரஸ் போரை அறிவித்தது.
  • 1815 - நெப்போலியன் பிரான்சைக் கைப்பற்றும் வாட்டர்லூ (Battle of Waterloo) இறுதிப் போரில் தோல்வியடைந்தான்.
  • 1869 - இந்திய ரூபாய் அதன் வெள்ளியில் குறிக்கப்பட்ட துணை அலகுகளுடன் இலங்கையின் சட்டப்படியான நாணயமாக அறிவிக்கப்பட்டது.
  • 1953 - எகிப்து குடியரசாகியது.
  • 1981 - அமெரிக்காவில் மசாசூசெட்ஸ் மாநில நாடாளுமன்றத்தில் தமிழ் ஈழத்தை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  • 1983 - சல்லி றைட் (Sally Ride) விண்ணுக்குச் சென்ற முதலாவது அமெரிக்கப் பெண் ஆனார்.
  • 1985 - விடுதலைப் புலிகளுக்கும் இலங்கைப் படையினருக்கும் இடையில் முதலாவது போர் நிறுத்தம் கைச்சாத்திடப்பட்டது.
  • 2001 - நாகா கிளர்ச்சிக்காரருக்கும் இந்திய அரசுப்படைகளுக்கும் இடையில் போர் நிறுத்தத்தை நீடிக்க மணிப்பூரில் எதிர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
  • 2004 - ஜெனீவாவின் CERN எனப்படும் ஐரோப்பிய துகள்-இயற்பியல் ஆராய்ச்சி மையத்தில் 2 மீட்டர் உயரமுடைய நடராஜர் சிலை நிறுவப்பட்டது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.