Jump to content

இந்திய பெற்றோர்கள் பாலியல் வல்லுறவு குறித்து குழந்தைகளிடம் கூறுவதென்ன?


Recommended Posts

இந்திய பெற்றோர்கள் பாலியல் வல்லுறவு குறித்து குழந்தைகளிடம் கூறுவதென்ன?

இந்திய பெற்றோர்கள் பாலியல் வல்லுறவு குறித்து குழந்தைகளிடம் கூறுவதென்ன?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

சமீபத்தில் குழந்தைகள் சித்திரவதை, பாலியல் வல்லுறவு மற்றும் படுகொலை செய்யப்பட்ட இரண்டு சம்பவங்களுக்கு பின்னர் இந்தியாவில் பாலியல் வல்லுறவுக்கெதிரான சீற்றம் அதிகரித்துள்ளது.

நாடு முழுவதுமுள்ள மக்கள் இச்சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களில் சிலர் தங்கள் குழந்தைகளையும் ஆர்ப்பாட்டங்களுக்கு அழைத்துச் சென்றனர்.

குழந்தைகள் மீதான பாலியல் வல்லுறவு சம்பவங்கள் நாட்டில் அதிகரித்து வரும் நிலையில், இதை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் எப்படி விளக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.

"ஒரு குழந்தைக்கு கல்வி புகட்டுவது என்பது ஒரு முறை மட்டுமே செய்ய கூடிய விவகாரம் அல்ல" என்று பிபிசியிடம் பேசிய டெல்லியை சேர்ந்த குழந்தை உளவியலாளரான டாக்டர் சமிர் பாரிக் கூறினார்.

"இதுபோன்ற சம்வங்கள் நடைபெறும்போது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் வயது மற்றும் அறிவாற்றலை அடிப்படையாக கொண்டு அதை விளக்க வேண்டும்."

இதற்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் இதுபோன்ற விடயங்கள் குறித்து தங்கள் குழந்தைகளிடம் பேசுவதை இந்திய பெற்றோர்கள் தொடங்கிவிட்டாலும், அது இன்னும் பரவலாக மாறவில்லை என்று அவர் கூறுகிறார்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பெற்றோர்கள் தங்களது குழந்தைகளிடம் பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் அத்துமீறல் குறித்த விடயங்களை எப்படி விளக்குகிறார்கள் என்பது பற்றிய கருத்துக்களை தொகுத்து வழங்குகிறார் பிபிசியின் நிகிதா மாந்தானி.


"உலகம் முழுவதும் இதுபோன்று நடக்கிறதா என்று தெரிந்துகொள்ள விரும்புகிறார்"

11 வயதாகும் என்னுடைய மகளுக்கு படிப்பு மற்றும் சமீபத்திய நிகழ்வுகளை அறிந்துகொள்வதில் மிகுந்த ஆர்வம்.

இந்திய பெற்றோர்கள் பாலியல் வல்லுறவு குறித்து குழந்தைகளிடம் கூறுவதென்ன?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

தொடக்கத்தில் பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் தாக்குதல் சம்பந்தப்பட்ட செய்திகள் மற்றும் உரையாடல்களை அவளுக்கு தெரியப்படுத்த நான் விரும்பவில்லை. ஆனால், அது தற்போது தவிர்க்க முடியாததாகிவிட்டது.

அவளுக்கு ஐந்து வயதானபோது, அவரை சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் பற்றி அவர் விழிப்புணர்வுடனும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்று விளக்கினேன். சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு புத்தகத்தில் "பாலியல் வல்லுறவு" பற்றி அவள் வாசித்து, அதற்கான அர்த்தம் என்னெவென்று என்னிடம் கேட்டாள்.

”எந்தவிதமான படங்களையோ, காணொளிகளையோ நாடாது, ஒருவரின் உடல் சார்ந்த தனியுரிமையை மற்றொருவர் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் அத்துமீறுவது” என்று நான் விளக்கமளித்தேன்.

சமீபத்தில் எட்டு வயதான சிறுமி ஒருவர் காஷ்மீரில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளான செய்தி வெளிவந்தவுடன் என்னிடம் வந்த மகள், "உலகம் முழுவதுமே இதுபோன்று நடக்கிறதா என்று தெரிந்துகொள்ள விரும்புகிறேன்" என்றாள்.

இதுபோன்ற நிகழ்வுகளினால் எனது மகள் பயப்படுகிறாள். இந்நிலையில், அவர் எங்கு சென்றாலும் பாதுகாப்புக்காக ஒருவர் இருக்க வேண்டியதிற்கான அவசியத்தையும் அல்லது நான் ஏன் வட இந்தியாவில் இன்னும் பழமைவாத ஆடைகளை அணிய வேண்டும் என்று விரும்புகிறேன் என்பதை கூறுவதற்கு கடினமாகவும் உள்ளது.

- மோனா தேசாய், மும்பை சேர்ந்த 11 வயதான சிறுமியின் தாய்


"மாற்றத்தை கொண்டு வருவதில் அவர் ஒரு பங்கை வகிக்கிறார் என்பதை அவர் அறிந்திருக்க வேண்டும்"

இந்திய பெற்றோர்கள் பாலியல் வல்லுறவு குறித்து குழந்தைகளிடம் கூறுவதென்ன?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் அத்துமீறல் தொடர்பான சம்வங்கள் குறித்து நான் என்னுடைய மகனிடம் சிலமுறை பேசியுள்ளேன். மேலும், பெண்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து நான் அவனிடம் பேசியுள்ளேன்.

ஒரு மேல்தட்டு வர்க்கத்தை சேர்ந்த ஆணாக இருக்கும் அவன் இதுபோன்ற விடயங்களை அறிந்திருக்க வேண்டுமென்றும், அதில் மாற்றத்தை கொண்டுவருவதில் தன்னுடைய பங்கையும் அவன் உணர வேண்டும் என்றும் நான் நினைக்கிறேன்.

பாலியல் வன்முறை என்பது பெண்கள் மத்தியில் மிகப் பெரிய அச்சத்தை உண்டாக்கும் விடயமாகும். அது இறுதியில் எல்லோருடைய வாழ்க்கை மற்றும் நடத்தையையும் பாதிக்கக்கூடிய ஒன்றாகும்.

என் மகன்களை இதுபோன்ற செய்திகளை அறிந்துகொள்வதிலிருந்து விளக்கி வைப்பதில்லை. இருப்பினும், இந்த உரையாடல்களை அவர்களின் மீது சுமத்துவதற்கு பதிலாக அவற்றை கலந்துரையாடுவதற்கு நான் அனுமதிக்கிறேன்.

- சுனயா ராய், பெங்களூரில் வசிக்கும் 11 மற்றும் 3 வயதுடைய இரண்டு மகன்களின் தாய்


"குற்றங்காணாமல் யதார்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன்"

இந்திய பெற்றோர்கள் பாலியல் வல்லுறவு குறித்து குழந்தைகளிடம் கூறுவதென்ன?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் அத்துமீறல் சார்ந்த சம்பவங்கள் குறித்து என்னுடைய மகளிடம் பேசுவதென்பது கடினமான காரியமாகும்.

என்னுடைய மகள் தன்னை சுற்றியுள்ள மக்களை நம்ப வேண்டுமென்றும், குறிப்பாக ஆண்களை நண்பர்களாக கொள்வதற்கும், காதலில் விழுவதற்கும் நான் விரும்புகிறேன். ஆனால், அதே சமயத்தில் அவருடைய பாதுகாப்பு குறித்து எனக்கு கவலை எழுகிறது.

அவர் வீட்டிற்கு தாமதமாக வந்தாலோ அல்லது தனது விருப்பத்திற்குரிய ஆடையை அணிந்தாலோ எனக்கு கவலையில்லை. ஆனால், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பு வீட்டிற்கு திரும்புமாறும், குறிப்பிட்ட விதமான ஆடைகளை அணிவதற்கும் பரிந்துரைக்க விரும்புகிறேன்.

நான் விளக்கும் விடயத்தில் குற்றங்காணாமல் அவர் யதார்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டுமென்று நான் நினைக்கிறேன்.

அடிக்கடி நடைபெறும் பாலியல் வல்லுறவு சம்பவங்கள் அவளை வருத்தத்திற்குள்ளாக்குகிறது. அப்போது அவள் "எல்லா ஆண்களும் அப்படித்தானா?" என்று கேள்வியெழுப்பும்போது, சமூகத்தின் ஒரு சிலர்தான் அவ்வாறு உள்ளதாக நான் பதிலளிக்கிறேன்.

- பருல், சண்டிகரில் வசிக்கும் 14 வயதான சிறுமியின் தாய்


"என் பருவ வயது மகனை முதல் முறையாக பாலியல் வல்லுறவுக்கெதிரான போராட்ட களத்திற்கு அழைத்துச்சென்றேன்"

இந்திய பெற்றோர்கள் பாலியல் வல்லுறவு குறித்து குழந்தைகளிடம் கூறுவதென்ன?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

நாங்கள் எங்களுடைய மகனோடு ஒரு செயலை செய்வதற்கு முன் ஒருவரின் ஒப்புதலை பெறுவது, நன்னடத்தை மற்றும் வன்முறைகள் குறித்தும், இதுபோன்ற விடயங்களில் ஆண்களுக்கு உள்ள பங்கு குறித்தும் உரையாடுவோம்.

குழந்தைகள் தங்களது நம்பிக்கையில் உறுதியாய் இருப்பது மிகவும் முக்கியம். ஒவ்வொருவருக்கும் தகவலானது வெவ்வேறு வழிகளிலிருந்து வருகிறது. ஆனால், அவற்றை முதிர்ச்சி பெறாத இளையோர்களால் தங்களது ஹார்மோன்கள் திசைதிருப்புவதற்கு முன்னர் புரிந்துகொள்வதில்லை. எனவே, இதுபோன்ற விடயங்கள் சார்ந்த கலந்துரையாடல்கள் அவசியமாகிவிட்டது.

நமது குழந்தைகளிடம் ஒரு விடயத்தை செய்ய வேண்டும் என்றோ, செய்யக்கூடாது என்றோ கூறுவதுடன் இது முடிந்துவிடுவதில்லை. அவர்களை சுற்றியுள்ள இடங்கள் அத்தகைய சம்பவங்களுக்கு உட்பட்டது அல்ல என்பதை உறுதிப்படுத்த நாம் அவர்களுக்கு தைரியத்தைக் கொடுக்க வேண்டும்.

கடந்த ஞாற்றுக்கிழமையன்று, என் பருவ வயது மகனை முதல் முறையாக பாலியல் வல்லுறவுக்கெதிரான போராட்ட களத்திற்கு அழைத்துச்சென்றேன். தன் போன்ற மற்றும் தன்னை ஒத்த நம்பிக்கைகளை கொண்டவர்களும் இருக்கிறார்கள் என்பதை அவர் தெரிந்துகொள்வது மிகவும் முக்கியமானதாகும்.

- அருணவா சின்ஹா, டெல்லியை சேர்ந்த 15 வயது இளைஞரின் தந்தை

https://www.bbc.com/tamil/india-43854227

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.